பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்!

4,827 views
Skip to first unread message

muslim

unread,
Jan 2, 2010, 9:51:57 AM1/2/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மனிதன் வாழ்வதற்கு வசதியாக பேரண்டத்தைப் படைத்தப் பேரறிவாளன் அல்லாஹ், மனிதனின் தேவைகளை தன்னிடம் கேட்பதை விரும்புகிறான். உயர்ந்தோன் அல்லாஹ் மனிதனின் நியாயமான தேவைகளை அவனிடம் கேட்கும்போது அவற்றை நிறைவேற்றக் காத்திருக்கிறான். 

''என்னிடம் கேளுங்கள் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்'' (அல்குர்ஆன் 40:60)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும், (அவன்) பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு நெருக்கமாக இருக்கின்றோம். (அல்குர்ஆன் 50:16)

''அல்லாஹ்விடம் துஆ - பிரார்த்தனையை விட மதிப்பிற்குரியது எதுவுமில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - திர்மிதீ, இப்னுமாஜா)

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகிறான், ''என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவுர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 7405, 7505. முஸ்லிம் 5195)

குறிப்பு:- அன்பின் குழும உறுப்பினர்களுக்கு, துஆ - பிரார்த்தனை குறித்த திருமறை வசனங்கள், மற்றும் நபிமொழிகளை இந்த இழையில் தொடர்ந்து பதிவு செய்யலாம். ஓரிடத்தில் பதிவு செய்தால் குழும அங்கத்தினர் சிரமமின்றி மீண்டும், மீண்டும் படித்துத் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும். மறக்க வேண்டாம், பிரார்த்தனைகள் குறித்தவை மட்டும் இதே இழையில் பதியவும்.

அப்துல் காதிர்

unread,
Jan 2, 2010, 8:03:54 PM1/2/10
to fro...@googlegroups.com
பாவமன்னிப்பு கோருவதில்
தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே
மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு
இரவிலேயே மரணித்து விட்டால் அவனும்
சொர்க்கவாசியாவான்
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

"அல்லாஹும்மஅன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா
அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன
அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது
பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூவு ல(க்)க பினிஃமதி(க்)க
அலய்ய , வஅபூவுல(க்)க பிதன்பீ பக்பிர்லீ
பஇன்னஹு லா
யஃக்பிருத் துனூப இல்லா அன்(த்)த".

பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத்தவிர
வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான்
உனது அடிமை.உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின்படியும் என்னால் இயன்ற
வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும்
உன்னிடம் மீள்கிறேன்.
எனவே என்னை மன்னிப்பாயாக!
உன்னைத் தவிர யாரும்
பாவங்களை மன்னிக்கமுடியாது.
ஆதாரம்: புகாரி 6309


On 1/2/10, muslim <tomu...@gmail.com> wrote:
> அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
>
> மனிதன் வாழ்வதற்கு வசதியாக பேரண்டத்தைப் படைத்தப் பேரறிவாளன் அல்லாஹ், மனிதனின்
> தேவைகளை தன்னிடம் கேட்பதை விரும்புகிறான். உயர்ந்தோன் அல்லாஹ் மனிதனின்
> நியாயமான தேவைகளை அவனிடம் கேட்கும்போது அவற்றை நிறைவேற்றக் காத்திருக்கிறான்.
>
>

> *''என்னிடம் கேளுங்கள் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்''* (அல்குர்ஆன் 40:60)


>
> மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது

> என்பதையும் நாம் அறிவோம். அன்றியும், (அவன்) *பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு
> நெருக்கமாக இருக்கின்றோம்.* (அல்குர்ஆன் 50:16)
>
> *''அல்லாஹ்விடம் துஆ - பிரார்த்தனையை விட மதிப்பிற்குரியது
> எதுவுமில்லை''*என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் -


> திர்மிதீ, இப்னுமாஜா)

> *


> வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகிறான், ''என் அடியான் என்னைப் பற்றி
> என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு
> கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில்
> நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர்
> அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர்
> அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை
> நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம்
> அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள
> அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை
> நோக்கி ஓடிச் செல்வேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்

> கூறினார்கள்.*அறிவிப்பவுர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 7405,


> 7505. முஸ்லிம் 5195)
>

> *குறிப்பு:-* அன்பின் குழும உறுப்பினர்களுக்கு, துஆ - பிரார்த்தனை குறித்த


> திருமறை வசனங்கள், மற்றும் நபிமொழிகளை இந்த இழையில் தொடர்ந்து பதிவு
> செய்யலாம். ஓரிடத்தில் பதிவு செய்தால் குழும அங்கத்தினர் சிரமமின்றி மீண்டும்,
> மீண்டும் படித்துத் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும். மறக்க வேண்டாம்,
> பிரார்த்தனைகள் குறித்தவை மட்டும் இதே இழையில் பதியவும்.
>

> --
> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
> To unsubscribe from this group, send email to
> fromgn+un...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

அப்துல் காதிர்

unread,
Jan 2, 2010, 8:45:36 PM1/2/10
to fro...@googlegroups.com
மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது:

பிரார்த்தனை செய்து முடிக்கும் போது,
"இறைவா! இந்தப் பெரியாரின் பொருட்டால்
இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள்"
என்று சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

தனது அடிமைத் தனத்தையும்,
இறைவனின் பேராற்றலையும்
உணர்ந்து உருகிக் கேட்கும் வகையில்
அமைந்த பிரார்த்தனையைத் தான்
இறைவன் ஏற்றுக் கொள்வான்.

மற்றவர் பெயரைச்
சொல்லி இறைவனை மிரட்டுவது போல்
அமைந்த இது போன்ற திமிரான வார்த்தைகள் இறைவனுக்குக் கடும்
கோபத்தை ஏற்படுத்தும்.

எந்த மகானுக்காகவும் இறைவன் எதையும்
தரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

ஆதம் (அலை)
அவர்கள் நபிகள் நாயகத்தின்(ஸல்)
பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால்
மன்னிக்கப்பட்டனர் என்ற கட்டுக்கதையை இதற்கு ஆதாரமாகக்
காட்டுகின்றனர்.

திர்மிதீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும், இன்ன பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்ட
இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என
அறிஞர்கள் கூறியுள்ளனர் .

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின்
அஸ்லம் என்பவர்
வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது.
அவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர்.

ஆதம் (அலை)
எவ்வாறு மன்னிப்புக் கேட்டார் என்று திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள்
விளக்குவதற்கு எதிராகவும் இந்தக்
கதை அமைந்துள்ளது.

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக்
கொண்டார். எனவே அவரை இறைவன்
மன்னித்தான்; அவன்
மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 2:37)

இறைவன் புறத்திருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக்
கொண்டார் என்று திருக்குர்ஆனின் 2:37
வசனத்தில் கூறப்படுகிறது. அந்த
வார்த்தைகள் யாவை என்பது இங்கே கூறப்படாவிட்டாலும்
திருக்குர்ஆனின் 7:23 வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது.

'எங்கள் இறைவா!
எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம்.
நீ எங்களை மன்னித்து, அருள்
புரியவில்லையானால்
நஷ்டமடைந்தோராவோம் '
என்று அவ்விருவரும் கூறினர்.
(அல்குர்ஆன் 7:23)

இதைக் கூறித் தான் இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ்
அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக்கேட்கும்
போது தான் இறைவன்
மன்னிப்பான் என்பதையும் 7:23
வசனத்திருந்து அறியலாம்.

எனவே அந்தக்கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும்.

அப்துல் காதிர்

unread,
Jan 2, 2010, 10:24:13 PM1/2/10
to fro...@googlegroups.com
தல்கீன் ஓதுதல்:

ஒருவரை அடக்கம்செய்து முடித்தவுடன்
அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு
மோதினார் தல்கீன் என்ற
பெயரில் எதையோ கூறுவார்.

"உன்னிடம் வானவர்கள் வருவார்கள்". "உன்
இறைவன் யார்?" எனக் கேட்பார்கள்.
"அல்லாஹ்" என்று பதில் கூறு! "உன் மார்க்கம் எது?" எனக்
கேட்பார்கள். "இஸ்லாம்" என்று கூறு ' என்று
அரபு மொழியில் நீண்ட
அறிவுரை கூறுவது தான் தல்கீன்.

இப்படிச் சொல்லிக் கொடுத்து , அது
இறந்தவருக்குக் கேட்டு , அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால்
இதை விட உச்ச கட்ட
மடமை வேறு என்ன இருக்கமுடியும். இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.

"அடக்கம் செய்து முடித்தவுடன் அதன்
அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
நின்று கொண்டு (மக்களை நோக்கி)
"உங்கள் சகோதரருக்காகப்
பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக
உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்"
என்று கூறுவார்கள். அறிவிப்பவர்:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).
நூல்:அபூ தாவூத் 2894 , ஹாகிம்1 /370, பைஹகீ 4 /56.

எனவே மய்யித்திற்குச்
சொல்லிக் கொடுக்கும்
தல்கீனை ஒழித்துக்கட்டி அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும்
துஆச் செய்ய வேண்டும்.

ismail ismail

unread,
Jan 2, 2010, 11:45:36 PM1/2/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் . அப்துல் காதிர் அவர்களே தாங்கள்  துஆவில் எந்த பெரியாரையும் முன்னிறுத்த கூடாது என்று சொல்கிறிர்கள் மேலும் நபிகளையும் முன்னிறுத்த கூடாது என்று கூறுவதுபோல் உங்கள் எழுத்துக்கள் அமைந்துள்ளது எந்த காரியத்துக்கும் நபிகளை முன்னிறுத்த கூடாது என்று சொல்கிறிர்களா அப்படியன்றால் வசில்லாவைப்பற்றி உங்கள் கருத்து என்ன   

அப்துல் காதிர்

unread,
Jan 3, 2010, 12:52:32 AM1/3/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் .
வஸீலாவைப்பற்றி என்
கருத்து :

"நம்பிக்கை கொண்டோரே!
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!
அவனை நோக்கி ஒரு வஸீலாவைத்
தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில்
அறப்போர் செய்யுங்கள்!
வெற்றி பெறுவீர்கள்".
(அல்குர்ஆன் 5:35)

வஸீலா என்பதன் பொருள் சாதனம்.
கடல் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக' சாதனமாக உள்ளது என்பர்.


இறைவனை நெருங்க நினைப்பவர்கள்
"நல்லறங்கள்" எனும்
"வஸீலாவை"
சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்
என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது.

இறைவனை நெருங்க
வேண்டுமானால் ஒவ்வொருவரும்
நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும்.

அவ்வாறின்றி மகான்களை இடைத்
தரகர்களாகப்
பயன்படுத்தி வெற்றி பெறமுடியாது என்பதே வஸீலா தேடுங்கள்!'
என்பதன் கருத்தாகும்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக்
கட்டும் வகையில் அமைந்தஇவ்வசனத்தை இடைத்தரகர்களை ஏற்படுத்திக்
கொள்ளுங்கள்என்று நேர் மாறாக விளங்கிக்
கொள்கிறார்கள்.

வஸீலாவுக்கு மகான்கள், இடைத்தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது.
இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில்
"நம்பிக்கையாளர்களே"
என்று அழைக்கப்படுகிறது.

இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும்
அடங்குவார்கள். 'மகான்களும்
வஸீலா தேட வேண்டும்'
என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

'நம்பிக்கையாளர்களே' என்ற அழைப்பில் முதல் அடங்கக்கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தாம். அவர்களுக்கும்
வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்?
என்று சிந்தித்தால் இப்படி விளங்கமாட்டார்கள்.

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள்உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு
மகான்கள் உள்ளிட்ட
அனைவரையும் கட்டுப்படுத்துமோ,
அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும்
கட்டுப்படுத்தும்.

மகான்கள் கூட
வஸீலா தேடுகிறார்கள்
என்று தெளிவாகவே கூறும் மற்றொரு வசனம்

"இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு)
மிகவும்
நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத்
தேடு கின்றனர்.
அவனது அருளை எதிர்பார்க் கின்றனர்.
அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர்.
உமது இறைவனின்
வேதனை அச்சப்பட
வேண்டியதாகும்(17:57)

எனவே நல்லறங்கள் எனும் வஸீலா -சாதனம் மூலம் இறைவனை நெருங்குங்கள் என்று
பொருள் கொண்டால் தான் நபிகள்நாயகம் (ஸல்) உள்ளிட்ட
அனைத்து முஃமின்களும்
வஸீலா தேட வேண்டும்
என்பது பொருந்தும்.

