Tamil OM symbol

12 views
Skip to first unread message
Message has been deleted

N. Ganesan

unread,
May 12, 2006, 9:11:28 AM5/12/06
to anb...@googlegroups.com, mutht...@googlegroups.com, housto...@googlegroups.com, orun...@googlegroups.com, CTa...@googlegroups.com
தமிழ்நண்பர்களுக்கு வணக்கம் கணக்கில.

இத்துடன் தமிழ் ஓங்கார முத்திரை வடிவை இணைத்துள்ளேன். பார்த்தருள்க. இந்த
எழுதுருவை யாத்தவர் பேரா. பெரியணன் குப்புசாமி, நாமக்கல் ஆவார். 'கல்வி'
குப்பு 1990களின் ஆரம்பத்தில் அழகான எழுதுருக்களைத் தமிழுக்கு
உரித்தாக்கியவர். தற்போது இதயவியல்துறைப் பேராசிரியராய் ஒஹாயோ ஸ்டேட்
பல்கலையில் திகழுமவர் முன்பு ஜான்ஸ் ஹாப்கின்ஸில்
ஆரய்ந்தபோது (உடுமலைப்பேட்டை) டாக்டர் குருசாமி வாஷிங்டன் டி.சி.யில்
தமிழ்க்கடவுள் முருகனுக்குத் திருக்கோவில் எழுப்ப வெகுமுயற்சி
எடுத்தபோழ்து தமிழ்க்கோவில் மலர்களை அச்சடித்தவர் 'கல்வி' குப்பு:
http://www.kalvi.com

தற்காலத்தில் தமிழ்நாட்டு நகர்ப்புறக் கோயில்கள் சிலவற்றில்
திருவுண்ணாழியின் முகப்பில் இந்தி ஓம் காண்கிறோம்.
தமிழ் ஓங்காரத்தையும் கணினியில் அதிகாரப்பூர்வமாக
வைக்கவேண்டும் என்ற ஆவல் தமிழன்பரிடையே
சில ஆண்டுகளாக இருந்துவந்தது. எனவே, அம்முயற்சி
மேற்கொள்ளலாம் என்றுழைத்தேன். தற்போது
யானெழுதிய தமிழ் ஓம் முன்னிகையாவணத்தை (புரபோசல்)
'முரசு அஞ்சல்' முத்தெழிலன் நெடுமாறன் தலைமையில்
இண்பிட் குழுமம் யுனிகோட் கன்சார்த்தியத்திற்கு
அனுப்பியுள்ளது. அந்த ஓம் ஆவணத்தை
யுனிகோட் தொழில்நுட்ப வல்லுநர்கள் (யுனிகோட் டெக்னிகல்
கமிட்டி) ஏற்புடையதா எனச் சோதித்து தங்கள்
முடிவை அறிவிப்பர். அம்முடிவு எப்படிப் போகிறது
என்று சுமார் 10 நாளில் அறிவோம்.

தமிழக முதல்வர் கலைஞரின் ஸன் தொலைக்காட்சியில் சிதம்பரரகசியம் என்னும்
தொடரில் முதலில் கட்டைவிரல் ரேகைக்குள் வருவதாக தமிழ் ஓம் உள்ளதைக்
கண்ணுறும் வாய்ப்புக் கிட்டியது. பாரதியாரின் 'ஓம் சக்தி ஓம்' பாட்டைப்
பயன்படுத்தினேன்.

நம்தெய்வம் முருகபிரானின் ஓம் யுனித்தமிழில் அரங்கேற எல்லாம் வல்ல
இறையின் தாளிணையத் தொழுது ஆசிநல்க வேண்டுகிறேன். நடந்தால், பிறகு
கூகுளிலே ஓமைத் துழாவி எடுக்கமுடியுமே! நன்றி.

இவண்,
நா. கணேசன்

Om.pdf

Malar Selvan

unread,
May 14, 2006, 3:10:43 PM5/14/06
to housto...@googlegroups.com
அன்புள்ள கணேசன்,
வாழ்த்துக்கள்.ஓம் என்ற ஒலியே எவ்வளவு சிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் 'ஓம்' ( ஓ என்ற எழுத்தின் உள்ளே ம் என்ற அமைப்பு) என்ற தமிழ் எழுத்தில் எவ்வளவு பொருள் உள்ளது என்பதற்கு ஒரு திருமந்திர பாடல் உதாரணம்:
 
அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவி
பொறைநின்ற இன்னுயிர்ப்பு ஓம்துறை நாடி
பறிகின்ற  பத்தெனும் பாரஞ் செய்தானே.
( மூலம் - மூலாதாரம் - bottom most portion of spine ; அங்கி - தீ ; அப்பு - நீர் ;கொளுவி- பதித்து; பறிகின்ற - படைக்கின்ற -உண்டாகின்ற; பத்து- பத்து மாதம்)
 
தாயின் கருவறையில் பத்துமாதம் பாரமாக உள்ள உயிர் எவ்வாறு உள்ளது? மூலாதாரத்தின் மேல் வெப்பமும் நீரும் நிறைந்துள்ள பகுதியில் பரம்பொருளின் செந்தாளை மடக்கி பதித்திருக்கும் உயிர் 'ஓம்' என்ற எழுத்துபோல் உள்ளது.
 
இப்படி பொருள் சொல்வபர்கள் பா. இராமநாத பிள்ளையும் அ.சிதம்பரனாரும்.
 
மருத்துவ துறையில் உள்ளவர்கள் கருவறையின் படங்கள் இங்கே வழங்கி இதை விளக்கலாமே?
 
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages