கிராந்தி தேப்பிள்ளை அளித்த புத்தர் சிலை - சோழர்காலக் கொடைக்கல்வெட்டு (Donor inscription)

20 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 25, 2015, 8:28:29 AM9/25/15
to மின்தமிழ், drbjamb...@gmail.com, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, K Rajan, Ramachandran Nagaswamy, Subbarayalu Yellava, Karanthai Jayakumar, vallamai, housto...@googlegroups.com, Santhavasantham
தமிழ்ப் பல்கலையின் முனைவர் பா. ஜம்புலிங்கம் பல அரிய சோணாட்டுப் புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து அழகாக ஆவணஞ்செய்துவருகிறார். அரிய வலைச்சுவடி அவரினது. கொங்குநாட்டு துரை. சுந்தரமவர்களும் நல்ல கல்வெட்டுக்களை வலைச்சுவடியில் பதிவுசெய்கிறார். இன்னும் பலர் முனைந்தால் அழிவின் விளிம்பில் இருப்பன ஒளிப்படங்கள் ஆகும். தமிழின், வரலாற்றின் அரிய செய்திகள் ஆராயப்படும்.

தமிழில் தே/தீ என்பன இனிமை என்னும் பொருளுடைய ஓரெழுத்துமொழி ஆகும். தே = இனிய ‘sweet, pleasant'. இந்த ஓரெழுத்துமொழி பற்றி விரிவாகச் சொல்லியுள்ளேன். மீன் என்ற ஈரெழுத்துத் தனிச்சொல்லுக்கும், ஓரெழுத்தில் அமையும் தே என்ற தனித்தாதுவேருக்கும் அவை புணரும்முறைகளால் வேறுபாடு காணலாம்:
தே+சாடி = தேச்சாடி, தே+குடம் = தேக்குடம், தே+முரி = தேமுரி, தே+மொழி = தேமொழி, ...

இளம்பூரணர் சொல்கிறார் தே ‘இனிமை’யின் பின் -த்த்- சேரும் என.
தே + த்த் + இறால் = தேத்திறால்;  தே + த்த் + அடை = தேத்தடை; தே + த்த் + ஈ = தேத்தீ

தே எனுந்தாது -ம் (அ) -ன் விகுதி ஏற்றல் போல் -ல் விகுதியும் ஏற்கிறது போலும்.
தேல் + இறால் = தேற்றிறால்/தேத்திறால்; தேல் + அடை = தேற்றடை/தேத்தடை; தேல் +ஈ = தேற்றீ/தேத்தீ என்க

பௌத்த சுவட்டைத் தேடி : கிராந்தி

முனைவர் பா. ஜம்புலிங்கம் குழுவினர் கண்டெடுத்த கிராந்தி என்னும் ஊரின் வெளியே கிடக்கும் முகம் சிதைக்கப்பட்ட புத்தர் சிலையை அளித்த நன்கொடையாளி “கிராந்தி தேப்பிள்ளை” என்பவர் ஆவார்.  அப்பொழுது, இரட்டைச்சுழிக் கொம்பு இல்லை. குறிலைக்குறிக்க ஒற்றைச்சுழிக் கொம்பின்மேல் புள்ளியும் இல்லை. எனவே, தெப்பிள்ளை என்று படிப்பது தவறு, பொருளும் இல்லை. ஆனால், தே என்றால் இனியன் என்ற பொருள் உண்டு. தீயன் என்ற சொல் (= இனிமையானவன், தீங்கனி, தீஞ்சாறு, ...) தமிழின் முதல் கல்வெட்டாகிய ஆகோட்பூசல் கல்வெட்டிலே கிடைத்துள்ளது அல்லவா? எனவே, “கிராந்தி தேப்பிள்ளை” என புத்தர் பீடக் கல்வெட்டைப் படிப்பது சாலப் பொருந்தும். தே+பிள்ளை = தேப்பிள்ளை. இளம்பூரணர் போன்றோர் தரும் பிற உதாரணங்களினால் அறியலாம்.

















கிராந்தி தேப்பிள்ளை - முகம் அழிக்கப்பட்ட புத்தர் பீடத்தில்.





























பா. ஜம்புலிங்கம் கண்டறிந்த கிராந்தி புத்தர் சிலை:

தேப்பிள்ளை என சிவபிரானை வள்ளலார் பாடும் பாடல் (ஔவை உரை):

திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக் 
     குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின் 
     தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ் 
     மாப்பிள்ளை பாத மலர். 

உரை:

     பெரிய மேரு மலையின் தெய்வ மகளாகிய எங்களுடைய சிவகாமவல்லி எனும் அன்னைக்கு மாப்பிள்ளையாகிய சிவனுடைய திருவடித் தாமரைகள்தாம் எனக்குச் செல்வமும் தெய்வமும் தெளிந்த அமுத மயமான ஞானத்தை உபதேசிக்கும் குருவும் என்னைக் காத்தருளுகின்ற அருளரசுமாகும். எ.று.

     மேரு மலையினும் உயர்ந்த மலை உலகில் வேறே இல்லாமையால் அதனைப் “பருவரை” என்கின்றார். அந்த மலைக்குரிய பருவத ராசன் மகளாய்ப் பிறந்து வளர்ந்தமை பற்றி உமாதேவியை, “பருவரையின் தேப்பிள்ளை” என்று சிறப்பிக்கின்றார். தேப்பிள்ளை - தெய்வ மகள்; இனிய மகள் என்றாலும் பொருந்தும், உமாதேவிக்குச் சிவகாமவல்லி என்னும் பெயருண்டு. சிவனையே காதலித்தமையால் அவளுக்குச் சிவகாமவல்லி என்று பெயராயிற்று. மாப்பிள்ளை - கணவன். உலகியல் இன்ப வாழ்வுக்குச் செல்வம் இன்றியமையாதாகையால், “பாத மலர்த் திருவாம்” என்றும், நாளும் வணங்குதற்குரிய தெய்வமாதல் விளங்க, “தெய்வமாம்” என்றும், தெளிந்த அமுத மயமாய் அறிவுக்கு ஞானப் பொருளாய் விளங்குவதால், “தெள்ளமுத ஞானக் குருவாய்” என்றும், துன்பம் வந்து சுடச்சுடத் தாக்குமிடத்து அருளாற்றல் தந்து ஆதரித்தலின் “எனைக் காக்கும் கோவாம்” என்றும் கூறுகின்றார்.



நாகை அருகே 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுப்பு.

நாகை : நாகை அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் தலையாமழை அருகே கிராந்தி கிராமத்தில் ஒரு புதரில் பழங்கால புத்தர் சிலை இருப்பதை மக்கள் பார்த்தனர். இதுகுறித்து, தகவலறிந்த வரலாற்று ஆர்வலர் குழு முதன்மை செயலாளர் ராமச்சந்திரன், குழு உறுப்பினர் காளிமுத்து ஆகியோர், கிராம மக்களின் உதவியுடன் சிலையை மீட்டு சுத்தம் செய்தனர்.

இதுகுறித்து, ''சோழ நாட்டில் பவுத்தம்'' என்ற தலைப்பில் ஆய்வு செய்து வரும் முனைவர் ஜம்புலிங்கம் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் புத்தமங்கலம், குத்தாலம், பெருஞ்சேரி, புஷ்பவனம், பூம்புகார் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. பூம்புகாரில் உள்ள புத்தர் சிலை நின்ற நிலையிலும், மற்றவை அமர்ந்த நிலையில் தியான கோலத்திலும் உள்ளன.

கிராந்தி கிராமத்திலுள்ள புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. இந்த சிலை 32 அங்குலம் உயரம், 22 அங்குலம் அகலத்தில் உள்ளது. பீடத்தின் மீதுள்ள இச்சிலையின் முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. தலையில் சுருள் முடி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலுள்ள தீச்சுடர் உடைந்த நிலையில் உள்ளது. நீண்டு தொங்கிய காதுகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், உள்ளங்கையில் தர்மச்சக்கர குறி காணப்படுகிறது. 

மார்பிலும், இடுப்பிலும் உடை காணப்படுகிறது. சோழ நாட்டில் காணப்படும் புத்தர் சிலைகளில் உள்ள பொதுவான கூறுகள் அனைத்தும் இந்த சிலையில் காணப்படுகிறது. சிலையின் பீடத்தில் ''கிராந்தி தெப்பிள்ளை'' என்ற 11, 12ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கல்வெட்டு பொறிப்புடன் காணப்படும் புத்தர் சிலைகள் மிக அரிதாகும். கிராந்தி தெப்பிள்ளை என்பது இந்த சிலையை கொடையாக கொடுத்தவரை குறிக்கும்''என்றார்.  இது, நாகை மாவட்டத்தில் கிடைத்துள்ள 6வது புத்தர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.











  









N. Ganesan

unread,
Sep 25, 2015, 7:07:54 PM9/25/15
to மின்தமிழ், drbjamb...@gmail.com, tamiz...@gmail.com, karan...@gmail.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Friday, September 25, 2015 at 5:28:28 AM UTC-7, N. Ganesan wrote:
தமிழ்ப் பல்கலையின் முனைவர் பா. ஜம்புலிங்கம் பல அரிய சோணாட்டுப் புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து அழகாக ஆவணஞ்செய்துவருகிறார். அரிய வலைச்சுவடி அவரினது. கொங்குநாட்டு துரை. சுந்தரமவர்களும் நல்ல கல்வெட்டுக்களை வலைச்சுவடியில் பதிவுசெய்கிறார். இன்னும் பலர் முனைந்தால் அழிவின் விளிம்பில் இருப்பன ஒளிப்படங்கள் ஆகும். தமிழின், வரலாற்றின் அரிய செய்திகள் ஆராயப்படும்.

தமிழில் தே/தீ என்பன இனிமை என்னும் பொருளுடைய ஓரெழுத்துமொழி ஆகும். தே = இனிய ‘sweet, pleasant'. இந்த ஓரெழுத்துமொழி பற்றி விரிவாகச் சொல்லியுள்ளேன். மீன் என்ற ஈரெழுத்துத் தனிச்சொல்லுக்கும், ஓரெழுத்தில் அமையும் தே என்ற தனித்தாதுவேருக்கும் அவை புணரும்முறைகளால் வேறுபாடு காணலாம்:
தே+சாடி = தேச்சாடி, தே+குடம் = தேக்குடம், தே+முரி = தேமுரி, தே+மொழி = தேமொழி, ...

இளம்பூரணர் சொல்கிறார் தே ‘இனிமை’யின் பின் -த்த்- சேரும் என.
தே + த்த் + இறால் = தேத்திறால்;  தே + த்த் + அடை = தேத்தடை; தே + த்த் + ஈ = தேத்தீ

தே எனுந்தாது -ம் (அ) -ன் விகுதி ஏற்றல் போல் -ல் விகுதியும் ஏற்கிறது போலும்.
தேல் + இறால் = தேற்றிறால்/தேத்திறால்; தேல் + அடை = தேற்றடை/தேத்தடை; தேல் +ஈ = தேற்றீ/தேத்தீ என்க

பௌத்த சுவட்டைத் தேடி : கிராந்தி

முனைவர் பா. ஜம்புலிங்கம் குழுவினர் கண்டெடுத்த கிராந்தி என்னும் ஊரின் வெளியே கிடக்கும் முகம் சிதைக்கப்பட்ட புத்தர் சிலையை அளித்த நன்கொடையாளி “கிராந்தி தேப்பிள்ளை” என்பவர் ஆவார்.  அப்பொழுது, இரட்டைச்சுழிக் கொம்பு இல்லை. குறிலைக்குறிக்க ஒற்றைச்சுழிக் கொம்பின்மேல் புள்ளியும் இல்லை. எனவே, தெப்பிள்ளை என்று படிப்பது தவறு, பொருளும் இல்லை. ஆனால், தே என்றால் இனியன் என்ற பொருள் உண்டு. தீயன் என்ற சொல் (= இனிமையானவன், தீங்கனி, தீஞ்சாறு, ...) தமிழின் முதல் கல்வெட்டாகிய ஆகோட்பூசல் கல்வெட்டிலே கிடைத்துள்ளது அல்லவா? எனவே, “கிராந்தி தேப்பிள்ளை” என புத்தர் பீடக் கல்வெட்டைப் படிப்பது சாலப் பொருந்தும். தே+பிள்ளை = தேப்பிள்ளை. இளம்பூரணர் போன்றோர் தரும் பிற உதாரணங்களினால் அறியலாம்.


தேப்பிள்ளை - சோழர்காலக் கல்வெட்டோடு ஒப்பிட இன்னொரு
பெயர்: தேப்பெருமாள் (= தே + பெருமாள்).

தண்செய் (தஞ்சை) குடந்தை அருகே தேப்பெருமாள்நல்லூர் 
அன்னதானசிவன் சரிதம்:

தேப்பெருமாள்நல்லூரில் அஷ்டசகசிரவர்:
உவேசா - என் முன்னோர்கள் எனச் சொல்லும்பகுதி:
என் சரித்திரம், உவேசா, இரண்டாம் அத்தியாயம்,

தேப்பெருமாநல்லூர் மூலவர் மீது நாகம் - அதிசயமான நிகழ்ச்சியின் போட்டோ:

இன்னொரு தேப்பெருமாள் கோவில்:
அருள்மிகு தேப்பெருமாள்(எ)வீற்றிருந்தலட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
நீர்வளூர், காஞ்சிபுரம் மாவட்டம்
 

















கிராந்தி தேப்பிள்ளை - முகம் அழிக்கப்பட்ட புத்தர் பீடத்தில்.





























பா. ஜம்புலிங்கம் கண்டறிந்த கிராந்தி புத்தர் சிலை:

தேப்பிள்ளை என சிவபிரானை வள்ளலார் பாடும் பாடல் :
Reply all
Reply to author
Forward
0 new messages