Re: மீன் ‘Fish'

199 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 26, 2016, 9:41:05 AM9/26/16
to மின்தமிழ், Santhavasantham, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, pira...@googlegroups.com


On Sunday, September 25, 2016 at 10:27:17 PM UTC-7, nkantan r wrote:
Aside:
what are the five fish types sanctioned as food for brahmins in brihaddharma?

hilsa,  (the famous ilish fish which now has been lost to india and imported heavily from bangladesh, thanks to the infamous farakka barrage!)
௨ள்ளம்,
கருவாவுளம்


Thanks. I have written extensively on this fish name. What is the ancient name of the உள்ளல் fish? It is முள்ளல். முள்ளம் > உள்ளம், like மலர் > அலர்.
A favorite of Bengalis is this muLLam/uLLam 'hilsa' fish. (will give Tagore's praise on UVS in Bengali, he calls Sangam editor as Agastya himself.)
முள்ளம்:உள்ளம் மீன் (Indian Salmon fish, Hilsa)

N. Ganesan
 




==========
2.  bhetki, (கொடுவாய்), barramundi not barracuda.


bhetki fish, bhetki fish picture, bhetki fish bangladesh

============

3) magur (or catfish),  (
கெளிறு மீன். கெளுத்தி மீன் )

Image result for கெளுத்தி மீன்

===========================
4)  sole (நாக்கு மீன் , தட்டை மீன் ) ((எருமை நாக்கு வேறு)



===========================
5)  rohu. (carpo, கண்ணாடி கெண்டை )

(actualy, 
கெண்டை is a common name for fish in tamil; there are about 15 கெண்டை varieties in tamilnadu and 20+ in india!)

young
Labeo rohita

mature:

Labeo rohita

regards
rnkantan
On Monday, September 26, 2016 at 10:08:32 AM UTC+5:30, nkantan r wrote:
மாடு -ம் ஆடு-ம் எப்படியோ அப்படியே மீன்-ம் .  ஆமாம்? மின்னுவது எப்படி மீன் ஆகும்? (மின்மினிப்பூச்சி-தானே; மீன்மினி இல்லையே ??)
regards
rnkantan

On Saturday, September 24, 2016 at 7:31:51 PM UTC+5:30, N. Ganesan wrote:
நக்ஷத்ரம் மின்னுவதால் மீன் (star). புரிகிறது.

நீர்வாழ் உயிரி ஆனவற்றுக்கு ‘மீன்’ என ஏன் பெயர் வந்தது?
விளக்கமுடியுமா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 26, 2016, 3:38:15 PM9/26/16
to சந்தவசந்தம், mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, vall...@googlegroups.com, pira...@googlegroups.com
தண்ணீர்த்தொட்டி மீன்கள்
~ ஞானக்கூத்தன்

இந்தக் கடலின்
எந்தக் குபேர மூலையிலும்
கிடைக்காத புழுக்கள்
வேளை தவறாமல்
தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்
புயல்களும் இல்லை.
திமிங்கிலங்களை
அவதாரக் கடவுள்
காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்
ஒன்று மட்டும்
புரியாத புதிராய் இருக்கிறது.

உலகத்தை உதடு குவியப் புணர்கையில்
அஃதென்ன இடையில்?
அப்புறம் ஒன்று
எங்கே எங்கள்
முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?

-----------------------------------


அற்புதமான கவிதை. சராசரி மனிதனின் கண்ணாடிக்கூண்டு வாழ்க்கை.
எல்லாம் கிடைக்கிறது. ஆனாலும், தொட்டிமீன் கண்ணாடிச் சுவரில் முட்டும்போது
விடுதலை இல்லாமை புரியமாட்டேன் என்கிறது!

இறுதிவரி சிகரம். மீன்கள் முள்ளு (தூண்டியில்) மாட்டி, சூரியனில் காய்ந்து
வதங்கிக் கருவாடு ஆகும்.  ஆனால், தொட்டிமீன்கள் அவ்விதியில் தப்பிவிட்டன.

 ”கருவாடும் கள்ளும்” என்பதை
நாட்டார் வழக்கில் முள்ளுச் சூரியனும், கள்ளுப் பிறையும் என்கிறார். 
பிறை = பிறை போல் உள்ள கிண்ணம் (wine cup or chalice). சந்திராதித்தர் உள்ளவரை (கல்வெட்டு),
சந்திர சூரிய பிறைகள் - மணப்பெண் தலையில். அதுபோல், சந்திர சூரியர்
“எங்கே எங்கள் முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்? “ கடைசி வரியில் வருவது அழகு!

கள்ளும் கருவாடும் - நாட்டார் பாடல்களில்


குமரிமாவட்ட மக்கள் அடையாளமும் வாழ்வுமுறைகளும்,

நா. கணேசன்

Though he had a strong foundation in Tamil classical literature, including Sangam poetry, Kamba Ramayanam and Bhakti poetry, and had studied the Bhagavad Gita and Kalidasa’s work in Sanskrit, he opted to write in free verse, after experimenting with longer poems.

He questioned the genuineness of the Dravidian Movement’s concern for Tamil language, and was critical of its rhetoric. He even declared that the movement’s approach towards Tamil literature was no different from that of the British.

“They are responsible for Tamils losing respect for their language,” he would say. He responded disdainfully to some Dravidian leaders’ common refrain ‘Tamil engal moochu’ (‘Tamil is our breath’) by writing: “Enakkum Tamilthaan moochu; aanaal aduthavar mel athai vidamatten” (“Tamil is akin to my breath too, but I will not exhale it on others”).

N. Ganesan

unread,
Sep 26, 2016, 3:40:36 PM9/26/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, vall...@googlegroups.com, pira...@googlegroups.com

N. Ganesan

unread,
Sep 26, 2016, 11:36:50 PM9/26/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Santhavasantham
நல்ல பதிவு.

மீன்களில் சில கயல்/கெண்டை வகுப்புகள்.


On Sunday, September 25, 2016 at 10:27:17 PM UTC-7, nkantan r wrote:
Aside:
what are the five fish types sanctioned as food for brahmins in brihaddharma?

hilsa,  (the famous ilish fish which now has been lost to india and imported heavily from bangladesh, thanks to the infamous farakka barrage!)
௨ள்ளம்,
கருவாவுளம்

 I have written extensively on this fish name. What is the ancient name of the உள்ளல் fish? It is முள்ளல். முள்ளம் > உள்ளம், like மலர் > அலர்.
A favorite of Bengalis is this muLLam/uLLam 'hilsa' fish. (will give Tagore's praise on UVS in Bengali, he calls Sangam editor as Agastya himself.)
முள்ளம்:உள்ளம் மீன் (Indian Salmon fish, Hilsa)
 






[...]
 
===========================
5)  rohu. (carpo, கண்ணாடி கெண்டை )

(actualy, 
கெண்டை is a common name for fish in tamil; there are about 15 கெண்டை varieties in tamilnadu and 20+ in india!)

young

ரோகு என வடக்கே வழங்கும் இந்த மீன் தமிழ் இலக்கியத்தில் “உரோகிதம்”. சிவப்பாக இருப்பதால்.

Labeo rohita (Hamilton, 1822)



இதற்குத் பழந்தமிழ்ப் பெயர்: செங்கயல் (= Red Carp) = உரோகிதம் = Labeo rohita. விடலைப் பருவத்தில் சிவப்பாய் இருக்கும் கயல்.
 
அழிவின் அருகே உள்ள இன்னொரு வகை செங்கயல்:
fringed-lipped carp

Labeo rohita

mature:

Labeo rohita

-----------------------------

சேற்கெண்டை cēṟ-keṇṭai , n. < id. +. Carnatic carp, greenish-brown, weighing as much as 25 lb., Barbus carnaticus; 25-பவுண்டு நிறையும் கரும்பச்சைநிறமும் உடைய கெண்டைமீன் வகை.

