> 'ஒத-' என்பதற்குரிய செந்தமிழ்ச் சொல் எது என்று இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை.
> இனி வரும் காலங்களில் தேடிப் பார்க்கிறேன்.
> சக
---------------------------------------
சிறுகுறிப்புத் தருகிறேன். பொள்ளாச்சிக்குப் புறப்பட்டுக்கொண்டிருப்பதால் விரிவாக எழுதலை.
அத்திக்காயின் வண்ணத்தால் களா மரத்தின், இலந்தை மரத்தின் காய்கள் பெயர் பெறுகின்றன.
உடும்பு சுவரில், மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். உட்-/ஒட்- என்பது தாதுவேர்.
ரப்பிரத்தியம் பெற்று உடும்பரம் என்ற த்ராவிடப் பெயர் >> உதும்பரம் என அதவம்/அத்தி மரத்தின் பெயர்.
அண்மையில் உதும்பர மரத்தால் செய்த அத்திவரதருக்கு பக்திப் பிரவாகம் கண்டோம்.
நீங்களும் சென்று பார்த்தீர்கள். ஔதும்பரன் = எமன். 2014 மடலில் எழுதினேன்:
அத்தி/அதவம் வேதத்தில் உதும்பர எனப்படுகிறது. உடைபோல பழங்கள் உடுத்துள்ள மரம் உடும்பரம் (உடும்பரம் என்பது
உடும்பரம் > உதும்பர ஆகியுள்ளது. கடம்பு கதம்பு என்று வடமொழியில் ஆனதுபோல்.) சுவரிலோ, மரத்திலோ
உடுத்தாற்போல் உள்ள பிராணி உடும்பு. அத்தி தொத்திய கனி - மரபுத்தொடர்.
[5] "இந்த உதாரணங்கள் ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவுக்கிடையில் உள்ள வேறுபாட்டை விளக்க அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. உடும்பரம் {அத்திமரத்தின்} கனி பழுத்து உடையும்போது, உள்ளே காணப்படும் வெற்றிடத்தில் முழுமையாக வளர்ந்த கொசுக்கள் காணப்படுகின்றன. அக்கனியில் கொசுக்கள் வாழ்ந்தாலும் அவை அக்கனியல்ல, மீன் நீரில் வாழ்ந்தாலும், நீரதன் இல்லமாகாது. ஜீவனும் அதே போலவே பரமாத்மாவில் வாழ்ந்தாலும், அது பரமாத்மா ஆகாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அத்திப்பழமும் அதனுள்ளிருக்கும் கீடமும் போலவே இருபத்துநான்காவதற்கும் இருபத்தைந்தாவதற்கும் பேதம். மத்ஸ்யத்துக்கும் ஜலத்துக்கும் போலவே இவைகளுக்கும் பேதமானது அறியப்படுகிறது. இப்படிப்போலவே இவைகளுக்கு அனேகத்தன்மையும் ஏகத்தன்மையும் அறியத்தக்கன" என்றிருக்கிறது.
புல்லி (wall lizard) >> பல்லி ஆகிவிட்டது. அதுபோல், உடும்பர/உதும்பர >> அதவம் (சங்கம்)/அத்தி மரம் என்று மாறிவிட்டது.
உதும்பர/அதவக் காய்: (அத்திக்காய்). தாவரவியலில் Ficus Racemosa (=Ficus Glomerata, synonym).
உதுவம் > அதவம் என்னும் அத்திக்காய் வண்ணத்தில் இருப்பதால் உதுக்காய் என்னும் செந்தமிழ்ச் சொல்
ஒதக்காய், ஒதப்பழம் எனப் பேச்சுத்தமிழில் வழங்குகிறது.
உதுக்காய் > ஒதக்காய். (அத்திக்காய் காய் காய் - கண்ணதாசனின் பாடல் நினைமின்).
அத்திப்பழத்தின் நிறம் உடையது ஆகையால் களாமரத்தின் Pre-ripened fruit ஒதப்பழம் என்கின்றனர்.
களங்கனி என்பது களாப்பழம், மிகுந்த கருமை நிறமுடையது. எனவே, ஆமான் (= பைஸன்) அல்லது எருமைக்
கொம்பால் செய்யும் கருங்கோட்டியாழ் (ஹார்ப்) வர்ணிக்கையில் அதன் கருமைக்காக களங்கனி
என 3 இடங்களில் சங்கப் புலவர் பாடியுள்ளனர். கருங்கோட்டியாழ் ஒதப்பழத்தின் (உதவம்/அதவம்) நிறம்
கொண்டதன்று.
ஹோமங்களில் இன்றியமையாதது உதும்பரத்தின் இலைகள்
It has been described in the story of Raja Harischandra of the Ikshvaku dynasty, that the crown was a branch of this udumbura tree, set in a circlet of gold. Additionally, the throne (simhasana) was constructed out of this wood and the royal personage would ascend it on his knee, chanting to the gods to ascend it with him, which they did so, albeit unseen. Its leaves are an indispensable part of many Hindu havans.
உதியன் : உதும்பரத்தின் இலைகளைத் தாங்கிய முடியணிந்தவன் என்ற பொருள் இருக்கலாம்.
ஓதிமலை திருப்புகழ் தலம். ஊதியூர் (< உதி?).
ஒதி மரம் = Indian ash tree
.... இன்னும் ஆராயணும்
~NG
இலந்தைப் பழங்களிலும் ஒதப்பழம் தான் ருசி.
அரிசிக் குருணைக்குப் பண்டமாற்றாக ஒன்றுக்கு இரண்டு அல்லது ஒன்றுக்கு ஒன்றரை என்ற கணக்கில் இலந்தைப்பழம் வாங்குவோம்.
சக
ஒதப்பழம், ஒதக்காய். ஒத- இதற்கான செந்தமிழ்ச் சொல் என்ன?
> புளியம்பழத்தில் ஒதப்பழம் சாப்பிட்டிருக்கிறீர்களா? ரொம்ப ருசி!!
ஒதக்காய் பற்றிய நல்ல வர்ணிப்பு: