அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
''உங்களில் யார் அழகிய செயலுடையவர் என்பதை சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். அவனது அர்ஷு நீரின் மீது இருந்தது. நீங்கள் மரணத்தின் பின் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். என (நபியே) நீர் கூறுவீராக!'' 'இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை' என நிராகரித்தோர் கூறுவர். (அல்குர்ஆன் 11:7)
''(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷு (சிம்மாசனம்) தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் - நபிமொழிச் சுருக்கம்: புகாரி 3191)
இறை வழியில் முயன்று, சோதனை எனும் தேர்வில் மனிதன் வெற்றி பெறவேண்டும். மனிதன் உள்பட உயிரினங்கள் வாழ்வதற்குத் தகுதியான சூழ்நிலையைக் கட்டமைக்க, அனைத்துப் படைப்புகளும் அதற்கான சிறந்த முன்னேற்பாடாகும்.
அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். (அல்குர்ஆன் 9:36)
வானங்களும், பூமியும் இதர அமைப்புகளும் படைக்கப்பட்டு ஆண்டு, மாதம், கிழமை, இரவு, பகல் என கால நேரம் நிர்ணயிக்கப்பட்டு, இயங்கிக்கொண்டிருந்த பின்னர் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்.
அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான். இன்னும், அவன் மனிதனின்
படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். (அல்குர்ஆன் 32:7)
(நபியே! நினைவு கூர்வீராக!) 'நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்' என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்,
'நானே அவரைவிட மேலானவன். (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய். ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்' என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 38:71, 76)
''அல்லாஹ் ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான். பூமியின் தரத்திற்கேற்ப ஆதமுடைய மக்கள் உருவானார்கள். இதனால் தான் சிவப்பு நிறமுடையவர், வெண்மை நிறமுடையவர், கருப்பு நிறமுடையவர் இவற்றுக்கு இடைப்பட்ட நிறத்தவர், நளினமானவர், திடமானவர், கெட்டவர் மற்றும் நல்லவர் உருவாயினர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) (நூல்கள் - திர்மிதீ 2879, அபூதாவூத், அஹ்மத், ஹாகீம், பைஹகீ)
வெள்ளிக்கிழமை
''சூரியன் உதிக்கும் நாள்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள். அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்று தான் யுக முடிவு நிகழும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 1548 )
''சூரியன் உதிக்கும் நாள்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறந்ததாகும். அதில் தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதில் தான் சொர்க்கத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். அதில்தான் அங்கிருந்து இறக்கப்பட்டார்கள். அதில் ஒரு நேரம் உள்ளது. தொழக்கூடிய எந்த முஸ்லிமாவது அந்த நேரத்தை அடைந்து அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் எதையாவது கேட்டால் அல்லாஹ் அவருக்கு அதைக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - திர்மிதீ 453, அபூதாவூத், நஸயீ, முஅத்தா)
முதல் மனிதரும், முதல் நபியும், ஒட்டுமொத்த மனித இனத் தந்தையுமாகிய ஆதம் (அலை) அவர்கள் வெள்ளிக்கிழமை படைக்கப்பட்டார்கள். என்று நபிவழிச் செய்திகள் அறிவிக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கள்கிழமை நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டது. ''அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். அதில் தான் எனக்குக் குர்ஆன் அருளப்பட்டது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூகத்தாதா அல்அன்ஸாரி (ரலி) நூல் - முஸ்லிம் 2153. அன்றுதான் ''நான் நபியாக நியமிக்கப்பட்டேன்'' என்ற விபரம், முஸ்லிம் 2152 வது ஹதீஸில் இடம்பெற்றுள்ளன.)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த நாள், நபியாக நியமிக்கப்பட்ட நாள், குர்ஆன் அருளப்பட்ட நாள். இம்மூன்று நிகழ்வுகளும் வெவ்வேறு தினங்களில் நிகழ்ந்தன என்றாலும், அவை மூன்று திங்கள்கிழமைகளில் நிகழ்ந்துள்ளன. இந்த நபிவழிச் செய்தியை எவ்வாறு விளங்குகிறோமோ அது போன்றே:
ஆதம் (அலை) அவர்கள் வெள்ளிக்கிழமை படைக்கப்பட்டார்கள். வெள்ளிக்கிழமை சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். வெள்ளிக்கிழமை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இவை மூன்று வெள்ளிக்கிழமைகளில் நிகழ்ந்த வெவ்வேறான நிகழ்வாகும். இதே வெள்ளிக்கிழமையில் நிகழவிருக்கும் முக்கிய யுக முடிவுப் பற்றியும் நபிமொழியில் சொல்லப்படுகிறது. நடந்த, நடக்கவிருக்கும் சம்பவங்கள் நான்கு வெள்ளிக்கிழமைகளில் நிகழ்ந்தவை எனப் புரிந்துகொள்ள உதவுகின்றன!
வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாள்களில் படைத்ததை, அறிவியல் ஆய்வில் அவற்றை ஆறு காலகட்டங்களாக விளங்கினாலும், ஆதம் (அலை) அவர்களின் படைப்பு அந்த ஆறு நாள்களுக்குள் கட்டுப்படாது!
''அல்லாஹ் ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான்'' என்ற நபிமொழியின் கருத்துப்படி الْأَرْضِ - பூமி ஏற்கெனவே படைக்கப்பட்டுவிட்டது. ஆதம் வெள்ளிக்கிழமை படைக்கப்பட்டார் என்ற நபிமொழியின் கருத்து எல்லாப் படைப்புகளும் படைக்கப்பட்டு இயக்கப்பட்ட பின்னரே ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.
''(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷு (சிம்மாசனம்) தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் - நபிமொழிச் சுருக்கம்: புகாரி 3191) //
மேல் உள்ள 11:7 வசனத்தில் அல்லாஹ்வுடைய அர்ஷ் தண்ணீரின் மீது இருந்ததாக கூறுகிறது. அந்த வசனமோ அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த பின்பு தான் அல்லாஹ்வுடைய அர்ஷ் நீரின் மீது இருந்தது என தெளிவாக்குகிறது.
அந்த வசனத்திற்கு சான்றாக நீங்கள் பதிந்துள்ள ஹதீஸில் அல்லாஹ் இருந்தான். வேறெந்த பொருளும் இருக்கவில்லை. அவனுடைய அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான் அதன் பின் வானங்கள் பூமியை படைத்தான் என உள்ளது.
பூமியுடன் சேர்ந்தது தானே தண்ணீர் எனும் படைப்பு? அல்லாஹ்வை தவிர வேறெந்த பொருளும் இருக்காத போது தண்ணீர் மட்டும் எப்படி இருக்க முடியும்? அதுவும் ஒரு பொருள் தானே? அதன் பின் வானங்கள் பூமியை படைத்தான் என கூறினால் அது எப்படி சரியாகும்?
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
To unsubscribe from this group, send email to fromgn+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களே ஏனிந்த தடுமாற்றம்?
''உங்களில் யார் அழகிய செயலுடையவர் என்பதை சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். அவனது அர்ஷு நீரின் மீது இருந்தது. நீங்கள் மரணத்தின் பின் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். என (நபியே) நீர் கூறுவீராக!'' 'இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை' என நிராகரித்தோர் கூறுவர். (அல்குர்ஆன் 11:7)
وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۗ وَلَئِن قُلْتَ إِنَّكُم مَّبْعُوثُونَ مِن بَعْدِ الْمَوْتِ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ هَـٰذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ
''வ கான அர்ஷுஹு அலல் மாயி - அவனது அர்ஷு நீரின் மீது இருந்தது''
''வ கான'' என்ற சொல்லுடன் துவக்கினால் அது ஏற்கெனவே இருந்தது என்பதையே குறிக்கும். வானங்கள், பூமியைப் படைப்பதற்கு முன்பே அல்லாஹ்வின் அர்ஷு இருந்தது. அது தண்ணீரின் மீது இருந்தது.
நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்' என்றார்கள். (நபிமொழிச் சுருக்கம்: நூல் - புகாரி தமிழ் 7418. மூலம் 6868)
حَدَّثَنَا عَبْدَانُ قَالَ أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ
إِنِّي عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ قَوْمٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ اقْبَلُوا الْبُشْرَى يَا بَنِي تَمِيمٍ قَالُوا بَشَّرْتَنَا فَأَعْطِنَا فَدَخَلَ نَاسٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اقْبَلُوا الْبُشْرَى يَا أَهْلَ الْيَمَنِ إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ قَالُوا قَبِلْنَا جِئْنَاكَ لِنَتَفَقَّهَ فِي الدِّينِ وَلِنَسْأَلَكَ عَنْ أَوَّلِ هَذَا الْأَمْرِ مَا كَانَ قَالَ كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ قَبْلَهُ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ ثُمَّ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَيْءٍ ثُمَّ أَتَانِي رَجُلٌ فَقَالَ يَا عِمْرَانُ أَدْرِكْ نَاقَتَكَ فَقَدْ ذَهَبَتْ فَانْطَلَقْتُ أَطْلُبُهَا فَإِذَا السَّرَابُ يَنْقَطِعُ دُونَهَا وَايْمُ اللَّهِ لَوَدِدْتُ أَنَّهَا قَدْ ذَهَبَتْ وَلَمْ أَقُمْ
وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ ثُمَّ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ
''அவனது அர்ஷு தண்ணீரின் மீது இருந்தது. ثُمَّ - பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான்''
''அவனே மகத்தான அர்ஷின் இரட்சகன்'' (அல்குர்ஆன் 9:129)
தொடர்ந்து மற்ற விபரங்களையும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
--
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு
அல்லாஹ் வானங்கள், மற்றும் பூமியைப் படைப்பதற்கு முன் அவனது அர்ஷு தண்ணீர் மீது இருந்தது என்பதை ஹதீஸின் துணையுடன் எழுதியிருந்தேன். அல்லாஹ் வானங்கள், பூமியைப் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். அவனது அர்ஷு தண்ணீரின் மீது இருந்தது. என்ற நபிவழிச் செய்தியும் இதற்கு வலுசேர்ப்பதால் இதனடிப்படையில் 11:7வது வசனத்திற்கு நம் தரப்புக் கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.
ஆனால், நாம் எழுதிய 11:7வது வசனத்தின் தமிழாக்கத்தை நீங்கள் தவறு என்கிறீர்கள் என்று கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக எழுதினால் திருத்திக்கொள்ளலாம்.
மற்றவை உங்கள் கருத்துக்குப் பின்,
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு, உங்கள் கருத்துகளுக்கு நன்றி! குர்ஆன், சுன்னாவை சிந்தித்து விளங்கவேண்டும் என்று நீங்கள் கூறுவது சரியே.
அல்லாஹ் நித்திய ஜீவன், அவன் என்றும் நிலைத்திருப்பவன். ஆதியில் அல்லாஹ் இருந்தான் அவனைத் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை என்பதை சமீபத்திய நிகழ்வாகக் கொள்ளாமல், சிந்தனைக்கு எட்டாத பல யுக ஆண்டுகள் காலம் பின்னோக்கிய விஷயங்களாகக் கொள்ளவேண்டும்.
ஆதியில் அல்லாஹ் மட்டும் தனித்திருந்தான். பின்னர் தண்ணீரைப் படைத்து, தனக்கென அர்ஷைப் படைத்து அதைத் தண்ணீர் மீது அமைத்துக் கொண்டான். அவன் தனித்திருந்தான் என்பதும், பின்னர் அரியணையை தண்ணீர் மீது அமைத்துக்கொண்டான் என்பதும் எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதல்ல!
11:7வது வசனத்தில் இடம்பெறும் ''அல்லாஹ்வின் அர்ஷு தண்ணீர் மீது இருந்தது'' என்பது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ''தண்ணீர் எதன் மீது இருந்தது?'' என்று கேட்டபோது ''தண்ணீர் வளி மண்டலத்தின் மேற்பகுதியில் இருந்தது'' என்று பதில் கூறினார். இது இப்னு கஃதீர் விளக்கவுரையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவற்றை நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கவில்லை என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், அல்லாஹ் நாடினால் தண்ணீரைப் படைத்து அதை எங்கு வேண்டுமானாலும் அவன் வைத்திருப்பான். அதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அர்ஷு தண்ணீரின் மேல் இருந்தது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அல்ஆஸ் (ரலி) (நூல் - முஸ்லிம் 5160)
நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்' என்றார்கள். (நபிமொழிச் சுருக்கம்: நூல் - புகாரி தமிழ் 7418. மூலம் 6868)
புகாரி நூலில் இடம்பெற்ற மேல்கண்ட அறிவிப்பில் அவனுக்கு முன் எந்தப் பொருளும் இருக்கவில்லை. எல்லாமே அல்லாஹ் படைத்தவையே. என்றப் பொருளைத் தருகின்றது. அதில் தண்ணீரை முதல் படைப்பாக்கினான் பின்னர் அரியணை, எழுதுகோல், எழுத்துப் பலகை என படைப்புகள் தொடர்கின்றன. இதுவும் வானங்கள், பூமியைப் படைத்து மனித இனத்தையும் மற்ற உயிரினங்களையும் படைக்கும் திட்டத்தின் அம்சங்களாகும்.
''நிச்சயமாக உங்களது இரட்சகனாகிய அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாள்களில் படைத்து பின்னர் (தனது தகுதிக்கேற்றவாறு) அர்ஷின் மீது அமர்ந்தான். அவன் இரவைப் பகலால் மூடுகிறான். அது (இரவாகிய) அதை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தனது கட்டளைக்கு வசப்படுத்தப்பட்டவைகாளக(ப் படைத்துள்ளான்) அறிந்து கொள்ளுங்கள்! படைத்தலும் கட்டளையிடுதலும் அவனுக்கே உரியனவாகும். அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவன்'' (அல்குர்ஆன் 7:54)
வானங்கள், பூமியைப் படைப்பதற்கு முன் அல்லாஹ்வின் அர்ஷு இருந்ததாகவே இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகிறது. அர்ஷில் நிலைகொண்டு கட்டளையால் இப்பேரண்டத்தை இயக்கிக்கொண்டிருக்கிறான்.
//"அவனது அர்ஷ் நீரின் மீது இருந்த நிலையிலே உங்களில் யார் அழகிய செயலுடையவர் என்பதை சோதிப்பதற்காக அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான்" என மொழிபெயர்க்க முடியுமா?//
இந்தக் கேள்விக்கு மொழிப் புலமையுள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள்!