சேல்: 


 















சோழக் கெண்டை https://en.wikipedia.org/wiki/Swamp_barbகருங்கெண்டை karu-ṅ-keṇṭai , n. < id. +. Bitter Carp, silvery, attaining 5 in. in length, Barbus chola; ஆற்றுமீன் வகை.
The swamp barb was originally named Cyprinus chola by Dr. Francis Buchanan-Hamilton in 1822, and has also been referred to in scientific literature as Puntius titiusBarbus cholaCapoeta chola, or Barbus titius.In Bengali:পুঁটি

வரைக்கெண்டை = வரைக்கயல் = மலைக்கயல்









 









இலங்கைத் தீவின் கோழிக் கெண்டை  (கோழி இங்கே சேவலின் சூட்டு நிறத்தால்)
Note that the Tamil name, kOzhik keNDai and this special fish of Iizham island is not described in Tamil internet sites.

There is much to do to describe Tamil/Dravidian names of fish species.



 
















N. Ganesan

N. Ganesan

unread,
Sep 27, 2016, 8:44:42 AM9/27/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, pira...@googlegroups.com
On Sunday, September 25, 2016 at 6:16:09 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
பரிமளாவின் நூலை இலக்கப்படுத்தவேண்டுமே.

வங்கதேசத்துக்கடைக்காரன் தான்விற்கும் மீன்களில்  ஒன்றின் பெயரை அயிரா என்று  சொன்னான்,


வங்காளியரிடம் அயிரை படம் காட்டிக் கேட்கலாம். வங்க அகராதிகளில் அயிரா இருந்தால் சிறப்பு.

---------------------

வேதத்தில் விஷ்ணு என்றால் சூரியனின் கதிர் எனப் பொருள்.
விள்- என்ற தாதுவேர் தருவது: விண்ணு, விட்டு, விண்டு ... 
-ள்-/-ட்-/-ண்- இரண்டாம் எழுத்தாய் இருக்கும் சொற்றொகுதி பல. தமிழ்ச்சொற்பிறப்பில் முக்கிய விதிகளில் ஒன்று:

கட்ல என்று கெண்டை மீன் இந்தி, வங்காளி ... வடசொல்லாக வழங்குவது இதனால் என்பது தெளிவு.

கெள்- என்னும் தாதுவேர் அளிக்கும் சொற்கள்:
கெளுத்தி, கெண்டை, கெட்டில் 
கெட்டில்/கெட்டல் > கட்ல என வட இந்தியாவில் வழங்குகிறது.

கெட்டி/கட்டி என்ற சொற்களையும் நோக்குக. வளர்தல், அதிகமாதல்.
கெட்டி/கட்டி ‘bump', தசை பிடித்துக்கொள்தலைக் ‘கெண்டை பிடிச்சிருக்கு’ என்கிறோம்.
கச்சேரி களைகட்டியிருக்கு, முகம் களையாக இருக்கிறது என்பனவும்
இந்த கெள்-/கெண்-/கெட்- என்ற தாதுச்சொல்.

களையேறு-தல் kaḷai-y-ēṟu- , v. intr. < களை&sup5; +. 1. To increase in lustre, as one's countenance; ஒளி மிகுதல். 2. To grow in lustre on account of the increased manifestation of Godhead in an idol; விக்கிரகத்தில் தெய்வசத்தி மிகுதல். 3. To increase, as the phase of the moon; சந்திரகலை வளர்தல். (W.)
களைவாங்கு-தல் kaḷai-vāṅku- , v. intr. < id. +. 1. To decrease in lustre, as one's countenance; அழகுகுறைதல். 2. To lose lustre on account of the decreased manifestation of Godhead in an idol; விக்கிரகத்தில் தெய்வசத்தி நீங்குதல்.
களை&sup5; kaḷai , n. < kalā. 1. A digit of the moon; சந்திரகலை. களைப்பான் மதிமுகக் காரிகையீர் (வெங்கைக்கோ. 61). 2. Beauty, splendour, glow, lustre; அழகு. முகமுங்களைக ளின்று. (தாயு. வண்ணம்.). 3. (Mus.) The element of time-measure which specifies the various sub-divisions of akṣara- kālam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; தாளப் பிராணத்தொன்று. (பரத. தாள. 49.)
களைக்கட்டு-தல் kaḷai-k-kaṭṭu- , v. intr. < களை&sup5; +. To sound effectively, as music within an enclosure; இசைச்கருவிகளின் நாதம் அடக்கமான இடத்தில் நன்கு ஒலித்தல். Colloq.

