நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம். எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள். அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு. மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 27:4-5)