அகதி வாழ்க்கை ஈழத்தமிழனின் தலைவிதி, இதுக்கு நானும் விதிவிலக்கில்ல.
எண்பத்தி நாலாம் ஆண்டு முதல் முதலா வீட்ட விட்டு அகதியா வெளிக்கிட்ட
நாள் முதலா, ஊருரா அலைஞ்சு, நாடு நாடா அலைஞ்சு கடைசியா இங்க வந்து தஞ்சம்
அடைஞ்சு இருக்கிறன்.
வன்னியில எங்கட மக்கள் பட்ட கஷ்ரத்தோட பாத்தா, நான் பட்டதெல்லாம்
தூசு எண்டாலும், அதையும் எழுதுறன். இந்த தொடர்பதிவை நிம்மதி தேடி,
நாட்டை விட்டு, உடமைகளை துறந்து, படகேறி பாக்கு நீரிணையை கடக்க
முற்பட்டபோது, பொங்கும் கடலில் மடிந்து போன எம் உறவுகளுக்கு
காணிக்கையாக்குகிறேன்.
http://anthakkalam.blogspot.com/2011/09/1.html