In sum, the North Indian words for carp fish is Catla, and is Dravidian in origin. Catla is connected to words for carp in Tamil: keLutti/keNTai & kaLai, kaTTi etc.,

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 27, 2016, 8:46:52 AM9/27/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, pira...@googlegroups.com
Systematics, Germplasm evaluation and pattern of distribution and abundance of freshwater fishes of Kerala (India)en_US
dc.creator.researcherRadhakrishnan K V
This has many local names for freshwater fishes of Kerala

N. Ganesan

unread,
Sep 28, 2016, 1:18:43 AM9/28/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham
> மாடு -ம் ஆடு-ம் எப்படியோ அப்படியே மீன்-ம் .  ஆமாம்? மின்னுவது எப்படி மீன் ஆகும்? 
> (மின்மினிப்பூச்சி-தானே; மீன்மினி இல்லையே ??)
> regards, rnkantan

தென்னிந்திய மொழிகளில் குறில், நெடில் மாறி பெயர்ச்சொல், வினைச்சொல் உருவாகும்.
தும்-/தம்- “சிவப்பு”, தம்- > தாமரை, தாம்ரம். மடி உள்ளது மாடு, களைப்பு விடுக்கும் இடம் வீடு, விடுதி,
காண்பது கண், எலும்பு மூட்டப்பட்ட இடம் முட்டி (> முஷ்டி), காற்றை முகப்பது மூக்கு, சுரீர் என கதிர் காய்வது சூரியன், ......

மீன் காரணப் பெயர். பாரதிதாசன் (1958):
”மீன் - இது கூட மீனம்  என்று வடசொற் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். அது அவ்விகுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள்.

அம் முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள்.

எனவே, மீன் என்பதும் முதனிலை தொழிற்பெயர். அது தொழிலாகு பெயர் என்னும் கோளைக் குறிக்கும். எனவே, மீன் தூய தமிழ்ச் சொல் பெயர்.

கோள் மின்னும் மீன் சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர் என்று உணர்க.” (குயில் 28. 6. 1958)

ஆயிரக்கணக்கான மீன் வகுப்புகளின் பெயர்கள் தமிழில் உள்ளன (உ-ம்: முனைவர் ச. பரிமளா எழுதிய நூல், 1991). 
http://mohanareuban.blogspot.com/2015/12/blog-post.html : இதில் 1200 மீன் பெயர்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாவற்றுக்கும் பொதுப்பெயர் மீன் தான். இதனை எல்லா திராவிடமொழிகளிலும் மீன் ‘Fish' என்ற சொல் காணலாம். ஆயிரக்கணக்கான மீன் இனங்களில் பலவும் பகல் நீரில் பார்க்கும் போது மின்னும் தன்மை உடையனவாக உள்ளன. இதனால் காரணப்பெயராக மீன் என்றே அழைத்துள்ளனர்.

உவமைக் கவிஞர் சுரதா பாடல் ஒன்றில் மலைப்பொருள்கள் மணமும், கடற்பொருள்கள் ஒளியும் பெறுதலைப் பாடியுள்ளார் (நன்றி: திருச்சிப் புலவர் ராமமூர்த்தி). ஹெமிங்வே நாவலிலும் மீன்களின் வெள்ளிநிறம் சொல்லப்படுகிறது.

அலைவளர் கடலே ஆழம் 
      அலைகளே அதன் கைத் தாளம்! 
கலம்பகக் கடலின் செல்வம் 
      கைவிரல் தொகைப்போல் ஐந்தே! 
மலைபடு பொருள்கள் யாவும் 
      மலர்போன்று மணத்தை வீசும். 
ஒலிகடல் வழங்கும் செல்வம் 
      ஓங்கிய ஒளியை வீசும்; (சுரதா, நெய்தல் நீர்).

