வ்யால/யாளி

42 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 16, 2018, 8:06:37 AM2/16/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
> இவ்வாறு வாயில் மரக்கிளையுடன் ஆளியின் உருவம் காட்டப்படுகிறது.
> ஆளியானது ஓர் சைவ மிருகம் என்பதைக் காட்டுவதற்காக அது ஒரு மரக்கிளையை உண்பது போல் காட்டபடுகிறது எனக் கருதலாமா? ஐயா.

>அன்பன்
> கி.காளைராசன்

திரு. இராமகி யாளி பற்றி எழுதும் இழையில் திரு. காளைராசன் கேட்டுள்ளார்.

வ்யால/யாளி பற்றி முன்னரும் எழுதியுள்ளேன். இது ஒரு கற்பனாமிருகம். 
Chimera என வெளிநாடுகளில் உள்ளது போல: https://en.wikipedia.org/wiki/Chimera_(mythology)

வ்- என தமிழ்ச் சொற்கள் தொடங்கா. எனவே, வ்யாள- யாளி ஆகியுள்ளது.
சிற்பங்களை, ஓவியங்களைப் பார்த்தால், கலியாண மண்டபத் தூண்களில் -
யாளியின் தொடக்கம் தெரியும். வியால- என்றால் பெரும்பாம்பு (python).
சிங்கத்தின் மீது யானையின் முகம் சற்றும், தும்பிக்கையும் சேர்த்து
உருவாக்கிய உருவம் வ்யால/யாளி.

leonine animal (mythical) - யாளி. அத்துடன் இணைத்துள்ள பாம்புபோன்ற
யானைத் துதிக்கையால் வ்யால/யாளி எனப் பெயர்பெறுகிறது.
நாகம் என்றால் யானையும், பாம்பும் எனப் பொருள் உண்டு.
பாம்பு போன்ற துதிக்கை உள்ளது யானை. 

வ்யால-/யாளி- கீழே மகரமோ, யானையோ இருக்கும்.
யாளியின் துதிக்கையுடன் கீழே உள்ள யானை/மகரம் துதிக்கையைப்
பற்றிக்கொண்டு இருக்கும்.

வஞ்சி மாநகர் அருகிலே ஆதிநாதர் (குறளை வள்ளுவர் தொடங்குவது
ஆதி பகவன் என இவரைத் துதித்தே), அவர் மகள்கள் சிற்பம் இருப்பதை
துரை. சுந்தரம் எழுதியுள்ள பதிவில் பார்த்தோம். ஆதிநாதர் மகன் பரதன்
பெயரால் பாரதம் என்று நம் நாட்டுக்குப் பெயர். அதனை காளிதாசர்
பரதன் என்பது சகுந்தலையின் மகன் என்றும் பாடியுள்ளார்.
இந்த பரதன் சிங்கத்துடன் விளையாடுவதைப் பாரதியார் பாடியிருக்கிறார்.
இது வலிமை பெற்ற சிங்கமாகிய வ்யால/யாளி என்றும் கொள்ளலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 17, 2018, 11:23:25 AM2/17/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

வ்யால என்னும் வடசொல்லில் தோன்றும் யாளி/ஆளி பற்றிச் சில குறிப்புகள்:
---------------------------------------------------

யாளி/ஆளி - ஒரு mythical monster என்று அறிஞர்களால் குறிப்பிடப்பெறும்.
ஒரு வகைப் பேய் (= அணங்கு). இரவில் யானைகளை அடித்துக் கொன்று உண்ணும்
வலிமை கொண்டது. இதனைத் தான் “அணங்கு உடை நல் மான்” என சங்கப்
புலவர்கள் இந்தக் கற்பனைவிலங்கைப் பாடினர். 

சிங்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக - சங்க காலத்திற்குப் பல காலம் முன்னரே -
தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களில் அழிந்துவிட்டது. எனவே, குப்தர் காலத்தில்
இந்த கல்பனாம்ருகம் பற்றிய செய்திகள் தமிழ்நாட்டுக்கு வட இந்தியாவில் இருந்து
வந்தன. முதன்முதலாக ஏற்படும் வட இந்திய யாளி சிற்பங்களுக்குச் சில நூற்றாண்டுகள்
கழிந்துதான், பல்லவர், சோழர் யாளி சிற்பங்கள் அமைக்கின்றனர். கற்பனை அணங்குப்பேய்
என்று காட்ட ஆட்டின் கொம்புகள் இரண்டு அல்லது மூன்று காட்டியிருப்பர், வாயில்
இருந்து தொங்கும் பெரிய பாம்பு வ்யாலம். இதனால் வடமொழிப் பெயர் இப்பேய்க்கு (=அணங்குக்கு)
உண்டானது. யாளியின் வாயில் தொங்கும் நாக்கைப் பிடித்து வீரன் ஒருவன் அடக்குவது
போல வட இந்தியாவில் உள்ள ஆதி யாளி சிற்பங்கள் பல. இதுவே கஜவ்யால (யானையாளி)
வடிவ வளர்ச்சிக்கு வித்து. தாராசுரத்து தூண்களில் கஜவியாலம் காணலாம்.

யாளி (> ஆளி) = அணங்கு உடை நல் மான் என்பதன் பொருள்.
அணங்கு = பேய்கள் போல ‘afflicting power' கொண்டவை
இந்த யாளி mythical monsters. யாளிகள் பெரும் யானைகள் போன்றவற்றை
இரவிலே தான் வேட்டையாடி உண்ணும் என்பது இந்திய மரபு. அதனைத்
தான் சங்கப் புலவோர் ‘நல் மான்’ =  nocturnal wild-animal என்றனர்.
நல்- = இரவு, இருள், கருமை. நள்-/நாள்- இப்பொருள்கள் உண்டு,
நல்லமலை தொடர்களில் இருந்து நல்லபெண்ணை நதி உற்பத்தி ஆகி ஓடுகிறது.
நல்லபெண்ணா = கரும்பெண்ணை. இப்போதைய கிருஷ்ணா நதி (ஆந்திரதேசம்).
நல்லன் = கிருஷ்ணன் (தெலுங்கில்).  ...

நல்லான் = எருமை, அதன் போத்து (சங்க இலக்கியம்).
நல்லேறு = திமிலை உடைய காளை. திமிர்/திமில் = கருமை, 
இது தமிழினின்றும் வடமொழிக்குச் சென்ற வேளாண் சொல். தைமிர- < திமிர-
நல்- = இங்கே, கருமை நிறம் குறிக்கிறது (நல்லான் ‘buffalo', நல்லேறு - கருந்திமில் காளை).
நல்லபாம்பு ‘கிருஷ்ண சர்ப்பம்’, நல்லான் = கண்ணன், நல்லெண்ணெய் = எள்ளின் எண்ணெய்
(cf. வெளிச்செண்ணெய் = வெள்ளையான தேங்காய்ப் பருப்பின் எண்ணெய்).

”நல் மான்” என்று யாளி அணங்கைக் குறிக்கும்போது, nocturnal animal 
என்ற பொருளில் சங்கப் புலவர் கையாண்டுள்ளனர். இங்கே, நல் = இரவு, இருட்டு.
யாளி இரவில் வேட்டையாடும் போது வரும் தலைவனுக்குக் கவலைப்படும் தலைவியை
சங்கப் பாடல்கள் வர்ணிக்கின்றன. பின்னர் மாணிக்கவாசகர் பல இடங்களில்
“நல் மான்” என்பதற்கு விளக்கமாகப் பாடல்கள் பாடினார்.

குயவர் வளவுக்குச் சென்று ‘அக்கி எழுதுதல்’ என்னும் மருத்துவமுறை இன்னும் வழக்கில்
உள்ளது. வெக்கையினால் கொப்புளம், குரு ஏற்படும்போது இரவில் வேளாரிடம் சென்று
வேப்பிலையால் செங்காவி மண்ணில் யாளி வடிவத்தை எழுதினால் நோய்தீரும்
என்பது நாட்டார் நம்பிக்கை. கோழிமுட்டையிலும் யாளி அணங்கின் - வெம்மையான
கொடிய விலங்கு- வடிவை எழுதி, அம் முட்டையை அப் பூசகர் உண்பார். இதனால்,
நோயாளி மேல் படிந்த அக்கி தீரும்.

நல்- (1) black (2) night இரு பொருளிலும் சங்க இலக்கியத்தில் உள்ளமை
பார்த்தோம். திராவிட வேர்ச்சொல் அகராதி (DED) அல் = இரவு என்பதற்கு நல்- 
என்ற சொல்லை வேராகக் காட்டுகிறது. 
(1) கருமையான Ibis பறவை = அன்றில். இன்றும் கிராமங்களில் அன்றில்
என்கிறார்கள். அன்றில் < *நன்றில் நல்- = கருமை. இப்பறவை கிரவுஞ்சம் என
வடமொழியில் பெயர். இராமாயண முதல் சுலோகம் அன்றில் பறவையால்.
(2) இரவிலே பறந்து வரும் அன்னப் பறவை
அன்னம் < *நல்நம்/நன்னம் = இமயத்தைத் தாண்டி ஆண்டுக்கொடு முறை தமிழகம்,
இலங்கை வரும் superbird bar-headed geese.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 17, 2018, 6:25:04 PM2/17/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஓவியர் கோபுலு, 'அமுதசுரபி' இதழில் ஒரு பேட்டியில் கூறியது: நம்மூரில், பெரிய கோவில்களின் உட்பிரகாரத் தூண்களில், 'யாளி' என்றொரு மிருகத்தின் உருவத்தை கல்லில் செதுக்கி வைத்திருப்பர். வாயைப் பிளந்தபடி ஒரு சிங்க முகம், அதற்கு தும்பிக்கை; முன் கால்களைத் தூக்கி, பாயும் நிலையில் சித்தரிக்கப்பட்டிருக்கும். இப்படி ஒரு மிருகம் இருந்ததா என்றால், இல்லை.
சிங்கத்தின் கற்பனை வடிவம் தான், யாளி; பல ஆண்டுகளுக்கு முன், மத்திய கிழக்கு ஐரோப்பாவில் மிகவும் கம்பீரமான, தத்ரூபமான சிங்கத்தை செதுக்கி வைத்திருந்திருக்கின்றனர். அந்தக் கலை, பின், எகிப்து நாட்டுக்குப் பரவியது. அந்த நாட்டில், அதற்கு மனித வடிவம் கொடுத்தனர். நாம் காமதேனுவுக்கு முகம் அமைத்திருக்கிறோமே... அதேபோல், சிங்க உடலையும், மனித முகத்தையும் சேர்த்து வடிவம் அமைத்தனர். அதன் பின், இந்தியாவுக்கு அது வந்த போது, சற்று மாறுதல் அடைந்து, யாளியாக உருவெடுத்தது.
நாம் கொஞ்சம் அலங்காரப் பிரியர்கள்; தென் இந்தியாவுக்கு வரும் போது, யானைத் தும்பிக்கையையும் சேர்த்துக் கொண்டோம். இங்கிருந்து, இந்தோனேஷியா, இந்தோ சீனாவுக்குப் போன போது, அவர்கள், அதற்கு இறக்கை ஒன்றை அமைத்துக் கொண்டனர். சிங்கத்திற்கேற்ற யாளி முகம், இறக்கை, இதையே, சீனாவில், 'டிராகன்' மாதிரி செய்து விட்டனர். யாளி முகம், பாம்பின் உருவம் மற்றும் கால்கள் அமைந்தது அது!
  http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39154&ncat=2

2018-02-16 5:06 GMT-08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
> இவ்வாறு வாயில் மரக்கிளையுடன் ஆளியின் உருவம் காட்டப்படுகிறது.
> ஆளியானது ஓர் சைவ மிருகம் என்பதைக் காட்டுவதற்காக அது ஒரு மரக்கிளையை உண்பது போல் காட்டபடுகிறது எனக் கருதலாமா? ஐயா.

>அன்பன்
> கி.காளைராசன்


N. Ganesan

unread,
Feb 17, 2018, 6:26:31 PM2/17/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ராஜா ரவிவர்மா ஓவியங்களில் மனம் பறிகொடுத்தவர் பாரதியார்:
File:Raja Ravi Varma - Mahabharata - Bharata.jpg
இந்த ராஜா ரவிவர்மாவின் ஓவியம் பாரதியை சகுந்தலையை பாரதமாதா ஆகப் பாடத்
துண்டியிருக்கலாம்.
https://ta.wikisource.org/wiki/பக்கம்:சிந்தனை_மேடை.pdf/78
பாஞ்சாலிக்காக மட்டுமில்லை, சகுந்தலையும் பாரதராணி.

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்
  தட்டி விளையாடி – நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
  ஒளியுறப் பெற்ற பிள்ளை



ஆனால், காளிதாசர் வாசகம் பார்க்கணும்,
உதயகிரி (ஒரிசா) குகைக் கோவில்களில் உள்ள
சிற்பம் இளைஞன் ஒருவன் வ்யாலம் 
என்னும் யாளியுடன் போரிடுவதாக உள்ளது.
இதனை பரதன் யாளி விளையாட்டு என்கிறார்
தேபால மித்ரா (Udayagiri and Khandagiri Caves).

1 at Udayagiri considered by D. Mitra as reminiscent of Dushyanta's first meeting with Sakuntala. (The editor says that Sivaramamurti places it in the 2nd cent. B.C.; while N.R. Ray places it in the 5th cent. A.D.). M.C. Joshi doubts the identification of the male figure with a child and the treatment of human and animal figures much in advance of the Suriga period. The animal figure, he thinks, represents the mythical creature vyala ...

அபிஞான சாகுந்தலத்தில் உள்ள பாடலில் காளிதாசர்
சகுந்தலையின் மகன் பரதன் சிங்கத்துடன் (அ) வ்யாலத்துடன்
விளையாடுவதாக உள்ள பாடல் என்ன?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Feb 18, 2018, 7:59:46 AM2/18/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வ்ய- வடசொற்கள் தமிழுக்கு வரும்போது சொல்முதல் வ்- இழத்தல்:

(1) வ்யாள  > யாளி
(2) அஞ்சனபாஷாணம் < வ்யஞ்சன-பாஷாணம்
அஞ்சனபாஷாணம் , n. < vyañjana *அஞ்சனபாஷாணம் añcaṉa-pāṣāṇam
, n. < id. +. A mineral poison; பிறவிப் பாஷாண வகை. (மூ. அ.)

(3) உற்பன்னம் < வ்யுத்பந்ந-
uṟpaṉṉam, n. < vyut-panna. See உற்பனம்¹.

உற்பனம்¹ uṟpaṉam
, n. < id. (W.) 1. Quick apprehension; விரைவில்

(4) ஊகம்³ ūkam < வ்யூகம்
, n. < vyūha. Military array, squadron; படைவகுப்பு. ஊகவான் படையுலப்ப (கந்தபு. சூரனகர்புரி. 1).

(5) சக்கரயூகம் cakkara-yūkam
, n. < id. + vyūha. Circular array of an army; சக்கரவடிவாக அமைத்த படைவகுப்பு. (சீவக. 757, உரை.)

2018-02-16 5:06 GMT-08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
Reply all
Reply to author
Forward
0 new messages