{قَدْ كَانَ لَكُمْ ءَايَةٌ فِى
فِئَتَيْنِ ٱلْتَقَتَا فِئَةٌ تُقَٰتِلُ فِى سَبِيلِ ٱللَّهِ وَأُخْرَىٰ
كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْىَ ٱلْعَيْنِ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِۦ مَن يَشَآءُ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ}...
.""பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் ( ராய இல் அயீன் ) இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது."" ..
எனவே , கண்களால் மட்டும்
பார்க்கணும் என்று கூறுவது எனில் , அதுவும் இபாதத் சம்பந்தப்பட்ட ஒரு
விசயம் எனில் , அது . رَأْىَ ٱلْعَيْنِ..என்னும் சொல் மூலம் கூறப்பட வேண்டும்..........
கேள்வி 02 .
நபியவர்கள் முஸ்லிம் உம்மத்தை , கண்களால் பிறையை பாருங்கள்
ஏற்று ஏவிய எதாவது ஒரே ஒரு ஹதீஸ் , அது SAHEEH அல்லது பலவீனமான அல்லது
ஒரு பொய்யாக இட்டுகட்டப்பட்ட , ஹதீஸ் மூலம் , பிறை கண்ணால் பார்க்க
வேண்டும் என்று அர்த்தமுள்ள ராய இல் அயீன் என்ற சொல்லை உள்ளடக்கிய ஹதீஸ் தர முடியுமா ? அதை நீகள் எழுதி நிரூபிக்கும்போது தெளிவு பெறுவோம்...உங்களுக்கும் அந்த நன்மை கிடைக்கும்.....
..மேலும்.........
சூரா , 105 இல் வசனம் 01 இல். .. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ1.
யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா.....( 105 ; 01 )
இங்கு நபியவர்கள் பிறப்பதற்கு
முதல் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியை இறைவன் சொல்லும்போது , பார்த்தல்
என்று கூறும் அதே சொல் ர ஆ வை பயன்படுத்து கின்றான்.....
இங்கு தான்
சிந்திக்க வேண்டும்.......ஒரு வர பிறக்க முன் நடந்த நிகழ்ச்சியை கண்களால்
பார்க்க முடியுமா ? ஒரு போதும் முடியாது.... அப்படி எனில் இதன் சரியான்
கருத்து , யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் ( தகவல்கள் மூலம் ) அறிந்து
கொள்ளவில்லையா என்பது மிக தெளிவு......
அறிவது எப்படி, அது பற்றிய தகவல்கள் மூலம் , அதை விசாரித்து மட்டுமே அறிய முடியும்...... எனவே இங்கு ர ஆ சொல்லுக்கு பார்த்தல் என்ற கருத்து மிக மிக தவறு என்பது தெளிவு.....
( சில மொழிபெயர்ர்ப்புகளில், அவதானித்தல், CONSIDER என இந்த ர அ எனும் சொல்லுக்கு மொழிபெயர்த்துள்ளனர் , எல்லாவற்றயும் எழுதும்போது மிக மிக நீண்டு விடும் )........
பொதுவாக எல்லாவற்றையும் ஆராயும்போது , எல்லா வசனங்களும் இந்த சொல் ர அ வுக்கு கண்ணால் பார்த்தல் கருத்தை சொல்லவில்லை...... எனவே ,
இதிலிருந்து,
இந்த , ...ருஹ்யத் , என வரும் "" ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ" , ஹதீஸ் இன் சரியான மொழிபெயர்ப்பு, .....
""அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும்
பொருட்டு (ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விபரிக்கின்றான்."" ( yoonus , verse 10 )
சூரா : வசனம் ,
105:1,
37:102, 22:18,63,65,
3:23, 4:44,49,
51,60,77,
105:1 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
37:102 فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ
37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
22:18 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ ۗ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ ۩
22:18. வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
22:63 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَتُصْبِحُ الْأَرْضُ مُخْضَرَّةً ۗ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ
22:63. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
22:65 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ ۗ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ
22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.
3:23 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُدْعَوْنَ إِلَىٰ كِتَابِ اللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌ مِّنْهُمْ وَهُم مُّعْرِضُونَ
3:23. வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.
4:44 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يَشْتَرُونَ الضَّلَالَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّوا السَّبِيلَ
4:44. (நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
4:49 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُم ۚ بَلِ اللَّهُ يُزَكِّي مَن يَشَاءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا
4:49. (நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
4:51 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَٰؤُلَاءِ أَهْدَىٰ مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا
4:51. (நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
4:60 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَن يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا
4:60. (நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.
4:77 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ ۗ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا
4:77. “உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”
14:9 أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ ۛ وَالَّذِينَ مِن بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ ۚ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَرَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُم بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ مِّمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٍ
14:9. உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
14:24 أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ
14:24. (நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.
14:28 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَتَ اللَّهِ كُفْرًا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ
14:28. அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
19:83 أَلَمْ تَرَ أَنَّا أَرْسَلْنَا الشَّيَاطِينَ عَلَى الْكَافِرِينَ تَؤُزُّهُمْ أَزًّا
19:83. காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?
24:41 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ ۖ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ
24:41. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
.
24:43 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُزْجِي سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُ ثُمَّ يَجْعَلُهُ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِن جِبَالٍ فِيهَا مِن بَرَدٍ فَيُصِيبُ بِهِ مَن يَشَاءُ وَيَصْرِفُهُ عَن مَّن يَشَاءُ ۖ يَكَادُ سَنَا بَرْقِهِ يَذْهَبُ بِالْأَبْصَارِ
24:43. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
25:45 أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ وَلَوْ شَاءَ لَجَعَلَهُ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيلًا
25:45. (நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம் தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.
26:225 أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ
26:225. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
2:243 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِن دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللَّهُ مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ ۚ إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ
2:243. (நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
2:246 أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِن بَنِي إِسْرَائِيلَ مِن بَعْدِ مُوسَىٰ إِذْ قَالُوا لِنَبِيٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ ۖ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا ۖ قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِن دِيَارِنَا وَأَبْنَائِنَا ۖ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ
2:246. (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்” என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
2:258 أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ ۖ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
2:260 وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَىٰ ۖ قَالَ أَوَلَمْ تُؤْمِن ۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِي ۖ قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَىٰ كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا ۚ وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.
Thanks and regards
Mohamed Subuhan Sultan
Instrument Engineer - Maintenance
Al-Jubail Fertilizer Company (Al Bayroni)
A SABIC Affiliate, P.O. Box 31961
Jubail Industrial City 31961, Kingdom of Saudi Arabia
M + 966 5 4462 5733, T +966 [3] 340-6492 (From 7.30 am till 4 pm)
F +966 [3] 340 6121
E sult...@ALBAYRONI.SABIC.COM, mohds...@gmail.com
Skype Id: mohdsubuhan, URL: www.mohdsubuhan.blogspot.com
--
--
அவன்தான் சூரியனை ஒளியுடையதாகவும், சந்திரனை ஒளியை பிரதிபலிப்பதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மையை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (10:5)
சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
To post to this group, send email to HIJRI...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
HIJRIINDIA+...@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "HIJRI COMMITTEE / TAMIL" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to HIJRIINDIA+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹு .
கண்ணால் பார்க்கவா?:
பார்த்தல். "பார்த்தல் என்றால் கண்ணால் தான் பார்க்க வேண்டும் என்று பச்சைக் குழந்தை கூட சொல்லும்" என்று கூறுபவர்களாகட்டும் "அதான் பார்க்கனும்னு ஹதீஸ்ல இருக்கிறதல்லவா? பின்பு என்ன ஆய்வு அரைக்கீரை" என்று சலிப்பு தட்டுபவர்களாகட்டும், எதற்காக பிறை பார்க்க வேண்டும் என்பதை மட்டும் கொஞ்சம் சிந்திக்க மறுக்கின்றனர். 'பிறை பார்க்கனும்', 'பிறை பார்க்கனும்', 'பிறை பார்க்கனும்' அவ்வளவு தான்.
ருஃயத் என்றால் கண்ணால் பார்ப்பது மட்டும் தானா? என்பதற்கு குர்ஆன் வசங்கள் 105:1, 37:102 போன்ற இன்னும் பல வசனங்கள் விளக்கம் தருகின்றன. அவற்றை சென்ற மடல்களில் பார்த்தோம்.//ஸூமூலி ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி ருஃயத்திஹீ //
ருஃயத் என்றால் கண்களால் பார்ப்பது மட்டும் தான் என்று அர்த்தம் கொண்டாலும் கூட அதைத் தொடர்ந்து பல கேள்விகள் வரும். உதாரணமாக,
· வெற்றுக்கண்கள்
· கண்ணாடி அணிந்து
· தொலைநோக்கியுடன்
· மேற்கிலா கிழக்கிலா (மஹ்ரிபிலா பஜ்ரிலா?)
· முதல் பிறை அல்லது இறுதி பிறை?
· ஒரு பிறையையா அல்லது எல்லா பிறைகளையுமா? (2:189)
· ஏதாவது ஒரு இடத்திலா அல்லது வசிக்கும் பகுதியிலா?
இது போன்ற பல கேள்விகளுக்கு பலவாறு பதில் பெறப்பட்டும் கூட "பிறை பார்த்தத் தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்" என்று குறிப்பிடுபவர்கள் உலகத்தில் எங்குமே பிறை தெரியாது (அம்மாவாசை நாள்) என்பதை அறிந்தும் அன்றைய நாள் மஹ்ரிபில் (மஹ்ரிபு தொழுகையை விட்டேனும்) பிறையைப் பார்க்கச் சொல்வது வியப்பாக மட்டும் அல்ல வீண் பிடிவாதமாகவும் தான் தெரிகிறது. இங்கு மஹ்ரிபு பர்ளா அல்லது பிறையைப் பார்ப்பது பர்ளா என்பதும் தெரியவில்லை. (மஹ்ரிபை விட்டு விட்டு நாங்கள் பிறை பார்க்கச் சொல்லவில்லையே என்றும் சொல்லிக்கொள்வார்கள். மஹ்ரிபு தொழுதுவிட்டு வந்து பார்த்தால் 'முதல் பிறை' மறைந்திருக்கும் என்பதையும் அறியவில்லையா என்ன?)
பிறை பார்ப்பது பர்ள் என்றால் அதை எல்லோரும் செய்வது தானே சிறந்தது? மாறாக, ஒரு வரையோ அல்லது ஒரு குழுவையோ நியமித்து அவர்களை மட்டும் (மஹ்ரிபு தொழுகையைத் தியகம் செய்து) பிறையைப் பார்க்கச் செய்வது என்ன ஒரு நிலைபாடு என்று புரியவில்லை. அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்களா என்ன?. அதற்கான ஆதாரம் கேட்டால் மழுப்பல்கள் மட்டும் தான் மிஞ்சுகிறது.
அதே போல், முன்னர் ஒரு முறை கேட்ட கேள்வி,
தத்தம்பகுதி பிறை கொள்கையினை ஆதரிப்பவர்கள், வளைகுடா நாடுகளிலும் பிறையைக் கண்களால் பார்த்த பின்னர் தான் மாதத்தை ஆரம்பிக்கின்றனரா? என்ற வினாவுக்கு மழுப்பல் பதிலாக "ஆம்" என்று கூறுயுள்ளனர். (குறிப்பு: எவ்வாறு என்பதை இன்னமும் பதியவில்லை.) வளைகுடாவில் வாழும் சகோதரர்கள் இதனை உறுதிப்படுத்தட்டும்.
பர்ளை நிறைவேற்றியவர்:
உங்களில் எத்தனை பேர் எத்தனை முறை உங்களது வாழ்நாளில் இந்த 'கண்ணால் பார்த்தல்' என்கிற பர்ளை நிறைவேற்றிவுள்ளீர்கள்? அப்படி பார்க்கத் தவறிவிட்டால் அதற்காக நீங்கள் குற்றம் பிடிக்கப்படுவீர்கள் என்று அஞ்சுகிறீர்களா?
பிறையைக் கண்களால் பார்ப்பது மார்க்கக் கடமை என்றால் அக்கடமையை நிறைவேற்றியவர் மற்றவர்களைப் போலல்லாமல், கூடுதலாக ஒரு பர்ளை நிலை நாட்டியுள்ளார் என்ற அடிப்படையில் அவர் சற்று முக்கியமானவராகிறார். அப்படியிருக்க, அவர்(களது) பெயர்களை தொடர்பு எண்களுடன் வெளியிட மறுப்பதேன்?
தமிழகமாகட்டும் சவுதியாகட்டும் பிறையைக் கண்ணால் கண்டவர்களின் விவரப்பட்டியலை மாதம்தோறும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டால் பிறையை பார்த்த 'அவர்களிடம்' கூடுதல் தகவல்களைப் (பார்க்கப்பட்ட நேரம், பார்க்கப்பட்ட இடம் பேன்ற இன்ன பிறவற்றை) பெற்று அவை சரி தானா என்று அறிவியல் துணைக் கொண்டு உறுதி செய்யலாம். அவ்வாறே, பிறை பார்த்தவர்களிடம் மற்றவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அவரிடமே அதை உறுதி செய்யவும், அது முதல்/ இரண்டவது/மூன்றாவது பிறை போல் இருந்ததா என்று கேட்டு நாமும் நமது நாட்காட்டியின் துல்லியத்தைச் சரி செய்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.
இதற்காவது வழிவகைச் செய்யுமா?. பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
தொல்லை இல்லா எல்லை:
மனிதன், தான் பிரித்து வைத்துள்ள கிளை, ஊர், மண்டலம், மாவட்டம், மாநிலம் என்றவாறு பிறை பங்கீட்டின் முறையும் அகண்டு கொண்டே போகிறது. பிறை பார்த்தத் தகவலை இப்பொழுது யார் யாரெல்லாம் பகிர்ந்துகொள்ளலாம் என்ற சர்ச்சயும் கூட ஓய்ந்தபாடில்லை.
"எங்கள் இயக்கம் இந்தியா முழுவது நிறுவப்பட்டவுடன் நாட்டிலுள்ள எல்லா ஏகத்துவ சொந்தங்களும் ஒரே தினத்தில் நோன்பு வைத்து பெருநாள் கொண்டாடுவதைப் பற்றி பரிசீலனை செய்வோம். நாளை, (இன்றே உலகம் முழுவது கிளைகள் இருப்பினும்) எங்களுக்கு உலகம் முழுவது கிளை வந்தால் உலகம் முழுவதற்கும் ஒரு பிறை என்ற கருத்தை பரிசீலனை செய்வோம். அது வரைக்கும் தமிழ்நாடு தான் எங்கள் எல்லை."- இது ஒரு கருத்தாடலின் பொழுது ஒரு ஏகத்துவ சகோதரர் வாய்மொழியாகக் கூறியது.
எந்த எல்லைக்குள் (தமிழகம், இந்தியா) அரசாங்கம் மார்க்கச் சட்டங்களில் தொல்லை தருவதில்லையோ அங்கு மட்டுமே இந்த நடைமுறை மற்ற மற்ற பகுதிகளில் அந்தந்த நாட்டு அரசாங்கம் நிர்ணயிப்பதைத் தான் பின்பற்றுகின்றனர். வளைகுடாவிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சென்ற ஆண்டு அந்நாடுகள் அறிவித்த நாளன்றே பெருநாள் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமேரிக்கா, ஃப்ரான்ஸ், லண்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் வாழக்கூடிய ஏகத்துவ வாதிகளின் பிறை நிலைபாடு/ பெருநாள் கொண்டாடியதைப் பற்றியத் தகவலில்லை.
C/o சவுதி:
"சவுதி சவுதி சவுதி" என்பது மட்டும் தான் கூப்பாடு. சவுதி தான் எங்களுக்குத் தலைமயகம். "அவர்களுக்கு என்று பெருநாளோ அன்று தான் எங்களுக்கும்" என்று சொல்லுபவர்களின் நிலை அதைவிடவும் படு மோசமா உள்ளது.
ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் (நேரத்தில் நம்மைவிட சற்று முன்னரே இருப்பவர்கள்) இவர்களைப் போல் சவுதியை எதிர்பார்த்து இரவு 11 மணி வரையில் இருக்க முடியாது என்பதை அறியவில்லையா? அப்பகுதிகளில் சவுதி பெருநாள் அறிவிக்கும் முன்னரே பெருநாள் தொழுகைக்கான நேரங்களையும் தாண்டி இருப்பார்கள் என்பதையும் அறிவயில்லையா என்ன?
அங்குள்ள ஸலஃப்களுக்கு இவர்களது மார்க்கத் தீர்ப்பு என்னவோ? உண்மையில் உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்வார்களா இல்லை சவுதி அறிவிப்பதை மட்டும் தான் ஏற்றுக்கொள்வார்களா என்பது அவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் மட்டுமே வெளிச்சம். நமக்குத் தெரிந்த வரையில் சவுதி அரசாங்கமும் கணினி கணக்கீட்டு முறையைத் தான் நடைமுறைப் படுத்துகிறது.
எதுக்குப்பா வம்பு?
"நம்ம டவுண் காஜி என்று அறிவிக்கிறாரோ அன்று தான் பெருநாள்". டவுண் காஜி யார் என்று பார்த்தால், அரசாங்கம் நிர்ணயித்த நபர். கடந்த வருடங்களில் விநாயகர் சதுரிதி அன்றே பெருநாளும் வரும் சூழல் ஏற்பட்டதால் பாதுகாப்புக் கருதி ஒரு நாள் முன்னரே அறிவிக்கும்படி அரசாங்கம் டவுண் காஜியை கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்தன. (உண்மை என்னவென்பதை அல்லாஹ்வே நன்கறிவான்) எது எப்படியாயினும் தமிழக அரசு ரம்ஜான் பண்டிகை விடுமுறையை அம்மாவாசையில்ருந்து மூன்றாவது நாள் என்று வழமையாகக் கொண்டுள்ளது சிறப்பிற்குரியது.
தீர விசாரிப்பதே மெய்:
கடைசி வரையில், யார் பிறை பார்த்தார்கள் என்பது மட்டும் கேள்விக் குறியாகவே கூனிக் குறுகி நிற்கிறது.
கண்ணால் தான் பிறை பார்க்க வேண்டும் என்று சொல்பவர்கள் கூட அதைச் சரியாக நடைமுறைப்படுத்த வழியில்லாமல் விழி பிதுங்கி நிற்பதைப் பார்க்கிறோம்.
அல்லாஹ்வின் அருளால் இன்று விஞ்ஞான அடிப்படையில் பிறை குறித்த பல ஆய்வுகள்
தொடங்கியாயிற்று. அதன் ஒரு கட்டமாக நாமும் அவற்றை சிந்தித்து நடைமுறைப் படுத்துகிறோம். அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
மேலும், சவுதி அரசாங்கம் New-Umm-Al-Qura என்ற கணினி மூலம் பிறை கணக்கீட்டு முறையை அமல்படுத்திவருவதை அறிந்திருப்பீர்கள். அல்லாஹ் நாடினால், தற்பொழுது அவர்கள் நடைமுறைப் படுத்தியுள்ள முறையின் குறைபாடுகளை அறிந்து பழைய முறையான Umm-Al-Qura விற்கே திரும்பச்செல்லும்.
குர் ஆன் ஹதீஸ்களை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த முற்படும்
மனிதர்களை மார்க்க அறிவிலிகள் என்று இவ்வுலகம் அழைக்குமானால் அழைக்கட்டுமே.
இவ்வுலகில் அறிவிலிகள் என்று அழைக்கப்படுவதால் எந்த ஒரு மறுமை இழப்பும் இல்லை.
அல்லாஹ், நம்மை நேர் வழியில் நடக்கச் செய்வானாக! ஆமீன்.
-23.08.1434, திங்கட்கிழமை.
--
ருஃயத் என்பதை எவ்வாறு மொழிபெயர்க்க வேண்டும்?அதைக் (கண்களால்) பார்த்து என்றா அல்லது அதைப் பார்த்து என்றா?
(அதைப் பார்த்து என்றால் கண்களால் என்பதை விடுத்து அறிவால் என்று கூட பொருள் கொள்ளலாமல்லவா?)அல்லது சகோதரர் வதூத் அவர்கள் சொன்னது போல் "கண்ணால் பார்ப்பதற்கு மட்டும் தான் 'ருஃயாத்' என்ற பதம் பயன் படுத்தப்படுமா?"மேலும் "தர" என்ற அரபிப் பதம் எப்பொழுதெல்லாம் பயன் படுத்தப்படும்?
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான சகோதரரே
எதற்காக பிறை பார்க்க வேண்டும் என்பதை மட்டும் கொஞ்சம் சிந்திக்க மறுக்கின்றனர்.
நம் ஊயிரினும் மேலான கண்மணி நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் மிக்க அழகாக தெளிவுபட உறுதியாக கூறிய
//ஸூமூலி ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி ருஃயத்திஹீ //
விஷயத்தில் நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்)அவர்களும் உலகம் முழுவதும் ஒரே கிழமையில் தான் நோன்பு மற்றும் பெருநாள் கொண்டாடவேண்டும் கூறாத போது நாம் ஏன் அதை பற்றி
தேவையற்ற பிரச்சனையை இந்த சமுதாயத்தில் ஏற்படுத்தி குழப்பத்தை
ஏற்படுத்த வேண்டும்.
ருஃயத் என்றால் கண்ணால் பார்ப்பது மட்டும் தானா? என்பதற்கு குர்ஆன் வசங்கள் 105:1, 37:102 போன்ற இன்னும் பல வசனங்கள் விளக்கம் தருகின்றன. அவற்றை சென்ற மடல்களில் பார்த்தோம
அன்பான சகோதரரே ருஃயத் என்றால் கண்ணால் பார்ப்பது மட்டும் தான் வேறு அர்த்தம் அரபி மொழியில் இல்லவே இல்லை.அரபி நன்கு படித்தவர்களிடம் கேட்டு அறிய முயற்சிக்கவும்
105: 1 தர என்ற வினை சொல் 37:102 அறா பில் மனாமி
அறா என்ற வினை சொல்லுடன் பில் மனாமி கனவிலே என்றும் தெளிவாக வந்துள்ளதை கவனிக்கவும் .
பார்வை என்பதின் மூலச்சொல் அதாவது அரபியில் மஸ்தர்
என்று கூறுவார்கள். பார்வை என்பதற்குரிய மூலச்சொலலுதான் ருஃயத்.
நபி (ஸல்அவர்கள் ருஃயத்என்ற மூலச்சொல்லையே பிறை விஷயத்தில் உப்யோகிதுள்ளர்களே தவிர இதில் வரக்கூடிய வினை சொல் எதையும் உதாரணமாக தரா அறா நறா ர ஆய்து இதுபோன்ற குர் ஆனில் வருவதை போல் உபயோகிக்கவில்லை.ஏனனில்
01 ருஃயத் என்பதின் வினை சொல்லும் கண்ணால் பார்த்தல்
02 ரஅய் சிந்தித்தல் உணர்தல் ஆலோசனை கூறுதல் புரியுதல் என்பதின் வினை சொற்களும்
03 ரூஃயா கனவு காணுதல் என்பதின் வினை சொற்களும் ஒரே மாதிரியே தான் வரும் அந்த இடத்திற்கு தக்க பொருள் கொள்ள வேண்டும் இன்னி அறா பில் மனாமி அடுத்து மாதா தறா என்று வருவதால் மகனே நீ என்ன எண்ணுகின்றாய் என்றே பொருள் கொள்ளவேண்டும் இந்த மூன்றின் வினைச் சொற்களும் ஒரே மாதிரியே வருவதால் இந்த சமுதாயம் குழம்பி விடக்கூடாது. மாதத்தின் ஆரம்பம் முடிவை கண்ணால் தான் பார்த்து முடிவு எடுக்கவேண்டுமே தவிர சந்திரனுக்கு துல்லிய கணக்கிருந்தாலும் மாதத்தின் ஆரம்பம் முடிவில் . கணக்கு பார்க்க கூடாது என்ற எண்ணத்தை தெளிவு படுத்தவே லா நக்துபு வ லா நஹ்சிபு என்று கூறியுள்ளதால் கண்ணால் பார்ப்பது மூலமே மாதத்தின் ஆரம்பம் முடிவு அமைய வேண்டும் என்பது உறுதியாகி விட்டது .
நீங்கள் ஆதாரமாக காட்டிய குர்ஆன் வசங்கள் 105:1, 37:102 இந்த இரண்டு வசனங்களிலும் ரஅய் என்ற மூலச்சொல்லிருந்து வந்துள்ளதால்யானை படையை உன்னுடைய இரட்சகன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா ?என்று தான் பொருள் கூறமுடியும்
.இரண்டாவது 37:102 ல் பில் மனாமி என்று தெளிவாகவே வந்துள்ளதால் இதன் மூலச்சொல் ரூஃயா என்பதும் அறியலாம் . நபி (ஸல்)அவர்கள் கூறியதோ ருஃயத்.இந்த ருஃயத் என்ற வார்த்தை திருக் குர் ஆனில் ஒரு இடத்தில கூட வரவில்லை .
இந்த உண்மையான விஷயத்தை யதார்த்தை நீங்கள் புரிந்து விட்டால் நீங்கள் கீழே எழுதிய சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும் .நான் கூறுவது சரிதானா என்பதையும் அரபி மொழி நன்கு தெரிந்த உங்களுக்கு நல்ல நம்பிக்கை உடைய நபரிடமே கேட்டு தெளிவு பெற முயற்சிக்கவும் .எதையும் கண்ணை மூடி பின்பற்ற வேண்டாம் இது எனது அன்பான வேண்டுகோள்
ருஃயத் என்றால் கண்களால் பார்ப்பது மட்டும் தான் என்று அர்த்தம் கொண்டாலும் கூட அதைத் தொடர்ந்து பல கேள்விகள் வரும். உதாரணமாக வெற்றுக்கண்கள் கண்ணாடி அணிந்து தொலைநோக்கியுடன மேற்கிலா கிழக்கிலா (மஹ்ரிபிலா பஜ்ரிலா?) முதல் பிறை அல்லது இறுதி பிறை? ஒரு பிறையையா அல்லது எல்லா பிறைகளையுமா? (2:189 ஏதாவது ஒரு இடத்திலா அல்லது வசிக்கும் பகுதியிலா? இது போன்ற
பல கேள்விகளுக்கு பலவாறு பதில் பெறப்பட்டும் கூட
அன்பானவரே இந்த கேள்விகள் அனைத்தும் //ஸூமூலி ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி ருஃயத்திஹீ /
என்று கூறிய எங்கள் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் தான் கேட்க்க வேண்டும் அவர்கள் தானே ருஃயத்திஹீ என்று மொழிந்தார்கள்
அன்பான சகோதர்ரே ஆக பிறை பார்க்கவேண்டும் என்பதை இந்த ஹிஜ்ரா கமிட்டியினர் ஒப்புக்கொண்டு விட்டார்கள் ஆனால் ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும் கடைசி படித்தரம் உர்ஜுனுள் கதிமை பஜ்ருடைய நேரத்திலும் பார்க்க வேண்டும் நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டுதல் இன்றி சுயமாக கூறுகின்றனர் இந்த ஹிஜ்ரா கமிட்டி நாளின் ஆரம்பம் பஜ்ரு என்பதால் அன்றைய பஜ்ரில் மாதத்தின் முதல் தலை பிறை தெரியாதே எவ்வாறு பிறை பார்ப்பது பிறையின் முதல் படித்தரமே தெரியாதே அப்படியிருக்க ஒன்றின் ஆரம்பம் தெரியாது எப்படி கணக்கிட முடியும் ?எங்களிடம் 29 வது நாள் எப்படி வந்தது என்று கேட்க்கும் இவர்கள் உங்களின் ஆரம்பம் எதிலிருந்து.?கண்ணுக்கு புலப்படாததை தான் சந்திரனின் ஆரம்ப படிததரத்தை இறைவன் ஏற்படுத்தினானோ.