சென்னைக் கடற்கரை, பாடல் 12:

மீனெழுந்து விளையாட மின்னல் தோன்ற 
  வியப்படைந்த மக்களதால் இன்பம் கொள்ள 
கானல்வரிப் பாடல்போல் காதற் பாடல்  
   காதினிலே தமிழின்பம் ஊட்டும் போது 
தேனினிய செந்தமிழைச் சுவைக்க வேண்டி
  திரைகடலும் ஓய்ந்திருந்து கேட்கும் காட்சி 
வானிருந்து மதிகண்டு மகிழ்தல் பாரீர் 
  வந்திதனைப் பார்த்தாலே கவிதை தோன்றும்! (கவிஞர் சிவ.சூரி)

-----------------

மீன் பொதுப் பெயராகத் தான் சங்க இலக்கியம் முழுதும் இருக்கிறது.
றன்னகரம் - ன் - சம்ஸ்கிருதத்தில் இல்லை. எனவே, தெலுங்கு, கன்னடம், வடமொழி போன்றவற்றில்
மீன் மீந- என்றே எழுதப்படுகிறது. மொழியியல் அறிஞர் எல்லோரும் மீநம் என்பது தென்னிந்திய மீன்
என்பதுதான் என விளக்கியுள்ளனர்.

கலித்தொகையில் இரண்டு ஆட்சி:

நா. கணேசன்

கலித்தொகையில் இரண்டு ஆட்சி:
(A)
1) பூக்கவின் கொண்ட (2) புகழ்சாலெழிலுண்க
(3) ணோககுங்கா னோக்கி னணங்2காக்குஞ் சாயலாய் தாக்கி
யினமீ னிகன்மாற வென்ற சினமீ
(4)னெறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த

நச். உரை:
எ - து: நோக்குங்காலத்து அப்பார்வையாலே பிறர்க்கு 1வருத்தமுண்டாக்கும், தன்னில்இணையொத்துப் பூவினதழகைத் தன்னிடத்தேகொண்ட புகழ்ச்சியமைந்த 1அழகினையுடைய கண்ணினையுடையாய்! சாயலாய்! இனமான மீன்களது மாறுபாடுகெடத் தாக்கிவென்ற சினத்தையுடைய மீனாகிய எறியுஞ் (1) சுறாவினது மருப்பாற் 
(1) சுறாவினது மருப்பாற் செய்த பலகையைக் கோத்துப் புறவிதழொடித்த நெய்தற் பூவை நெடியநாரிலே தொடுத்து அழகுபெறக் கட்டிக் கையாலே வாசித்தலையுடைய யாழினது ஓசையைத் 1தம்மிடத்தேகொண்ட இனமான 2வண்டுகள் 3ஆளா[ப்]பஞ்செய்து பாடத்தாழாமல் தேன்றுளிக்கும்

(B)
3பாத்துற்றன பாடமாயின், பிரிவுற்றனவென்க.
31 கரைகவர்கொடுங்கழிக் கண்கவர் புள்ளினந்
திரையுறப் பொன்றிய புலவுமீ னல்லதை
யிரையுயிர் செகுத்துண்ணாத் துறைவனை யாம்பாடு
மசைவர லூசற்சீ ரழித்தொன்று பாடித்தை
எ - து. அது கேட்ட தலைவி, கரையைபிடித்துத் தனக்காக்கிக்கொள்ளுகின்ற கொடுங்கழியிடத்து நோக்கினார்கண்ணை வாங்கிக்கொள்ளும்அழகையுடைய பறவைத்திரள் திரைமோதுகையினாலே இறந்த 4புலானாற்றத்தை யுடைய மீனை 
இரையாகத் 1தின்னுமதல்லது தாம்ஒன்றன் உயிரைப்போக்கி இரையாக அதனைஉண்ணாத அருட்டுறைவனை நாம்பாடும் அசைந்துவருதலை யுடைய ஊசற்பாட்டை, நீ இயற்பழித்ததனை அழித்து இயற்பட ஒன்றுபாடுவாய் என்றாள். எ - று.

N. Ganesan

unread,
Sep 28, 2016, 3:03:11 PM9/28/16
to சந்தவசந்தம், housto...@googlegroups.com, மின்தமிழ், vallamai


On Wednesday, September 28, 2016 at 8:10:13 AM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:

மின்னும் கயல்


வணக்கம் கணக்கில. சந்தம் துள்ளும் உங்கள் கவிதையை உவேசா வானில் வாழ்த்துவார்.

அமெரிக்காவில் பல வகை கயல் (Cf. கயம்) இனங்கள் நீர்வளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்போது ஆசியா கயகளின் ஆதிக்கம் - invasive species.

கண்ணாடிக் கெண்டை சூரிய ஒளியில் துள்ளும் காட்சி: http://bigcarpnews.com/web/asian-carp-know-the-difference/

 

























 



































(பொம்மைச் சுறாவைப் பார்த்து துள்ளும் வெள்ளிக் கெண்டை மீன்கள்.
உங்கள் மின்னும் கயல் கவிதை கண்டு துள்ளாத மனமும் துள்ளும்!

நா. கணேசன்

 
பாயும்புனல் வேகம்புவி வீழுந்திருக் காட்சி
   பாடும்படி ஆசையெனுள் தானேஎழக் கண்டேன்
ஆயும்தமிழ் ஞானந்திகழ் ஆசான்மொழி கேட்டேன்
   ஆகாஅதை நேரில்விழி காணும்நிலை என்னே!
தாயும்பல சேயும்என நீரின்மிசை மீன்கள்
   தாவிப்புனல் வானின்வழி மேவிச்செலல் என்னே!
காயும்கதிர் காதற்கரம் நீரில்விளை யாட
   காதல்நதி நாணக்கலை பூணப்பல வண்ணம்!

பாவப்பொதி போக்கும்புவி ஓடிக்களி ஆறு
   பார்க்கும்விழி போலத்திகழ் மீனத்திருக் கூட்டம்
தாவிச்செல காணும்கவி என்னுள்நிலை மாற்றம்
   தட்டுத்தடு மாற்றத்துடன் சங்கத்தமிழ் கொண்டு
மேவிக்கவி பாடப்பல சந்தத்துணை வேண்டி
   விண்ணில்தவழ் புதிரோஎன விளங்காநிலை கொண்டு
கூவிக்கவி கொட்டித்தர மேளம்பல கொட்டி
   கொண்டல்மிசை நின்றுச்சுரம் கூட்டும்நிலை பாரீர்!

முத்தைத்தரு ஆற்றின்கரை முத்தம்பல சிந்தி
    முன்னும்பினர் பின்னும்கதிர்  என்னும்படி ஓடி
நித்தம்தவம் செய்யும்மரம் சித்தம்களி கூர
   நெஞ்சத்தடம் ஞானக்கதிர் வீசும்படி மின்னி
தத்தம்பணி தவமாய்ச்செய தடைகள்தமை மீறி
    சத்தக்கடல் கூடச்செலும் ஆற்றுப்பட கேறி
தத்தித்தவழ் மீனும்நதி உச்சித்தலம் மோர்ந்து
    தானும்துணை ஆகிக்கடல் காணச்செலல் உண்டோ!

தெளிவாகிய புனலேதவழ் நறுந்தாமிர பரணி
   செதிலாமவை நவமாமணி எனவேதிகழ் கயலை
அளியார்மலர் எனவும்பெரும் புலவோர்சிலர் சொல்வார்
   அகலாயிருள் தனையோட்டிடும் அகலாய்ச்சிலர் கொள்வார்
அளவாஎழில் நதியாமதன் திருமேனியின் மேலே
   அழகாயுள கதிரோவிலை மதியோவெனக் கொஞ்சிக்
களியாமனம் உடையார்புவி உளரோஎனப் பேசும்
   கவிகோடியின் வழியேவரும் சிவசூரியும் சொல்வேன்.

சிவசூரி.


