சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது பக்கவிளைவுகள் இல்லாமல் இலக்கைமட்டும் தாக்குவது.
--அமெரிக்காவில் இருக்கும் ஆசுடின் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த, பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கருத்தரங்கத்தில் எழுத்தாளர் பெருமாள்முருகன் உரையானது எமது சிந்தனையை இன்னும் வலுவாக்கிவிட்டது. பொதுவாகவே சொல்லுக்கு சொல் மொழிபெயர்ப்பது என்பது இணையத்தில் வெகுவாக நடக்கும் ஒன்றுதான். அத்தகைய போக்கே,, இலக்கிய நூல்களிலும் இடம் பிடிக்கிறது என்பதை அறிய வரும்போது வருத்தமாக இருக்கிறது. சொல்லுக்குப் பின்னால் இருக்கும் பண்பாட்டு விழுமியம், ’இடம், பொருள், ஏவல்’ கருதிவரும் உறுபொருள் முதலானவற்றை இழக்க நேரிடுகிறது. தமிழ்சார்ந்த பன்னாட்டு அரசாங்கங்கள் இணைந்து ஒரு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களிடையே வாசிப்புப்பழக்கம் பெருக வேண்டும். வணிகம், தன்விளம்பரம் முதலானவற்றை ஒதுக்கிவிட்டு, சொல்லாக்க முனைப்புகளுக்கு உரிய புரவுதொகையைப் புரவலர்கள் அளிக்க முன்வர வேண்டும்.”surgical strike, துல்லிய தாக்குதல்” என இணையத்தில் பார்க்க நேரிடுகிறது. தூய தமிழில் எழுத வேண்டுமென்கிற நாட்டம், உவப்புக்குரியவொன்றுதான். ஆனால், முனைந்த செயல் வெற்றி பெற்றிருக்கிறதாயென்றால், இல்லையென்றே சொல்ல வேண்டும். accurate attack, pricison attack என்றெல்லாம் சொல்ல நேரிடும்போதும் நாம் ’துல்லிய தாக்குதல்’ என்றே சொல்ல நேரிடும்.அதிரடி, சொல்லின் ஓசையிலேயே நாம் அதிர்வினைக் காணமுடிகிறது. அதற்குக்காரணம், ’அதிர்’ எனும் சொல்லின் வெற்றிதான். அதுபோல, நாங்கள் கிராமத்து இட்டேரிகளில் பள்ளிக்குச் செல்லும் போது சக மாணவனோடு/மாணவர்களோடு சண்டையிட்டுக் கொள்வது, கொழுவிக்கொள்வது வழமைதான். அப்படியான கொழுவலின் போது இடம் பெறும் தாக்குதல் முறைகளில், செயல்களில், ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சொல் உண்டு.1.விளார் எடுத்து விளாசு விளாசிட்டான்.2.கொப்பெடுத்து சாத்துசாத்துன்னு சாத்திட்டான்.3.சில்லுல நெமைக்குறதுக்குள்ள குத்திட்டான்.4.கம்பெடுத்து ஓச்சிட்டான்.5.கல்லெடுத்து ஒரே வீக்கு வீக்கிட்டான்.இப்படி இனியும் என்னவெல்லாமோ தனிச்சொற்கள், நுண்மைக்கான சொற்கள் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, விழுமியம், இடம் பொருள் ஏவல் மதிப்பீடு கொண்டு சொற்களை அடையாளப்படுத்துதல் பயனைக் கொடுக்கும். surgical strike என்பது, விரைவையும், இலக்கினைச்த் சரியாக இனம்கண்டு தனிமைப்படுத்தித் தாக்குவதையுமே குறிக்கிறது. கல்லெடுத்து வீசினான் மண்டை உடைந்து விட்டது என்பதற்கும், கல்லெடுத்து வீக்கினான் பல்லுடைந்து விட்டது என்பதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. இரண்டுக்குமே உள்ள ஒற்றுமை தாக்குதல் என்பதுதான். ஆனால், வீசியதென்பது தோராயமான தாக்குதல். வீக்கினானென்பது, விரைவும் இலக்கும் ஒருசேரப் பொருந்தி வருவது. இப்படிச் சரியானதொரு சொல், தமிழில் இருக்கும். அறிஞர்கள்தாம் துழாவிப் பார்த்துச் சொல்ல வேண்டும். அல்லாவிடில், தமிங்கலமே மேலெனப் போய்விடுவான் எழுத்தாளன். இஃகிஃகி!!-பழமைபேசி
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Thu, Oct 12, 2017 at 5:14 PM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது பக்கவிளைவுகள் இல்லாமல் இலக்கைமட்டும் தாக்குவது.கற்காலத்தில் இதுபோன்ற தாக்குதலைச் செய்து காட்டுப்பன்றிகளை வீழ்த்தினர்.hog (or, boar) hunting with spear என யுட்யூபில் பார்க்கலாம்:இதனை, கொங்குநாட்டில் சையமலையோர கிராமங்களில் சில கோவில்களில்திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். சலாகைக்குத்து என்பர். சலாகை - கூர்மையான ஆயுதம்.ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் = சலாகைக்குத்து, சலாகைத்தாக்கு- பழைய சொல் மறையாமல் இருக்க உதவும்.
1.விளார் எடுத்து விளாசு விளாசிட்டான்.2.கொப்பெடுத்து சாத்துசாத்துன்னு சாத்திட்டான்.3.சில்லுல நெமைக்குறதுக்குள்ள குத்திட்டான்.
4.கம்பெடுத்து ஓச்சிட்டான்.
2017-10-14 5:11 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>://கொங்குநாட்டில் கண் இமை என்று சொல்லிக் கேட்டதில்லை. இமையைச் ”சூடு” என்பது வழக்கம்.//சூடு என்பது கண்ணிமை அல்ல; கண்நோய்.இல்லை. ஒருசொல்லுக்குப் பல்பொருள்கள் உண்டு.விளா என்றால் விளாங்காய்/கனி, ஆனால், ஏர் ஓட்டும் தோட்டத்தில் விளா என்றால் furrow.சிலம்பு, திருவாசகம் ...யால்- என்றால் விழுது/வடம். வடம்போல் உள்ள துதிக்கையால் யால்- யானை என்ற சொல்.ஆலமரத்துக்கும் யால்- ‘விழுது’ கொண்டு பெயர் அமைந்தது. வடக்கே, வட வ்ருக்ஷம் என்பது,இதில் வட- இந்த யால்/ஆல் தான். யகரம் பல மொழிகளில் சகரம் ஆகிவிடும்:யாவகம் > சாவகம். யாமை > சாமெ, ... அதுபோல், யால்- > சால்- என்றாகும்.கள்ளிறக்குதலுக்கு மரம் ஏற முக்கியமானது பாளைக்கத்தியும், சால் என்னும் கயிறும்.எனவே, சான்றாண்மை = கள்ளிறக்கல் தொழில். சான்றார் = ஈழுவர் (கள்ளிறக்குவோர்) ...கால்- : to walk, to move, to pass by, to eject'. எனவே, கான்றுதல் = காலுதல் (சாலுதல் > சான்றுதல்,சால் போடுதல் விளாவில் வித்து விதைப்பது, மழைக்காலத்தில் ஏர்ப் பூட்டி).கத்துந் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்திற்
கான்ற மணிக்கு விலையுண்டுஇப்பொழுது, பலருக்கும் (டவுன்வாசிகளுக்கு விளா என்றாலோ, சால் என்றாலோ தெரிவதில்லை.விளா - horizontal; சால் - vertical phenomenon. சால் மிடாவில் இருந்து சொட்டுச்சொட்டாய் கடலை முத்துசால் போடுவது போல் நீர்விழும் - மிக மெதுவாய். அதனால் சால். கமலையைக் ’கவலைஇறைத்தல்’ எனக் கொங்குநாட்டில் சொல்வோம். தோலால் செய்த தூம்பு வடம் போல் இருக்கும்,நீரை இறைத்துக் கொட்ட. எனவே, இதுவும் சால் என்கிறோம். கமலையேற்றம் படம்பழமை கொடுத்துள்ளார். பார்க்கவும்.
--------------பழமையான ஆட்சி: சூடு என்றால் நிமை(> இமை). சூழ்தல் என்னும் வினைச்சொல்லில் பிறப்பது.வெப்பம் என்ற பொருளில் உள்ள சூடு பற்றி நான் இங்கே பேசவில்லை. அச்சொல்லை நன்கறிவேன்.சூடு ‘வெம்மை’. சுள்-/சுடு/சுண்டு என்ற சொற்களின் நீட்சி அது. உஷ்ணம் என்ற சொல்லின்பிறப்பும், இந்திய மொழிகளில் ரெட்ரொஃப்லெக்ஷன் - Retroflexion is a deep structural phenom in Indic due toDravidian, and is demonstrated by the presence of -L-/-N-/-D- word sets - பற்றியும் எழுதியுள்ளேன்.NG
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
------------------------------------------------------------------எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்லஎதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டுஎதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!----------------------------------------------------------------எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.comதமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
On Friday, October 13, 2017 at 9:28:10 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:அவனை ஒரே "செங்குத்தில்" வீழ்த்தினான் என்ற சொல் எங்கள்நெல்லைச்சீமையில் புழங்குவதுண்டு.குறி பார்த்து நெற்றி அடி அடிப்பதையே இது குறிக்கிறது.மேலும் செங்குத்து என்பது 90 டிகிரி தாக்குதல் கீழ் நோக்கி அல்லது மேல் நோக்கி அல்லது எப்பக்கத்திலிருந்தும் அதே செங்கோட்டில் (பெர்பெண்டிகுலர்) குத்துதல் ஆகும்."சர்ஜிகல் ஸ்ட்ரைக்" அதுவாக இருக்கலாம்.செம்+குத்து = செங்குத்து. செமைக்குத்து என்றும் சொல்கிறோமே.
_________________________ருத்ரா இ.பரமசிவன்
கொங்கு வட்டாரச் சொல்லகராதி, தொகுப்பும் பதிப்பும்: பெருமாள் முருகன்குருத்து வெளியீடு, மே 2000, கோபிசெட்டிபாளையம், விலை ரூ. 60பக்கம் 89:”சூட்டு மயிர்- பெ. கண்ணிமை முடி. ‘சூட்டு மயிரில பூளை கட்டிக் கெடக்குது.’சூடு - பெ. 1. கண்ணிமை. ‘சூடு வீங்கியிருக்குது,’ “