2.பாளராயனும் புரவ
3.ரியாருக்கு செய்யும்படி
4.வடக்கில் வாயிலில் உலக
5.ங்காத்த சோளீச்0வரமு
6.டைய னாயனார்கு வா
7.ணியர்கு முந்பு நம் ஒன்
8.பதாவது தை மாதம் மு
9.தல் இ நாயனார்கு பூ
10.ஜைக்குந் திருப்பணி
11.க்குமுடலாகக் குடுத்
12.தோம் என்று திருவெழு
13.த்துச் சாத்தின திருமுகப்
14.படிக்கு கல்வெட்டு
15. இது தன்ம தாவ
16.ளந் தந்மம்ஆறகழூர் மைல்கல் மற்றும் வாணியர் பற்றிய விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி அய்யா
16 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 9:06 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
2017-04-30 8:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தமிழ்ச் சமணர்கள் இந்த யோஜனை அளவையை நன்கு எழுதியுள்ளனர். உ-ம்: காஞ்சி ஸ்ரீ அனந்தநாதநயினார், திருக்குறள் ஜைன ஆராய்ச்சி உரை, 1930யாப்பருங்கல விருத்தி இவ் வடமொழிச் சொற்களை தமிழாக்குகிறது:12 விரல் 1 சாண்2 சாண் 1 முழம்4 முழம் 1 கோல்500 கோல் 1 கூப்பிடு4 கூப்பிடு 1 காதம்
ஒரு கோலென்பது இரண்டடி நீளமுள்ளது. சிலம்ங்கேபின் அரங்கேற்று காதையில் கோலின் அளவு பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது:எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூனெறி மரபின் அரங்கம் அளக்குங்
கோலள விருபத்து நால்விர லாக
எழுகோ லகலத் தெண்கோல் நீளத்
தொருகோல் உயரத் துறுப்பின் தாகி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப்
பூதரை யெழுதி மேனிலை வைத்துத்
தூண்நிழற் புறப்பட மாண்விளக் கெடுத்தாங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியுங்
கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
95 உரை 113
அரங்கின் அமைதி]
(எண்ணிய......அரங்கத்து) எண்ணிய நூலோர் இயல்பினின் வழாது மண்ணகம் ஒருவழி வகுத்தனர்கொண்டு - எண்ணப்பட்ட சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கியற்றுதற்குக் குற்றம் நீங்கின ஓரிடத் திலே நிலம் வகுத்துக்கொண்டு, புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு - பொதியின் முதலாய திப்பிய மலைப்பக்கங்களிலே நீண்டு வளர்ந்த மூங்கிலிற் கண்ணொடு கண்ணிடை ஒரு சாணாக வளர்ந்தது கொண்டு, நூல்நெறி மரபின்
- நூல்களிற் கூறப்படும் முறையாலே, அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரல்ஆக - அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல் உத்தமன் கைப் பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவினதாக நறுக்கி, எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி - அக்கோலால் எழுகோல் அகலமும் எண் கோல் நீளமும் ஒருகோற் குறட்டுயரமும் உடையதாய், உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற் கோல் ஆக - தூணின்மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலளவினதாகவும், ஏற்ற வாயில் இரண்டு உடன்பொலிய - அவ்வளவுகட்குப் பொருந்த வகுக்கப்பட்ட வாயில் இரண்டு விளங்கவும், தோற்றிய அரங்கில் - செய்யப்பட்ட அரங்கிலே, தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல்நிலை வைத்து - நால் வகை வருணப் பூதரையும் எழுதி யாவரும் புகழ்ந்து வணங்க மேனிலத்தே வைத்து, தூண்நிழற் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு - தூண்களின் நிழல் நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் படாதபடி மாட்சிமைப்பட்ட நிலைவிளக்கு நிறுத்தி, ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்து உடன்வகுத்து ஆங்கு - இடத்தூண் நிலை யிடத்தே உருவு திரையாக ஒருமுக வெழினியும் இரண்டுவலத் தூணிடத்தும் உருவு திரைவாகப் பொருமுக வெழினியும் மேற் கட்டுத் திரையாகக் கரந்துவர லெழினியும் தொழிற்பாட்டுடனே வகுத்து, ஓவிய விதானத்து - சித்திர விதானத்தையும் அமைத்து, உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி - புகழமைந்த முத்துமாலைகளாற் சரியும் தூக்கும் தாம முமாகத் தொங்கவிட்டு, விருந்துபடக் கிடந்த அருந்தொழில்
ஒரு பெருவிரல் என்பது ஓர் அங்குலம். அப்படியானால் ஒரு கோலின் நீளம் இரண்டடி.விரல் என்று குறிப்பிடும் இடங்களிலெல்லாம் எந்த விரல் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது எல்லா இடங்களுக்கும் பொதுவாக பெருவிரலாகத்தான் கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போதைய அங்குலமும் இங்கிலாந்தின் ஒரு பழைய மன்னருடைய பெருவிரலின் நீளமே.ஆகவே ஒரு சாண் என்பது 12 விரல்கள் என்றால் எந்த விரல், அது நீளவாட்டில் வைத்து அளக்கப்பட்டதா அல்லது பக்கவாட்டில் வைத்து அளக்கப்பட்டதா என்பதும் சிந்திக்கற்பாலது.--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
On Saturday, April 29, 2017 at 10:01:39 PM UTC-7, Hari wrote:2017-04-30 8:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தமிழ்ச் சமணர்கள் இந்த யோஜனை அளவையை நன்கு எழுதியுள்ளனர். உ-ம்: காஞ்சி ஸ்ரீ அனந்தநாதநயினார், திருக்குறள் ஜைன ஆராய்ச்சி உரை, 1930யாப்பருங்கல விருத்தி இவ் வடமொழிச் சொற்களை தமிழாக்குகிறது:12 விரல் 1 சாண்2 சாண் 1 முழம்4 முழம் 1 கோல்500 கோல் 1 கூப்பிடு4 கூப்பிடு 1 காதம்யாப்பருங்கல விருத்தியில் 1 கோல் = 1 தண்டம் (ஒரு ஆளுயரம்) என்றும்,குரோசம் (கோசம்) என்பதை கூப்பிடு என்றும் , ஹஸ்தம் முழமென்றும்,யோஜனையை காதம் என்றும் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர்.
- நூல்களிற் கூறப்படும் முறையாலே, அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரல்ஆக - அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல் உத்தமன் கைப் பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவினதாக நறுக்கி, எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி - அக்கோலால் எழுகோல் அகலமும் எண் கோல் நீளமும் ஒருகோற் குறட்டுயரமும் உடையதாய், உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற் கோல் ஆக - தூணின்மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலளவினதாகவும், ஏற்ற வாயில் இரண்டு உடன்பொலிய - அவ்வளவுகட்குப் பொருந்த வகுக்கப்பட்ட வாயில் இரண்டு <span lan
ஆறகழூரில் கிடைத்த மைல்கல் அனுப்பிவைத்தமைக்கு ஆறகழூர் வெங்கடேசனுக்கு நன்றி பல. சேலம் தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது.காத அளவைக் கணக்கிட நல்லதோர் சான்று. 16 குழிகள் ஆறகழூருக்கும் காஞ்சிபுரத்திற்கும் 16 காதம்/யோஜனை என தெளிவாகக் குறிப்பிடும்அரிய கல்வெட்டு.A Dictionary Of The Tamil And English Languages, Volume 4
(ராட்லர் அகராதியில் 1 காதம் = 1 யோசனை என்பதற்கு 13 மைல் என்கிறார். இது கர்நாடக கல்வெட்டறிஞர் கூறும் அளவு. சென்னையிலும் இருந்ததாம்.உ-ம்: ஊர்ப்பெயர்களுக்கு இடையில் காதம் அளவை குறிப்பிடுவதைக் கணித்தால் 20 கிமீ என வருவது இது. இதனைக்கொண்டேகோவல கண்ணகியர் சந்திக்கும் கவுந்தி அடிகள் தவப் பள்ளி மதுரைக்கு வடக்கே ~360 மைல் (=30 காதம்) சையமலையில் என எழுதியுள்ளேன்.சிலம்பு நாடுகாண்காதை உரையில் அக்காதையில் உள்ள இடங்கள் எவை என விளக்கும்போது.)ஆறகழூர்க் கல்வெட்டில் 1 யோசனை = ~10 மைல் என்பது வாணாதிராசர்கள் கைக்கொண்ட கணக்கு.
<p class="MsoNormal" style="margin-top:1em;margin-bottom:1em;line-height:no