2016-09-28 11:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


உவேசா, என் சரித்திரம்:
”பாபநாசம்

செவந்திபுரத்தில் சுப்பிரமணிய தேசிகர் நான்குமாத காலம் தங்கியிருந்தார். தினந்தோறும் காலையில் அருகிலுள்ள பாபநாசம் சென்று தாமிரபர்ணியில் நீராடி ஸ்ரீ உலகம்மையையும் ஸ்ரீ கலியாணசுந்தரேசுவரரையும் தரிசித்து வருவார். அவருடன் நாங்களும் செல்வோம். பொதிய மலை அடிவாரத்தில் அமைந்த அந்த ஸ்தலத்தின் காட்சி மனோரம்மியமாக இருக்கும். பாறைகளினிடையே தத்தித் தவழ்ந்து வரும் அருவியின் அழகும் அதில் கொழுத்த பல நிறமுள்ள மீன்கள் பளிச்சுப் பளிச்சென்று மின்னி விளையாடும் தோற்றமும் மெல்லென்ற காற்றும் நம்மை மறக்கச் செய்யும். அங்கே யாரும் மீனைப் பிடிக்கக்கூடாது. அதனால் அங்குள்ள மீன்கள் சிறிதும் அச்சமின்றி நீராடுவோர்கள் மீது மோதி விளையாடும்.

பாபநாசம் கோயிலில் எண்ணெய்ச் சாதமென்ற ஒருவகைப் பிரசாதமும் அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படும். எங்கள் காலை நேர இளம் பசியைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அப்பிரசாதத்தை எங்களுக்கு அளிக்கும்படி தேசிகர் ஏற்பாடு செய்திருந்தார். பொதிய மலையிலிருந்து வேகமாய் இறங்கி ஓடி வரும் தாமிரபர்ணியின் தெளிந்த நீரில் மீனினங்கள் எங்களைச் சுற்றிச் சுற்றி வர, அவைகளுண்ணும்படி அன்னத்தை இறைத்து நாங்கள் அப்பிரசாதத்தை உண்ணும்போது உண்டான இன்பத்துக்கு இணையாக எதைச் சொல்லலாமென்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

கவிஞர் மீ.வி. போன்ற நெல்லைமாவட்டக்காரர்கள் இக் காட்சியைப் பலமுறை அனுபவித்திருப்பர். மீன்கள் மின்னுவதும், துள்ளுவதும், அருகே வருவதுமான காட்சியைப்
பாட்டாக்கித் தரலாமே.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Sep 30, 2016, 8:49:14 AM9/30/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
வாள்மீன் (அ) கத்தி மீன் = Xiphias gladius


வாள் மீன்களில் இன்னும் இரண்டு வகை:
(2) மயில் மீன் (அல்லது) தளப்பத்து - Sail Fish
(3) கொப்பரக்குல்லா - Marlin

N. Ganesan

தளப்பத்து (மயில் மீன்)

ஈட்டி போன்ற கூரிய மூக்கு, தலை முதல் வால்வரை படகு பாய் போன்ற பெரிய தூவி, அதிவேக நீச்சல், துள்ளல் பாய்ச்சல்….தளப்பத்து மீனின் அடையாளங்கள் இவை. 4 முதல் 8 அடி நீள மீன் இது.
SAIL FISH என அழைக்கப்படும் தளப்பத்தின் இன்னொரு பெயர் மயில் மீன். இதன் பெரிய தூவியில் எண்ணற்ற கரும்புள்ளிகள் அமைந்திருக்கும். மயில் மீன் என்று இது அழைக்கப்பட இதுவே காரணம்.
கீழ்ப்புற முன்தூவிகள் இரண்டும் மெல்லிய நீளத்தூவிகளாக இருக்கும். வால் பிறை வடிவானது. வேகமாக நீந்த உதவுவது.
தளப்பத்து அதிவேகமாக நீந்தும்போது, இந்த தோகையை மடக்கி அதற்குரிய பள்ளத்தில் வைத்துக் கொண்டு இன்னும் அதிவேகமாக நீந்தும். இரை மீன் கூட்டதைப் பந்தாகச் சுருளச் செய்து, கூர்மூக்கால் அவ்வப்போது மீன்கூட்டத்தின் இரைமீன்களைக் காயப்படுத்தும்.
உதிர்ந்து உயிரிழந்துவிழும் மீன்களை உணவாகக் கொள்ளும். திறந்த பெருங்கடல் பரப்பில் 50 ஆயிரம் வரை முட்டைகளை இது இடும். நீர்ப்பரப்பில் மிதந்தலையும் தளப்பத்தின் முட்டைகளில் மிகச்சிலவே மீனாக உருக் கொள்ளும்.

கொப்பரக்குல்லா  (MARLIN)

தளப்பத்து போன்ற இன்னொரு மீன் கொப்பரக்குல்லா. இந்த மீன், தலையில் மட்டுமே பெரிய குல்லா போன்ற தூவியுள்ளது. இதன் தூவி வரவர சிறுத்து மறையும். ஆங்கிலத்தில் மர்லின் (MARLIN) என்று அழைக்கப்படும் கொப்பரக்குல்லா, ஹெர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் நாவல் மூலம், கடல்மீன்களில் கதாநாயக அந்தஸ்து பெற்ற மீனாக உயர்ந்தது.
தளப்பத்து மீனுடன் ஒப்பிடும்போது கொப்பரக்குல்லா நீளமானது. இந்த இரு வகை மீன்களுமே அதிவேகத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியவை.

SWORD FISH என அழைக்கப்படும் வாள்மீன், (Xiphias gladius), தளப்பத்து, கொப்பரக்குல்லாவுடன் சேராத தனி வகை மீன் ஆகும். இந்த மூன்று மீன்களையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளக்கூடாது.


மொழிபெயர்க்க முயற்சி தேவையான ஹெமிங்வே நாவல் - பல இன மீன்கள் பெயர் தெரிஞ்சிருக்கணும்:
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே

N. Ganesan

unread,
Nov 17, 2016, 10:44:18 AM11/17/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com


On Wednesday, November 16, 2016 at 7:43:57 PM UTC-8, N. Ganesan wrote:
நளவெண்பா:
செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்ப்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.

செல்லூர்கிழார் உரை:

இந்த நளவெண்பாவுக்கு ஆதாரமான கம்பர் பாடல்:

'அப்புடை அலங்கு மீன் 
     அலர்ந்ததாம் என - 
உப்புடை இந்து என்று 
     உதித்த ஊழித் தீ, 
வெப்புடை விரி கதிர் 
     வெதுப்ப - மெய் எலாம் 
கொப்புளம் பொடித்ததோ, 
     கொதிக்கும் வானமே?'


 

அப்பு = நீர். அது, கடலுக்கு ஆகுபெயராய் இப்பாடலில் வந்துள்ளது.
அப்பு = கடல் (MTL).

உப்பு < சுப்பு = சுவை. சுவையுடைய சந்திரன் (பொங்கிவரும் பெருநிலவு - பாரதி)
அமிர்த தாரையுடைய சந்திரன் என்பதை ’உப்புடை இந்து’ என்கிறார் கம்பர்.
உப்பு என்பதற்கு ‘salt' என்ற பொருளல்லாது “சுவை” (அமிர்தம்) என்ற பொருளில் 
உள்ள அரிய பாடல். கம்பர்.

இதனை, புகழேந்திப் புலவர் அப்படியே வெண்பா ஆக்கியுள்ளார். 

~NG
 


வானத்தைக் கடலாகவும், விண்மீன்களை மீன்களாகவும் ஹஃபிஸ் (1320-1389 CE) பாடுகிறார் - சங்க இலக்கிய உருவகம் பாரசீகக் கவிதையில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்.
வானத்து மீன்களை நீர்மீன்களாகவே சிந்து முத்திரையில் காட்டியுள்ளனர் பண்டை சிந்து சமவெளியினர்.  ~NG

A Suspended Blue Ocean


The sky

Is a suspended blue ocean.

The stars are the fish

That swim.


The planets are the white whales

I sometimes hitch a ride on,


And the sun and all light

Have forever fused themselves


Into my heart and upon

My skin.


There is only one rule

On this Wild Playground,


For every sign Hafiz has ever seen

Reads the same.


They all say,


"Have fun, my dear; my dear, have fun,

In the Beloved's Divine

Game,


O, in the Beloved's

Wonderful

Game."

Reply all
Reply to author
Forward
0 new messages