ஆயிஷா(ரலி) யை நபி மணந்த வயது?

1,789 views
Skip to first unread message

Mafahir Moulana

unread,
Apr 15, 2010, 1:51:16 AM4/15/10
to fro...@googlegroups.com
ஸலாமுடன்...
 
நபிகளார் -  ஆயிஷா (ரலி) அவர்களை  6 வயதில் மணமுடித்தாகவும் 9 வயதில் தாம்பத்தியத்தில் இணைந்ததாகவும் புஹாரியில் உள்ளதாக இஸ்லாமிய கட்டுரைகளில் வாசித்துள்ளேன். இது ஸஹீஹான ஹதீதா?
 
இதனை மாற்று மதத்தவர்கள்....
ரசூலுல்லாஹ் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக விமர்சணம் செய்கின்றனர் (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக).
இஸ்லாம் சிறுவர்களையும் மணமுடிக்கலாம் என்ற சட்டத்தையும் திறந்துள்ளதாக கூறுகின்றனர்.
 
இந்த ஹதீது உண்மையானால் அவர்களின் விமர்சனத்தில் நியாம் உண்டு என்பதை நாமும் கசப்புடன் ஏற்றுத்தானாக வேண்டும்.
 
ஆனால் இந்த ஹதீது யூதர்களால் புனயப்பட்டிருக்களாம் அல்லது நபிகளாரின் அஹ்லுல் பைத்துக்களை கொடூரமாக அழித்தொழித்த முஆவியா யசீது போன்றோரால் நபிகளாலாருக்கு களங்கம் கற்பிக்க இவ்வாறு ஹதீது இட்டுக்கட்டப்பட்டிருக்கலாம் என்று என் மனம் கூறுகின்றது. 
 
இது பற்றிய நல்லதொரு ஆய்வினை ஜி.என் இடமிருந்து எதிர்ப் பார்க்கின்றேன்.
 
 
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி இஸ்மாயில் ஸலபியின் கட்டுரையின் ஒரு பகுதி இதோ...
 
"சிறுவர் துஷ்பிரயோகம்:
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது, சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து வித தவறுகளையும் குறிக்கும். என்றாலும், விபரமறியா சிறுவர்-சிறுமியரை வயதில் மூத்தவர்கள், தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பதத்தினூடாக இங்கு குறிப்பிடப்படுகின்றது. வயதில் முதிர்ந்த ஒருவர், சிறுவர்-சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது அன்போடு அரவணைப்பது போல் தொட்டுத் தழுவித் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வது போன்ற இழி செயல்கள் பல மட்டத்திலும் நடந்தேறி வருகின்றன. இது சட்ட ரீதியில் பாரிய குற்றமாக இருப்பினும், இவ்விதம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் குடும்ப கௌரவத்திற்காக மூடி மறைக்க முற்படுவதனால், இந்தக் குற்றம் காட்டுத் தீ போல் பரவி வருகின்றது. ........
 
மேலும் வாசிக்க Click or logon ->"  http://www.islamkalvi.com/portal/?p=4592&utm_source=feedburner&utm_medium=email 
 
விளங்கிக் கொள்ளும் நோக்கில் - Mafahir Moulana 


Your E-mail and More On-the-Go. Get Windows Live Hotmail Free. Sign up now.

நமக்குள் இஸ்லாம்

unread,
Apr 15, 2010, 9:40:43 PM4/15/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் யாராலும் இட்டுக்கட்டப்படாத தெளிவான ஹதீஸ்தான் என்பது நமது நிலைப்பாடு.  பால்ய விவாகம் குறித்த சந்தேகங்களுக்கு நாம் அறிந்த - நமது சிந்தனைக்கு எட்டிய - தெளிவுரையை இங்கு பதிக்கிறோம்.  

பால்ய விவாகம் தவறு என்பது இன்றைய சிந்தனையே!

பால்ய விவாகம் தவறு என்பது சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சிந்தனையாகும். அதற்கு முன் இது குறித்த சிந்தனையே மக்களிடம் இருக்கவில்லை என்று கூறலாம். இந்த சிந்தனை ஏற்பட்டப் பிறகும் கூட பால்ய வயது என்பதில் ‘வயதை’ தீர்மாணிப்பதில் இன்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும் வேறுபாடு இருந்தது.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கூட 8 வயது பெண்ணை மணக்கலாம் என்ற சட்டம் இந்தியாவில் இருந்தது. புகழ் பெற்ற பாரதியார் கண்ணம்மாவை திருமணம் முடிக்கும் போது கண்ணம்மாவிற்கு வயது 8 என்பதை இங்கு நினைவுக் கூறலாம். திருமண வயது 13 என்றும் 16 என்றும் 18 என்றும் 21 என்றும் மாற்றங்கள் நடந்தது கடந்த 25 - 30 ஆண்டுகளுக்குள் தான்.

பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத - தவறாகக்கூட கருதப்படாத - ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.

கம்யூனிஸ சிந்தனையே முன்வைக்கப்படாத ஒரு காலகட்டத்தைப் பற்றி இன்றைக்கு ஒரு கம்யூனிஸவாதி ‘அவர்கள் ஏன் கம்யூனிஸ சிந்தனையைப் பின்பற்றவில்லை?’ என்று கேட்டால் அது எப்படி பொருத்தமற்றதோ அது போன்றதுதான் இதுவும். ஒரு காரியம் தவறு என்று தெரிந்த பிறகு அந்தக் காரியத்தை செய்தால் தான் அது தவறு என்ற நிலையைப் பெறும். இறைத்தூதர் ஆய்ஷாவை திருமணம் செய்தது தவறு என்றே கருதப்படாத காலத்தில் நடந்ததாகும். இது முதலாவது பதிலாகும்.

உறவு முறையை வலுப்படுத்திக் கொள்ளுதல்.

மனதிற்கு பிடித்த நல்லவர்களுடனான உறவை பலப்படுத்திக் கொள்வதற்கு விருப்பமில்லாதவர் என்று உலகில் யாரும் இருக்க முடியாது. உறவை எந்த வகையிலெல்லாம் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதை நடைமுறைப் படுத்துபவர்களும் உலகில் ஏராளமாக உள்ளனர். உறவு முறையை வலுப்படுத்துவதில் உலகில் முக்கியப் பங்கு வகிப்பது திருமண பந்தமாகும்.

பல மாதங்களுக்குப் பின் - பல வருடங்களுக்குப் பின் நடக்கவிருக்கும் திருமணங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் பிறந்தக் குழந்தையைக் கூட இன்னாருக்கு என்று முடிவு செய்யப்பட்டு விடுவதை பரவலாகப் பார்க்கலாம்.

‘அக்காள் மகள் மாமனுக்குத் தான்’ என்ற ஹிந்து பாரம்பரியம் நீடிப்பதை நாம் கண்டு அனுபவிக்கிறோம். தம்பியோடு - சகோதரனோடு உள்ள குடும்ப உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே இத்தகைய திருமண உறவுகள் நீடிக்கின்றன. இவைகளையெல்லாம் மனதில் நிறுத்திக் கொண்டு ‘முஹம்மத் - ஆய்ஷா’ திருமணத்தை அணுகுவோம்.

வேறு எவரும் விஞ்ச முடியாத அளவிற்கு முஹம்மத் அவர்களின் மீது பாசத்துடன் இருந்தவர் அபூபக்கர் என்ற நபித்தோழர். சுக துக்கம் அனைத்திலும் தோளோடு தோள் நின்று இறைத்தூதரோடு தன் வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொண்டவர். இந்த உறவு இன்னும் வலுப்பட விரும்பியே தனது மகளை இறைத்தூதருக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்கள்.

திருமணம் என்ற ஒப்பந்தத்துடன் அன்றைக்கு அது நடந்தாலும் இன்றைக்கு நிச்சயதார்த்தத்தின் நிலை என்னவோ இதேதான் அன்றைக்கு நடந்த அந்த திருமணத்தின் நிலையுமாகும். பெயருக்கு அது திருமணமாக இருந்தது.

ஒரு பெண் பருவமடைதல் (வயதுக்கு வருதல்) என்பது அவள் தாய்மையடையும் பக்குவத்திற்குரிய அடையாளமாகும். அதன் பின்னரே அன்றைக்கு இல்லறம் துவங்கியது.

முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் - சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.

இல்லறம் மட்டுமே குறிகோளல்ல.

என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே.. என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

அந்தத் தேவை என்ன?

இறைவன் புறத்திலிருந்து மனித சமுதாயத்திற்காக வந்துக் கொண்டிருந்த தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் நபி அவர்கள். அவர்கள் மொத்த மனித சமுதாயத்திற்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அதனால் அவர்களின் பணி விசாலமானதாகவும் - விரிவானதாகவும் இருந்தது. அவர்களின் முழு வாழ்க்கையும் அகில உலகின் முன்னும் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகியது. அவர்களின் வெளியுலக வாழ்க்கையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் இருந்தார்கள். வீட்டிற்குள் வாழும் வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டுமானால் மனைவி என்ற அந்தஸ்த்தில் வாழ்பவரால் மட்டும் தான் முடியும். அந்த வகையில் சுறுசுறுப்புமிக்க கண்காணிப்புத் திறனும், நினைவாற்றலும் - மிக்க மனைவி தேவைத்தான் என்பதால் அதற்கு பொருத்தமானவராக ஆய்ஷாவை அவர்கள் கண்டதால் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

முஹம்மத் - ஆய்ஷா இவர்களுக்கு மத்தியில் நடந்த வாழ்க்கையை வெறும் திருமணம், இல்லறம் என்று மட்டும் பார்க்காமல் அதில் பொதிந்துள்ள இந்த உண்மைகளை விளங்கினால் அந்த உறவின் அவசியத்தில் யாரும் குறைக் காண முடியாது. காரணம், இந்த உலகில் - நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடந்த தனது இல்லற வாழ்க்கையின் நல் அமசங்களைக் கூட மனித சமுதாயத்திற்கு பயனளிக்கக் கூடிய வகையில் பகிரங்க பிரகடனம் செய்ய வேறு எந்தத் தலைவராலும் முடியாது. இறைவனின் இறுதித் தூதரைத் தவிர.
--------------------------------------------------------------------------------
பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன. திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.ஆனாலும் பால்ய வயது என்னவென்பதை தீர்மானிப்பதற்கு உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

azeez nizardeen

unread,
Apr 15, 2010, 11:29:24 PM4/15/10
to fro...@googlegroups.com

//பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத - தவறாகக்கூட கருதப்படாத - ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.//

பால்ய வயது என்பதை நானறிந்த வகையில் இஸ்லாம் வரையறுத்து இருக்கிறது. சிறுவர் என்ற நிலையை இஸ்லாம் தெளிவாக சந்தேகமில்லாமல் பார்க்கிறது.

ஏழு வயதில் பிள்ளைகளுக்கு தொழ கற்றுக்கொடுங்கள் என்றும், பத்து வயதானால் தொழுகைக்காக அவர்களை தண்டியுங்கள் என்றும் நபி( ஸல் ) பெற்றோர்களை அறிவுறுத்தி உள்ளார்கள்.

வயது பத்தாகும் போது சிறுவர்களை பெற்றோரின் படுக்கையிலிருந்து தூரமாக்கி வைக்கும் படி நபி (ஸல்) அவர்கள்  அறிவுறுத்தி இருக்கின்றார்கள்.

இவையெல்லாம் சிறுவர்கள் என்ற நிலையில் அவர்களின் உடல், உளவியல் தொடர்பான விடயங்களை பெற்றொர் என்ற முறையில்  ஒழுங்காக  வழிநடாத்த வேண்டும் என்ற வகையில் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியிருக்கின்றார்கள் என்பதையே தெளிவாக காட்டுகின்றது.

புகாரியில் வரும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்ததாக வரும் ஹதீஸில் ஆறு அல்லது ஏழு வயதில் நபியவர்கள் அன்னை ஆயிஷாவை மணந்ததாக வருகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இது தொடர்பாக எந்ந வித தகவல்களையும் தனது வாயால் கூறியதாக எம்மால் அறிய முடியாமல் இருக்கிறது.  இந்த சர்ச்சை இஸ்லாத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை எதிரிகளால் அடுக்கி வைப்பதற்கு காரணமாகவும் மாறி இருக்கிறது.

நான் மேலே கூறிய தொழுகை தொடர்பான சிறுவர்கள் பற்றி வந்திருக்கின்ற ஹதீஸ்களை பார்க்கும் போது பத்து வயது என்பது கூட பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கின்ற வயது என்பதையே குறித்துக் காட்டுகின்றது.

மாறாக திருமண பந்தத்தை ஏற்படுத்தும் வயதாக எங்குமே குறிக்கப்படவி்ல்லை்.  நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின்னர் 100 வருடங்கள் கடநத நிலையில்   இஸ்லாத்தை அதிகம் திரிபு படுத்திய உமையாக்களின் ஆட்சிக் காலத்தில் சேகரிக்கப்பட்ட ஹதீஸ்களை வைத்துக் கொண்டே இஸ்லாத்தை உரசிப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

நபி (ஸல்) அவர்கள் தினமும் செய்த அமலான தொழுகையை எப்படி தொழுதார்கள் என்று சரியாக தெரியாமல் சண்டை சச்சரவில் முஸ்லிம் உம்மத் ஈடுபடுவதற்கும் இதுவே காரணமாகும். இந்த ஆறு வயது பால்ய திருமண விவகாரம்  இஸ்லாத்தின் பெயரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும்  பலருக்கு வரப்பிரசதமாக அமைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. 







2010/4/16 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>

Mafahir Moulana

unread,
Apr 16, 2010, 12:09:18 AM4/16/10
to fro...@googlegroups.com
ஜஸாக்கல்லாஹ் G.N. அவர்களுக்கு
 
குழம்பியவன் தெளிவு பெறுவது அவசியம். கேள்வி கேட்கப்பட்டவன் பதி்ல் கூறுவதும் அவசியம். இங்கு இரண்டும் ஆகிவிட்டது.
 
இவ்வளவு சீக்கிரத்தில் பதில் எழுதுவீர்கள் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. G.N. அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.
 
மாற்று மதத்தினருக்கு மட்டுமல்ல, நமது முஸ்லிம்களுக்கும் ஆயிஷா முஹம்மது திருமணம் ஒரு மெளன விமபர்ஸனமாக இருந்தது. இன்று என் வினாவினதும் உங்கள் விளக்கத்தின் மூலமும் அவர்களின் மெளனமும் கலைந்திருக்கும் என நம்புகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
 
உங்கள் விளக்த்தில்

 "இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கூட 8 வயது பெண்ணை மணக்கலாம் என்ற சட்டம் இந்தியாவில் இருந்தது. புகழ் பெற்ற பாரதியார் கண்ணம்மாவை திருமணம் முடிக்கும் போது கண்ணம்மாவிற்கு வயது 8 என்பதை இங்கு நினைவுக் கூறலாம்."
 
என்ற உதாரணம் மிகவும் பொருத்தமாக இருந்தது. ஏனென்றால் இது ஆயிஷா முஹம்மது திருமணம்  முடிந்து சுமார் 1400 ஆண்டுகளுக்கும் பின் நடந்துள்ளது. அதாவது இன்றைய நூற்றாண்டில்!
 
 
ஆனால்
"........அந்த வகையில் சுறுசுறுப்புமிக்க கண்காணிப்புத் திறனும், நினைவாற்றலும் - மிக்க மனைவி தேவைத்தான் என்பதால் அதற்கு பொருத்தமானவராக ஆய்ஷாவை அவர்கள் கண்டதால் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்."
 
என்பதில் சற்று விளக்கம் தேவை. அதாவது ஆயிஷா(ரலி) அவர்கள் சுறுசுறுப்புமிக்க கண்காணிப்புத் திறனும், நினைவாற்றலும் - மிக்க  வராக அந்த 6 வயதிலேயே தென்பட்டார்களா? அல்லது ஆயிஷா(ரலி) அவர்களை மணமுடிக்கும் படி அலாஹ்வின்  புறத்திலிருந்தே கட்டளை வந்ததா?(தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவியை அவர் விவாகரத்து செய்த பிறகு மணமுடிக்கும் படி அலாஹ்வின்  புறத்திலிருந்தே கட்டளை வந்ததது போன்று?)
 
தயவு செய்து விளக்கவும்.  என் சந்தேகங்கள் பலருக்கு விளக்கம் பெற வாய்ப்பாகுமில்லையா?
 
- விளக்கத் தாகத்துடன் - Mafahir Moulana - (Sri Lanka)

 

From: toge...@gmail.com
Date: Fri, 16 Apr 2010 07:10:43 +0530
Subject: Re: ஆயிஷா(ரலி) யை நபி மணந்த வயது?
To: fro...@googlegroups.com

Hotmail: Powerful Free email with security by Microsoft. Get it now.

mailsdpi

unread,
Apr 16, 2010, 12:40:35 AM4/16/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு  அலைக்கும் 
அருமையான செய்தி 
பாரதி திருமண செய்தி பற்றிய தகவல் நன்று 
தொடரட்டும் நமது எழுத்து பணி

2010/4/16 Mafahir Moulana <maf...@hotmail.com>

muslim

unread,
Apr 16, 2010, 1:27:19 AM4/16/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

கடந்த நூற்றாண்டு வரை இந்திய அரசியல் சட்டமும் பால்ய விவாகத்தை  
நடைமுறைப்படுத்தியிருந்தது. மேலதிக விளக்கம் பெறுவதற்காக வலைப் பதிவில் வெளிவந்த இந்த ஆக்கம்!

***********************

மதமாற்றம் ஏன்?

இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் சிந்தனைகள் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றது. பால்ய விவாகம், பலதாரமணம், மற்றும் போர்கள் பற்றியக் குற்றச்சாட்டுகள் என எல்லா விமர்சனங்களும் ஒரே சாயலே. வலைப் பூவில் கடந்த 2004 டிசம்பர் மாதம் தொடங்கிய இஸ்லாத்தைப் பற்றிய விமர்சன வாசிப்பில் இப்போது தருமி என்பவரும் இணைந்துள்ளார்.

''நான் ஏன் மதிய உணவு சாப்பிட்டேன்?'' என்ற தலைப்பில் எவராவது பதிவிட்டால் ''இது என்ன பிரமாதம் அவருக்கு பசித்திருக்கும் அதனால் மதிய உணவு சாப்பிட்டார்'' என்பதை யூகித்துக்கொள்வது பெரிய விஷயமல்ல. அதுபோல் ''நான் ஏன் மதம் மாறினேன்?'' என்ற தருமியின் தலைப்பைப் பார்த்ததும் தாய் மதமோ, தழுவிய மதமோ அவருக்கு பிடித்திருக்காது என்றுதான் சொல்லத் தோன்றும். அதுதான் ஏதார்த்தமான உண்மையும் கூட.

ஆனால் பாருங்கள், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பால்ய விவாகம் செய்து கொண்டதால், என் தாய் மதமாகிய கிறிஸ்த்துவ மதத்திலிருந்து மாறினேன் என்று தருமி சொல்வது - இஸ்லாத்தில் குறைபாடுகள் இருப்பதாக விமர்சித்து, அதனால் கிறிஸ்துவத்திலிருந்து மதம் மாறினேன் என்பது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. (எதற்கு மாறினார் என்பது தனி விஷயம்)

பிற மதவாதிகள், தங்களின் மதம் சார்ந்த விமர்சனங்களை சாதாரணமாக எற்றுக்கொள்வது போல், இஸ்லாத்தை விமர்சித்தால் முஸ்லிம்கள் ஏன் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது? என்று தருமியே சொல்லிவிட்டு, அவருடைய இஸ்லாத்தின் விமர்சனங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு - மறந்தும் விட்டது. இப்போது என் கேள்விக்கு பதிலே இல்லை என்று முஸ்லிம்களை சீண்டுகிறார். இங்கே அவர் ஏன் மதம் மாறினார் என்பதன் நோக்கம் மிகத் தெளிவாகவேப் புரிகிறது. மக்காவை - நோக்கித் தொழும் என்னையும் - உலக முஸ்லிம்கள் அனைவரையும் அவமானப்படுத்தி, சபையொழுக்கம் தெரியாத வின்ஸ்டன் என்பவரின் அநாகரிகப் பின்னூட்டத்தை தருமி அனுமதித்து ஆதரித்திருப்பது அவரது உள் நோக்கம் என்ன? என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. தருமி அவர்களே மிக்க நன்றி!

ஆயிஷா (ரலி) அவர்களின் பால்ய விவாகத்தையே முதலில் தருமி தொட்டிருப்பதால் அதிலிருந்தே தொடங்குவோம். இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்துபவர்கள், 1420 ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டும்தான் பால்ய விவாகம் செய்து கொண்டார் என்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, அதே கற்பனையிலேயே தங்களின் விமர்சனத்தையும் துவக்குகிறார்கள். பால்ய விவாகம் குற்றமான செயலாகயிருந்திருந்தால் அது அன்றைய சமூகத்தார்களால் எதிர்க்கப்பட்டிருக்கும். (அப்படி எதிர்க்கப்பட்டதாக தகவலிருந்தால் தருமி சமர்ப்பிக்கலாம்) இந்தியாவில் கடந்த நூற்றாண்டு ஆரம்பம் வரையிலும் பால்ய விவாகம் அங்கீகரிக்கப்பட்டதாகவே இருந்தது.

பால்ய விவாகம்.

குஜ்ஜார் எனும் உயர் ஜாதியைச் சேர்ந்த ராம்கரன் தனது ஒரு வயது மகளை திருமணம் செய்யத் திட்டமிட்ட போது இருகுழந்தைகளுக்கெதிரான கொடுமை என்று குடும்பத்தாரோடு வாதிட்டாள் பன்வாரிதேவி. குடும்பத்தார் கேட்க மறுத்ததும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறாள். காவல் துறை வருவதற்கு முன் கல்யாணம் முடிந்து ஒரு வயது குழந்தை புதுப் பெண்ணாகிறது.

தன் உயர் சமூகம் சார்ந்த உரிமை(?)க்கெதிராக பன்வாரிதேவி புகார் செய்ததால் ஐந்து வெறியர்களால் குதறியெடுக்கப்படுகிறாள் அவள். அந்தக் காமுகர்களுக்கு நீதி மன்றம் விடுதலையளிக்கிறது. பெண் விடுதலைப் பற்றி விவாதித்து சாதனை புரியும் இந்தியாவில் எழுச்சி நூற்றாண்டின் இறுதியில் சில வருடங்களுக்கு முன் நடந்த கொடுமை இது.

கல்வியாளர்களாக மதிக்கப்படும் பிரிட்டிஷார் ஆட்சியின் போது 1828ல் குற்ற நீதி சட்டம் சென்னை, பம்பாய், கல்கத்தாவில் அமுல்படுத்தப்பட்டது. அதில் 8வயதுக்கு குறைவான பெண்ணை கற்பழிப்பது தண்டனைக்குரியக் குற்றமென அறிவிக்கப்பட்டது.

8வயதுக்கு மேற்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய வழிவகுத்த அதே வேளையில் 1828ற்கு முன் சட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பதையும் இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.

திருத்தப்பட்ட 1844ம் ஆண்டு தண்டணை சட்டத்தில் 8வயதிற்கு குறைவான மனைவியோடு உடலுறவு கொள்வது கற்பழிப்புக் குற்றம் எனக் கூறப்பட்டது. 8வயதைத் தொட்டவுடன் அவளை மனைவியாக்கி சிதைக்கலாம் என்பதுதான் இச்சட்டத்தின் அர்த்தம்.

இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி திருமண வயது 10ஆக உயர்த்தப்பட்டது 1860ல் தான். ரக்மாபாய் என்ற சிறுவயது பெண்குழந்தையை எலும்புருக்கு நோயால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யப்பட்டது. ஓரளவு கல்வி பெற்றிருந்த இந்த குழந்தை மணப்பெண் தன் கணவனோடு உடலுறவிற்கு சம்மதிக்க முடியாது என மறுத்தாள். ஆயிரக்கணக்கான மதவாதிகள் ரக்மாபாய்க்கு எதிராக களமிறங்கினர். அவள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

''மனைவியோடு உடலுறவு கொள்ளும் உரிமை கணவருக்கு உண்டு, இதை மறுக்கும் மனைவி தண்டிக்கப்படுவாள்'' என்று 1877ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதன் பிறகு நடத்தப்பட்ட ஆய்வுகளின் பலனாகத்தான் 1891ல் திருமண வயது 12ஆக உயர்த்தப்பட்டது இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், 1928ல் தான் திருமண வயது 16 என்ற நிலையை எட்டியது. (தினமணிக்கதிர் ஆய்வு கட்டுரை 9-97)

இந் நாட்டின் பெண்களுக்கெதிரான கொடுமைகளை முடிவுகட்ட எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் அவை அனைத்தும் நீதிப் புத்தகங்களிலும், வீட்டுக்கு வெளியிலும்தான் காத்துக்கிடக்கின்றன. கசங்கி புதையும் குழந்தைகள் என்னவோ புதைந்து கொண்டுதானிருக்கிறார்கள். பிரபலமான பூலான் தேவிகூட வயதுக்கு வருமுன் 10வயதில் திருமணம் முடிக்கப்பட்டவர் என்பதை மறுக்க முடியுமா? கவிபாரதி 7வயது கண்ணம்மாவை கைப் பிடித்ததை மறைக்க முடியுமா?

இந்த நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமையெனில் 1420 வருடங்களுக்கு முன்னால் நிலமை எப்படியிருந்திருக்கும் என்பதை ஆய்வாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆயிஷா(ரலி)யின் திருமணம்.

இருண்டு கிடந்த பிரதேசத்தில் இஸ்லாம் தம் ஒளிக்கதிர்களை வீசத் துவங்கிய கொஞ்ச காலத்தில் வியக்கத்தக்க சீர் திருத்தங்கள் உருவாகத் துவங்கின. கொடுமைகள் வேரறுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் பால்ய விவாகம். இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தமது 53வது வயதில் தம் நெருங்கிய தோழரான அபூபக்கர் சித்தீக் அவர்களின் மகள் ஆயிஷாவைத் திருமணம் செய்கிறார்கள் அப்போது ஆயிஷாவிற்கு வயது ஆறு.

அன்றைய அரபுலகில் பால்ய விவாகம் நடைமுறையிலிருந்த வழக்கமாகும். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் 21வயதில் பாட்டியாகி விடுவார்கள் (புகாரி) என்கிறது வரலாறு. 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகப்பேறு, அந்த மகளுக்கு 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகளுக்கு மகப்பேறு இப்படி அந்தக்காலத்துப் பெண்கள் மகள் வழி பாட்டி என்ற உறவு அந்தஸ்தை 21வயதிலேயே பெற்றுவிடுவார்கள்.

அன்றைய நடைமுறை வழக்கில்தான் முஹம்மது (ஸல்) ஆயிஷா (ரலி) திருமணம் நடக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் செய்த பால்ய விவாகமாகட்டும் அல்லது நான்குக்கு மேற்பட்ட திருமணமாகட்டும் இது அவருக்கு மட்டுமே உள்ள தனி சலுகையாகும். திருக்குர்ஆன், 33வது அத்தியாயத்தின் 50வது வசனத்தில்..

''இது மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்கின்றி உமக்கு மட்டும் உரியது'' என்று இறைவன் கூறுகிறான்.''

இஸ்லாத்தில் பால்ய விவாகம் உண்டு, இது கொடுமை என்று மீடியாக்களும், அறிவு ஜீவிகளும் கூறுவது போல், ஆம் உண்டுதான். இது இறைத்தூதருக்கு மட்டும் இறைவன் அனுமதித்த சட்டம். இஸ்லாத்தில் மற்றெவருக்கும் பால்ய விவாகம் அனுமதி இல்லை.

நபியை மணந்த ஆயிஷா (ரலி)யின் வாழ்க்கையில் சிறு கீறல்கூட இல்லாமல் மிக்க மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லியே வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. ஆனாலும் தருமி போன்றவர்கள் புகுந்து இது கொடுமையென்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதுதான் மிகக் கொடுமை. 53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த பால்ய விவாகத்திற்கும் தருமி மதமாறியதற்கும் என்ன சம்பந்தம்?



2010/4/16 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>

muslim

unread,
Apr 16, 2010, 1:57:36 AM4/16/10
to fro...@googlegroups.com

நபிமார்களின் கனவு இறைவன் புறத்திலிருந்து வருவதாகும். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை தமது விருப்பமாக மணமுடிக்கவில்லை! மாறாக, கனவின் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். அதன் பின்னரே நபி (ஸல்) அவர்கள் சிறுமி ஆயிஷாவின் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பெண்கேட்டனர்.

நபி (ஸல்) அவர்களின் கனவில், வானவர் சிறுமி ஆயிஷாவை பட்டுத் துணியில் வைத்துக் கொண்டு வந்து ''இவர் உங்கள் மனைவி'' என்று கூறுகிறார் பின்னர் துணியில் இருப்பது யார் என நபி (ஸல்) அவர்கள் பார்த்ததையும் இந்த அறிவிப்புகளில் கூறப்படுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மணமுடித்தப் பின்னர் இவற்றை தமது மனைவியிடம் எடுத்துக் கூறுகிறார்கள்.

கீழ்வரும் புகாரி நூலில் இடம்பெறும் பல அறிவிப்புகளிலும், மற்றும் முஸ்லிம் 4825 ஆகிய அறிவிப்பிலும் இச்செய்தி பதிவாகியுள்ளன.

***************************  

பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3895
ஆயிஷா(ரலி) அறிவித்தார்

"நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, 'இது உங்கள் மனைவி தான் (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், 'இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்" என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5078
ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன்.

பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5125

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7011
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்து வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே நான் அந்தப் பட்டுத துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7012
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: உன்னை நான் மணமுடிப்பதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான்அவரிடம், '(அந்தத் துணியை) விலக்குங்கள்' என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்து கொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் '(இத்துணியை) நீக்குங்கள்' என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.

 



2010/4/16 Mafahir Moulana <maf...@hotmail.com>

Abufaisal

unread,
Apr 16, 2010, 2:12:36 AM4/16/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..!

 

குழுமத்தில் சகோதரர்கள் சிலர் ஜஸாக்கல்லாஹ் என்று ம்ட்டும் கூறுகிறார்கள் ஆனால் ஜஸாக்கல்லாஹூ க்ஹைரன் என்பது தான் முழுமையானது என்று நினைக்கிறேன். இது பற்றி அறிந்தவர்கள் குழுமத்தில் தெரிவிக்கலாம்!

 

சகோ. அபூஃபைஸல்

ரியாத்

azeez nizardeen

unread,
Apr 16, 2010, 2:21:05 AM4/16/10
to fro...@googlegroups.com
//வானவர் சிறுமி ஆயிஷாவை பட்டுத் துணியில் வைத்துக் கொண்டு //  

சகோதரரே!  இதில் எந்த இடத்திலும் நபி (ஸல்) அவா்கள் ஆயிஷாவை சிறுமியாக குறிப்பிட வி்ல்லையே. நீங்கள் முன்வைத்திருக்கும் ஹதீஸ் நபி (ஸல்) அவா்கள் அன்னை  ஆயிஷாவை மணமுடித்தார்கள் என்பதற்குரிய ஆதாரம். அதில் யாருக்கும் முரண்பாடு இல்லை.  ஆறு வயதில் முடித்தார்கள் என்பதற்கு தான் நபி (ஸல் ) அவர்களின் புரத்திலிருந்து ஆதாரம் தேவை!

2010/4/16 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Apr 16, 2010, 3:25:48 AM4/16/10
to fro...@googlegroups.com

//வானவர் சிறுமி ஆயிஷாவை பட்டுத் துணியில் வைத்துக் கொண்டு // - muslim.

சகோதரரே!

அறிவிப்புகளை விளங்கியதில் ஏற்பட்ட சிந்தனையின் அடிப்படையிலேயே சிறுமி என்று குறிப்பிட்டேன்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்து போய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பி வைப்பார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல் - முஸ்லிம் 4828)

பொம்மைகளை வைத்து விளையாடும் பருவத்தில் உள்ளவரை சிறுமி என்று கூறியதில் தவறில்லை. மேலும், ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு சொல்லும் அறிவிப்பிலும் அவர் பக்குவப்படாத சிறுபிள்ளைத் தனமாகவே இருந்துள்ளார் எனவும் விளங்க முடிகிறது.

ஆறு வயதில் ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் நடந்தது என்பது குறித்து பிற மதத்தினரின் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த செய்தியை ஏற்பதில் சில முஸ்லிம் சகோதரர்களுக்கும் தடுமாற்றம் உள்ளது. அதனால் இச்செய்தியை எப்படியாவது மறுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர் என்பதே நிதர்சனம்!

ஆறு வயதில் திருமணம் நடந்ததாக ஆயிஷா (ரலி) அவர்களே அறிவிக்கும் செய்திகளையும், இது குறித்து மார்க்க சகோதரத் தோழர்களுடன் உரையாடிய சில கருத்துகளையும் பகிர்ந்துகொள்வோம்!   



2010/4/16 azeez nizardeen <azeezni...@gmail.com>

syed abu thahir

unread,
Apr 16, 2010, 9:55:01 AM4/16/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
இது குறித்து பிலால் பிலிப்ஸ் அவர்கள் பயான் you tube -இல் காண கிடைகிறது. மிகவும் தெளிவான அழகிய பதில்.  தயவு செய்து அதை பார்க்கவும்.
 
 
 
010/4/15 azeez nizardeen <azeezni...@gmail.com>
--
syed

நமக்குள் இஸ்லாம்

unread,
Apr 16, 2010, 9:00:13 PM4/16/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
இது நாம் முன்பே ஒரு கிறிஸ்த்தவ சகோதரரின் கேள்விக்கு எழுதிய பதிலாகும். அதையே இங்கு பதித்தோம். இன்னும் சில கூடுதல் விபரங்கள் அந்த பதிலில் உள்ளதால் அதன் தொடுப்பைக் கொடுக்கிறோம்.
 


--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

muslim

unread,
Apr 17, 2010, 12:51:51 AM4/17/10
to fro...@googlegroups.com
//அஸ்ஸலாமு அலைக்கும்

இது குறித்து பிலால் பிலிப்ஸ் அவர்கள் பயான் you tube -இல் காண கிடைகிறது. மிகவும் தெளிவான அழகிய பதில். தயவு செய்து அதை பார்க்கவும்.// - syed abu thahir.
 
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

அன்புச் சகோதரர் syed abu thahir அவர்களே!

அறிஞர் பிலால் பிலிப்ஸ் தெளிவாகவும், அழகிய பதிலாகவும் கூறிய விபரங்களிலிருந்து நீங்கள் பெற்ற விளக்கங்களை இங்கு தமிழில் எழுதினால் குழும உறுப்பினர் பயனடைய உதவியாக இருக்கும். எழுதுவீர்களா?



2010/4/16 syed abu thahir <syed....@gmail.com>

md abdullah

unread,
Apr 20, 2010, 2:48:00 AM4/20/10
to mnoohu althafee, abu_pvm, alameen888, anas_pvm, Jahir Abbas, ajmalsha2008, azeezul.haq, afa...@gmail.com, shahul_pvm, mohamed sithik, shaikbmw, sira...@gmail.com, sithikmsc, shahid...@yahoo.com, sur...@yahoo.co.in, basha...@gmail.com, hshahul...@gmail.com, nizar_np, mdasl...@gmail.com, marwa...@gmail.com, mohame...@gmail.com, maliqbsc, mdasl...@yahoo.co.in, ksj...@yahoo.com, fir...@gmail.com, farvi...@gmail.com, fros...@gmail.com, fro...@googlegroups.com, reach....@gmail.com, rahamat...@yahoo.com

muslim

unread,
Jun 27, 2010, 12:06:13 AM6/27/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பால்ய வயது திருமணம் தொடர்பாக, சகோதரர் syed abu thahir அவர்கள் வேறு இழையில் இரு பதிவுகளில் தமது கருத்தாடலைப் பதிவு செய்துள்ளார். அவை இந்த இழைக்குப் பொருத்தமானது. அதன் சுட்டிகளை இங்குக் குறிப்பிட்டுள்ளோம். இவற்றுக்கான எமது கருத்துகளையும் தொடர்ந்து இதே இழையில் பதிவு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

நபி ஸல்லால்லஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணம் ஆயீஷா (ரலி) அவர்களுடன் - 2

'நபியவர்கள் மைனர் பெண்ணை மணந்தார்களா?



2010/4/20 md abdullah <abdul...@gmail.com>

muslim

unread,
Jun 27, 2010, 12:41:53 AM6/27/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்து போய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பி வைப்பார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல் - முஸ்லிம் 4828)வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்

ஆயிஷா ர(ரலி) அவர்களின் விவாகம், பால்ய வயதில் நடைபெற்றது என்பதற்கு வலுச்சேர்க்க மேல்கண்ட நபிமொழியை இதே இழையில் பதிவு செய்திருந்தோம். மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் இதற்கான எந்த விளக்கமும் எழுதவில்லை.

ஆறு வயதில் ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் நடந்தது என அவர்களே அறிவிக்கும் செய்தி புகாரி, முஸ்லிம் மற்றும் சில நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கு மாற்றமாக 15 வயதில் ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் திருமணம் நடந்தது என்ற கருத்துடையோர் மேல்கண்ட அறிவிப்பிற்கு ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கம் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

அதாவது, பொம்மைகளை வைத்து விளையாடிய ஆயிஷா (ரலி) அவர்களின் தோழிகளும் ஆயிஷா(ரலி) அவர்களின் ஒத்த வயதுடையோராகவே இருந்திருப்பார்கள். என்றால் பதினைந்து வயது பருவமடைந்த அன்னியப் பெண்களை நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் விளையயாட அனுமதித்திருப்பார்களா?

பொருத்தமான விளக்கம் இருந்தால் எழுதவும்!



2010/4/16 muslim <tomu...@gmail.com>

syed abu thahir

unread,
Jul 15, 2010, 1:03:42 PM7/15/10
to fro...@googlegroups.com

À¢ŠÁ¢øÄ¡†¢÷ËÁ¡É¢Ã†£õ

À¡¸õ 3

 

 

«Š…Ä¡Ó «¨ÄìÌõ

 

¿À¢ …øÄ¡øÄ†¤ «¨Ä†¢ Å…øÄõ «Å÷¸Ç¢ý ¾¢ÕÁ½õ ¬Â£„¡ (ÃÄ¢) «Å÷¸Ù¼ý

 

±øÄ¡ Ò¸Øõ «øÄ¡‹   ´ÕÅÛ째. «ÅÉ¢¼§Á ÁýÉ¢ôÒ §¾Î¸¢§Èý. «ÅÉ¢¼§Á §¿÷ÅÆ¢ §Åñθ¢§Èý. ±ÉÐ ¯ûÇò¾¢ý ¾£¨Á¨Â Å¢ðÎõ ±ÉÐ ¦ºÂø¸Ç¢ý ¾£¨Á¨Â Å¢ðÎõ «ÅÉ¢¼§Á À¡Ð¸¡Åø §¾Î¸¢§Èý. «øÄ¡‹ ±ÅÕìÌ §¿÷ÅÆ¢ ¸¡ðθ¢§È¡§É¡ «Å¨Ã ÅÆ¢ ¦¸Îì¸ ±ÅáÖõ ÓÊ¡Ð.±Å¨Ã ÅÆ¢§¸ðÊø Å¢ðΠŢð¼§É¡ «Å¨Ã §¿÷ÅÆ¢ ÀÎò¾ ±ÅáÖõ ÓÊ¡Ð.«øÄ¡‹ ´ÕÅ¨É ¾Å¢Ã §ÅÕ þ¨ÈÅý þø¨Ä ±ýÚõ Ó†õÁÐ «ÅÛ¨¼Â ¾¢Õà¾Ã¡¸×õ «ÅÛ¨¼Â «Ê¡ø×õ þÕ츢ȡ÷¸û ±ýÚõ º¡ýÚ À¸÷¸¢§Èý. …ÄÅ¡òÐõ …Ä¡Óõ «øÄ¡‹Å¢ý ¾¢Õòà¾÷ Ó†õÁÐ ¿À¢(…ø) «Å÷¸û Á£Ð ¯¡¢ò¾¡É¾¡Ì¸.    

 

¿ýɼò¨¾ ±ýÀÐ °ÕìÌ °÷ ¸¡Äò¾¢üÌ ¸¡Äõ Á¡ÚÀθ¢ÈÐ. ¬É¡ø þŠÄ¡ò¨¾ ¦À¡Õò¾Å¨Ã «øÄ¡‹Å¢ý à¾÷¸û ±¨¾ì ¦¸¡ñÎÅó¾¡÷¸§Ç¡ «Ð ¾¡ý §¿÷ÅÆ¢. ²ý þó¾¢Â¡¨Å  ±ÎòÐ즸¡û§Å¡õ, ¬ñ, ¬Ï¼ý §ºÕÅÐ, ¾¢ÕÁ½ò¾¢üÌ Óý ¾¸¡¾ ¯È× ±øÄ¡õ þô§À¡Ð ºð¼ôÀÊ ¦ºøÖõ. ¯í¸û Á¸§É¡ Á¸§Ç¡ þ¨¾ ±øÄ¡õ ¦ºö¾¡ø ¿¡õ ¸ñÊì¸ ÓÊ¡Ð. «ôÒÈõ §À¡Ä¢Š ¿õ¨Á ¸ñÊìÌõ. ¯¨¼¸Ç¢ø ܼ þô§À¡Ð ¸¢ð¼ò¾ð¼ «¨Ã ¿¢÷Å¡½õ ÅóРŢð¼Ð.

 

ÅÃÄ¡üÚ ¡£¾¢Â¡¸ ¦Àñ¸Ç¢ý ¾¢ÕÁ½ Ũ¾ ¬Ã¡ö󾡸 ¦À¡ÐÅ¡¸ ¦Àñ¸Ç¢ý ¾¢ÕÁ½ ÅÂÐ «Å÷¸Ç¢ý âô¦ÀöÐõ ÀÕÅÁ¡¸§Å þÕó¾¢Õ츢ÈÐ.

 

ƒ¢õ ¦ÅŠð ±ýÈ À¡ôÊŠð Á¢É¢Š¼÷ "Óó¨¾Â þŠÃ¡Â¢Ä¢Â ¾¢ÕÁ½ º¼í̸û" ±ýÈ ¸ðΨâø, “ the wife was to be taken from within the larger family circle(usually at the outset of puberty or at the age of 13) in order to maintain the purity of family line.”

 

ÌÎõÀ ¯È× À¡Ð¸¡ì¸ôÀ¼§ÅñÎõ ±ýÀ¾ü¸¡¸(13 ž¢üÌû «øÄÐ ÀÕŦÁö¾¢Â ¯¼§É) ÌÎõÀò¾¢Ûû§Ç§Â ¦Àñ ±Îì¸ôÀ¼§ÅñÎõ.

 

 

 

 

 

 

¦ƒÃ¡øÎ ¦º¸ø ¾ýÛ¨¼Â "¾£ ƒ¥ «ñ𠸢ȢŠÊÂý Á¢…É¡¢" áÄ¢ø, 쾡ù ÀôÇ¢„¢íì †×Š, Àì¸õ 28ø

 

"«øÁ¡" ±ýÈ †£ôå ±ýÈ Å¡÷ò¨¾¨Â ÌÈ¢òÐ ¬Ã¡Ôõ §À¡Ð, («ó¾ Å¡÷ò¨¾ìÌ young woman or adolescent female (ÀÕÅÁ¨¼ó¾ «øÄÐ ÀÕŦÁö¾¢ì¦¸¡ñÊÕì¸ìÜÊ ¬É¡ø þýÉÓõ ÓØ ÁÉôÀìÌÅõ «¨¼Â¡¾Å÷)  ±ýÚ «÷ò¾õ.) ¨ÀÀ¢û þÈí¸¢Â «øÄÐ ¦¾¡Ìì¸ôÀð¼ ¸¡Äí¸Ç¢ø ¦Àñ¸û þÇõÀ¢Ã¡Âò¾¢§Ä§Â Á½õ ÓÊì¸ôÀ𼾡¸ ÜÚ¸¢È¡÷.

 

------------------------------------------------------------------------------------------------------------

 

Age of consent- ºð¼¡£¾£Â¡¸ ´ÕÅ÷ À¡Ä¢Âø ¯È× ¦¸¡ûÇ ¾Ì¾¢ «¨¼Ôõ ÅÂÐ. «¾¡ÅÐ þó¾ ÅÂШ¼ÂÅÕ¼ý «ÅÃРŢÕôÀòмý ¯È× ¦¸¡ñ¼¡§Ä¡ «øÄÐ ¾¢ÕÁ½õ ÓÊò¾¡§Ä¡ «Ð ºð¼ôÀÊ ¦ºøÖõ.

 

19 ¬õ áüÈ¡ñÊø «¦Á¡¢ì¸¡Å¢ø ÀÄ Á¡¿¢Äí¸Ç¢ø þó¾ ÅÂÐ ÅÃõÒ 10 ÁüÚõ 12 ¬¸ þÕó¾Ð. ¦¼Ä¡Å÷ ±Ûõ Á¡¿¢Äò¾¢§Ä¡ ¦ÅÚõ 7 ÅÂÐ Á½õ ÓÊì¸ôÀÎõ ž¡¸ «øÄÐ ¯È× ¦¸¡ñ¼¡ø ±ó¾ À¢Ã¨ÉÔõ þø¨Ä ±ýÚ þÕó¾Ð.

 

þÐ ÌÈ¢ò¾ ¸ðΨà ´ýÈ¢ø ƒ¢±ý ¬í¸¢§ÄÂ÷ ÅÕ¨¸Â¢ý §À¡Ð þó¾¢Â¡Å¢ø 8 ÅÂÐ Á½õ ÓÊì¸ôÀÎõ ž¡¸ þÕó¾Ð ±ýÚ ÌÈ¢ôÀ¢ðÎûÇ¡÷¸û.

 

þô§À¡Ðõ ܼ þó¾ ÅÂÐ ÅÃõÒ ¦Áì…¢§¸¡, À¢Ä¢ô¨ÀýŠ ¬¸¢Â ¿¡Î¸Ç¢ø 12 ÁðΧÁ. ¸Â¡É¡(À¢¡¢ðʉ ¸Â¡É¡), ЦÀ¢ý, º×ò ¦¸¡¡¢Â¡, ƒôÀ¡ý ÁüÚõ ÍÅ¡…¢ Ä¡ñ𠬸¢Â ¿¡Î¸Ç¢ø 13 ÅÂÐ ÁðΧÁ. þó¾¢Â¡Å¢ø þó¾ ÅÂÐ ÅÃõÒ þô§À¡Ð 18. ¬¸ þíÌûÇÅ÷¸û §ÁüÀÊ ¿¡ð¼Å÷¸¨Ç º¢ÚÅ÷ ЉÀ¢Ã§Â¡¸õ ¦ºö¸¢È¡÷¸û ±ýÚ ¦º¡øÄ ÓÊÔÁ¡?

 

ÓÊÅ¢ø þó¾ ÅÂÐ ÅÃõÒ ¸¡Äò¾¢üÌ ¸¡Äõ ¿¡ðÎìÌ ¿¡Î §ÅÚ Àθ¢ÈÐ.

 

 

 

âôÀ¨¼Ôõ ÀÕÅõ þô§À¡ÐûÇ §¸ûÅ¢ 9 ÅÂÐ º¢ÚÁ¢ ÅÂÐìÌ Åà þÂÖÁ¡?

 

¦Àñ ±ýÈ ¾¨ÄôÀ¢ø «¨Áó¾ Ò¸ú ¦ÀüÈ Òò¾¸ò¾¢ý ¬º¢¡¢Â÷¸û, ¦†÷Áý ±î.À¢Ä¡Š, Á¡ìŠ À¡÷¦¼øŠ, À¡ø À¡÷¦¼øŠ (herman h. ploss, max bartels and paul bartels, woman, lord and bransby, 1988, vol 1, page 563)

 

«ó¾ Òò¾¸ò¾¢ø ±Ø¾¢ÔûÇ¡÷¸û, " «Å÷¸û ź¢ìÌõ ¿¡ðÊý «øÄÐ Á¡¿¢Äò¾¢ý ºÃ¡º¡¢ ¦ÅôÀõ ´Õ Ó츢 ¸¡Ã½¢Â¡¸ Å¢Çí̸¢ÈÐ. ¯¾¢Ãô§À¡ì¸¢ø ÁðÎÁøÄ, ÓØ À¡ø ¯ÚôҸǢý ÅÇ÷¢Öõ þÐ Ó츢 ÀíÌ Å¸¢ì¸¢ÈÐ.

 

¬Š¾¢§ÃĢ «Ãº¡í¸ò¾¢ý ¦À¡Ð Áì¸û ¬§Ã¡ì¸¢Â ¸Æ¸ò¾¢ý ŨÄôÀ¾¢Å¢ø  ¦Àñ¸û ÅÂÐìÌ ÅÕÅÐ ÀüÈ¢ ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûǾ¡ÅÐ: ( puberty in girls---http://www.population.health.wa.gov.au/Communicable/Resources/2107%20pubertyinGirls.pdf)

¦Àñ¸û ÅÂÐìÌ ÅÕÅÐ 10Ä¢ÕóÐ 14 ÅÂÐìÌû ¿¨¼¦ÀÚ¸¢ÈÐ. º¢ÄÕìÌ þ¾üÌ ÓýÀ¡¸×õ º¢ÄÕìÌ þ¾üÌ À¢ýÀ¡¸×õ ²üÀθ¢ÈÐ.

 

 

 

 

¦Áð¨ÄýÀ¢ÄŠ ¦ÁÊì¸ø ±ý¨ºì§Ç¡À¢Ê¡(http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/001168.htm) Å¢ø ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûǾ¡ÅÐ:  ÅÂÐìÌ ÅÕÅÐ ¬ñ¸Ç¢ø 13Ä¢ÕóÐ 15ìÌûÙõ ¦Àñ¸Ç¢ø 9Ä¢ÕóÐ 16ìÌûÙõ ¿¨¼¦ÀÚ¸¢ÈÐ.

 

Precocious puberty ±ÉôÀÎÅÐ 8 ž¢üÌ ÓýÀ¡¸§Å ¦¾¡¼í¸¢Å¢Ê¸¢ÈÐ ±ýÚ ÜÈôÀðÎûÇÐ. Precocious puberty ±ÉôÀÎÅÐ ¸£ú¸ñ¼  ²¾¡ÅÐ ´ýÈ¢ø ²üÀÎõ ÅÇ÷¨Âì ÌȢ츢ÈÐ.

1.¦¿ïÍ 2. Á¨È ¯ÕôÒì¸Ç¢ø ÓÊ ÅÇ÷¾ø 3. Á¨È ¯ÚôÒ 4. Ó¾ø ¯¾¢Ãô §À¡ìÌ

 

 

¦ÅÌ º£ì¸¢ÃÁ¡¸§Å ÅÂÐìÌ ÅÕ¾ø «â÷ÅÁ¡É Å¢ºÂÁøÄ. ¯¾¡Ã½ò¾¢üÌ Ä£É¡ ¦Á¾¢É¡ ±Ûõ º¢ÚÁ¢  5 ÅÂÐ 7 Á¡¾õ 21 ¿¡ð¸û «ÅÙ¨¼Â ž¡¸ þÕìÌõ §À¡Ð  ÌÆó¨¾ ®ý¦ÈÎò¾¢Õ츢ýÈ¡û. Ţ츢À£Ê¡ ±ý¨ºì¦Ç¡À¢Ê¡Ţø(http://en.wikipedia.org/wiki/Lina_Medina) ģɡ ¦Á¾¢É¡(À¢ÈôÒ ¦ºô¦¼õÀ÷ 27, 1933, ¦ÀÕ ¿¡ð¨¼ §º÷ó¾Å÷) ÁÕòÐÅ ÅÃÄ¡üÈ¢§Ä§Â þÅû ¾¡ý Á¢¸îº¢¡¢Â ÅÂÐ ¾¡ö ±ýÚ ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûÇÐ. É¡ŢÖõ þ¨¾ ´ò¾ ºõÀÅõ À¾¢× ¦ºöÂôÀðÎûǾ¡¸ «¾¢ø ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûÇÐ. 

 

---------------------------------------------------------------------------------------------------

 

 

 

þó¾ †¾£Š¸û ÌÈ¢òРŢ¡¢Å¡É ¬ö× ¦ºö§ÅñÎõ ±ý§È ¿¢¨É츢§Èý. ¿¢Ã¡¸¡¢ì¸ §ÅñÎõ ±ýÚ ¦º¡øÄ Å¢ø¨Ä. ²¦ÉÉ¢ø  ´§Ã ´Õ «È¢Å¢ôÀ¡Ç÷ Á¡ò¾¢Ã§Á. §ÁÖõ «¾üÌ ÓÃñ ÀÎõ Áü¦È¡Õ †¾£Š. ÁüÈ ÅÃÄ¡üÚ ¬º¢¡¢Â÷¸û ¦¾Ç¢Å¡¸ ÓÃñÀθ¢È¡÷¸û. ¬¸ þôÀÊ ÀÄ Å¢ºÂí¸û þó¾ ºõÀÅò¨¾ ÌÈ¢òÐ ¦¾Ç¢Å¡¸ À¾¢ÂôÀ¼Å¢ø¨Ä.

 

Á¢¸ Á¢¸ Ó츢ÂÁ¡É Å¢ºÂõ, Á¾£É¡Å¢ø Å¡úó¾ ¿ÂÅﺸ÷¸§Ç¡ Á측ŢĢÕó¾ þ¨È ¿¢Ã¡¸¡¢ôÀ¡Ç÷¸§Ç¡ þó¾ ¾¢ÕÁ½ò¨¾ Å¢Áº¡¢ì¸Å¢ø¨Ä. ±ô§À¡Ð þó¾ ¿À¢(…ø)¨Â þÆ¢×ÀÎòЧšõ, þó¾ þŠÄ¡ò¨¾ ¿¡ºõ ¦ºö§Å¡õ ±ýÚ Å¡öôÒ측¸ ²í¸¢ þÕó¾ ¸¡Äõ. «ôÀÊ ±Ð×õ ¿¼ì¸Å¢ø¨Ä. «Å÷¸û Å¢Áº¡¢ò¾ ´§Ã ¾¢ÕÁ½õ «ý¨É ¨ƒÉô À¢óò ƒ‹‰(ÃÄ¢) «Å÷¸Ù¼É¡É ¾¢ÕÁ½õ Á¡ò¾¢Ã§Á.

 

þÐ ´Õ Å¢ºÂò¨¾ ¦¾Ç¢Å¡ì̸¢ÈÐ. «¾¡ÅÐ ´ýÚ «ó¾ ¸¡Ä¸ð¼ò¾¢ø ¦Àñ¸û ÅÂÐìÌ Åó¾×¼ý ¾¢ÕÁ½õ ±ýÀÐ ¿¨¼Ó¨È¢ø þÕó¾¢Õì¸ §ÅñÎõ. «øÄÐ «ý¨É ¬Â£„¡(ÃÄ¢) «Å÷¸Ç¢ý ÅÂÐ ¿À¢(…ø) «Å÷¸Ù¼ý ¾¢ÕÁ½õ ¿¼ìÌõ §À¡Ð 9ìÌ §ÁüÀð§¼ þÕó¾¢Õì¸ §ÅñÎõ.

 

 

---------------------------------------------------------------------------------------------------

¦Àñ¸û ÅÂÐìÌ Åó¾×¼ý ÁÉôÀìÌÅõ ÅóРŢÎÁ¡

 

þÐ «Å÷¸û Å¡Øõ ºã¸ò¾¢ý ÀÆì¸ÅÆì¸òмý ºõÀó¾Ó¨¼ÂÐ ±ýÚ ¸Õи¢§Èý. ±ý ¾¡öìÌ ¾¢ÕÁ½õ ¬Ìõ §À¡Ð 15 ÅÂÐ. ±ý ¾ó¨¾ 15 ÅÕ¼õ ãò¾Å÷. ±ý «ì¸¡¨ÅÔõ 15 «øÄÐ 16 ž¢ø ¸ðÊ ¦¸¡ÎòРŢð¼¡÷¸û.

 

ƒ¡¸¢÷ ¿¡Âì, À¢Ä¡ø ôÄ¢ôŠ §À¡ýÈ º¡ý§È¡÷¸û ÅÂÐìÌ Å󾡸 «ó¾ ¦Àñ§½¡ ¬§½¡ ¾¢ÕÁ½ò¾¢üÌ  ¾ÂḢ Å¢ð¼¡÷¸û ±ýÈ ¸ÕòÐ ¦¸¡ñÎûÇ¡÷¸û.

 

¯¼ø ¡£¾¢Â¡¸ ÅÂÐìÌ Åó¾ À¢ý ¬§½¡ ¦Àñ§½¡ ¾¢ÕÁ½ò¾¢üÌ ¾ÂḢŢθ¢È¡÷¸û. þÉ¢ ÌÎõÀò¨¾ ¸ÅÉ¢ìÌõ ¦À¡ÚôÒ «Å÷¸Ç¢ý ºã¸ ÀÆì¸í¸ÙìÌ ²üÈÅ¡Ú «¨Á¸¢ÈÐ. þýÚ 12 ÅÕ¼õ ÀûÇ¢ô ÀÊôÒ À¢ý 3 «øÄÐ 4,5 ÅÕ¼í¸û ¸¡§Äˆ À¢ý §Å¨Ä À¢ý ¸øÂ¡½õ. þÐ ¿¡õ «¨ÁòÐì ¦¸¡ñ¼Ð. ÀûÇ¢ ¸¡§Äˆ þøÄ¡¾ Óó¨¾Â ¿¡ð¸Ç¢ø ±ýÉ ¦ºö¾¡÷¸û?

 

þ¨¾ ÓýÛ¾¡Ã½Á¡¸ ¦¸¡ñΠž¡ÉÅ÷¸û þÇõ¦Àñ¸¨Ç Á½ÓÊì¸Ä¡Á¡

 

«ó¾ ¸¡Ä¸ð¼ò¾¢ø ãýÚ ºõÀÅí¸û ¿¡õ «È¢Â Óʸ¢ÈÐ. ´ýÚ †Ä¡, ¬Á¢É¡ À¢óò Å‹À¢ý ¸º¢ý cousin(¦º¡ó¾õ)«Å÷¸û «ôÐø Óò¾Ä¢ô «Å÷¸¨Ç ¾¢ÕÁ½õ ¦ºö¾¢Õ츢ȡ÷¸û. «§¾ ¿¡Ç¢ø «Å¡¢ý Á¸ý «ôÐøÄ¡‹ ¬Á¢É¡ À¢óò Å‹¨À ¸øÂ¡½õ ¦ºö¸¢È¡÷¸û. †Ä¡×õ ¬Á¢É¡×õ ´§Ã ÅÂШ¼ÂÅ÷¸û.

 

þÃñÎ. ¿ÁÐ ¿À¢(…ø)ÂÅ÷¸Ç¢ý ¾¢ÕÁ½õ «ý¨É ¬Â£„¡(ÃÄ¢) «Å÷¸Ù¼ý.

 

ãýÚ. †ˆÃò ¯Á÷ À¢ý ¸ò¾¡ô(ÃÄ¢) «Å÷¸Ç¢ý ¾¢ÕÁ½õ, †ˆÃò «Ä¢ À¢ý «Ò¾¡Ä¢ô(ÃÄ¢) †ˆÃò ·À¡ò¾¢Á¡(ÃÄ¢) «Å÷¸ÙìÌ À¢Èó¾ ¯õÓ Ìøàõ «Å÷¸¨Ç ¾¢ÕÁ½õ ¦ºö¾ø.

 

ӾĢø ¯ûǨ¾ Å¢ðΠŢΧšõ. ²¦ÉÉ¢ø «Ð ƒ¡†¢Ä¢ö¡ ¸¡Ä¸ð¼õ.

 

†ˆÃò ¯Á÷(ÃÄ¢) «Å÷¸§Ç þò¾¢ÕÁ½ò¨¾ ÀüÈ¢ ܼ þÕó¾ º†¡À¢Ô¼ý(«Å÷¸Ç¢ý ¦ÀÂ÷ ±ÉìÌ ÁÈóРŢð¼Ð)," ±ý¨É þƢš¸ À¡÷측§¾. ¿À¢(…ø) «Å÷¸û ÜÈ §¸ðÊÕ츢§Èý. ÁÚ¨Á ¿¡Ç¢ø ±øÄ¡ ÀÃõÀ¨Ã¸Ùõ ÐñÊì¸ôÀðΠŢÎõ. ±ýÛ¨¼Â ÀÃõÀ¨Ã¨Âò¾Å¢Ã." ¬¸§Å¾¡ý ¾¡ý þó¾ ¾¢ÕÁ½ò¨¾ ÓÊò¾¾¡¸ †ˆÃò ¯Á÷(ÃÄ¢) «Å÷¸§Ç ÜÚ¸¢È¡÷¸û.

 

†ˆÃò ¯Á÷(ÃÄ¢) «Å÷¸¨Çô§À¡ø ¡¨Ã þýɡǢø ¸¡ð¼ ÓÊÔõ.

 

¿ÁÐ ¿À¢(…ø) «Å÷¸û. †¢„¡Á¢ý †¾£Š ¬¾¡Ãâ÷ÅÁ¡¸ þÕìÌõ Àðºò¾¢ø, þó¾ ¾¢ÕÁ½õ ´Õ «º¡¾Ã½Á¡É ¾¢ÕÁ½õ. «ý¨É ¬Â£„¡(ÃÄ¢) «Å÷¸û ´Õ «º¡¾Ã½Á¡É ¦ÀñÁ½¢.

 

þó¾ ¾¢ÕÁ½ò¨¾ §Áü§¸¡û ¸¡ðÊ ¿¡õ þ¨¾ ÅÆì¸¢ø ±Îì¸ þÂÄ¡Ð. þÐ §À¡ýÚ «¾¢¸ ÅÂРŢò¾¢Â¡ºòмý ¾¢ÕÁ½õ ¦ºöÔõ ¿À÷¸¨Çô À¡Õí¸û. À½õ ¦¸¡Øò¾ Ó¾¨Ä¸û. «Å÷¸Ç¢ý Å¡ú×õ þŠÄ¡Óõ ±í§¸¡ þÕìÌõ.

À½ò¾¡¨º À¢Êò¾ º¢Ä ¾ó¨¾¸Ùõ, ²ú¨ÁÔõ þ¾üÌ Ð¨½ §À¡¸¢ýÈÉ. ¦ºª¾¢Â¢ø «ÃÍ ¦Àñ¸¨Ç Á½ÓÊìÌõ Å¢ºÂò¾¢ø ºð¼õ ¦¸¡ñÎ Åà ¬§Ä¡º¢ì¸¢ÈÐ.

 

þŠÄ¡Á¢ì Å¡öŠ þ¨½Âò¾¢ø Åó¾ ¦ºö¾¢.---·¦ÀôÃÅ¡¢ À¾¢ôÒ-- ¦„öì «ôÐøÄ¡‹ «ø Á¡É¢, º£É¢Â÷ ¯ÄÁ¡ì¸Ç¢ý «¨ÁôÀ¢ø ¯ûÇÅÕõ, ¦ºª¾¢ Ã¡Âø §¸¡÷ðÊý ¬§Ä¡º¸Õõ ¿À¢(…ø) «Å÷¸Ç¢ý þó¾ ¾¢ÕÁ½ò¨¾ Óý۾á½Á¡¸ ¦¸¡ûÇìܼ¡Ð ±ýÚ ¸ÕòÐ ¦¾¡¢Å¢òÐûÇ¡÷. ²¦ÉÉ¢ø «ó¾ «Ç× ·À¢òÉ¡. ÌÚìÌ Òò¾¢Ôõ, ¸£úò¾ÃÁ¡É ±ñ½í¸Ù§Á þ¾üÌ Ó츢 ¸¡Ã½õ. «¾üÌ þŠÄ¡ò¾¢ø ²¾¡ÅÐ ÅÆ¢ þÕ츢Ⱦ¡ ±ýÚ §¾Êò¾¢¡¢ÅÐ. þÅ÷¸Ç¢ý ¯ñ¨Á ¿¢¨Ä¨Â «øÄ¡‹ ¦¾Ç¢Å¡¸ «È¢Å¡ý.

 

Ҩþ¡Å¢ø 12 ÅÂÐ ¦Àñ 80 ÅÂШ¼ÂŧáΠ¾¢ÕÁ½õ ¿¢îºÂ¢ì¸ôÀð¼¡û. þó¾ ŢŸ¡Ãõ §¸¡÷ðÎìÌ ±ÎòÐøÄôÀð¼Ð. Áü¦È¡Õ ºõÀÅõ 8 ¬õ ¬ñÎ ÀûÇ¢ À¢Öõ ¦Àñ ¾ý ¾ó¨¾ ´ÕÅ¡¢¼õ Àð¼ ¸¼¨É ¾£÷ì¸ ¸¼ý Àð¼Å§É¡Î ¾¢ÕÁ½õ ¿¢îºÂ¢ì¸ôÀð¼¡û. ¾¡ö þó¾ Å¢ºÂò¨¾ §¸¡÷ðÎìÌ ±ÎòÐ ¦ºýÚ Å¢ð¼¡û. ¨†¾Ã¡À¡¾¢Öõ ¿¢¨È º¢Ú º¢Ú ¦Àñ¸û ¸¢ÆðÎ ¦„ö̸ÙìÌ ¾¢ÕÁ½õ ÓÊì¸ôÀð¼¡÷¸û ±ýÚ §¸ûÅ¢ ÀðÊÕ츢§Èý.

 

 þôÀÊ Á½ÓÊìÌõ þÅ÷¸û «ó¾ º¢Ú ÅÂÐ ¦Àñ¨É º¡¢Â¡É ӨȢø ¾¢Õô¾¢ ÀÎò¾ þÂÖÁ¡? «ó¾ ¦ÀñÉ¢ý ž¢¨É ´òÐ Å¡Æ þÂÖÁ¡. «Åû þǨÁ¢ý  ¬ÃõÀò¾¢Öõ þÅ÷ ÓШÁ¢ý ÓÊÅ¢Öõ. ÅÂРŢò¾¢Â¡ºõ, ±ñ½í¸Ç¢ø §ÅÚÀ¡Î. «ó¾ ¦Àñ¨½ Á¸¢ú¡¸ ¨Åò¾¢Õì¸ þÂÖÁ¡. þÅ÷ ÁðÎõ þýÀõ «ÛÀÅ¢ôÀ¡÷. «ó¾ ¦Àñ§½¡ Å¢¾¢§Â ±ýÚ þÕôÀ¡û. ²ý ¸½Å¡¢¼Á¢ÕóÐ ±¾¢÷À¡Ã¡¾Ð ¸¢¨¼ì¸¡¾ §À¡Ð «ó¾ô ¦Àñ ¾ÅÈ¡É ÅÆ¢¨Â §¾÷ó¦¾Îì¸ Á¡ð¼¡Ç¡?

 

¿À¢(…ø) «Å÷¸ÙìÌ 40 ¬ñ¸ÙìÌ ¿¢¸Ã¡ÉÅḠþÕó¾¡÷¸û  ±ýÚ à·ÀòÐø «åŠ ±Ûõ áÄ¢ø «¾ý ¬º¢¡¢Â÷ Á‹ãò «ø þо¡õÒøÄ¢ ÜÚ¸¢È¡÷. (¦ÅǢ£Π¾¡÷ «ø Áɡá, ±¸¢ôÐ, Àì¸õ 39, ¬í¸¢Ä À¾¢ôÒ)

¿À¢(…ø) «Å÷¸û ±ò¾¨É ´Õ þɢ ¸½ÅḠþÕó¾¡÷¸û, ´ò¾ ÅÂШ¼ÂÅḠþÕôÀÅ÷¸û ±ùÅ¡Ú þÕôÀ¡÷¸§Ç¡ «¨¾ Å¢¼  ¾ýÛ¨¼Â Á¨ÉÅ¢¸Ç¢¼õ ´Õ þǨÁÂ¡É ¸½ÅḧŠþÕó¾¡÷¸û  ±ýÚ ÀÄ «È¢Å¢ôҸǢø À¡÷ì¸ Óʸ¢ÈÐ. Á¢ì¸ ꣏ÃÁ¡É §¾¡üÈõ ¯¨¼ÂÅḠþÕó¾¡÷¸û. «Å÷¸¨Çì ÌÈ¢òÐ ¯õÓ Á'À¡ò «Å÷¸û Å÷½¢ìÌõ †¾£…¢ø ¿À¢(…ø) «Å÷¸û ±ùÅÇ× «ÆÌ¨¼ÂÅḠþÕó¾¡÷¸û ±ýÀÐ ÒÄÉ¡¸¢ÈÐ.

 

 

 

25 ÅÕ¼õ Ũà ¸üÒ ¦¿È¢§Â¡Î Å¡úóÐ 50 ÅÂРŨà ´§Ã ¦Àñ§½¡Î ÌÎõÀõ ¿¼ò¾¢Â ´Õ Á¡ÁÉ¢¾÷ ¾¢Ë¦ÃÉ ¦Àñ½¡¨º ¦¸¡ñ¼¡¦ÃýÀÐõ ´Õ º¢ÚÁ¢§Â¡Î þ ¦¸¡ñ¼¡÷ ±ýÀÐõ þðÎì¸ð¼Àð¼¨Å ±ýÀ¨¾ ¯ñ¨Á¨Â ¯½Õõ þ¾Âí¸û ¦¾Ç¢Å¡¸§Å «È¢óÐ ¨Åò¾¢Õ츢ýÈÉ.

 

¯ñ¨Á¢ø ±ÅÕ¨¼Â ¯ûÇí¸Ç¢ø §¿¡ö þÕ츢ȧ¾¡ «Å÷¸û ¾¡ý þò¾¨¸Â ¦À¡ö¸¨Ç ÀÃôÒ¸¢ýÈÉ÷. «Å÷¸Ç¢ý §¿¡ì¸¦ÁøÄ¡õ þó¾ ºò¾¢Â Á¡÷ì¸ò¨¾ ±ôÀÊ Å£úòÐÅÐ ±ýÀ§¾. ºÁÂõ ¸¢¨¼ìÌõ §À¡¦¾øÄ¡õ «Å÷¸û н¢óРŢθ¢ýÈÉ÷.þò¾¨¸ÂÅ÷¸û ¿À¢(…ø) ¸¡Äò¾¢Öõ þÕó¾É÷. þÅ÷¸û ¾¡ý «ý¨É¨Â ÀüÈ¢ «ÅàÚ ÜÈ¢ÂÅ÷¸û. þÅ÷¸û ±øÄ¡ ¸¡Äí¸Ç¢Öõ ÅÕÅ¡÷¸û. þÅ÷¸û ¯ñ¨Á¢ø þŠÄ¡ò¾¢ý ±¾¢¡¢¸û. ¾í¸Ù¨¼Â 𡸠þó¾ ´Ç¢¨Â «¨½òÐÅ¢¼ Å¢ÕõÒ¸¢È¡÷¸û. ¬É¡ø «øÄ¡‹ ¾¢ýÉÁ¡¸ þÅ÷¸¨Ç §¾¡ü¸ÊôÀ¡ý.

 

¿À¢(…ø) «Å÷¸Ç¢ý ¿ýɼò¨¾ìÌ «øÄ¡‹ º¡ýÚ À¸÷¸¢È¡ý. ¸¢Â¡Á ¿¡û Ũâø «Å÷¸¨Ç §À¡ýÚ Â¡÷ ¾¡ý Åà ÓÊÔõ. Statesman, leader, imam, commander, general, orator, guider, warner, husband, father, friend, teacher, companion, administrator, planner, pious, prophet of mercy, prophet of war, many more.... ¡÷¾¡ý þò¾¨É ¦À¡ÚôÒ¸¨ÇÔõ ÍÁì¸ ÓÊÔõ. ¬É¡ø «¨¾ Á¢¸ «Æ¸¡¸ ¦ºöÐ ¸¡ðÊ Å¢ð¼¡÷¸û.

¿À¢(…ø) «Å÷¸§Ç¡Î ¿õ¨Á ´ôÀ¢¼ þÂÄ¡Ð. ±øÄ¡ Ũ¸Â¢Öõ «Å÷¸û Á¢¸ ¯Â÷óÐ ¿¢ü¸¢È¡÷¸û. «Å÷¸¨Çô§À¡ø ¿¡õ ÓÂüº¢ ¦ºö §ÅñÎõ. ¬É¡ø «Å÷¸Ç¢ý ¯ÂÃò¨¾ ´Õ츢Öõ ¿¡õ «¨¼Â þÂÄ¡Ð. þó¾ ¯õÁò¾¢ý ¾¨ÄÅ÷. ¦Á¡ò¾ ¬¾Ó¨¼Â(«¨Ä†¢Š…Ä¡õ)Áì¸ÙìÌõ ¿À¢(…ø) «Å÷¸û ¾¡ý ¾¨ÄÅ÷. «øÄ¡‹ þó¾ ¾¢ÕÁ½í¸¨Ç Å¢¾¢ìÌõ §À¡Ð «Å÷¸ÙìÌ þ¨¾ ¾¡íÌõ, ºÁ¡Ç¢ìÌõ ÅÄ¢¨Á¨ÂÔõ ¾óРŢð¼¡ý.

 

 ´ÕÓ¨È «Å÷¸Ç¢ý Ш½Å¢Â¡¢ø º¢Ä÷ Å¡úÅ¡¾¡Ãò¨¾ ¯Â÷ò¾¢ §¸ð¼§À¡Ð ¿À¢(…ø) «Å÷¸û ¦¾Ç¢Å¡¸ À¾¢ÄÇ¢òРŢð¼¡÷¸û. ¿£í¸û ¯Ä¸ò¨¾ Å¢ÕõÀ¢É¡ø ¯í¸¨Ç ¾¢ÕÁ½ Àó¾ò¾¢Ä¢ÕóРŢÎÅ¢òÐŢθ¢§Èý ±ýÚ ÜȢŢð¼¡÷¸û. ¬¸§Å «Å÷¸û þ¨ÈÅÉ¢ý ¦¾Ç¢Å¡É ÅÆ¢¸¡ðξĢø Å¡úó¾¡÷¸û.

 

«øÄ¡‹¨Å ¿À¢(…ø) «Å÷¸¨Çô §À¡ýÚ Â¡Õõ «ïº ÓÊ¡Ð. «ò¾¨¸Â ÁÉ¢¾Ã¡ þó¾ þÆ¢ ¸¡¡¢Âò¨¾ ¦ºö¾¢ÕôÀ¡÷¸û. ±ó¾ Ì÷ ¬ý Á¨Ä¢ý Á£Ð þÈí¸¢É¡ø «øÄ¡‹Å¢ý «îºò¾¡ø àû àÇ¡¸¢ ŢΧÁ¡ «ó¾ Ì÷ ¬¨É þó¾ þ¾Âõ ÍÁó¾Ð. «¾Û¨¼Â ¦À¡Úô¨ÀÔõ ¿¢¨È§ÅüÈ¢ÂÐ. «ó¾ þ¾Âò¾¢üÌ ¦º¡ó¾ì¸¡Ã÷ þò¾¨¸ÂÅÃøÄ÷. «ôÀÊ ´Õò¾¨Ã «øÄ¡‹ Íô†¡É†¤ Åò¾ ¬Ä¡ ¾ýÛ¨¼Â àÐô À½¢ì¸¡¸ §¾÷ó¦¾Îì¸×õ Á¡ð¼¡ý.

 

þÅ÷¸ÙìÌ ±ýÉ §¿÷ó¾Ð. þÅ÷¸û «ïº Á¡ð¼¡÷¸Ç¡. ¾ýÛ¨¼Â þ¨ÈÅ¨É ºó¾¢ì¸Á¡ð§¼¡õ ±ýÚ ¯Ú¾¢Â¡ö þÕ츢ȡ÷¸Ç¡. ¡ «øÄ¡‹ ¯ýÛ¨¼Â ¾¢Õòà¨ÃÔõ «Å÷¸û à ÌÎõÀò¾¡¨ÃÔõ ÀÆ¢ ¦º¡øÖõ ´ù¦Å¡ÕŨÃÔõ ¯ýÛ¨¼Â ¸ÊÉÁ¡É §Å¾¨É¡ø §Å¾¨É ¦ºöš¸. ¬Á£ý.

 

 

¿¡ý þó¾ †¾£¨… ÁÚì¸ Å¢ø¨Ä. þÐ ÌÈ¢òÐ º¢Ä «È¢»÷¸û ±ØôÀ¢Â ºó§¾¸ò¨¾§Â Óó¨¾Â ¬ì¸ò¾¢ø À¾¢× ¦ºö§¾ý. «øÄ¡‹Å¢¼§Á ¯¾Å¢ §¾Î¸¢§Èý. «ÅÉ¢¼§Á §¿÷ÅÆ¢ §Åñθ¢§Èý. þó¾ ÌÆôÀò¾¢Ä¢ÕóРŢÎÀ¼×õ «Åý Á£Ðõ «Åý à¾÷ Á£Ðõ «ý¨ÉÂ÷ Á£Ðõ ¿ø§Ä¡÷¸Ç¡É ãÁ¢ý ¸Ç¡É ¬ñ ¦Àñ «¨ÉÅ÷ Á£Ðõ ¿ø¦Äñ½õ ¦¸¡ûÇ «ÅÉ¢¼§Á Ь ¦ºö¸¢§Èý.

 

Ó¾ø ¸ðΨà ¾¢Õ. ºÀ£ø «‹ÁÐר¼ÂÐ. «Å÷ Á£Ð «øÄ¡‹ «Õû Ò¡¢Å¡É¡¸. ¬Á£ý.

 

þÃñ¼¡õ ¸ðΨà ¾¢Õ. „¡ ¿Å¡…¤¨¼ÂÐ. «ÅÕìÌ «øÄ¡‹ §¿÷ÅÆ¢ ¸¡ðΚɡ¸. ¬Á£ý.

 

ãýÈ¡õ ¸ðΨâø ÀÄÕ¨¼Â ¸ÕòÐì¸Ùõ ¯ûÇÐ. ±ÉÐ ¦º¡ó¾ ¸ÕòÐì¸Ùõ ¯ûÇÐ. þó¾ Á¡÷ì¸õ ¿¢¨Ä ¿¢Úò¾ôÀðÎÅ¢ð¼Ð. þ¾¢ø ±ý ¦º¡ó¾ ¸ÕòÐì¸¨Ç ÒÌòÐÅÐ «¿¢Â¡Âõ. þ¨¾ ´Õ «À¢ôÀ¢Ã¡Â¸Á¡¸§Å ±ÎòÐì ¦¸¡ûÙí¸û. ±ÉìÌõ ¯í¸ÙìÌõ «øÄ¡‹Å¢¼§Á §¿÷ÅÆ¢ §Åñθ¢§Èý. ¬Á£ý. þ¾¢ø ²¦¾Ûõ ¾ÅÚ þÕôÀ¢ý «øÄ¡‹Å¢¼§Á ÁýÉ¢ôÒ §¾Î¸¢§Èý. ¿¢¨È þÕ󾡸 ¿¢îºÂÁ¡¸ ±øÄ¡ Ò¸Øõ «øÄ¡‹×째. «ÅÉ¢¼§Á ÜÄ¢ §¾Î¸¢§Èý.

 

±øÄ¡ Ò¸Øõ «øÄ¡‹ ´ÕÅÛ째. …ÄÅ¡òÐõ …Ä¡Óõ «ýÉø ¿À¢(…ø) «Å÷¸û Á£Ðõ «Å÷¸û ÌÎõôò¾¡÷ Á£Ðõ «Å÷¸û §¾¡Æ÷¸û «¨ÉÅ÷ Á£Ðõ ¯¡¢ò¾¡É¾¡Ì¸.

 

 



2010/6/26 muslim <tomu...@gmail.com>



--
syed
Reply all
Reply to author
Forward
0 new messages