வாளை மீன் பரத்தைக்கு உள்ளுறை (சங்க இலக்கியம்)

520 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 24, 2020, 11:42:13 AM11/24/20
to housto...@googlegroups.com, vallamai
நற்றிணை - 310
 விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
[...]
நற்றிணைப் பதிப்பாசிரியர்கள் (பின்னத்தூரார், உவேசா) உரையுடன்,

SK wrote:  
வாளைமீன் = பரத்தை
> மீன் துள்ளி விழுதல் = பரத்தையின் அத்து மீறிய ஆட்டம் 

> என்னதான் வாளைமீன் துள்ளி விழுந்தாலும் இலைகள் மட்டும் தான் அலையும். தாமரை ஆடும்; அலையாது. ஏனென்றால் இலையின் 
> தண்டை விடப் பூவின் தண்டு வலுவாக இருக்கும். பரத்தை, அவளது ஆட்டம் இதற்கெல்லாம் தலைவி சோர்வடையாது மனத்திண்மையோடு 
> இருக்கிறாள். ஏனென்றால் அவள்தான் குடும்பத்தலைவி; அந்தத் தகுதி அவளுக்கு மட்டுமே உரியது. அதற்கு ஒருபோதும் ஆபத்து நேராது; 
> ஏனென்றால் குடும்ப அமைப்பு அந்த அளவுக்குக் கட்டுக்கோப்பானது. 

Yes. Let me cite another example from Sangam literature.

பரத்தை ஏன் அத்து மீறி ஆடுகிறாள் என்பதைக் குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது:

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன் (குறுந்தொகை 8: 1-2)

இங்கே, உள்ளுறை உவமம்:
தோட்டத்தில் உள்ள மா மரன் (கழனி மாஅ) ==> தலைவன்/ஊரன்
பழன வாளை மீன் (கழனி அருகே உள்ள வயலின் வாளை மீன்) ===> குதித்தாடும் (சேரிப்) பரத்தை.
மாமரம் உகுக்கும் தீம் பழம் ===> பரத்தையர் ஊரனிடம் கொள்ளும் செல்வம்.

நா. கணேசன்


Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Nov 24, 2020, 11:56:58 AM11/24/20
to housto...@googlegroups.com, vallamai
நடனம் பற்றிப் பேசும் பாடல். எனவே, வாளை போலத் துள்ளி ஆடும் பரத்தையைக்
கூறிப் பாடலைத் தொடங்குகிறார்:
ஆலங்குடியில் வங்கம் ஓட்டுபவராகப் புலவர் வாழ்ந்தார் போலும். இப்போது
போல, ஆறுகளைக் கடக்கும்
பாலங்கள், அதற்கான எஞ்சினீரிங் இல்லை
ஆலங்குடி யானை யாலால முண்டானை
ஆலங்குடியா னென்றார் சொன்னார் – ஆலங்
குடியானே யாயிற் குவலையத்தா ரெல்லாம்
மடியாரோ மண்மீ திலே (காளமேகம்).

குறுந்தொகை - 8. மருதம் - காதற் பரத்தை கூற்று

(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின்
பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே
இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல்
ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’
என்று கூறிய

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல5
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.
- ஆலங்குடி வங்கனார்.

வயல் அருகில் உள்ள மா மரத்தினது கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை
பொய்கையில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுதற்கு இடமாகிய ஊரை உடைய தலைவன்
எம்முடைய வீட்டில் எம்மை வயமாக்குதற்குரிய பெரு மொழிகளைக்கூறிச் சென்று
தம்முடைய வீட்டில் முன்னின்றார் தம் கையையும் காலையும் தூக்க தானும்
தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றுகின்ற பாவையைப்போல தன்னுடைய மனைவிக்கு
அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

முடிபு: ஊரன், எம்மிற் பெருமொழி கூறிப் புதல்வன் தாய்க்குத் தம்மில் மேவன
செய்வான்.

கருத்து: தலைவன் தன் மனைவியை அஞ்சி ஒழுகினான்.

N. Ganesan

unread,
Nov 24, 2020, 2:35:56 PM11/24/20
to housto...@googlegroups.com, vallamai
On Tue, Nov 24, 2020 at 11:02 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> நற்றிணை - 310
>  விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
> களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க
> உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
> வாளை பிறழும் ஊரற்கு நாளை
> [...]
> நற்றிணைப் பதிப்பாசிரியர்கள் (பின்னத்தூரார், உவேசா) உரையுடன்,
> http://nganesan.blogspot.com/2012/12/310.html
>

தோழி கூற்று 
(பரத்தை கூற்றும் ஆம்)

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்   
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க                                         
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை             
மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே   5     
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி 
உடன்பட்டு ஓராத் தாயரோடு ஒழிபுடன் 
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்           
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை  
வள்ளுயிர்த் தண்ணுமை போல                          10   
உள்யாதும் இல்லதோர் போர்வைஅம் சொல்லே.  

விளக்கம் : பேச்சிலே நகைச்சுவை பொதிந்து கிடக்கிறது. நின் தலைவனுக்குப் புதிய பெண் ஒருத்தி தேவையானல், இங்கு ஏன் நீ வரவேண்டும்? அவன் தரும் பொருளை விரும்பும் பரத்தையின் தாயரையே கண்டு பேசிச் சேர்த்து வைக்கலாமே? என்கின்றது காண்க. 'நின் சொல் எம்பாற் பயன்படாது' என்பதும் ஆம். இதனால், சொல்பவரின் வெகுளியையும் காணலாம்.

இறைச்சிப் பொருள் : வாளைமீன், தாமரை வருந்தவும், மகளிர் அஞ்சி ஒடவும், குண்டு நீரில் துள்ளிப் பிறழும்' என்றனள். தலைவனும் யாம் வருந்தவும், காமக்கிழத்தியர் இல்லத்திலிருந்து கதறவும், நீ சேர்த்துவைத்த புதிய பரத்தை யிடம் சென்று தங்கா நிற்பான் என்றதாம்.

 மேற்கோள் : ஆசிரியர் நச்சினர்க்கினியர், இது விறலிக்கு வாயின் மறுத்தது என்று, 'பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின்' என்னும் சூத்திரத்தின் உரையுள் (தொல். பொருள் 156) இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர்.” (நற்றிணை 310, புலியூர்க்கேசிகன்)

இங்கே, தாமரை மலர் குலமகள் ஆகிய தலைவிக்கும், தாமரை நாளம் தாங்கும் பச்சிலைகள் இல்லிடைப் பரத்தையர்க்கும் குறியீடுகள் என்பது தெளிவு.  தாமரை இலைகள் அலையுறுதல், காமக்கிழத்தியர் கதறுதலைக் குறிக்கிறது. வாளை மீன் எனத் துள்ளிச் சதிர் ஆடும் (சேரிப்) பரத்தையிடம்
தலைவன் போய்விட்டால் என்னாவது என இல்லிடைப் பரத்தையர் அமைமோதுகின்றனர். இதே போல, பெண்களின் Harem ஒன்றை தாமரை மலரைத் தலைவிக்கு நேராகச் சொல்லாமல் குறிப்பாகக் காட்டி, இற்பரத்தையர் ஆகிய பச்சை இலைகள் அலைப்புண்டதை இன்னொரு பாட்டிலும்
பரணர் பாடியுள்ளார். அகம் 186, நர்றிணை 310 ஒப்பிடலாம். 

அகம் 186
-------------------
தாமரை இலை - இற்பரத்தை, தாமரை - குடும்பத் தலைவி என்று வரும் பாடல்களை முழுமையாகப் பார்க்கணும்.
உவேசா, பின்னத்தூரார், புலியூர்க் கேசிகன் - நாளம் (ஆர் > அரவிந்த) தாங்கும் பச்சை இலைகள் பரத்தையர் என்று
கூறும் உரையைத் தொகுத்து தருகிறேன்.

நற்றிணை 310 போலவே, தாமரை இலை அலைமோதுவதுபோல, இற்பரத்தை அலைப்புண்டதைப் பேசும் பாடலை
அகநானூற்றில் பரணர் பாடியுள்ளார். தாமரை மலர் ஆகிய தலைவி நேரடியாகக் குறிக்கப்படவில்லை. இறைச்சித் தொனியில் இருக்கிறாள் தலைவி.
அவள் தன்னை ஏன் நோகிறாள் என்று பேசுகிறாள் இற்பரத்தை. சேரிப் பரத்தை, அங்கே யாழ், முழவு எல்லாம் பாணர் செய்ய
அங்கே இருக்கும் தலைவனின் சேரிப் பரத்தையை அல்லவா தலைவி நோகணும் என்கிறாள் இற்பரத்தை.
இங்கே, ஒரே தாவரமாக - சுல்தான்களின் ஹேரம் போல - இற்பரத்தையர் தாமரை இலைகளாகவும், தலைவி தாமரைப் பூவாகவும்
இருப்பதை அகநானூற்றுப் பாடலும், நற்றிணை 310 போலவே காட்டுகிறது.

அகம். 186


பரத்தை கூற்று

பொருள் : தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது
திணை : மருதம்
ஆசிரியர் : பரணர்

வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை
இருங் கயம் துளங்க, கால் உறு தோறும்
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே!
 நட்பே,
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
மாரி அம்பின், மழைத்தோல் பழையன்
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலனே; உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.

நா. கணேசன்
இன்னும் இவை போன்ற, தாமரைப்பூ, தாமரைப் பாசிலை இவற்றுடன்
குலவிளக்கு (தலைவி), இற்பரத்தையர் பற்றிய அகப் பாடல்கள் இருக்கலாம்.


Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Nov 26, 2020, 5:52:24 AM11/26/20
to housto...@googlegroups.com, vallamai
பர- என்ற வடசொல் பரங்குன்று என்பதில் இருக்கிறது. இப் பெயர்ச்சொல்லில் (மதுரை அருகே உள்ள குன்றம்) உள்ள பரன் = வருணன்.
இது, பரன்குன்றில் கிடைத்துள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டால் உறுதிப்படுகிறது என விளக்கியுள்ளேன். https://youtu.be/WyB3h08w0Yc

இப்போது, மருதத்திணைச் செய்யுள்களைப் பார்த்துவருகிறேன். நிறையப் பாடல்களில் மீன் பரத்தைக்கு,
- முக்கியமாக, யாழ்வல்லபி, சதிராட்டக்காரிகளாய் இருந்த பாண் சேரிப்பரத்தைக்கு- உவமையாய் வருகிறது.
நெய்தல் திணைப்பாடலிலும், திணைமயக்கமாக, மீன் = பரத்தை என்னும் உள்ளுறை உவமை இருக்கிறது.
உதாஹரணமாக, நான்கு பாடல்களைக் கொடுத்துள்ளேன். https://groups.google.com/g/vallamai/c/MEvxRVJUAlc
நற்றிணை 310-ம், அகநானூறு 186-ம்  ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டிய பாடல்கள். சதிர் வல்ல (சேரிப்) பரத்தை மீன்.
இந்த மீன் துள்ளிக் குதித்து ஆட்டம் ஆடுதலால், அதை விரும்பித் தலைவனுக்கு நயப்புப் பரத்தை ஆகிறாள்.
இதைக் காணும், இல்லிடைப் பரத்தையருக்குப் பொறாமை, சினம், புலம்பல் எழுதல் இயற்கை.
இவர்களை இவ்விரண்டு பாட்டிலும், தாமரைப் பூவாக விளங்கும் தலைவி + தாமரைப் பாசிலைகளாக
இற்பரத்தையர் பாடியுள்ளனர் எனத் தெரிகிறது. ஒரு பெரிய Household வளமனையின் குவார்ட்டர்ஸில்
இருப்பவர்கள். இதனை அரண்மனைகளில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், பிற நாடுகளிலும்
(உ-ம்: மத்திய கிழக்கு) காணலாம். தாமரைத் தாவரம் முழுமையாகப் பயன்ப்படுத்தியுள்ளனர்.
தேசம் (தேஎம், தேஅம்) என்பதுபோல, பரத்தை என்பதிலும் பரஸ்தா (=பரஸ்த்ரீ ) என்னும் வடசொல்
இருக்கிறது. பரத்தர் - பாணரொடு கோவலன் இருந்ததைச் சிலம்பில் சொல்கிறார்.
வள்ளுவரும் பரத்தன் என்றசொல்லை ஆள்கிறார். பரத்தன் பரஸ்த என்னும் வடசொல்லில் இருந்து பிறப்பதாகும்.

சங்ககாலப் புலவர்கள் கணிகை போன்றவர்கள் வரும் வடமொழிப் பாடல் மரபுகளில் இருந்து
பாணன், விறலி, இற்பரத்தை. சேரி நயப்புப் பரத்தை, தலைவன், தலைவி ஊடல், ...
வைத்து இப் பாடல்களை உருவாக்கினரோ?

நா. கணேசன்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1311)

மணக்குடவர் உரை: பரத்தமை உடையாய்! நின்மார்பைப் பெண்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்; அதனால் யான் அதனைத் தீண்டேன் என்றவாறு.
இது தலைமகள் புலவி கண்டு, என் மாட்டுக் குற்றம் யாதோ என்று கூறிய தலைமகற்கு அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: (உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன்.
(கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.)


Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Nov 26, 2020, 10:51:45 AM11/26/20
to housto...@googlegroups.com, vallamai
சங்க இலக்கியத்தின் பல பாடல்களில் மீன் = பரத்தை (< பரஸ்தா) என்று உள்ளுறுத்திக் காட்டியிருப்பர் சான்றோர். அவற்றில் சில காண்போம்.
(1) நற்றிணை 310: வேளாண்மைக் குறிப்புக் கூறும் செய்யுள் இஃது.
நற்றிணை 310.           மருதம்
                              பரணர் பாடியது
தோழி கூற்று  (பரத்தை கூற்றும் ஆம்)

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்   
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க                                         
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை             
மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே   5     
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி 
உடன்பட்டு ஓராத் தாயரோடு ஒழிபுடன் 
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்           
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை  
வள்ளுயிர்த் தண்ணுமை போல                          10   
உள்யாதும் இல்லதோர் போர்வைஅம் சொல்லே.

நீர்த்துறை = வளம் மிகுந்த மருதத் திணையின் ஓர் ஊர்.
உண்ணு நீர்த்துறை =பல குடும்பங்கள் பயன்கொள்ளும் ஊர், ஊருணி.
நீரெடுக்க வந்த பெண்கள் இரிதல் = தலைவன், தலைவி குடும்பத்தில் நடக்கும் சண்டை, கௌவை கேட்டு ஊரார் விலகுதல்/மிரளுதல்.
விளக்கு போன்ற தாமரை = குடும்ப விளக்கு போன்ற தலைவி [Ref. சிலம்பின் பாத்திரப் பெயர்கள்]
தாமரையின் பசிய இலைகள் = ஊரனின் வளமனைப் போக (bhoga) வாழ்க்கை வாழும் இற்பரத்தையர்.
(ஒரே காம்பவுண்ட்/காலனி ஆனதால், தாமரைத் தாவரம் முழுக்க உவமைக்குப் பயன்படுகிறது. இதேபோல், அகம் 186-லும் பார்க்கலாம்.)
வாளைமீன் = பரத்தை
மீன் துள்ளி விழுதல் = பரத்தையின் சதிர் ஆட்டம். பழக்கியவன் பாணன், அல்லது விறலி. வாயின்மறுத்தல் துறைச் செய்யுள் இது.
பச்சை இலைகள் அலையுண்டல் = வளமனையில் சுக வாழ்வு வாழும் இற்பரத்தையர், நயப்புப்பரத்தையால் தம் வாழ்வு முடியும் எனக் கவலல்/கதறல்.
பெண்கள் மிரட்சி = பரத்தை ஆடும் கூத்தைப் பார்த்து ஊரார் விலகல்.

தாமரை தலைவி என்பது சரியே. ஆர் = தாமரை நாளம். ஆர்/ஆரம் + விரிந்த (=விந்த)  ===> அரவிந்த என்னும் வடசொல் ஆனது. 
சிலம்பின் தலைவிக்கு, தாமரை என்ற பெயரால் சூட்டுவதை, ஆசிரியரே தெரிவித்துள்ளார். கர்ணகா/கர்ணகீ >> கர்ணகி/கர்ணகை (இன்றும்
நாட்டார் பாடலில் இப்பெயர் தான்) >> கண்ணகி என்று பெயர். கோவலன் ( கோபாலனை ஒட்டி அமைத்த தனித்தமிழ்ப் பெயர்). அண்ணன் பலராமன், வசுதேவன் புத்திரர். கோவலன் பெயர் விளக்கம் முன்பிறப்பு செய்திகளில், மதுராபதி தெய்வம் உரைப்பதாக அமைத்தார். 
கண்ணகி < கர்ணகீ “தாமரைப் பொகுடு” (Pericarp of the Lotus, hence Lakshmi).  கனக விஜயர் - வடநாட்டு மாந்தர். குருக்ஷேத்திரப் போரை
நினைவூட்டும் வகையில் கனக-விஜயர் என்றார். கனகன் = ஹரி (பொன்னர்), விஜயன் = அர்ஜுனன், கீதை உபதேசக் காட்சி போர்க்களம்.
மாதவி கணிகை, கோவலனையே வரிந்து வாழ்ந்தவள்- இப்படிப் பல கணிகையர் தமிழ்வரலாற்றிலுண்டு - கோவில் தேவதாசியர், நிலக்கொடை,
ஏரிக்கொடை எல்லாம் அளித்த தாசிகள் (கல்வெட்டுகளில்) .... - முல்லை கற்பின் சின்னம்/அடையாளம். முல்லைக்கு ஸப்ஸ்டிட்யூட் குருகு/குருக்கத்தி.
இதன் வடமொழிப் பெயர் மாதவி. சங்க நூல்களில் முல்லை, மாதவி ஒன்றாய் இடம்பெறும். முல்லை என்னும் கற்புக்கு கண்ணகியும்,
அதன் அருகே உள்ள குருக்கத்தியை மாதவி என்றும் பெயர் வைத்தார், முத்தமிழ்க் காப்பியம் தமிழின் முதல் தமிழ்தேசிய நாவலில். ....
சிலம்பின் கதைமாந்தர் பெயர்கள் பற்றி நல்ல கட்டுரை ஒன்று எழுதவேணும். யாரும் தமிழின் முதல் நாவலின் பாத்திரங்களின் பெயரை அதன் ஆசிரியர் அமைத்தது பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. ...

விளக்கம் : பேச்சிலே நகைச்சுவை பொதிந்து கிடக்கிறது. நின் தலைவனுக்குப் புதிய பெண் ஒருத்தி தேவையானல், இங்கு ஏன் நீ வரவேண்டும்? அவன் தரும் பொருளை விரும்பும் பரத்தையின் தாயரையே கண்டு பேசிச் சேர்த்து வைக்கலாமே? என்கின்றது காண்க. 'நின் சொல் எம்பாற் பயன்படாது' என்பதும் ஆம். இதனால், சொல்பவரின் வெகுளியையும் காணலாம்.

இறைச்சிப் பொருள் : வாளைமீன், தாமரை வருந்தவும், மகளிர் அஞ்சி ஒடவும், குண்டு நீரில் துள்ளிப் பிறழும்' என்றனள். தலைவனும் யாம் வருந்தவும், காமக்கிழத்தியர் இல்லத்திலிருந்து கதறவும், நீ சேர்த்துவைத்த புதிய பரத்தை யிடம் சென்று தங்கா நிற்பான் என்றதாம்.

 மேற்கோள் : ஆசிரியர் நச்சினர்க்கினியர், இது விறலிக்கு வாயின் மறுத்தது என்று, 'பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின்' என்னும் சூத்திரத்தின் உரையுள் (தொல். பொருள் 156) இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர்.” (நற்றிணை 310, புலியூர்க்கேசிகன்)

இங்கே, தாமரை மலர் குலமகள் ஆகிய தலைவிக்கும், தாமரை நாளம் தாங்கும் பச்சிலைகள் இல்லிடைப் பரத்தையர்க்கும் குறியீடுகள் என்பது தெளிவு. 
தாமரை இலைகள் அலையுறுதல், காமக்கிழத்தியர் கதறுதலைக் குறிக்கிறது. வாளை மீன் எனத் துள்ளிச் சதிர் ஆடும் (சேரிப்)
பரத்தையிடம் தலைவன் போய்விட்டால் என்னாவது என இல்லிடைப் பரத்தையர் அலைமோதுகின்றனர். இதே போல, பெண்களின் Harem ஒன்றை தாமரை மலரைத் தலைவிக்கு நேராகச் சொல்லாமல் குறிப்பாகக் காட்டி, இற்பரத்தையர் ஆகிய பச்சை இலைகள் அலைப்புண்டதை இன்னொரு பாட்டிலும்
பரணர் பாடியுள்ளார். அகம் 186, நற்றிணை 310 ஒப்பிடலாம். 

(2) குறுந்தொகை - 8. மருதம் - காதற் பரத்தை கூற்று
(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின்
பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே
இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல்
ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’
என்று கூறிய பாடல்.)

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல  5
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.

இங்கே, உள்ளுறை உவமம்:
தோட்டத்தில் உள்ள மா மரன் (கழனி மாஅ) ==> தலைவன்/ஊரன் (தலைவி, இற்பரத்தை வதியுமிடம் கழனி என்க).
பழன வாளை மீன் (கழனி அருகே உள்ள பொய்கை/வயலின் வாளை மீன்) ===> குதித்தாடும் (சேரிப்) பரத்தை.
’மடையில் வாளை பாய’ - சம்பந்தர் தேவாரம்.

மாமரம் உகுக்கும் தீம் பழம் ===> பரத்தையர் ஊரனிடம் கொள்ளும் செல்வம்.

(3) அகம் 186
மழையே தேவை இல்லா மீனவர் -கடின உழைப்புத் தேவைப்படும் தொழிலில் ஈடுபடத் தேவையற்ற கூட்டுவிக்கும் தொழிலுடைப் பாணர்கள்
மீனவன் தூண்டிலில் சிக்கிய மீன் - பாணனால் சதிர் ஆட்டக்கலையில் தேர்ச்சி பெறும் சேரிப்பரத்தை. அவள் யாழ்வல்லபியாக
இருத்தலும், பாணனின் முழவமும் பாடலின் பின்னர் வருகிறது. இச் சேரிப் பரத்தை தலைவனுக்கு நயப்புப் பரத்தை ஆகிவிட்டாள்
என்கிறது பாடல். நற்றிணை 310 போலவே, இங்கும் தாமரைத் தாவரம். பதும மலர் - தலைவி. தாமரைத் தண்டின் பச்சை இலைகள் - சுக வாழ்வு வாழும் இற்பரத்தையர்.

மீனவன் பாணருக்கு உவமை. பாணர் பிடிக்கும் மீன், வாளை போன்றன யாழ் வல்ல சேரிப் பரத்தை.
இம் மீன்களால், இல்லிடைப் பரத்தையர் (தாமரைத் தண்டில் உள்ள பச்சிலைகள்) கலங்குகின்றனர், கதறுகின்றனர்.
இற்பரத்தையரிடம் இருந்த தலைவன் பாணர் - பரத்தையர் சேரிக்குப் போய்விடுகிறான். வேழப்புணை பரத்தையர்க்கு உவமை. For both illiDai & cEri kinds; hero uses them just for pleasure - Use & Throw culture.

"அவன் எம்மிடம் இல்லை; பாண் சேரியில் அல்லவா இருக்கிறான்? எம்மை ஏன் நோகிறாள் தலைவி? அவள் நிலையிலே தான் நாங்களும்” என்று சக்களத்தி (சேரிப் பரத்தை) பற்றி இல்லிடைப் பரத்தையர் புலம்பும் பாடல். நற்றிணை 310 போலவே, இங்கும், ஒரே இல்லில் வாழும் இற்பரத்தையர் என்னும் காமக்கிழத்தியர் தாமரைத் தாவரத்தின் பச்சிலைகளுக்கும், தாமரைப் பூ தலைவிக்கும் உவமையாக மகாகவி+ ஜர்னலிஸ்ட் பரணர் பாடிய பாடல் அகம் 186.
எப்பொழுதும் போல, சரித்திர நிகழ்ச்சி ஒன்றை - பழையன் காவிரிக் கரையில் போஒர் - பதிவு செய்கிறார். காமக்கிழத்தி ஆகிய இற்பரத்தை, சேரிப்பரத்தையைச் சாடி,
தன்னிடம் இல்லை தலைவன் எனத் தெரிவிக்கும் பாடல்.

தலைவன் சேரிக்குச் சென்றதால், தாமரைச் செடி போல, தலைவி (பூ) நிலையும், தம் (பாசிலை)நிலையும் ஒன்றுதான் என்கிறாள் இற்பரத்தை. அற்புதமான பாடல்.
நற்றிணை 310-ம், அகநானூறு 186-ம் ஒருசேர வாசிக்கவேண்டியவை.

(4) நெய்தல் திணைப் பாடல் - திணைமயங்கு செய்யுள்.
ஐங்குறுநூறு 184
துறை : வாயில் வேண்டி வந்தார், தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.

நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுண் குருகிளங் கானல் அல்கும்
கடலணிந் தன்றவர் ஊரே
கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே!

இங்கும், மீன் = பரத்தை.  மீன், கடல்வாளை ஆயின் சேரிப்பரத்தை எனலாம்.

உள்ளுறை : கழியிடைச் செல்லும் குருகு, அவ்விடத்தேயான அழகிய நெய்தலை விரும்பாது, இழிந்த மீனையே விரும்பி உண்டுவிட்டு, இளங்கானலிலே சென்று தங்கும் என்றனள். இது தலைவனும் தலைவியின் பெருநலனைப் போற்றிக் கொள்ளாதே வெறுத்தானாய், இழிவான பரத்தையரையே விரும்பிச்சென்று நுகர்ந்து களித்தானாய், வேறெங்கோ சென்று தங்குவானுமாயினன் என்பதனை உள்ளுறுத்துக் கூறியதாம்.(புலியூர்க் கேசிகன்).

”நெய்தல் திணையில் மருதத்தின் உரிப்பொருள்
நெய்தல் திணையில் நெய்தல் நிலமானது ‘நெய்தல்’ என்னும் பெயரில் ஐங்.நெய்.184:1-3 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும இடம்பெற்றுள்ளது என்பது இங்குச் சுட்டத்தக்கது. நெய்தல் நிலமானது பெரிய நீர்நிலையும், அந்நீர் நிலையில் மலர்ந்த நெய்தல் மலரும், நெய்தல் மலருக்கு அருகில் மீன்களும், அம்மீன்களை உண்ட குருகு கடற்கரைச் சோலையில் தங்குவதாகவும் வருணிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியினை,

“நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீன்உண் குருகினம் கானல் அல்கும்
கடல்அணிந்தன்று அவர் ஊரே” (ஐங்.நெய்.184:1-3)
என்னும் பாடலடிகள் காட்சிப்படுத்துகின்றன. இப்பாடலில், நெய்தல் நிலம், இந்நிலத்திற்குரிய பெரிய நீர்நிலைகள், நெய்தல் மலர், நெய்தல் நிலத்தினைச் சார்ந்து வாழும் மீனை உண்ணும் குருகினம், கடற்கரைச்சோலை, கடல் ஆகிய வருணனைக் கூறுகளை உட்படுத்தி நெய்தல் நிலத்தினை வருணித்திருப்பது அம்மூவனாரின் கவிப் புலமையினை வெளிப்படுத்தும் சிறப்பு எனலாம்.

நெய்தல் நிலத்திலுள்ள பெரிய நீர்நிலையில் மலர்ந்திருந்த மணமிக்க நெய்தல் மலர் தலைவி. நெய்தல் மலருக்கு அருகிலுள்ள இழிந்த நாற்றமுடைய மீன் பரத்தை. அம்மீனை உண்ட குருகானது பரத்தையிடம் இன்பம் அனுபவித்த தலைவன். குருகு கடற்கரைச் சோலையில் தங்குவது என்பது தலைவன் பரத்தையர் சேரியில் தங்குதல் என்பதாக உள்ளுறைப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வுரிப்பொருளானது மருதத்திணையில் இடம்பெற வேண்டியது நெய்தல் திணையில் இடம் பெற்றிருப்பதைத் திணைமயக்கம் என்று கூறுவர். முதற்பொருளாலும் கருப்பொருளாலும் நெய்தல் திணையாக அமைந்துள்ளது. உள்ளுறைப்பொருளால் மட்டும் மருதத்தின் உரிப்பொருள் வந்துள்ளது. இப்பாடலின் மூலம், நெய்தல் நிலத்திலும் தலைவன் பரத்தமைமேற்சென்றிருந்த தன்மை புலனாகின்றது.

இக்கட்டுரையில் நெய்தல் நிலத்தின் பல்வேறுபட்ட பெயர்கள் எத்தனைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன என்பதைப் புள்ளிவிவரத்தோடு அறியமுடிகின்றது. நிலவருணனையின் வாயிலாக நிலத்தினுடைய தன்மை வெளிப்படுகின்றது. நெய்தல் நிலத்திற்குரிய கருப்பொருளின் செயல்பாடுகளைத் தலைவனின் செயல்பாடுகளாக உள்ளுறையின் வாயிலாக ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார். மருதத்திணையின் உரிப்பொருளானது நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ளதால் திணைமயக்கத்திணையும் இங்குக் காணமுடிகின்றது.” பா. ஈஸ்வரன், http://www.muthukamalam.com/essay/literature/p179.html

------------
இன்னும் இரண்டு செய்யுள், மீன் = பரத்தை என்பதற்குக் காட்டுதும்.
(5) நற்றிணை : 400
திணை : மருதம்
துறை : பரத்தை தலைவனைப் புகழ்ந்தது.
ஆசிரியர் : ஆலங்குடி வங்கனார்

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர
[...]

இங்கேயும், மீன் பரத்தைக்கு உவமை தான்.
உள்ளுறை:- வாழையினது பூவை அசைக்கின்றனவாகிய வயலில் உண்டாகும் நெற்கதிர்களை மள்ளர்கள் அறுத்துப்போகட்ட அரிச்சூட்டின் அயலின்கண்ணே வாளை பிறழுமென்றது, தலைவியினது நெஞ்சை வருத்துகின்றனவாகிய காதற் பரத்தையின் செய்கைகளை வாயில்கள் அடக்க அவள் நெஞ்சிலே தலைவன் விளங்கலாயினா னென்பதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவனைப் பரத்தை புகழ்தல்.

புலியூர்க் கேசிகன் விளக்கினார்:
உள்ளுறை : வாழையின் தொங்கும் பூவை வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அசைக்கும் வயலிலே, மள்ளர்கள் அறுத்துப் போட்ட கதிர்ச்சூட்டின் பக்கத்தே வாளை மீன்கள் பிறழும் வளமான ஊர் என்றனர். வாழையின் பூவை வளர்ந்து அசைத்த நெற்பயிர்போலத் தலைவியின் காதல்வாழ்வைத் தன்னுடைய இளமை நலத்தால் படர்ந்து அலைவித்தனள் பரத்தை. வாயிலர்கள் அவள் உறவை முடித்துப் போட்டது கதிர் அறுத்துப்போட்ட சூட்டினைப்போன்றதாம். சூட்டயலிலே வாளைமீன் பிறழ்தல் போலப் புதிய பரத்தையர் அவள் எதிரேயே அவனைக் கொண்டு செல்லக் காத்திருப்பவராயினர் என்பதாம்.
விளக்கம் : வாழை மென்தோடு வார்புறுபு ஊக்கும் நெல்விளை கழனி என்றது, நெல்லானது செழித்து வளர்ந்துள்ளபோது, வாளையின் மெல்லியவான தாற்றின் நுனிப் பூவானது கவிந்து வந்து அவற்றின் அளவுக்குத் தாழவும், அந் நெற்பயிர் காற்றால் அசையும்போது, அப் பூவையும் ஆட்டுவிக்கும் என்றனர். இளமைச் செழுமைக் கவினாலே செருக்குற்ற பரத்தையரைக் கண்டதும், தலைவன் தன் தகுதி தாழ்ந்து அவர் உறவை நச்சிவந்து சார, அவர்கள் தம் அன்னையரால் ஏவும்பொழுதெல்லாம் அவனை அதற்கேற்றபடி ஆடச் செய்வர் என்பதாம். சூட்டயலிலே வாளை பிறழும் என்றது, அடுத்து வரும் தன் அழிவை நினையாத அறியாமையால் ஆகும். அவ்வாறே பரத்தையர் பலரும் தலைவனைச் சூழ்ந்து ஆடியும் பாடியும் அவனைக் கவர்தற்கு முயல்வர் என்பதாம். அன்றித் தன்னோடு உறவாடி யிருந்த நெற்பயிர் அறுப்புண்டு வெளியேபோவது கண்டும், கவலாது பிறழும் வாளை மீன்போல, தலைவன் பிரிவைக் கண்டும் கவலாது, மீண்டும் அவனைத் தன்பால் ஈர்க்க முயன்றனள் பரத்தை என்பதுமாம்.
பயன் : இதனால், தலைவன் அவள்பால் வெறுப்பு அடையாத வகை மீண்டும் அவளை விரும்பி வருதலும் கூடும் என்பதாம்.”

(6)  குறுந்தொகை 164
கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்
(7) அகநானூறு 276
etc. etc., ~NG

On Thu, Nov 26, 2020 at 4:57 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
பர- என்ற வடசொல் பரங்குன்று என்பதில் இருக்கிறது. இப் பெயர்ச்சொல்லில் (மதுரை அருகே உள்ள குன்றம்) உள்ள பரன் = வருணன்.
இது, பரன்குன்றில் கிடைத்துள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டால் உறுதிப்படுகிறது என விளக்கியுள்ளேன். https://youtu.be/WyB3h08w0Yc

இப்போது, மருதத்திணைச் செய்யுள்களைப் பார்த்துவருகிறேன். நிறையப் பாடல்களில் மீன் பரத்தைக்கு,
- முக்கியமாக, யாழ்வல்லபி, சதிராட்டக்காரிகளாய் இருந்த பாண் சேரிப்பரத்தைக்கு- உவமையாய் வருகிறது.
நெய்தல் திணைப்பாடலிலும், திணைமயக்கமாக, மீன் = பரத்தை என்னும் உள்ளுறை உவமை இருக்கிறது.
உதாஹரணமாக, நான்கு பாடல்களைக் கொடுத்துள்ளேன். https://groups.google.com/g/vallamai/c/MEvxRVJUAlc
நற்றிணை 310-ம், அகநானூறு 186-ம்  ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டிய பாடல்கள். சதிர் வல்ல (சேரிப்) பரத்தை மீன்.
இந்த மீன் துள்ளிக் குதித்து ஆட்டம் ஆடுதலால், அதை விரும்பித் தலைவனுக்கு நயப்புப் பரத்தை ஆகிறாள்.
இதைக் காணும், இல்லிடைப் பரத்தையருக்குப் பொறாமை, சினம், புலம்பல் எழுதல் இயற்கை.
இவர்களை இவ்விரண்டு பாட்டிலும், தாமரைப் பூவாக விளங்கும் தலைவி + தாமரைப் பாசிலைகளாக
இற்பரத்தையர் பாடியுள்ளனர் எனத் தெரிகிறது. ஒரு பெரிய Household வளமனையின் குவார்ட்டர்ஸில்
இருப்பவர்கள். இதனை அரண்மனைகளில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், பிற நாடுகளிலும்
(உ-ம்: மத்திய கிழக்கு) காணலாம். தாமரைத் தாவரம் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர்.

N. Ganesan

unread,
Dec 8, 2020, 1:30:15 PM12/8/20
to housto...@googlegroups.com, vallamai
வாளை (நற்றிணை 310), மீன் (அகநானூறு 186) - பரத்தையர்க்கு உள்ளுறை ஆக வருதல் கண்டோம்.

(1)
ஐங்குறுநூறு 40, மருதம்
 தோழிக்குரைத்த பத்து

அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன்
பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே

 எ-து உலகியல்பற்றித் தலைவன் தன்மனைக்கண் ஒரு ஞான்று
போனதே கொண்டு அவ்வழிப் பிரியாது உறைகின்றானென்று அயற்
பரத்தையர் பலரும் கூறினாரென்பது கேட்ட காதற்பரத்தை அவர்
பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது.

 தலைவி+ இல்லிடைப் பரத்தையர் உரையாடல். இவர்களுக்கு, பிற பாடல்களில் தாமரை உவமையாக
வரும். பெண்டிர் - சேரிப் பரத்தையர். கெண்டை மீன்கள் பாய்தருதல் அப்பரத்தையருக்கு உள்ளுறையாய்
நின்றது.

(2)  குறுந்தொகை 127 மருதம்

குருகு கொள குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம்
கழனி அம் படப்பை காஞ்சி ஊர
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக
உள்ள பாணர் எல்லாம் 5
கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே
                  - ஓரம்போகியார்
குருகு  (waterbird, நாரை, அன்றில் போல்வன) - தலைவன்.
அவன் கொளக் குளித்த (இன்பந்த் துய்த்த) கெண்டை துள்ளியது.
கெண்டை - பாணர் கூட்டுவிக்கும் பரத்தை. அவளிடம் செல்லும் தலைவன், பரத்தை செயலுக்கு
மருளும்/அஞ்சும்/துண்ணெனப் பயப்படும் தாமரை. தாமரை முகை என்பது தலைவியை.

(3) குறுந்தொகை  91 மருதம்
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்
பல ஆகுக நின் நெஞ்சில் படரே
ஓவாது ஈயும் மாரி வண் கை 5
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போல
சில ஆகுக நீ துஞ்சும் நாளே
     -  ஔவையார்
என்பது பரத்தையர் மாட்டுப் பிரிந்த தலைமகன், வாயில் வேண்டிப் புக்கவழித்
தன் வரைத்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழித் தலைமகள்
அதனை நெருங்கிச் சொல்லியது.

இந்த மருதத் திணைப்பாடலிலும் குளத்தில் உள்ள கெண்டை மீன்கள் பரத்தையரைக்
குறித்து நின்றன.

இனி, இந்தப் பாடல்களில் உள்ளது போன்ற வளமான மருத நில வாழ்க்கை வாழ்ந்த தலைவன் மறைந்துவிடுகிறான்.
அவனுக்கு ஈமச் சடங்கு, உற்றார் உறவினர் சூழ நடக்கிறது. கற்புக்கடம் பூண்ட தலைவி, அவனது
பட்டத்தரசி. அவள் இழையணி, பொட்டு, ... போன்றவை இழந்து வரி நீறு அணியும் நினைவஞ்சலிக் கூட்டம்.
தலைவி மட்டுமில்லை. இல்லிடைப் பரத்தையர், காமக் கிழத்தியர், சேரிப் பரத்தையர் என
வளவாழ்வு வாழ்ந்த தலைவன் பலருக்கும் பகுத்துண்டான். அவனது மறைவின் போது, சிறிய முறம்
போன்ற இடத்தை மெழுகி உணவு உண்டு, வெள்ளை தவிர வேறெதுவும் அணியாத நிகழ்ச்சி.
தும்பி சேர கீரனார் பாடும் புறம் 249. விதவைக் கோலத்தில் வரி வரியாக நீறு நெற்றியில் அணிந்து
கோலத்தில் தலைவி விளங்குகிறாள்.  வெள்ளை நிறம் = இந்தியாவில் துயருக்கான வண்ணம்.
https://groups.google.com/g/vallamai/c/NX0ApczYVCg/m/_r4GQuSvAgAJ
அண்மையில் மதுரை அருகே கொங்கர்புளியங்குளத்தின் அருகே கிண்ணிமங்கலத்தில் பள்ளிப்படை லிங்கத்தில்
தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. வடக்கே இருந்து சேர நாடு வழியாக - சங்க காலத்தில்
சேரநாட்டுத் தலைநகர் வஞ்சி என்னும் கரூர் - சைவ சமயம் பாண்டி நாட்டை அடைந்துள்ளது.
தும்பி குடும்பப் பெயர் அல்லது ஊர்ப்பெயர் எனலாம். சோழபாண்டியன் என்பதுபோல, சேரகீரனார்.
கீரன் புலவர் பெயர். சேர குலத்தானாகிய கீரன். இன்றும் சேரன் குலத்தவர் கொங்குநாட்டில் உள்ளனர்.
தலைவன் அகல்நாடு என்பதன் தலைவன். இன்றும் அகனாடு என்ற பகுதி கொங்கில் உண்டு.
அகல்நாடு காரணப்பெயர். அகல்விளக்குப் போல மலைகளால் சூழப்பெற்று, நொய்யல், ஆன்பொருனை,
காவிரி என்னும் நதிகள் திரியாய் விளங்கும் நாடு கொங்குநாடு. நீலமலை, வில்கோடி (>தனுஷ்கோடி)
துருத்தி, ... போல நில அமைப்புத் தரும் பெயர்களில் ஒன்று. சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன்
“நன்னுதல் வியக்கும் நலத்தோர்  யார்?’ எனத் தன் மனைவியை நோக்கிக் கேட்கிறான். மறுமொழி
பகரும் இளங்கோ வேண்மாள் 'பத்தினிப் பெண்டிர் பெறும் பேற்றைப் பாண்டிமாதேவி அடைவாளாக;
நம் அகல்நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்” என்கிறாள். நம் அகல்நாடு
என்பது இளங்கோ அடிகளின் சேரநாட்டுத் தலைநகர் வஞ்சி இருக்கும் நாடு ஆகும். அரியபாடலைத்
தும்பி சேர கீரனார் இயற்றித் தந்துள்ளார். வள்ளுவர் போற்றும் கற்புடை மங்கையர், கணவன்
மறைந்த பின்னர் வெள்ளை அணிந்து தவக்கோலம் ஏற்கும் சைவ சமய மரபு கூறும் பாடல்.
கிண்ணிமங்கலம் லிங்கம் புள்ளிகள் இருப்பதால் சுமார் கி.பி. 2ம் நூற்றாண்டு எனத் தெரிகிறது.
இப்பாடலின் காலமும் அதனை ஒட்டியதாக இருக்கவேண்டும்.

வாளை, கெண்டை, ஆரல், வரால் மீன்கள் - தலைவனின் பல்வேறு பரத்தை வகுப்பினருக்கும்
வலைஞர்கள் பாணர்களுக்கும், அவர்களது இசைத்திறன் தடாரியாலும் இப்பாடலில் குறியீடாக
வருகிறது. அடங்கிய கற்பு தலைவன் மறைதலால், அவளது “ஆய்நுதல்” பொட்டிழந்து, வரி நீறு
பூசுவதும், சடங்காகிய சிறுதரை மெழுகி உண்டு அடங்கிய கற்புடன் கைம்மை நோன்பு நோற்பதைப்
 பாடலில் காண்க.

அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை (புறம் 249)

கதிர்மூக்கு ஆரல் கீழ்ச்சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு

உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று மன்னே; இன்றே,
அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை

உயர்நிலை உலகம் அவன்புக வரிநீறு
ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனா  கண்ணள்
மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே
                  - தும்பி சேர கீரனார்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 9, 2020, 6:54:39 AM12/9/20
to vallamai, housto...@googlegroups.com
On Tue, Dec 8, 2020 at 7:55 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கோடி புண்ணியம். 
புறப்பாடல்களில் உள்ளுறை இல்லை என்பதை ஒத்துக் கொண்டமைக்கு....

புறப்பாடல்களில் உள்ளுறை இருப்பதாக எழுதவே இல்லையே.
மீண்டும் என் மடலைப் படித்துப் பாருங்கள்.


பிறிதுமொழிதல் அணியைப் பொருத்திப் பார்ப்பது... நல்ல கற்பனை வளம். 

புறப்பாடலில் காட்சியில் நேரடியாக இடம் பெறாதவரைச் சேர்த்து வைத்துப் பொருள் சொல்வது தவறு தான். 

இதே புறநானூற்றில் வெளிமானின் ஈமச்சடங்கை இப்பாடலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அது பாசுபதம். 

இதே புறநானூற்றில் பேகனின் புறத்தொழுக்கம் எப்படிப் பேசப்படுகிறது?

இதே புறநானூற்றில் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி மேல் கொண்ட காதல் எப்படிச் சொல்லப்படுகிறது?

