வாழ்த்துக்கள் பிரமிட் (Champagne Tower)

203 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 10, 2017, 9:44:10 AM4/10/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
தமிழில் வாழ்த்துக்கள் என்று எழுதுதலைவிட வாழ்த்துகள் என்றெழுதுதல் சிறக்கும்.
வாழ்த்துக்கள் என்றால் பொருள் மாறுபாடு அடைய வாய்ப்புகள் உண்டு.  இதனை
இளைஞர்கள், மாணவர்கள் உள்ள கூட்டத்தில் மனத்தைப் பற்றுமாறு எளிதில் விளக்க
ஓர் உதாரணம் காட்டலாம்.

திரு. செல்வன், விஸ்கான்சின்:
வாழ்த்துக்கள் எனும் சொல்லை கள்ளுடன் நீங்கள் இணைப்பது வியப்பளிக்கிறது. இது சரியா என தமிழறிஞர்கள் விளக்கவேண்டும்.


தமிழறிஞர்கள் பலர் விளக்கியுள்ளனர். மக்களுக்கு எளிதில் புரிந்துகொள்ள வாழ்த்துக்கள் டைம்ஸ் ஸ்கொயர், நட்சத்திர ஓட்டல் களியாட்டு (பார்ட்டி)
சொன்னேன்.

On Friday, December 9, 2016 at 8:10:38 AM UTC-8, yogiyaar wrote:
அற்புதமான கவித்தலைப்பில் விவேக் பின்னி விட்டார். அடேயப்பா!
 எவ்வளவு கருத்துக்கள் உள்ளே பொதிந்திருந்தன!.. வாழ்த்துக்கள் விவேக்!

அன்பின் கவியோகியாரே,

வாழ்த்துகள், வாழ்த்துக்கள் பற்றிப் பேசினோம். கனடாவிலிருந்து டிவியிலோ, நேரிலோ நியூ யார்க் மாநகரில்
2017-ஆம் ஆண்டு பிறப்பதை டைம்ஸ் ஸ்கொயர் வளாகத்தில் பார்க்கலாம். அப்போது, வாழ்த்துக்கள் (champagne) வதிபாயும்.
புலவரும், எஸ்வி கவிகளும், அடியேனும் பேசிய மடல்களில் காணலாம்.

ஓட்டல்களில் வாழ்த்துக்கள் பிரமிட்  (= champagne glass pyramid/tower) கோப்பைகளால் மிக அழகாக இருக்கும்:

வதிபாய்தல் என்றால் என்ன?






























































நா. கணேசன்





N. Ganesan

unread,
Apr 10, 2017, 9:54:20 AM4/10/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
திரு. செல்வன், விஸ்கான்சின்:
வாழ்த்துக்கள் எனும் சொல்லை கள்ளுடன் நீங்கள் இணைப்பது வியப்பளிக்கிறது. இது சரியா என தமிழறிஞர்கள் விளக்கவேண்டும்.

முதன்முதலில் வாழ்த்துகள் என எழுதுக என இயம்பியவர் மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளையவர்கள் எனத் தெரிகிறது.
புலவர் இராம. இராமமூர்த்தி (திருச்சி) எழுதியிருப்பதும் நோக்குக.  

-கள் என்பதை ஆங்கிலத்தின் பன்மைவிகுதி -s என்பதற்குச் சமானமாகப் பயன்படுத்த 100, 150 ஆண்டாய் தொடங்கினர் தமிழர்கள்.
அதனால் வரும் சிக்கல் இது. இதற்குத் தீர்வு என்ன என கவிஞர் முடியரசன் எழுதியுள்ளார். 

வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டுக்கும் வேறுபாடு காட்டினால் பசுமரத்தாணி எனப் பதியும்.

 நா. கணேசன்

Pas Pasupathy <pas.pa...@gmail.com>: Nov 11 03:28PM -0500 

வாழ்த்துகள் .... இது அண்மையில் வந்த பரிந்துரைதான். ( மே.வீ.வேணுகோபால பிள்ளை
தான் முதலில் சொன்னார் என்று நினைவு. ) ‘கள்’ என்ற விகுதிக்கும், ‘கள்’ என்ற
சொல்லுக்கும் வேறுபாடு காட்டுகிறது. மேலும், விகுதிப்புணர்ச்சியில்
வல்லெழுத்துக்குப்பின் வரும் வலி மிகுவதற்கு விதி இல்லை என்பார்
அ.கி.பரந்தாமனார்.
 
ஆனால், சில சமயம் சில சொற்களை வெவ்வேறு பொருளில் பயன்படுத்துவது உண்டு.
 
எழுத்துகள் writings
 
எழுத்துக்கள் letters
 
“ வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களின் பின் ‘கள்’ ‘தல்’ என்ற விகுதிகள்
சேரும்போது வரும் வலி மிகுதல் நன்றன்று; பிழை என்று சொல்வதற்கிலை” அ.கி.ப.
 
>> புரிகிறது. வாழ்த்துக்கள் என்பது Welcome drink என்று பொருள்மாறுபாடடையும்
>> என்பது இப்போதுதான் புரிகிறது! நன்றி, வாழ்த்துகள்" அன்புடன் புலவர்
>> இராமமூர்த்தி.
 
பசுபதி
 
http://s-pasupathy.blogspot.com/
https://www.facebook.com/pas.pasupathy
https://plus.google.com/u/0/105726362757060425736/posts
http://groups.google.ca/group/yAppulagam

கணேசன். நான் ஏற்றுக் கொள்கிறேன். நாட்கள் என்பதில் பொருள்மாறுபடுவது 
புரிகிறது. வாழ்த்துக்கள் என்பது Welcome drink என்று பொருள்மாறுபாடடையும் 
என்பது இப்போதுதான் புரிகிறது! நன்றி, வாழ்த்துகள்" அன்புடன் புலவர் 
இராமமூர்த்தி.
 
 
>> On Nov 11, 2016 03:37, "Vis Gop" <vis...@gmail.com> wrote:
 
>>> மிக்க நன்றி!
>>> கோபால்.
 
On Friday, November 11, 2016 at 8:57:52 AM UTC-8, Trichy Pulavar 
Ramamoorthy wrote:
 
> பாட்டுத்திறம், கூட்டுக்களி, பட்டுக்கருநீலம்,பாட்டுக்குப்பொருளாய் நின்ற 
> பராபரச்சிறுமி, சோற்றுக்கோ வந்தது,கற்றுத்தா, கற்றுக்கொடு, கற்றுக்கொள். 
> வீட்டுச்சமையல், முத்துக்குளித்தல் இவை விட்டிசைக்காத போது?
 
புலவர் முடியரசன், காரைக்குடி: 
http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=290&pno=87
 
நூல்களா? நூற்களா?
 
இனி உன் மடலில் நூற்கள் எனக் குறிப்பிட்டிருந்தாய். நூல்+கள் = நூல்கள் என 
வரவேண்டுமே தவிர நூற்கள் என வருதல் தவறாகும். வேல்கள், கால்கள், எனக் 
குறிப்பிடுவரே தவிர, வேற்கள், காற்கள் என எவரும் குறிப்பிடுவதில்லை.
 
நாள்களா? நாட்களா?
 
நாட்கள் என்று குறிப்பிடுவது தவறு. நாள்கள் என்றே குறிப் பிடுதல் வேண்டும். 
தோள்கள் என்பதை தோட்கள் என்றோ, வாள்கள் என்பதை வாட்கள் என்றோ நாம் 
குறிப்பிடுவதில்லை. நாள்கள் என்றால் பல நாள் என்று பொருள். நாட்கள் என்றால் 
புதிய கள் என்று பொருள்படும்; நாண்மலர் என்பது போல. ஆகவே நாளின் பன்மை 
குறிப்பதானால் நாள்கள் என்றே வருதல் வேண்டும். தனிக்குறிலை அடுத்து வரும் லகர, 
ளகரங்கள் தாம் றகர, டகரங் களாகத் திரியும்; கற்கள், முட்கள் புட்கள் என்பன போல.
 
நூல், நாள் என்பன பால் பகா அஃறிணைப் பெயர்கள் எனப்படும். அஃதாவது ஒன்றன்பாலா 
பலவின் பாலா என்று பகுக்க இயலாது. அவை ஒன்றையும் குறிக்கும்; பலவற்றையும் 
குறிக்கும். ஒரு நூல் பல நூல் என்றும் ஒருநாள் பல நாள் என்றும் கூறுவர். 
"ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும்" என்ற 
அவ்வையார் பாடலில் ஒருநாள் என்றும் பலநாள் என்றும் ஒருமையிலும் பன்மை யிலும் 
வந்துளது. சிலப்பதிகாரம் என்னும் நூல் முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் 
என்றவிடத்து, நூல் என்னுஞ்சொல் ஒருமையில் வந்தது. நூல் நிலையம் திறக்கப்பட்டன 
என்ற விடத்து நூல் என்பது பன்மை பொருளில் வந்தது. பன்மையைக் குறிக்கப் 
பிற்காலத்தே 'கள்' என்பதைச் சேர்த்தனர். கள் புகுந்தபின்புதான் இந்தக் 
குழப்பம்.
 
*மொழிப் பயிற்சி - 15: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!* 
 
கவிக்கோ ஞானச்செல்வன் 
 
நாள்களா? நாட்களா? 
நாள்+காட்டி= நாட்காட்டி, நாள்+குறிப்பேடு= நாட்குறிப்பேடு. இவை சரியானவை. 
ஆனால் நாள்+கள்=நாட்கள்-பிழையுடையது. கள் என்பது இங்கே பன்மை விகுதி மட்டுமே. 
சொல்லோடு சொல் சேர்ந்தால் புணர்ச்சி விதி வேண்டும். ஒரு சொல்லோடு "கள்' என்பது 
சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது. "கள்' என்பது பெயர்ச் சொல்லாயின் 
மயக்கம் தரும் ஒரு குடிவகைப் பெயர் என அறிவோம். கள் பழந்தமிழ்ப் பொருள். 
நாட்கள் எனில் நாள்பட்ட கள்- மிகப் பழைய கள் என்று பொருளாம். நாள் பட்ட கள் 
"சுர்' என்று கடுப்புமிக்கதாய் இருக்கும் என்பர் பட்டறிவுடையோர். ஆகவே 
நமக்கெதற்கு நாட்கள்? நாள்கள் என்று இயல்பாக எழுதுவோமே? 

---------------------------
 

N. Ganesan

unread,
Apr 10, 2017, 10:01:59 AM4/10/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
மகாவீர ஜெயந்தி வாழ்த்துகள் என எழுதுதல் வேண்டும்.

மகாவீரர் ஆகிய திருமூர்த்தி ஆழ்வாரும், அவரைத் தொழுத திருவள்ளுவர், திருத்தக்கதேவர், இளங்கோ அடிகள், கொங்குவேளிர், பவணந்தி முனிவர், தோலாமொழித்தேவர், .... போன்றோருக்கு
வாழ்த்துகள் தெரிவிக்கலா, வாழ்த்துக்கள் அக் கடவுளர்கள் விரும்பமாட்டார்கள் அல்லவா?

ஊற்றும்போது பொங்கலிடும் வாழ்த்துக்கள் - Champagne pyramid

நடராஜ கிருஷ்ணன்

unread,
Apr 10, 2017, 4:41:14 PM4/10/17
to housto...@googlegroups.com, மின்தமிழ், vallamai
நண்பர்களே,
வாழ்த்துக்கள்? வாழ்த்துகள்? எது சரி.. இது பற்றி தேடிப் பெற்ற தகவலுடன் எனது தாழ்மையான கருத்தும்.

"வாழ்த்து" என்பதே போதும்.  

பால்பகா அஃறிணைப் பெயர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  'வாழ்த்து'ம் அதில் சேரும்.  கீழ்க்கண்ட எடுத்துக்காட்டைப் பாருங்கள்.  (நன்றி: http://www.tamilvu.org/courses/degree/a021/a0211/html/a02114l1.htm

கல்வி கரை இல, கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல’

என்ற இச்செய்யுளில் கல்வி, நாள், பிணி என்னும் சொற்கள் ஒன்றன் பாலாக இருக்கின்றன. இவை முறையே இல, சில, பல என்னும் பன்மைப் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளன. இவை வழுவோ (குற்றமோ) என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இவை வழுவல்ல.

அஃறிணைப் பெயர்களில் அது, பெரியது என்பன போல இறுதி எழுத்து ஒன்றன் பாலைக் குறிக்கவும். அவை, பெரியவை என்பன போல இறுதி எழுத்துப் பலவின்பாலைக் குறிக்கவும் அமைந்தது போல, கல்வி, நாள், பிணி என்னும் சொற்களில் அமையவில்லை. ஆகவே, இவற்றைப் பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்று கூறுவர்.

மாடு, காடு, மரம், செடி, கடல், மலை, பறவை போன்றன எல்லாம் பால்பகா அஃறிணைப் பெயர்களே ஆகும்.

மேலும் விவரங்களுக்கு: https://ta.wikipedia.org/s/2jey

எனவே, பிறந்தநாள் வாழ்த்து என்பதே சிறப்பு.  

மேற்கண்ட உதாரணத்தின்படி, நாள் என்ற சொல், ஒருமை, பன்மை இரண்டையும் குறிக்கும்.  அதனால், நாட்கள், நாள்கள் எது சரி என்ற வாதம் தேவையில்லை என்பது என் கருத்து. 

அனைவருக்கும் வாழ்த்து ☺ பல..
நடராஜ கிருஷ்ணன்

--
You received this message because you are subscribed to the Google Groups "houstontamil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to houstontamil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to housto...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/houstontamil.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 10, 2017, 9:48:11 PM4/10/17
to மின்தமிழ், housto...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, April 10, 2017 at 2:00:28 PM UTC-7, நடராஜ கிருஷ்ணன் wrote:
நண்பர்களே,
வாழ்த்துக்கள்? வாழ்த்துகள்? எது சரி.. இது பற்றி தேடிப் பெற்ற தகவலுடன் எனது தாழ்மையான கருத்தும்.

"வாழ்த்து" என்பதே போதும்.  

பால்பகா அஃறிணைப் பெயர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  'வாழ்த்து'ம் அதில் சேரும்.  கீழ்க்கண்ட எடுத்துக்காட்டைப் பாருங்கள்.  (நன்றி: http://www.tamilvu.org/courses/degree/a021/a0211/html/a02114l1.htm

கல்வி கரை இல, கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல’

என்ற இச்செய்யுளில் கல்வி, நாள், பிணி என்னும் சொற்கள் ஒன்றன் பாலாக இருக்கின்றன. இவை முறையே இல, சில, பல என்னும் பன்மைப் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளன. இவை வழுவோ (குற்றமோ) என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இவை வழுவல்ல.

அஃறிணைப் பெயர்களில் அது, பெரியது என்பன போல இறுதி எழுத்து ஒன்றன் பாலைக் குறிக்கவும். அவை, பெரியவை என்பன போல இறுதி எழுத்துப் பலவின்பாலைக் குறிக்கவும் அமைந்தது போல, கல்வி, நாள், பிணி என்னும் சொற்களில் அமையவில்லை. ஆகவே, இவற்றைப் பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்று கூறுவர்.

மாடு, காடு, மரம், செடி, கடல், மலை, பறவை போன்றன எல்லாம் பால்பகா அஃறிணைப் பெயர்களே ஆகும்.

மேலும் விவரங்களுக்கு: https://ta.wikipedia.org/s/2jey

எனவே, பிறந்தநாள் வாழ்த்து என்பதே சிறப்பு.  

மேற்கண்ட உதாரணத்தின்படி, நாள் என்ற சொல், ஒருமை, பன்மை இரண்டையும் குறிக்கும்.  அதனால், நாட்கள், நாள்கள் எது சரி என்ற வாதம் தேவையில்லை என்பது என் கருத்து. 

அனைவருக்கும் வாழ்த்து ☺ பல..
நடராஜ கிருஷ்ணன்


அன்பின் நடராஜ கிருஷ்ணன்

நலமா? மின்தமிழ் வருகைக்கு வாழ்த்து.

ஆம். வாழ்த்து என்றாலே வாழ்த்துகள் தாம். ஆனால், ஆங்கில பன்மைக்கு நேராக -கள் சேர்த்தத் தொடங்கிவிட்டோம் - ஒரு நூற்றாண்டாய்.
அதற்கு வாய்ப்புகள், வாழ்த்துகள், காசுகள், மாடுகள், கோப்புகள், தோப்புகள், .... என்று விட்டிசைத்துச் சொல்லவேண்டும்.
தோப்புகள் வேறு, தோப்புக்கள் வேறு அல்லவா? 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 10, 2017, 10:02:03 PM4/10/17
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Monday, April 10, 2017 at 9:11:42 AM UTC-7, nkantan r wrote:
1970-களின் நடுவில்; PUC முடித்துவிட்டு பொறியியல் முதலாம் ஆண்டு;  ராஜகோபாலன் எனும் அய்யங்கார் நண்பன்; அதுவரையில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் பற்றி அறிவேன் -  ஆனால் இசையுடன் கேட்டதும் மயங்கியதும் இல்லை; (வேறொருவிதழில்  இதைத் தொட்டுள்ளேன்)

நண்பனின் அப்பாவுக்கு cataract அறுவைசிகிச்சை; ஒரு பாட்டைச்சொல்லி எழுதித்தரச்சொன்னார்! “ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர்ப் பணைமுலை துணையா(ய்) பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்”

நான் புத்திசாலியல்லவா! நாட்கள் என எழுதி படித்துக்காட்டினேன்! குட்டும் வாங்கினேன்! (உண்மையில்! ஓங்கி ஒரு குட்டு வைத்தார்!) கள் எனும் விகுதிக்கும் கள் எனும் பெயர்ச்சொல்லுக்கும் வேற்றுமை புரிந்தது!

ஆவியே அமுதே என நினைந்து உருகி யவரவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே போய் ஒழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —————————-1-1-2..

நாள்கள் என்று தினங்களைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பலவிடத்தும் ஆள்கிறார்.

ஓரே ஓர் இடத்தில் நாட்கள் வருகிறது. அங்கே Scotch  என்பது பொருள்.


4152.நாட் களின், நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறுத்த புண் திறப்ப போன்றவே.

     நாட் களின் - நாட்படு கள்ளைப் பருகுவது போல; நளிர் கடல்
நாரம்- 
குளிர்ந்த கடலின் நீரை; நா உற - நாவினால் மிகுதியாக;
வேட்கையின்பருகிய மேகம் - விருப்பத்தோடு குடித்த மேகங்கள்;
மின்னுவ - மின்னுபவை; வாட் கைகள் மயங்கிய செருவின் - (வீரர்களின்)
வாள்படைகளை ஏந்திய கைகள் ஒன்றோடொன்று கலந்து செய்யும் போரில்;
வார்மதப் பூட்கைகள் - ஒழுகுகின்ற மத நீரையு டைய யானைகளன்
உடம்பில்; நிறத்த - (அவ்வாட்படைகளால் வெட்டப்பட்டுக்)

குருதியால் சிவந்த நிறத்தையுடைய; புண் திறப்ப போன்றவே - 
புண்கள் வாய் திறப்பனவற்றைப் போன்றன.

     கரிய மேகங்களிடையே தோன்றும் மின்னல்கள், கரிய யானையின்
உடம்பில் தோன்றும் வாளால் பட்ட புண்கள் போலக் காணப்பட்டன
என்பதாம். உவமை அணி.  நாட் கள் - நாள் பட்ட கள்; 'தேள் கடுப்பன்ன
நாட்படு தேறல்' (புறம் - 392) என நாட்பட்ட கள்ளின் கடுப்புக் கூறப்படுகிறது.
மேகம் கடல் நீரைப் பருகுவதாகக் கூறுவது கவி மரபு. ''நீறணிந்த கடவுள்
நிறத்த வான், ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து' (13) என்று முன்பே
கூறினமை காண்க.  உயிரினங்கள் நீரில் நாவைத் தோய்த்து விரும்பிப் பருகும்
இயல்பை மேகத்தின் மீதேற்றி 'நாவுற' வேட்கையின் பருகிய' என்றார்.
பூட்கை - புழைக்கை என்பது பூழ்க்கையாய்ப் பின் பூட்கை என மருவியது;
துளை பொருந்திய துதிக்கையையுடைய யானை என்பது பொருள். மேகம்
மின்னுவ - மின்னுவனவாகிய மேகங்கள் என்ப.                        5

 
தமிழ்.நெட் காலத்திலேயே இப்பாடலை வித்துவான் மு. சண்முகம்பிள்ளையவர்களின்
கட்டுரையில் இருந்து காட்டினேன்.

ஆட்கள் என்னும் பிரயோகம் புறநடையாகக் கொள்ளவேண்டும். ஆள்கள் என்பத்தான் சரி.
நூற்கள் என்று பாரதிதாசனே எழுதியுள்ளார். அது பிழை. நூல்கள் என இருக்கணும்.

நா. கணேசன்


regards
rnkantan




On Monday, April 10, 2017 at 7:31:58 PM UTC+5:30, N. Ganesan wrote:
மகாவீர ஜெயந்தி வாழ்த்துகள் என எழுதுதல் வேண்டும்.

மகாவீரர் ஆகிய திருமூர்த்தி ஆழ்வாரும், அவரைத் தொழுத திருவள்ளுவர், திருத்தக்கதேவர், இளங்கோ அடிகள், கொங்குவேளிர், பவணந்தி முனிவர், தோலாமொழித்தேவர், .... போன்றோருக்கு
வாழ்த்துகள் தெரிவிக்கலாம், வாழ்த்துக்கள் அக் கடவுளர்கள் விரும்பமாட்டார்கள் அல்லவா?


ஊற்றும்போது பொங்கலிடும் வாழ்த்துக்கள் - Champagne pyramid


N. Ganesan

unread,
Apr 10, 2017, 10:15:47 PM4/10/17
to மின்தமிழ், housto...@googlegroups.com, vall...@googlegroups.com
ஆழ்வார்களும், கம்பனும் நாள்கள், நாட்கள் வேறுபாடு உணர்ந்து பாடியுள்ளனர். ஆனால், காலப்போக்கில் இந்நிலைமை மாறுகிறது. உ-ம்: பாரதியார் நாட்கள் என பல இடங்களில் எழுதியுள்ளார்.

முதன்முதலில் நாட்கள் என ஒரு திருப்புகழில் பார்க்கலாம்.
இந்தப் பாடலில் நெடில்கீழ் டகரவொற்று அதிகம் பயில்வதால்
“நாட்கள்” என்ற சொல்லைப் பாவிக்கிறார் போலும். ஓசைநயத்திற்காய்.
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
     குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள்

    குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
         குருவார்த்தை தன்னை ...... யுணராதே

இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
     இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி

    இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
        னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ

வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
     மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா

    வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
        மலைகாத்த நல்ல ...... மணவாளா

அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
     யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே

     அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
         அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.

ஆட்கள் என்பதும் மக்கள் வழக்கில் உள்ளது.
Reply all
Reply to author
Forward
0 new messages