மகான்களைப்
பிடித்துக் கொள்ளுங்கள் என்று பொருள்
கொண்டால் இவ்வசனம்
பொருளற்றதாகி விடும்.
(ALLAH miga arinthavan)

ismail ismail

unread,
Jan 3, 2010, 1:52:13 AM1/3/10
to fro...@googlegroups.com

trPyh vd;why; vd;d?

xUtuplk; xU nghUis Neupy; Nfl;fhky;> gpwuplk; nrhy;ypf; Nfl;FkhW nrhy;tjw;F trPyh vd;W nrhy;yg;gLfpwJ.

egp(]y;) mtu;fspd; tho;ehl;fspy; kf;fs; ehafk;(]y;) mtu;fsplk; te;J jq;fSf;fhfg; gpuhu;j;jid nra;AkhW $Wtu;. ehafKk; mtu;fSf;fhfg; gpuhu;j;jid nra;thu;fs;. ,iwtDk; kdpju;fSf;F ,t;thW nra;AkhW Nghjid nra;Js;shd;.

mtu;fs; jq;fSf;F mePjkpioj;Jf; nfhz;lNghJ ck;kplk; mtu;fs; kd;dpg;Gf; Nfhup> J}jUk; mtu;fis kd;dpf;ff; Nfhup ,Ue;jhy;> epr;rakhf mtu;fSila kd;dpg;ig Vw;Wf; nfhs;gtdhfTk; fUizahsdhfTk; ,iwtid mtu;fs; fz;bUg;ghu;fs;. (mj;. 4 trdk; 64)ngUkhdhupd; tho;f;ifapy; mtu;fspd; JMf;fshy; kf;fSf;Fg; gyd; fpilj;Jf; nfhz;bUe;jJ. xUKiw xU fpuhkthrp te;J gQ;rj;ijg; gw;wp Kiwapl;lhu;: ehafNk! ghijfs; Jz;bf;fg;gl;Ltpl;ld. fl;blq;fs; tpOe;Jtpl;ld. ,ij epWj;JkhW ,iwtdplk; gpuhu;j;jid nra;Aq;fs; vd;W $wpdhu;. ehafk;(]y;) mtu;fs;> ,iwth! vq;fs; kPjy;yhky; vq;fisr; Rw;wpAs;s kiyfspYk; Fd;WfspYk; kuq;fspd; %LfspYk; gs;sj;jhf;FfspYk; ,k;kioia mg;Gwg;gLj;Jthahf!vd;W gpuhu;j;jid nra;jhu;fs;.

ehafk;(]y;) mtu;fs; JM nra;jJk thdk; njsptile;J Nkff; $l;lk; fiye;Jtpl;lJ.K];dJ ,khk; m`;kJ> jpu;kpjP> e]<> ,g;Dkh[h Mfpa E}y;fspy; xU rk;gtk; $wg;gl;Ls;sJ. xU fz; njupahjtu;> fz;nzhsp fpilj;jpl ,iwtdplk; ,iwQ;RkhW egpfs; ehafk;(]y;) mtu;fsplk; Ntz;bdhu;. ePu; tpUk;gpdhy; ehd; JM nra;fpNwd; my;yJ ePu; nghWikiaf; filg;gpbAk;! nghWikia filg;gpbg;gJ jhd; kpfr; rpwe;jJ vd ehafk;(]y;) mtu;fs; $wpdhu;fs;.

,iwth! ehd; cd;dplk; Ntz;LfpNwd;. cd; J}juhfpa fUiz egp K`k;kJ(]y;) mtu;fs; %ykhf cd;dplk; trPyh NjLfpNwd;: K`k;kNj! my;yh`;tpd; J}jNu! ehq;fs; cq;fs; %ykhf vd; ,iwtdplk; vd; Njitia mtd; epiwNtw;wpj; jUthd; Ntz;b trPyh NjLfpNwd;: ,iwth! eP vd; tp\aj;jpy; mtu;fSila gupe;Jiuia Vw;Wf; nfhs;thahf. r`P`{y; Gfhupapy; `yuj; ,g;D khypf;(uyp) %ykhf xU nra;jp $wg;gl;Ls;sJ. cku;(uyp) mtu;fs; fhyj;jpy; gQ;rk; Vw;gl;lNghnjy;yhk; cku;(uyp) mtu;fs; ehafk;(]y;) mtu;fspd; ngupa je;ij mg;gh]; ,g;D mg;Jy; Kj;jypg;(uyp) mtu;fis trPyhthf;fp JM nra;gtu;fshf ,Ue;jhu;fs;. mtu;fs; $Wthu;fs;:-

,iwth! ehq;fs; gQ;rj;jhy; gPbf;fg;gl;lNghnjy;yhk; cd;dplk; vq;fs; egpia tryhthf Mf;fpf; nfhz;bUe;Njhk;. eP kioia ,wf;fp te;jha;. ,g;nghOJ cd;dplk; vq;fs; egpapd; ngupa je;ijiaf; nfhz;Lk; trPyh NjLfpNwhk;. vq;fSf;F kioiaf; nfhLg;ghahf.,tu;fisg; gw;wp ,khk; ,g;D ijkpa;ah mtu;fs; $WtjhtJ:-

,tu;fspd; $w;W khu;f;fr; rl;lj;jpd; mbg;gilapYk;> kjpg;gpd; mbg;gilapYk; cz;ikf;Fg; Gwk;ghdjhFk;. mtu;fs; ,iwtdpd; rl;lj;jpw;F cld;gl;ltu;fspy;iy. mtu;fs; nrhy;tJ ,iwtdpd; Fzq;fSf;F nghUj;jkhdjd;W.

,khk; ,g;D ijkpa;ahtpd; fUj;Jg;gb ,j;jifa trPyh ehafk;(]y;) mtu;fspd; tho;ehspy; kl;Lk; jhd; $Lkhdjhf ,Ue;jJ. mtu;fspd; kiwTf;Fg; gpwF vtUk; ,j;jifa trPyh Njltpy;iy. Vnddpy;> ehafj;jplk; te;J JM nra;AkhW Ntz;bl Kbahky; Ngha;tpl;lJ. ehafj;jpd; tho;ehspYk;> kiwTf;Fg; gpwFk; ,j;jifa trPyh NjLtJ xd;whfNt ,Ue;jpUe;jhNyh> my;yJ ahUf;fhfTk; ehafk;(]y;) JMr; nra;tJk; nra;ahjpUg;gJk; rkkhfNt ,Ue;jpUe;jhNyh egpj; Njhou;fs; ehafj;jpd; kiwTf;Fg; gpwF mtu;fis tpl;Ltpl;L kw;w vtuplj;jpYk; ftdk; nrYj;jpapUf;fkhl;lhu;fs;. egpj;Njhou;fSs; vtUk; mt;thW nra;ahjpUf;f> ,j;jifa trPyh Njl ekf;nfd;d cupik ,Uf;fpwJ? ehafj;jpd; Njhou; ngUkf;fs; ek;iktpl \uPmj;ij mjpfkhf mwpe;jtu;fshapw;Nw!

vdNt> ,khk; ,g;D ijkpa;ah mtu;fs; $wpdhu;fs;:- K];ypk;fs; ts;sy; egp(]y;) mtu;fspd; tho;ehspy; mt;ufsplk; te;J jq;fSf;fhf JM nra;AkhW Nfl;Lf; nfhz;lhu;fs;. kiwTf;Fg; gpd; mtu;fspd; rkhjpapy; te;Njh Ntwplj;jpNyh mtu;fsplk; JM nra;AkhW egpj; Njhou;fs; Ntz;ltpy;iy; mt;thW ,d;W gyu; ey;Nyhu;fspd; rkhjpfspy; te;J nry;fpwhu;fs;. rpyu; jq;fSila Njitia epiwT nra;khW Nfl;fpd;wdu;. mtu;fspd; %yk; my;yh`; kPJ rj;jpak; nra;fpd;wdu;. my;yJ ,ijg; Nghd;w gy nray;fisr; nra;fpd;wdu;. ,j;jifa nray;fis egpj; Njhou;fNsh jhgpaPd;fNsh> mtu;fisg; gpd;gw;wpatu;fNsh nra;atpy;iyNa! fhyQ;nrd;w kfhd;fsplk; Njitfisf; Nfl;FkhWk; mtu;fsplk; cjtp NjLkhWk; \uPmj; $wtpy;iy. Kd;Ndhu;fSs; vtUk; mt;thW nra;atpy;iy.வசிலாவைப்பற்றி மாற்று கருத்து கொண்ட ஒரே இமாம் இப்னு திமிய (ரஹ்)அவர்கள் கூட வசிலா இறந்தவர்களை முன் வைக்ககூடாது என்று தான் சொல்கிறார் மேலும் வசிலாவைப்ப்ற்றி தெரிய இமாம் இப்னு திமிய (ரஹ்)அவர்கள் வரலாறு படியுங்கள் 

அப்துல் காதிர்

unread,
Jan 3, 2010, 2:50:01 AM1/3/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் .
சகோதரர் இஸ்மாயில் அவர்களே தாங்கள் என்ன சொல்கிறிர்கள் என்று
புரியவில்லை. எனக்கு உங்கள் பான்ட் display ஆகவில்லை. எனக்கு மறுப்பு
சொல்கிறிர்களா?


On 1/3/10, ismail ismail <ismail...@gmail.com> wrote:

muslim

unread,
Jan 3, 2010, 4:01:38 AM1/3/10
to fro...@googlegroups.com

முன்னொரு காலத்தில் மூன்று பேர் மழைக்காக மலைக் குகையொன்றில் ஒதுங்கினார்கள். அப்போது மலையிலிருந்து உருண்டு வந்த பாறையொன்று குகையின் வாசலை அடைத்து விட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்காக மூவரும் தாங்கள் செய்த நல்லறங்களின் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடுகின்றனர். அல்லாஹ்வும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, குகை வாசலை அடைத்துக் கொண்ட பாறை அகற்றி குகையில் சிக்கிக்கொண்ட மூவரையும் விடுவிக்கின்றான்.

 الْوَسِيلَةَ - வஸீலா என்பதன் பொருள் இதுதான்: அல்லாஹ்வுக்காக மட்டும் செய்த - செய்யும் கலப்பற்ற அறச் செயல்களைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி கோருவதே வஸீலாவாகும். எடுத்துக் காட்டு:

"(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், 'நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றனர்.
 
அவர்களில் ஒருவர், 'இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானதைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.

மற்றொருவர், 'இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு' எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.

மற்றொருவர், 'இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு' எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி, 2215, 2272, 2333, 3465, 5974. முஸ்லிம் 5293)

அறச் செயல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதே ''வஸீலா'' என்பதாகும். நபிமார்களும், நல்லடியார்களும் பாமர மக்களும் நல்லறங்களைக் கொண்டே அல்லாஹ்வை நெருங்க வேண்டும். கலப்பற்ற நல்லறங்களால் மட்டுமே இறைவனை நெருங்க முடியும்! நபிமார்கள், மற்றும் நல்லடியார்களின் பொருட்டாலும் இறைவனை நெருங்கலாம் என்பது தவறான புரிதலாகும்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

மேலும், வஸீலா என்பது சுவனத்தின் உயர் பதவி என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பார்க்க: புகாரி 614. முஸ்லிம் 628. ஆகிய நபிமொழிகள்.



2010/1/2 muslim <tomu...@gmail.com>

ismail ismail

unread,
Jan 3, 2010, 7:18:18 AM1/3/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் .சகோதரர்களே இதற்க்குபெயரும் வசிலா என்று சொல்லப்படும். அதாவது ஒருவர் ஒரு பொருளை நேரில் கேட்காமல் பிறரிடம் சொல்லிகேட்குமறாரு சொல்வதற்கு வசிலா என்று சொல்லப்படுகிறது.நபி (ஸல் )அவர்களின் வாழ்நாட்களில் மக்கள் நபி (ஸல் ) அவர்களிடம் தங்களுக்காய் பிராத்தனை செய்யும் மாறு கூர்வார்கள் நபியும் அவர்களுக்காக பிராத்தனை செய்வார்கள்.இறைவனும் மனிதர்கள் இவ்வாறு செய்யும் மாறு போதனை செய்துள்ளான்.அவர்கள் தங்களுக்கு அணிதமிளைத்துக் கொண்டபோது உம்மிடம் அவர்கள் மன்னிப்பு கோரி தூதரும் அவர்களை மன்னிக்க கோரி இருந்தால் நிச்சியமாக அவர்களுடைய மன்னிப்பை ஏற்றுகொல்பவனாகவும் கருனையலனாகவும் இறைவனை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:64   இந்த வசனத்தில் தவறு செய்தவர்கள் நபியிடம் மன்னிப்பு கோரி நபியும் துஆ செய்தால் அது நிச்சியமாக ஏற்றுகொள்ளப்படும் என்று அல்லா கூறுகிறான்.நபியிடம் துஆ செய்யச்சொலி நபியும் துஆ செய்ததாக பல ஹதிஸ்கள் காணலாம். நபி (ஸல் ) கலத்திக்குப்பின்பு கூட ஒரு சம்பவம் காணப்படுகிறது ஸஹிஹ் புகாரியில் ஹஜரத் இப்னு மாலிக் (ரலி) மூலமாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது உமர் (ரலி ) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்ப்பட்டபோதேல்லாம் உமர் (ரலி )அவர்கள் நாயகம் (ஸல் ) அவர்களின் பெரியதந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்( ரலி ) அவர்களை வசிலாவாக்கி துஆ செய்பவர்களாக இருந்தார்கள் இருந்தார்கள்.அவர்கள் கூறுவார்கள் இறைவா நாங்கள் பஞ்சத்தால் பிடீக்கபட்டபோதேல்லாம் உன்னிடம் எங்கள் நபியை வசிலாவாக ஆக்கி கொண்டிருந்தோம் நி மழையை இறக்கிவந்தாய் இப்பொழுது உன்னிடம் எங்கள் நபியின் பெரிய தந்தயைக்கொண்டு வசீலா தேடுகிறோம் எங்களுக்கு மழையை கொடுப்பையாக என்று.. நான் அதற்காக தர்காவில் உள்ள அவ்ளியக்களிடமோ அல்லது இன்று உள்ள மற்றவர்களை முன்னிறுத்தலாம் என்றோ சொல்லவில்லை நபியை முன்னிருத்துவதற்க்கு ஆதாரங்கள் பல உள்ளது என்று சொல்கிறேன்  

muslim

unread,
Jan 3, 2010, 11:25:59 AM1/3/10
to fro...@googlegroups.com
 அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:64)

அன்புச் சகோதரர் இஸ்மாயில் அவர்களுக்கு,

4:64வது வசனத்தை தவறாக எழுதியுள்ளீர்கள். ''தனக்குத் தானே தீங்கிழைத்து கொண்டவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காக தூதரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால்...''  என்றக் கருத்தே இங்கு சொல்லப்பட்டுள்ளது. நபியவர்களிடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வசனத்தில் இல்லை.

பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ் ஒருவனே! எனக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோரலாம். உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரலாம். ஒரு முஸ்லிமிற்காக இன்னொரு முஸ்லிம் பாவமன்னிப்பக் கோரலாம் பாவமன்னிப்பை அல்லாஹ்விடம் கோரவேண்டும்! எனவே தவறாக எழுதியுள்ள இறைவசனத்தைத் திருத்தம் செய்துகொள்ளுங்கள்.

பிரார்த்தனை என்பது யாருக்காகவும் யாரும் பிரார்த்திக்கலாம். எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யலாம். உங்களுக்காக நான் பிரார்த்திக்கலாம். இந்த உம்மத்துக்காகவும், மொத்த மனித குலத்துக்காகவும் பிரார்த்தனை செய்யலாம். நபிமார்கள், நல்லடியார்களுக்காகவும் பிரார்த்திக்கலாம். நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு முன் இந்த சமுதாயத்துக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள். அதுபோல் நபியவர்கள் தமக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கவும் கற்றுத் தந்துள்ளார்கள்.

இன்றும், தொழுகையில் நபியவர்களுக்காகவும், நல்லடியார்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். சுவனத்தின் வஸீலா எனும் உயர் பதவியை எனக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என நபியவர்கள் தமக்காக பிரார்த்தனைச் செய்யும்படி சொல்லியுள்ளார்கள். இது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் பிரார்த்தனையாகும். இது இஸ்லாம் வலியுறுத்தும் பிரார்த்தனைகளாகும்.

மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(ரலி), அப்பாஸ்(ரலி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். 'இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!' என்று உமர்(ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும். அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல் - புகாரி 1010)

உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை மழை வேண்டி பிரார்த்திக்கச் சொல்கிறார். அப்பாஸ் (ரலி) அவர்களின் பொருட்டால் என்று கேட்கவில்லை!

ஒரு கூட்டத்தில் கண்ணிமிக்கவராகக் கருதும் ஒருவரை நோக்கி ''எங்களுக்காக அல்லாஹ்விடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று சொல்லலாம். ஒரு முஸ்லிமை நோக்கி இன்னொரு முஸ்லிம் இவ்வாறுக் கோருவதை இஸ்லாம் தடுக்கவில்லை! ''இவர் பொருட்டால் எங்களுக்குத் தா - இவர் பொருட்டால் எனக்கு அருள்வாயாக'' என்று பிரார்த்தனை செய்வதே தடுக்கப்பட்டது. இதைப் புரிந்து கொண்டால் முரண்பாடு நீங்கிவிடும்!



2010/1/3 ismail ismail <ismail...@gmail.com>
அஸ்ஸலாமு அழைக்கும் .சகோதரர்களே இதற்க்குபெயரும் வசிலா என்று சொல்லப்படும். அதாவது ஒருவர் ஒரு பொருளை நேரில் கேட்காமல் பிறரிடம் சொல்லிகேட்குமறாரு சொல்வதற்கு வசிலா என்று சொல்லப்படுகிறது.நபி (ஸல் )அவர்களின் வாழ்நாட்களில் மக்கள் நபி (ஸல் ) அவர்களிடம் தங்களுக்காய் பிராத்தனை செய்யும் மாறு கூர்வார்கள் நபியும் அவர்களுக்காக பிராத்தனை செய்வார்கள்.இறைவனும் மனிதர்கள் இவ்வாறு செய்யும் மாறு போதனை செய்துள்ளான்.அவர்கள் தங்களுக்கு அணிதமிளைத்துக் கொண்டபோது உம்மிடம் அவர்கள் மன்னிப்பு கோரி தூதரும் அவர்களை மன்னிக்க கோரி இருந்தால் நிச்சியமாக அவர்களுடைய மன்னிப்பை ஏற்றுகொல்பவனாகவும் கருனையலனாகவும் இறைவனை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:64   இந்த வசனத்தில் தவறு செய்தவர்கள் நபியிடம் மன்னிப்பு கோரி நபியும் துஆ செய்தால் அது நிச்சியமாக ஏற்றுகொள்ளப்படும் என்று அல்லா கூறுகிறான்.நபியிடம் துஆ செய்யச்சொலி நபியும் துஆ செய்ததாக பல ஹதிஸ்கள் காணலாம். நபி (ஸல் ) கலத்திக்குப்பின்பு கூட ஒரு சம்பவம் காணப்படுகிறது ஸஹிஹ் புகாரியில் ஹஜரத் இப்னு மாலிக் (ரலி) மூலமாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது உமர் (ரலி ) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்ப்பட்டபோதேல்லாம் உமர் (ரலி )அவர்கள் நாயகம் (ஸல் ) அவர்களின் பெரியதந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்( ரலி ) அவர்களை வசிலாவாக்கி துஆ செய்பவர்களாக இருந்தார்கள் இருந்தார்கள்.அவர்கள் கூறுவார்கள் இறைவா நாங்கள் பஞ்சத்தால் பிடீக்கபட்டபோதேல்லாம் உன்னிடம் எங்கள் நபியை வசிலாவாக ஆக்கி கொண்டிருந்தோம் நி மழையை இறக்கிவந்தாய் இப்பொழுது உன்னிடம் எங்கள் நபியின் பெரிய தந்தயைக்கொண்டு வசீலா தேடுகிறோம் எங்களுக்கு மழையை கொடுப்பையாக என்று.. நான் அதற்காக தர்காவில் உள்ள அவ்ளியக்களிடமோ அல்லது இன்று உள்ள மற்றவர்களை முன்னிறுத்தலாம் என்றோ சொல்லவில்லை நபியை முன்னிருத்துவதற்க்கு ஆதாரங்கள் பல உள்ளது என்று சொல்கிறேன்  

--

ibnuh...@mail.com

unread,
Jan 3, 2010, 12:42:54 PM1/3/10
to fro...@googlegroups.com
சகோதரர்  ismail ismail

நீங்கள் இறைவனின் வார்த்தைகளை விளங்க முன் , அவற்றின் சரியான மொழி பெயர்ப்பை கவனமாக படித்து , அதன் பின் இங்கு பதியுங்கள்.... நீங்கள் ஒரு வசனத்தை விட்டு விட்டு , பதிந்தது ஒரு மிக முக்கிய ஈமானின் அம்சத்தையே அடித்து விடும்.....நீங்கள் எழுதியது.....
 அவர்கள் தங்களுக்கு அணிதமிளைத்துக் கொண்டபோது உம்மிடம் அவர்கள் மன்னிப்பு கோரி தூதரும் அவர்களை மன்னிக்க கோரி இருந்தால் நிச்சியமாக அவர்களுடைய மன்னிப்பை ஏற்றுகொல்பவனாகவும் கருனையலனாகவும் இறைவனை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:64 
 
கீழே சரியான மொழிபெயர்ப்பை படியுங்கள்....
 
.....64. We sent not an apostle, but to be obeyed, in accordance with the will of Allah. If they had only, when they were unjust to themselves, come unto thee and asked Allah.s forgiveness, and the Messenger had asked forgiveness for them, they would have found Allah indeed Oft-returning, Most Merciful ( by Yusuf Ali ).....4;64
 
04';64.......When they had wronged themselves, the best thing for them would have been to come to you and implore Allah's pardon, and if the Messenger had also asked Allah's forgiveness for them, most surely they would have found Allah Forgiving and Merciful.(by. Mawdoodi)
 
 நீங்கள் எழுதியதில்  அள்ழாஹவின்  மன்னிப்பை கோரி.. என்ற வசனம் விடப்பட்டுள்ளது...... நீங்கள் எந்த தர்ஜுமா பாவிக்கின்றீர்கள்.??  கவனமாக பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்....
 
 

muslim

unread,
Jan 4, 2010, 2:01:29 AM1/4/10
to fro...@googlegroups.com
அன்புச் சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு,
 
குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் வாசகங்கள் முன் பின் இருந்தாலும் அனைத்து தமிழாக்கத்திலும் 4:64வது வசனத்தின் கருத்து ஒன்றுதான்:
 
தவறிழைத்தோரும், பாவிகளும் முதலில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு, அல்லாஹ்வின் தூதரிடம், தங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர முறையிட வேண்டும்.
 
எந்தத் தூதரையும் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப அவருக்கு (மக்கள்) கீழ்படிந்து நடப்பதற்காகவே தவிர (வேறு நோக்கத்திற்காக) நாம் அனுப்பவில்லை. (நபியே) அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தபோது, உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காகத் தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால், மன்னிப்பை ஏற்பவனாகவும் மிகுந்த அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள். (அல்குர்ஆன் 4:64)


2010/1/3 <ibnuh...@mail.com>
 
 

--

muslim

unread,
Jan 4, 2010, 6:09:44 AM1/4/10
to fro...@googlegroups.com

ஒரு முஸ்லிம் தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது போல் தன் கண்ணெதிரே இல்லாத முஸ்லிம் சகோதரர்களின் நலனுக்காகவும் துஆச் செய்தால் ''ஆமீன்" - அதுபோல் உனக்கும் கிடைக்கட்டும். என்று வானவர் கூறுகிறார். சமூக பொது நலனில் தம் நலனையும் உள்ளடக்கிய இறைவனின் கருணையே கருணை! எல்லாப்புகழும் இறைவனுக்கே!

''ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காக பிரார்த்திக்கும்போது வானவர் ''உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்'' என்று கூறாமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூதர்தா (ரலி) (நூல் - முஸ்லிம் 5279)

****************

நான் ஷாம் நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபூதர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா(ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், ''இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?'' என்று கேட்டார்.

நான் ''ஆம்'' என்றேன்.

அதற்கு அவர் சொன்னார், அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள் ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ''ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர் 'இறைவா! (இவரது பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்'' என்று கூறினார்கள்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, அபூதர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள். அறிவிப்பவர் ஸஃப்வான் பின் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) (நூல் - முஸ்லிம் 5281) 



2010/1/4 muslim <tomu...@gmail.com>

ismail ismail

unread,
Jan 4, 2010, 6:25:34 AM1/4/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் .நண்பர்களே குரானின் வசனம் விடுபட்டதை சுற்றிகாட்டியதற்கு நன்றி இனிமேல் என் எழுத்துக்களை கவனமாக பதிவு செய்வேன். தாங்கள் கூரிய கருத்துக்கு இதுவரை ஆதாரம் கட்டவில்லை அதாவது நபி(ஸல்)  அவர்கள் பொருட்டால் என் துஆவை கபுல்லாக்கு நபி (ஸல்) துஆ பரக்கத்து பொருட்டாலும் என் துஆவை கபுல்லாக்கு என்று கூறினால் அது மறுக்கப்படும் அப்படி செய்வதை அல்லாஹ்தடைசெய்தான்  அல்லது நபி (ஸல்) அவர்களோ தடைசெய்தார்கள் என்று ஆதாரம் தாருங்கள் 

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 4, 2010, 6:39:10 AM1/4/10
to fro...@googlegroups.com
அன்புச் சகோதரர் இஸ்மாயில்!

வாலைக்கும் ஸலாம்!

அல்லாஹ்விடம் துவா கேட்கும் போது நபி(ஸல்)  அவர்கள் பொருட்டால் என் துஆவை கபுல்லாக்கு நபி (ஸல்) துஆ பரக்கத்து பொருட்டாலும் என் துஆவை கபுல்லாக்கு என்பதாக கூறலாம் என்று  கூற வருகிறீரா!
 
அப்படியால் இவ்வாறு துவா கேட்பதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதை முன்வைக்கலாமே!
 

 
2010/1/4 ismail ismail <ismail...@gmail.com>
அஸ்ஸலாமு அழைக்கும் .நண்பர்களே குரானின் வசனம் விடுபட்டதை சுற்றிகாட்டியதற்கு நன்றி இனிமேல் என் எழுத்துக்களை கவனமாக பதிவு செய்வேன். தாங்கள் கூரிய கருத்துக்கு இதுவரை ஆதாரம் கட்டவில்லை அதாவது நபி(ஸல்)  அவர்கள் பொருட்டால் என் துஆவை கபுல்லாக்கு நபி (ஸல்) துஆ பரக்கத்து பொருட்டாலும் என் துஆவை கபுல்லாக்கு என்று கூறினால் அது மறுக்கப்படும் அப்படி செய்வதை அல்லாஹ்தடைசெய்தான்  அல்லது நபி (ஸல்) அவர்களோ தடைசெய்தார்கள் என்று ஆதாரம் தாருங்கள் 

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு
இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும்
நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள்
யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம்
பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.”
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்: அஹ்மது

அப்துல் காதிர்

unread,
Jan 4, 2010, 7:11:04 AM1/4/10
to fro...@googlegroups.com
ஸலாம். சகோதரர் இஸ்மாயில் அவர்களெ.. பதிந்த சகோதரர்கள் அனைவரும் தெளிவான
ஆதாரம் காட்டினோம். உஙள் தரப்பு நியாயத்தை நீங்கள் தான் தெளிவான ஆதாரம்
மூலம் நிறுவ வேண்டும். நீங்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை பொருமையாக இந்த
தலைப்பில் உள்ளவைகளை படித்து பாருங்கள்.


