Fw: Pure Thamil words

262 views
Skip to first unread message

Ramasamy Gopalakrishnan

unread,
Jul 9, 2009, 9:47:40 AM7/9/09
to housto...@googlegroups.com
Very interesting and eye opening ...

----- Forwarded Message ----
From: Manohar Venkatachalam <mvenkat...@planoconsulting.net>
To: ahrc...@ahrcl.org
Sent: Wednesday, July 8, 2009 5:55:05 PM
Subject: Pure Thamil words



 இந்தக் கட்டுரைத் தொடர்  விகடன் இதழில் வெளிவருகிறது.
இங்குள்ள ஊடகங்கள் வடமொழிச் சொற்களை தாராளமாகப் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக விடயம், பிரஜை பேட்டி என்ற பிறமொழிச் சொற்களை சிரிஆர் சிஎம்ஆர் தமிழ் தொலைக்காட்சி பயன்படுத்துகின்றன. நயமாக எடுத்துச் சொல்லியும் பலன் இல்லாது இருக்கிறது.
என்ன செய்யலாம்?
 
நக்கீரன்

 

நமது பயன்பாட்டில் தமிழ் - 3.செந்தில்வேலன்.

அண்மையில் என்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
மதிய உணவுவேளையின் போது உறவினரின் மகன், "அம்மா 'சோறு' போடுங்க!!" என்றான். அதற்கு உறவினரோ, "சோறுன்னு சொல்லாதே. சாதம்னு சொல்லு..!" என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருந்தது.
"சாதம்" என்பது தூய தமிழ்ச் சொல் கிடையாது என்பது தான் வியப்புக்குக் காரணம்.
"சோறு" என்பதே தூய தமிழ்ச் சொல். "சாதம்" என்பது வடசொல் என்பது நமக்குத் தெரியுமா?
ஆனால், நமது பயன்பாட்டில் "சோறு" என்பது தரக் குறைவான சொல்!?
சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச் சொல்?
துப்புரவு தான் தூய தமிழ்ச் சொல். ஆனால் நாம், "துப்புரவு" என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவது, துப்புரவுத் தொழிலைக் குறிப்பிடுவதற்குத் தான். இப்படி, நமக்கு தெரியாமலேயே தூய தமிழ்ச் சொற்களுக்கு நாம் இரண்டாம் இடத்தையே தருகிறோம் என்பது சிறிது யோசிக்க வேண்டிய ஒன்று.
ஆசிர்வாதம் - வாழ்த்த
வாழ்த்து என்பதன் வடசொல்லே ஆசிர்வாதம். ஆனால் நமது பயன்பாட்டில், "பெரியோரின் காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும்" என்று கூறுவது மிகவும் அரிதே. அந்த இடத்தில், "ஆசிர்வாதம்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறோம்.
இது போல, நாம் பயன்படுத்தும் பல சொற்கள் வடசொற்களே. கீழே சில எடுத்துக்காட்டுகள் (உதாரணம் என்பது வடசொல்)
வடசொல் - தமிழ்ச்சொல்
அகங்காரம் - செருக்கு
அகதி - ஆதரவற்றவர்
அகிம்சை - ஊறு செய்யாமை
அங்கத்தினர் - உறுப்பினர்
அங்கீகாரம் - ஒப்புதல்
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகாரி - உயர் அலுவலர்
அநீதி - முறையற்றது
அபயம் - அடைக்கலம்
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்த
திங்க் (Think) பண்ணி, யூஸ் (use) பண்ணி, டிரைவ் (drive) பண்ணி என தமிழ் பேசுபவர்களுக்கு இந்தக் கட்டுரைத் தொடர் பிடிக்காமல் போகலாம். ஆனால், நல்ல தமிழில் எழுத, பேச முனைவோருக்கு இந்தத் தொடர் பயனளிக்கும் என்றே நம்புகிறேன்.
"ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!" என்று நமது நினைவுக் குறிப்புகளை எழுதுவது இன்று நம் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கு நாம் (என்னையும் சேர்த்து) கொடுக்கும் பெயர் "அனுபவக் குறிப்புகள்".
