ஹஜ் நெருங்கி விட்டதைத் தொடர்ந்து அரஃபா நோன்புப பற்றிய சிந்தனையும் அதைத் தொடர்ந்து எந்த நாளில் நோன்பு நோற்பது என்ற சலசலப்பும் நம்மிடையே தோன்றும்.
அவரவருக்கு துல்ஹஜ் பிறை 9 எதுவோ அன்றைக்கு நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று ஒரு சாராரும், ஹாஜிகள் அரபாவில் இருக்கும் அன்றைக்கு தான் நோன்பிருக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் தங்கள் கருத்தை முன் வைக்கின்றார்கள்.
இரண்டு சாராரின் கருத்துக்களில் முதல் சாரார் எடுத்து வைக்கும் அந்தந்தப் பகுதியின் பிறை அடிப்படையில் 9 அன்றைக்கு நோன்பு வைப்பதே அரபாவாகும் என்ற வாதம் ஆதாரங்களுக்கு முரணாகவே தென்படுகின்றது.
இந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம் நபி(ஸல்) துல் ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்பதேயாகும்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என நபி(ஸல்) அவர்களின் மனைவிகளில் சிலரிடமிருந்து ஹுனைதாபின் காலித்(ரலி), அறிவிக்கிறார்கள். நஸயி, அஹ்மத்.
துல்ஹஜ் 9 என்று குறிப்பிடுவதால் அவரவரும் துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று இவர்கள் முடிவு செய்கிறார்கள்.
இது பிறையை தேர்ந்தெடுப்பதில் - பிறையை அடிப்படையாகக் கொண்டதில் உள்ள பிரச்சனையாக அவர்கள் பார்க்கிறார்கள்.
மற்ற அறிவிப்புகள் ஏதும் இன்றி பிறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த நோன்பு சுன்னத்தாக்கப்பட்டிருந்தால் இவர்களின் வாதம் அவர்கள் தரப்பில் ஓரளவு நியாயமாக இருக்கலாம். ஆனால் இது பிறையோடு சேர்த்து மற்ற ஒரு நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
அரஃபா நோன்பு என்பது அரஃபா தினத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அரஃபா என்பது ஹஜ் செய்ய செல்லும் ஹாஜிகள் அரஃபா எனும் பெருவெளியில் தங்கும் நாளைக் குறிக்கும்.
இந்த நாளின் நோன்பைப் பற்றி நபி(ஸல்) குறிப்பிடும் 'அரஃபா தின நோன்பு' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
அரஃபா தினத்தில் நோன்பு வைப்பது அதற்கு முந்தைய ஒரு வருட, பிந்தி வரும் ஒரு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கைக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா(ரலி) திர்மிதி) இதே செய்தி இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது.
திர்மிதியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் அரபுவாசகத்திற்கு கிளிக்
அரஃபா தினத்தின் நோன்பு முந்தைய - பிந்தைய ஆகிய இரண்டு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாகவும் ஆஷுரா தின நோன்பு ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகவும் அமையும் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா (ரலி) அஹ்மத்) இந்த செய்தி முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.
صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
"அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு என்று எந்தவொரு ஹதீஸும் கிடையாது."
வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடுவதை வைத்தே அரபா தின நோன்பை நோற்க வேண்டும் என்ற ஓர் இஸ்லாமிய அடிப்படையற்ற கருத்து நிலவி வருகிறது. இச்சிந்தனை காரணமாக தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அரபா மைதானத்தின் நடக்கின்ற வணக்கவழிபாடுகள் ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற போது தாங்கள் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியத்தை செய்தது போன்று நோன்பு நோற்காதவர்களும் சவூதிற்கு முன்னர் வேறு நாடுகளில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்டும் அதை ஏற்காமல் அரபா ஒன்று கூடலை மட்டுமே வைத்து துல்ஹிஜ்ஜாவை தீர்மானிக்கும் வெளிநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கக் கூடிய சகோதரர்களும் சங்கடப்படுகின்றனர். உண்மையில் இது ஒரு நூதனமான சிந்தனையாகும். சில சகோதரர்கள் அவ்வாறு ஒரு ஹதீஸ் இருப்பதாகவும் கூறிவருகின்றனர். பின்வரும் விடயங்களைப் படிப்பவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வார்கள்.
1 - துல்ஹிஜ்ஜா மாதத்தில் வரும் உழ்ஹிய்யா பெருநாளை பத்து வருடங்களாக எவ்வாறு தீர்மானித்தார்கள்?
நபியவர்களும் தோழர்களும் மதீனாவில் பத்து வருடங்களாக உழ்ஹிய்யாப் பெருநாளை கொண்டாடியிருக்கிறார்கள். இஸ்லாமிய மாதம் ஒவ்வொன்றும் பிறை தென்பட்ட பின்னரே ஆரம்பிக்கப்படுவது போல் துல்ஹிஜ்ஜா மாதமும் அவ்வாறே ஆரம்பிக்கப்படுவது அனைவரும் அறிந்த விடயம். துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளிலேதான் உழ்ஹிய்யாப் பெருநாள் இடம்பெறும். அவ்வாறாயின் மதீனாவில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்ட மறுநாளே துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாள் ஆரம்பித்துவிடும் அதன் பத்தாவது நாள் பெருநாளென்று தீர்மானிக்கப்பட்டுவிடும். அதற்கு முந்திய நாள் நபித்தோழர்கள் நோன்பும் நோற்பார்கள். அந்த நோன்பும் அரபா ஒன்று கூடலும் ஒன்பதாம் நாளன்று வருவதால் அரபா தின நோன்பு என்று அழைக்கப்டுகிறது. அன்றைய தினம் பற்றி நபியவர்களோ நபித்தோழர்களோ அலட்டிக்கொள்ளவேயில்லை.
2 - அரபாவில் ஒன்பதாம் தினமன்று கூடும் வழமை வரும்முன்னிருந்தே ஒன்பது வருடங்களாய் மதீனாவில் அரபா தின நோன்பு அனுஷ்டிக்கப்பட்டது எவ்வாறு?
நபியவர்கள் வழமையாக ஒன்பதாம் தினமன்று மதீனாவில் நோன்பு நோற்பார்கள் அக்காலப்பகுதியில் ஒன்பதாம் தினமன்று அரபாவில் கூடும் வழமை காணப்படவில்லை. அவ்வாறிருக்க எவ்வாறு நாம் அரபாவின் ஒன்று கூடலை வைத்துத்தான் ஒன்பதாம் தின நோன்பை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லமுடியும்? நபித்தோழர்கள் பிறையை அடிப்படையாக வைத்துத்தான் ஒன்பதாம் தின நோன்பை தீர்மானித்தார்களே அன்றி அரபா ஒன்று கூடலை வைத்தல்ல.
3 - அரபாவில் ஒன்பதாம் தினமல்லாமல் வேறு தினமொன்றில் ஒன்று கூடும் வழமை ஜாஹிலியாக்காலம் தொட்டே காணப்பட்டது.
சில சகோதரர்கள் நாம் மேற்குறிப்பிட்ட இருவினாக்களையும் தொடுக்கும்போது 'அரபாவில் ஒன்று கூடி ஹஜ் கிரியைகளைச் செய்யும் வழமையே இஸ்லாம் மக்காவை வெற்றி கொண்ட பின்னர்தான் எனவே நபியவர்கள் அதற்கு முன்னர் மதீனாவின் பிறையை அடிப்படையாக வைத்தும் மக்காவை வெற்றி கொண்ட பின்னர் அரபாதின ஒன்று கூடலை வைத்தும் நோன்பைத் தீர்மானித்திருப்பார்கள்.' என பதிலளிக்கிறார்கள். இது இருவகையில் தவறாகும்-
எனது காணாமல் போன ஒரு ஒட்டகத்தை அரபாதினமன்று நான் தேடிச்சென்றேன். அச்சமயம் அரபாவில் நபியவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு மார்க்கத்தில் தீவிர உணர்வுடைய குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இவர் இங்கே எவ்வாறு? ஏன்று எனக்குள் கூறிக்கொண்டேன். அறிவிப்பவர்:- ஜுபைர் இப்னு முத்இம்
(ஆதாரம்:- புகாரி 1664)
இது நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்னர் நடந்த சம்பவமாகும். கஃபாவை ஹஜ்ஜு செய்யும் வழமை அரபிகளது தொன்று தொட்ட வழமையாகும். ஆனாலும் குறைஷிக் குலத்தவர்கள் அரபாவில் ஒன்று கூடவேண்டிய தினமன்று கஃபாவிலேயே இருப்பார்கள். அவர்கள் அரபாவிற்குச் செல்வது கஃபாவின் கண்ணியத்தை இழக்கச்செய்வது போன்றாகும் எனக்கருதினார்கள். அரபாவில் இருந்து அனைவரும் முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது குறைஷிகளும் அங்கு செல்வார்கள். ஆனால் ஏனைய கோத்திரத்தவர்கள் அரபாவிற்கு வந்தே முஸ்தலிபாவிற்குச் செல்வார்கள்.இதுவே ஜாஹிலீய வழமை. அதற்கு மாற்றமாக குறைஷி வம்சத்தைச் சேர்ந்த நபியவர்கள் அரபாவில் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டே ஜுபைர் இப்னு முத்இம் அவ்வாறு கூறுகிறார்.
(பத்ஹுல் பாரீ 3:603 604)
எனவே அரபாவில் ஒன்று கூடும் வழமை ஜாஹிலீய காலம் தொட்டே நடந்துவரும் ஒரு செயலாகும். இஸ்லாம் வந்த பின்னர் ஏற்பட்ட வழமையல்ல. இரண்டாவது:- ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு இதாப் என்ற நபித்தோழரும் 9 ஆம் ஆண்டு அபூபக்ரும் இன்னும் சில நபித்தோழர்களும் ஹஜ் செய்துள்ளார்கள். அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் 9 ஆம் தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னரே இவ்விருவரின் ஹஜ்ஜும் நிகழ்கிறது. ஆவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் 9 தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னருங் கூட நபியவர்கள் அரபா ஒன்று கூடலை கவனிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அபூ பக்ர் (ரழி) ஹஜ் செய்ய வந்தவுடன் செய்தியை மக்காவிற்கு அனுப்பியிருக்கலாமே என்று யூகிக்கவும் முடியாது.
ஏனெனில்:-
4 - அபூ பக்ர் (ரழி) அவர்களது ஹஜ் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.
ஜாஹிலீயாக்கால மக்கள் காலக்கணிப்பீட்டு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்திருந்தார்கள். இதனால் சந்திர மாதத்தின் ஒழுங்கும் தூய்மையும் குழைந்து போயிருந்தது. பருவமாற்றங்களுடன் ஒத்துவருவதற்காக 3 வருடங்களிற்கு ஒருமுறை 1 மாதத்தை அதிகரித்து கபீஸ் என்று பெயர் சூட்டிருந்தார்கள். மாதத்தைத் தீர்மானித்துச் சொல்லும் கலம்மஸ் என்று அழைக்கப்படக் கூடிய நபரின் மூலம் மாதங்களை உரிய இடத்தை விட்டும் பிற்படுத்தியும் முற்படுத்தியும் மாற்றம் செய்தார்கள். இறுதி உரையின் போதே நபியவர்கள இதனை சரி செய்தார்கள். இதனை எச்சரித்து சரியான காலக்கணிப்பு முறையை கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வசனமும் இறங்கியது. ஆகையால் அவ்விருவருடைய ஹஜ்ஜும் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.
(மஜ்முஃ பதாவா 25:14)
அபூ பக்ர் (ரழி) அவர்களுடைய ஹஜ் இத்திருத்தத்திற்கு முன் இடம்பெற்றதால் துல்கஃதாவிலே நடந்தது. நிலமை இவ்வாறிருக்க எவ்வாறு நபியவர்கள் அவர்களது ஒன்று கூடலை வைத்து அரபா நோன்பைத் தீர்மானித்ததாய்ச் சொல்ல முடியும்?
5 - சொந்த நாட்டில் எடுக்கப்படும் தீர்மானப்படியே துல் ஹிஜ்ஜா 9 ஆம் நாள் அரபாதின நோன்பு நோற்கப்படவேண்டும்.
இமாம் இப்னு தைமியாவின் வாதம்:-
ஒரு
பிரதேசத்தில் சிலர் துல் ஹிஜ்ஜா மாதப்பிறையைக் கண்டு அப்பிரதேசத்தில்
தீர்ப்பளிப்பளிப்பவரிடம் அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் வெளித்தோற்றத்தில்
9 ஆம் நாளாகவும் உண்மையிலே 10 ஆம் நாளாகவும் இருக்கக்கூடிய அந்நாளில்
நோன்பு நோற்கலாமா? (என்று இமாம் இப்னு தைமியா வினவப்பட்ட பொழுது இவ்வாறு
பதிலளித்தார்) ஆம் உண்மையில் அது 10 ஆம் நாளாக இருந்தாலுங்கூட
மக்களிடத்தில் 9 ஆம் நாள் என்று தீர்மானிக்கப்பட்ட நாளிலே அவர்கள் நோன்பு
நோற்கலாம்
(மஜ்முஃ பதாவா 25:202)
நாம் மேற்குறிப்பிட்டவையாகவும் 9 ஆம் தினம் எதுவோ அதைவைத்துத்தான் தீர்மானிக்கப்படவேண்டுமே தவிர அரபாவில் ஒன்று கூடுவதை வைத்தல்ல என்பதை விளக்குகின்றன. எனவே பிறநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கலாம் என்று சொல்லக்கூடிய சகோதரர்கள் துல்ஹிஜ்ஜா மாதத்து பிறைத் தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ளவேண்டும். சவூதியை மட்டும் அடிப்படையாக வைத்து அரபாவைத் தீர்மானிப்பது தவறாகும். பிறநாட்டு பிறைத்தகவலை ஏற்றுக்கொள்ளலாமா? அறிஞர்கள் இது பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்? போன்றவற்றை அறிய அது சம்பந்தமான எங்கள் வெளியீட்டைப் பார்வையிடவும்.
அல்லாஹ் நம்மனைவரதும் நல்லமல்களையும் ஏற்றுக்கொள்ளப்போதுமானவன்.
முதல் பத்தியில் இரண்டாம் வரியில் வேண்டும் என்பதறகு பதிலாக 'முடியும்'
வாசிக்கவும்.
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
On Nov 19, 1:58 am, AERO TRAVELS <eruv...@gmail.com> wrote:
> அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
>
> நாம் இஸ்லாமிய கொள்கைகளை சரியாக பின்பற்ற வேண்டுமானால் திருக்குர்ஆன் நபிவழியை
> ஆய்வு செய்தால் தான் அதை சரியாக பின்பற்ற வேண்டும். முன்சென்றவர்கள் ஆய்வு
> செய்து ஒரு முடிவை அறிவித்து விட்டு சென்றிருந்தாலும் நாம் அதே பிரச்சினை
> சந்திக்கும் போது அதைபற்றிய புதிய ஆய்வை துவங்கி அதில் வரும் முடிவைகளை வைத்தே
> மார்க்கத்தை பின்பற்றினால் அதிகமான கருத்து முரண்பாடுகளை தடுக்க முடியும் என
> நான் நம்புகிறேன்.
>
> மேலும் அரஃபா தினத்தை பற்றி அறிவதற்காக பல தேடுதல்களை நடத்திய போது கீழ்கண்ட
> கட்டுரை எனக்கு கிடைத்தது. அதையும் உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
> இப்படிக்கு
> சிராஜ் ஏர்வாடி
>
> அரபா நோன்பு
> Date Published: 2009-10-23 11:40:13 Link back URL :http://www.mujahidsrilanki.com/article-62496.php
>
> *"அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு என்று எந்தவொரு
> ஹதீஸும் கிடையாது."*
>
> வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும்
> ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரபாவில் ஹாஜிகள் ஒன்று
> கூடுவதை வைத்தே அரபா தின நோன்பை நோற்க வேண்டும் என்ற ஓர் இஸ்லாமிய அடிப்படையற்ற
> கருத்து நிலவி வருகிறது. இச்சிந்தனை காரணமாக தொலைக்காட்சியிலும் வானொலியிலும்
> அரபா மைதானத்தின் நடக்கின்ற வணக்கவழிபாடுகள் ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற போது
> தாங்கள் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியத்தை செய்தது போன்று நோன்பு
> நோற்காதவர்களும் சவூதிற்கு முன்னர் வேறு நாடுகளில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்டும்
> அதை ஏற்காமல் அரபா ஒன்று கூடலை மட்டுமே வைத்து துல்ஹிஜ்ஜாவை தீர்மானிக்கும்
> வெளிநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கக் கூடிய சகோதரர்களும் சங்கடப்படுகின்றனர்.
> உண்மையில் இது ஒரு நூதனமான சிந்தனையாகும். சில சகோதரர்கள் அவ்வாறு ஒரு ஹதீஸ்
> இருப்பதாகவும் கூறிவருகின்றனர். பின்வரும் விடயங்களைப் படிப்பவர்கள் உண்மை
> நிலையை அறிந்து கொள்வார்கள்.
>
> *1 - துல்ஹிஜ்ஜா மாதத்தில் வரும் உழ்ஹிய்யா பெருநாளை பத்து வருடங்களாக எவ்வாறு
> தீர்மானித்தார்கள்? *
>
> நபியவர்களும் தோழர்களும் மதீனாவில் பத்து வருடங்களாக உழ்ஹிய்யாப் பெருநாளை
> கொண்டாடியிருக்கிறார்கள். இஸ்லாமிய மாதம் ஒவ்வொன்றும் பிறை தென்பட்ட பின்னரே
> ஆரம்பிக்கப்படுவது போல் துல்ஹிஜ்ஜா மாதமும் அவ்வாறே ஆரம்பிக்கப்படுவது அனைவரும்
> அறிந்த விடயம். துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளிலேதான் உழ்ஹிய்யாப் பெருநாள்
> இடம்பெறும். அவ்வாறாயின் மதீனாவில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்ட மறுநாளே
> துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாள் ஆரம்பித்துவிடும் அதன் பத்தாவது நாள்
> பெருநாளென்று தீர்மானிக்கப்பட்டுவிடும். அதற்கு முந்திய நாள் நபித்தோழர்கள்
> நோன்பும் நோற்பார்கள். அந்த நோன்பும் அரபா ஒன்று கூடலும் ஒன்பதாம் நாளன்று
> வருவதால் அரபா தின நோன்பு என்று அழைக்கப்டுகிறது. அன்றைய தினம் பற்றி
> நபியவர்களோ நபித்தோழர்களோ அலட்டிக்கொள்ளவேயில்லை.
>
> *2 - அரபாவில் ஒன்பதாம் தினமன்று கூடும் வழமை வரும்முன்னிருந்தே ஒன்பது
> வருடங்களாய் மதீனாவில் அரபா தின நோன்பு அனுஷ்டிக்கப்பட்டது எவ்வாறு?*
>
> நபியவர்கள் வழமையாக ஒன்பதாம் தினமன்று மதீனாவில் நோன்பு நோற்பார்கள்
> அக்காலப்பகுதியில் ஒன்பதாம் தினமன்று அரபாவில் கூடும் வழமை காணப்படவில்லை.
> அவ்வாறிருக்க எவ்வாறு நாம் அரபாவின் ஒன்று கூடலை வைத்துத்தான் ஒன்பதாம் தின
> நோன்பை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லமுடியும்? நபித்தோழர்கள் பிறையை
> அடிப்படையாக வைத்துத்தான் ஒன்பதாம் தின நோன்பை தீர்மானித்தார்களே அன்றி அரபா
> ஒன்று கூடலை வைத்தல்ல.
>
> *3 - அரபாவில் ஒன்பதாம் தினமல்லாமல் வேறு தினமொன்றில் ஒன்று கூடும் வழமை
> ஜாஹிலியாக்காலம் தொட்டே காணப்பட்டது*.
>
> சில சகோதரர்கள் நாம் மேற்குறிப்பிட்ட இருவினாக்களையும் தொடுக்கும்போது
> 'அரபாவில் ஒன்று கூடி ஹஜ் கிரியைகளைச் செய்யும் வழமையே இஸ்லாம் மக்காவை வெற்றி
> கொண்ட பின்னர்தான் எனவே நபியவர்கள் அதற்கு முன்னர் மதீனாவின் பிறையை
> அடிப்படையாக வைத்தும் மக்காவை வெற்றி கொண்ட பின்னர் அரபாதின ஒன்று கூடலை
> வைத்தும் நோன்பைத் தீர்மானித்திருப்பார்கள்.' என பதிலளிக்கிறார்கள். இது
> இருவகையில் தவறாகும்-
>
> *எனது காணாமல் போன ஒரு ஒட்டகத்தை அரபாதினமன்று நான் தேடிச்சென்றேன். அச்சமயம்
> அரபாவில் நபியவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு மார்க்கத்தில் தீவிர உணர்வுடைய
> குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இவர் இங்கே எவ்வாறு? ஏன்று எனக்குள்
> கூறிக்கொண்டேன். அறிவிப்பவர்:- ஜுபைர் இப்னு முத்இம் *
>
> *(ஆதாரம்:- புகாரி 1664)*
>
> இது நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்னர் நடந்த சம்பவமாகும். கஃபாவை ஹஜ்ஜு
> செய்யும் வழமை அரபிகளது தொன்று தொட்ட வழமையாகும். ஆனாலும் குறைஷிக்
> குலத்தவர்கள் அரபாவில் ஒன்று கூடவேண்டிய தினமன்று கஃபாவிலேயே இருப்பார்கள்.
> அவர்கள் அரபாவிற்குச் செல்வது கஃபாவின் கண்ணியத்தை இழக்கச்செய்வது போன்றாகும்
> எனக்கருதினார்கள். அரபாவில் இருந்து அனைவரும் முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது
> குறைஷிகளும் அங்கு செல்வார்கள். ஆனால் ஏனைய கோத்திரத்தவர்கள் அரபாவிற்கு வந்தே
> முஸ்தலிபாவிற்குச் செல்வார்கள்.இதுவே ஜாஹிலீய வழமை. அதற்கு மாற்றமாக குறைஷி
> வம்சத்தைச் சேர்ந்த நபியவர்கள் அரபாவில் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டே ஜுபைர்
> இப்னு முத்இம் அவ்வாறு கூறுகிறார்.
>
> (பத்ஹுல் பாரீ 3:603 604)
>
> எனவே அரபாவில் ஒன்று கூடும் வழமை ஜாஹிலீய காலம் தொட்டே நடந்துவரும் ஒரு
> செயலாகும். இஸ்லாம் வந்த பின்னர் ஏற்பட்ட வழமையல்ல. இரண்டாவது:- ஹிஜ்ரி 8 ஆம்
> ஆண்டு இதாப் என்ற நபித்தோழரும் 9 ஆம் ஆண்டு அபூபக்ரும் இன்னும் சில
> நபித்தோழர்களும் ஹஜ் செய்துள்ளார்கள். அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும்
> நபியவர்கள் 9 ஆம் தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னரே
> இவ்விருவரின் ஹஜ்ஜும் நிகழ்கிறது. ஆவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும்
> நபியவர்கள் 9 தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னருங் கூட
> நபியவர்கள் அரபா ஒன்று கூடலை கவனிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அபூ
> பக்ர் (ரழி) ஹஜ் செய்ய வந்தவுடன் செய்தியை மக்காவிற்கு அனுப்பியிருக்கலாமே
> என்று யூகிக்கவும் முடியாது.
>
> ஏனெனில்:-
>
> *4 - அபூ பக்ர் (ரழி) அவர்களது ஹஜ் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது. *
>
> ஜாஹிலீயாக்கால மக்கள் காலக்கணிப்பீட்டு முறையில் பல்வேறு மாற்றங்கள்
> செய்திருந்தார்கள். இதனால் சந்திர மாதத்தின் ஒழுங்கும் தூய்மையும் குழைந்து
> போயிருந்தது. பருவமாற்றங்களுடன் ஒத்துவருவதற்காக 3 வருடங்களிற்கு ஒருமுறை 1
> மாதத்தை அதிகரித்து கபீஸ் என்று பெயர் சூட்டிருந்தார்கள். மாதத்தைத்
> தீர்மானித்துச் சொல்லும் கலம்மஸ் என்று அழைக்கப்படக் கூடிய நபரின் மூலம்
> மாதங்களை உரிய இடத்தை விட்டும் பிற்படுத்தியும் முற்படுத்தியும் மாற்றம்
> செய்தார்கள். இறுதி உரையின் போதே நபியவர்கள இதனை சரி செய்தார்கள். இதனை
> எச்சரித்து சரியான காலக்கணிப்பு முறையை கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வசனமும்
> இறங்கியது. ஆகையால் அவ்விருவருடைய ஹஜ்ஜும் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.
>
> (மஜ்முஃ பதாவா 25:14)
>
> அபூ பக்ர் (ரழி) அவர்களுடைய ஹஜ் இத்திருத்தத்திற்கு முன் இடம்பெற்றதால்
> துல்கஃதாவிலே நடந்தது. நிலமை இவ்வாறிருக்க எவ்வாறு நபியவர்கள் அவர்களது ஒன்று
> கூடலை வைத்து அரபா நோன்பைத் தீர்மானித்ததாய்ச் சொல்ல முடியும்?
>
> *5 - சொந்த நாட்டில் எடுக்கப்படும் தீர்மானப்படியே துல் ஹிஜ்ஜா 9 ஆம் நாள்
> அரபாதின நோன்பு நோற்கப்படவேண்டும்*.
>
> இமாம் இப்னு தைமியாவின் வாதம்:-
> ஒரு பிரதேசத்தில் சிலர் துல் ஹிஜ்ஜா மாதப்பிறையைக் கண்டு அப்பிரதேசத்தில்
> தீர்ப்பளிப்பளிப்பவரிடம் அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் வெளித்தோற்றத்தில் 9
> ஆம் நாளாகவும் உண்மையிலே 10 ஆம் நாளாகவும் இருக்கக்கூடிய அந்நாளில் நோன்பு
> நோற்கலாமா? (என்று இமாம் இப்னு தைமியா வினவப்பட்ட பொழுது இவ்வாறு பதிலளித்தார்)
> ஆம் உண்மையில் அது 10 ஆம் நாளாக இருந்தாலுங்கூட மக்களிடத்தில் 9 ஆம் நாள் என்று
> தீர்மானிக்கப்பட்ட நாளிலே அவர்கள் நோன்பு நோற்கலாம்
>
> (மஜ்முஃ பதாவா 25:202)
>
> நாம் மேற்குறிப்பிட்டவையாகவும் 9 ஆம் தினம் எதுவோ அதைவைத்துத்தான்
> தீர்மானிக்கப்படவேண்டுமே தவிர அரபாவில் ஒன்று கூடுவதை வைத்தல்ல என்பதை
> விளக்குகின்றன. எனவே பிறநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கலாம் என்று சொல்லக்கூடிய
> சகோதரர்கள் துல்ஹிஜ்ஜா மாதத்து பிறைத் தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்
> கொள்ளவேண்டும். சவூதியை மட்டும் அடிப்படையாக வைத்து அரபாவைத் தீர்மானிப்பது
> தவறாகும். பிறநாட்டு பிறைத்தகவலை ஏற்றுக்கொள்ளலாமா? அறிஞர்கள் இது பற்றி என்ன
> சொல்லியிருக்கிறார்கள்? போன்றவற்றை அறிய அது சம்பந்தமான எங்கள் வெளியீட்டைப்
> பார்வையிடவும்.
>
> அல்லாஹ் நம்மனைவரதும் நல்லமல்களையும் ஏற்றுக்கொள்ளப்போதுமானவன்.
>
> 2009/11/13 AERO TRAVELS <eruv...@gmail.com>> அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்
> > 2009/11/12 நமக்குள் இஸ்லாம் <togee...@gmail.com>
>
> > ஸலாம்
>
> >> (குறிப்பு:- அரபாதினம் பற்றிய பதிவு இரு பதிவுகளாக வருகின்றது. கட்டாயம் இது
> >> தவிர்க்கப்பட வேண்டும். ஒரே இழையில் பதிவுகள் வந்தால் தான் கருத்துக்களை
> >> ஒருங்கிணைக்க முடியும். எனவே தனி பதிவாக வந்துள்ள சகோதரர் ஹாஜா மைதீன்
> >> (இப்னு அஷ்ரஃப்) hajamydh...@gmail.com பதிவை இந்த பதிவின் கீழ் கொண்டு
> >> சகோதரர் Mafahir Moulana <mafa...@hotmail.com> அவர்களின் கவனத்திற்கு.
>
> >> நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் நேர வித்தியாசங்களை மட்டுமே அடிப்படையாகக்
> >> கொண்டதாகும். ஹதீஸ் வாசகங்களை ஊன்றி கவனித்து சிந்தித்தால்
> >> இவற்றிர்க்கெல்லலாம் பதில் கிடைத்து விடும்.
>
> >> "அரபா தினத்தில் நோன்பு" என்ற ஆதாரம் மட்டும் இருந்தால் தான் உங்கள்
> >> சந்தேகங்கள் நியாயமாகும். அரபாதினத்தில் நோன்பு என்று ஆதாரம் கிடைப்பது
> >> போன்றே அரபாதினத்தின் அளவு என்னவென்பதை தீர்மானிக்கும் ஆதாரமும் கிடைக்கின்றன
> >> அதுதான் பிறை 9ல் நோன்பு என்ற ஆதாரம்.
>
> >> பிறை ஒன்பது என்பது 24 மணி நேரத்தை - இன்று மஃரிபு முதல் மறுநாள் மஃரிபு வரை
> >> - உள்ளடக்கியதாகும். அரபாதினத்திற்கு விளக்கமாக வரும் பிறை ஒன்பது என்ற
> >> ஆதாரத்தை நாம் எடுத்துக் கொண்டால் ஹஜ் செய்வோர் அரபா மைதானத்திற்கு செல்லும்
> >> முன்பும் பிறை 9 அடைபவர்கள் நோன்பைத் துவங்கி விடலாம். ஹஜ் செய்வோர் அரபா
> >> மைதானத்தில் இறுதி நேரத்தில் இருக்கும் போது பிறை 9ன் துவக்க நேரத்தை
> >> அடைபவர்களும் நோன்பைத் துவங்கி விடலாம்.
>
> >> கவனிக்கவும் அரபாதினத்தில் நோன்பு என்று விளக்கிய நபி(ஸல்) அதை முழுமையாக
> >> புரிந்துக் கொள்ளும் விதமாக பிறை 9ல் நோன்பும் என்று விளக்கியுள்ளார்கள்.
> >> இரண்டையும் இணைத்து சிந்தியுங்கள். அரபா நோன்பு 24 மணி நேரத்தில் உலகம்
> >> முழுவதும் கிடைத்து விடும்.
>
> >> பிறையைப் புரிந்துக் கொள்ளும் அறிவாற்றலை இறைவன் நமக்கு கொடுப்பானாக...
>
> >> --
> >> *ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
> >> *
> >>http://tamilmuslimgroup.blogspot.com
>
> >> தமிழ் யுனிகோட் டவுன்லோட்
>
> >>http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe
>
> >> --
> >> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
> >> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
> >> To unsubscribe from this group, send email to
> >> fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>
--
SALAAM,,,,,,,,,,,
உங்கள் http://lunarcalendar.in/?p=555 இல் உள்ள விளக்கம் குழப்பம்.....இப்படி யோசியுங்கள்.... தூதர் அவர்கள் அன்று , பிறை பார்த்துதான் மாதத்தை அறிந்தார்கள். எனவே , துல்ஹாஜ் ஒன்பது அரபா நாள் என்று அறிவித்து , தூரத்தில் இருந்தாலும் , அந்த ஒன்பது பிரைப்படிதான் அன்று நோன்பு நோற்றார்கள்.......... அதே நேரம்.. அந்த காலத் தில் சரியாக அரபா அன்று எல்லா தேசங்களிலும் உள்ளவர்கள் ஒரே நாளில் நோன்பு நோற்று இருக்க வாய்ப்பே இல்லை....... ஏனெனில் பிறை பார்த்து மட்டுமே மாதத்தை அன்று தீர்மானித்தார்கள்... அதனால், அரபா நாளில் உள்ளபோதும் அது தெளிவாக தெரிந்த மக்க வில் நோன்பு பிடித்து இருப்பார்கள்....பல நூறு மைல்குல்ல்கு அப்பால் இருந்தவர்கள், அரபா நாளுக்கு அடுத்த நாளும் , அவர்களுக்கு அது பிறை ஒன்பது ஆக இருந்து, அன்றே நோன்பு பிடித்து இருப்பார்கள்...
தூதர் , அவர்களுக்கு நிச்சயமா தெரிந்திருக்கும் , அன்று அரபா ஒரே நாளில் எல்லோருக்கும் வராது என்று..... எனவே அவர்கள் , பிறை பாக்கும் அடிப்படையில் , பிறை ஒன்பதை , அரபா நோன்புக்காக நிர்ணயித்து சொல்லி உள்ளார்கள் என்று நன்கு சிந்திக்கும் பொது விளங்குகிறது...... பிறை ஒன்பது தான் ,நோன்பு எனில் , அரபா நாள் என்பதை , இதனுடன் இணைத்து சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை...
பொதுவாக துல்ஹாஜ் பிறை ஒன்பது அன்று நோன்பு பிடிக்குமாறு அறிவுறுத்தி இருப்பார்கள்......
எனவே, அரபா நோன்பு , அரபா நாளில் பிடிக்க வேண்டியது...... மாறாக , பிறை ஒன்பதில் அல்ல .......... ஆனால் இன்று , சவுதி சரியான கணிப்பீட்டுக்கு இன்னும் வராததால் , நாம் பிறை ஒன்பதில் பிடிக்காது , அரபா நாளில்தான் நோன்பு பிடிக்க வேண்டும்...... இது நாம் சாதியை பின்பற்றுவது ஆகாது.........மாற்றமாக சுன்னாஹ் வை பின்பற்றுகிறோம்..
த்து
.
ஜஸாக்கல்லாஹ் உங்கள் பதிரலுக்கு
நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.
Ibnu Hassan கூறியது:"இறைவன் உங்களை மன்னிப்பானாக........ உங்கள் அறிவு , என் அறிவு மற்ற மனிதர்களின் அறிவு கூறுவது மட்டும் ஒரு போதும் மார்க்கமாக ஆகாது. மாறாக, quran , saheeh hadees கூறுவது மட்டுமே முஸ்லிம்களுக்கு மார்க்கம்"
அறிவும் வாதமும் இருந்துள்ளது புலப்படுகின்றதல்லவா? ஆனால் நீங்கள் கூறுகின்றீர்கள் அப்படி இருந்திருக்கவில்லை என்று. அப்படி அடித்து கூறுவதானால் நான் முன்வைத்த ஹதீதின் விளக்கம் என்ன? தயவு செய்து விளக்கவும்.
Saleem Bushra பதிலில்:
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் இப்போது நீங்கள் சொல்லுவது எனக்கு சரியாக தோன்றவில்லை.
நீங்கள் இனி ஒட்டகம், மற்ற கால் நடைகளில் பயணம் செய்விர்களா அப்படி செய்வதால் இருந்தால் உங்கள் கருத்தகள் சரி, அடுத்து நீனகள் இனி கணணி பயன்படுதர்கள்.இதற்கு எல்லாம் அறிவியல் வேண்டும் ,அனால் பிறை விசத்தில் மட்டும் விஞானம் வேண்டாம்.
தொடரும......
இப்படிக்கு
அன்ப்பு உள்ள
சலீம்
'நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் நோன்பு, நீங்கள் நோன்பை விடும் நாளில் தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும் நாள் தான் ஹஜ்ஜிப் பெருநாள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள்- திர்மிதீ 633. அபூதாவூத்)
இதே அறிவிப்பு ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் திர்மிதீ 731 நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன!
**********************
//சகோதரரே! கடந்த Jummah (சிறீ லங்கா தவ்ஹீத் Jamath SLTJ ) பயானில் இப்படி ஒரு ஹதீதை கூறினார்கள் :" ஆயிஷா அம்மையார் அரபா நோன்பு நோற்றிருக்கும் நிலையில் ஒரு ஸஹாபி நோன்பு நோற்காமரல் இருப்பதை கிண'டலாக பரிகசிக்க அதற்கு அந்ந ஸஹாபி நான் நோன்பு நோற்காமலிருப்பதற்குக் காரணம் இன்று மக்காவில் பெருநாளாக இருக்குமோ என்று அஞ்சியே நான் நோன்பு நோற்கவில்லை என்று கூற அதற்கு ஆயிஷா அம்மையார் மக்கள் எப்போது நோன்பு என்று தீர்மாணிக்கின்றனரோ அன்றுதான் நோன்பு, மக்கள் எப்போது பெருநாள் என்று தீர்மாணிக்கின்றனரோ அன்றுதான் பெருநாள், இவ்வாறுதான் ரசூலுல்லாஹ் கற்றுத்தந்துல்லார்கள்"என்று கூறியாக பயானில் கூறினார்கள். கூறப்பட்டது தவ்ஹீத் மிம்பர் மேடையில். ஆகவே ஆதாரப்பூர்வமான ஹதீதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.// - சகோதரர் Mafahir Moulana.
அன்புச் சகோதரர் Mafahir Moulana அவர்களுக்கு,
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேல்கண்ட இரு அறிவிப்புகளிலும் நீங்கள் விளக்கியதுபோல் இல்லை! மேலும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நபித்தோழரை ''கிண்டலடித்துப் பரிகசித்தார்கள்'' என்பது நெருடலாக உள்ளது. எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிவிப்பை ஆதாரத்துடன் இங்கு பதிவு செய்யுங்கள் தெரிந்து கொள்வோம்.