நந்திக் கொடி

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 4, 2025, 4:50:49 PMApr 4
to Santhavasantham
கோயில்களில் துவஜ ஆரோகணத்தின்போது கொடிகளில் ஓவியம் எழுதி உயர்த்தப்படுகின்றன. அனந்தை பத்மநாப சுவாமி திருக்கோவிலில், சிறிய திருவடி எழுதப்பட்ட கொடி இப்போது.
https://x.com/Ashwinsampathk/status/1907321638057840738
பெரிய திருவடி ஸ்தம்பம். கருட கம்பத்தில்  இப்போது ஏற்றப்பட்டுள்ள "சிறிய திருவடி" (அனுமன்)  கொடி காண்க.

"ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்து" - ஓவியத்துடன் எல்லாக் கோவிலிலும் கொடி ஏற்றப் படுகிறது. கருடக் கொடி பெருமாள் கோவிலில் ஏற்றியதை இளங்கோ அடிகள் சொல்லியுள்ளார். உவணச் சேவல் உயர்த்தோன்  நியமமும் (சிலப். 14, 8)
viL- > viNDu, viNNu, viSNu, solar deity, so, Garudan = kAvi(Tamil name for Garuda) flag. Ranga + kAvi = Langavi island (arangam = island, > Lanka)

மதுரைக் காஞ்சி:
365. ஓவு கண்டு அன்ன - சித்திரம் எழுதப்பெற்று, ஊரார் தரிசித்து வணங்கியும் அருள் பெற நிகழும் துவஜ ஆரோகணமும், அன்ன பிறவும் செய்யப் பெறும் இரு பெரும் நியமங்கள் (=கோயில்கள்)
கண்டு - தரிசித்து, வணங்குதல் என்ற பொருளில் வந்தது. அன்ன = Such or similar things, impers. pl.; அத்தன்மையானவை. — v. Are of the same kind, are similar, impers. pl. of finite appel. v.; ஓர் அஃறிணைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று. பிறவும் அன்ன.

366. நச்சர் உரை: சாறு அயர்ந்து எடுத்த உருவம் பல் கொடி-கோயில்களுக்கு விழாக்களை நடத்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும்,
இதனால் அறங் கூறினார்.

சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது நந்திக் கொடி. பல்லவ அரசர்களுக்கும், - அவர்கள் இலங்கைத் தீவுக்கு அளித்த பிராமி லிபியில் தான் சிங்களம், தமிழ் இரண்டும் எழுத்தறிவு பெற்றமை வரலாறு -, யாழ்ப்பாண அரசர்களுக்கும் நந்திக்கொடி தான்.கார்ஷபணத்தில் (Punch marked coins of India) உள்ள ஒரு குறியீடு பற்றி எழுதியுள்ளேன். எடுத்துக்காட்டாக, மதுரை பெருமணலூரில் கிடைத்த மௌரியர் காலக் காசு வைத்து விளக்கினேன். Times of India article. Instead of calling it as a Taurine symbol (by the British), it is appropriate to call them as Crocodilian symbol (மகரச் சின்னம்).

இந்தியாவின் எல்லா அரசர் வம்சாவளியினர் வெளியிட்ட நாணயங்களிலும், குதிரை (அ) காளை முன்னால் கொடிக் கம்பம் இருக்கும். அத்ஹில் கொடி என்பதாகச் சற்றே வளைத்துக் காட்டியிருப்பர். இங்கே, நாணய நிபுணர் பதிவில் மறுமொழி தந்துள்ளேன்.
சாதகர்ணி நாணயம். கொடி கட்டிய துவசம், காளை.
https://x.com/Param_Chaitanya/status/1892512854869258670
anonymous AE 1/6 karshapana, bull type Weight: 1.37 gm., Diameter: 11x10 mm. .Obv.: Bull to  right with Indradhvaja above; railed yupa (sacrifical post).  இக் காசைக் காட்டினேன்.
https://x.com/naa_ganesan/status/1904868543419596987

