On Jul 31, 9:08 am, VETTAI ANANTHANARAYANAN <
gan...@gmail.com> wrote:
> அருமையான சிலேடை. இங்கிட்டதற்கு நன்றி.
>
> பல ஆண்டுகளுக்கு முன் ‘அரனும் அடியேனும்’ என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு
> சிலேடை வெண்பாவில் ‘சாம்பாரை நாடுவதால்’ என்ற தொடரைப் பயன்படுத்தியிருந்தேன்.
> அதை முன்னமே கி.வா.ஜ. பயன்படுத்தியுள்ளார் என்பது இப்போது தெரிகிறது.
>
> …அனந்த்
>
> *வெள்ளைப் பனியிருப்பால் வேகமுள்ள வாகனத்தால்* *
> *வெள்ளந் தலையிருக்குங் காரணத்தால் - துள்ளிடச் *
> *சாம்பாரை நாடுவதால் சாம்பவனுக் கீடாக *
> *ஆம்பார்யாம் என்றே அறி*
>
சாம்பார் மராட்டியர் ஆட்சிக்காலத்தில்
சைவ மடங்கள், அரண்மனைகளில் புதிதாய்
உருவாகிய உணவுமுறை (recipe). ஒரு
கலப்புச்சொல்லாக உருவாகிய சாம்பாரைத்
தமிழ்ப் பொருளில் முதலில் குறித்தவர்
32 ஆண்டுகளே வாழ்ந்த மாதவச் சிவஞான
முனிவர் (1753 - 1785) ஆவார். ஏராளமான நூல்கள்
நம் இலக்கண இலக்கியங்களுக்கு அளித்தவர்.
காலன் கொடியவன்; பாரதியார் போலவே,
சிவஞான யோகிகளையும் இளமையில்
கொடுங்காலன் கவர்ந்துகொண்டான்.
சுமார் 15 ஆண்டுக்கு முன் ஒரு கட்டுரை எழுதினேன்.
அது கோலம் (கொலோன் யுனிவெர்சிட்டி. பதிப்பாசிரியர்:
சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் பேராசியை உல்ரிக் நிக்லாஸ்) என்னும்
ஆய்விதழில் வெளியான முதல் தமிழ்மொழிக் கட்டுரை.
மற்றவை எல்லாம் தமிழ் பற்றிய ஐரோப்பிய மொழிகளில்
தான். அதிலிருந்து:
”விருந்தினர் வந்தபோது சமையலாளிடம் மாதவச் சிவஞான
யோகிகள் இட்ட கட்டளையைப் பார்ப்போம்ஈ
சற்றே துவையல்அரை தம்பிஒரு பச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்துவை - குற்றம்இலை
காயம்இட்டுக் கீரைகடை கம்மெனவேமிளகுக்
காய்அரைத்து வைப்பாய் கறி
வேறொரு வேளையில், சிவஞான முனிவர் வந்தாரை வரவேற்று
விருந்துக்கு அழைக்கிறார். அன்னம், சாம்பார், இரசம், பூசனிக் கூட்டு,
பாயசம் கொண்ட பெருவிருந்தே படைக்கிறார்.
அரன்சிரம் காணாப்புள்ளும்
அத்துடன் இறக்கும்பூமி
வரன்முறை யாகவந்த
வடசொலில் சுவையாம்ஒன்றும்
கரம்தனில் அள்ளிஉண்ணக்
களிதரு பாயாடொடு
உரமலர் மந்தன்கூட்டும்
உண்ண வருகுவீரே ”
’விருந்துண்ண வருக’ எனும் என் கட்டுரை.
சிங்கை கிருஷ்ணன், நியு மெக்சிகோ வாசன்பிள்ளை
போன்றோர் குறிப்புடன்:
http://www.treasurehouseofagathiyar.net/02400/2493.htm
சைவ ஆதீனப் பாட்டு பர்த்தோம். லௌகீகமான பொருளுடைய
வெண்பா - மகாகவி இயற்றினது காண்போம்.
