கேள்வி:-
//அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
தந்தையின் உடன் பிறந்த சகோதரி மாமி உறவாகும். மாமியின் மகள் மணமுடிக்க ஆகுமானவர்! ஆனால், பால்குடி குழந்தைப் பருவத்தில் மாமியிடம் தாய்ப் பால் அருந்திருந்தால் மாமியின் மகளுக்கு பால்குடி சகோதரர் ஆகிவிடுவதால் மாமியின் மகளை மணமுடிக்க விலக்கப்பட்டவராவார். பிறப்பால் ஏற்படும் இரத்த உறவும், பாலருந்தும் பருவத்தில் ஒரு பெண்ணிடம் தாய்ப் பால் அருந்துவதால் ஏற்படும் பால்குடி உறவும் திருமண உறவை ரத்து செய்து செய்துவிடும்.
நபிமொழிகள்
(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும், 'அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்" என்று கூறினார்கள். நான், 'இன்னார் - என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா?' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகிற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா(ரலி) (நூல்கள் - புகாரி 2646, 3105, 5099. முஸ்லிம் 2853. இந்த ஹதீஸின் பிற்பகுதி கருத்து மட்டும் அலி (ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு திர்மிதீ 1156)நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், 'அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த உறவால் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத் தகாத) விலக்கப்பட்ட உறவுகளாகுமோ அந்த உறவுகளெல்லாம் பால்குடி உறவாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 2645. முஸ்லிம் 2864)தாய்மார்கள் குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் நிரப்பமாக பாலூட்ட வேண்டும் என்று இறைவசனம் கூறுகிறது.
(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும் பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்
எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது¢ (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்¢ இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை¢ ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:33)நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம் அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.
(அல்குர்ஆன் 31:14)மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்.
அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: 'இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்¢ அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்' என்று கூறுவான். (அல்குர்ஆன் 46:15)ஒரு குழந்தையின் பால்குடி பருவம் இரண்டு வயதிற்குள் இருக்க வேண்டும். இரண்டு வயதைக் கடந்த குழந்தைகள் தாய்மார்களிடம் பால் அருந்தினாலும் பால்குடி உறவு ஏற்படாது. குழந்தை பால்குடியை மறக்கச் செய்யும் வயது இரண்டு வருடங்கள் என்று இறைமறை மற்றும் நபிமொழிகளிலிருந்து விளங்க முடிகிறது. தாய்மார்களிடம் குழந்தைகள் பசிக்காகப் பால் அருந்தியிருக்க வேண்டும்.
(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், 'இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப்பால் அருந்தியிருந்தால்) தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - புகாரி 2647, 5102. முஸ்லிம் 2884)குழந்தை பால்குடி மறக்கும் பருவத்திற்கு (இரண்டு ஆண்டுகளுக்கு) முன்பு இரப்பை - வயிறு நிரம்பும் அளவுக்கு பால் குடித்திருந்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) (நூல் - திர்மிதீ 1162)(ஒரு குழந்தை செவிவலித் தாயிடம்) ஒரு தடவையோ இரண்டு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (அவ்விருக்குமிடையே) பால்குடி உறவு ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 2869. திர்மிதீ 1160. இதே கருத்தில் உம்மு ஃபள்ல் (ரலி) அவர்களின் அறிவிப்பு முஸ்லிம் 2871-2875)பால்குடி உறவு ஏற்படுவது குழந்தை பால்குடி மறக்கும் இரண்டு வயதுக்கு முன்பு பால் அருந்தியிருக்க வேண்டும். அதுவும் குழந்தைக்குப் பசியேற்பட்டு இரைப்பை நிரம்ப பசியடங்கும் அளவுக்கு பால் அருந்தியிருக்க வேண்டும். குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக ஓரிரு முறை உறிஞ்சுவதும், வெறுமனே பால் கொடுப்பதாலும் பால்குடி உறவு ஏற்பட்டு விடாது! இதைக் குழந்தைக்குப் பால் கொடுத்த தாய்மார்களே உறுதிப்படுத்திட முடியும்.
'நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்துச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்"
அறிவிப்பவர் உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) (நூல் - புகாரி 88, 2052, 2640, 2659, 2660. திர்மதீ 1161)(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்தபோது ஒரு கிராமவாசி வந்து நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்கெனவே மனைவி இருக்கும் நிலையில் நான் மற்றொரு பெண்ணை மணந்து கொண்டேன். என்னுடைய முதல் மனைவி ''நான் உம்முடைய புதிய மனைவிக்கு ஒரு தடவையோ இரு தடவைகளோ பாலூட்டியிருக்கிறேன் (எனவே இந்தத் திருமணம் செல்லாது) என்று கூறுகிறார்'' எனத் தெரிவித்தார். அப்போது ''ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிக் குடிக்கும் வகையில்) பாலூட்டுவதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்பட்டுவிடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஃபள்ல் (ரலி) (நூல் - முஸ்லிம் 2870)பால்குடி உறவுக்கான சட்டம் திருமண உறவை ரத்து செய்துவிடும் என்பதால் குழந்தைக்குப் பால் கொடுத்த தாய்மார்கள் பாலூட்டு இஸ்லாமிய சட்டங்களை அறிந்து தாம் குழந்தைக்குப் பாலூட்டியதை உள்ளபடி அறிவித்தல் வேண்டும். அவரின் வாக்கு மூலமே இறுதியானது. எனவே இதில் சம்பந்தப்பட்டவருக்கு பால்குடி தொடர்பான சரியான இஸ்லாமிய வழிகாட்டலை எடுத்துச் சொல்லிப் புரிய வைத்திட வேண்டும். சம்பந்தப்பட்ட பாலுட்டிய தாய் தவிர்த்து, பிறர் மற்றவரிடமிருந்து பெறும் செவி வழிச் செய்திகளைக் கேட்டு உறுதி இல்லாத இவ்விஷயத்தைப் பரப்புவதை தவித்துக்கொள்ள வேண்டும்!
பால்குடி உறவில் மணமுடிக்க விலக்கப்பட்டவர்கள்.
உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும். உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள். அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 4:23)