சின்ன வயதில் நாம் ஏதாவது குறும்பு செய்தோம் என்றால், வீட்டில் நம்மிடம் கூறுவது, "அத எடுக்காதன்னு சொன்னா கேட்க மாட்டீங்கற... உனக்கு பட்டாத்தான் தெரியும்!!". அதே போல, ஒருவர் வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறி இருந்தால், நாம் கூறுவது, "அவருக்கு பட்டறிவு அதிகம்," என்பது தான்.
"பட்டறிவு" என்ற தமிழ்ச் சொல்லின் வடசொல்லே "அனுபவம்".
நல்லதோ கெட்டதோ "பட்டால்" தானே நமக்கு மறக்க முடியாத நினைவாகிறது? ஆனால் இன்றைய பயன்பாட்டில் "பட்டறிவு" என்ற சொல்லையும் "அனுபவம்" என்ற சொல்லையும் வெவ்வேறு பொருளுக்குப் பயன்படுத்துகிறோம்.
வட இந்தியப் பெயர்களில், "அனுபவ்" என்ற சொல் வரும் போது, "பரவாயில்லையே தமிழ்ச் சொல்லை அங்கேயும் பயன்படுத்துகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அது எனது அறியாமை என்பது புரிகிறது.
("ஞாபகம்" என்பதே "நினைவு" என்பதன் வடசொல்லே!)
வட மாநிலங்களில் "கார்யாலயி" என்ற வார்த்தை பெரும்பாலான அலுவகங்களில் பார்க்க முடியும். அதையே நாம் "காரியம்" என்ற சொல்லால் பயன்படுத்துகிறோம்.
காரியம் - செயல
காரியம் என்ற வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் 'செயல்'.
காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்.
இங்கே, "காரியவாதி" என்ற சொல் "தனது செயலில் மட்டும் குறியாக இருப்பவரை" குறிக்கும்படி பயன்படுத்தும் வழக்கம் எப்படி வந்தது?
இலட்சணம் - அழகு
உனக்கு எப்படி பெண் தேட வேண்டும் என்ற கேள்வி வரும் போது, "அழகா, கண்ணுக்கு இலட்சணமா இருக்க வேண்டும்" என்று நாம் கூறுவது வழக்கம். இதனை, "அழகா, கண்ணுக்கு "அழகா" இருக்க வேண்டும்" என்று கூறுவதாகவே பொருள் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இலட்சணம் என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் அழகு.
மேலும் "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்ற வாக்கியத்தை தூய தமிழில், "நல்ல அலுவல் ஆண்மகனுக்கு அழகு!" என்று எழுதலாம்.
அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல
இன்று பெரும்பாலான கோயில்களில் "இங்கு தமிழில் அர்ச்சணை செய்யப்படும்" என்று எழுதி இருப்பதைக் காண்கிறோம்.
அர்ச்சணை என்பது மலரிட்டு ஓதுதல் என்பதன் வடசொல். இதே வரிசையில் கோயில்களில் பயன்படுத்தும் சில வடசொற்களுக்கான தமிழ்ச்சொல் கீழே...
வடசொல் - தமிழ்ச்சொல்
அனுக்கிரகம் - அருள் செய்தல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள்
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள
இந்த சொற்களை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, புதிதாக நமக்குத் தெரிந்தால் நல்லது தானே!
பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்புக்காகத் தயாராகும் போது, BARRON'S WORDLIST என்ற புத்தகத்தில் உள்ள சொற்களையும், அதன் அர்த்தங்களையும் மனப்பாடம் செய்வதைப் பார்க்க முடியும். அது போல நமது கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழிலும் ஒரு தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்?
அபூர்வம், அவசரம், அவகாசம், அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்..? அடுத்தக் கட்டுரையில் அலசுவோம்!
 
 
 
.செந்தில்வேலன்.
 