இலங்கையின் புகழ்பெற்ற 20-ஆம் நூற்றாண்டுக் கவிஞர்
’மகாகவி’ ஆவார். மகாகவியின் ‘தேரும் திங்களும்’
தமிழகச் சாதிப்பிரச்சினை பற்றி எழுந்த முதற் புதுக்கவிதை,
http://nganesan.blogspot.com/2009/03/therottam.html
மகாகவி விஸ்கியை விட சாராயம் மேல் என்பார்.
’விருந்துண்ண வருக’ கட்டுரையில் மகாகவி வெண்பா
குறிப்பிட்டேன். இது மகாகவி மகனார் கவிஞர் (பேரா.) சேரன்
(கனடா) எனக்குத்தந்த அவர்தந்தையார் பாட்டு.
> நெல்முளையைக் காயவைத்து,
>மாவாக்கி, அரிசி சேர்த்துக், கஞ்சிவைத்துப், புதுக் கரகத்தில் இட்டு,
>தென்னம்பாளை செருகித், தோப்பி என்னும் நெற்கள் தயாரித்துக்
>கொற்றவைக்குப் படைத்துத் தாமும் அருந்தினர். சங்க காலம்
>தொடங்கி, இந்நாளும் இருக்கும் நெற்கள்ஜப்பான் நாட்டாரின் சாக்கி
>(Sake) அரிசிக்கள்ளுக்கு ஒப்பாகும். சிலஆண்டுகளுக்கு முன்னே,
>ஈழத்தில் மேனாட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டுப் பெருவிலை விற்றது.
>அச்சமயத்தில், ”இவ்வளவு போதும் எனக்கு” என்ற ஈற்றடி கொடுத்து
>யாழ்ப்பாணம் ஈந்த மகாகவி உருத்திரமூர்த்தியைப் பாடச்
> சொன்னர்கள். உடனே அவர் செய்த கவிதையைக் காண்போம்:
>
> காய்ச்சுச்சா ராயம் கடைவிஸ்கி காசுக்குஏன்?
> தீய்ச்ச கறிச்சோற்றுத் தீயலுடன் - ஆய்ச்சியின்
> செவ்விளநீர்த் தென்னையிலே சின்னையன் சீவும்கள்
> இவ்வளவும் போதும் எனக்கு!
>
>குப்பிகளைத் திறந்தும், கிடாய் அறுத்தும் - ’மட்டுவாய் திறப்பவும்,
>மைவிடை வீழ்ப்பவும்’ வாழ்ந்த தமிழரை, அவற்றை ஒழித்து அறநெறி
>நிற்க வலியுறுத்தினார் வள்ளுவர்.
>
BTW, சாராயங் காய்ச்சும் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள்
திராவிட மொழியினர் ஆகலாம். சிந்து சமவெளியில்
மதுகை புஷ்பம் போன்றன கொண்டு சாராயம் காய்ச்சும்
நுட்பம் பற்றித் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி
விஸ்கான்ஸின் பல்கலை மாணவர் ஒருவருக்கு
செந்தமிழ் (பாரிஸ் பல்கலை) குழுவில் விவரமாகச்
சிலதிங்கள் முன் குறிப்பிட்டேன். சமண முனிபுங்கவர்களான
வள்ளுவர் போன்றோர் தம் பள்ளிகளில் என்ன சொல்லிக்
கொடுத்தாலும் தமிழர் சங்கப் பழக்கங்களை விடவில்லை.
தமிழ்நாட்டுத் தெருக்களில் எது உள்ளதோ இல்லையோ,
டாஸ்மாக் ஓடுகிறது. அந்த வரும்படியில் அரசும் ஓடுவதாகச் சொல்கின்றனர்.
நா. கணேசன்
> 2012/7/31 N. Ganesan <
naa.gane...@gmail.com>