கொங்கபட்டி (உசிலை) தமிழ் பிராமிக் கல்வெட்டு ( 3 வரிகள்)

77 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 27, 2020, 8:26:33 PM12/27/20
to vallamai, housto...@googlegroups.com
Tamil_News_large_2678185.jpg

Three lines of Tamil Brahmi, top & bottom almost gone.
Take a look at the two symbols in the middle line.
https://m.dinamalar.com/detail.php?id=2678185

Interesting symbols:
(1) ஆடுபுலி ஆட்டம் போல ஒன்று:
https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=3014
https://tamil.oneindia.com/img/2015/01/27-1422351908-aadupuliatam-600.jpg
https://www.youtube.com/watch?v=bo67_vBXKn4&
(probably, a game between Uyir vs Karma ??)

(2) பிய்த்தல் - பங்கிடுதல், எனவே, பிசி = Riddle (தொல்காப்பியம்).
பிசி > புதிர் என்னும் சொல் பிறப்பு.
Let me call/coin பிசிநிலை = Labyrinth. All over the world, in India, Europe
we find Labyrinths (several square meters area) are found in Megalithic period.
The second symbol looks like a form of பிசிநிலை (Labyrinth).
A labyrinth near Dharmapuri,
https://medium.com/@Srikkanth_TNIE/when-a-samosa-seller-led-researchers-to-a-2000-year-old-megalithic-labyrinth-ba332bcb6ba0
A labyrinth near Pollachi,
https://timesofindia.indiatimes.com/city/chennai/Second-largest-maze-of-ancient-stones-found/articleshow/48336948.cms
https://www.ancient-origins.net/news-history-archaeology/2000-year-old-labyrinth-uncovered-india-shows-same-pattern-greek-maze-020474
"The symbolism and meaning of labyrinths in the ancient world are complex and multifarious.
In some Asian cultures, the labyrinth was related to “the escape from samsara and the
laws of karma,” says An Illustrated Encyclopedia of Traditional Symbols by J.C. Cooper. "

தங்கமீனாள், தமிழாசிரியை, கொங்கபட்டி (உசிலை) கண்டுபிடித்த தமிழ்பிராமிக் கல்வெட்டு:
https://www.youtube.com/watch?v=8uygA2MtHyE

கொங்கர் புளியங்குளம், அதன் அருகே கிண்ணிமங்கலம் சிவாலயத்தில் பள்ளிப்படை லிங்கத்தில் தமிழ் பிராமிக்கல்வெட்டு, இப்போது கொங்கபட்டியில் கிடைத்துள்ள கல்வெட்டு, பிராமி மதுரைப் பகுதிக்கு வடக்கே இருந்து வந்தவாறு தெரிவிக்கின்றன. கீழடியில் கிடைக்கும் பானை ஓடுகள் கால வரையறை துல்லியமாகச் செய்தால் வெளிச்சம் கிடைக்கும்.

நா. கணேசன்

உசிலம்பட்டி அருகே ஊர்மந்தையில் தமிழி (பிராமி) எழுத்துக்களுடன் கல்

பதிவு செய்த நாள்: டிச 26,2020 05:56
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி ஊர் மந்தையில் கிடந்த தொம்பரை கல்லில் கி.மு., 2 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் மதுரை ரோட்டில் கொங்கபட்டி கிராமம் உள்ளது. கிராமத்தின் சீலைக்காரி அம்மன் கோயில் முன்பாக ஊர்மந்தையில் பழமையான தொம்பரை கல் கிடந்தது. கல்லில் பழமையான எழுத்துக்கள் இருப்பதைப் பார்த்த கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த எழுமலை அரசு பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரியும் மயில்மீனா கொடுத்த தகவலின் பேரில், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், மதுரை தொல்லியல்துறை அலுவலர் ஆசைத்தம்பி, அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கல்லில் இருந்த எழுத்துக்கள் கி.மு., காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்பதை உறுதி செய்தனர். கல்வெட்டு எழுத்துக்களை படி எடுத்து அதில் உள்ள தகவல்களை படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் மயில்மீனா:

கிராமத்து மந்தையின் முன் இருந்த கருங்கல்லை ரோடு விரிவாக்கம் செய்த போது சீலைக்காரி அம்மன் கோயில் முன்பாக போட்டனர். அதில் எழுத்துகள் இருப்பதை பார்த்து காந்திராஜனிடம் தகவல் தெரிவித்தேன். அவர் வந்து கல்மேல் இருந்த மண்ணை அகற்றிப்பார்த்து பழமையான கல்வெட்டுக்கள் என்பதை உறுதி செய்து தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்தார் என்றார்.

தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்:

செக்கானூரணி, உசிலம்பட்டி, தேனி மாவட்ட பகுதிகளில் பாறை ஓவியங்கள், கப்மார்க்குகள், தமிழி எழுத்துக்கள், சமணர் படுகைகள் என அதிகம் கிடைத்துள்ளன. தனிக்கல்லில் தமிழி எழுத்துக்களுடன் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்றார்.

தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி:

கல்வெட்டின் காலம் கி.மு., 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம். மதுரையில் இருந்து செல்லும் வணிகப்பாதையின் வழியில் இந்த பகுதியில் வணிகர்கள் தங்கிச் செல்லும் இடமாக முன்னர் இருந்திருக்கலாம். எழுத்துகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

அரசு அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியன் :

எழுத்துக்களில் ஒருவருடைய பெயர், ஊர் பெயர், மற்றும் பொன் ( தங்கம்) குறித்த குறியீடு முதலியவை உள்ளன. கல்லின் முதல் எழுத்து முழுமையான தகவல் இல்லாமல் உள்ளது. ஆய்வாளர்கள் முறையாக படித்தபின் என்ன எழுதியுள்ளது என்பது தெரியவரும் என்றார்.





N. Ganesan

unread,
Dec 29, 2020, 7:23:55 AM12/29/20
to vallamai, housto...@googlegroups.com
Tamil_News_large_2678185.jpg

Three lines of Tamil Brahmi, top & bottom almost gone.
Take a look at the two symbols in the middle line:
(1) Lamb & Tigers symbol, (2) Labyrinth symbol

இன்னொன்றும் இங்கே கவனிக்க வேண்டும். கொங்கர் புளியங்குளம் கல்வெட்டிலே தான் பிராமி எழுத்துகள் உருவாகும் அடிப்படையான வட்டம், கட்டம் ஜியாமெட்ரி வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன. அருகே, கிண்ணிமங்கலத்தில் இந்தியா, தென்கிழக்கு ஆசியாவிலே பழமையான பள்ளிப்படை இலிங்கம் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புடன் 6 மாதம் முன்னால் கண்டறியப்பட்டது. இப்போது கொங்கபட்டியில் 3 வரி கல்வெட்டு, நடு வரிதான் தெளிவு. மற்றவை என்ன என வாசிப்போர் வாசித்துத் தரட்டும், பார்ப்போம்.

இத்துடன், பொற்பனைக்கோட்டை நடுகல் கல்வெட்டும் இணைத்துப்பார்க்கப்பட வேண்டும். கொங்கர்கோன் ஒருவனுக்கு அங்கப்படை (மெய்காவல்) செய்த ஒருவன் தன் சொந்த ஊரில் ஆ கோட் பூசல் காரணமாகப் பட்டது பற்றிக் குறிக்கும் கல்வெட்டு. இப்பொழுது, வரகூர் (பர்கூர்) மலையில் கன்னடமும், தமிழும் கலந்த வீரனின் நடுகல் கிடைத்துள்ளது. கர்நாடகம் (தழைக்காடு, கங்க ராஜ்யம்) - கொங்குநாடு - பாண்டிநாடு என வடக்கே இருந்து பிராமி பாண்டிநாட்டைஅடைவதும், தமிழ் எழுதத் தொடங்குவதுமாக இருந்த கால கட்டத்தில் சமணம், சைவம் குறித்த தமிழ் பிராமிக்கல்வெட்டுகள் நடுகற்களிலும், லிங்கத்திலும் கிட்டியிருப்பது அருமை. இவற்றையெல்லாம் மிக நினைந்து, தமிழின் முதல் நாவல் எழுதிய இளங்கோ அடிகள் - தமிழ் தேசியக் காப்பியம் இயற்றினார். தாம் வளர்ந்த ஆன்பொருனை (இன்றைய அமராவதி ஆறு) காவிரியுடன் சேரும் வஞ்சி மாநகர அரண்மனையினில்  சமணர்கள் கர்நாடகத்தில் இருந்து வந்துபோவதும், விஜயமங்கலத்தில் சமணர்களின் ஜினாலயத்திற்கு ஆச்சாரியர்களாகவும், பூஜகர்களாகவும் ஆதிநாதரை வருவதனை அறிந்தவர். எனவே, சமண சமய சம்போதனை செய்வதற்காகவே, கவுந்தி அடிகள் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து, செல்வத்தை இழந்த கோவலன் - கண்ணகி மதுரைக்குச் சென்று வணிகம் தொடங்க ஆசி பெற தழைக்காட்டு கங்க ராஜ்யம் சென்று குலகுருக்களிடம் ஆசிபெறுவதாக அமைத்தார். இது மஹாயான பௌத்தத்தின் கண்டவியூக சூத்திரத்தைப் பார்த்து சமணத்துக்காக, நாடுகாண் காதை அமைந்துள்ளது. இதே போல, கண்டவியூஹ சுத்திரத்தாலே தான் மஹாகவி காளிதாசர் இரகுவம்ச காவியத்தை அமைத்துள்ளார். http://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html

கொங்கபட்டி தாமிழி வாசகம் என்ன என அறியக் காத்திருப்போம்.

 பொற்பனைக்கோட்டை நடுகல்

1.கோவென்கட்டிற் நெதிர –
2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்
3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்

கொங்கர் விண்ணக் கோன் என்னும் அரசனின்
அங்கப்படை (மெய்க்காவலன்) தானைத் தனயன்
ஞாபகார்த்தமாக எடுத்த கல். பல தமிழ், வடசொற்கள்
கலந்த கல்வெட்டு இஃது.  
அதவ்வனாரு = அதவனார் = (இறந்து) பட்டாரு.
ஹத: என்னும் வடசொல்லின் தமிழாக்கம்.
ஹரிமா > அரிமா (பொன்னின் நிற விலங்கு, எனவே சிங்கம். சங்க இலக்கியம்)
சிந்துவெளியில் மஞ்சள் என்பதன் மொழிபெயர்ப்பாக (Loan translation) ஹரித்ரம்
என வடமொழியில்  அமைந்தது. அரித்திரம் என மஞ்சளுக்குப் பெயர் தமிழ் வைத்திய
நூல்களில் வரும். ஹரன் > அரன், ஹரி > அரி, ... போல, ஹத: > அதவனார் என  வினைச்சொல்லாக்
அமைகிறது. பொற்பனைக்கோட்டை கொங்கர்கோன் அங்கப்படையான் ஆகோட் கல்வெட்டு
தான் அதவனார் என்னும் சொல் தமிழில் முதன்முதல் பதிவான காலம். இலக்கியத்தில்
பின்னர் புகுகிறது: அதவு²-தல் atavu- , 5 v. tr. cf. hata. 1. To kill; கொல்லுதல்.
முதலை மடுவினி லதவிய புயலென (திருப்பு. 278). 2. To attack; எதிர்த்து நெருக்குதல்.
அதவிப்போர் யானை யொசித்து (திவ். இயற். 2, 89).
http://www.lonelyphilosopher.com/the-fall-of-drona-aswathama-hatha-iti-narova-kunjarova/
https://www.quora.com/Whats-the-meaning-of-Ashwathama-hatha-ha-kumjara-ha
https://www.quora.com/What-does-Aswathama-Hatha-Kunjaraha-mean
”அஶ்வத்தாம ஹத,  குஞ்ஜரஹ” என்னும் புகழ்மிக்க மகாபாரத வாக்கியத்திலும் அதவனார் என்னும்
பொற்பனைக்கோட்டைச் சொல்லாட்சியின் மூலமாகிய வடசொல் ஆட்சி காணலாகும்.

http://pudukkottaihistory.blogspot.com/2019/05/blog-post.html
https://www.youtube.com/watch?v=8fruHH3zLsE
https://worldtamilforum.com/historical_facts/tamilnadu_portpanai_fort/
https://www.hindutamil.in/news/tamilnadu/160707--1.html
https://twitter.com/mani_tnigtf/status/1211886800316141569/photo/1
http://travelingwithbala.blogspot.com/2017/04/blog-post_17.html
https://www.dinamani.com/tamilnadu/2012/jul/21/புதுக்கோட்டை-அருகே-சங்க-காலத்-தமிழ்-பிராமி-நடுகல்-529620.html
https://upload.wikimedia.org/wikipedia/ta/2/20/புதுக்கோட்டை_ஆகோள்_கல்வெட்டு.jpg

கொங்கர் புளியங்குளம்:
https://www.youtube.com/watch?v=17V8KNUnzLI
https://www.youtube.com/watch?v=cU9q3PGeoC0
https://www.tnarch.gov.in/kongar-puliyankulam-brahmi

நா. கணேசன்

Interesting symbols:
(1) ஆடுபுலி ஆட்டம் போல ஒன்று:
https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=3014
https://tamil.oneindia.com/img/2015/01/27-1422351908-aadupuliatam-600.jpg
https://www.youtube.com/watch?v=bo67_vBXKn4&
(probably, a game between Uyir vs Karma ??)

(2) பிய்த்தல் - பங்கிடுதல், எனவே, பிசி = Riddle (தொல்காப்பியம்).
பிசி > புதிர் என்னும் சொல் பிறப்பு.
Let me call/coin பிசிநிலை = Labyrinth. All over the world, in India, Europe
we find Labyrinths (several square meters area) are found in Megalithic period.
The second symbol looks like a form of பிசிநிலை (Labyrinth).
A labyrinth near Dharmapuri,
https://medium.com/@Srikkanth_TNIE/when-a-samosa-seller-led-researchers-to-a-2000-year-old-megalithic-labyrinth-ba332bcb6ba0
A labyrinth near Pollachi,
https://timesofindia.indiatimes.com/city/chennai/Second-largest-maze-of-ancient-stones-found/articleshow/48336948.cms
https://www.ancient-origins.net/news-history-archaeology/2000-year-old-labyrinth-uncovered-india-shows-same-pattern-greek-maze-020474
"The symbolism and meaning of labyrinths in the ancient world are complex and multifarious.
In some Asian cultures, the labyrinth was related to “the escape from samsara and the
laws of karma,” says An Illustrated Encyclopedia of Traditional Symbols by J.C. Cooper. "

மயில்மீனாள், தமிழாசிரியை, கொங்கபட்டி (உசிலை) கண்டுபிடித்த தமிழ்பிராமிக் கல்வெட்டு:

https://www.youtube.com/watch?v=8uygA2MtHyE

கொங்கர் புளியங்குளம், அதன் அருகே கிண்ணிமங்கலம் சிவாலயத்தில் பள்ளிப்படை லிங்கத்தில் தமிழ் பிராமிக்கல்வெட்டு, இப்போது கொங்கபட்டியில் கிடைத்துள்ள கல்வெட்டு, பிராமி மதுரைப் பகுதிக்கு வடக்கே இருந்து வந்தவாறு தெரிவிக்கின்றன. கீழடியில் கிடைக்கும் பானை ஓடுகள் கால வரையறை துல்லியமாகச் செய்தால் வெளிச்சம் கிடைக்கும்.

நா. கணேசன்

உசிலம்பட்டி அருகே ஊர்மந்தையில் தமிழி (பிராமி) எழுத்துக்களுடன் கல்

பதிவு செய்த நாள்: டிச 26,2020 05:56
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி ஊர் மந்தையில் கிடந்த தொம்பரை கல்லில் கி.மு., 2 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் மதுரை ரோட்டில் கொங்கபட்டி கிராமம் உள்ளது. கிராமத்தின் சீலைக்காரி அம்மன் கோயில் முன்பாக ஊர்மந்தையில் பழமையான தொம்பரை கல் கிடந்தது. கல்லில் பழமையான எழுத்துக்கள் இருப்பதைப் பார்த்த கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த எழுமலை அரசு பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரியும் மயில்மீனா கொடுத்த தகவலின் பேரில், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், மதுரை தொல்லியல்துறை அலுவலர் ஆசைத்தம்பி, அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கல்லில் இருந்த எழுத்துக்கள் கி.மு., காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்பதை உறுதி செய்தனர். கல்வெட்டு எழுத்துக்களை படி எடுத்து அதில் உள்ள தகவல்களை படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் மயில்மீனா:

கிராமத்து மந்தையின் முன் இருந்த கருங்கல்லை ரோடு விரிவாக்கம் செய்த போது சீலைக்காரி அம்மன் கோயில் முன்பாக போட்டனர். அதில் எழுத்துகள் இருப்பதை பார்த்து காந்திராஜனிடம் தகவல் தெரிவித்தேன். அவர் வந்து கல்மேல் இருந்த மண்ணை அகற்றிப்பார்த்து பழமையான கல்வெட்டுக்கள் என்பதை உறுதி செய்து தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்தார் என்றார்.

தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்:

செக்கானூரணி, உசிலம்பட்டி, தேனி மாவட்ட பகுதிகளில் பாறை ஓவியங்கள், கப்மார்க்குகள், தமிழி எழுத்துக்கள், சமணர் படுகைகள் என அதிகம் கிடைத்துள்ளன. தனிக்கல்லில் தமிழி எழுத்துக்களுடன் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்றார்.

தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி:

கல்வெட்டின் காலம் கி.மு., 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம். மதுரையில் இருந்து செல்லும் வணிகப்பாதையின் வழியில் இந்த பகுதியில் வணிகர்கள் தங்கிச் செல்லும் இடமாக முன்னர் இருந்திருக்கலாம். எழுத்துகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

அரசு அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியன் :

எழுத்துக்களில் ஒருவருடைய பெயர், ஊர் பெயர், மற்றும் பொன் ( தங்கம்) குறித்த குறியீடு முதலியவை உள்ளன. கல்லின் முதல் எழுத்து முழுமையான தகவல் இல்லாமல் உள்ளது. ஆய்வாளர்கள் முறையாக படித்தபின் என்ன எழுதியுள்ளது என்பது தெரியவரும் என்றார்.






Virus-free. www.avg.com
Reply all
Reply to author
Forward
0 new messages