இடைக்காலத்துச் சிற்றிலக்கியங்களின் மேல் ஈடுபாடு மிகுதியாக இருப்பதால் அந்தக் காலத்தில் பெருவாரியாகப் பயன்பாடு கொள்ளப்பட்ட அணிகள் தொகை இலக்கியத்தில் இருப்பதாகக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறீர்கள். 

புறம் 249 தொகை இலக்கியக் காலத்துப் பன்மைச் சமுதாயத்தைப் புரிந்து கொள்ள நல்ல சான்றாகும். பல்வேறு சமயங்கள் பின்பற்றப்பட்டன. இது சமணம். அவள் அழுது கொண்டே குழி மெழுகுகிறாள். அவள் பக்கலில் யாருமில்லை. தும்பி சொகினனார் அதே தோட்டத்தில் இருப்பதால் இதைப் பார்த்து அழுது கொண்டே பாடிய பாடல் இது. 

தமிழிலே, (வடமொழி, ஹிந்து சமயம் பூராவிலும்) நீறு ஆடி என்றால் சிவபெருமான் தான். அவனுக்கு நீறாடி என்றே பெயர்.
புறநானூற்றில், பெரும்புலவர் பாடிய பாடல் சேர்த்தப்பட்டுள்ளது. காரணம்: கற்போடு தலைவனுடன் வாழ்ந்த தலைவி,
அவன் மறைந்ததால், ’அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை’ ஆகி, வரி நீறு ஆடுகின்றதும், சிறிய இடத்தைத் தானே மெழுகி
உணவுண்னும் சீரையும் வர்ணிக்கும் பாடல். ஏதோ தெரு வாழ்க்கை வாழ்ந்த பிச்சைக்காரன் வாழ்க்கை அல்ல இந்த
அகல்நாட்டுத் தலைவன் வாழ்க்கை. ஏராளமான பெண்டிர், உற்றார், உறவினருடன் பகுத்துண்டு வாழ்ந்தவன் அவன்.
அவன் வாழ்ந்த பெண்டிர் கணக்கு பலவகை மீன்கள் பெயரால் சுட்டப்பெறுகிறது பாட்டில். மீன் என்றால் என்ன என அறிய
அகப்பாடல்களில் கொடுத்துள்ளேன். இங்கே, மீன்கள் என்பது நுவலாநுவற்சி. உற்றார், உறவினர், நண்பர், படைவீரர்கள், ...
என அனைவரும் சேர்ந்து நடத்தும் கடைசி நிகழ்ச்சி. சிவன் வழிபாடு நடைபெற்றுள்ளது. இப்பாடல் காலத்தில்,
நெட்ரம்பாக்கம், கிண்ணிமங்கலம் போன்ற இடங்களில் பள்ளிப்படையே சிவலிங்கம் தாபித்து, தமிழ் ப்ராமி எழுதி
வழிபட்டுள்ளனர் எனத் தொல்லியல் காட்டுகிறது.

வேளாளரில் நீறுபூசிகள் உண்டு, நீறு பூசார் (சமணர்கள்) உண்டு. பெருத்த வேறுபாடு இல்லை. கைம்பெண்டிர்
இரு பக்கலிலும் வெள்ளாடை அணிவர். பொட்டு திலகம் நீங்கிய வாழ்வு. அதனால் தான், தாபத நிலை
என்று புறம் 249-ன் துறையைக் குறித்துள்ளனர். வரி நீறு ஆடுதல் என்பதால், பெருங் கூட்டம் கூடி,
படைத்துச் சாப்பிடும் சீரை வர்ணிக்கும் பாடல் சைவத்தினைச் சுட்டுகிறது. இது நீறு பூசாதார் சமயம் அன்று.
நீங்கள் சொல்லும் இன்னொரு ஈமச் சடங்கும் இதேபோல் சைவத்தாரினதே. இங்கே, பேசியுள்ளோம்.

நீறு பூசா வேளாளர், நீறு பூசி வெள்ளாளர் ஆன பின்னர், பல சைவ நூல்கள் பாடினர் (உ-ம்: சிவமலைப்
புராணம், அறப்பளீசுரர் சதகம், ...) நீறுபூசிகள் குடும்பத்தில் உதித்த அருணாசலகவி பாடிய
கீர்த்தனம் புகழ்ப்பெற்றது. அதில் ஒருவார்த்தை: புள்ளிவில். அதுபற்றிப் பாரதியார் பேரன்,
நிரஞ்சன் பாரதி என்னைக் கேட்டிருந்தார். அவருக்கு விளக்கினபோது, நீறுபூசி, நீறுபூசா
வேளாளர்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
http://nganesan.blogspot.com/2020/11/pullivil-rainbow-tuulicaalam.html

நீறுபூசி வேளாளரும், நீறுபூசா வேளாளரும்

***************************************************

தமிழ்நாட்டில் வேளிர் வருகையால் வேளாண் தொழில் சிறப்பாக அமையலாற்று. வேளாண்மைக்கு மழையே மழையால் வரும் நீரே  இன்றியமையாதது. சைவமும், சமணமும் வெள்ளாளர்கள் கொணர்ந்த சமயங்கள். இரண்டுக்கும் ஊடாடல்கள் பல காலமாக நிகழ்கின்றன. சைவ ஆகமங்களில் ஜைந சமயத்தின் தாக்கத்தைக் காண்கிறோம். சைவ உணவு என்பதை ஆருகத (< அர்ஹத்) உணவு என்றே யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றனர். திருக்குறள், நாலடியார் போன்றவை வேளாண் வேதம் எனப் பெயர்பெற்றவை. கொங்குவேளிர் வானவில்லைக் கரந்துறைகோள் என்கிறார். தூளிசாலம் என்ற வானவில் பெயரால் ஜினாலயத்தின் முதலாவதாகிய வெளிமதில் அமைந்துள்ளது என்கிறது மேருமந்தர புராணம்.

இராம நாடகக் கீர்த்தனையின் ஆசிரியர், நீறுபூசி வேளாளர் என்னும் குலமரபு உடையார். அதாவது, சமணத்தினின்றும், சைவத்துள் புகுந்த வேளாளர்கள். அவ்வகையில், விவசாயத்தைக் குலத்தொழில் ஆகக் கொண்ட சீகாழி அருணாசலக் கவிராயரின் “புள்ளிவில்” என்ற சொல், தூளிசாலம் போன்ற பழைய சொற்களையும், தமிழரின் பண்டைய வானவில் கோட்பாடு பற்றி அறியவும் துணை ஆகிறது. இவரது முதல் மகன் அம்பலவாணக் கவிராயர் கொங்குநாட்டில் வாழ்ந்தவர் ஆவார். காங்கேயம் சிவமலைப்புராணத்தில் (தி. அ. முத்துசாமிக் கோனார் பதிப்பு, 1918) விரிவாகக் காணலாம். 

”இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.” (சமணமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி). 

"கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் – ’ராம நாடகக் கீர்த்தனைகள்’  என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு; அப்படிச் சொன்னாலும் – அந்தப் பாட்டுக்கள் குறிப்பாக ‘தரு’ (daru) என்ற பாடல் வகையைச் சேர்ந்ததேயாகும். பல பாட்டுக்களைத் தொடர்ச்சியாக அமைத்து ஒரு கதையைச் சொல்லிக் கொண்டு போகிறபோது அந்தப் பாட்டுக்கு ‘தரு’ என்றே தனிப்பெயர் கொடுத்திருக்கிறது.