அண்மையில் என்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
மதிய உணவுவேளையின் போது உறவினரின் மகன், "அம்மா 'சோறு' போடுங்க!!" என்றான். அதற்கு உறவினரோ, "சோறுன்னு சொல்லாதே. சாதம்னு சொல்லு..!" என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருந்தது.
"சாதம்" என்பது தூய தமிழ்ச் சொல் கிடையாது என்பது தான் வியப்புக்குக் காரணம்.
"சோறு" என்பதே தூய தமிழ்ச் சொல். "சாதம்" என்பது வடசொல் என்பது நமக்குத் தெரியுமா?
ஆனால், நமது பயன்பாட்டில் "சோறு" என்பது தரக் குறைவான சொல்!?
*
சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச் சொல்?
துப்புரவு தான் தூய தமிழ்ச் சொல். ஆனால் நாம், "துப்புரவு" என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவது, துப்புரவுத் தொழிலைக் குறிப்பிடுவதற்குத் தான். இப்படி, நமக்கு தெரியாமலேயே தூய தமிழ்ச் சொற்களுக்கு நாம் இரண்டாம் இடத்தையே தருகிறோம் என்பது சிறிது யோசிக்க வேண்டிய ஒன்று.
*
ஆசிர்வாதம் - வாழ்த்த
வாழ்த்து என்பதன் வடசொல்லே ஆசிர்வாதம். ஆனால் நமது பயன்பாட்டில், "பெரியோரின் காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும்" என்று கூறுவது மிகவும் அரிதே. அந்த இடத்தில், "ஆசிர்வாதம்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறோம்.
இது போல, நாம் பயன்படுத்தும் பல சொற்கள் வடசொற்களே. கீழே சில எடுத்துக்காட்டுகள் (உதாரணம் என்பது வடசொல்)
வடசொல் - தமிழ்ச்சொல்
அகங்காரம் - செருக்கு
அகதி - ஆதரவற்றவர்
அகிம்சை - ஊறு செய்யாமை
அங்கத்தினர் - உறுப்பினர்
அங்கீகாரம் - ஒப்புதல்
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகாரி - உயர் அலுவலர்
அநீதி - முறையற்றது
அபயம் - அடைக்கலம்
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்த
திங்க் (Think) பண்ணி, யூஸ் (use) பண்ணி, டிரைவ் (drive) பண்ணி என தமிழ் பேசுபவர்களுக்கு இந்தக் கட்டுரைத் தொடர் பிடிக்காமல் போகலாம். ஆனால், நல்ல தமிழில் எழுத, பேச முனைவோருக்கு இந்தத் தொடர் பயனளிக்கும் என்றே நம்புகிறேன்.
"ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!" என்று நமது நினைவுக் குறிப்புகளை எழுதுவது இன்று நம் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கு நாம் (என்னையும் சேர்த்து) கொடுக்கும் பெயர் "அனுபவக் குறிப்புகள்".
சின்ன வயதில் நாம் ஏதாவது குறும்பு செய்தோம் என்றால், வீட்டில் நம்மிடம் கூறுவது, "அத எடுக்காதன்னு சொன்னா கேட்க மாட்டீங்கற... உனக்கு பட்டாத்தான் தெரியும்!!". அதே போல, ஒருவர் வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறி இருந்தால், நாம் கூறுவது, "அவருக்கு பட்டறிவு அதிகம்," என்பது தான்.
"பட்டறிவு" என்ற தமிழ்ச் சொல்லின் வடசொல்லே "அனுபவம்".
