பாரத பாஷைகளிலே, தாய்மொழி என்ற சொல்லே முன்பு கிடையாது. Mother Tongue என்ற பதத்தை
20-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்தனர் இந்தியர்கள்.
மாத்ருபாஷா என்றும், தாய்மொழி என்றும் புதிய நியோலாஜிஸம்ஸ் உருவாக்கப்பட்டன.
ஐரோப்பா பொருளாதாரம், கலாச்சாரம் சேர்ந்து வளர்ந்தன. அடிமைப்படவில்லை.
அதனால், குட்டன்பர்க் அச்சியந்திரம் (ultimate origin is China, movable type. LalitavistAra Suutra in British Museum)
வந்தபின் அந்தந்த பாஷைகளில் மொழிபெயர்த்து நாட்டு எல்லைகள் அமைந்தன: பிரான்ஸ், ஸ்பெயின்,
இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, ... என. ஆனால், இந்தியாவில் அமைய 700+ ஆண்டு அடிமைத்தனம்
விடவில்லை. பெரிதாக, உர்து, தெலுங்கு, கன்னடம், ... தெரியாத அம்மொழி தாய்மொழி ஆக
அமைந்த தமிழ்நாட்டவர் அனேகம் பேர் இருக்கின்றனர். அவர்கள் தாய்மொழி தமிழ் ஆகிவிட்டது,
ஆகிவருகிறது. அமெரிக்காவிலும் அவ்வாறே: ஐரோப்பிய பல பாஷையினரும், கைவிட்டு
ஆங்கிலத்தைத் தாய்மொழி ஆக்கியுள்ளனர்.
வட இந்தியாவிலும், கி.மு. 1700-க்குப் பின்னர் ஆர்யர் வருகை, திராவிட பாஷைகள், முண்டா பாஷைகள்
எல்லாம் கைவிட்டு இந்தோ-ஆரிய பாஷைகள தாய்மொழி ஆகிவிட்டது/ஆகிவருகிறது.
எழுத்திலா த்ராவிட பாஷைகள் வடக்கே பல உள்ளன 22+. அவை எல்லாம் மிக விரைவில்
அழிந்து வருகின்றன. எல்லாம் இந்தியொடு கலந்துவிடும். தமிழ்நாட்டிலும், சைய மலை மொழிகள்
அவ்வாறே, அவற்றை எல்லாம் நல்ல முறையில் ஆராய்ந்து கேட்பொலி, விளக்கம், அகராதிகள்
செய்யத்தான் ஆளில்லை. நல்ல சம்பளம், கிராண்ட் மத்திய, மாநில அரசுகள் வழங்கினாலும் கூட.
தமிழுக்கு இலக்கண நூல் - பழையது, திரவிட சப்த தத்துவம். பொதிய மலை உள்ள திரவிட தேசத்தில்
என ஸ்ரீமத் பாகவதம் பேசுகிறது. இதைத் தான் பெ. சுந்தரனார் பாடியுள்ளார். பல மாநிலத்தவர்
பங்குகொள்ளும் அரச விழாக்களில் சில வரிகள் பொருந்தா - மொழியியலுக்கும் புறமானவை -
என இரண்டு வரிகள் பாடுவதில்லை அதிகாரபூர்வமான விழாக்களில். நேரமும் நீட்டிக்கும்.