அருணாசலக் கவிராயர் நான் சொல்லி வந்த சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுபவராக இருப்பதும் ஒரு விசேஷம்! அவருடைய பெயரே, விஷ்ணு அவதாரமான ராமர் கதையைச் சொன்ன அவர் சைவர் என்று காட்டுகிறது. ‘நீறுபூசி வேளாளர்’ என்று விபூதியிட்டுக் கொள்வதை வைத்தே பெயர் ஏற்பட்ட ஸமூஹத்திலே பிறந்தவரவர். ஒரு காலத்தில் ஜைனர்களாக இருந்து அப்புறம் ஹிந்து மதத்திற்கு, அதிலே சைவ மரபுக்கு வந்தவர்களின் ஸமூஹத்துக்கு அப்படிப் பேர். தஞ்சாவூர் ஜில்லா தில்லையாடியில் இருந்த அந்தக் குடிகளில் ஒன்றிலே பிறந்தவரவர். கல்யாணமான பிறகு சீர்காழிக்கு வந்து அங்கேயே கடைசி வரை இருந்தார். அதனால் அவரைச் சீர்காழிக் கவிராயர் என்றே சொல்வதாக ஆயிற்று.

சைவக் குடும்பத்திலே பிறந்த அவர் படித்ததும் – தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டிலும் அவர் நிரம்பவே படித்திருக்கிறார்; அப்படிப் படித்ததெல்லாமும் – சைவ மடமான தர்மபுர ஆதீனத்தில்தான். ஆனாலும், சைவமா, வைஷ்ணவமா என்று பேதம் பாராட்டாத அவருக்கு ராம கதையிலேயே ஒரு தனி ருசி இருந்தது. அதனாலேயே இப்படித் தம்முடைய காவிய ஸ்ருஷ்டியை உண்டாக்கினார்.” (காஞ்சிப் பெரியவர்).

தமிழ்நாட்டுக்கு வட இந்தியாவில் இருந்து எழுத்து (பிராமி இலிபி), சமணம், சைவம் வருகை: Śaka Clans, Pallava Royals, Śākya Nāyanār and Bodhidharma http://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html

http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html

 கிண்ணிமங்கலத்தில் கிடைத்துள்ள முகலிங்கம் தென்னிந்தியா, தென்கிழக்கு ஆசியா பள்ளிப்படை சிவாலயங்களில் பழமையானது. http://nganesan.blogspot.com/2020/07/chennimalai-devarayar-kandasashti.html புறநானூற்றுப் பாடல் 249 தும்பி சேரகீரனார் பாடியது. அப்பாடலில் தான் தலைவனை இழந்த தலைவி குங்குமம் இழந்து, வரிநீறு ஒன்றையே தரிக்கும் 16-ம் நாள் ஈமச்சீர் பாடப்பட்டுள்ளது பாசுபத காபாலிகம் கொங்கில் பரவியதைப் பாடும் பாடல் ஆகும். திரிபுண்டரம் அழகாக, தும்பி சேர கீரனாரால் ’வரிநீறு’ எனப்படுகிறது. வரி நீறு என்ற பாடமே முனைவர் ம. வே. பசுபதி (தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) நூலிலும் இருக்கிறது. தும்பி சேர கீரனார் பாடல், புறநானூறு 249, உரையுடன் படித்தருளுக:
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru249.html#.Xw2ulOdOnIW
ஈரோடு, பச்சோடு (பாப்பினி), பெரியோடு, சித்தோடு, வெள்ளோடு, ... போல ராசிகணத்தார் பரப்பிய பாசுபத சைவம் பழனி-திண்டுக்கல் அருகே எரியோடு வந்து, கிண்ணிமங்கலம் சேர்ந்த வரலாற்றை விளக்கும் ஆவணமாக, இப்போது கி.பி. 2-ம் நூற்றாண்டின் முகலிங்கம் “எகன் ஆதன் கோட்டம்” என்ற எழுத்துடன் கிடைப்பது அருமை. நீறுபூசுதலும், நீறுபூசாமையும் சைவர் - சமண வெள்ளாளர்களின் வேற்றுமைகளில் முக்கியமானவை. இரு சமயத்தாருக்கும், சங்க காலத்தில் இருந்தே பஞ்ச திராவிட தேசம் முழுமையும் (குஜராத்தில் இருந்து தமிழகம் வரையிலும்) கணவனை இழந்த பெண்டிர் வெள்ளைச் சீலை கட்டுதல் பழைய மரபு. சைவர்களிடையேயும், சமணர்களிடையேயும் இதைக் காணலாம்.
 

இதனை ஆராயத் தூண்டிய பசுமைக்கவிஞன் பாரதிக்கும், பேரா. கனக அஜிததாஸ் அவர்களுக்கும் என் நன்றி பல. ~NG



 

சக 

On Wed, 9 Dec 2020, 6:44 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:


On Tue, Dec 8, 2020 at 12:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
புறப்பாடலில் உள்ளுறை இருக்கிறது என்று கூறுவது தப்பு. Himalayan blunder. 

உள்ளுறை என்பது அகப்பாடல்களில் காணப்படும் அணி. 
புறப்பாடல்களில் நேரடியாகத் தான் பாடியுள்ளனர். 

நீங்கள் சொல்வது போல் புறம்- 249ல் உள்ளுறை இருக்கிறது என நீங்கள் நிறுவ விரும்பினால்...  fill up the blanks 
கதிர்மூக்கு ஆரல் = ........................
கீழ்ச்சேறு= ..................
 ஒளிப்ப= .................
கணைக்கோட்டு வாளை = ...................
மீநீர்ப் பிறழ= .............
எரிப்பூம் பழனம் = .....................
நெரித்து= ...............
வலைஞர்= .......
அரிக்குரல் தடாரியின் யாமை= ..............
 மிளிர= .............
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வரால்= ..........
உறழ்வேல் அன்ன ஒண்கயல் = ................
முகக்கும் = ............
அகல்நாட்டு அண்ணல் புகாவே, 

உள்ளுறை இருப்பின் ஒவ்வொரு பெயருக்கும் வினைக்கும்  நேரான பொருள் என்ன என்று சொல்ல வேண்டும். 
வலிந்து சொல்லக் கூடாது. 
புறப்பாடல்களில் உள்ளுறை இடம் பெறாது. 

நன்றி. புறப்பாட்டு பற்றி எழுதியிருப்பதைப் பாருங்கள். உள்ளுறை என்ற சொல்லே
நான் பயன்படுத்தவில்லை. தண்டி போன்றோர் ஒட்டணி என்கிறார்கள். நுவலாநுவற்சி,
பிறிதுமொழிதலணி என்றெல்லாம் சொல்கின்றனர். 

தொனி (Technique of Suggestion) பயன்படுத்தியுள்ளார் புறம் 249-ல். ஏராளமான அகப்
பாடல்களில் உள்ள  Technique of Suggestion மீன் = பரத்தை. அந்த மருத வளத்துடன்
வாழ்ந்த தலைவனுடன் கற்போடு வாழ்ந்த தலைவி. அவன் மறைந்தபிறகு
’அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை’ நடத்தும் ஈமச்சீர். உள்ளுறை இல்லை.
புறம் 249ல் ஒட்டணி/நுவலாநுவற்சி/பிறிதுமொழிதல் இருக்கிறது.

நா. கணேசன்

 
சக 

குறித்து நின்றன. முந்தைய மடலிலும் ஏழு அகப்பாடல்கள் தந்து
அவற்றில் மீன் என்பது பரத்தையர்க்கு உள்ளுறை எனக் காட்டினேன்.

N. Ganesan

unread,
Dec 9, 2020, 7:02:44 AM12/9/20
to Santhavasantham, sirpi balasubramaniam, svs....@gmail.com
Reply all
Reply to author
Forward
0 new messages