நல்லதோ கெட்டதோ "பட்டால்" தானே நமக்கு மறக்க முடியாத நினைவாகிறது? ஆனால் இன்றைய பயன்பாட்டில் "பட்டறிவு" என்ற சொல்லையும் "அனுபவம்" என்ற சொல்லையும் வெவ்வேறு பொருளுக்குப் பயன்படுத்துகிறோம்.
வட இந்தியப் பெயர்களில், "அனுபவ்" என்ற சொல் வரும் போது, "பரவாயில்லையே தமிழ்ச் சொல்லை அங்கேயும் பயன்படுத்துகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அது எனது அறியாமை என்பது புரிகிறது.
("ஞாபகம்" என்பதே "நினைவு" என்பதன் வடசொல்லே!)
வட மாநிலங்களில் "கார்யாலயி" என்ற வார்த்தை பெரும்பாலான அலுவகங்களில் பார்க்க முடியும். அதையே நாம் "காரியம்" என்ற சொல்லால் பயன்படுத்துகிறோம்.
காரியம் - செயல
காரியம் என்ற வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் 'செயல்'.
காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்.
இங்கே, "காரியவாதி" என்ற சொல் "தனது செயலில் மட்டும் குறியாக இருப்பவரை" குறிக்கும்படி பயன்படுத்தும் வழக்கம் எப்படி வந்தது?
*
இலட்சணம் - அழக
உனக்கு எப்படி பெண் தேட வேண்டும் என்ற கேள்வி வரும் போது, "அழகா, கண்ணுக்கு இலட்சணமா இருக்க வேண்டும்" என்று நாம் கூறுவது வழக்கம். இதனை, "அழகா, கண்ணுக்கு "அழகா" இருக்க வேண்டும்" என்று கூறுவதாகவே பொருள் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இலட்சணம் என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் அழகு.
மேலும் "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்ற வாக்கியத்தை தூய தமிழில், "நல்ல அலுவல் ஆண்மகனுக்கு அழகு!" என்று எழுதலாம்.
அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல
இன்று பெரும்பாலான கோயில்களில் "இங்கு தமிழில் அர்ச்சணை செய்யப்படும்" என்று எழுதி இருப்பதைக் காண்கிறோம்.
அர்ச்சணை என்பது மலரிட்டு ஓதுதல் என்பதன் வடசொல். இதே வரிசையில் கோயில்களில் பயன்படுத்தும் சில வடசொற்களுக்கான தமிழ்ச்சொல் கீழே...
வடசொல் - தமிழ்ச்சொல்
அனுக்கிரகம் - அருள் செய்தல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள்
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள
இந்த சொற்களை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, புதிதாக நமக்குத் தெரிந்தால் நல்லது தானே!
பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்புக்காகத் தயாராகும் போது, BARRON'S WORDLIST என்ற புத்தகத்தில் உள்ள சொற்களையும், அதன் அர்த்தங்களையும் மனப்பாடம் செய்வதைப் பார்க்க முடியும். அது போல நமது கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழிலும் ஒரு தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்?
அபூர்வம், அவசரம், அவகாசம், அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்..? அடுத்தக் கட்டுரையில் அலசுவோம்!

 


 

நமது பயன்பாட்டில் தமிழ் - 2

சி வருடங்களுக்கு முன் வந்த "என்ன அழகு, எத்தனை அழகு.." என்ற (நடிகர் விஜய் நடித்த) பாடல் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
இதில் "எத்தனை" அழகு என்று வரி சரியானதா? பல (எத்தனை) விதமான அழகை வர்ணிக்கிறார் என்றால் பரவாயில்லை. அதுவே, அழகை ("எத்தனை" என்று) அளக்கிறார் என்றால் தவறு தானே!!
நம் மளிகைக்கடைக்கு, தேங்காய் கேட்டு ஒரு வாடிக்கையாளர் வருகிறார். அவரிடம், "எத்தனை தேங்காய் வேண்டும்" என்று கேட்போமா? அல்லது "எவ்வளவு தேங்காய் வேண்டும்" என்று கேட்போமா?
எனக்கும் இது போன்ற சந்தேகங்கள் அடிக்கடி வரத்தான் செய்கிறது. இதனை பள்ளிப் பருவத்திலேயே படித்திருந்தாலும், மற்றுமொரு முறை தெரிந்து கொள்வது நல்லது தானே. நான் படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

********************************************************************

எத்தனை - எண்ணிக்கை
எவ்வளவு - அளவுகோல
சோறு தின்னறதா? உண்பதா?
அருந்துதல் - மிகச் சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து அருந்துதல்)
உண்ணல் - பசி தீர உட்கொள்ளல்
உறிஞ்சுதல் - வாயை குவித்து நீரியற் பண்டங்களை இழுத்துக் கொள்ளுதல்
குடித்தல் - சிறிது சிறிதாக பசி தீர உட்கொள்ளல். ஆக மது அருந்தினான் என்பதே சரியானது!
தின்னல் - சுவைக்காக ஓரளவு தின்னுதல் (முறுக்கு)
வான் நோக்க
தூவானம் - காற்றினால் சிதறப்படும் மழைத் திவலை
தூரல், சாரல் - சிறுதுளி மழை
மழை - பெருந்துளியாகப் பெய்வத
எப்படீங்க சொல்றீங்க?
சொல்லுதல் - சுருக்கமாகச் சொல்லுதல்
பேசுதல் - நெடுநேரம் உரையாடுதல்
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல் - பலரறியச் சொல்லுதல்
கொஞ்சுதல் - செல்லமாகச் சொல்லுதல்
பிதற்றுதல் - பித்தனைப் போல சொல்லுதல்
ஓதுதல் - காதில் மெல்லச் சொல்லுதல்
செப்புதல் - விடை சொல்லுதல்
மொழிதல் - திருத்தமாகச் சொல்லுதல்
இயம்புதல் - இனிமையாகச் சொல்லுதல்
வற்புறுத்தல் - அழுத்தமாகச் சொல்லுதல
எங்கே கொண்டாடறீங்க?
பண்டிகை - வீட்டில் கொண்டாடப்படுவது
விழா - வெளியிடத்தில் கொண்டாடப்படுவத

*********************************************************************

குழு - சிறு கூட்டம்
கூட்டம் - பலர் முறையாகக் கூடியிருப்பது
கும்பல் - முறையின்றைக் கூடுவத

*********************************************************************

பசுப் பால் - பசுவினது பால்
பசும் பால் - பசுமையான பால்

*********************************************************************

இதற்கு முந்தைய கட்டுரைகளில் நமது புழக்கத்தில் உள்ள வடசொற்களைப் பார்த்தோம். இதில் பிற நாட்டு சொற்களையும் பார்ப்போம்.
அலமாரி, ஜன்னல் (காற்று வழி), சாவி ( திறவுகோல்) போன்றவை போர்த்துகீசிய சொற்கள்.
அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும் கீழே..
அந்தஸ்து - நிலைமை
அலாதி - தனி
ஆஜர் - வருகை
இஸ்திரிப் பெட்டி - துணி மடிப்புக் கருவி
இனாம் - நன் கொடை
கறார் விலை - ஒரே விலை
கஜானா - கருவூலம்
கம்மி - குறைவு
காலி - நிரப்பப்படாமல் உள்ள நிலை
காலிப்பயல் - போக்கிரி
கிஸ்தி - வரி
கைதி - சிறையாளி
சரகம் - எல்லை (சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சர்க்கார் - அரசாங்கம்
சந்தா - கட்டணம்
சவால் - அறைகூவல்
சாமான் - பண்டம்
சிபாரிசு - பரிந்துரை
சிப்பந்தி - வேலையாள்
சுமார் - ஏறக்குறைய
ஜமீன் - நிலம்
ஜமீன்தார் - நிலக்கிழார்
ஜாஸ்தி - மிகுதி
ஜோடி - இண
தயார், அசல், பாக்கி போன்றவற்றுள் நல்ல தமிழ்ச்சொல் எது?
300 ரூபாயை எப்படி குறிப்பிடுவீர்கள்? முன்னூறு என்றா? முந்நூறு என்றா?
அடுத்தக் கட்டுரையில் காண்போம்!

நமது பயன்பாட்டில் தமிழ் - 2

நமது பயன்பாட்டில் தமிழ் - 2

 

 

 


Reply all
Reply to author
Forward
0 new messages