Unicorn seals are the most abundant in Indus civilisation (சிந்து-வானி நாகரிகம்).
https://www.harappa.com/blog/unicorn-sealings-and-seals
அதில் யூனிகார்ன் முன்னால் ஒரு சோம வடிப்பான் (sacrificial filter). Iravatham M. has two papers explaining this important artefact of Harappans. What is interesting is there is a symbol in Indus script for this sacrificial filter (not known to Iravatham). And, the same symbol is shown above the Zebu in the Karshapana coin given above. Also in some coins, with this Indradhvaja symbol, there is a Nandi face inside. I think the association of Nandi with MazhuvaaL Nediyon (Anthropomorphic Axe) becoming Siva temples, and Nandi banner is linked with the above Numismatics findings.

NG

N. Ganesan

unread,
Apr 9, 2025, 10:44:22 AMApr 9
to Santhavasantham
Architecture of Madurai in Paripadal
---------------------------------------
  பரிபாடலில் மதுரை
 
It will be nice to have a map (from Google maps etc., ) to have the Meenakshi - Sundaresvarar temple at the center, and the interior & exterior "aavaraNam" temples, a set of 4, one for each cardinal direction repeated twice. Total of 9 temples marked.

BTW, in Sangam literature, Madurai city is compared to a lotus flower out of the naabhi of Vishnu. In the pericarp of the lotus, there is Pandya king's palace. Like private Kula-devata shrines in the Hindu kings' palaces all over India inside the Maharajas' palaces, Meenakshi, the PaaNDya raaja tanayaa, is the family deity of Pandya kings. This is recorded in Greek chronicles onwards. Interestingly, the ParaipaaDal mentions "aNNal kOyil", where aNNal is the Pandyan king. Meenkshi temple inside the Palace grounds is not mentioned. "malayadhvaja pANDya rAja tanayE"
https://www.karnatik.com/c5800.shtml
mAtE malayadvaja pANDya samjAtE
https://www.karnatik.com/c1466.shtml
Dheekshitar krithis
https://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-English/BkE-Ravi-Sridhar-compld-Sri-Muthuswamy-Dikshitar-0169.pdf

Madurai temple history, and Maduraik Kaanjchi long poem represents a critical moment in the history of Saivism. The move from the aavaraNam temple to central palace can be thought from the  History of Religion angle. R. & M. Raghava Aiyangars have shown 110+ years ago that the original VithuvakkODu temple is a palace temple of the Cheras in Vanjci Maanagar (modern Karur). This theory on Vanji in Sangam era got confirmed by Archaeology in the 70's.  After Kulasekhara Azhwar's time, due to the rise of the imperial power of Chozhas, VithuvakkoDu temple gets shifted to the present place near Pattambi (on way to Guruvayoor). Here there is a Tamil inscription of Chozhas. I have visited the place few times. Same thing happened to Manickavasakar's Memorial temple: His own Tiruvachakam, Tiruppukazh songs tella Chozha country village where he obtained Shiva's grace. But being in the Chozha desam, Pandyas chose Avudauyar Koyil in their own country to build a Memorial temple for their celebrated minister.
https://nganesan.blogspot.com/2014/02/manickavasakar-and-chola-seashore-town.html


கோயில்களில் துவஜ ஆரோகணத்தின்போது கொடிகளில் ஓவியம் எழுதி உயர்த்தப்படுகின்றன. அனந்தை பத்மநாப சுவாமி திருக்கோவிலில், சிறிய திருவடி எழுதப்பட்ட கொடி இப்போது.
https://x.com/Ashwinsampathk/status/1907321638057840738
பெரிய திருவடி ஸ்தம்பம். கருட கம்பத்தில்  இப்போது ஏற்றப்பட்டுள்ள "சிறிய திருவடி" (அனுமன்)  கொடி காண்க.

"ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்து" - ஓவியத்துடன் எல்லாக் கோவிலிலும் கொடி ஏற்றப் படுகிறது. கருடக் கொடி பெருமாள் கோவிலில் ஏற்றியதை இளங்கோ அடிகள் சொல்லியுள்ளார். உவணச் சேவல் உயர்த்தோன்  நியமமும் (சிலப். 14, 8)
viL- > viNDu, viNNu, viSNu, solar deity, so, Garudan = kAvi(Tamil name for Garuda) flag. Ranga + kAvi = Langavi island (arangam = island, > Lanka)

மதுரைக் காஞ்சி:
365. ஓவு கண்டு அன்ன - சித்திரம் எழுதப்பெற்று, ஊரார் தரிசித்து வணங்கியும் அருள் பெற நிகழும் துவஜ ஆரோகணமும், அன்ன பிறவும் செய்யப் பெறும் இரு பெரும் நியமங்கள் (=கோயில்கள்)
கண்டு - தரிசித்து, வணங்குதல் என்ற பொருளில் வந்தது. அன்ன = Such or similar things, impers. pl.; அத்தன்மையானவை. — v. Are of the same kind, are similar, impers. pl. of finite appel. v.; ஓர் அஃறிணைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று. பிறவும் அன்ன.

366. நச்சர் உரை: சாறு அயர்ந்து எடுத்த உருவம் பல் கொடி-கோயில்களுக்கு விழாக்களை நடத்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும்,
இதனால் அறங் கூறினார்.

சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது நந்திக் கொடி. பல்லவ அரசர்களுக்கும், - அவர்கள் இலங்கைத் தீவுக்கு அளித்த பிராமி லிபியில் தான் சிங்களம், தமிழ் இரண்டும் எழுத்தறிவு பெற்றமை வரலாறு -, யாழ்ப்பாண அரசர்களுக்கும் நந்திக்கொடி தான்.கார்ஷபணத்தில் (Punch marked coins of India) உள்ள ஒரு குறியீடு பற்றி எழுதியுள்ளேன். எடுத்துக்காட்டாக, மதுரை பெருமணலூரில் கிடைத்த மௌரியர் காலக் காசு வைத்து விளக்கினேன். Times of India article. Instead of calling it as a Taurine symbol (by the British), it is appropriate to call them as Crocodilian symbol (மகரச் சின்னம்).

மதுரைக் காஞ்சியின் இரு பெரும் நியமம்: (1) கூடல் அழகர் கோயில் (இருந்தையூர்) (2) மீனாட்சி கோயில் (பாண்டியன் அரண்மனை).

அண்ணல் கோயில் என்பது பாண்டிய மன்னன் அரண்மனை.  மாயோன் கொப்பூழில் மலரும் தாமரையாகச்  சிவபெருமான் கோவில் இருந்தது எனச் சங்கப் பாடலில் கருத்து இராது.
பாண்டியன் அரண்மனையில் இருந்த குலதெய்வக் கோயில், மீனாட்சியினது. வஞ்சி மாநகரில் அரண்மனையில் வித்துவக்கோடு பெருமாள் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களை எழுதியுள்ளனர். இன்னொன்று: இங்கிலாந்து அரண்மனைகள், ஐரோப்பிய அரண்மனைகளில் உள்ள Chapel போல எனலாம்.

"சங்ககாலத்தில் ‘மழுவாள் நெடியோன்’ நியமத்தை வடகிழக்கிலும், திருமால் நியமத்தை மேற்கெல்லையிலும் கொண்டிருந்த மதுரை *பின்னர்* மழுவேந்திய சிவனுக்குரிய ஆலவாய் என்று பெயர் பெற்ற கோவிலை ஊரின் நடுவிடமாகக் கொண்டு விரிந்துள்ளது. " (Dr. ச. கண்மணி)

ஆம். மழுவாள் நெடியோன் (மதுரைக் காஞ்சி) இருந்த இடம் பொதுவாக சுடலை ஆகும். See the Anthropomorphic Axe sculptures in burial sites with stone circles. I've written in papers. பழய சொக்கநாதர் (ஈசான திசை). பரிபாடலின் காலத்தில் , ஈசான திசையில் இருந்த மழுவாள் நெடியோன், சிவனாகி பாண்டியன் அரண்மனைக்குள் கோயில் ஏற்படாத காலம். மாயோன் கொப்பூழில் அண்ணல் கோயில் = பாண்டியன் அரண்மனை. இப் பரிபாடல் திரட்டுப் பாடல், விஷ்ணு ரூபமாய் அரசன் இருப்பதைப் பாடுகிறது. இது பழைய வடமொழி  Concept. The Sanskrit quote "यथा विष्णु तथा राजा" (Yathā Viṣṇu tathā rāja) translates to "As is Vishnu, so is the king" or "The king is like Vishnu". This phrase highlights the divine authority and responsibility attributed to a king in some traditional Indian contexts, drawing parallels to the role and attributes of Vishnu. "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்" - நம்மாழ்வார்.  பரிபாடலும், வேத நெறி வளரும் மதுரையைக் கூறுகிறது.

https://www.muthukamalam.com/essay/general/p226.html
"சங்ககாலப் பாண்டியர் காலத்தில் நீலக்கோடுகளுக்கு நடுவில் இருந்தது மீனாட்சி கோவில் அல்ல. அது பாண்டியன் கோயிலாக இருந்தது. கோ என்றால் அரசன். இல் என்பது இல்லம். இதுவே சங்ககாலப் பாண்டியர் அரண்மனை.

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்” - பரிபாடல் திரட்டு 7/1-4

என்ற பரிபாடல் அடிகளில் காணப்படுவது போல, தாமரையின் இதழ்களாய் நான்கு பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் தெருக்களுக்கு மத்தியில் அதன் பொகுட்டைப்போலப் பொலிவுடன் இருந்தது மன்னனின் அரண்மனை. இங்குக் குறிப்பிடும் அண்ணல் என்ற சொல் பாண்டிய மன்னனைக் குறிப்பதாக அனைத்து உரைகாரர்களும் கூறுகின்றனர்." - பேரா. ப. பாண்டியராஜா
http://sangacholai.in/Essays-4.6A.html

https://www.tamilvu.org/library/l1251/html/l1251a15.htm
இப் பரிபாடலின்கண்
எடுத்துக் கூறிய மாயோன் கொப்பூழ் மலர்ந்த தெய்வத்தாமரை சிறப்பும்
நலமும் நிலைக்களனாகப் பண்புபற்றிப் பிறந்த உவமையாம். உவமை
"உயர்ந்ததன் மேற்றே" என்ற விதிப்படி நோக்குங்கால் இதனினும்
உயர்ந்ததோருவமை தேர்தல் அரிதேயாகும். பொதுக்காட்சிக்குத்
திருமாலின் திருவுந்தித் தெய்வத் தாமரையை ஒத்துத் திகழும் அம்
மதுரைமாநகரத்தே நிரலாக அமைந்துள்ள தெருக்கள், அத் தாமரையின்
அகவிதழ்கள் போன்றன என்றும், அத் தெருக்கள் தன்னைச் சூழ
நடுவண் அமைந்துள்ள பாண்டியன் அரண்மனை அத் தெய்வத் தாமரை
மலரின் அகத்தே அமைந்துள்ள அரிய பொகுட்டை ஒக்கும் என்றும், - பொ.வே.சோ.

https://ta.wikisource.org/wiki/பழந்தமிழர்_கட்டடக்_கலையும்_நகரமைப்பும்/மதுரை_நகரம்

https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2024/Oct/06/a-lotus-bloomed-in-mayons-cassava
https://inithal.blogspot.com/2016/11/blog-post_10.html
"சங்க இலக்கியத்தில் சங்ககாலப் புலவர்கள் கோயிலையும் கோட்டத்தையும் மிக அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். உயர்ந்த கோபுரங்களுடன் கட்டும் அரண்மனைகளையும் கோயில் எனச் சங்கத்தமிழர் அழைத்ததை பரிபாடலில் உள்ள பரிபாடல் திரட்டு
“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்”
                                                                - (பரிபாடல் திரட்டு 7: 1 - 4)
எனச் சொல்வதால் அறியலாம். மாயவன் ஆன திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரைப் பூப்போல இருப்பது செல்வம் நிறைந்த மதுரை[சீர் + ஊர் = சீரூர்]. தாமரைப்பூவில் உள்ள இதழ்களைப் போன்றன தெருக்கள்[தெருவம்]. இதழ்களின் இடையே உயர்ந்து பீடம் போல் கொட்டைகளைத் தாங்கி நிற்கும் பொகுட்டு போன்றதே அரசனின்[அண்ணல்] அரண்மனை[கோயில்]. "

பண்டித வித்வான் ச. சாம்பசிவனார் பரிபாடல் பாட்டுக்கு நல்ல விளக்கம் தந்துள்ளார். பார்ப்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 10, 2025, 12:03:23 PMApr 10
to Santhavasantham
தமிழின் அழகான பாடல்களில் ஒன்று, பரிபாடலில் உண்டு.


மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்

இதழகத் தனைய தெருவம் இதழகத்
தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்   5
தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம வின்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்   10
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே.
https://www.tamilvu.org/slet/l1251/l1251pag.jsp?pgno=407

நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் மாணவர், மதுரைப் புலவர் ச. சாம்பசிவன்.
மதுரைத் திருக்கோயில்.  The Madurai Temple Complex,
திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், Kumbabhisheka Souvenir, 1974
பண்டித வித்வான் மதுரை ச. சாம்பசிவனார் அளிக்கும் விரிவான விளக்கம் பார்ப்போம்.
https://x.com/naa_ganesan/status/1909989799055831100

4 pages scanned are given. I will place the plain-text version also.

N. Ganesan

On Wed, Apr 9, 2025 at 9:43 AM,

N. Ganesan

unread,
Apr 27, 2025, 11:40:54 AMApr 27
to Santhavasantham, Sundararajan Kidambi, K Rajan, George Hart, Santhalingam Chockaiah, Sridharan Krishnappa, Vedachalam V, padmavathy A, veerara...@gmail.com
ஶ்ரீதர் > சீதன், நக்கர் > நக்கன்
----------------------------------

சீதரன் (< ஶ்ரீதர) திருப்பெயர்.  கம்பன், அருணகிரி, ... எல்லோரும் சீதரன் பாவிப்பதுண்டு. சிரீதரன் பாசுரங்களில் உண்டு. சீதரன் ஆழ்வார்கள் பாடினரா எனப் பார்க்கவேண்டும்.

ஸ்ரீதர் என்னும் சொல்லைச் சீதன் எனத் தமிழ்ப் படுத்தியுள்ளனர் புலவோர். இது "நக்கர்" > நக்கன் எனத் தமிழாதல் போன்றது. விடங்கர் > விடங்கன்.  ஞெகிழ்-தல்/நெகிழ்தல் >>  நகர்தல் எனும் வினையடிப் பிறந்த தொழிற்பெயர் "நக்கன்" என்று தமிழ்ப்படுத்துவது போலாகும். நக்கர் = Gharial. Cf. நாக்ர - முதலை. மதுரை திருப்பரங்குன்றம் அழகிய தமிழ் பிராமிக் கல்வெட்டு. விரிவான விளக்கம் அறிய,
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n5/mode/2up
பாண்டியன் பெருவழுதி நாணயத்தில் குளக்கரையில் உள்ள விடங்கர் பற்றி விளக்கியபோது, சென்னைப் பல்கலை அரங்கில் கட்டித் தழுவிப் பாராட்டிப் பேசினார், டாக்டர் ரா. கிருஷ்ணமூர்த்தி (Fellow, Royal Numismatics Society).
https://nganesan.blogspot.com/2013/10/pandya-peruvazuti-coin.html
Figure 1.  PĀṆḌYA Peruvazhuti Ashvamedha coin, 3rd century BCE (Note Makara crocodile outside water pond).
https://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html
கீழடியில் (பெருமணலூர்) கிட்டிய மோரியர் காசு:
https://nganesan.blogspot.com/2022/01/crocodilian-symbol-in-pre-mauryan-coins.html

       நம்மாழ்வார் திருவிருத்தம்
வேதனை வெண்புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலம் தத்தும்
பாதனை பாற்கடல் பாம்புஅணை மேல் பள்ளிகொண்டருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே

பாம்பணை மேல் பள்ளிகொண்டருளும் சீதன் =  ஶேஷஶாயி ஶ்ரீதரன் (Śēṣaśāyi Śrīdhara). சீதன் < சீதரன்.

-----------

மதுரைக் காஞ்சியில் "இருபெரும் நியமம்" என்பது இரண்டு பெருந்தெய்வக் கோயில்கள் (பேரா. ச. கண்மணி). ஒன்று, பாண்டியன் அரண்மனை, ஊரின் நடுவே உள்ளது. பாண்டியருக்கு மலயம் துவஜம்.  பாண்டிய ராஜ புத்திரி மீனாக்ஷி. சங்க காலம் மருவிய பின் சொக்கநாதர் மருமகனாக பாண்டியராசாக்களின் அரண்மனைக்குள் வந்துள்ளார். இது 4-ம் நூற்றாண்டு வாக்கில் எனலாம். சங்க காலத்தில் அவர் வருண லிங்கமாக இருந்தபோழ்து இருந்த இடம் ஈசான திசையில் உள்ள பழைய சொக்கநாதர் கோயிலில் வாசம். இரு பெரும் நியமக் கடவுளருக்கு கலியாணம் ஆண்டுதோறும் 2000 வருடமாக பெருந் திருவிழாவாக நிகழ்ந்துவருகிறது. இது ஹிந்துக்களின்  https://en.wikipedia.org/wiki/Hieros_gamos  . வேளாண்மையின்ஆண்டுதோறும் சுழற்சியில் இவ்விழா. இதனை கிரேக்க சோனகாச்சாரியர்கள் எழுதியுள்ளனர். முழுவடிவம் கிடைக்கவில்லை. கிடைக்கும் பகுதிகளை வைத்துப் பார்க்கலாம். இருபெரும் நியமத்தின் ஆதி தெய்வங்களின் ஜோடி, திருப்பரங்குன்றம் பிராமிக் கல்வெட்டால் தெரிகிறது. 2200 ஆண்டுப் பழமை எனலாம். இரு பெரும் நியமத் தம்பதி, "மூ நாக்ர - மூ சக்தி" என அழைக்கப்பட்டிருப்பமை ஓர்க. 2200 வருடங்கள் முன்னரே, மூ - மூத்த தெய்வங்கள் என அறிவித்துள்ளனர். இன்றும் தொடர்ச்சி இருக்கிறது. என்றும் இருக்கும். கிரேக்க தேசத்து யவனாசிரியர்கள் இருபெரும் தெய்வத் திருமணம் பற்றி ஓர் குறிப்பைத் தந்துளர். எது எவ்வகைப் பட்ட திருமணம்? தேவதத்த பட்டநாயகன் கட்டுரையில் குறிப்பு உள்ளது. தேவ்தத்துக்கு மதுரைக் கல்யாணம் பற்றித் தெரியாது, குறிப்பிடவுமில்லை.
https://devdutt.com/ancient-incest-in-the-sky/
தேவ்தத் சொல்லும் கதையைக் காட்டும் சிந்துவெளி முத்திரை. யாரும் விளக்கவில்லை (ஐராவதம், பார்ப்போலா உட்பட) , சில குறிப்புகள் இவ்விழையில் தந்துள்ளேன். ஆராய்க:
https://x.com/naa_ganesan/status/1915722469303857514

இருபெரும் நியமத்தில் ஒன்றான பாண்டியன் அரண்மனை பற்றிய பரிபாடல்:

      மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
      பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்
      இதழகத் தனைய தெருவம் இதழகத்
      தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
      தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்   5
      தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்
      பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
      நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
      ஏம வின்றுயில் எழுதல் அல்லதை
     வாழிய வஞ்சியும் கோழியும் போலக்   10
     கோழியின் எழாதெம் பேரூர் துயிலே.

விளக்கவுரை, மதுரைப் புலவர்கள், மீனாக்ஷி கும்பாபிஷேக மலரில் (எ-டு: வித்துவான் ச. சாம்பசிவனார், மதுரை) எழுதியது. மேலும் மதுரைப் பேரா. ப. பாண்டியராசா விளக்கம்,
https://groups.google.com/g/vallamai/c/wmhlUZFHSKA/m/yOIlGjJkCQAJ

இரு பெரும் தெய்வத்தில், ஆண் கடவுள் ஹெராக்கில்ஸ் என்றனர் கிரேக்க சோனகாச்சார்யர்கள். அது யார்?- என, இரு நூற்றாண்டாய் 20 இந்தியவியல் பேராசிரியன்மார் எழுதியுள்ளனர். அனைவரும் ஹெராக்கில்ஸ் = கிருஷ்ணன் என்று முடிவுசெய்ய, ஜேம்ஸ் டாட்  (Tod) மட்டுமே பலராமன் என வேளாண் கடவுளைச் சொன்னார். அதனை எடுத்து விரிவு செய்தார் அசோகன் பார்ப்போலா. ஆனால், என் ஆய்வு முடிவு வேறு. சங்க நூல்களும், பிராமிக் கல்வெட்டுகளும், பிராமி கொண்ட காசுகளும் துணையாகக் கொண்டால் கிரேக்க யவானாசிரியர் கூற்று விளங்கும். மேலே காட்டிய பரிபாட்டைப் பாருங்கள். வேத நெறி சேரர் தலைநகர் வஞ்சி, சோழர் தலைநகர் உறந்தையை விடப் பன்மடங்கு செழித்த மதுரை மாநகரில் Hieros Gamos வருஷாந்திரப் பெருவிழா பாண்ட்யராஜ தநயைக்கும், மழுவாள் நெடியோனுக்கும் (Anthropomorphic Axe) ஆனது என்பது தெளிவு.    ஆதாரம்: மருதங்குடி கிழார் பாடின மதுரைக்காஞ்சி.

பழைய, புது திருவிளையாடற் புராணங்கள் கிரேக்கர் குறிப்புகட்கு 1400+ ஆண்டுக்காலம் பின்னர் எழுந்தவை. இன்று சித்திரைத் திருவிழாவாக திருமலை நாயக்கர் திருவிழா தினத்தை மாற்றினார்.  விரிவான கட்டுரை எழுத உத்தேசம்.

பிற பின்! அன்புடன்,
நா. கணேசன்

குறைவொன்று மில்லாத கோவிந்தா          
      நிரைகாக்குங் கொடைவள்ளல் கோபாலா
சிறைவென்ற வசுதேவன் திருமகனே          
      திருவாழுந் திருமார்ப சீதரனே  
நிறைகொன்ற பார்த்தனுக்குச் சாரதிநீ      
      நிறைகின்ற கருவண்ணச் சுந்தரனே
குறைகின்ற கயிறுக்கும் பணிவாயே      
     குணவதியின் மைந்தா தாமோதரனே
     - கிடாம்பி அழகரசன், சென்னை, Chess Grandmaster.
Reply all
Reply to author
Forward
0 new messages