தமிழ்த் தாய் வாழ்த்தைத் தந்தவர் | மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை

108 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 4, 2022, 7:08:39 PM4/4/22
to vallamai, housto...@googlegroups.com
தமிழ்த் தாய் வாழ்த்தைத் தந்தவர் | மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை | பேரா. கு. ஞானசம்பந்தன்
https://www.youtube.com/watch?v=dVz5fGm0ozw

சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து: மாநிலப் பாடல் (State Anthem of TN) ஆன வரலாறு,
https://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html

N. Ganesan

N. Ganesan

unread,
Apr 5, 2022, 4:09:35 PM4/5/22
to S. Jayabarathan, vallamai, housto...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm


On Tue, Apr 5, 2022 at 1:56 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
யூடியூபில் சுந்தரனார் தமிழைத் தாயாகச் சொல்லவில்லை. <<எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே>> தமிழைத் தெய்வப் பெண்ணாகப் போற்றுகிறார். கேரளாவில்
பிறந்து வளர்ந்த சுந்தரனார் கவின் மலையாளம், திரவிட நற்றிரு நாட்டைப் பாராட்டுகிறார்.

தமிழ்த் தாய் வாழ்த்து எனத் தலைப்பில் தமிழ்ப் பேரா. கு. ஞானசம்பந்தன் எழுதியுள்ளார்.
தமிழில் 20க்கு மேற்பட்ட பிஎச்டி ஆய்வுகள், சில நூறு எம்.ஏ. தீஸிஸ் நெறியாளர் அவர்.
ஒரு மாணவனுக்கு தலைப்பும், நிதியும் தந்து உதவினேன். இன்று தமிழ்ப் பேராசிரியர்.

பல பஜனாவளிகள் பல்வேறு கடவுளரைப் பற்றி இருந்தாலும், பெ. சுந்தனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துதான்
தமிழர்களின் இறைவணக்கப் பாடலாகத் தமிழ்ச் சங்கங்கள், அரசாங்க விழாக்கள் அனைத்திலும்
பாடப்படுகிறது. இது மோகன ராகம் என்பதால் சற்றுக் கடினம் என புஷ்பவனம் குப்புசாமி என்னிடம்
சொல்லியுள்ளார்.

யாராக இருந்தாலும் நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்தாக தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடும் போது
எழுந்து நின்று, தேசியகீதம் ஜனகணமந போல மரியாதை செலுத்தணும் என அரசாணை
பிறப்பித்துள்ளது. 

தமிழ்த் தாய் வாழ்த்தைத் தந்தவர் | மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை | பேரா. கு. ஞானசம்பந்தன்
https://www.youtube.com/watch?v=dVz5fGm0ozw

நா. கணேசன்

 


தமிழையும், தமிழ்நாட்டையும் பிரிட்டிஷ் இந்தியாவில் தனித்து முதலில் பாடியவர் மகாகவி பாரதியார்;

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே -இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே. 

தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா

வேதம் நிறைந்த, வீரம் செறிந்த தமிழ்நாடு
கல்வி சிறந்த, கம்பன் பிறந்த, வள்ளுவனை
வையகத்துக்குத் தந்த தமிழ்நாடு.

சிங்களம், புட்பகம், சாவகம், ஆகிய
தீவு பலவினும் சென்றேறி அங்கு
புலிக்கொடி, மீன்கொடி நட்டு
சால்பு கண்டவர் தாய்நாடு.

சீனம், மிசிரம், யவனம், இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை 
ஞானம் படைத் தொழில் வாணிபமும்
நன்று வளர்த்த தமிழ்நாடு.

****************
தாய்நாடு

ஆதிசிவன் பெற்றான் , அகத்தியன் இலக்கணம் வடித்தான். முத்தமிழ் மன்னர் வளர்த்தார், 


பாரதம் விடுதலை அடையும் முன்பே, தமிழ்மொழி, தமிழர், தமிழ்த்தாய், தமிழ்நாடு  ஆகிவற்றை மூச்சிலும், பேச்சிலும்
பன்முறை, வாக்கிலும் பாக்களில் எழுதியவர், பாடியவர்
மகாகவி பாரதியார்.

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe%3D8mUDPF702CrfsjfsZ_3XCLqFQMwk3cCRzo5Kfdd-Vg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Apr 6, 2022, 6:05:06 AM4/6/22
to vallamai, housto...@googlegroups.com


On Wed, Apr 6, 2022 at 4:32 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///மொழியினால் அவர்கள் அம்மொழியினர். ஆனால், ஒரு நூற்றாண்டு+ வாழ்ந்தால் தமிழ்நாட்டவர் ஆகிவிடுகின்றனர்.///

அப்போ தாய்மொழி என்பதன் பொருள் என்ன?
சக 

பாரத பாஷைகளிலே, தாய்மொழி என்ற சொல்லே முன்பு கிடையாது. Mother Tongue என்ற பதத்தை
20-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்தனர் இந்தியர்கள்.
மாத்ருபாஷா என்றும், தாய்மொழி என்றும் புதிய நியோலாஜிஸம்ஸ் உருவாக்கப்பட்டன.

ஐரோப்பா பொருளாதாரம், கலாச்சாரம் சேர்ந்து வளர்ந்தன. அடிமைப்படவில்லை.
அதனால், குட்டன்பர்க் அச்சியந்திரம் (ultimate origin is China, movable type. LalitavistAra Suutra in British Museum)
வந்தபின் அந்தந்த பாஷைகளில் மொழிபெயர்த்து நாட்டு எல்லைகள் அமைந்தன: பிரான்ஸ், ஸ்பெயின்,
இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, ... என. ஆனால், இந்தியாவில் அமைய 700+ ஆண்டு அடிமைத்தனம்
விடவில்லை. பெரிதாக, உர்து, தெலுங்கு, கன்னடம், ... தெரியாத அம்மொழி தாய்மொழி ஆக
அமைந்த தமிழ்நாட்டவர் அனேகம் பேர் இருக்கின்றனர். அவர்கள் தாய்மொழி தமிழ் ஆகிவிட்டது,
ஆகிவருகிறது. அமெரிக்காவிலும் அவ்வாறே: ஐரோப்பிய பல பாஷையினரும், கைவிட்டு
ஆங்கிலத்தைத் தாய்மொழி ஆக்கியுள்ளனர்.

வட இந்தியாவிலும், கி.மு. 1700-க்குப் பின்னர் ஆர்யர் வருகை, திராவிட பாஷைகள், முண்டா பாஷைகள்
எல்லாம் கைவிட்டு இந்தோ-ஆரிய பாஷைகள தாய்மொழி ஆகிவிட்டது/ஆகிவருகிறது.
எழுத்திலா த்ராவிட பாஷைகள் வடக்கே பல உள்ளன 22+. அவை எல்லாம் மிக விரைவில்
அழிந்து வருகின்றன. எல்லாம் இந்தியொடு கலந்துவிடும். தமிழ்நாட்டிலும், சைய மலை மொழிகள்
அவ்வாறே, அவற்றை எல்லாம் நல்ல முறையில் ஆராய்ந்து கேட்பொலி, விளக்கம், அகராதிகள்
செய்யத்தான் ஆளில்லை. நல்ல சம்பளம், கிராண்ட் மத்திய, மாநில அரசுகள் வழங்கினாலும் கூட.

தமிழுக்கு இலக்கண நூல் - பழையது, திரவிட சப்த தத்துவம். பொதிய மலை உள்ள திரவிட தேசத்தில்
என ஸ்ரீமத் பாகவதம் பேசுகிறது. இதைத் தான் பெ. சுந்தரனார் பாடியுள்ளார். பல மாநிலத்தவர்
பங்குகொள்ளும் அரச விழாக்களில் சில வரிகள் பொருந்தா - மொழியியலுக்கும் புறமானவை -
என இரண்டு வரிகள் பாடுவதில்லை அதிகாரபூர்வமான விழாக்களில். நேரமும் நீட்டிக்கும்.
நா. கணேசன்
 
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 27, 2022, 8:10:47 AM5/27/22
to vallamai, housto...@googlegroups.com
சென்னை வந்த பாரத பிரதமர் நரேந்திர மோதி. தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவரும் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, அரசாங்க இசைக்கல்லூரி மாணவியர் பாடினர். கண்டு மகிழ்க, https://youtu.be/ht90ER9hSLA


தமிழ்த் தாய் வாழ்த்தைத் தந்தவர் | மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை | பேரா. கு. ஞானசம்பந்தன்
https://www.youtube.com/watch?v=dVz5fGm0ozw

சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து: மாநிலப் பாடல் (State Anthem of TN) ஆன வரலாறு,
https://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html
இதெல்லாம் இந்திய வரலாறு, இந்திய மொழியியல் வரலாறு தொடர்பானவை.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages