Re: முன், பின் சுன்னத் தொழுகை

1,184 views
Skip to first unread message

H.J. SATHIK

unread,
Jan 25, 2010, 1:22:20 PM1/25/10
to fro...@googlegroups.com, tamilmusl...@googlegroups.com
அருமை சகோதரர்களே,
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.
 
நாம் தொழும் கடமையான ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளில், நாம் தொழ வேண்டிய முன் மற்றும் பின் சுன்னத் 
தொழுகைகள் எத்தனை ரக்அத்கள் என்பதை ஆதார ஹதீஸ்களுடன்
தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
 
அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக.
 
இப்படிக்கு,
 
மஞ்சை H.J.சாதிக்,
துபை.
 
 
 
 
  

shoaib jamaludeen

unread,
Jan 26, 2010, 12:07:14 AM1/26/10
to fro...@googlegroups.com
salam
sakotharae
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறுகின்றார்கள் :

   
நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே  கணக்கின்  அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர்தமீமுத் தாரி[ரலி] நூல் : தாரமீ

   
கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி வடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை எற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறை வெற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்.
 
 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இன்னாரே! தொழுது விட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'இல்லை' என்றார். 'எழுந்து தொழுவீராக!' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (நூல்: புஹாரி 930)

    இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை சொல்கிறது.

    தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.

    தொழுது விட்டிருந்தால் தொழாமல் அமர்ந்து கொள்ளலாம் என்பது இரண்டாவது விஷயம்.

    அதாவது உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சுன்னத் இரண்டு ரக்அத்துக்களை முன்னரே தொழுது விட்டிருந்தால் நேரடியாக சென்று அமர்ந்து கொள்ளலாம்.

    இக்கருத்தை இப்னுமாஜாவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸ் கூடுதல் விபரங்களோடு விளக்குகிறது.

    நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்று கேட்க, அவர் 'இல்லை' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக' என்றார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)

    'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்ற வாசகம் பள்ளியல்லாத மற்ற இடங்களிலும் தொழும் தொழுகையை குறிப்பதை கவனிக்கலாம்.

    இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை முக்கியத்துவம் பெறாது. உரையை கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதுவே முக்கியத்துவம் பெறும்.

மற்ற தொழுகைகளுக்கு முன் சுன்னத் பாங்கிற்கு பின்பு தான் தொழ வேண்டும். ஆனால் ஜும்ஆவின் முன் சுன்னத்தின் நேரம் பாங்கிற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. அதற்கான ஆதாரம்.

    இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டில் ஜும்ஆவுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: நாஃபிஉ (ரலி), நூல்கள்: அபூதாவூது 1123, இப்னு ஹிப்பான்)

2010/1/25 H.J. SATHIK <sadi...@yahoo.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
J.SHOAIB
ETA ASCON

Abu Ali

unread,
Jan 26, 2010, 12:25:26 AM1/26/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்.

 

    தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.

 

 

 ஜும்மா உரைக்கும், குத்பாக்கும் எடனும் வேறுபாடு உள்ளதா?. இல்லை, ஜும்மாஉடைய அரபி வார்த்தைதான் குத்பாவா. சகோதரர் எனக்கு தெளிவு படுத்தவும்.  
 
ZASAKALLAH..
 
 
 
 
 
 

Date: Tue, 26 Jan 2010 09:07:14 +0400
Subject: Re: முன், பின் சுன்னத் தொழுகை
From: shoa...@gmail.com
To: fro...@googlegroups.com

Abu Ali

unread,
Jan 26, 2010, 12:27:02 AM1/26/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும். 
 
தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.
 
 
ஜும்மா உரைக்கும், குத்பாக்கும் எடனும் வேறுபாடு உள்ளதா?. இல்லை, ஜும்மா உரையின்  அரபி வார்த்தைதான் குத்பாவா. சகோதரர் எனக்கு தெளிவு படுத்தவும்.  
 
 
ZASAKALLAH..
 

 

Date: Tue, 26 Jan 2010 09:07:14 +0400
Subject: Re: முன், பின் சுன்னத் தொழுகை
From: shoa...@gmail.com
To: fro...@googlegroups.com

Windows 7: Find the right PC for you. Learn more.

ibnuh...@mail.com

unread,
Jan 26, 2010, 12:43:52 AM1/26/10
to fro...@googlegroups.com
Abu Ali  :

ஜும் ஆ , என்றால் , வெள்ளிகிழமைக்கு , அரபியில் சொல்வது.... அதாவது....... யவ்முல் ஜும் ஆ , என்றால் வெள்ளிகிழமை., ......
இதற்கு தமிழ்......... ஜும் ஆ நாள்  , என்று சொல்வோம்....
குத்பா (அரபு ) என்றால்.........தமிழில், உரை, பிரசங்கம் என்று பொருள்.........
 
ஜும்ஆ கொத்பா = ஜும்ஆ உரை
என்றாலும் , இரண்டுமே ஒன்றுதான்..,,,,,,,,,,, வெள்ளிகிழமை பிரசங்கம் , என்று பொருள்........ இது அரபும் , தமிழும் கலந்து சொல்வது....அவ்வளவுதான்......
 
  
    
 

Abu Ali

unread,
Jan 26, 2010, 1:58:18 AM1/26/10
to fro...@googlegroups.com
 ஜசகல்லாஹ். 
 
 
//   ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இன்னாரே! தொழுது விட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'இல்லை' என்றார். 'எழுந்து தொழுவீராக!' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (நூல்: புஹாரி 930)   // 
 
 
அந்த சஹாபி தொழுது முடிக்கும் வரை, muhammed(ஸல்) அவர்கள் குத்பா நிகழ்த்தவில்லை என்று ஒரு முஸ்லிம் சகோதரர் கூறுகிறார்?  அவ்வாறு ஏதேனும் ஹதிஸ் இருகிறதா? அவரிடத்தில் கேட்டதற்கு, இதை ஒரு பள்ளியில்  இமாம் எனக்கு கூறினார் என்று கூறுகிறார். சகோதரர்கள் விளக்கம் அளிக்கும் படி கேட்டு கொள்கிறேன். 
 
 
 
 
 

To: fro...@googlegroups.com
Subject: Re: A question: RE: முன், பின் சுன்னத் தொழுகை:
Date: Tue, 26 Jan 2010 00:43:52 -0500
From: ibnuh...@mail.com

Salem Bushra

unread,
Jan 26, 2010, 8:44:54 AM1/26/10
to fro...@googlegroups.com
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு காட்டித்தந்த கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும். இவ்வகைத் தொழுகையில் கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபி (ஸல்) தொழுது காட்டியுள்ளார்கள்.
இவ்வாறு காட்டிய தொழுகைகளும் மற்ற கடமையில்லா தொழுகைகளும் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே கூடுதல் நன்மையை பெற்றுத் தரும்.
மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகையை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ர­), நூல்கள் : புகாரீ (731), முஸ்­ம் (1432)
சுன்னத்தான, உபரியான தொழுகைகள் இரண்டிண்டாகத் தொழவேண்டும். நான்கு ரக்அத் தொழ வேண்டுமானால் இரண்டு ரக்அத்தில் ஸலாம் கூறிவிடவேண்டும். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும்.

''இரவிலும் பக­லும் தொழக்கூடிய (கடமையல்லாத) தொழுகைகள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தான் இருக்க வேண்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ர­), நூல்: திர்மிதீ (543), அபூதாவூத் (1103),இப்னுமாஜா (1312),அஹமத் (4560), தாரமீ (1422)
பஜ்ர் தொழுகையின் சுன்னத்
ஐவேளைத் தொழுகையில் பின்னணியில் தொழுப்படும் தொழுகையில் பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபி (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
''நபி (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்கு முயற்சி எடுத்ததைப் போல் வேறு எதற்கும் எடுக்க மாட்டார்கள்.''
அறிவிப்பவர்: ஆயிஷா (ர­), நூல்: புகாரீ (1163), முஸ்­ம் (1312)
ஃபஜ்ருக்கு முன் சுன்னத் தொழாமல் கடமையான பர்லுத் தொழுகையை நிறைவேற்றி விட்டால் பின்னர் அதனை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
''இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருவரை ஸுப்ஹுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், ''ஸுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத்கள்'' என்று சொன்னார்கள். அதற்கவர், ''ஸுப்ஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்'' என்று பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.''
அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ர­), நூல்: திர்மிதீ (387)
சுப்ஹ‎ýத் தொழுகை தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகைகளையும் தொழக் கூடாது.
சுபுஹ் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும் அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபி(ஸல்) நடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: உமர்(ர­), நூல்: புகாரி (581),முஸ்­ம் (1503)
லுஹர் சுன்னத்
லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு பின்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­), நூல்கள் : புகாரீ (937), முஸ்­ம் (1322)
லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹ‎ýக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர­) நூல்: புகாரீ (1182),நஸயீ (1736),அபூதாவூத் (1062), அஹ்மத் (23204)

''யார் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்களும், பின்பு நான்கு ரக்அத்களும் தொழுவாரோ அவருக்கு நரகத்தை இறைவன் தடுத்து விடுகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.''
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ர­), நூல்: திர்மிதீ (392)
1201நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் லுஹர் தொழுகைக்கு முன்னர் நான்கு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­), நூல் : முஸ்­ம் (1323)
அஸர் தொழுகை சுன்னத்
அஸருடைய சுன்னத்
அஸருடைய முன் சுன்னத் இரண்டு அல்லது நான்கு ரக்அத்களாகும்.
''ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) விரும்பியவர்கள் தொழலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர­), நூல்கள்: புகாரீ (624),முஸ்­ம் (1522)
மஃரிப் தொழுகையின் சுன்னத்
மஃரிப் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை விரும்பியவர் தொழட்டும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர­), நூல்: புகாரீ (1183), அபூதாவூத் (1089),அஹ்மத் (19643)

நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர­), நூல் : இப்னுஹிப்பான் (1588)
முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸ‎ýன்னத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாம­ருந்தும் மஃரிபுக்கும் முன் இரண்டு ரக்அத் தொழுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர­), நூல் : புகாரீ (625),நஸயீ (675),
''நபி (ஸல்) அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.'' (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­), நூல்: புகாரீ (937)
இஷா தொழுகையின் சுன்னத்
இஷாத் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) விரும்பியவர்கள் தொழலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர­), நூல்கள்: புகாரீ (624),முஸ்­ம் (1522)

''நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள்.'' (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­), நூல்:புகாரீ (937)
Posted by Zain at 3:02 AM
 
 
 
 

--- On Tue, 1/26/10, shoaib jamaludeen <shoa...@gmail.com> wrote:

Salem Bushra

unread,
Jan 26, 2010, 8:59:58 AM1/26/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும்

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு காட்டித்தந்த கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும். இவ்வகைத் தொழுகையில் கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபி (ஸல்) தொழுது காட்டியுள்ளார்கள்.
''நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள்.'' (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­), நூல்:புகாரீ (937)
Posted by Zain at 3:02 AM


--- On Tue, 1/26/10, shoaib jamaludeen <shoa...@gmail.com> wrote:

From: shoaib jamaludeen <shoa...@gmail.com>
Subject: Re: முன், பின் சுன்னத் தொழுகை
To: fro...@googlegroups.com
Date: Tuesday, January 26, 2010, 5:07 AM

ibnuh...@mail.com

unread,
Jan 26, 2010, 12:35:34 AM1/26/10
to fro...@googlegroups.com
சலாம்.
 
நிகாஹ்,  ...
  ஒரு மனிதனின் வாழ்விலே  செய்யப்படும் மிக சந்தோசமான விஷயம்.... அந்த நாளில் எல்லாமே மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும்..... ஆனால், இந்த நாளில் கூட நிற ய  கட்டுப்பாடுகள் இஸ்லாத்தின் பெயரால்   விதித்து ஒரு வகை யான வெறுப்பை  ஏற்ற்படுத்தி உள்ளனர் முன்னோர்... 
இப்போது திருமணத்தை பரவலாக பள்ளிவாசல்களில் தான்  பல பேர் நடத்துகின்றார்கள்அதுதான் சுன்னாஹ் என்று அதாவது , இப்படி பள்ளி வாசல்களில் , மனமகனை மட்டும் வைத்து ,  சில விசயங்களை சொல்லிகொடுத்ட்டு , அவரிடம் கையொப்பம் வாங்கி, பின் ஒரு நீண்ட கொத்பா உரை நிகழ்த்தி பின் , மணமகனை , பெண் வீட்டுக்கு கூட்டிக்கு போய் விட்டு விடுவதால் , நாம் ஒரு சுன்னாஹ் வை செய்து நன்மை களை பெற்று கொள்ளலாம் என்றே செய்யப்படுகிறது.. அப்படியாயின், 
 வீடுகளில்,  திருமண ஹால்களில் செய்வது எல்லாம் , BID'AAH , அதாவது நரகத்துக்கு இட்டு செல்லும் என்று கூற  என்ன ஆதாரம் உண்டு ??
மேலும்,
சுமார் 1400    ஆண்டுகள் முன் ௦ ஒரு இடத்தில் செய்யப்பட ஒரு விஷயம் , அதே மாதிரி அந்த இடத்தில் தான் செய்யவேண்டும் , அது சுன்னாஹ் , என்பதற்கு , என்ன ஆதாரம் உண்டு ?????
 
அன்று அந்த அரப் கலாச்சாரத்து  ஏற்றபடி நடந்த அனைத்தும் , இஸ்லாம் ஆக முடியுமா ???
அப்படித்தான் ஆகும் என்றால் , நிறைய கேள்விகள் எழுகின்றன... எனவே , இது பற்றிய பதில்களை ,  உண்மையான ஆதாரத்தின் படி தெளிவு படுத்துங்கள்.........

muslim

unread,
Jan 27, 2010, 7:28:07 AM1/27/10
to fro...@googlegroups.com

ஒவ்வொரு நாளின் கடமையான தொழுகைக்கு முன்பும், பின்பும் சுன்னத்தான தொழுகைகளையும் பேணி தொழுது வந்தால், அதற்கென அல்லாஹ் மறுமையில் மகத்தான கூலி வழங்குகிறான்.  

ஒரு முஸ்லிமான அடியார் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகள், தவிர கூடுதலாக பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதால் அவருக்காக  அல்லாஹ் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எழுப்புகிறான். அல்லது அவருக்காகச் சொர்க்கத்தில் ஓர் இல்லம் எழுப்பப்படுகிறது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் உம்மு ஹபீபா (ரலி) (நூல் - முஸ்லிம் 1321)

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவித்து, ''இதை நான் செவியுற்றதன் பிறகு அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை (தவறாமல்) தொழுது வருகிறேன். என்றும் கூறினார்கள்.

சுப்ஹு தொழுகையின் பின் சுன்னத்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள். மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) (நூல்கள் - திர்மிதீ 400. முஸ்லிம் நூலில் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களும் லுஹருக்குப் பின்பு ரக்அத்களும் தொழுதார்கள் என இடம்பெற்றுள்ளது. - முஸ்லிம் 1323

லுஹ்ர் தொழுகையின் முன் பின் சுன்னத்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன். மக்ரிப், இஷா (உடைய ஸுன்னத்) தொழுகைககைள அவர்களின் வீட்டில் தொழுதிருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல் - புகாரி 1172. முஸ்லிம் 1322)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள். மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) (நூல்கள் - திர்மிதீ 400. முஸ்லிம் நூலில் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களும் லுஹருக்குப் பின்பு ரக்அத்களும் தொழுதார்கள் என இடம்பெற்றுள்ளது. - முஸ்லிம் 1323 )

அஸர் தொழுகையின் முன் சுன்னத்.

நபி (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமீன்கள், முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள். அறிவிப்பவர் அலி (ரலி) (நூல் - திர்மிதீ 394)

மஹ்ரிப் தொழுகையின் பின் சுன்னத்.

மக்ரிபுக்குப் பின்னுள்ள இரண்டு ரக்அத்களை நபி (ஸல்) அவர்களின் வீட்டில் அவர்களுடன் நான் தொழுதுள்ளேன். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - திர்மிதீ 397)

நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன். மக்ரிப், இஷா (உடைய ஸுன்னத்) தொழுகைககைள அவர்களின் வீட்டில் தொழுதிருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல் - புகாரி 1172. முஸ்லிம் 1322)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள். மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) (நூல்கள் - திர்மிதீ 400. முஸ்லிம் நூலில் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களும் லுஹருக்குப் பின்பு ரக்அத்களும் தொழுதார்கள் என இடம்பெற்றுள்ளது. - முஸ்லிம் 1323

இஷாத் தொழுகையின் பின் சுன்னத்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன். மக்ரிப், இஷா (உடைய ஸுன்னத்) தொழுகைககைள அவர்களின் வீட்டில் தொழுதிருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல் - புகாரி 1172. முஸ்லிம் 1322)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள். மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) (நூல்கள் - திர்மிதீ 400. முஸ்லிம் நூலில் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களும் லுஹருக்குப் பின்பு ரக்அத்களும் தொழுதார்கள் என இடம்பெற்றுள்ளது. - முஸ்லிம் 1323 )

கடமையான தொழுகையைத் தவிர மேலதிகமாக தொழும் சுன்னத்தான தொழுகைகள் லுஹ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்கள். லுஹ்ர் தொழுகைக்குப் பின்பு இரண்டு ரக்அத்கள். என அறிவிக்கப்ட்டுள்ளது. முஸ்லிமில் இடம்பெறும் அன்னை ஆயிஷாவின் அறிவிப்பில் நான்கு ரக்அத்கள் என கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அஸ்ர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்கள் என அலி (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து விளங்கலாம்.

மக்ரிப், இஷாத் தொழுகைக்களுக்குப் பின் சுன்னத்தும், பஜ்ர் தொழுகைக்கு முன் சுன்னத்தும் இரண்டிரண்டு ரக்அத்கள் என அறிய முடிகிறது. நாம் ஆரம்பத்தில் பதிவு செய்துள்ள அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் அறிவிப்பில், ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகள் தவிர சுன்னத்தான தொழுகைகளின் ரக்அத்கள் பன்னிரண்டு எனக் கூறப்பட்டுள்ளது!

முறையே,

லுஹ்ருக்கு முன் இரண்டு, பின் இரண்டு என நான்கு ரக்அத்கள்!

அஸருக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள்!

மக்ரிபுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள்!

இஷாவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள்!

பஜ்ருக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள்!
 
ஆக பன்னிரண்டு ரக்அத்கள். இவை ஒவ்வொரு நாளும் வழக்கமாக தொடர்ந்து செய்துவரும் சுன்னத்தான தொழுகைகளாகும்!

இவை நீங்கலாக லுஹ்ர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களும் லுஹ்ர் தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்களும், அஸர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதையும் பின்பற்றிக் கொள்ளலாம்!

ஜும்ஆத் தொழுகைக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் எனவும் அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம்!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)



2010/1/25 H.J. SATHIK <sadi...@yahoo.com>
அருமை சகோதரர்களே,

muslim

unread,
Jan 27, 2010, 7:31:54 AM1/27/10
to fro...@googlegroups.com

//சுப்ஹு தொழுகையின் பின் சுன்னத்.//

சுப்ஹு தொழுகையின் பின் சுன்னத் என்பதை சுப்ஹு தொழுகையின் முன் சுன்னத் எனத் திருத்தம் செய்து வாசிக்கவும்.

2010/1/27 muslim <tomu...@gmail.com>

Aero Travels

unread,
Jan 31, 2010, 5:47:28 PM1/31/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு ஏற்கனவே இன்னொரு இழையில் திருமணத்திற்கு குத்பா பேரூரை அவசியமா என்ற கருத்தில் பதியப்பட்டதை இதனுடன் இணைத்துள்ளேன். இதுவும் உங்கள் கேள்விக்கான பதிலை அறிவிக்கும் என நம்புகிறேன்
 
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
 
 

கேள்விகள் அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான குழுமச் சகோதரர்களுக்கு

கேள்வி1.  நபி(ஸல்) அவர்கள் திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா (உரை)
நிகழ்த்தியுள்ளார்களா?

கேள்வி2. முதல் கேள்விக்கு ஆதாரம் இருந்தால், நபி(ஸல்) அவர்கள் எந்த
நபித்தோழரின் திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா(உரை) நிகழ்த்தினார்கள்?

கேள்வி3.திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா உரை நிகழ்த்த வேண்டும் என்பது
கட்டாயமாக இருந்தால் நிக்காஹ் நடக்கும் முன் குத்பா(உரை) நடத்த வேண்டுமா?
அல்லது நிக்காஹ் நடந்து முடிந்த பின் குத்பா(உரை) நிகழ்த்த வேண்டுமா?

குறிப்பு: திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் பதில்
தரவும். தாங்கள் பதில் அளிக்கும் எல்லா தலைப்புகளின் கீழ் குறிப்பிடும்
ஹதீஸ்களின் அறிப்பாளர் வரிசையையும் சேர்த்து பதிலளித்தால் அதன் தரத்தை
பரீசீலனை செய்ய வசதியாக இருக்கும்.  அல்லது அரபி டெக்ஸ்டை பேஸ்ட்
செய்துவிட்டால் கூட போதுமானது.

சிராஜ் ஏர்வாடி

பதில்கள்:- வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்

தொழுகையில் ஓதவேண்டிய தஷஹ்ஹுதையும் பிற தேவைகளின் பொழுது ஓதவேண்டிய தஷஹ்ஹுதையும் நபி (ஸல் அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.

தொழுகையில் தஷஹ்ஹுத் ''அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலாவது வத்தையிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு'' என்றும்,

தேவைகளின் போது ''அல்ஹம்துலில்லாஹி நஸ்தயீனுஹு வநஸ்தஃபிருஹு வநவூது பில்லாஹி மின்ஷுருரி அன்புஸினா வஸய்யிஆதி அஃமாலினா, மன்யஹ்திஹில்லாஹுஃபலா முளில்ல லஹ், வமன்யுள்லில் ஃபலா ஹாதிய லஹ் வஅஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு'' என்றும் மேலும் மூன்று வசனங்களையும் ஓதுவார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல் - திர்மிதீ 1023 நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா)

மூன்று வசனங்கள் 3:102, 4:1, 33:70 ஆகியவை என்று ஸுஃப்யான் ஸவ்ரீ விளக்கமளிக்கிறார்கள்.

3:102 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்¢ மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.

4:1 மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்¢ அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

33:70  ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

தொழுகையில் அத்தஹிய்யாத்தில் ஓதுவதன் பொருள்:

''எல்லாவித கண்ணியமும் தொழுகைகளும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது ஸலாமும், இறையருளும், பரக்கத்தும் ஏற்படட்டுமாக. மேலும் எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.''

பிற தேவைகளில் ஓதவேண்டிய தஷஹ்ஹுதின் பொருள்:

நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியது! அவனிடமே உதவி தேடுகிறோம், பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும், தீய செயல்களை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறோம்! எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போர் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்தானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் இல்லை.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْثَرُ بْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏
‏عَلَّمَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏التَّشَهُّدَ فِي الصَّلَاةِ وَالتَّشَهُّدَ فِي الْحَاجَةِ قَالَ ‏ ‏التَّشَهُّدُ فِي الصَّلَاةِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏عَبْدُهُ وَرَسُولُهُ وَالتَّشَهُّدُ فِي الْحَاجَةِ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا فَمَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏عَبْدُهُ وَرَسُولُهُ وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ ‏

قَالَ ‏ ‏عَبْثَرٌ ‏ ‏فَفَسَّرَهُ لَنَا ‏ ‏سُفْيَانُ الثَّوْرِيُّ

 

திருமண நிகழ்வுகளில் மட்டுமின்றி, எல்லா நிகழ்ச்சிகளிலும் உரையாற்றும் மேற்கண்ட உறுதி மொழியை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். திருமணத்தின் போது இந்த குத்பாவைக் கண்டிப்பாக ஓதவேண்டும் என்று இல்லை! குத்பா நிகழ்த்தவில்லை என்றாலும் திருமணம் நிறைவேறிவிடும்.

''நான் நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் முத்தலிப் மகளார் உமாமாவை மணமுடித்துக் கேட்டேன். அவர்கள் குத்பா ஓதாமல் எனக்கு அவரை மணமுடித்து வைத்தார்கள்.'' அறிவிப்பவர் பனூ ஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர். (நூல் - அபூதாவூத் 1810) 

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَدَلُ بْنُ الْمُحَبَّرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏ابْنَ أَخِي ‏ ‏شُعَيْبٍ الرَّازِيِّ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏رَجُلٍ ‏ ‏مِنْ ‏ ‏بَنِي سُلَيْمٍ ‏ ‏قَالَ ‏
‏خَطَبْتُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمَامَةَ بِنْتَ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏فَأَنْكَحَنِي مِنْ غَيْرِ أَنْ ‏ ‏يَتَشَهَّدَ

‏திருமண ஒப்பந்தத்திற்கு குத்பா - உரை அவசியம் என்ற நிபந்தனை இல்லை. குத்பா நிகழ்த்தினாலும் இல்லையென்றாலும் மண ஒப்பந்தம் நிறைவேறும் என்பதால், திருமணத்திற்கு முன்போ, பின்னரோ வசதியைப் பொறுத்து குத்பாவை - உரையை நிகழ்த்திக்கொள்ளலாம்.
 
இது நபிவழிச் செய்திகளிலிருந்து விளங்கிய எமது தனிப்பட்டக் கருத்தாகும்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

அன்புடன், muslim

நபித்தோழரின் பெயர்: அப்பாத் பின் ஷய்பான்



 
--

ibnuh...@mail.com

unread,
Feb 1, 2010, 3:59:09 AM2/1/10
to fro...@googlegroups.com
 வ அலைக்கும் சலாம்,,,,,,
சகோ,, சிராஜ் - ,ஏர்வாடி , அவர்களுக்கு
 
,நன்றி..  ஆயினும் இது திருமண குத்பா மட்டுக்கும் உரிய   பதில்....
நான் மேலதிகமாக , அதுவும் முக்கியமாக இங்கு கேட்பது.,
 
பள்ளிவாசல்களை திருமணம் செய்வது , சுன்னாஹ் என்று இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு , அது பலரால் கடைக்கபி டுகின்றது....,  இது சுன்னா என்றால் ,
, வீடுகளில் திருமண ஹால்களில் செய்வது எல்லாம் , BID'AAH , அதாவது நரகத்துக்கு இட்டு செல்லும் என்று கூற  என்ன ஆதாரம் உண்டு ??
மேலும்,
சுமார் 1400    ஆண்டுகள் முன் ௦ ஒரு இடத்தில் செய்யப்பட ஒரு விஷயம் , அதே மாதிரி அந்த இடத்தில் தான் செய்யவேண்டும் , அது சுன்னாஹ் , என்பதற்கு , என்ன ஆதாரம் உண்டு ?????
 அன்று அந்த அரப் கலாச்சாரத்து  ஏற்றபடி நடந்த அனைத்தும் , இஸ்லாம் ஆக முடியுமா ???
பதில் தெளிவாக எழுதுங்கள்....
 

Aero Travels

unread,
Feb 1, 2010, 4:54:46 AM2/1/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு
 
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் திருமண ஒப்பந்தங்கள் எப்படி நடைபெற்றது என்பதை பார்த்தாலே திருமண ஒப்பந்தத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடம் தேவையில்லை என்பது தெளிவாகிறது.
 
திருமணம் செய்ய விரும்புபவர்கள் அவர்கள் விரும்பிய இடத்தில் திருமணம் ஒப்பந்தத்தை செய்து கொள்ள ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
 
அந்த ஹதீஸ்கள் அனைத்தும் தாங்களும் அறிந்ததே.
 
வலீமாவிற்கு அழைத்து மக்களுக்கு விருந்தளிக்கும் ஒரு நிகழ்விற்கு தான் கூட்டம் கூட்டப்படடதாக அறிகிறோம். எனவே திருமணத்தை நடத்த மணமக்கள் மற்றும மணப்பெண்ணின் வலீ சாட்சிகள் போதுமானது. இதற்கு குறிப்பிட்ட இடம் முக்கியமில்லை
 
மேலும் விபரம் தேவைப்பட்டால் தொிவிக்கவும்.
 
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி

 
 

--

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 1, 2010, 7:05:45 AM2/1/10
to fro...@googlegroups.com
வாலைக்கும் ஸலாம்!
 
சகோதரர் இப்னு ஹசன் கூறுவது சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது அதாவது பள்ளிவாசல்களில் திருமணம் செய்வது  சுன்னாஹ் என்பது.
 
 
ஆம்! இன்று நாம் கண்கூடாக பார்க்கிறோம் வரதட்சனை வாங்கும் திருமணங்களில் கூட பள்ளிவாசல்களில் திருமணம் செய்வது  சுன்னாஹ் என்று இந்த வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது!
 
 
அதாவது திருமண மண்டபங்களில் மணமகனை ஒரு மேடையிலும் மணமகளை ஒரு மேடையிலும் அமரவைத்துவிடுகிறார்கள் நிக்காஹ் நடைபெறும்போது அந்த குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்கு மட்டும் மணமகனை மட்டும் தனியாக திருமண மண்டபத்திற்கு அருகில் இருக்கும் மஸ்ஜித்-ற்கு அழைத்துச்சென்று அங்கு நிக்காஹ் நடக்கிறது தொலைபேசியிலோ அல்லது மண்டபத்திற்கு விரைந்து வந்தோ மணமகளிடம் அனுமதி கேட்கப்படுகிறது!
 
 
இங்கு நம் கேள்வி என்னவெனில் திருமணம் சுன்னாஹ் என்பதற்கு ஆதாரம் உள்ளது ஆனால் பள்ளிவாசல்களில் திருமணம் செய்வது  சுன்னாஹ் என்று கூறுவதற்காகவாவது ஆதாரம் உள்ளதா?
 
நான் பள்ளி வாசலில் திருமணம் நடத்துவதை எதிர்க்கவில்லை மாறாக பள்ளிவாசல்களில் திருமணம் செய்வது  சுன்னாஹ் என்ற வார்த்தைப்பிரயோகம் சரியானதா? இதுதான் கேள்வி!

 
2010/2/1 Aero Travels <eru...@gmail.com>



--
இயக்கத்திற்கு கட்டுப்பட்டு வாழ்பவனை விட இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு  வாழ்பவனே நம்மில் சிறந்தவர்களாக இருக்க முடியும்!

ibnuh...@mail.com

unread,
Feb 1, 2010, 8:06:42 AM2/1/10
to fro...@googlegroups.com
SALAAM சிராஜ் , BROTHERS, ,
 ஆம். சகோதரர்களே.....வரதட்சணை  (வரதட்சாணி) எனும் ஹராம் அநியாயம் செய்து  கொண்டே , சுன்னாஹ் எனும் பெயரில் சமூகத்தில் ஏதோ செய்து கொண்டு இருக்கின்ற னர்.
. இப்படி மஸ்ஜித்களில்  கல்யாணம் செய்வதால் அவர்கள், தாங்கள் செய்யும் அநியாயத்தை மறைத்து  இஸ்லாமிய அறிவற்ற மக்களை ஏமாற்றுகின்றார்கள்....
திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் , அதன் நோக்கம் ,   கடைப்பிடிக்கவேண்டிய இறைவனின் கட்டளைகள் ,   தூதர் காட்டிய வழி முறைகளை , அதன் போது நடக்க வேண்டிய மகிழ்ச்சியான விடயங்கள், போன்ற  , அதன் உண்மைத் தன்மையை சிந்திக்க விடாது தடுக்கின்றார்கள்....
........   எனவே இதை பரீசிலித்து பதில் பதியுங்கள்......


 
 

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 1, 2010, 8:52:37 AM2/1/10
to fro...@googlegroups.com
வாலைக்கும் ஸலாம்!
 
மார்க்கம் அனுமதித்த விதத்தில் திருமணதை நடத்தாமல் மார்க்க வரம்பு முறைகளை மீறி மணப்பெண் வீட்டாரிடம் வரதட்சனை என்னும் ஹராமான பணத்தை வாங்குகின்றனர் இப்படிப்பட்ட திருமணத்தை மசூதிகளில் அணுமதிக்கலாமா?
 
5-வேளை தொழுகையை அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக முறையாக பேண கட்டப்படுகின்ற அல்லாஹ்வின் வீட்டில் வைத்து இந்த  வரதட்சனை திருமணத்தை நடத்துகின்றனர்.  இத்திருமணங்களுக்கு துணை நிற்கும் மசூதி நிர்வாகத்தினர், ஆலிம் பெருமக்கள், ஹஜரத்மார்களை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத்கள் பிரச்சாரம் செய்யமாட்டார்களா? செய்தாலாவது அல்லாஹ்வின் வீட்டில் பாவம் தவிர்க்கப்படுமே!
 
 
 


 
2010/2/1 <ibnuh...@mail.com>


 
 

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 1, 2010, 9:02:12 AM2/1/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
மார்க்கம் அனுமதித்த விதத்தில் திருமணதை நடத்தாமல் மார்க்க வரம்பு முறைகளை மீறி மணப்பெண் வீட்டாரிடம் வரதட்சனை என்னும் ஹராமான பணத்தை வாங்குகின்றனர் இப்படிப்பட்ட திருமணத்தை மசூதிகளில் அணுமதிக்கலாமா?
 
5-வேளை தொழுகையை அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக முறையாக பேண கட்டப்படுகின்ற அல்லாஹ்வின் வீட்டில் வைத்து இந்த  வரதட்சனை திருமணத்தை நடத்துகின்றனர்.  இத்திருமணங்களுக்கு துணை நிற்கும் மசூதி நிர்வாகத்தினர், ஆலிம் பெருமக்கள், ஹஜரத்மார்களை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத்கள் பிரச்சாரம் செய்யமாட்டார்களா? செய்தாலாவது அல்லாஹ்வின் வீட்டில் பாவம் தவிர்க்கப்படுமே!
 
 
 
கீழ்கண்ட இந்த இறைவசனம் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் எப்போது அமுலில் வரும்????
 
 
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். அல்குர்ஆன் 9:17, 18
 


 
2010/2/1 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

ismail

unread,
Feb 1, 2010, 9:13:51 AM2/1/10
to fro...@googlegroups.com
தவ்ஹித் வாதிகளும் பள்ளியில் வைத்துதான் திருமணம் நடத்துகிறார்கள் முதலில் திருமணம் பள்ளியில் நடத்த அனுமதி உண்டாஎன்று முடிவாகட்டும் அனுமதி இல்லையன்றால் எல்லோரும் சேர்ந்து அதை எதிர்ப்போம் 

razin rahman

unread,
Feb 1, 2010, 10:30:45 AM2/1/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோதரர்களுக்கு,

பள்ளியில் திருமணம்...இது குறித்து நாம் கண்ட நபிமொழிகளில் ஆதாரங்களை காணவில்லை.இன்ஷா அல்லாஹ் ஏதேனும் இருந்தால் குறிப்பிடவும்...அது தவிர,பள்ளியில் திருமணம் வைப்பதால்,நிக்காஹ் உடைய சமயத்தில் சகோ.சிராஜ் அவர்கள் கூறியது போல,பல சிக்கல்கள் வருகின்றது,அதை தவிர்த்து,அது சுன்னத் என கூறி ஏற்றுக் கொள்கிறார்கள்...
அதுவல்லாது வரதட்சனை வாங்க விட்டாலும்,கல்யாணம் முடித்த கையோடு,அடுத்த வக்துக்கு கூட யாரும் பள்ளிக்கு வருவதில்லை,மாப்பிள்ளை உட்பட...

தொழுவதற்கு கட்டப்பட்ட பள்ளியில்,முதலில் தொழுது ஃபர்ளை நிறைவேற்றுவோம்...
பின்னர்,கல்யாணம் நடத்தி,சுன்னா(வாக இருந்தால்)வை நிறைவேற்றுவோம்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தவ்ஹித் வாதிகளும் பள்ளியில் வைத்துதான் திருமணம் நடத்துகிறார்கள்"

யார் தவ்ஹீத் வாதி,அதன் பெயரில் இயக்கம் நடத்துபவர்களா?...அப்படியானால்,அதில் இல்லாத நான் 

யார்?

சகோதரர்களே,ஓரிரை கொள்கையை ஓங்கி பிடித்த நாம் அனைவருமே தவ்ஹீத் வாதிகள் தான்...

அவ்வாறு தனித்து கூறியது உருத்தலாக இருந்தது....அதனால் குறிப்பிட்டேன்..



அன்புடன் 
ரஜின் அப்துல் ரஹ்மான்.
http://sunmarkam.blogspot.com
http://razinabdul.blogspot.com (விரும்பியவர்கள் பார்வையிடலாம்)

muslim

unread,
Feb 1, 2010, 11:58:35 AM2/1/10
to fro...@googlegroups.com

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி தொழுவதற்கான பள்ளியாக மட்டும் இருக்கவில்லை. இஸ்லாமிய அரசின் திட்டங்களைக் கலந்து ஆலோசிக்கும் அரசு சபையாகவும் இருந்தது. அன்னிய நாட்டுத் தூதர்களை வரவேற்று அவர்களுடன் தூதுச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளவும், குற்றவாளிகளைக் கைது செய்து கட்டி வைக்கும் சிறைக்கூடாமாகவும் நபியவர்களின் பள்ளி விளங்கியது.

''திருமணம் முடிப்பது நபிமார்களின் சுன்னத்'' பள்ளிவாசலில் திருமணம் நடத்தக்கூடாது என்று எந்த நிபந்தனையும் இல்லை. தொழுகைக்கு இடையூறாக இருத்தல் கூடாது!

இஸ்லாமியத் திருமண முறை அரபுக் கலாச்சாரத்துக்கு மட்டும் உரியதல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் மணமுடிக்க வழிகாட்டும் ஒப்பந்த முறையாகும். மண ஒப்பந்தம் நிறைவேற மணமகன், மணமகள் சார்பாக பொறுப்பாளர், மஹர் கொடுக்கல் வாங்கலுக்காக இருசாட்சிகள் இவைபோதும். மண ஒப்பந்தத்தை எங்கும் நிறைவேற்றலாம். பள்ளியிலும் நிகழ்த்தலாம்.

இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணாக நடத்தப்படும் வரதட்சணைத் திருமணம் எங்கு நடந்தாலும் எதிர்க்கப்பட வேண்டும். என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வரதட்சணை எதிர்க்கப்பட வேண்டுமே தவிர திருமணம் எதிர்ப்புக்குரியதல்ல!

''குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பரகத் நிறைந்ததாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)



2010/1/26 <ibnuh...@mail.com>
--

muslim

unread,
Feb 1, 2010, 12:06:13 PM2/1/10
to fro...@googlegroups.com

வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் இரு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் எந்த அளவுக்கு பள்ளி நிர்வாகி சம்பந்தப்படுகிறார் என்று விளங்கவில்லை. ஒரு பேச்சுக்கு அவருக்கும் சம்பந்தம் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும். வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் இணவைக்கும் கொடி குற்றமாகுமா?

இங்கு அல்குர்ஆன் 9:17,18 வசனங்களை பள்ளி நிர்வாகிக்குச் சொல்லியிருப்பது சற்றும் பொருத்தமாக இல்லை! 

Reply all
Reply to author
Forward
0 new messages