Re: தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்த நாள்- 19-2-26

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 19, 2026, 1:54:22 PM (24 hours ago) Feb 19
to santhav...@googlegroups.com
 தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கத் துணைநின்றவை சங்க இலக்கியங்கள்.
சங்க நூல்களை அழியாது காத்து, ஏட்டில் இருந்து அச்சாக்கிய பெருமான், உ. வே. சாமிநாதையர் பிறந்த நாள் இன்று. தமிழ்த் தாத்தா, திராவிட வித்யாபூஷணம், தாக்ஷிணாத்ய கலாநிதி, ... போன்ற பட்டங்களால் அவர் வாழ்ந்தபோதே புகழப் பெற்றவர். பண்டாரகர் உவேசா புகழ் வாழ்க!
https://x.com/naa_ganesan/status/2024493442554839484
On Thu, Feb 19, 2026 at 5:17 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:

 உ.வே.சா. பஞ்சகம்

(இன்னிசை வெண்பா)

 

 தமிழ்த்தாய் உளங்கொள் தலைமகன்; தேனார்

அமிழ்தமாய்ப் பன்னூல் அளித்த அறிஞர்;

உரைநூல் வழங்கிய உத்தமர்; ஓங்கி

வரையென நின்றார் வளர்ந்து. 1

 

ஓலைச் சுவடியை ஓயாமல் தேடிஅதி

காலைப் பொழுதில் கருத்துடன் நோக்கி

அசைசீர்கள் நாடி அரும்பொருள் நாடி

நசையுற ஈந்தார் நயந்து.  2

 

இரவு முழுவதும் இம்மியும் தூங்கா(து)

இரந்து தொகுத்த இணையில் சுவடியை

ஆய்ந்து தெளிந்தார்; அதைஓர் தவமெனத்

தோய்ந்து படிப்பாரே துய்த்து.  3

 

உ.வே.சா என்னும் உயர்ந்த மனிதரே

ஆவேசம் கொண்டே அலைந்து திரிந்தனர்

ஓலைச் சுவடிகள் ஓராயிரம் சேர்த்தவோர்

வேலையைச் செய்தார் விழைந்து.  4

 

அஞ்சுகமே கேளாய் அவர்புகழ் கூறுவாய்

அஞ்சுவ தேனோ அருநூலைக் காண்பவர்

நெஞ்சார வாசித்தல் நித்தம் அவருக்கோர்

அஞ்சலி யாகும் அறி.  5

 

-கருவூர் இனியன்.


Reply all
Reply to author
Forward
0 new messages