On 1/4/10, சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com> wrote:
> *அன்புச் சகோதரர் இஸ்மாயில்!*
>
> *வாலைக்கும் ஸலாம்!*
> அல்லாஹ்விடம் துவா கேட்கும் போது *நபி(ஸல்) அவர்கள் பொருட்டால் என் துஆவை


> கபுல்லாக்கு நபி (ஸல்) துஆ பரக்கத்து பொருட்டாலும் என் துஆவை கபுல்லாக்கு

> *என்பதாக கூறலாம்


> என்று கூற வருகிறீரா!
>

> *அப்படியால் இவ்வாறு துவா கேட்பதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?
> அவ்வாறு இருந்தால் அதை முன்வைக்கலாமே!*


>
>
>
> 2010/1/4 ismail ismail <ismail...@gmail.com>
>
>> அஸ்ஸலாமு அழைக்கும் .நண்பர்களே குரானின் வசனம் விடுபட்டதை சுற்றிகாட்டியதற்கு
>> நன்றி இனிமேல் என் எழுத்துக்களை கவனமாக பதிவு செய்வேன். தாங்கள் கூரிய
>> கருத்துக்கு இதுவரை ஆதாரம் கட்டவில்லை அதாவது நபி(ஸல்) அவர்கள் பொருட்டால்
>> என்
>> துஆவை கபுல்லாக்கு நபி (ஸல்) துஆ பரக்கத்து பொருட்டாலும் என் துஆவை
>> கபுல்லாக்கு
>> என்று கூறினால் அது மறுக்கப்படும் அப்படி செய்வதை அல்லாஹ்தடைசெய்தான் அல்லது
>> நபி (ஸல்) அவர்களோ தடைசெய்தார்கள் என்று ஆதாரம் தாருங்கள்
>>
>> --
>> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
>> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
>> To unsubscribe from this group, send email to

>> fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>

அப்துல் காதிர்

unread,
Jan 4, 2010, 7:11:09 AM1/4/10
to fro...@googlegroups.com
ஸலாம். சகோதரர் இஸ்மாயில் அவர்களெ.. பதிந்த சகோதரர்கள் அனைவரும் தெளிவான
ஆதாரம் காட்டினோம். உஙள் தரப்பு நியாயத்தை நீங்கள் தான் தெளிவான ஆதாரம்
மூலம் நிறுவ வேண்டும். நீங்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை பொருமையாக இந்த
தலைப்பில் உள்ளவைகளை படித்து பாருங்கள்.

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 4, 2010, 7:47:15 AM1/4/10
to fro...@googlegroups.com

ஸலாம்!

 
சகோதரரே இஸ்மாயில் அவர்களே!!!
 

 

 

அல்லாஹ்வின் பெயர்கள் கொண்டு அழைப்பது

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.' குர்ஆன் 7 : 180

 

 

குர்ஆனில் ஆங்காங்கே கூறப்பட்ட அல்லாஹ்வின் பெயர்கள்

ரப்        (அதிபதி)

பஷீர்     (பார்ப்பவன்)

ஜப்பார்   (அடக்கி ஆள்பவன்)

ஹக்கிம்  (ஞானமிக்கவன்)

ஹமீது   (புகழுக்குரியவன்)

ஹய்யு   (உயிருள்ளவன்)

ரவூப்      (இரக்கமுடையவன்)

ரஹ்மான் (அருளாளன்)

ரஹீம்    (நிகரற்ற அன்புடையோன்)

சலாம்     (நிம்மதி அளிப்பவன்)

அஜீஸ்    (மிகைத்தவன்)

அலீம்     (அறிந்தவன்)

குத்தூஸ் (தூயவன்)

ஹாக்கிம்      (தீர்ப்பு வழங்குபவன்)

மலிக்     (அரசன்)

வக்கீல்   (பொறுப்பாளன்)


நல்லடியார்களை விட அருகில் இருப்பவன் அல்லாஹ்தான்!

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கின்றேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும்!’ (அல்குர்ஆன் 2:186) எனக் கூறுகின்றான்.

 

உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர் களாய் நரகில்புகுவார்கள். (அல்குர்ஆன் 40:60)
 
அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்!

(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 2:186)



 

அல்லாஹ்வின் கருணையை சிந்தித்துப்பாருங்கள்!

கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிக்க குறைவேயாகும். (அல்குர்ஆன் 27:62)

 

 

அல்லாஹ் வெட்கப்படுகிறான்

நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கோடையாளன். அவனுடைய அடிமைகளில் யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாரிஸி-ரலி, நூல்: அபூதாவூத், திர்மிதி)

 

 

அல்லாஹ் கேட்பதை கொடுக்கக்கூடியவன்

இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹ் அதை கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால் அவர் பாவமானவற்றையும் உறவினரை பகைப்பதையும் பிரார்த்திக்காதிருக்க வேண்டும். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல்: ஹாகிம்)

 

அல்லாஹ்விடம் நம்பிக்கையுடன் கேட்கவேண்டும்

உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்கவேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை. (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : புகாரீ)

 

 

பிரார்த்தனை ஒரு வணக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)

 

பிரார்த்தனையில் பணிவு

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் -வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:55)


2010/1/4 அப்துல் காதிர் <kathar...@gmail.com>

அப்துல் காதிர்

unread,
Jan 4, 2010, 8:57:22 AM1/4/10
to fro...@googlegroups.com
அவசரப்படக் கூடாது:

அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்
போது அவசரப்படக் கூடாது.

ஒருதடவைபிரார்த்தனை
செய்து விட்டு நான்
கேட்டேன் ; கிடைக்கவில்லை' என்ற
முடிவுக்கு வந்து விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன்
கேட்பவர்களின்துஆக்கள்
அங்கீகரிக்கப்படுவதில்லை.

நாம் கேட்டவுடன்
தருவதற்கு அல்லாஹ்
நமது வேலையாள் அல்ல! அவன்
நமது எஜமானன். எஜமானனிடம்
கெஞ்சிக் கேட்பதே முறையாகும்.

"நான் பிரார்த்தனை செய்தேன்;
அங்கீகரிக்கப்படவில்லை' என்று கூறி அவசரப்படாதவரை உங்கள் துஆக்கள்
அங்கீகரிக்கப்படும்
என்று நபிகள்நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6340


On 1/4/10, சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com> wrote:

> *ஸலாம்!***
> **
> *சகோதரரே இஸ்மாயில் அவர்களே!!!*
>
>
>
>
>
>
> *அல்லாஹ்வின் பெயர்கள் கொண்டு அழைப்பது***
>
> *'**அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம்
> பிரார்த்தியுங்கள்!** **அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு
> விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக** **தண்டிக்கப் படுவார்கள்.**'** குர்ஆன்
> **7 : 180***
>
>
>
> * *
>
> *குர்ஆனில் ஆங்காங்கே கூறப்பட்ட அல்லாஹ்வின் பெயர்கள்*
>
> *ரப் * (அதிபதி)
>
> *பஷீர் * (பார்ப்பவன்)
>
> *ஜப்பார்* (அடக்கி ஆள்பவன்)
>
> *ஹக்கிம்* (ஞானமிக்கவன்)
>
> *ஹமீது* (புகழுக்குரியவன்)
>
> *ஹய்யு* (உயிருள்ளவன்)
>
> *ரவூப்* (இரக்கமுடையவன்)
>
> *ரஹ்மான்* (அருளாளன்)
>
> *ரஹீம்* (நிகரற்ற அன்புடையோன்)
>
> *சலாம்* (நிம்மதி அளிப்பவன்)
>
> *அஜீஸ்* (மிகைத்தவன்)
>
> *அலீம்* (அறிந்தவன்)
>
> *குத்தூஸ்* (தூயவன்)
>
> *ஹாக்கிம்* (தீர்ப்பு வழங்குபவன்)
>
> *மலிக்* (அரசன்)
>
> *வக்கீல்* (பொறுப்பாளன்)
>
> *நல்லடியார்களை விட அருகில் இருப்பவன் அல்லாஹ்தான்!***


>
> ‘என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன்.
> பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப்
> பதிலளிக்கின்றேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே
> நம்பட்டும்!’
> (அல்குர்ஆன் 2:186) எனக் கூறுகின்றான்.
>

> * *
> *உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள்.


> நான் உங்களுடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்குவதை
> விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர் களாய் நரகில்புகுவார்கள்.

> (அல்குர்ஆன் 40:60)*
> **
> *அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்!** *


>
> (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான்
> அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு
> நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்,
> என்னையே
> விசுவாசம் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 2:186)
>
>
>
>
>

> *அல்லாஹ்வின் கருணையை சிந்தித்துப்பாருங்கள்!***


>
> கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை
> நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்?
> அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி)
> நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிக்க குறைவேயாகும். (அல்குர்ஆன் 27:62)
>

> * *
>
> * *
>
> *அல்லாஹ் வெட்கப்படுகிறான்***


>
> நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கோடையாளன். அவனுடைய அடிமைகளில்
> யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக
> திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாரிஸி-ரலி,
> நூல்:
> அபூதாவூத், திர்மிதி)
>
>
>

> * *
>
> *அல்லாஹ் கேட்பதை கொடுக்கக்கூடியவன்***


>
> இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹ்
> அதை கொடுக்காமல்
> இருப்பதில்லை. ஆனால் அவர் பாவமானவற்றையும் உறவினரை பகைப்பதையும்
> பிரார்த்திக்காதிருக்க
> வேண்டும். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல்: ஹாகிம்)
>
>
>

> *அல்லாஹ்விடம் நம்பிக்கையுடன் கேட்கவேண்டும்***


>
> உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும்.
> நீ விரும்பினால்
> தா! என்று எவரும் கேட்கவேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர்
> எவருமில்லை.
> (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : புகாரீ)
>
>
>
>
>

> *பிரார்த்தனை ஒரு வணக்கம்***


>
> நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை
> அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.
> (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)
>
>
>

> *பிரார்த்தனையில் பணிவு***

>> <fromgn%2Bunsu...@googlegroups.com<fromgn%252Buns...@googlegroups.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 4, 2010, 9:24:55 AM1/4/10
to fro...@googlegroups.com

நபிமார்களின் சொந்த குடும்ப விஷயங்களுக்கான பரிந்துரைகள் கூட இறைவனால் நிராகரிக்கப்பட்டும் உள்ளன! இதுவும் கவனத்தில் கொள்ளவும்

 
 
அன்புச் சகோதரர் .இஸ்மாயீல் அவர்களே!
நபிமார்கள் இறைவனிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேசக்கூடிய தன்மை பெற்றவர்கள் ஆனால் இந்த நபிமார்களுக்கு கூட தங்கள் பெற்றோரை, மகன்களுக்கு நன்மையை செய்துக்கொள்ள முடியவில்லை மேலும் அல்லாஹ்விடம் பரிந்துறைத்தும் அல்லாஹ் அவர்களின் பரிந்துரைகளை ஏற்கவில்லை ஆதாரம் வேண்டுமா? இதோ தருகிறேன்!
 

 

கண் முன்னே நபிகளாரின் அருமை மகன் மரணம்!

 

அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்" என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்" என்றார்கள்.  (புகாரி 1303)


 
 
கண் முன்னே நூஹ் (அலை) அவர்களின் மகன் அழிக்கப்படுதல் மற்றும் நூஹ் நபியின் பிரார்த்தனை நிராகரிக்கப்படுதல்!
 

நூஹ் தன் இறைவனிடம் என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய் எனக் கூறினார். (அல்குர்ஆன் 11-45)

 

 

அ(தற்கு இறை)வன் கூறினான்: நூஹே! உண்மையாகவே அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விட வேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன். (அல்குர்ஆன் 11-46)

 

 

என் இறைவா! எனக்கு எதைப் பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்தில் கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகி விடுவேன்என்று கூறினார். (அல்குர்ஆன் 11-47)

 

 

 
கண் முன்னே இப்ராஹீம் நபியின் தந்தை நரகத்திற்குள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், நான் உங்களிடம், எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, இன்று உனக்கு நான் மாறு செய்யமாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது? என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்) என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும், பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் (ஹதீஸ் எண் 3350).

 

 

குறிப்பு

 

நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன் தந்தையை இழந்தார், வளரும் பருவத்தில் தாயை இழந்தார் எனவே அவருடைய பெற்றோருக்கு  நேர்வழி கிடைக்கவில்லை நபிகளார் நபித்துவம் பெற்ற பின்னர் அல்லாஹ்விடம் தம் பெற்றோருக்காக பாவ மன்னிப்பு கோரினார் ஆனால் அது கூட அல்லாஹ்வினால் நிராகரிக்கப்பட்டது! இதற்கான ஹதீஸ் தேடிக்கொண்டிருக்கிறென் கிடைத்தவுடன் இன்ஷா அல்லாஹ் பதிக்கிறேன்!

 

 

நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டு விடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் படமாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 6:70)

 

 

... அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக் கூடும்?... (அல்குர்அன் 2:255)


அல்ஹம்துலில்லாஹ்

அப்துல் காதிர்

unread,
Jan 4, 2010, 10:25:44 AM1/4/10
to fro...@googlegroups.com
ஸலாம். சகோதரர் சிராஜ் அவர்களே நீங்கள் தேடிக்கொண்டு உள்ள நபி(ஸல்)
அவர்களின் தாய் தந்தை சம்பந்தமான ஹதீஸை முஸ்லிம் 302,1621,1622 ஆகிய
நம்பரில் பார்க்கவும்


On 1/4/10, சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com> wrote:

> *நபிமார்களின் சொந்த குடும்ப விஷயங்களுக்கான பரிந்துரைகள் கூட இறைவனால்
> நிராகரிக்கப்பட்டும் உள்ளன! இதுவும் கவனத்தில் கொள்ளவும்***
>
> **
> **
> **
> *அன்புச் சகோதரர் .இஸ்மாயீல் அவர்களே!***


> நபிமார்கள் இறைவனிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேசக்கூடிய தன்மை
> பெற்றவர்கள் ஆனால் இந்த நபிமார்களுக்கு கூட தங்கள் பெற்றோரை, மகன்களுக்கு

> நன்மையை செய்துக்கொள்ள முடியவில்லை மேலும் அல்லாஹ்விடம் *பரிந்துறைத்தும்
> அல்லாஹ் அவர்களின் பரிந்துரைகளை ஏற்கவில்லை *ஆதாரம் வேண்டுமா? இதோ தருகிறேன்!
>
>
>
>
> *கண் முன்னே நபிகளாரின் அருமை மகன் மரணம்!***
>
> * *
>
> *அனஸ்(ரலி) அறிவித்தார்.** ***


>
> நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ
> ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித்
> தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து
> முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது
> இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப்
> பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர்
> அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள்,
> 'அவ்ஃபின்
> மகனே! நிச்சயமாக இது கருணையாகும்" என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து
> அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக்

> கொண்டிருக்கிறது; *எனினும்**, **இறைவன் விரும்பாத எந்த** **வார்த்தையையும்
> நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய** **பிரிவால்
> அதிகக் கவலைப்படுகிறோம்" என்றார்கள்.* (புகாரி 1303)
> *
> *
> **
> **
> *கண் முன்னே **நூஹ் (அலை)** அவர்களின் மகன் அழிக்கப்படுதல்** மற்றும் நூஹ்
> நபியின் பிரார்த்தனை நிராகரிக்கப்படுதல்!*
> ****


>
> நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச்

> சேர்ந்தவனே; *உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; **நீதி
> வழங்குவோர்களிலெல்லாம் மேலான **நீதிபதியாய் நீ இருக்கிறாய்”* எனக் கூறினார்.


> (அல்குர்ஆன் 11-45)
>
>
>
>
>
> அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உன் குடும்பத்தைச்
> சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து

> கொண்டிருந்தான்; *ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் **கேட்க வேண்டாம்
> ;* நீர் அறியாதவர்களில் ஒருவராகி விட வேண்டாம் என்று திடமாக நான் உமக்கு


> உபதேசம் செய்கிறேன்.” (அல்குர்ஆன் 11-46)
>
>
>
>
>

> என் இறைவா! *எனக்கு எதைப் பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்தில் கேட்பதை
> விட்டும்** **உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; *நீ என்னை மன்னித்து எனக்கு


> அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகி விடுவேன்” என்று

> கூறினார்.*(அல்குர்ஆன் 11-47)
> *
>
> * *
>
> * *
> **
> *கண் முன்னே **இப்ராஹீம் நபியின் தந்தை** நரகத்திற்குள் *


>
> இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை)
> ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்)
> கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை)
> அவர்கள், நான் உங்களிடம், எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா? என்று
> கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, இன்று உனக்கு நான் மாறு செய்யமாட்டேன்

> என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், *இறைவா! மக்களுக்கு உயிர்
> கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை** **இழிவுபடுத்த மாட்டாய் என்று
> எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து)** **வெகு தொலைவில்
> இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்** **
> கூடியது**? *என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம்,


> நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி

> விட்டேன்) என்று பதிலளிப்பான். பிறகு *இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே
> என்ன** **இருக்கிறதென்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே
> பார்ப்பார்கள். அப்போது**, **அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த
> கழுதைப் புலி ஒன்று கிடக்கும்**, **பின்னர்** **அதன் கால்களைப் பிடித்துத்
> தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும் என அபூஹுரைரா** (**ரலி)
> அறிவித்தார்கள்*(ஹதீஸ் எண்
> 3350).
>
>
>
>
>
> *குறிப்பு***
>
> * *


>
> நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன் தந்தையை இழந்தார், வளரும் பருவத்தில் தாயை
> இழந்தார் எனவே அவருடைய பெற்றோருக்கு நேர்வழி கிடைக்கவில்லை நபிகளார்
> நபித்துவம் பெற்ற பின்னர் அல்லாஹ்விடம் தம் பெற்றோருக்காக பாவ மன்னிப்பு
> கோரினார் ஆனால் அது கூட அல்லாஹ்வினால் நிராகரிக்கப்பட்டது! இதற்கான ஹதீஸ்
> தேடிக்கொண்டிருக்கிறென் கிடைத்தவுடன் இன்ஷா அல்லாஹ் பதிக்கிறேன்!
>

> * *
>
> * *


>
> நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும்
> எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை
> விட்டு விடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின்
> காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு

> நினைவுறுத்தும். *அந்த** **ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு
> பாதுகாவலரோ**, **பரிந்து
> பேசுபவரோ இல்லை**; (**தாங்கள்** **செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற)
> அத்தனையும் கொடுத்தாலும்**, **அது** **அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப்
> படமாட்டாது**;* இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக்


> கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக்
> கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 6:70)
>
>
>
>
>

> *... **அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான்**
> **பரிந்து
> பேசக் கூடும்**?... (**அல்குர்அன் **2:255)*
>
> *அல்ஹம்துலில்லாஹ்*
> **

>> >> <fromgn%2Bunsu...@googlegroups.com<fromgn%252Buns...@googlegroups.com>
>> <fromgn%252Buns...@googlegroups.com<fromgn%25252Bun...@googlegroups.com>

ismail ismail

unread,
Jan 4, 2010, 11:41:47 PM1/4/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் .அப்துல் காதிர் அவர்களே இது தாங்கள் எழுதிய வார்த்தை ஆதம் (அலை)

அவர்கள் நபிகள் நாயகத்தின்(ஸல்)
பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால்
மன்னிக்கப்பட்டனர் என்ற கட்டுக்கதையை இதற்கு ஆதாரமாகக்
காட்டுகின்றனர்.

திர்மிதீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும், இன்ன பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்ட
இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என
அறிஞர்கள் கூறியுள்ளனர் .

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின்
அஸ்லம் என்பவர்
வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது.
அவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர்.எந்த நுலில் எந்த இமாம் குறிப்பு தந்தார் என்று நீங்கள் குரிப்பிடவும்.மேலும் சிராஜ் அப்துல்லாவுக்கு என்னுடைய கருத்தை நன்றாக புரிந்துகொள்ளவும் தந்தை மகனுக்கோ மகன் தந்தைக்கோ கேட்கப்படும் துஆவை நான் குறிப்பிடவில்லை தனக்குத்தான் செய்யும் துஆவில் இறுதியாக நபி( ஸல்)துஆ பரக்கத்போருட்டலும் ஏற்று கொள்வாயாக என்று குறிப்பிடும் போது அது மறுக்கப்படும் என்பதற்கு ஆதாரம் கேட்டுருந்தேன் நபிகள் துஆ கபுலாகாமல் இருந்ததே இல்லை என்று நான் குறிப்பிடவில்லை   

muslim

unread,
Jan 5, 2010, 1:19:51 AM1/5/10
to fro...@googlegroups.com

உறங்கு முன் அங்கத் தூய்மை செய்துகொண்டு, படுக்கையில் படுத்தபடி ஓதும் பிராத்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பிரார்த்தனையின் கருத்து, ஓர் அடியான் தம்மை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்து விடும்படியாக அமைந்துள்ளன. துஆவைக் கற்று அனைவரும் பயன்பெறுவோம்.

*************************    

நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தில் படு. பிறகு ''அல்லாஹும்ம இன்னீ அஸ்லம்த்து வஜ்ஹீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க வஅல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபியிக்கல்லதீ அர்ஸல்த்த'' என்று ஓதிக் கொள். இந்தப் பிரார்த்தனையை (இரவில்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொண்டு, அன்றைய இரவில் நீ மரணித்து விட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் நீ இறந்தவன் ஆவாய்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல் - புகாரி 247, 6311, 6313, 6315, 7488. முஸ்லிம் 5249)

 ‏ ‏ اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

பொருள்: ''இறைவா! என் முகத்தை உனக்குக் கீழ்ப்படிய செய்து விட்டேன். என் காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன்னளவில் சாய்த்து விட்டேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு புகலிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும், நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்''

இதன் அறிவிப்பாளர் பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்,

நான் இவற்றை நினைவில் நிறுத்துவதற்காகத் திரும்ப ஓதிக்காட்டினேன். (''நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்'' என்பதற்குப் பதிலாக) 'நீ அனுப்பிய உன் ரஸுலையும் நான் நம்பினேன்' என்று சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன் என்று சொல்வீராக!'' என (திருத்திக்) கூறினார்கள்.



2010/1/4 muslim <tomu...@gmail.com>

அப்துல் காதிர்

unread,
Jan 5, 2010, 5:06:16 PM1/5/10
to fro...@googlegroups.com
ஸலாம்

செய்தி:

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள்
தவறு செய்த பின்னர், என்இறைவா!நான் செய்த தவறை முஹம்மதின்
பொருட்டால் நீ மன்னித்து விடு!''என்று பிரார்த்தனை செய்தனர்.
அதைக்கேட்டஅல்லாஹ், ஆதமே! நான் இன்னும் முஹம்மதைப்
படைக்கவே இல்லையே!
அவரைப்பற்றி நீ
எப்படி அறிந்து கொண்டாய்?''
என்று கேட்டான். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், என்னை நீ படைத்த
உடனே என்தலையை உயர்த்தி உனது அர்ஷைக்கண்டேன்.
அதில் "லாயிலாஹ
இல்லல்லாஹு முஹம்மதுர்
ரசூலுல்லாஹ்''என்று எழுதப்பட்டிருந்தது.
உன் பெயருடன்
இணைத்து முஹம்மதின்
பெயரையும் நீ எழுதியுள்ளதால் அவர்
உனக்கு நெருக்கமானவராக
இருக்கவேண்டும் என்று நான் முடிவு செய்து கொண்டேன்''
என்று பதில்கூறினார்கள்.
உடனே அல்லாஹ்,
முஹம்மதின் பொருட்டால்
மன்னிப்புக் கேட்டதால் உன்னை நான்
மன்னிக்கிறேன்'' என்று கூறினான்.

ஹாகிம், பைஹகீ, தப்ரானி ஆகியோர்
இதனைத் தங்களின் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்து உள்ளனர்.

அறிவிப்பாளரின் தகுதி:

அறிவிப்பாளர்:


அப்துர் ரஹ்மான் பின் ஸைது பின் அஸ்லம்

"முஸ்தத்ரக்'' என்று நூலில் ஹாகீம்
அவர்களும்,
"தலாயிலுன்னுபுவ்வத்'' என்ற நூலில் பைஹகீ அவர்களும்,
"முஃஜமுஸ் ஸகீர்' என்ற நூலில் தப்ரானி அவர்களும் இதனைப்
பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தனது நூலில்
பதிவு செய்துள்ள பைஹகீ அவர்கள்,
"இந்த ஹதீஸ் அப்துர்
ரஹ்மான் மூலமாக
மட்டுமே அறிவிக்கப்படுகின்றது. அவர் பலவீனமானவர்; ஏற்கத்தக்கவர் அல்லர்''
என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த ஹதீஸைத் தமது நூலில் பதிவு
செய்து விட்டு அதன்
தரத்தையும் அவர்களே நமக்குச் சொல்லி விடுகிறார்கள்.

இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்துள்ள
இன்னொரு நூலாசிரியர்
ஹாகிம் அவர்கள் தமது "மஃரிபதுஸ் ஸஹீஹ் மினஸ் ஸகீம்'' என்ற நூலில்
"அப்துர் ரஹ்மான் தன் தந்தை கூறியதாக ஏராளமாக இட்டுக்
கட்டியவர்'' என்று
அடையாளம் காட்டி இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தைப் பரிசீலனை செய்த
தஹபீ அவர்கள் தங்களின் "மீஸானுல்
இஃதிதால்'' என்ற நூலில் "இந்த அப்துர்ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்லர்.
இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது''
என்று குறிப்பிடுகிறார்.

இப்னு ஹஜர் அவர்கள் தங்களின் "அல்லிஸான்''
என்ற நூலில்
"இந்த அப்துர்ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்லர். இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது''
என்று குறிப்பிடுகிறார்.

இந்தச் செய்தியை அறிவிக்கும்
அப்துர்ரஹ்மானைப்
பற்றி அறிஞர்கள்
பொய்யெரென்றும், இட்டுக்கட்டக்கூடியவர் என்றும், பலவீனமானவர்
என்றும் ஒருமித்து கருத்துக்கூறி இருக்கும் போது அவர் வழியாக
அறிவிக்கப்படுவதை எப்படி ஏற்க இயலும்?

அன்புச்சகோதரர் இஸ்மாயில் அவர்களே,
ஒரு பேச்சுக்கு நான்
சொல்வது தவறு என்றே
வைத்துக்கொள்வோம். ஒரு பேச்சுக்கு அப்துர்ரஹ்மான் ஏற்கத்தக்கவர் என்றே
வைத்துக்கொள்வோம்.

இந்த செய்தியை நிராகரிக்க, ஆதம் (அலை) எவ்வாறு மன்னிப்புக் கேட்டார்
என்று திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள்
விளக்குவதற்கு எதிராக
இந்தக்கதை அமைந்துள்ளது என்ற
ஒரு காரணம் போதும் .

நபி(ஸல்) அவர்கள் பொருட்டால் துஆ கேட்கலாம்
என்பதற்கும், ஆதம்
நபி பாவமன்னிப்பு கேட்ட
இந்த செய்தி ஆதாரமானது
என்பதற்கும், ஆதாரம் தாருங்கள்.
திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள் என்ன பொருள் தரும் என
விளக்க வேண்டும்.
அது வரை உங்கள் கருத்தை ஏற்கமுடியாது.


On 1/5/10, muslim <tomu...@gmail.com> wrote:
> உறங்கு முன் அங்கத் தூய்மை செய்துகொண்டு, படுக்கையில் படுத்தபடி ஓதும்
> பிராத்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பிரார்த்தனையின்
> கருத்து, ஓர் அடியான் தம்மை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்து விடும்படியாக
> அமைந்துள்ளன. துஆவைக் கற்று அனைவரும் பயன்பெறுவோம்.
>
> *************************
>

> *நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வதைப் போன்று


> அங்கத் தூய்மை செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தில் படு. பிறகு ''அல்லாஹும்ம
> இன்னீ அஸ்லம்த்து வஜ்ஹீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க வஅல்ஜஃத்து ழஹ்ரீ
> இலைக்க ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா
> இலைக்க ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபியிக்கல்லதீ
> அர்ஸல்த்த''என்று ஓதிக் கொள். இந்தப் பிரார்த்தனையை (இரவில்) இறுதிப்
> பேச்சாக
> ஆக்கிக்கொண்டு, அன்றைய இரவில் நீ மரணித்து விட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை
> மரபில் நீ இறந்தவன் ஆவாய்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்

> கூறினார்கள்.* அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல் - புகாரி 247, 6311,


> 6313, 6315, 7488. முஸ்லிம்

> 5249<http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&Rec=6289>


> )
>
> ‏ ‏ اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي
> إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا
> مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي
> أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ ‏
> ‏
>

> *பொருள்:* ''இறைவா! என் முகத்தை உனக்குக் கீழ்ப்படிய செய்து விட்டேன். என்


> காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன்னளவில்
> சாய்த்து விட்டேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான்
> செய்தேன்) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு
> புகலிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும், நீ அனுப்பிய உன்னுடைய நபியையும்
> நம்பினேன்''
>
> இதன் அறிவிப்பாளர் பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்,
>

> *நான் இவற்றை நினைவில் நிறுத்துவதற்காகத் திரும்ப ஓதிக்காட்டினேன். (''நீ


> அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்'' என்பதற்குப் பதிலாக) 'நீ அனுப்பிய உன்
> ரஸுலையும் நான் நம்பினேன்' என்று சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
> அவர்கள், ''நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன் என்று சொல்வீராக!'' என

> (திருத்திக்) கூறினார்கள்.*


>
>
> 2010/1/4 muslim <tomu...@gmail.com>
>
>> ஒரு முஸ்லிம் தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது போல் தன் கண்ணெதிரே
>> இல்லாத முஸ்லிம் சகோதரர்களின் நலனுக்காகவும் துஆச் செய்தால் ''ஆமீன்" -
>> அதுபோல் உனக்கும் கிடைக்கட்டும். என்று வானவர் கூறுகிறார். சமூக பொது
>> நலனில்
>> தம் நலனையும் உள்ளடக்கிய இறைவனின் கருணையே கருணை! எல்லாப்புகழும் இறைவனுக்கே!
>>

>> *''ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காக


>> பிரார்த்திக்கும்போது வானவர் ''உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்''
>> என்று
>> கூறாமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்

>> கூறினார்கள்.*அறிவிப்பவர் அபூதர்தா (ரலி) (நூல் - முஸ்லிம் 5279)


>>
>> ****************
>>
>> நான் ஷாம் நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபூதர்தா (ரலி)
>> அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என்
>> மனைவியின் தாய்) உம்முத் தர்தா(ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம்,
>> ''இந்த
>> ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?'' என்று கேட்டார்.
>>
>> நான் ''ஆம்'' என்றேன்.
>>
>> அதற்கு அவர் சொன்னார், அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள்

>> ஏனெனில்* நபி (ஸல்) அவர்கள் ''ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம்


>> சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த
>> முஸ்லிமின்
>> தலைக்கருகில் நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம்
>> சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம் அதற்கென
>> நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர் 'இறைவா! (இவரது பிரார்த்தனையை)
>> ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப்

>> பிரார்த்திக்கிறார்'' என்று கூறினார்கள்.*


>>
>> பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது,
>> அபூதர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதாக
>> அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள். அறிவிப்பவர் ஸஃப்வான் பின் அப்துல்லாஹ்
>> பின் ஸஃப்வான் (ரஹ்) (நூல் - முஸ்லிம் 5281)
>>
>>
>> 2010/1/4 muslim <tomu...@gmail.com>
>>
>> அன்புச் சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு,
>>>
>>> குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் வாசகங்கள்
>>> முன் பின் இருந்தாலும் அனைத்து தமிழாக்கத்திலும் 4:64வது வசனத்தின் கருத்து
>>> ஒன்றுதான்:
>>>
>>> தவறிழைத்தோரும், பாவிகளும் முதலில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு,
>>> அல்லாஹ்வின் தூதரிடம், தங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர
>>> முறையிட
>>> வேண்டும்.
>>>
>>> எந்தத் தூதரையும் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப அவருக்கு (மக்கள்) கீழ்படிந்து
>>> நடப்பதற்காகவே தவிர (வேறு நோக்கத்திற்காக) நாம் அனுப்பவில்லை. (நபியே)
>>> அவர்கள்

>>> தமக்குத் தாமே தீங்கிழைத்தபோது,* உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம்


>>> பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காகத் தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக்
>>> கோரினால், மன்னிப்பை ஏற்பவனாகவும் மிகுந்த அன்புடையோனாகவும் அல்லாஹ்வை

>>> அவர்கள் காண்பார்கள்.* (அல்குர்ஆன் 4:64)


>>>
>>>
>>> 2010/1/3 <ibnuh...@mail.com>
>>>
>>> சகோதரர் ismail ismail
>>>>
>>>> நீங்கள் இறைவனின் வார்த்தைகளை விளங்க முன் , அவற்றின் சரியான மொழி
>>>> பெயர்ப்பை கவனமாக படித்து , அதன் பின் இங்கு பதியுங்கள்.... நீங்கள் ஒரு
>>>> வசனத்தை விட்டு விட்டு , பதிந்தது ஒரு மிக முக்கிய ஈமானின் அம்சத்தையே
>>>> அடித்து

>>>> விடும்.....நீங்கள் எழுதியது.*....*


>>>> அவர்கள் தங்களுக்கு அணிதமிளைத்துக் கொண்டபோது உம்மிடம் அவர்கள் மன்னிப்பு
>>>> கோரி தூதரும் அவர்களை மன்னிக்க கோரி இருந்தால் நிச்சியமாக அவர்களுடைய
>>>> மன்னிப்பை
>>>> ஏற்றுகொல்பவனாகவும் கருனையலனாகவும் இறைவனை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:64
>>>>

>>>> *கீழே சரியான மொழிபெயர்ப்பை படியுங்கள்*....
>>>>
>>>> .....*64.* We sent not an apostle, but to be obeyed, in accordance with


>>>> the will of Allah. If they had only, when they were unjust to
>>>> themselves,

>>>> come unto thee and* asked Allah.s forgiveness*, and the Messenger had


>>>> asked forgiveness for them, they would have found Allah indeed
>>>> Oft-returning, Most Merciful ( by Yusuf Ali ).....4;64
>>>>
>>>> 04';64.......When they had wronged themselves, the best thing for them

>>>> would have been to come to you and *implore Allah's pardon*, and if the


>>>> Messenger had also asked Allah's forgiveness for them, most surely they
>>>> would have found Allah Forgiving and Merciful.(by. Mawdoodi)
>>>>

>>>> நீங்கள் எழுதியதில் *அள்ழாஹவின் மன்னிப்பை கோரி..* என்ற வசனம்


>>>> விடப்பட்டுள்ளது...... நீங்கள் எந்த தர்ஜுமா பாவிக்கின்றீர்கள்.?? கவனமாக
>>>> பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்....
>>>>

>>>> <http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en>


>>>>
>>>> --
>>>> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
>>>> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
>>>> To unsubscribe from this group, send email to

>>>> fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>

அப்துல் காதிர்

unread,
Jan 5, 2010, 6:04:57 PM1/5/10
to fro...@googlegroups.com
பிரார்த்தனைக்குப் பலன்
தெரியாவிட்டால் ...

"நீங்கள் கேளுங்கள், தருகிறேன்" என்ற
இறைவனின் உறுதிமொழியில் எந்தச்
சந்தேகமும் இல்லை. துஆக்கள்
அங்கீகரிக்கப்படாமல் போனால் அதனால்
நம்பிக்கையிழந்து விடக் கூடாது.

நமது துஆவை இறைவன்
அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி விடக்
கூடாது .

நாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக்
கூடியதாக இருக்கலாம். அது நமக்குத்
தெரியாவிட்டாலும் இறைவனுக்குத்
தெரியும். எனவே கேட்டதைத் தராமல்
அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.

அது இல்லையெனில்
அவனுக்கு வரவிருக்கின்ற
ஆபத்தைத்தடுப்பான். அடியான் தனக்கு ஏற்பட்டுள்ள
ஆபத்தை உணராமல்
வேறு தேவையைக் கேட்டால், அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அதைக்
கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான்.

அவ்வாறு இல்லையெனில் அவன்
கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக
மறுமையில்அவனது நிலையை இறைவன்
உயர்த்துகிறான்.
ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும்
ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப்
பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும்.

'பாவமற்ற விஷயங்களிலும்,
உறவினரைப் பகைக்காத
விஷயத்திலும்யாரேனும்
அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும்
ஒரு வழியில் அதை இறைவன்
அங்கீகரிக்கிறான். அவன்
கேட்டதையே கொடுப்பான்
அல்லது அதை மறுமையின்
சேமிப்பாக மாற்றுவான்
அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்' என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள்
'அப்படியானால் நாங்கள்
அதிகமாகக்கேட்போமே!' என்றனர். அதற்கு நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் 'அல்லாஹ் அதை விட அதிகம்
கொடுப்பவன்' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: அஹ்மத் 10709

எனவே துஆக்கள் அனைத்தையும்
இறைவன் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது.

muslim

unread,
Jan 5, 2010, 10:44:38 PM1/5/10
to fro...@googlegroups.com

மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் படைப்பினங்களான விஷ ஜந்துக்களிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருவது!

******************************

உங்களில் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது, ''அவூது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்'' என்று கூறி பிரார்த்தித்தால் அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலி) நூல் - முஸ்லிம் 5247, 5248.)

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

பொருள்:- அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்.

(ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு என்னைத் தேள் கொட்டி விட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை) இழந்துவிட்டேன்'' என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ மாலைப் பொழுதை அடையும்போது ''அவூது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்'' என்று கூறியிருந்தால் அது உனக்குத் தீங்கிழைத்திருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - முஸ்லிம்



2010/1/5 muslim <tomu...@gmail.com>

அப்துல் காதிர்

unread,
Jan 7, 2010, 7:36:22 PM1/7/10
to fro...@googlegroups.com
ஸலாம்

மரணத்தை
இறைவனிடம் வேண்டுதல்:

முதுமையின் காரணமாக
சிலர் ' சீக்கிரம்
நாம் மரணித்து விட்டால்
நல்லது 'என்று சில
வேளை நினைப்பார்கள்.
முதுமையின் காரணமாக
மற்றவர்களுக்குப் பாரமாகி , சொந்த
பந்தங்கள் கூட
அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ' ஏன் இவ்வுலகில் நாம் வாழ
வேண்டும்?' என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச்
செய்துவிடு! ' என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.

எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும்
கூடாது ; மனதால்
அதற்கு ஆசைப்படவும்
கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

"தனக்கு
ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக
உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக்
கூடாது.
அப்படிச் செய்ய வேண்டும் என்ற
நிலைக்குத் தள்ளப்பட்டால் '


இறைவா! நான்

வாழ்வது எனக்குச் சிறந்ததாக
இருக்கும் வரை என்னை வாழ வை!
நான் மரணிப்பது
எனக்கு நல்லதாக இருந்தால்
என்னை மரணிக்கச் செய் ' என்று கூறட்டும் ' என
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்
பின்மாலிக் (ரலி)
நூல்:புகாரி 5671 ,6351

இதற்கான காரணத்தையும்
நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக
விளக்கியுள்ளார்கள். '

ஒரு மனிதருக்கு
(மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால்
இவ்வுலகிலேயே அவருக்குரிய
தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு ( மறுமையில்)
அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து
நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் '
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்:திர்மிதீ2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும் ,
தமது பிள்ளைகள் விஷயத்திலும் ,
தமது செல்வங்களிலும்
தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில்
அவர்கள் மீது எந்தக் குற்றமும்
மீதமிருக்காது ' என்று நபிகள் நாயகம்


(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்கள்: திர்மிதீ 2323 ,
அஹ்மத்7521, 9435

எனவே நோய் நொடி , முதுமை ,குடும்பத்தாரின் அலட்சியம் , உடல்
உபாதை மற்றும் மன உளைச்சலின்
காரணமாக நாம்
மரணத்திற்கு ஆசைப்படக்கூடாது. மறுமையில் நமக்குக்
கிடைக்கவுள்ள தண்டனையைக்
குறைக்க இறைவன்
நமக்குத் தந்துள்ள பரிகாரம் என்று துன்பங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்.

துன்பத்தை வேண்டக்
கூடாது இறைவன் நமக்கு அளிக்கும்
துன்பங்களை நாம்
ஏற்றுச் சகித்துக் கொள்ள வேண்டும் என்றாலும் இதை இறைவனிடம் ஒரு
கோரிக்கையாக நாம் முன் வைக்கக்
கூடாது. ' இறைவா! மறுமையில்எனக்குத்
தரவுள்ள துன்பத்தை இங்கேயே தந்து விடு '
என்று பிரார்த்திக்கக் கூடாது.

பறவைக் குஞ்சு போல் மெலிந்து போன
ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்க நபிகள்
நாயகம் ( ஸல்) அவர்கள் சென்றார்கள்.
' நீ ஏதாவது பிரார்த்தனை செய்து
வந்தாயா ?' என்று அவரிடம் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அவர் ' ஆம்! இறைவா ,
மறுமையில் நீ எனக்கு என்ன
தண்டனை கொடுக்க
உள்ளாயோ அதை இவ்வுலகிலேயே எனக்கு முன்கூட்டியே வழங்கி விடு என்று
பிரார்த்தித்து வந்தேன் '
என்று கூறினார். அப்போது நபிகள்
நாயகம் (ஸல்)
அவர்கள் ' சுப்ஹானல்லாஹ்!
இதை நீ தாங்க மாட்டாய் '
என்று கூறிவிட்டு '
இறைவா இவ்வுலகிலும்
எனக்கு நல்லதைத் தா! மறுமையிலும்
நல்லதைத் தா!
மேலும் நரகத்தின்
வேதனையிலிருந்து என்னைக்காப்பாற்று எனக் கூறியிருக்க
மாட்டாயா ?'
என்று அறிவுரை கூறினார்கள்.அவருக்காக அல்லாஹ்விடம்
பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ்
அவரைக் குணப்படுத்தினான்.
அறிவிப்பவர்:
அனஸ் (ரலி)
நூல்:முஸ்லிம் 4853

இவ்வுலகிலும் என்னைத்
தண்டித்து விடாதே!
மறுமையிலும் என்னைத்
தண்டித்து விடாதே என்று தான் நமது கோரிக்கை அமைய
வேண்டும். இறைவன் நாடினால் இவ்வுலகிலும் , மறுமையிலும்
நம்மைத்தண்டிக்காமல் இருக்கும் அளவுக்கு அவன் கருணை மிக்கவன் என்பதைப்
புரிந்து கொள்ள வேண்டும்.


On 1/6/10, muslim <tomu...@gmail.com> wrote:
> மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் படைப்பினங்களான விஷ ஜந்துக்களிடமிருந்து
> அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருவது!
>
> ******************************
>

> *உங்களில் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது, ''அவூது


> பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்'' என்று கூறி
> பிரார்த்தித்தால் அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும்
> அவருக்குத் தீங்கிழைக்காது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்

> கூறினார்கள்.* அறிவிப்பவர் கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலி) நூல் -
> முஸ்லிம்
> 5247, <http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&Rec=6286> 5248.)


>
> أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
>

> *பொருள்:-* அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின்


> தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்.
>

> *(ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''அல்லாஹ்வின் தூதரே!


> நேற்றிரவு என்னைத் தேள் கொட்டி விட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை)

> இழந்துவிட்டேன்'' என்று கூறினார். *
>
> *அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ மாலைப் பொழுதை அடையும்போது ''அவூது


> பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்'' என்று கூறியிருந்தால் அது
> உனக்குத் தீங்கிழைத்திருக்காது என்று நபி (ஸல்) அவர்கள்

> கூறினார்கள்.*அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் -
> முஸ்லிம் <http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&Rec=6287>)


>
>
> 2010/1/5 muslim <tomu...@gmail.com>
>
>> உறங்கு முன் அங்கத் தூய்மை செய்துகொண்டு, படுக்கையில் படுத்தபடி ஓதும்
>> பிராத்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பிரார்த்தனையின்
>> கருத்து, ஓர் அடியான் தம்மை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்து விடும்படியாக
>> அமைந்துள்ளன. துஆவைக் கற்று அனைவரும் பயன்பெறுவோம்.
>>
>> *************************
>>

>> *நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வதைப் போன்று


>> அங்கத் தூய்மை செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தில் படு. பிறகு
>> ''அல்லாஹும்ம
>> இன்னீ அஸ்லம்த்து வஜ்ஹீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க வஅல்ஜஃத்து ழஹ்ரீ
>> இலைக்க ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா
>> இலைக்க ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபியிக்கல்லதீ
>> அர்ஸல்த்த''என்று ஓதிக் கொள். இந்தப் பிரார்த்தனையை (இரவில்) இறுதிப்
>> பேச்சாக
>> ஆக்கிக்கொண்டு, அன்றைய இரவில் நீ மரணித்து விட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை
>> மரபில் நீ இறந்தவன் ஆவாய்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்

>> கூறினார்கள்.* அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல் - புகாரி 247, 6311,


>> 6313, 6315, 7488. முஸ்லிம்

>> 5249<http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&Rec=6289>


>> )
>>
>> ‏ ‏ اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي
>> إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا
>> مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي
>> أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ ‏
>> ‏
>>

>> *பொருள்:* ''இறைவா! என் முகத்தை உனக்குக் கீழ்ப்படிய செய்து விட்டேன். என்


>> காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன்னளவில்
>> சாய்த்து விட்டேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான்
>> செய்தேன்) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு
>> புகலிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும், நீ அனுப்பிய உன்னுடைய நபியையும்
>> நம்பினேன்''
>>
>> இதன் அறிவிப்பாளர் பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்,
>>

>> *நான் இவற்றை நினைவில் நிறுத்துவதற்காகத் திரும்ப ஓதிக்காட்டினேன். (''நீ


>> அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்'' என்பதற்குப் பதிலாக) 'நீ அனுப்பிய
>> உன்
>> ரஸுலையும் நான் நம்பினேன்' என்று சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
>> அவர்கள், ''நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன் என்று சொல்வீராக!'' என

>> (திருத்திக்) கூறினார்கள்.*


>>
>>
>> 2010/1/4 muslim <tomu...@gmail.com>
>>
>>> ஒரு முஸ்லிம் தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது போல் தன்
>>> கண்ணெதிரே இல்லாத முஸ்லிம் சகோதரர்களின் நலனுக்காகவும் துஆச் செய்தால்
>>> ''ஆமீன்" - அதுபோல் உனக்கும் கிடைக்கட்டும். என்று வானவர் கூறுகிறார். சமூக
>>> பொது நலனில் தம் நலனையும் உள்ளடக்கிய இறைவனின் கருணையே கருணை!
>>> எல்லாப்புகழும்
>>> இறைவனுக்கே!
>>>

>>> *''ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காக


>>> பிரார்த்திக்கும்போது வானவர் ''உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்''
>>> என்று
>>> கூறாமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

>>> * அறிவிப்பவர் அபூதர்தா (ரலி) (நூல் - முஸ்லிம் 5279)


>>>
>>> ****************
>>>
>>> நான் ஷாம் நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபூதர்தா (ரலி)
>>> அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என்
>>> மனைவியின் தாய்) உம்முத் தர்தா(ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம்,
>>> ''இந்த
>>> ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?'' என்று கேட்டார்.
>>>
>>> நான் ''ஆம்'' என்றேன்.
>>>
>>> அதற்கு அவர் சொன்னார், அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள்

>>> ஏனெனில்* நபி (ஸல்) அவர்கள் ''ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம்


>>> சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த
>>> முஸ்லிமின்
>>> தலைக்கருகில் நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம்
>>> சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம் அதற்கென
>>> நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர் 'இறைவா! (இவரது பிரார்த்தனையை)
>>> ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப்

>>> பிரார்த்திக்கிறார்'' என்று கூறினார்கள்.*


>>>
>>> பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது,
>>> அபூதர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதாக
>>> அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள். அறிவிப்பவர் ஸஃப்வான் பின் அப்துல்லாஹ்
>>> பின் ஸஃப்வான் (ரஹ்) (நூல் - முஸ்லிம் 5281)
>>>
>>>
>>> 2010/1/4 muslim <tomu...@gmail.com>
>>>
>>> அன்புச் சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு,
>>>>
>>>> குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின்
>>>> வாசகங்கள்
>>>> முன் பின் இருந்தாலும் அனைத்து தமிழாக்கத்திலும் 4:64வது வசனத்தின் கருத்து
>>>> ஒன்றுதான்:
>>>>
>>>> தவறிழைத்தோரும், பாவிகளும் முதலில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு,
>>>> அல்லாஹ்வின் தூதரிடம், தங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர
>>>> முறையிட
>>>> வேண்டும்.
>>>>
>>>> எந்தத் தூதரையும் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப அவருக்கு (மக்கள்) கீழ்படிந்து
>>>> நடப்பதற்காகவே தவிர (வேறு நோக்கத்திற்காக) நாம் அனுப்பவில்லை. (நபியே)
>>>> அவர்கள்

>>>> தமக்குத் தாமே தீங்கிழைத்தபோது,* உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம்


>>>> பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காகத் தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக்
>>>> கோரினால், மன்னிப்பை ஏற்பவனாகவும் மிகுந்த அன்புடையோனாகவும் அல்லாஹ்வை

>>>> அவர்கள் காண்பார்கள்.* (அல்குர்ஆன் 4:64)


>>>>
>>>>
>>>> 2010/1/3 <ibnuh...@mail.com>
>>>>
>>>> சகோதரர் ismail ismail
>>>>>
>>>>> நீங்கள் இறைவனின் வார்த்தைகளை விளங்க முன் , அவற்றின் சரியான மொழி
>>>>> பெயர்ப்பை கவனமாக படித்து , அதன் பின் இங்கு பதியுங்கள்.... நீங்கள் ஒரு
>>>>> வசனத்தை விட்டு விட்டு , பதிந்தது ஒரு மிக முக்கிய ஈமானின் அம்சத்தையே
>>>>> அடித்து

>>>>> விடும்.....நீங்கள் எழுதியது.*....*


>>>>> அவர்கள் தங்களுக்கு அணிதமிளைத்துக் கொண்டபோது உம்மிடம் அவர்கள்
>>>>> மன்னிப்பு கோரி தூதரும் அவர்களை மன்னிக்க கோரி இருந்தால் நிச்சியமாக
>>>>> அவர்களுடைய
>>>>> மன்னிப்பை ஏற்றுகொல்பவனாகவும் கருனையலனாகவும் இறைவனை அவர்கள்
>>>>> கண்டிருப்பார்கள்
>>>>> 4:64
>>>>>

>>>>> *கீழே சரியான மொழிபெயர்ப்பை படியுங்கள்*....
>>>>>
>>>>> .....*64.* We sent not an apostle, but to be obeyed, in accordance with


>>>>> the will of Allah. If they had only, when they were unjust to
>>>>> themselves,

>>>>> come unto thee and* asked Allah.s forgiveness*, and the Messenger had


>>>>> asked forgiveness for them, they would have found Allah indeed
>>>>> Oft-returning, Most Merciful ( by Yusuf Ali ).....4;64
>>>>>
>>>>> 04';64.......When they had wronged themselves, the best thing for them

>>>>> would have been to come to you and *implore Allah's pardon*, and if the


>>>>> Messenger had also asked Allah's forgiveness for them, most surely they
>>>>> would have found Allah Forgiving and Merciful.(by. Mawdoodi)
>>>>>

>>>>> நீங்கள் எழுதியதில் *அள்ழாஹவின் மன்னிப்பை கோரி..* என்ற வசனம்


>>>>> விடப்பட்டுள்ளது...... நீங்கள் எந்த தர்ஜுமா பாவிக்கின்றீர்கள்.?? கவனமாக
>>>>> பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்....
>>>>>

>>>>> <http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en>


>>>>>
>>>>> --
>>>>> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
>>>>> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
>>>>> To unsubscribe from this group, send email to

>>>>> fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>

muslim

unread,
Jan 8, 2010, 2:18:39 PM1/8/10
to fro...@googlegroups.com

நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்து அதிகாலை முன்நேரத்தை அடைந்தால் ''சமிஅ சாமிவுன் பி ஹம்தில்லாஹி வ ஹுஸ்னீ பலாயிஹி அலைனா. ரப்பனா ஸாஹிப்னா. வ அஃப்ளில் அலைனா. ஆயிதா பில்லாஹி மினந் நார்'' என்று பிரார்த்திப்பார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - முஸ்லிம் 5262)

  ‏سَمِعَ سَامِعٌ ‏ ‏بِحَمْدِ اللَّهِ وَحُسْنِ ‏ ‏بَلَائِهِ ‏ ‏عَلَيْنَا رَبَّنَا صَاحِبْنَا وَأَفْضِلْ عَلَيْنَا عَائِذًا بِاللَّهِ مِنْ النَّار

பொருள்:- அல்லாஹ் நமக்குப் புரிந்த நல்லுபகாரத்திற்காக அவனை நாம் போற்றிப் புகழ்வதைக் கேட்பவர் கேட்டுவிட்டார். (அல்லது கேட்பவர் பிறருக்கு எடுத்துரைக்கட்டும்) எங்கள் இரட்சகா! எங்களுடன் வருவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நரக நெருப்பிலிருந்து காப்பாயாக!



2010/1/6 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jan 11, 2010, 10:42:19 PM1/11/10
to fro...@googlegroups.com

மனிதனுக்கு மனக்கவலை - துன்பம் ஏற்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்ந்து கூற வேண்டியவை! இதன் பொருளைச் சிந்தித்தால் அல்லாஹ்வைத் தவிர எல்லா உயிரினங்களும் துன்பத்திற்குள்ளாகாமல் இருப்பதில்லை என்பது விளங்குகிறது. சுருங்கக் கூறுவதென்றால்: அல்லாஹ்வைத் தவிர பிற அனைத்தும் அழிந்துவிடும் என்ற ஏகத்துக்கொள்கை மிளிர்கிறது.   

நபி (ஸல்) அவர்கள் துன்பத்தின்போது பின்வருமாறு கூறுவார்கள். ''லாயிலாஹா இல்லல்லாஹு அழீமுல் ஹலீம். லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாதி, வ ரப்புல் அர்ளி வ ரப்புல் அர்ஷில் கரீம்'' என்று கூறுவார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் - முஸ்லிம் 5276)

‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

பொருள்:- கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. மகத்தான அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.



2010/1/8 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jan 14, 2010, 12:04:00 AM1/14/10
to fro...@googlegroups.com
 அசதி, இயலாமை, சோம்பல் ஆகியவற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரல்!

*********************

''அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் அஜ்ஸி வல்கசலி, வல்ஜுப்னி, வல்ஹரமி, வல்புக்ல். வ அவூதுபிக்க மின் அதாபில் கப்ரி, வ மின் ஃபித்தனத்தில் மஹ்யா வல்மமாத்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிராத்தித்து வந்தார்கள். அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல்கள் - புகாரி 2823, 6367. முஸ்லிம் 5243)

‏اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ ‏ ‏الْعَجْزِ ‏ ‏وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ  

பொருள்:- இறைவா! இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், தள்ளாமையிலிருந்தும்,  கருமித்தனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருருகிறேன்! வாழ்வின் சோதனையிலிருந்தும், மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!



2010/1/12 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jan 16, 2010, 12:23:35 PM1/16/10
to fro...@googlegroups.com

ஒருவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவினால், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் கற்றுக்கொடுப்பார்கள். பிறகு ''அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ'' எனும் இந்த வாக்கியங்களைச் சொல்லிப் பிரார்த்திக்கும்படி கட்டளையிடுவார்கள். அறிவிப்பவர் தாரிக் பின் அஷ்யும் (ரலி) (நூல் - முஸ்லிம் 5228)‏ ‏


‏‏ ‏اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي

பொருள்:- இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக!
 
*******************************

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிராத்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ '' என்று சொல்வீராக! என்றார்கள்.

இதைக் கூறியபோது, தமது பெருவிரலைத் தவிர மற்ற விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு, ''இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் தாரிக் பின் அஷ்யம் (ரலி) (நூல் - முஸ்லிம் 5229)
 

‏‏ ‏اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي  وَعَافِنِي وَارْزُقْنِي



2010/1/14 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jan 19, 2010, 11:39:57 AM1/19/10
to fro...@googlegroups.com

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டிவந்த பிரார்த்தனைகள் குறித்துக் கேட்டேன். ''அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் ஷர்ரி மா அமில்த்து, வ மின் ஷர்ரி மா லம் அஃமல்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர் ஃபர்வா பின் நவ்ஃபல் (ரஹ்) (நூல் - முஸ்லிம் 5259)

‏اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ

பொருள்:- இறைவா! நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும் நான் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.



2010/1/16 muslim <tomu...@gmail.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 20, 2010, 7:51:40 AM1/20/10
to fro...@googlegroups.com

( مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ )

ஸுப்ஹானல்லாஹி அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்-ரலி, நூல்: திர்மிதீ 3386)

 

 
 

( خَصْلَتَانِ أَوْ خَلَّتَانِ لَا يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ يُسَبِّحُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا وَيَحْمَدُ عَشْرًا وَيُكَبِّرُ عَشْرًا فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَيُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ فَذَلِكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُهَا بِيَدِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ قَالَ يَأْتِي أَحَدَكُمْ يَعْنِي الشَّيْطَانَ فِي مَنَامِهِ فَيُنَوِّمُهُ قَبْلَ أَنْ يَقُولَهُ وَيَأْتِيهِ فِي صَلَاتِهِ فَيُذَكِّرُهُ حَاجَةً قَبْلَ أَنْ يَقُولَهَا )

 
 
இரண்டு நல்லறங்கள் உள்ளன. அதனை முறையாகக் கடைபிடிக்கும் இறையடியான் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவான். அவ்விரண்டும் மிக எளிதானது. எனினும் அதனைக் கடைபிடிப்பவர் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே! -அதில் ஒன்று- : -கடமையான- ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் 10 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்றும் 10 தடவை அல்ஹம்து லில்லாஹ் என்றும் 10 தடவை அல்லாஹு அக்பர் என்றும் கூறவேண்டும். இவ்வாறு -ஐவேளைத் தொழுகையில்- 150 தடவை மொழிவது மறுமைத் தராசில் 1500 நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன. மற்றொன்று : உறங்குவதற்காகப் படுக்கையில் சாயும் போது 34 தடவை அல்லாஹு அக்பர் என்றும் 33 தடவை அல்ஹம்து லில்லாஹ் என்றும் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்றும் கூறவேண்டும். இவ்வாறு மொழிந்த 100 -திக்ர்கள்- நன்மைத் தராசில் 1000 நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இவ்விரண்டும் மிக எளிதாக இருக்கும் போது அதனைக் கடைபிடிப்பவர் ஏன் மிகக் குறைவாக உள்ளனர்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உறங்கச் செல்லும் ஒருவரிடம் அவன் -ஷைத்தான்- வந்து இதனைக் கூறுவதற்கு முன் அவரை தூங்கவைத்துவிடுகிறான். அதுபோல் அவர் தொழுது கொண்டிருக்கும் போதே அவரிடம் வந்து இதனைக் கூறுவதற்கு முன்னரே வேலைகளை நினைவூட்டி -எழுந்திருக்கச் செய்து- விடுகிறான் என்று பதிலளித்தார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கை விரல்களால் -தஸ்பீஹ் எண்ணியதை- நான் கண்டேன்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூற்கள் : அஹ்மத், அபூதாவூத் 4404, திர்மிதீ, நஸாயீ, இப்னு ஹிப்பான்)

 
 
 

(عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْسًا فَقَالَ يَا أَبَا هُرَيْرَةَ مَا الَّذِي تَغْرِسُ قُلْتُ غِرَاسًا لِي قَالَ أَلَا أَدُلُّكَ عَلَى غِرَاسٍ خَيْرٍ لَكَ مِنْ هَذَا قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ قُلْ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ يُغْرَسْ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ فِي الْجَنَّةِ )

பயிரை நட்டிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன் என்றார்கள். இதனை விட உமக்குச் சிறந்த பயிரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்க, அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும் என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : இப்னுமாஜா 3797)

 

Thanks: Islamkalvi

--
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு
இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும்
நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள்
யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம்
பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.”
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்: அஹ்மது

muslim

unread,
Jan 20, 2010, 11:17:25 AM1/20/10
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் சேலம் சிராஜ் அவர்களுக்கு,

இந்த இழையில் பிரார்த்தனைகள் மட்டும் பதிவு செய்யவும். திக்ருகளை வேறு இழையில் பதியவும்.



2010/1/20 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

muslim

unread,
Mar 5, 2010, 3:07:32 AM3/5/10
to fro...@googlegroups.com

படுக்கையில் உறங்குவதற்கு முன் ஓதும் குர்ஆன் சூராக்கள்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்' 'குல் அஊது பிரப்பில் ஃபலக்' 'குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - புகாரி 5017, 5748, 6319)



2010/1/19 muslim <tomu...@gmail.com>
112.JPG
113.JPG
114.JPG

muslim

unread,
Mar 5, 2010, 3:29:12 AM3/5/10
to fro...@googlegroups.com
உறங்குவதற்கு முன் ஓதும் குர்ஆன் வசனம்
 
ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; 'உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்" என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்..) இறுதியில் அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்" என்று என்னிடம் சொன்னான். (இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) 'அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - புகாரி 3275, 5010)

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم



2010/3/5 muslim <tomu...@gmail.com>

NAGOOR SYEDALI

unread,
Mar 5, 2010, 3:55:03 AM3/5/10
to fro...@googlegroups.com
KLJ

--- On Fri, 5/3/10, muslim <tomu...@gmail.com> wrote:


The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

muslim

unread,
Mar 15, 2010, 11:29:37 AM3/15/10
to fro...@googlegroups.com
புத்தாடை அணியும்போது அல்லாஹ்விடம் கோரும் பிரார்த்தனை!
 
*******************
 
நபி (ஸல்) அவர்கள் புத்தாடை அணியும்போது, ''அல்லாஹும்ம லகல்ஹம்து அன்த கஸவ்தனீஹி. அஸ்அலுக கைரஹு வகைர மாஸுனிஅ லஹு அவுதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மாஸுனிஅ லஹு'' என்று கூறுவார்கள். அறிவிப்பவர் அபூஸயீத் (ரலி) (நூல்கள் - திர்மிதீ 1689. அபூதாவுத், நஸயீ)


‏اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

பொருள்:- ''இறைவா! உனக்கே புகழனைத்தும். நீதான் இதை - இந்த இடத்தில் தலைப்பாகை, சட்டை, மேலாடை என்று அவற்றின் பெயரைக் குறிப்பிடுவார்கள் - அணிவித்தாய்! இதன் நன்மையையும் எந்த நோக்கத்திற்காக இது தயாரிக்கப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீமையை விட்டும் இது தயாரிக்கப்பட்டதில் உள்ள தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்''



2010/3/5 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Sep 4, 2010, 10:56:55 AM9/4/10
to fro...@googlegroups.com

படுக்கைக்குச் சென்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரும் மற்றொரு பிரார்த்தனை.

****************************

 
நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

''பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபவுஹு இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்''

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - புகாரி 6320)

பொருள்:- என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!

 بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِين



2010/3/5 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jan 5, 2011, 11:30:58 AM1/5/11
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

பயணம் புறப்பட்டு வாகனத்தில் அமர்ந்ததும் கேட்கப்படும் பிரார்த்தனை!

*************************

இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (பின் வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்.

அல்லர்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட்டால்  தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன்  மூன்று முறை  தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள். பிறகு, ''சுப்ஹானல்லதீ சக்ர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன், அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக ஃபீ ஸஃப்ரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா. வ மினல் அமலி மா தர்ளா, அல்லஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃப்ரனா ஹாதா, வத்வி அன்னா புஅதஹ், அல்லாஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி வல்கலீஃபத்து ஃபில்அஹ்ல், அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் வவுஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலி வல்அஹ்ல்'' என்று கூறுவார்கள். அறிவிப்பவர் அலீ பின் அப்துல்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) (நூல்கள் - முஸ்லிம் 2612, திர்மிதீ 3447, அபூதாவூத் 2599, அஹ்மத் 6338, தாரிமீ 2673)

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ  اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ وَإِذَا رَجَعَ قَالَهُنَّ وَزَادَ فِيهِنَّ آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
 

பொருள்:- நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில் எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா! இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா! நீயே என் பயணத்தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்)

திரும்பி வரும்போதும் இவ்வாறே பிராத்திப்பார்கள். ஆனால், அவற்றுடன் பின்வரும் வரிகளையம் கூடுதலாக ஓதுவார்கள். ''ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பனா ஹாமிதூன்'' (பொருள்:- பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனைப் போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்.)

அறிவிப்பவர் அலீ பின் அப்துல்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) (நூல்கள் - முஸ்லிம் 2612, திர்மிதீ 3447, அபூதாவூத் 2599, அஹ்மத் 6338, தாரிமீ 2673)



2010/9/4 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jan 9, 2011, 12:29:43 PM1/9/11
to fro...@googlegroups.com


2011/1/5 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jan 9, 2011, 12:32:33 PM1/9/11
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

பயணத்திலிருந்து திரும்பும்போது கேட்கப்படும் மற்றொரு பிரார்த்தனை!

*************************

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர், அல்லது படை, அல்லது ஹஜ், அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது குன்றுகள் அல்லது மேடுகள் மீது ஏறினால் மூன்று முறை தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள். பிறகு ''லா இலாஹா இல்லல்லாஹு, வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, லி ரப்பனா ஹாமிதூன. ஸதக்கல்லாஹு வஅதஹு வ நஸர அப்தஹு வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்'' என்று கூறுவார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 1797, 2995, 3084, 4116, 6385, முஸ்லிம் 2615, திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக்)

كَبَّرَ ثَلَاثًا ثُمَّ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ  

(பொருள்:- அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும், சிரம்பணிந்தவர்களாகவும், அவனையே பொற்றிப் புகழ்ந்தவர்களாகவும், திரும்புகிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கி விட்டான். தன் அடியாருக்கு வெற்றியளித்தான். கூட்டுப் படைகளைத் தன்னந் தனியாக அவனே தோற்கடித்தான்.)


 
2011/1/9 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Apr 24, 2011, 7:09:21 AM4/24/11
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த சில பிரார்த்தனைகளை இந்த இழையில் காணலாம்



2011/1/9 muslim <tomu...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages