> தமிழ் மொழியியல்பின்படி 'ல்ல்' >>>'ள்ள் ' என்ற மாற்றம் கட்டற்றது (free variation)
> சான்று :மெல்ல <<<>>>மெள்ள
> அதனால் புல்லாங்குழல் <<<>>>புள்ளாங்குழல் என்ற மாற்றம் கட்டற்று நிகழ வாய்ப்புண்டு.
> கண்மணி
இது பற்றிப் பல காலம் யோசித்திருக்கிறேன். புள்ளாங்குழல் > புல்லாங்குழல்.
மாட்டுக்கு மருந்து ஊற்றும் குழல் கூட மூங்கிலில் செய்வதுதான்.
துளையில்லாத இதுவும் புல்லாங்குழல் தான். புல் என்பது மூங்கில் என எத்தனைபேர் அறிவார்?
துளையே இல்லாமல் இருந்தால் அது கொம்பு வாத்தியம்.
மேலும், புள்ளாங்குழலில் உள்ள துளைகள் தானே அதன் இனிய இசைக்கு அடிப்படைக்காரணம்.
பாரதி புள்ளாங்குழல் என்றே எழுதுகிறார்:
”
இங்ஙனம் சுற்றும்போது ஒவ்வொரு சுழற்சியிலும் இவ்விரண்டு சந்தி ஸ்தானங்கள் ஏற்படுமல்லவா? அப்போது அவர்கள் முத்தமிடுவதுபோல இதழ்த்தொனி செய்வது, இடையில் நிற்பவள் வாசிக்கும் புள்ளாங்குழல் கீதங்களுக்குத் தாளமாகும். இப்படி ஆயிரம் சேர்ந்து ஒரு பெரிய வளையம்! அரைநாழிகை கழிந்தவுடனே, இந்தப் பாணி கழிந்து மற்றோர் பாணி. ”
வை. மு. கோ: வில்லிபாரத உரையில்,
வேய்ங்குழல் : புள்ளாங்குழல்
மகாவித்துவான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு, தனிப்பாடற்றிரட்டு உரை, 1914
புள்ளாங்குழல் என்றே எழுதிச் செல்கிறார்.
திருமந்திரம், மாவை விசுவநாதபிள்ளை, 1912.
புள்ளாங்குழல் தான்.
(1) புள்ளாங்குழல்/புல்லாங்குழல், (2) தெள்ளவாரி/தெல்லவாரி (கம்பன்
பயன்படுத்தும் வார்த்தை. கன்னடத்தில் உள்ளதை வை.மு.கோ. காட்டியிருப்பதை ஹரிகிருஷ்ணன்
சொன்னார்), (3) அள்ளைக்கை/அல்லக்கை .... ஆவதுபோல்,
அள்ளைக்கை > அல்லக்கை. கொங்குநாட்டில் அள்ளைக்கை. இப்போது சினிமாவில் அல்லக்கை.
புள்ளாங்குழல் > புல்லாங்குழல். புள்ளி, புள்ளு (புட்டு/பொட்டு. புள்-பொள்- வினை) பொருந்துகிறது.
பொள்ளாமணி > பொல்லாமணி (திருவாசகம்) ஆதற்போல்,
புள்ளாங்குழல் > புல்லாங்குழல்.
ஸ்ரீவெளி என்பது சீவேளி. வெளியுலா யானை மீது ஆரோகணித்துத் திடம்பு தந்திரிகள் எடுத்து
அம்பலத்தைச் சுற்றிவருதல். கேரளா குருவாயூர், திருச்செந்தூர்: சீவேளி > சீவேலி.
அள்ளை அயல் > அள்ளசல் > அல்லசல்.
-ள்- > -ல்- போல, -ண்- > -ன்- ஆதலும் உண்டு:
முணகு- > முனகு-; அணங்கு-/அணுங்கு- > அனங்கு-/அனுங்கு- (கம்பன்).
இந்த spontaneous loss of retroflexiion தான் அனங்கன் (அணக்குபவன் - வருத்துவோன்)
என்ற காமவேளின் பெயர்க்காரணம் என்பார் டாக்டர் ஜி. யு. போப்.
நா. கணேசன்
புள்ளாங்குழல் ஆதியிசைக் கருவி. கோவலருக்கும் முல்லைத்திணைக் கண்ணனுக்கும் உகப்பானது.
புல்லாங்குழல் இசைப்புலவன் இரமணிக்கோர் கவிதாஞ்சலி.
வாழ்க புலவர்!