Re: இலக்கணத்தில் ஐயம் - குழந்தை உயர்திணையா அஃறிணையா ?

1,182 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 28, 2021, 8:54:09 AM9/28/21
to Santhavasantham


On Mon, Sep 27, 2021 at 9:44 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
வணக்கம்,

பொதுவாகப் பூ மலர்ந்தது,  மழை பெய்தது,  காகம் கரைந்தது என அஃறிணைப் பெயர்களுக்குத்தான் "அது" என்னும் விகுதியை/பின்னொட்டைச் சேர்ப்பது இலக்கண மரபு.

ஆனால், உயர்திணையாகிய "குழந்தை"யின் செயல்பாட்டைக் குறிக்கும் போது ஏன் "அது" விகுதியைப் பயன்படுத்துகிறோம்.

உதாரணத்துக்கு , "குழந்தை பிறந்தது",  "குழந்தை அழுதது"  போன்றன.

இதற்குப் பின்னால் ஏதாவது இலக்கண விதிமுறைகள் உண்டா ? 

இந்தப் பயன்பாடு சரியா? தவறா?

அறிஞர் பெருமக்கள் தெளிவுபடுத்த வேண்டுமெனக் கோருகிறேன்.

குழந்தை/குழந்தை, குழவி/குழைவி :: 
குழவி : குழந்தைக்கு வருகையில் தன்வினை (குழைந்தது); அம்மிக் குழவியில் பிறவினை (சந்தனம் குழைப்பது).
முருகன் கோட்டத்தில் கலந்தொடா மகளிர் பற்றிய சங்கப்பாடலில், ஓய்நடைப் புரவி என்பது (பகைவரை) ஓய்க்கும் குதிரைப்படை
எனப் பொருள். இங்கும் பிறவினை. 
      பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
      உழுத்தத ருண்ட வோய்நடைப் புரவி
      கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ
      நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்தின்
      தண்ணடை மன்னர் தாருடைப் புரவி         5
      அணங்குடை முருகன் கோட்டத்துக்
      கலந்தொடாமகளிரி னிகழ்ந்துநின் றவ்வே.
      ---------

    திணை: நொச்சி: துறை: குதிரை மறம். பொன்முடியார் பாடியது.
கல்லூரி ஒன்றில், வாரியார் சுவாமிகள் அழிந்தது/அழித்தது வேறுபாட்டை விளக்குகிறார்:
அதுபோல், ஓய்நடை - ஓய்க்கிற நடை (வையாளி நடை) என்க. 

சிவா அவர்கள் கொடுத்த தொல்காப்பிய நூற்பாவுடன், புரட்சிக் கவிஞரின் குழந்தை வாழ்த்தையும்
நோக்குக.

குழந்தை

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விளக்கி வௌிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ?
பாரீர்! அள்ளிப் பருகமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது. பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!

                                                           - பாரதிதாசன்

தெய்வம், ஆதீனகருத்தர், ... சைவத்தில் அஃறிணையில் சொல்லுதல் நீண்டமரபு.
ஆதீனம் எழுந்தருளியது, சாமி சொல்லிச்சு, வந்தது, .... என்பது போல. 

குடிமை, ஆண்மை, இளமை, மூப்பே,
அடிமை, வன்மை, விருந்தே, குழுவே,
பெண்மை, அரசே, மகவே, குழவி,
தன்மை திரி பெயர், உறுப்பின் கிளவி,
காதல், சிறப்பே, செறற்சொல், விறற்சொல்-என்று
ஆவறு-மூன்றும் உளப்படத் தொகைஇ,
அன்ன பிறவும், அவற்றொடு சிவணி,
முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையினஆயினும்,
அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்.   தொல்காப்பியம்

நா. கணேசன்


அன்புடன்,
நிரஞ்சன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAL0k%2BGLZZdpXi5nh8k6UgKcjRF_DhWDdmwMphqsRe0GO0OqF1w%40mail.gmail.com.

Reply all
Reply to author
Forward
0 new messages