ஸலாம்
மாற்று மத சகோதரர்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று முகமன் கூறலாமா? விளக்கம் அளிக்கவும்...
ஹுசைன் |
'இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம்
எது?' என்று ஒருவர் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களிடம் கேட்டார்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் 'உணவளிப்பதும், உனக்குத்
தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும்
ஸலாம் கூறுவதுமாகும்' என
விடையளித்தார்கள்.
நூல்:புகாரி12,28,6236
முஸ்லிமுக்கு மட்டும் தான்
ஸலாம் கூற வேண்டும் என்றால்
முஸ்லிம்
என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியிருப்பார்கள்.
அவ்வாறு கூறாமல்
தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும்
ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.
ஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத்
தெரியாது என்றால் அவர்
முஸ்லிமா அல்லவா
என்பதும் கூட நமக்குத் தெரியாது.
அது பற்றிக் கவலைப்படாமல்
தெரிந்தவர்
தெரியாதவர் என்ற
பாகுபாடு இன்றி அனைவருக்கும்
ஸலாம் கூறு என நபிகள்
நாயகம் ( ஸல்) அவர்கள் கூறியதன்
மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும்
ஸலாம்
கூறலாம் என்பதை அறியலாம்.
மேலும் பின்வரும் வசனங்கத்தில்
மூடர்கள்
உரையாடினால் ஸலாம்
என்று கூறிவிடுமாறு அல்லாஹ்
வழி காட்டுகிறான். இங்கே
மூடர்கள் என்று குறிப்பிடுவதில்
இஸ்லாத்தை ஏற்காதவர்களும்
தீயவர்களும்
அடங்குவார்கள்.
"அளவற்ற
அருளாளனின் அடியார்கள் பூமியில்
பணிவாக
நடப்பார்கள். அறிவீனர்கள்
அவர்களுடன் உரையாடும்
போது 'ஸலாம்' எனக்
கூறுவார்கள்". திருக்குர்ஆன் 25:63
"வீணானவற்றை அவர்கள்
செவியுறும்
போது அதை அலட்சியம் செய்கின்றனர்.
'எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள்
செயல்கள் உங்களுக்கு. உங்கள்
மீது ஸலாம் உண்டாகட்டும்.
அறிவீனர்களை
விரும்ப மாட்டோம்' எனவும்
கூறுகின்றனர்". திருக்குர்ஆன் 28:55
"என் இறைவா! அவர்கள்
நம்பிக்கை கொள்ளாத
கூட்டமாகவுள்ளனர்" என்று அவர் (
முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.)
அவர்களை அலட்சியப்படுத்துவீராக!
ஸலாம் எனக்
கூறுவீராக! பின்னர் அவர்கள்
அறிந்து கொள்வார்கள்
திருக்குர்ஆன்43:88,89
மேற்கண்ட
வசனங்களை மேலோட்டமாகப்
பார்த்தாலே முஸ்லிமல்லாதவர்களுக்கும்
ஸலாம் கூறலாம்
என்பதை அறிந்து கொள்ள முடியும
On 12/24/09, நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com> wrote:
> ஸலாம்
>
> *மாற்றாருக்கு ஸலாம்.*
>
> முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லக் கூடாது என்ற எந்த தடையையும் நம்மால்
> பார்க்க முடியவில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் "ஸலாமி"ற்குரியவர்கள், ஸலாமை
> விரும்புபவர்கள் என்பதால் அவர்களுக்கு நாம் ஸலாம் சொல்லலாம்.
>
> மக்களே ஸலாத்தை பரப்புங்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம்
> சொல்லுங்கள் போன்ற ஆர்வமூட்டியுள்ள ஹதீஸ்கள் பிறருக்கு ஸலாம் சொல்வதை
> அனுமதித்தே வந்துள்ளது.
>
> *மாற்று மத சகோதரர்களின் ஸலாமுக்கு பதில்*
>
> *وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا
> إِنَّ اللّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا*
>
> உங்களுக்கு ஸலாம் (வாழ்த்து) கூறப்பட்டால் அதைவிட அழகானதை அல்லது அதையே
> பதிலாக்குங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கணெக்கெடுப்பவனாக இருக்கிறான்.
> (அல்குர்ஆன் 4:86)
>
> *"உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால்.." என்ற சொற்பதம் சொல்லப்படும்
> வார்த்தையைத்தான் கவனிக்க சொல்கின்றதே தவிர சொல்லும் ஆட்களையல்ல.* எனவே
> நமக்கு யார் ஸலாம் சொன்னாலும் அவர்களுக்கு அதைவிட சிறந்த வார்த்தையை அல்லது
> அதையே பதிலாக சொல்லலாம்.
>
> இணைவைப்பவர்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள் என்று சில
> அறிவிப்புகள் உள்ளன. அவற்றை பொது அறிவிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
> ஏனெனில் நம் ஸலாத்துக்கு முறையான பதில் கொடுக்காமல் ஸலாத்தை மாற்றி கூறும்
> செயலை சில யூதர்கள் செய்தார்கள் அது போன்றவர்களை கருத்தில் கொண்டே அந்த
> அறிவிப்புகள் வந்துள்ள என்று விளங்குவதே சரியாகத் தெரிகின்றது. (அல்லாஹ்
> அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன் என்று நம்புகிறோம்)
>
> ஸலாம் குறித்து மேலதிக விபரங்களுக்கு
> கிளிக்<http://tamilislam-qa.blogspot.com/2008/12/blog-post_14.html>
> --
> *ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)*
>
> http://tamilmuslimgroup.blogspot.com
>
> தமிழ் யுனிகோட் டவுன்லோட்
>
> http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe
>
> --
> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
> To unsubscribe from this group, send email to
> fromgn+un...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
ஸலாம்
பதில் அளித்த சகோதரர்களுக்கு நன்றி..
ஹுசைன் |
--
யூதர்களில் ஒரு குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டு 'அஸ்ஸாமு அலைக்க' (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சாபமிட்டு முகமன்) கூறினர். உடனே நான் 'வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா' அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் ஏற்படட்டும்) என்று பதில் (முகமன்) சொன்னேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகிறான்' என்று கூறினார்கள். நான் 'அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'நானே 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா?)'என்று (திருப்பிக்) கேட்டார்கள்.14 புகாரி 6927. Volume:7 Book:88
மேற்கண்ட ஹதீஸ்-ஐ அடிப்படையாக வைத்துப்பார்த்தால் நபிகளார் வாழந்த காலத்தில் யூதர்களிடமும் ஸலாம் பரப்பப்பட்டு வந்ததை தெளிவாக உணர முடிகிறது! சற்று கவனமாக படித்துப்பார்த்தால் ”யூதர்களில் ஒரு குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து” என்று இந்த ஹதீஸ் வருகிறது அப்படியானால் மற்ற குழுவினர் ஒழுங்காக ஸலாம் கூறியிருப்பது போன்று விளக்கம் கிடைக்கிறதே!
சகோதரர்களே இங்கு நபிகளாரின் நலினத்தைப் பாருங்கள் தன்னை முகமன் கூறுவதைப் போன்றற சாயலில் சாபம் விட்டவர்களைக்கூட வரம்பு மீராமல் தானும் இருக்கிறார் தம் மனைவிக்கும் அறிவுறுத்துகிறார் இறுதியாக நலினமாக அவ்வாறே உங்களுக்கும் உண்டாவதாக என்று திருப்பிச் சொல்லியிருக்கிறார்கள். (நம்மில் எத்தனைபேர் நம் குடும்பத்தினருக்கு அறிவுரை கூறுகிறோம்???)
6:54. நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால் "ஸலாமுன் அலைக்கும்" என்று நபியே நீர் கூறும். உங்கள் இறைவன் கிருபை செய்வதை தன்மீது கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையை செய்துவிட்டு அதற்குப் பின் பாவத்தை விட்டும் திரும்பி திருத்திக் கொண்டால் நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும், மிகக் கிருபையுடையவனாக்வும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 6:54)
உதாரணமாக ஒரு இடத்தில் காபிர்களை நோக்கி வெட்டுங்கள் என்ற வசனம் வரும் அதன் முன்பின் வசனங்களை படித்தால் போர்க்களங்களில் வெட்டுங்கள் என்பது போன்று விளக்கம் இருக்கும் ஆனால் நம்மவர்கள் குறிப்பாக பாகிஸ்தானியர்கள் இது போன்ற வசனங்களை தவறாக எடுத்துக்கொள்கிறார்கள் இதன் விளைவை நீங்களே கண்கூடாக பார்க்கிறீர்கள்!
குறிப்பு
மாற்றுமத அரசர்களுக்கு கடிதம் எழுதப்படும்போது நபிகளார் (ஸல்) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று அல்லாஹ்வை புகழ்ந்துள்ளார்கள் நாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை பரப்ப (ஸலாத்தை பரப்ப) ஏன் தயங்க வேண்டும்! வேண்டுமானால் நயவஞ்சக யூதர்களுக்கு ஸலாம் கூறும்போது வாலைக்கும் என்று கூறலாமே! ஆதாரம் உள்ளதே!
மாற்றுமத்த்தவர்களுக்கு ஸலாம் கூறக்கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரம் எனக்கும் கிடைக்கவில்லை
குறிப்பு
மாற்றுமத அரசர்களுக்கு கடிதம் எழுதப்படும்போது நபிகளார் (ஸல்) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று அல்லாஹ்வை புகழ்ந்துள்ளார்கள் நாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை பரப்ப (ஸலாத்தை பரப்ப) ஏன் தயங்க வேண்டும்! வேண்டுமானால் நயவஞ்சக யூதர்களுக்கு ஸலாம் கூறும்போது வாலைக்கும் என்று கூறலாமே! ஆதாரம் உள்ளதே!
குறிப்பு
மாற்றுமத அரசர்களுக்கு கடிதம் எழுதப்படும்போது நபிகளார் (ஸல்) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று அல்லாஹ்வை புகழ்ந்துள்ளார்கள் நாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை பரப்ப (ஸலாத்தை பரப்ப) ஏன் தயங்க வேண்டும்! வேண்டுமானால் நயவஞ்சக யூதர்களுக்கு ஸலாம் கூறும்போது வாலைக்கும் என்று கூறலாமே! ஆதாரம் உள்ளதே!
எனக்கும் மாற்று மதத்தவர்களுக்கு சலாம் சொல்வது சம்மந்தமாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதுவும் நான் 6:54 வது வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுவதைப் படித்த பிறகுதான் எனக்கு இந்த சந்தேகம் வந்தது. அதற்கு முன்புவரை நானும் மாற்றுமதத்தவர்களுக்கு சலாம் சொல்லலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். தயவு செய்து இந்த வசனத்தைப் படித்து விட்டு விளக்கமளிக்கவும்..
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்.. மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல் குர்ஆன் 3 : 134)
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு
இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும்
நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர்.. அப்போது ஜிப்ரீலே, அவர்கள்
யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம்
பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.”
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்: அஹ்மது
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
குறிப்பு
மாற்றுமத அரசர்களுக்கு கடிதம் எழுதப்படும்போது நபிகளார் (ஸல்) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று அல்லாஹ்வை புகழ்ந்துள்ளார்கள் நாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை பரப்ப (ஸலாத்தை பரப்ப) ஏன் தயங்க வேண்டும்! வேண்டுமானால் நயவஞ்சக யூதர்களுக்கு ஸலாம் கூறும்போது வாலைக்கும் என்று கூறலாமே! ஆதாரம் உள்ளதே!
நூல்: புஹாரி 6787, அத்தியாயம்: குற்றவியல் சட்டங்கள்
ஆயிஷா (ரலி) கூறுகிறார்:
மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள்.
நீங்கள் ஒரு சபையில் கலந்துக்கொள்ளும்போது அங்குள்ளவர்களுக்கு (ஸலாம் கூறி) வாழ்த்த வேண்டும். அதேபேல் அங்கிருந்து புறப்படும்போதும் அவர் வாழத்து கூறிய பின்னர் புறப்படவேண்டும் ................... (ஆதாரம் அபுதாவுது, திர்மிதி)
இந்த ஹதீஸில் சலாம் கூறப்படுவது முஸ்லிம்கள் மட்டும் உள்ள சபை குறி்த்தா? முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாதவர் இருக்கும் சபையை குறித்தா?
அஸ்ஸலாமு அலைக்கும்!
//முஸ்லிமல்லாதவன் கல்லை நிற்கவைத்து வணங்குகிறான்! முஸ்லிம்களில் கப்ருவணங்கி கல்லை படுக்கவைத்து வணங்குகிறான்!//
சகோ. சிராஜ் அவர்கள் சொன்ன இந்த வாக்கியம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லக்கூடாது என்பவர்கள் சிந்தித்து பதில் கூற வேண்டிய ஒரு கேள்வியாகவே இது இருக்கிறது! இதற்கு என்ன பதிலளிக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.
அபூஃபைஸல், ரியாத்