அன்பானவர்களே ஒன்றின் ஆரம்பம் தெரிந்து விட்டாலே மற்ற நாட்களை எண்ணி
29 வரையும் எண்ணி விடலாம் எனபது சாதாரண அறிவு படைத்தவனும் அறியமுடியுமே
நபி (ஸல்)அவர்கள் காட்டிய ஒரே வழி மறையும் சந்திரனை மக்ரிபுடைய நேரத்தில் பிறை 29 பின்னேரம் 30 வது இரவு பார்ப்பது மட்டுமே இதையே நாங்கள் பின்பற்றி இந்த ஒரே நாள் மட்டும் தெரியும் நேரத்தில் பார்த்தால் போதும் மற்ற நாட்களிலோ பார்க்கவேண்டியதில்லை பார்த்த நாளிலிருந்து நாட்களை எண்ணி வரும்போது மீண்டும் அதே 29 பின்னேரம் 30 வது இரவு பார்த்து மறு மாதத்தை முடிவு செய்வோம் ஆனால் இந்த ஹிஜ்ரா கமிட்டி நாளின் ஆரம்பம் பஜ்ரு என்பதால் அன்றைய பஜ்ரில் மாதத்தின் முதல் தலை பிறை தெரியாதே ! உர்ஜுனல் கதீமே கடைசி படித்தரம் என்று இறைவன் தனது திருமறை குர் ஆனில் தெளிவாக கூறியிருக்க அதை பின்பற்றி உர்ஜுனல் கதீமுக்கு மறுநாள் மறு மாதத்தை ஆரம்பிக்கலாமே ஏன் செய்யவில்லை
"பிறை பார்த்தத் தகவல்
தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்" என்று குறிப்பிடுபவர்கள் உலகத்தில் எங்குமே
பிறை தெரியாது (அம்மாவாசை நாள்) என்பதை அறிந்தும் அன்றைய நாள்
மஹ்ரிபில் (மஹ்ரிபு தொழுகையை விட்டேனும்) பிறையைப் பார்க்கச் சொல்வது
வியப்பாக மட்டும் அல்ல வீண் பிடிவாதமாகவும் தான் தெரிகிறது.
அன்பானவரே இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி (ஸல்)அவர்களின் கட்டளை .அதை பின்பற்றி பார்ப்போம்
இங்கு மஹ்ரிபு பர்ளா அல்லது பிறையைப் பார்ப்பது பர்ளா என்பதும் தெரியவில்லை. (மஹ்ரிபை விட்டு விட்டு நாங்கள் பிறை பார்க்கச் சொல்லவில்லையே என்றும் சொல்லிக்கொள்வார்கள்.
அன்பானவரே இது முழுக்க முழுக்க கற்பனை உண்மைக்கும் புறம்பானதே இதை நடைமுறை படுத்தும் எவரும் பர்ளான மக்ரிபை கழாவாக ஆக்கவே மாட்டார்கள் .ஒருகால் மக்ரிபு ஜமாஅத் வேண்டுமானால் எங்கோ மார்க்க சட்டம் அறியாதவர்கள் செய்யலாம் .
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
அப்துல் வதூத்
2013/7/1 Rasik <mdr...@gmail.com>
எதற்காக பிறை பார்க்க வேண்டும் என்பதை மட்டும் கொஞ்சம் சிந்திக்க மறுக்கிறீர்கள்.
நீங்களோ உங்கள் சுயவிருப்பத்தின் படி "விஷயத்தில் நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்." என்று கூறிகிறீர்கள். இது அல்லாஹ்வின் கட்டளைக்கு நேர்மாறாக உள்ளதை 10:5 வது வசனத்தில் " அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்." என்று தெளிவாக்கின்றான்.
<<< ருஃயத் என்றால் அரபியில் கண்ணால் பார்ப்பது மட்டும் தானா? என்று அரபி மொழி நன்கு அறிந்தவர்களிடம் கேட்டு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ருஃயத் என்ற பதம் தர என்ற பதமும் சேர்ந்தே ஹதீஸ்களில் வந்துள்ளதாக அறிகிறேன். எனினும், அதற்கான தக்க ஆதாரங்களுடன் பின்னர் மீள் பதிவிடப்படும் இன்ஷா அல்லாஹ். >>>
// இந்த ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு அதாவது விண்ணியல் கணக்கு பார்ப்பது என்பது என்ற அர்த்தம் பொருள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?// சகோதரர் அ.வ.
ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு அதாவது விண்ணியல் கணக்கு என்று நாங்கள் என்று கூறினோம்? "கண்ணால் பார்த்தல் மட்டும் தான் என்றில்லை" என்று தான் கூறிவருகிறோம்.
அன்பானவரே இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி (ஸல்)அவர்களின் கட்டளை .அதை பின்பற்றி பார்ப்போம் // சகோதரர் அ.வ.
இதற்கான ஹதீஸை (ஆதாரத்தை) பல காலமாகப் பதிவிடச் சொல்கிறோம். இன்னமும் தாங்கள் பதியாமல் இழுத்தடிக்கிறீர்கள். இனியாவது பதிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
நாம் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்றவுடன் அவற்றை கண்மணி நாயகம் ரஸூல் (ஸல்) அவர்களிடத்தில் தான் கேட்கவேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். உங்களுக்கு விடையோ அல்லது அதில் தீர்வோ இல்லை என்றால் அவற்றை ஒத்துக் கொண்டிருக்கலாம். மாறாக, எம் கண்மனி நாயகம் நபி (ஸல்) அவர்களிடத்தில் தான் கேட்க வேண்டும் என்பது உங்கள் இயலாமையைக் காட்டுவதோடு வார்த்தை விளையாட்டின் நுட்பத்தையும் விளக்குகிறது.
இது நாள் வரையில் நாம் உங்களிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் (பதில் இல்லை) பதிலாக அதே கேள்விகளை எம்மிடம் தொடுக்கும் வழமையை கையாள்வது எவ்வகை? நாங்கள் 'என்ன சொல்கிறோம்' என்பது சரியாக விளங்க வில்லை என்பதனால் தான் என்னவோ அவற்றின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ளாது கடினப்பட்டுக்கொண்டுருக்கிறீர்கள். தினம் தோறும் பிறை பார்க்கச் சொல்வது எங்கள் சுய கருத்தல்ல. பார்க்க திருக்குர்'ஆன் 2:189
முதல் பிறை காலையில் உதித்து மாலையில் தான் மறையும் என்பதை தாங்கள் புரிந்துகொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. மறையும் பிறையை மஹ்ரிபில் தான் பார்க்க முடியும் என்பதால், நாம் பார்ப்பதற்கு முன்னரே அந்நாள் கடந்து போயிருக்கும். இதை நன்கு அறிந்த எம் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் ரமழான ஆரம்பிப்பதற்காக ஷா'பானைக் கணக்கிட்டு வந்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் "உங்களுக்கும் மறைக்கப்பட்டால் எண்ணிக் கொள்ளுங்கள்" என்றும் கட்டளையிட்டுள்ளார்கள். சுப்ஹானல்லாஹ்!
கண்களால் பார்க்கக் கூடிய 28 அல்லது 29 படித்தரங்களோடு மறைக்கப்படும் ஒரு நாளை எண்ணிக் கொள்ளுங்கள் என்று மிக அறிவுப்பூர்வமாகக் வரையறுத்துள்ளார்கள். பிறந்த பிறையை மட்டும் கண்களால் பார்த்தால் போதும் என்ற ஆதாரமற்ற உங்களது கூற்றை நிராகரிக்கும் வண்ணம் தான், முதல் பிறையை கண்களால் பார்த்து மட்டும் அல்ல என்று நாம் கூறிவருகிறோம்.
//நபி (ஸல்)அவர்கள் காட்டிய ஒரே வழி மறையும் சந்திரனை மக்ரிபுடைய நேரத்தில் பிறை 29 பின்னேரம் 30 வது இரவு பார்ப்பது மட்டுமே இதையே நாங்கள் பின்பற்றி இந்த ஒரே நாள் மட்டும் தெரியும் நேரத்தில் பார்த்தால் போதும் மற்ற நாட்களிலோ பார்க்கவேண்டியதில்லை பார்த்த நாளிலிருந்து நாட்களை எண்ணி வரும்போது மீண்டும் அதே 29 பின்னேரம் 30 வது இரவு பார்த்து மறு மாதத்தை முடிவு செய்வோம்// சகோதரர் அ.வ.
முதலில், இது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழி என்பதற்கு ஆதாரம் எங்கே?
//30 வது இரவு பார்ப்பது மட்டுமே // அந்த இரவை 30 வது என்று முன்னரே முடிவு செய்துவிட்ட பிறகு பிறை பார்ப்பதேன்? மற்ற நாள்களிலெல்லாம் பிறை பார்க்கத் தேவையில்லை என்பது 'பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன.- (2:189)" என்ற இறைக்கட்டளைக்கு மாற்றமாக உள்ளதே?. பிறைகள் தான் மக்களுக்கு காலம் காட்டும். நீங்களோ, ஒரு பிறை மட்டும் போதும் மற்ற பிறைகளையெல்லாம் பார்க்கத் தேவையில்லை என்றால் அது குர்'ஆனுக்கு முரண்படுவதில்லையா?
நாம் வாழும் பகுதியில், ஒவ்வொறு பிறையின் படித்தளங்களையும் கண்களால் பார்த்து கணக்கைச் சரி செய்து கொள்ளலாம். எல்லா பிறைகளுமே கண்களுக்குத் தெரியாத துருவ நாடுகளில் "ருஃயத்" என்பது அறிவால் அறிந்து கொள்ளும் பதத்தையே குறிக்கும். இல்லை என்றால் அங்குள்ளவர்கள் எவ்வாறு மாதத்தைத் தீர்மாணிக்க முடியும்?
பிறைகளை எளிதில் பார்க்கக் கூடிய பகுதிகளில் வாழ்ந்துகொண்டு பிறைகளைப் பார்க்க முடியாத மக்களை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாது பிறையைப் பற்றி சிந்திக்கவே தேவையில்லை என்று எப்படித் தான் சொல்லமுடிகிறதோ?
கடுமையான மழைக்காலங்களிலும், தஜ்ஜால் வரும் காலங்களில் "எவ்வாறு வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று" எம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளதைத் தாங்கள் அறிவீர்களென்று நினைக்கிறோம். அதன் அடிப்படையில் காலங்களைக் கணக்கிட நபி(ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளதையும் கருத்திற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குர்'ஆனையும் ஹதீஸையும் ஆய்வு செய்து ஒன்றை மக்களிடம் கூறினால் அவற்றை தக்க ஆதாரமின்றி மறுக்காமல், கண்ணை மூடி பின் பற்றுவது தான் சிறந்தது என்ற உஙகளது நிலைபாடு வியக்கவைக்கிறது. இப்படி ஒரு நிலைபாட்டில் இருக்கும் உங்களிடம் குர்'ஆன் ஹதீஸ் ஆய்வுகளின் அடிப்படையில் என்ன விளக்கம் கொடுத்தாலும் நீங்கள் உங்கள் நிலையிலிருந்து மாறப்போவதில்லை (அல்லாஹ் நாடினாலே தவிர) என்கிற எண்ணம் தோன்றுகிறது.
பிறையைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்று நீங்கள் சொல்வதன் மூலம் முற்றிலுமாக குர்'ஆன், ஹதீஸ் ஆய்வு மற்றும் கற்றலின் அடிப்படையில் அமைந்துள்ள "சந்திர நாட்காட்டி" உங்களுக்கு பயன் இல்லாமல் போவதும் சாத்தியமே!
உங்கள் நிலைபாடான //இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி (ஸல்)அவர்களின் கட்டளை .அதை பின்பற்றி பார்ப்போம்// என்பதற்குத் தக்க ஆதாரம் தந்து உங்கள் நிலைபாட்டை நிரூபியுங்கள். மற்றவை பின் இன்ஷா அல்லாஹ்.
.
வஸ்ஸலாம்!
-03.09.1434, வியாழற்கிழமை.
,
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புள்ள சகோதரர் அப்துல் வதூத் அவர்களுக்கு,எதற்காக பிறை பார்க்க வேண்டும் என்பதை மட்டும் கொஞ்சம் சிந்திக்க மறுக்கிறீர்கள்.
நீங்களோ உங்கள் சுயவிருப்பத்தின் படி "விஷயத்தில் நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்." என்று கூறிகிறீர்கள். இது அல்லாஹ்வின் கட்டளைக்கு நேர்மாறாக உள்ளதை 10:5 வது வசனத்தில் " அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்." என்று தெளிவாக்கின்றான்.
<<< ருஃயத் என்றால் அரபியில் கண்ணால் பார்ப்பது மட்டும் தானா? என்று அரபி மொழி நன்கு அறிந்தவர்களிடம் கேட்டு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ருஃயத் என்ற பதம் தர என்ற பதமும் சேர்ந்தே ஹதீஸ்களில் வந்துள்ளதாக அறிகிறேன். எனினும், அதற்கான தக்க ஆதாரங்களுடன் பின்னர் மீள் பதிவிடப்படும் இன்ஷா அல்லாஹ். >>>
// இந்த ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு அதாவது விண்ணியல் கணக்கு பார்ப்பது என்பது என்ற அர்த்தம் பொருள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?// சகோதரர் அ.வ.
ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு அதாவது விண்ணியல் கணக்கு என்று நாங்கள் என்று கூறினோம்? "கண்ணால் பார்த்தல் மட்டும் தான் என்றில்லை" என்று தான் கூறிவருகிறோம்.
அன்பானவரே இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி (ஸல்)அவர்களின் கட்டளை .அதை பின்பற்றி பார்ப்போம் // சகோதரர் அ.வ.
இதற்கான ஹதீஸை (ஆதாரத்தை) பல காலமாகப் பதிவிடச் சொல்கிறோம். இன்னமும் தாங்கள் பதியாமல் இழுத்தடிக்கிறீர்கள். இனியாவது பதிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
நாம் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்றவுடன் அவற்றை கண்மணி நாயகம் ரஸூல் (ஸல்) அவர்களிடத்தில் தான் கேட்கவேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். உங்களுக்கு விடையோ அல்லது அதில் தீர்வோ இல்லை என்றால் அவற்றை ஒத்துக் கொண்டிருக்கலாம். மாறாக, எம் கண்மனி நாயகம் நபி (ஸல்) அவர்களிடத்தில் தான் கேட்க வேண்டும் என்பது உங்கள் இயலாமையைக் காட்டுவதோடு வார்த்தை விளையாட்டின் நுட்பத்தையும் விளக்குகிறது.
//இந்த ஹிஜ்ரா கமிட்டியினர் ஒவ்வொரு நாளும் பிறை பார்க்கவேண்டும்..... இவர்களிடம் இதே கேள்வியை நான் கேட்கின்றேன் பார்ப்பது வெற்றுக்கண்களினலா ? ............நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டுதல் இன்றி சுயமாக கூறுகின்றனர் இந்த ஹிஜ்ரா கமிட்டி // சகோதரர் அ.வ.
இது நாள் வரையில் நாம் உங்களிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் (பதில் இல்லை) பதிலாக அதே கேள்விகளை எம்மிடம் தொடுக்கும் வழமையை கையாள்வது எவ்வகை? நாங்கள் 'என்ன சொல்கிறோம்' என்பது சரியாக விளங்க வில்லை என்பதனால் தான் என்னவோ அவற்றின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ளாது கடினப்பட்டுக்கொண்டுருக்கிறீர்கள். தினம் தோறும் பிறை பார்க்கச் சொல்வது எங்கள் சுய கருத்தல்ல. பார்க்க திருக்குர்'ஆன் 2:189
நாளின் ஆரம்பம் பஜ்ரு என்பதால் அன்றைய பஜ்ரில் மாதத்தின் முதல் தலை பிறை தெரியாதே எவ்வாறு பிறை பார்ப்பது பிறையின் முதல் படித்தரமே தெரியாதே அப்படியிருக்க ஒன்றின் ஆரம்பம் தெரியாது எப்படி கணக்கிட முடியும் ?எங்களிடம் 29 வது நாள் எப்படி வந்தது என்று கேட்க்கும் இவர்கள் உங்களின் ஆரம்பம் எதிலிருந்து.?கண்ணுக்கு புலப்படாததை தான் சந்திரனின் ஆரம்ப படிததரத்தை இறைவன் ஏற்படுத்தினானோ.//சகோதரர் அ.வ.
முதல் பிறை காலையில் உதித்து மாலையில் தான் மறையும் என்பதை தாங்கள் புரிந்துகொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. மறையும் பிறையை மஹ்ரிபில் தான் பார்க்க முடியும் என்பதால், நாம் பார்ப்பதற்கு முன்னரே அந்நாள் கடந்து போயிருக்கும். இதை நன்கு அறிந்த எம் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் ரமழான ஆரம்பிப்பதற்காக ஷா'பானைக் கணக்கிட்டு வந்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் "உங்களுக்கும் மறைக்கப்பட்டால் எண்ணிக் கொள்ளுங்கள்" என்றும் கட்டளையிட்டுள்ளார்கள். சுப்ஹானல்லாஹ்!
கண்களால் பார்க்கக் கூடிய 28 அல்லது 29 படித்தரங்களோடு மறைக்கப்படும் ஒரு நாளை எண்ணிக் கொள்ளுங்கள் என்று மிக அறிவுப்பூர்வமாகக் வரையறுத்துள்ளார்கள். பிறந்த பிறையை மட்டும் கண்களால் பார்த்தால் போதும் என்ற ஆதாரமற்ற உங்களது கூற்றை நிராகரிக்கும் வண்ணம் தான், முதல் பிறையை கண்களால் பார்த்து மட்டும் அல்ல என்று நாம் கூறிவருகிறோம்.
//நபி (ஸல்)அவர்கள் காட்டிய ஒரே வழி மறையும் சந்திரனை மக்ரிபுடைய நேரத்தில் பிறை 29 பின்னேரம் 30 வது இரவு பார்ப்பது மட்டுமே இதையே நாங்கள் பின்பற்றி இந்த ஒரே நாள் மட்டும் தெரியும் நேரத்தில் பார்த்தால் போதும் மற்ற நாட்களிலோ பார்க்கவேண்டியதில்லை பார்த்த நாளிலிருந்து நாட்களை எண்ணி வரும்போது மீண்டும் அதே 29 பின்னேரம் 30 வது இரவு பார்த்து மறு மாதத்தை முடிவு செய்வோம்// சகோதரர் அ.வ.
முதலில், இது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழி என்பதற்கு ஆதாரம் எங்கே?
//30 வது இரவு பார்ப்பது மட்டுமே // அந்த இரவை 30 வது என்று முன்னரே முடிவு செய்துவிட்ட பிறகு பிறை பார்ப்பதேன்? மற்ற நாள்களிலெல்லாம் பிறை பார்க்கத் தேவையில்லை என்பது 'பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன.- (2:189)" என்ற இறைக்கட்டளைக்கு மாற்றமாக உள்ளதே?. பிறைகள் தான் மக்களுக்கு காலம் காட்டும். நீங்களோ, ஒரு பிறை மட்டும் போதும் மற்ற பிறைகளையெல்லாம் பார்க்கத் தேவையில்லை என்றால் அது குர்'ஆனுக்கு முரண்படுவதில்லையா?
நாம் வாழும் பகுதியில், ஒவ்வொறு பிறையின் படித்தளங்களையும் கண்களால் பார்த்து கணக்கைச் சரி செய்�
நம் ஊயிரினும் மேலான கண்மணி நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் மிக்க அழகாக தெளிவுபட உறுதியாக கூறிய
//ஸூமூலி ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி ருஃயத்திஹீ //
விஷயத்தில் நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
நான் கூறியது நபி ஸல் அவர்களின் கூற்றிலே விஷயத்திலே நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். என்றே எழுதினேன் இதில் என்ன தவறு நம் ஈமான் நம்பிக்கையும் அது தானே .இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு .
அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்)அவர்களும் உலகம் முழுவதும் ஒரே கிழமையில் தான் நோன்பு மற்றும் பெருநாள் கொண்டாடவேண்டும் என்று கூறாத போது நாம் ஏன் அதை பற்றி தேவையற்ற பிரச்சனையை இந்த சமுதாயத்தில் ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதற்குரிய பதில் என்ன ?ஆதாரம் உள்ளதா ?இது பித் அத் வழிகேடு இல்லையா ?
அன்பானவரே இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி(ஸல்)அவர்களின் கட்டளை .அதை பின்பற்றி பார்ப்போம் // சகோதரர் அ.வ.
இதற்கான ஹதீஸை (ஆதாரத்தை) பல காலமாகப் பதிவிடச் சொல்கிறோம். இன்னமும் தாங்கள் பதியாமல் இழுத்தடிக்கிறீர்கள். இனியாவது பதிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். Rasik
அன்பரே மனித குலத்தின் காலண்டர் பக்கம் 26
ஷஅபான் இருபத்தி ஒன்பது ஆகிவிட்டால் இப்னு உமர் (ரலி) அதை (பிறையை ) பார்ப்பார்
அது தென்பட்டால் அதைக் கடைப்பிடிப்பார் அவருடையே பார்வையில் மேகமோ மேகத்தின் ஒரு துண்டோ இல்லாத நிலையில் அது தென்படாவிட்டால் மறு நாள் நோன்பில்லாமல் காலைப் பொழுதை அடைவார்கள். மேகமோ மேகத்தின் ஒரு துண்டோ இருக்கும் நிலையில் அது தென்படாவிட்டால் மறுநாள் நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைவார்கள்
--
நான் கூறியது நபி ஸல் அவர்களின் கூற்றிலே விஷயத்திலே நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். என்றே எழுதினேன் இதில் என்ன தவறு நம் ஈமான் நம்பிக்கையும் அது தானே .இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு .
இதற்குரிய பதில் என்ன ?ஆதாரம் உள்ளதா ?இது பித் அத் வழிகேடு இல்லையா ?
என்று எழுதி உள்ளீர்களே ஒரு வார்த்தைக்கு பல பொருள் இருக்கும்போது அதில் முதன்மையாக அதுவும் அதிகமாக பயன்படுத்தும் "கண்ணால் பார்த்தல் என்ற பொருளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து தான்அர்த்தம் கொடுக்கவேண்டும்
ருஃயத் என்னும் வார்த்தைக்கு அன் நள்ரு பில் அயன் கண்ணால் காண்பது அன் நள்ரு பில் கல்ப் உள்ளத்தில் உணர்தல் அன் நள்ரு பில் அக்ல் அறிவால் காண்பது என்று சரியாக எழுதிவிட்டு
உணர்தல் கனவு காணுதல் ளன்ன கண்கிடுதல் கணித்தல் போன்ற பொருட்கள் உள்ளன் என்று இல்லாததை ஏன் எழுத வேண்டும் மக்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற தைரியமா ?ருஃயத் என்னும் வார்த்தைக்கு மட்டுமே அர்த்தம் எழுதி விட்டு அத்தோடு நிறுத்தி விடுவது தானே முறை
எனவே ருஃயத் என்பதற்க்கு பார்வையைக் கொண்டு சிந்தித்து அறிதல் என்ற பொருள் உட்பட மேற்கூறப்பட்ட தகவலால் அறிவால் ஆய்வால் கணக்கீட்டால் அறிந்து கொள்வது என்ற பரந்த அர்த்தங்கள் ருஃயத் என்ற சொல்லிற்கு உள்ளன என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம் என்று உள்ளதே இதற்க்கு என்ன பதில் ? ஏன் முரண் ?
ஷஅபான் இருபத்தி ஒன்பது ஆகிவிட்டால் இப்னு உமர் (ரலி) அதை (பிறையை ) பார்ப்பார்
அது தென்பட்டால் அதைக் கடைப்பிடிப்பார் அவருடையே பார்வையில் மேகமோ மேகத்தின் ஒரு துண்டோ இல்லாத நிலையில் அது தென்படாவிட்டால் மறு நாள் நோன்பில்லாமல் காலைப் பொழுதை அடைவார்கள். மேகமோ மேகத்தின் ஒரு துண்டோ இருக்கும் நிலையில் அது தென்படாவிட்டால் மறுநாள் நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைவார்கள்
ஆனால் மக்களுடன் சேர்ந்துதான் இப்னு உமர் (ரலி)நோன்பை விடுவார்கள் .அதில் இந்த கணக்கை எடுக்கமாட்டார்கள் என்றும் நாஃபிஃ கூறினார்.
நூல் சுனன் நசாயி ஹதீஸ் எண் 1976 அபூ தாவூத் அஹ்மத்
மேற்கொண்ட ஹதீஸ் மற்றும் இப்னு உமர் (ரலி ) அவர்களின் நடைமுறைப்படி சஹாபாக்களில் பெரும் பகுதியினர் இருந்தனர் அவர்களில் அன்னை ஆய்ஷா அபூ ஹுரைரா முஆவியா (ரலி)முதலிய சஹாபாக்களும் இருந்தார்கள் இந்த செய்தியை பைஹகீ யில் காணலாம்
சஹாபாக்களின் இந்த குழுவை நபி (ஸல்)அவர்கள் கண்டிக்கவில்லை.இது தவறு என்றும் சொல்லவில்லை.
ஷாஅபானை இருபத்தி ஒன்பதை அடைந்தால் பிறையை காணவேண்டும் பிறை கண்டுவிட்டால் மறுநாள் ரமளான் நோன்பு நோற்கவேண்டும்.பிறையைக் காணாவிட்டால் மறுநாள் ரமளான் நோன்பு நோற்ககூடாது.நாள்களை முப்பதாக கணக்கிட வேண்டும் இவ்வாறுதான் நபி (ஸல்)கட்டளையிட்டுள்ளார்கள் என தற்போது கூறி வருகிறோம்
இப்னு உமர் (ரலி)
நபி (ஸல்)அவர்களுக்கு மாற்றமாக செயல்பட்டார்கள் எனக் கூறமுடியாது ஏனெனில் இப்னு உமர் (ரலி)சுன்னாவை பின்பற்றிய அளவிற்கு மற்றவர்கள் பின்பற்றினார்கள் எனக் கூறமுடியாது
இரவில் தான் பார்க்கவேண்டும் என்பதற்கு உங்களின் மனித குல காலண்டர் பக்கம் 28 மற்றும் 81 ல் அபூ தாவூத் ஹதீத் எண் 1992 ரிப்யு இப்னு ஹிராஷ் அறிவிக்கும் ஹதீதின் தமிழாக்கம் "மேற்கொண்ட ஹதீத்ஸை நிதானமாக சிந்திக்க வேண்டும் நபி(ஸல்)அவர்களிடம் சுப்ஹு நேரத்தில் பஜ்ரு தொழுகைக்கு பின்னர் இரண்டு பேர் வந்து நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம் எனக் கூறுகிறார்கள்."
அன்பானவரே சங்கமம் ஒவ்வொரு மாதமும்ஏற்பட்டே ஆகும் இதில் யாருக்கும் சந்தேகம் அறவே இல்லை அப்படியிருக்க ப இன் கும்ம உங்களுக்கு மறைக்கப்பட்டால் என்று கூறியிருப்பதால் மறைக்கப்படாமலும் அதாவது உங்கள் கருத்தின் படி சங்கமம் ஏற்படாமலும் இருக்கலாம் என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அல்லவா அர்த்தம்வரும் .
அன்பரே இவ்வாறு எல்லாம் தகவல் கொடுக்க வேண்டும் என்று நம் ஷரிஅத் கட்டளை இடவில்லை அது அவசியமும் கிடையாது நீங்கள் சரி பார்த்து தான் இந்த சமுதாயத்திற்கு அறிவிக்க அதை இந்த சமுதாயமும் ஏற்க வேண்டும் என்பது என்ன அவசியம்? உங்களைவிட சமுதாயத்தில் அக்கறையுள்ள அறிஞர்கள் அதிகம் உள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அன்பரே இந்த குர்ஆனின் வசனத்திற்குரிய செயல் முறை நபி (ஸல்)அவர்கள் தானே நமக்கு நடைமுறை படுத்தி காட்டியிருக்க வேண்டும் அவ்வாறு செயல்பட்டதாக ஒரேஒரு ஹதீத் கூட நான் தேடியவரை இல்லை இருக்கவும் முடியாது சந்திரனின் கடைசி படித்தரமாக குர்ஆன் கூறும் உர்ஜுனல் கதீமைக்கூட ஒருமுறை கூட நபி(ஸல்) அவர்கள் பார்த்ததாக எந்த ஒரு ஹதீதிலும் சமிக்கனையாக கூட வரவில்லை.இந்த இரண்டு செயலுக்கும் பல முறை தொடர்ந்து வலியுறுத்தியும் அதை கண்டுக்காது விட்டு விட்டு இதுவரை பதிலே தரவில்லை .உலகம் முடிந்தாலும் உங்களால் தரவே முடியாது.இது தான் ஹிஜ்ரா கமிட்டியின் நிலை.
அன்பானவரே உதாரணமாக சனிக்கிழமை யில் 14.09.2013 இல் தலைப் பிறை அதுதான் மாதத்தின் ஆரம்பம் என்று தெரிந்த பின் மாதத்தின் அன்றிலிருந்து நாளை எண்ணிக்கொண்டு வந்தால் போதுமே.ஏன் ஒவ்வொரு நாளும் பிறையின் படித்தரத்தை பார்க்கவேண்டும்.