Re: கும்பகர்ணனைக் கும்பன் எனலாமா ?

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 8, 2025, 7:44:16 PMOct 8
to santhav...@googlegroups.com
திருமங்கை ஆழ்வார் கும்பகருணனை கும்பன் என்று பெரிய திருமொழியில் (இரண்டாம் ஆயிரத்துள்) பாடியுள்ளார். இதுவே காலத்தால், தமிழில் கும்பன் என்ற பெயர்ப் பயன்பாட்டில் முதலாவது.

https://www.dravidaveda.org/1862/
செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன் சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்பு லாம்கடி காவில் சிறையா வைத்த தேகுற்ற மாயிற்றுக் காணீர்
கும்ப னோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மனிட மாய்வந்து தோன்றி
அம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.

வாரீர்!, எங்கள் இராவணனுடைய பெருமை எப்படிப்பட்டது தெரியுமோ? பலதிசைகளிலுஞ் சென்று வெற்றி பெற்றுச் செம்பொன் முடிகவித்துக் கொண்டவன். அனைவரும் அவன் கீழே கைகட்டிக் காத்திருக்க வேண்டியவர்கள், அப்படி யிருக்கச் செய்தேயும், ஸீதாபிராட்டியாகிற ஒரு தெய்வப்பெண்ணைக் கவர்ந்துவந்து இவ்வசோகவனத்திலே சிறைவைத் திட்டதே அவனுக்குப் பெரிய அபராதமாகத் தலைக்கட்டிற்று. அதுவே காரணமாகக் கும்பன் நிகும்பன் முதலான பெரிய ரணவீரர்களும் மாண்டொழியலாயிற்று. இராவணன் கையிலே முன்பு தோற்றுக்கிடந்த ம்ருத்யுவானவன் அந்த வுருவத்துடன் இங்கு வரமாட்டாமல் இராமனென்னும் பெயராலே ஒரு மானிட வடிவு கொண்டுவந்து நின்று எங்கள்மேல் சரவர்ஷத்தை வர்ஷிக்கின்றான்; குற்றமற்றவர்களான எங்களது உயிரையும் கொள்ளை கொள்வீர்களோ வென்று அஞ்சுகின்றோம்; நாங்கள் எங்கள் தோல்விக்கும் உங்கள் வெற்றிக்கும் மேலெழுத்திட்டுக் கூத்தாடுகின்றோமாதலால் எங்களை விட்டொழிய வேணும் என்றார்களாயிற்று.

கூற்றம் மானிடமாய்த் தோன்றி – இராவணன் நெடுநாள் தவம்புரிந்து வரப்ரஸாதம் பெறும்போது மானிடரை ஒரு பொருளாகவே மதியாமல் அவர்களைத் தவிர்த்து மற்று யாராலும் தனக்குச் சாவு நேரிடாமை வேண்டினனாதலால் அவன் உபேக்ஷித்த மானிடத்தில் திருமால் வந்து தோன்றினனென்க. யமன்றானே இப்படி மானிடமாய் வந்து தோன்றினனாக இவர்கள் கூறுவது தங்கள் சாதி மொழிக்கு ஏற்றதாம். கூற்றம் – உடலையும் உயிரையும் வேறு வேறு கூறாக்குபவன் என்ற காரணப் பெயர். ~ ப்ர. அ.
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZI0kuUy/page/16/mode/2up


On Tue, Oct 7, 2025 at 8:55 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
    கும்பன் (2)
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் - யுத்1:61 5 35/4
மயிந்தன் மா துமிந்தன் கும்பன் அங்கதன் அனுமன் மாறு_இல் - யுத்4:641 42 43/1

 TOP
 
    கும்பனும் (2)
கும்பனும் குல சங்கனும் முதலினர் குரங்கின் - கிட்:4 12 22/1
குரங்கினுக்கு அரசும் வென்றி கும்பனும் குறித்த வெம் போர் - யுத்2:62 18 235/1


On Tue, 7 Oct, 2025, 4:04 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
ஹரிகி "கம்பனின் கும்பன்" என்று 4 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

http://tamilconcordance.in தளத்தில் கம்பராமாயணத்தில் கும்பன் என்ற பெயரில் வரும் பாடல்களைத் தொகுத்து அளிக்கவும்.

NG

On Sun, Oct 5, 2025 at 9:13 PM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
அனைவருக்கும் வணக்கம்,

ராமாயணத்தில் , கும்பகர்ணனின் மகன்களில் ஒருவன் கும்பன்.

ஆனால் தமிழில் அல்லது தமிழ் மரபில் கும்பகர்ணனைச் சுருக்கமாக கும்பன் என்று அழைப்பதையும் பார்க்கிறேன்.

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் தன்னுடைய "கம்பன் புதிய பார்வை" நூலில் கும்பகர்ணனைக் கும்பன் என்றே குறிப்பிட்டு எழுதுகிறார்.

இது சரியான பயன்பாடு தானா ?

நன்றி,
நிரஞ்சன் பாரதி 


சந்தனம் திமிர்ந்தணைந்து என்ற எண்கண் திருப்புகழில் இவ்வாறு வருகிறது.

அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
     அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே


சரியான பயன்பாடா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு எடுத்துக்காட்டு கிடைத்தது. பகிர்கிறேன்.

Regards,
Saranya

 


N. Ganesan

unread,
Oct 9, 2025, 4:03:53 PMOct 9
to santhav...@googlegroups.com
On Sun, Oct 5, 2025 at 9:13 PM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
அனைவருக்கும் வணக்கம்,

ராமாயணத்தில் , கும்பகர்ணனின் மகன்களில் ஒருவன் கும்பன்.

ஆனால் தமிழில் அல்லது தமிழ் மரபில் கும்பகர்ணனைச் சுருக்கமாக கும்பன் என்று அழைப்பதையும் பார்க்கிறேன்.

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் தன்னுடைய "கம்பன் புதிய பார்வை" நூலில் கும்பகர்ணனைக் கும்பன் என்றே குறிப்பிட்டு எழுதுகிறார்.

இது சரியான பயன்பாடு தானா ?

(1) பெருங்கதையில் பாஞ்சாலராயனின் நண்பன் கும்பன். தமிழில் முதலில் கும்பன் என்ற சொல்லைக் கொங்குவேளிர் பயன்புடுத்துகிறார்.
(2) திருமங்கை மன்னன் பெரிய திருமொழியில் கும்ப-நிகும்ப சோதரரைப் பாடியுள்ளார்.
(3) கம்பர் 4 பாடல்களில் கும்பன் என்கிறார்.
ஒரு பாடல் மிகைப்பாடல், அதில் போருக்குப் பின் வந்து ராம லக்குவரைச் சந்திக்கும் ஒரு அசுரனாகக் கும்பன் உள்ளது. எனவே அதை விட்டுவிடலாம்.
ஏனை 3 பாட்டிலும், கும்பன் என்பவன் கும்பகர்ணன் மகன். எனவே, கம்பனின் கும்பன் இவன்.

மிகைப்பாடலில் கும்பன்:

கும்பன் - கம்பர் பாடல்கள்
எனவே, கும்பன் என கும்பகர்ணன் பெயரைச் சுருக்கிக் கம்பர் பாடவில்லை.

சரண்யா அவர்கள் குறிப்பிட்டதுபோல, திருப்புகழில் கும்பன் எனக் கும்பகர்ணன் வருகிறான்.
இவனை எதிர்த்து இராமனால் கொல்லப்பட்டான் என்றும் சொல்வதால், இவன் கும்பகன்னன்.
அம்ப கும்பனுங் கலங்க ... அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட
கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு

வெஞ்சினம்புரிந்து நின்று ... மிக்க கோபத்துடன் போர்க்களத்தில்
நின்று

அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே ... அம்புகளை
ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே,

20-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் போலப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

நா. கணேசன்

 

நன்றி,
நிரஞ்சன் பாரதி 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAL0k%2BGJMe00piTPrDh4QnYHScxpm4ASR1DL%3DTGKXz7iteCxs0A%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages