அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்( 22.78)

447 views
Skip to first unread message

Mohamed Rafik

unread,
Jun 27, 2010, 10:47:49 AM6/27/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் அஜ்மல் அவர்கள் சொல்வது நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்திற்கு  அனைத்திலும் இட ஒதிக்கீடு தேவை 
என்ற கருத்திற்காக மாநாடு அழைப்பு சொல்கிறார் இதில் என்ன தவறு உள்ளது . இஸ்லாமிய மக்களுக்கு போராடுவது  
தவறா. எதில் என்ன குறை கண்டு விட்டீர்கள் விளக்கம் தரவும் .

முஹம்மத் ரபிக் 
சவுதி அரேபியா .

muslim

unread,
Jun 27, 2010, 11:15:38 PM6/27/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்

இயக்கம் சார்ந்த, இயக்கம் சாராத, இன்னும் இயக்க அனுதாபிகள் என பலர் இக்குழுமத்தில் உறுப்பினராக உள்ளனர். இயக்கம் சாரா இக்குழுமத்தை இயக்க விளம்பரத்துக்கு பயன்படுத்துவது கலகத்தை ஏற்படுத்திவிடும். எனவே இயக்க விளம்பரத்தை குழுமத்தில் அனுமதிக்க முடியாது!

இட ஒதுக்கீடு கேட்டு //இஸ்லாமிய மக்களுக்கு போராடுவது தவறா// எனக் கேட்டிருப்பது வெறும் சப்பைக் கட்டு. ஏனெனில், எல்லா இயக்கங்களும் ''முஸ்லிம் மக்களுக்காகவேப் போராடுகிறோம்'' என்றே மக்களிடையே அறிவிக்கின்றன.

எனவே, உறுப்பினர்கள் குழுமக் கட்டுப்பாடு கருதி இயக்கம் சார்பாக நடைபெறும் பேரணி, மாநாடு, போராட்டம், முற்றுகை போன்ற இயக்க விளம்பரப் பதிவுகளை தவிர்க்கவும். 


2010/6/27 Mohamed Rafik <mhmd...@gmail.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

Roshan Rosheen

unread,
Jun 28, 2010, 12:22:39 AM6/28/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் சஹோதரரே
உங்கள் கேள்வி நியாயமானதே.  இங்கு எந்த பிரசாரமும் இயக்க பிரிவாக இருந்தே செயல் படுகிறார்கள் பிரிந்திருந்து செயல்படுவதே மார்கத்தில் ஹராமாக்க பட்டுள்ளது .அதில் செய்யக்கூடிய நன்மையான விடயங்களில் கலந்து கொள்வது நன்மையானதே இந்த உரிமை போராட்டத்தை எதிர்பவர்கள் இயக்க வெறியர்களே.  


From: Mohamed Rafik <mhmd...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Sun, June 27, 2010 8:17:49 PM
Subject: அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்( 22.78)
--

Khaja Fakrudeen

unread,
Jun 28, 2010, 2:25:08 AM6/28/10
to fro...@googlegroups.com
ஸலாம்,
 
//பிரிந்திருந்து செயல்படுவதே மார்கத்தில் ஹராமாக்க பட்டுள்ளது//
 
என் வழி தனி வழி - தனித்தே செயல் படுவோம் என்று சொன்னது.
 
என் பள்ளி தனி பள்ளி - ஊருக்கு ஊர் தனிப்பள்ளி வாசல்(மர்கஸ்) ஏற்படுத்தியது.
 
பிரிந்து செயல்படுவது???????????????

Roshan Rosheen

unread,
Jun 28, 2010, 3:16:03 AM6/28/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும்
jaqh,tntj,tmmk,ahle hathees,jamaathul muslimeen,mujaahidheen போன்ற எல்லாமே பிரிவுகள்தான் இன்னும் இலங்கையிலும் தவ்ஹீத் ஜமாஅத் என்று ஏராளமாக பிரிந்துள்ளார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை தாக்குவதில் மன்னராக இருக்குறார்கள்.நீங்களும் அதே வகையை சார்ந்தவர் என்று உங்களுடைய எழுத்தின் மூலம் அறிய முடிகின்றதுஇந்த குழுமத்தில் இயக்க சார்பானவைகள் எழுத முடியாது  பொதுவாக நான் இங்கு என்னுடைய கருத்தை பதிக்கிறேன்.குரான் ஹதீஸ் ஒளியில் இந்த இயக்கங்களோடு சேர்ந்து மார்க்க  பிரசாரம் செய்யலாமா?       



From: Khaja Fakrudeen <mikf...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Mon, June 28, 2010 11:55:08 AM
Subject: Re: அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்( 22.78)
--

Khaja Fakrudeen

unread,
Jun 28, 2010, 3:33:17 AM6/28/10
to fro...@googlegroups.com
அலைக்கும் ஸலாம்(வரஹ்...)
 
     சகோதரரே நீங்கள் குறிபிட்டுள்ள அனைத்து இயக்கங்களும் நம் சகோதரத்துவத்தை பிரிக்ககூடிய இயக்கங்களாகவே இருக்கின்றன.  ஒன்று சேர்பதற்க்கு எந்த இயக்கமும் முவருவதில்லை.  நம் சமுதாயம் ஒன்று சேர முடியாமல் பிரிந்து கிடக்கின்றதே என்ற வேதனையில் தான் அவ்வாறு எழுதினேன்.  தவறு இருப்பின் அல்லாஹ்விற்க்காக பொருத்துக்கொள்ளவும்.

2010/6/28 Roshan Rosheen <roshan...@yahoo.com>

Mohamed Rafik

unread,
Jun 28, 2010, 3:43:45 AM6/28/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் 

சகோதரர் ROSHAN ROSHEEN அவர்களுக்கு உங்கள் கருத்தை குரான் கதீஸ் சொலவதில் பதியுங்கள் அடுத்தவரை குறை கூறுவதில் பதியாதிர்கள் . அடுத்தவரை குறை கூறி கொண்டு கருத்தை பதிபவர் நீங்கள் தான். பிரிவினை என்ற இயக்கத்தை சார்ந்தவர்  நீங்கள் தான்.
நான் இந்த இயக்கத்தை சார்ந்தவன்  என்று எப்பொழுது சொன்னேன். என் எழுத்தின் மூலம் 
எப்படி புரிந்து கொண்டீர்கள் .அப்படி புரிந்து கொள்ள உங்களுக்கு அதித சக்தி உள்ளதா?. குறை சொல்வதில் நீங்கள் தான் மன்னராக உள்ளீர்கள் . உங்களால் முடிந்தால் இக்காலத்திற்கு தகுந்த வாறு எப்படி போராட வேண்டும் என்று குரான் ஹதீஸ் அடிப் படையில் சொல்லுங்கள். 

Roshan Rosheen

unread,
Jun 28, 2010, 3:52:24 AM6/28/10
to fro...@googlegroups.com
  அஸ்ஸலாமு அழைக்கும 
சஹோதரரே பிரிந்து இருக்கக்கூடிய  இந்த இயக்கங்கள் ஒன்றும்   மக்கு சாம்புரானிகள் கிடையாது நன்றாக மார்கத்தை படித்தவர்கள் யாரும் வந்து இவர்களுக்கு ஒற்றுமை படுங்கள் என்று சொல்லத்தேவை இல்லை. இதுதான் சத்தியம் என்று தெரிந்த பின்னாலும் தங்களுக்குள் பிரிந்து போனவர்கள் இவர்கள் அதேபோன்று இவர்களை பற்றிதான் ஹதீஸில் நபிசள்ளல்லாஹு அலைஹிவசள்ளம் சொன்னார்கள் நரக வாயில்களில்நின்று அழைக்கக்கூடிய அழைப்பாளர்கள் என்று.  சஹோதர காஜாபாக்ருத்தீன்  அவர்களே இந்த நரக அழைப்பாளர்கள் பற்றி நபியவர்களின் கட்டளை மிக தெளிவானதே தயவு செய்து அவர்கள் அனைவரைவிட்டு ஒதுங்குங்கள் அவர்கள் அனைவரையும் ஒன்ராக்குவதட்கு இன்னொரு இயக்கத்தை உருவாகிவிடாதீர்கள் அது வீண்வேலையே  


From: Khaja Fakrudeen <mikf...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Mon, June 28, 2010 1:03:17 PM

Roshan Rosheen

unread,
Jun 28, 2010, 4:10:32 AM6/28/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் 
சஹோதரரே நான் உங்களை எதுவும் சொல்லவில்லை ஏன் கொபபடுகிரீர்கள் நான் இயக்க பிரிவுகள் சம்பந்தமாகவே கூறியுள்ளேன் நீங்கள் அந்த பிரிவை சர்ர்ந்தவர் என்று எங்கே சொல்லியுள்ளேன்.அன்புள்ள சஹோதரரே இந்த போராட்டம்  முஸ்லிம்களுடைய உரிமைக்காக போராட்டம் என்றே  நான் கருதுகிறேன் இதனால் முஸ்லிம்கள் ஒருநாள் பயன் அடைவார்கள் இதை ஏற்பாடு செய்துள்ள இயக்கத்தின் பெயர் வளர்ந்தாலும் வளராவிட்டாலும் சரியே இதை எதிர்பவர்கள் இயக்க வெறியர்களே  என்று நான் ஆரம்பத்தில் கூறியுள்ளேன்.அதில் நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள் அந்த இயக்கத்தை சேர்ந்துவிடாதீர்கள்.இதில் பிழை இருந்தால் அன்பாய் சுட்டிகாட்டவும்        


From: Mohamed Rafik <mhmd...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Mon, June 28, 2010 1:13:45 PM
Subject: அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்( 22.78)
--

Khaja Fakrudeen

unread,
Jun 28, 2010, 4:28:13 AM6/28/10
to fro...@googlegroups.com
அலைக்கும் ஸலாம்(வரஹ்...)
 
       சகோதரரே, மக்கு சாம்புரானிகள் பிரிந்து கிடந்தால் மன வேதனைக்கு வேலையே இல்லையே. நன்றாக மார்கத்தை படித்தவர்கள் பிரிந்து கிடப்பதல்தானே மன வேதனை. இன்ஷா அல்லாஹ் நான் அனைத்து இயக்கங்களையும் விட்டு விலகியே இருப்பேன். ஒன்று சேரும் வரை. இருக்கின்ற இயக்கங்களை என்னுவதற்க்கே முடியவில்லை இதில் நான் வேறு ஒரு இயக்கத்தை???
 பயப்பட வேண்டாம்.

ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)

unread,
Jun 28, 2010, 7:08:52 AM6/28/10
to fro...@googlegroups.com
பிரிவினை எப்போது ஆரம்பம் ஆனது?

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

நாம் எல்லாம் இப்போது தான் சமுதாயம் பிளவு பட்டு கிடக்கின்றது என்று நினைத்துக் கொண்டோம்.

எப்போது பிரிவினை உண்டானது, எப்போது மத்ஹப்கள் தோன்றியதோ, அப்போதே பிரிவினை உண்டாகி விட்டது. அவர்கள் (மத்ஹப்களை) மக்களை கொள்கையின் பக்கம் தான் பிரித்தார்கள், அடித்துக் கொள்வது போன்று பிரிவினையை உண்டாக்கவில்லை என்று யாரும் கூறினால் அது அவர்களுடைய அறியாமை. 


முஸ்லீம்களில் சியா, சன்னி முஸ்லீம்கள், காதியானி முஸ்லீம்கள், தப்லீக் ஜமாத், மத்ஹப்களால் பிரிந்தவர்கள், வகாபிகள், ஸலபிகள், தரீக்காவாதிகள், முரீது வாங்குபவர்கள், தர்காவாதிகள், தவ்ஹீதுவாதிகள் (அவர்களின் பிரிவினைகள்). இதில் இறுதியில் சொல்லப்பட்டவர்களால் தான் சமுதாயம் பிரிந்துவிட்டது என்று மட்டும் சொல்வது எந்த விதத்தில் நியாயம். பல ஆண்டுகளுக்கு முன் தென் மாவட்டங்களில் ஒரு ஊரில் (அந்த பெயர் ஊரின் கண்ணியம் கருதி குறிப்பிடவில்லை) இரண்டு மத்ஹப்களை சேர்ந்தவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குள் பெண் கொடுத்து எடுத்துக் கொள்ள மாட்டார்கள், வீடு கட்டினாலும் அவரவர் பகுதியில் திருமணம் செய்து கொள்வார்கள். சில நேரங்களில் சண்டைகள் வந்ததும் உண்டு, அப்போதெல்லாம் இந்த ஒற்றுமைக்கு குரல் கொடுக்கும் அன்பர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை. இன்றும் எத்தனையோ ஊர்களில் முஸ்லீம்களுக்கும் பல்வேறு காரணங்களுக்காக (மார்க்க சட்டத்திற்காக அல்ல) சண்டைகள் வந்து கொண்டிருகின்றது. அதற்கெல்லாம் என்ன தீர்வு.  

நான் எந்த இயக்கத்தையும் சாராதவன். இருந்தாலும் சரியான கண்ண்ணொட்டத்தில் இருந்து பார்த்தால், சிலர் ஊருக்கு ஊர் தனி பள்ளிவாசல் கட்டுகிறார்கள், தனி மையவாடி, தனி ஜமாத் என்று பிரிந்து விட்டார்கள் என்று சொல்லும் சிலர், அவர்கள் பிரிவதற்கு ஒட்டு மொத்த சமுதாயமும் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தவ்ஹீத் (தவ்ஹீத் ஜமாத் அல்ல) என்ற காரணத்திற்காக பள்ளியில் தொழ அனுமதி மறுப்பு, தொழுகையில் இடையூறு செய்தல், மையவாடியில் அடக்க இடம் தர மறுப்பு, தவ்ஹீத் என்ற காரணத்திற்காக பல ஊர்களில் பல வருடங்களாக இழுத்தடிக்கப்படும் வழக்குகள், ஊர் விலக்கு, திருமணத்திற்கு ஓலை (அனுமதி கடிதம்) மறுப்பு, நிக்காஹ் புத்தகம் வழங்க மறுப்பு என்று பிரிவினையை ஆரம்பித்தவர்கள் யார்? அவனுக்கு (தவ்ஹீதுவாதிக்கு) பள்ளியில் தொழ இடம் தரவில்லை என்றால் அவன் தனியாகத்தான் தொழுவான், அவனுக்கு மையவாடியில் இடம் தரவில்லை என்று சொன்னால் அவன் சொந்த மையவாடி கட்டிக் கொள்வான், அவனுக்கு திருமண அனுமதி கடிதம் மறுக்கப்பட்டால் அவன் தனியாக திருமண புத்தகம் அச்சடித்து திருமணம் செய்து கொள்வான், அவனை அடித்தால் கோர்டுக்கு செல்லத்தான் செய்வான், இதெல்லாம் செய்யாமல் ஊர் முன்னர் போய் நின்று ஒற்றுமையை வேண்டி எனக்கு ஊரின் மூலம் பள்ளியின் மூலம் திருமண அனுமதி கடிதம் வேண்டும் என்று ஒரு தவ்ஹீதுவாதி கேட்டால், அவன் திருமணத்திற்கு செலவாகும் தொகையையே அபராதமாக கேட்பது, மையவாடியில் அடக்கம் செய்ய ஒரு தொகை, பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சில நேரங்களில் கணக்கில் காட்டாத தொகை, (இதற்கு ஆதாரம் கேட்டால் ஊர் பெயர் முதற்கொண்டு வெளியிடுவோம்) என்று ஊர் சென்று கொண்டிருந்தால் தனியாக ஒரு ஜமாத் வைப்பது என்று முடிவு எடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும். இதுவெல்லாம் பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் விஷயம். தற்போது இது பல ஊர்களில் இல்லை என்றாலும் இது பிரிவினைக்கு வித்தாக இது இருந்ததை யாரும் மறுக்க இயலாது.  

இஸ்லாத்தை முழுவதுமாக பின்பற்றுபவர்களுக்கு பள்ளியில் இடம் இல்லை, ஆனால் வட்டி வாங்குபவன், வட்டி கொடுப்பவன், விபச்சாரம் செய்பவன், விபச்சாரத்திற்கு துணை போகிறவன், திருடன், கொலை செய்கின்றவன், அடுத்தவர்கள் சொத்திற்கு ஆசைபடுகிறவன் என அனைவருக்கும் பள்ளியில் இடம் உண்டு. இது தான் நீங்கள் ஒற்றுமையை பேனும் முறையா? இப்படிபட்ட ஒற்றுமையை(?) மார்க்கம் சொல்லவில்லையே. ஏன் பல ஆண்டுகளாக செய்து வந்த பல காரியங்கள் இப்போது தவறு என்று உலக விஷயத்தில் சுட்டிக் காண்பித்தால் நீங்கள் திருத்திக் கொள்வீர்களா? அல்லது உனக்கு அது தெரியாது என்று கூறி அந்த தவறை செய்து கொண்டிருப்பீர்களா? உலக விஷயத்திற்கு ஒரு நியாயம், மார்க்க விஷயத்திற்கு ஒரு நியாயமா? 

மார்க்க விஷயத்தை ஒருவன் தக்க ஆதாரத்தோடு சொல்கிறான், அதை மறுப்பவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை மறுத்தவர்களாவார்கள், நபியுடைய வழிமுறையை மறுத்தவர்களாவார்கள். இது தெரிந்தும் ஒருவன் மறுத்தால் அது தன்னுடைய பதவிக்கு, கௌரவுத்தற்கு, இழுக்கு ஏர்படும் என்றே நினைத்து மறுத்தவர்கள்தான் இன்று ஊர் போற்றும் தலைவர்களா?

பல பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இஸ்லாத்தின் அடித்தளமான தொசுகையை கூட நிறைவேற்றுவதில்லை, ஆனால் தொழுகும் போது நெஞ்சில் கை கட்டினால், கையை அத்தஹியாத்தில் ஆட்டினால் அவனுக்கு தண்டனையை மட்டும் அளிப்பவர்கள் தான் இந்த நிர்வாகத்தினர். நான் எல்லோரையும் குறை கூறவில்லை. சிலர் இது போல் நடந்து வருகின்றனர். சிலருக்கு ஊர் ஜமாத் பொருப்பு கொடுத்தவுடன் ஏதோ பிரதமர் பதவி போன்று நினைத்து தான் நினைத்ததையெல்லாம் செய்து வருகின்றனர். 

ஒற்றுமைக்கு பங்கம் விளைத்தவர்கள் யார்? ஒற்றுமைக்கு பாடுபட்வர்கள் யார் என்பது புரியும்.


அன்புடன் 

அபு நிஹான்

2010/6/28 Khaja Fakrudeen <mikf...@gmail.com>



--
அன்புடன்

ஹாஜா மைதீன் அஷ்ரப் அலி
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)

unread,
Jun 28, 2010, 7:56:41 AM6/28/10
to fro...@googlegroups.com
சகோதர சகோதரிகளுக்கு,

பல பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இஸ்லாத்தின் அடித்தளமான தொசுகையை கூட நிறைவேற்றுவதில்லை

படிக்கும் போது தொழுகையை என்று திருத்தி வாசிக்கவும்.

நன்றி

அபு நிஹான்

2010/6/28 ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்) <hajam...@gmail.com>

Ajmal khan

unread,
Jun 28, 2010, 8:32:31 AM6/28/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
                                                       இயக்கம் நடத்த கூடிய போராட்டங்களில் இயக்கத்தில் இல்லாதவர்கள் கலந்து கொள்ள கூடாது என ஏதாவது தடை உள்ளதா?
 
இந்த குழுமத்தில் தாங்கள் குறிப்பிட்டது போல இயக்கம் சார்ந்த, இயக்கம் சாராத, இன்னும் இயக்க அனுதாபிகள் என பலர் இக்குழுமத்தில் உறுப்பினராக உள்ளனர். நீங்கள் ஜாக் அமைப்பின் அனுதாபியா அல்லது வேறு எதாவதா?
 
குழுமத்தின்  விதிகளுக்கு எதிராக  நான் ததஜ என்ற பெயரை எனது பதிவில் பயன்படுத்தினேனா என்பதை தெரியபடுத்தவும். என்னை அறிந்தவரை பயன்படுத்தவில்லை.
 
மேலும் எனது பதிவுகளை நேற்று முதல் மட்டுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறது என குறிப்பிட்டு இருந்தீர்கள். பிறகு எதற்கு என்னை குழுமத்தின் மாடரேட்டராக ஆக்கினீர்கள்.

இயக்கம் சார்ந்தவன் என்று நீக்கப்பட்ட  என்னை, அதே நாளில்  குழும மாடரேட்டராக நியமித்தது ஏன்?

இது தவறுதலாக நிகழ்ந்து விட்டது என்று சொல்லி விடுவதற்கும் வாய்ப்பு இல்லை.

எனவே என்னுடைய இந்த ஐடியையும் மட்டுறுத்தலுக்கு உட்படுத்தாமல் தெளிவான விளக்கம் தரவும்.

எனது kan...@gmail.com ஐடி மட்டுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு உள்ளது . ஆனால் இந்த  ajma...@gmail.com ஐடியை நான்  குழும மெயில்களை  சேமித்து வைபதற்காக  பயன்படுத்தி வந்தேன். தற்பொழுது இது  எனக்கு உபயோகபடுகிறது.

என்னை குழும மாடரேட்டராக அறிவித்ததற்கான   ஆதாரம் இணைக்கபட்டு உள்ளது.
fromgn-1.jpg
fromgn-2.jpg

Ajmal S

unread,
Jun 28, 2010, 8:11:00 AM6/28/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
                                                       இயக்கம் நடத்த கூடிய போராட்டங்களில் இயக்கத்தில் இல்லாதவர்கள் கலந்து கொள்ள கூடாது என ஏதாவது சட்டத்தை உங்களது அமீர், அதாவது சகோதரர் முஸ்லிம் அவர்களின் அமீர் கூறி  உள்ளாரா? ஏனெனில்  நீங்கள் எல்லாம் அமீரை பின்பற்ற கூடியவர்கள் தானே. அமீர் என்ன சொன்னாலும் கேட்க கூடியவர்கள் தானே
 
இந்த குழுமத்தில் தாங்கள் குறிப்பிட்டது போல இயக்கம் சார்ந்த, இயக்கம் சாராத, இன்னும் இயக்க அனுதாபிகள் என பலர் இக்குழுமத்தில் உறுப்பினராக உள்ளனர். நீங்கள் ஜாக் அமைப்பின் அனுதாபியா அல்லது வேறு எதாவதா?
 
குழுமத்தின்  விதிகளுக்கு எதிராக  நான் ததஜ என்ற பெயரை எனது பதிவில் பயன் படுத்தினேனா என்பதை தெரியபடுத்தவும். என்னை அறிந்தவரை பயன்படுத்தவில்லை.
 
மேலும் எனது பதிவுகளை நேற்று முதல் மட்டுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறது என குறிப்பிட்டு இருந்தீர்கள். பிறகு எதற்கு என்னை குழுமத்தின் மாடரேட்டராக ஆக்கினீர்கள்.
 
 
 
  
 
 
 
 

 

 


2010/6/28 muslim <tomu...@gmail.com>



--
Thanks & Regards,
 ..Ajmal...

muslim

unread,
Jun 28, 2010, 11:53:30 AM6/28/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்

அன்புச் சகோதரர் Ajmal S அவர்களுக்கு, உங்கள் மின்னஞ்சல் முகவரியை மட்டுறுத்தலுக்கு உட்படுத்தும்போது  கவனக்குறைவினால் மாடரேட்டரில் உங்கள் மின்னஞ்சல் சேர்க்கப்பட்டுவிட்டது. பின்னர் தவறு அறிந்து, நீக்கப்பட்டு மட்டுறுத்தப்பட்டது. இதற்கு உள் நோக்கம் எதுவுமில்லை! பிழைக்கு பொறுத்துக்கொள்ளவும்.



2010/6/28 Ajmal S <kan...@gmail.com>

Akbar Kareem

unread,
Jun 28, 2010, 12:33:11 PM6/28/10
to fro...@googlegroups.com
சலாம் !!!
"பிரிவினை எப்போது ஆரம்பம் ஆனது?"  - சகோ. அபு நிஹான் அவர்களின் விளக்கம் 100 க்கு 100  சரி.
.::Abdu A Kareem::.


Roshan Rosheen

unread,
Jun 29, 2010, 4:02:27 AM6/29/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்,
சஹோதரர் ஹாஜா மைதீன் அவர்களுக்கு நாங்கள் சொன்ன விடயங்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் உங்களுடைய ஆய்வை முன்வைத்துள்ளீர்கள் அதில் நீங்கள் மத்ஹபு வாதிகள்தான் முதலில் பிரிந்தார்கள் என்று சொல்லியுள்ளீர்கள் அதுவும் தவறே ஆரம்பமாக நபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் இருந்து பிரிந்தவர்கள் கவாரிஜ்களே அதற்கு பிறகு ஷீயா.... இன்னும் ஏராளமாக இந்த உம்மத்தில் பிரிந்து போனார்கள் இதை நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்.
   "யூதர்கள் 71 பிரிவாக பிரிந்தார்கள் அவற்றில் ஒன்று சுவர்க்கம் செல்லும் ஏனைய 70 ம் நரகம் செல்லும்.கிறிஸ்தவர்கள் 72 பிரிவாக பிரிந்தார்கள் அதில் ஒன்று சுவர்கள் செல்லும் 71 ம் நரகம் செல்லும்.எவனது கரத்தில் எனது ஆத்மா இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக எனது இந்த உம்மத் 73 ஆகப் பிரியும் அதில்   ஒன்று சுவர்க்கம் செல்லும் ஏனைய 72 ம் நரகம் செல்லும் என்று. நபி(ஸல்) சொன்னபோது சஹாபாக்கள் அந்த கூட்டம் எது எனக்கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் அல்ஜமா (கூட்டமைப்பு)என்று கூறினார்கள்.
                                                                                                                                                           ( இப்னு மாஜா,அஹாதீசு சஹீஹா)
சஹோதரர்   இந்த ஹதீஸை பாருங்கள் ஏற்கனவே பிரிந்து போன  யூத கிறிஸ்தவர்கள் பற்றி கூறிவிட்டு அதே போன்று என்னுடை இந்த களிமாசொன்ன உம்மத்தும் பிரிந்து போகும் என்று கூறுகிறார்கள்.70 ,71 ,72 பிரிவுகள் நரகம் செல்லும் என்று பிரிவுனுடைய  விபரீதத்தை இந்த ஹதீஸ் சுட்டி காட்டுகிறது சத்தியத்தில் இருப்பவருக்கு இருக்கவேண்டிய முதல் பண்பை இந்த ஹதீஸ் சுட்டி காட்டுகிறது இரண்டாவது சத்தியத்தில் இருப்பவருக்கு உள்ள பண்பு ஜமாத்தாக இருக்கவேண்டு என்பது .அதாவது
1 .பிரியக்கூடாது  
2 .கூட்டமைப்பாக இருப்பது 
இந்த இரண்டையும் இன்று இருக்ககூடிய நீங்களும் நானும் எவ்வாறு செயல்படுத்துவது ஆரம்பமாக தவ்ஹீத் ஜமாதுடைய வாதம் குரான் ஹதீஸை பற்றிகொல்லுங்கள் என்பதே தரீகா மத்ஹபுகள் மார்கத்தில் பிரிந்து போனவர்கள் அதனால் நாங்கள் அதில் இருந்து பிரியவேண்டும் என்று இருந்தது அப்பொழுது அதில் சத்தியம் இருந்தது மேல் குறிப்பிட்ட இந்த ஹதீஸை செயல் படித்தினோம் பிரிவுகளிலிருந்து பிரிந்தோம் ஜமாத்தாக இருந்தோம்இதுவே சுவனம் செல்வதற்கு மிக பெரிய அடையாளமாக இருந்தது இதே அடிப்படையோடு அன்று முதல் இன்று வரை இருந்திருப்பார்களானால் நிச்சயமாக அவர்களுடன் நாங்களும் இருந்திருப்போம்.எப்பொழுது சுவனம் செல்வதற்கு இருந்த இந்த இரண்டு பண்புகளையும் தூக்கி எரிந்தார்களோ அப்பொழுதே அதைவிட்டு வெளியேறினோம்.நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டீர்கள் தவ்ஹீத் ஜமாதா  முதலில் பிரிந்தார்கள் மத்ஹபு வாதிகள் தானே முதலில் பிரிந்தார்கள் என்று இதை நீங்கள் சொல்வதை இட்டு நான் வேட்கபடுகிறேன் சஹோதரரே இங்கு முதலில் பிரிந்தவர்கள் என்பது அல்ல பிரச்சினை இந்த சுன்னது ஜமாது தப்லீகுஜமாது  72 கூடத்தில் சேர்ந்தவர்கள்.  தவ்ஹீத் ஜமாதை பொறுத்தவரை குரான் ஹதீஸ் பின்பற்றப்படவேண்டும் என்று சொன்னவர்கள் அப்படிஎன்றால் ஏன் அந்த 72 கூடத்தை போன்று பிரிந்து சென்றாகள் இதை தான் நீங்கள் இன்று கவனிக்கவேண்டும் அதை விட்டுட்டு முதலில் பிரிந்தது நானா நீயா என்று அல்ல இதை நீங்கள் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள்.
 "நான் எந்த இயக்கத்தையும் சாராதவன். இருந்தாலும் சரியான கண்ண்ணொட்டத்தில் இருந்து பார்த்தால், சிலர் ஊருக்கு ஊர் தனி பள்ளிவாசல் கட்டுகிறார்கள், தனி மையவாடி, தனி ஜமாத் என்று பிரிந்து விட்டார்கள் என்று சொல்லும் சிலர், அவர்கள் பிரிவதற்கு ஒட்டு மொத்த சமுதாயமும் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்".
இந்த வாதத்தில் நியாயமில்லை ஏனென்றால் ஒரு தவறை யார் செய்கிறார்களோ அவர்தான் அதற்கு பொறுப்பு சும்மா எல்லாத்தயு சமுதாயத்தின் மேல் போடக்குடாது உங்களிடம் கேட்கின்றேன் முழு ஒற்றுமொத்த சமுதாயமும் சேர்ந்து தான் தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிச்சார்களா ?அவர்கள் மேல் குற்றம் போடுவதற்கு .
நீங்கள் எந்த இயக்கத்தையும் சேராததட்கு காரணம் என்ன?

 தவ்ஹீத் (தவ்ஹீத் ஜமாத் அல்ல) என்ற காரணத்திற்காக பள்ளியில் தொழ அனுமதி மறுப்பு, தொழுகையில் இடையூறு செய்தல், மையவாடியில் அடக்க இடம் தர மறுப்பு, தவ்ஹீத் என்ற காரணத்திற்காக பல ஊர்களில் பல வருடங்களாக இழுத்தடிக்கப்படும் வழக்குகள், ஊர் விலக்கு, திருமணத்திற்கு ஓலை (அனுமதி கடிதம்) மறுப்பு, நிக்காஹ் புத்தகம் வழங்க மறுப்பு என்று பிரிவினையை ஆரம்பித்தவர்கள் யார்? அவனுக்கு (தவ்ஹீதுவாதிக்கு) பள்ளியில் தொழ இடம் தரவில்லை என்றால் அவன் தனியாகத்தான் தொழுவான், அவனுக்கு மையவாடியில் இடம் தரவில்லை என்று சொன்னால் அவன் சொந்த மையவாடி கட்டிக் கொள்வான், அவனுக்கு திருமண அனுமதி கடிதம் மறுக்கப்பட்டால் அவன் தனியாக திருமண புத்தகம் அச்சடித்து திருமணம் செய்து கொள்வான், அவனை அடித்தால் கோர்டுக்கு செல்லத்தான் செய்வான், இதெல்லாம் செய்யாமல் ஊர் முன்னர் போய் நின்று ஒற்றுமையை வேண்டி எனக்கு ஊரின் மூலம் பள்ளியின் மூலம் திருமண அனுமதி கடிதம் வேண்டும் என்று ஒரு தவ்ஹீதுவாதி கேட்டால், அவன் திருமணத்திற்கு செலவாகும் தொகையையே அபராதமாக கேட்பது, மையவாடியில் அடக்கம் செய்ய ஒரு தொகை, பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சில நேரங்களில் கணக்கில் காட்டாத தொகை, (இதற்கு ஆதாரம் கேட்டால் ஊர் பெயர் முதற்கொண்டு வெளியிடுவோம்) என்று ஊர் சென்று கொண்டிருந்தால் தனியாக ஒரு ஜமாத் வைப்பது என்று முடிவு எடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும். இதுவெல்லாம் பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் விஷயம். தற்போது இது பல ஊர்களில் இல்லை என்றாலும் இது பிரிவினைக்கு வித்தாக இது இருந்ததை யாரும் மறுக்க இயலாது.  

இஸ்லாத்தை முழுவதுமாக பின்பற்றுபவர்களுக்கு பள்ளியில் இடம் இல்லை, ஆனால் வட்டி வாங்குபவன், வட்டி கொடுப்பவன், விபச்சாரம் செய்பவன், விபச்சாரத்திற்கு துணை போகிறவன், திருடன், கொலை செய்கின்றவன், அடுத்தவர்கள் சொத்திற்கு ஆசைபடுகிறவன் என அனைவருக்கும் பள்ளியில் இடம் உண்டு. இது தான் நீங்கள் ஒற்றுமையை பேனும் முறையா? இப்படிபட்ட ஒற்றுமையை(?) மார்க்கம் சொல்லவில்லையே. ஏன் பல ஆண்டுகளாக செய்து வந்த பல காரியங்கள் இப்போது தவறு என்று உலக விஷயத்தில் சுட்டிக் காண்பித்தால் நீங்கள் திருத்திக் கொள்வீர்களா? அல்லது உனக்கு அது தெரியாது என்று கூறி அந்த தவறை செய்து கொண்டிருப்பீர்களா? உலக விஷயத்திற்கு ஒரு நியாயம், மார்க்க விஷயத்திற்கு ஒரு நியாயமா? 
 
இது எல்லாம் சரிதான் சத்தியத்திற்கு அசத்தியத்திற்கும் ஒரு பிரிவினை இருந்து கொண்டுதான் இருக்கும் அசத்தியவாதிகள் பெரும்பான்மை என்றால் சத்தியத்திற்கு பெரும் சோதனை வரும் அந்த நேரத்தில் பொறுமை தேவை.ஆனால் இன்று தவ்ஹீத் ஜமாத்தின் நிலை என்ன இவர்கல்குல்லால்   அடித்தி கொள்கிறார்களா இல்லையா நீங்கள் மேலே சொல்லியுள்ள 72  கூடத்தின் அடையாளம் அனைத்தும் இன்று இந்த தவ்ஹீத் ஜமாத்திடம் இல்லையா?
ஹதீஸில் வந்துள்ளது ஒருமுஸ்லிமை ஏசுவது  பாவம் என்று ஆனால் இந்த தவ்ஹீத் ஜமாத்திடம் செவுடன் காதில்   ஊதும்   சங்காகவே இந்த ஹதீஸ் உள்ளது ஒவ்வொரு பயான்களிலும் அவன் இவன் என்று தரை குறைவாக இந்த தவ்ஹீத் பிரிவாரர்கள்  அடித்து கொள்வது உங்களுக்கு தெரியாதா?

 ஒற்றுமைக்கு பங்கம் விளைத்தவர்கள் யார்? ஒற்றுமைக்கு பாடுபட்வர்கள் யார் என்பது புரியும்.
இப்பொழுது ஒற்றுமை கோஷமிட்டவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பது உங்களுக்கு புரியும். 


From: ஹாஜா மைதீன் (இப்னு அஷ <hajam...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Mon, June 28, 2010 4:38:52 PM

ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)

unread,
Jun 29, 2010, 6:09:57 AM6/29/10
to fro...@googlegroups.com
சகோதரரே

நீங்கள் தவ்ஹீத் ஜமாத்தின் பிரிவினைகளை பற்றி கூறுயிருக்கிறீர்கள். நான் முஸ்லீம் சமுதாயத்தின் பிரிவினைகளை பற்றி கூறிக் கொண்டிருக்கிறேன். 

jaqh,tntj,tmmk,ahle hathees,jamaathul muslimeen,mujaahidheen போன்ற எல்லாமே பிரிவுகள்தான் 

நீங்கள் இவ்வாறு கூறியதால் தான் நான் பிரிவினையின் ஆரம்பம் பற்றி எழுதினேன். நீங்கள் எழுதியதில் தற்கால உள்ள பிரிவினைகள் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அதன் படி மேலோட்டமாக பார்த்தால், இதற்கு முன்னர் பிரிவினைகளே இல்லாதிருத்தல் போலும், இப்போது மட்டும் பிரிவினைகள் தோன்றியது போலும் உள்ளதால் நான் சுட்டிக் காட்டினேன் /எழுதினேன். நான் தவ்ஹீத் ஜமாத்தை பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. அது எனக்கு தேவையுமில்லை. நீங்கள் ஏன் தவ்ஹீத் ஜமாத் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். 

என் வழி தனி வழி - தனித்தே செயல் படுவோம் என்று சொன்னது.
 
என் பள்ளி தனி பள்ளி - ஊருக்கு ஊர் தனிப்பள்ளி வாசல்(மர்கஸ்) ஏற்படுத்தியது.

சகோதரர் காஜா பக்ருதீன் மேற்கூறியவாறு கூறியதால் தான் நான் தனிப் பள்ளியின் அவசியம் குறித்தும் தனி மையவாடியின் அவசியம் குறித்தும் எழுதினேன்.

இந்த வாதத்தில் நியாயமில்லை ஏனென்றால் ஒரு தவறை யார் செய்கிறார்களோ அவர்தான் அதற்கு பொறுப்பு சும்மா எல்லாத்தயு சமுதாயத்தின் மேல் போடக்குடாது உங்களிடம் கேட்கின்றேன் முழு ஒற்றுமொத்த சமுதாயமும் சேர்ந்து தான் தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிச்சார்களா ?அவர்கள் மேல் குற்றம் போடுவதற்கு .
நீங்கள் எந்த இயக்கத்தையும் சேராததட்கு காரணம் என்ன

தவறு என்பது ஊர் நீக்கம் செய்தது, ஊர் மையவாடியில் அடக்க மறுத்தது, திருமணத்திற்கு ஊர் அனுமதி கடிதம் மறுத்தது, திருமண புத்தகம் தர மறுத்தது, என்று நீண்டு கொண்டே போகும் பட்டியல். ஆகவே தான் தனிப் பள்ளி கட்டியிருக்கிறார்கள் என்று சொன்னேன். நான் பொதுவான தவ்ஹீத்வாதிகளின் பிரச்சனைகளை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறென். நீங்கள் தவ்ஹீத் ஜமாத்தை பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

நான் எந்த இயக்கத்தையும் சாராததற்கு காரணம், எனக்கு இயக்க ரீதியாக எந்த இயக்கத்திலும் நல்ல அபிப்ராயம் இல்லை. இது என்னுடைய கருத்து. மற்றபடி மார்க்க விஷயத்தில் யார் ஆதாரத்துடன் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். எனக்கு மார்க்கம் தான் வேண்டுமே தவிர அவர்களின் இயக்க பெயர்களோ அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாறோ தேவையில்லை. 

சகோ ஜாகிர் நாயக் அழகாக கூறுவார்,

Dont see the followers, See the principles in Islam. (அதாவது முஸ்லீம்கள் நிறைய தவறுகள் செய்கின்றனர் என்று ஒருவர் கேட்கும் போது அவர் கூறியது, மார்க்கத்தில் இருப்பவர்களை பார்க்காதீர்கள், மார்க்கத்தை பாருங்கள் என்று அவர் கூறினார்).

அதேபோல் நான் சொன்னவர் யார் என்று பார்ப்பதில்லை, அவர் என்ன சொல்கிறார் என்ற தான் பார்ப்பேன். அதற்கு இயக்கத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. பொது விஷயங்களுக்காக போராடும் போது உன்மையிலேயே பொது விஷயங்களுக்காக போராடுவதாக என் மனது நினைத்தால் அதை ஆதரிப்பேன். அப்படியில்லாமல் பேருக்காக, புகழுக்காக, கூட்டம் கூட்ட வேண்டும் என்பதற்காக என்று எனக்கு தோன்றினால் நான் அதை ஆதரிக்க மாட்டேன். 

இது எல்லாம் சரிதான் சத்தியத்திற்கு அசத்தியத்திற்கும் ஒரு பிரிவினை இருந்து கொண்டுதான் இருக்கும் அசத்தியவாதிகள் பெரும்பான்மை என்றால் சத்தியத்திற்கு பெரும் சோதனை வரும் அந்த நேரத்தில் பொறுமை தேவை.ஆனால் இன்று தவ்ஹீத் ஜமாத்தின் நிலை என்ன இவர்கல்குல்லால்   அடித்தி கொள்கிறார்களா இல்லையா நீங்கள் மேலே சொல்லியுள்ள 72  கூடத்தின் அடையாளம் அனைத்தும் இன்று இந்த தவ்ஹீத் ஜமாத்திடம் இல்லையா?

நான் தவ்ஹீத் ஜமாத்தை பற்றியோ இல்லை அதிலிருந்து பிரிந்தவர்கள் பற்றியோ கூறவே இல்லை. நான் பொதுவாக பிரிவினைக்கு யார் ஆரம்பத்தில் வித்திட்டது என்று தான் கூறினேன். அந்த அசத்தியவாதிகளால் தான் பிரிவினை ஆரம்பமானது என்று தான் ஆனித்தனமாக கூறினேன். தனி பள்ளி கட்ட ஆரம்பத்தில் நேர்ந்ததில் தொடங்கி எல்லா சுன்னத் ஜமாத்-தவ்ஹீத் பிரச்சனைகளுக்கு சுன்னத் ஜமாத்தே காரணம் என்று சொன்னேன். நீங்கள் தவ்ஹீத் ஜமாத்தை பற்றி என்னிடம் விளக்கம் கேட்டால், நான் பதிலளிக்க மாட்டேன். நீங்கள் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்களின் தொண்டர்களிடம் கெட்டுக் கொள்ளுங்கள்.  

நான் எழுதியதில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.

தோழமையுடன்

அபு நிஹான் 

2010/6/29 Roshan Rosheen <roshan...@yahoo.com>

Abdullah Abdulsalam

unread,
Jun 29, 2010, 8:14:13 AM6/29/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
 
குரான் ஹதீஸ் ஒளியில் இந்த இயக்கங்களோடு சேர்ந்து மார்க்க  பிரசாரம் செய்யலாமா?     
சகோதரர்  Roshan
எந்த இயக்கம் என்று நீங்கள்  சொன்னால் என்னை போல் தெரியாத சகோதரர்கள் தெரிந்து கொள்ளுவார்கள்.



--- On Mon, 6/28/10, Khaja Fakrudeen <mikf...@gmail.com> wrote:

Abdullah Abdulsalam

unread,
Jun 29, 2010, 8:17:12 AM6/29/10
to fro...@googlegroups.com


--- On Tue, 6/29/10, Abdullah Abdulsalam <abdulla...@yahoo.com> wrote:

Roshan Rosheen

unread,
Jun 29, 2010, 8:37:47 AM6/29/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் 
எந்த இயக்கம் என்று நான் குறிப்பிட்டுள்ளேன் நன்றாக பார்க்கவும் .அதுவும் குறிப்பாக ஒரு சஹோதரனிடம் கேள்வியாக கேட்கப்பட்டது அது அவர் அதற்கு பதில் தந்து விட்டார் .தாங்கள் தற்பொழுது எந்த பிரிவை சேர்ந்தவர் ?

From: Abdullah Abdulsalam <abdulla...@yahoo.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, June 29, 2010 5:47:12 PM

Mohamed Rafik

unread,
Jun 29, 2010, 9:30:06 AM6/29/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் 

சகோதரர் Roshan Rosheen சொன்ன கருத்து மிகவும் திருப்திகரமஹா உள்ளது

Syed AbdusSalam Ibrahim

unread,
Jun 29, 2010, 11:42:09 AM6/29/10
to fro...@googlegroups.com
இங்கு எந்த பிரசாரமும் இயக்க பிரிவாக இருந்தே செயல் படுகிறார்கள் பிரிந்திருந்து செயல்படுவதே மார்கத்தில் ஹராமாக்க பட்டுள்ளது என்ற தத்துவத்தை அழகாக வடித்துள்ளார் roshan...@yahoo.com. படிக்க வேண்டுமானால் நன்றாக இருக்கின்றது.  சுன்னத் ஜமாஅத்
பள்ளியில் தொழுவது ஹராம் என்று பத்வா  வழங்கி பிரிவினையை உண்டாக்குபவர்களின்  சுய விளம்பரம் இங்கு கூடாது, நிறுத்திக்கொள்ளவும், பிரிவினை உண்டாக்கி விட்டு பிரிவினை கூடாது சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை, TNTJ இயக்க விளம்பரம் எக்காலத்திலும் அனுமதிக்க முடியாது,

2010/6/27 Mohamed Rafik <mhmd...@gmail.com>

--

Syed AbdusSalam Ibrahim

unread,
Jun 29, 2010, 12:01:48 PM6/29/10
to fro...@googlegroups.com
ஆசை கூடாது என்று கூறிய புத்தருக்கு ஆசை வெறுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சிலையை வணங்க கூடாது என்று கூறிய புத்தரையே கடவுள் ஆகிவிட்டார்கள். அதே போல ஹனபி ஷாபி என்ற பிரிவினையை தடுப்போம் என்று ஒரு பிரிவை உண்டாக்கி, நான்கு மத்ஹபை தடுப்போம் என்று சொன்னவர்கள் நாற்பது ஆக பிரிண்டுள்ளதுள்ளர்களே, இது தான் பிரிவினையை தடுப்பதா என்பதை சிந்தனையில் கொள்ளுங்கள். பிரிவினையை தடுப்போம்  என்று கூறிய கூட்டம் நாறிக்கொண்டு இருக்கின்றது.  தரிகா வின் பெயராலோ, மத்ஹபின் பெயராலோ, நாங்கள் சண்டை போட்டு கொள்ளவில்லை, கடையநல்லூரில் பள்ளிவாசல் மூடல், இணையதளங்களில் அருவெறுப்பான தகவல் பரிமாற்றங்கள், பணத்திற்காக சண்டை என்று ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு, இது தான் மார்க்கமா, சஹாபாக்களை திட்டுவது, நபிகளார் கூறிய ஹதீஸை கூட பின் பற்ற மாட்டோம் என்ற நிலை தான் மார்க்கம் போதிக்கும் லட்சணமா, நிறுத்தி கொள்ளுங்கள், இது பொது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கூட்டமைப்பு, எந்த இயக்கத்தின் கடித போக்குவரத்தோ விளம்பரமோ, கூடாது,

உடல் சுத்தம் இல்லாவிட்டால் குரானை ஓதலாம் என்று கூறுவது தான் தூய வடிவில் இஸ்லாம் கூறும் லட்சணமா, பேசுவது என்றால் எல்லோருக்கும் பேச தெரியும்,

குரான் ஹதீஸ் ஆய்வு செய்ய முடியுமா, தமிழ் தர்ஜுமாக்களை வைத்துக்கொண்டு ஏன் மார்க்கம் பேசுகின்றீர்கள், நிறுத்தி கொள்ளுங்கள், இயக்க வாதிகளை தங்கள் விளம்பரம் செய்ய அனுமதிக்க முடியாது

வஸ்ஸலாம்

ஸையத் அப்துஸ் ஸலாம் இப்ராஹீம்


2010/6/29 Roshan Rosheen <roshan...@yahoo.com>

Syed AbdusSalam Ibrahim

unread,
Jun 29, 2010, 12:01:57 PM6/29/10
to fro...@googlegroups.com


2010/6/29 Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com>

Abdullah Abdulsalam

unread,
Jun 29, 2010, 12:20:02 PM6/29/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர்  ரோஷன்
நீங்கள் எழிதியது புரியம்மால் தான் கேட்டிகின்றேன் கொஞ்சம் சொல்லுங்கள்
.தாங்கள் தற்பொழுது எந்த பிரிவை சேர்ந்தவர் ?

நான் உங்களை போல் தனி தனி மனிதனை துக்கி பிடித்து பின்னால் சொல்லகூடியவான்   இல்லை  குர் ஆன் ஹதிஸை மட்டும் பின் பர்றகூடியவான்.
நான் மீண்டும் கேட்டுகின்றேன் 
குரான் ஹதீஸ் ஒளியில் இந்த இயக்கங்களோடு சேர்ந்து மார்க்க  பிரசாரம் செய்யலாமா?     நீங்கள் குறிபிட்டது எந்த இயக்கம் என்று சொன்னால் தான் அடுத்து நானும் பின் பற்றுவேன்.


--- On Tue, 6/29/10, Roshan Rosheen <roshan...@yahoo.com> wrote:

Abdullah Abdulsalam

unread,
Jun 29, 2010, 12:37:14 PM6/29/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் அஜ்மல் அவர்கள் சொல்வது நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்திற்கு  அனைத்திலும் இட ஒதிக்கீடு தேவை 
என்ற கருத்திற்காக மாநாடு அழைப்பு சொல்கிறார் இதில் என்ன தவறு உள்ளது . இஸ்லாமிய மக்களுக்கு போராடுவது  
தவறா. எதில் என்ன குறை கண்டு விட்டீர்கள் விளக்கம் தரவும் .
வருகின்ற தேர்தலில் பேரம் பேசுவதற்கு மாநாடு இது அனைவரும் அறிவார்.
பி ஜே அமைப்பில் யார் வெளியேரினாலும் அவர்கள் மாநாடு நடத்துவது வழக்கம்
என்னை பொருத்தவரைக்கும் ஓட்டும் மொத்தம் முஸ்லிம்களுக்கு நடத்தப்படும் மாநாடு இல்லை


--- On Tue, 6/29/10, Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com> wrote:

From: Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com>
Subject: Re: அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்( 22.78)
To: fro...@googlegroups.com

ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)

unread,
Jun 29, 2010, 3:47:02 PM6/29/10
to fro...@googlegroups.com
சகோதரர் அப்துஸ் ஸலாம் அவர்களுக்கு.

இது தான் மார்க்கமா, சஹாபாக்களை திட்டுவது, நபிகளார் கூறிய ஹதீஸை கூட பின் பற்ற மாட்டோம் என்ற நிலை தான் மார்க்கம் போதிக்கும் லட்சணமா, நிறுத்தி கொள்ளுங்கள்,

நபிகளார் கூறிய எந்த ஹதீஸை மறுத்தார்கள் என்று கூற முடியுமா? அதை மறுக்க இயலாது என்பதற்கு ஆதாரத்தையும் தரவும். 

உடல் சுத்தம் இல்லாவிட்டால் குரானை ஓதலாம் என்று கூறுவது தான் தூய வடிவில் இஸ்லாம் கூறும் லட்சணமா, 

உடல் சுத்தம் இல்லாவிட்டால் குர்ஆனை ஓதக் கூடாது என்பதற்கு ஆதாரம் இருந்தால் அனுப்பவும். அப்படி இல்லாமல் அவர்கள் கூறுவது தவறு, இவர்கள் கூறுவது தவறு என்று கூற வேண்டாம். 

மார்க்கத்தில் என்ன இருக்கிறதோ அதை பின்பற்றினாலே போதும், தேவையில்லாமல் நாமாக உருவாக்க இது நாம் படைத்த மார்க்கம் அல்ல. எவனெல்லாம் எதுவெல்லாம் சொல்கிறானோ, எவனுக்கு எதுவெல்லாம் தோன்றுகின்றதோ அதுவெல்லாம் மார்க்கமாக ஆக்கி இந்த ஆலிம்கள் அல்லாஹ்விடம் மோத தயாரகின்றார்கள். ஊருக்கு ஒரு முறை என்று இருக்கிறது. உணவு பழக்க வழக்கங்கள், உடை, பேச்சு மற்றும் அனைத்திலும். ஆனால் ஊருக்கு ஒரு மார்க்கம் என்று நமது இந்தியாவில் (குறிப்பாக) பின்பற்றப்பட்டு வருகின்றது. சில சட்டங்கள் ஏறுக்கு மாறாக ஊருக்கு ஊர் வித்தியாசப் படும். இந்த வித்தியாசங்களை கொண்டு வந்தவர்கள் யார்? ஏன் இப்படி செய்தார்கள். அப்படி செய்தால் ஏன் மக்கள் அவர்கள் (ஆலிம்கள்) சொல்லுவதையே வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். திரும்ப கேள்வி கேட்க வேண்டும். ஏன் இந்த சட்டத்தை சொல்கிறீர்கள், இது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருக்கின்றதே என்று கேட்க வேண்டும். வல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மார்க்கம் ஒன்றே, ஆகவே இதில் இடைச் செருகல் செய்யாமலும், நீக்கம் செய்யாமலும் அல்லாஹ் தந்த தூய்மையான மார்க்கத்தை நாம் அனைவரும் பினபற்றுவோம். 

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.

தோழமையுடன்

அபு நிஹான்

2010/6/29 Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com>
ஆசை கூடாது என்று கூறிய புத்தருக்கு ஆசை வெறுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சிலையை வணங்க கூடாது என்று கூறிய புத்தரையே கடவுள் ஆகிவிட்டார்கள். அதே போல ஹனபி ஷாபி என்ற பிரிவினையை தடுப்போம் என்று ஒரு பிரிவை உண்டாக்கி, நான்கு மத்ஹபை தடுப்போம் என்று சொன்னவர்கள் நாற்பது ஆக பிரிண்டுள்ளதுள்ளர்களே, இது தான் பிரிவினையை தடுப்பதா என்பதை சிந்தனையில் கொள்ளுங்கள். பிரிவினையை தடுப்போம்  என்று கூறிய கூட்டம் நாறிக்கொண்டு இருக்கின்றது.  தரிகா வின் பெயராலோ, மத்ஹபின் பெயராலோ, நாங்கள் சண்டை போட்டு கொள்ளவில்லை, கடையநல்லூரில் பள்ளிவாசல் மூடல், இணையதளங்களில் அருவெறுப்பான தகவல் பரிமாற்றங்கள், பணத்திற்காக சண்டை என்று ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு, இது தான் மார்க்கமா, சஹாபாக்களை திட்டுவது, நபிகளார் கூறிய ஹதீஸை கூட பின் பற்ற மாட்டோம் என்ற நிலை தான் மார்க்கம் போதிக்கும் லட்சணமா, நிறுத்தி கொள்ளுங்கள், இது பொது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கூட்டமைப்பு, எந்த இயக்கத்தின் கடித போக்குவரத்தோ விளம்பரமோ, கூடாது,

muslim

unread,
Jun 29, 2010, 10:57:43 PM6/29/10
to fro...@googlegroups.com

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

அன்பின் குழும உறுப்பினர்களுக்கு,

குழுமத்தில் தனி மனிதத் தாக்குதல் வேண்டாம். இயக்கப் பெயரைச் சுட்டிக் காட்டி விமர்சிக்கவும் வேண்டாம். வரம்பு மீறாமல் ஆரோக்கியமான கருத்துகளை எழுதுங்கள்!

சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் ஹைலைட் செய்துள்ள ''உடல் சுத்தமில்லாதவர் குர்ஆனை ஓதக் கூடாது'' என்ற சகோதரர் syed abdussalam ibrahim அவர்களின் கருத்துக்கு தேவையான மார்க்க ஆதாரங்களை எழுதவும்!

''ஸஹாபாக்களைத் திட்டுவது,'' இதற்கும் சான்றுகளை எழுதவும்!

உறுப்பினர்கள் நிதானம் இழக்க வேண்டாம்.


2010/6/29 ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்) <hajam...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Jun 29, 2010, 2:54:12 AM6/29/10
to fro...@googlegroups.com
 YES........ PL STOP THESE MAILS.............. INBOX  FILLED .......




வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
இயக்கம் சார்ந்த, இயக்கம் சாராத, இன்னும் இயக்க அனுதாபிகள் என பலர் இக்குழுமத்தில் உறுப்பினராக உள்ளனர். இயக்கம் சாரா இக்குழுமத்தை இயக்க விளம்பரத்துக்கு பயன்படுத்துவது கலகத்தை ஏற்படுத்திவிடும். எனவே இயக்க விளம்பரத்தை குழுமத்தில் அனுமதிக்க முடியாது!
இட ஒதுக்கீடு கேட்டு //இஸ்லாமிய மக்களுக்கு போராடுவது தவறா// எனக் கேட்டிருப்பது வெறும் சப்பைக் கட்டு. ஏனெனில், எல்லா இயக்கங்களும் ''முஸ்லிம் மக்களுக்காகவேப் போராடுகிறோம்'' என்றே மக்களிடையே அறிவிக்கின்றன.
எனவே, உறுப்பினர்கள் குழுமக் கட்டுப்பாடு கருதி இயக்கம் சார்பாக நடைபெறும் பேரணி, மாநாடு, போராட்டம், முற்றுகை போன்ற இயக்க விளம்பரப் பதிவுகளை தவிர்க்கவும். 

2010/6/27 Mohamed Rafik <mhmd...@gmail.com>
அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் அஜ்மல் அவர்கள் சொல்வது நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்திற்கு  அனைத்திலும் இட ஒதிக்கீடு தேவை 
என்ற கருத்திற்காக மாநாடு அழைப்பு சொல்கிறார் இதில் என்ன தவறு உள்ளது . இஸ்லாமிய மக்களுக்கு போராடுவது  
தவறா. எதில் என்ன குறை கண்டு விட்டீர்கள் விளக்கம் தரவும் .

முஹம்மத் ரபிக் 
சவுதி அரேபியா .
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

Roshan Rosheen

unread,
Jun 30, 2010, 1:48:36 AM6/30/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்,
செய்யித் அப்துஸ்ஸலாம் இப்ராஹீம் அவர்களுக்கு இது விடயமாக உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.உங்களுடைய இந்த விமர்சனத்தை பார்க்கும் போது நீங்கள் ஒரு மத்ஹப் அபிமானி என்று புரிந்து கொள்ளமுடிகிறது. தவ்ஹீத் இயக்கங்கள் ஏராளமாக பிரிந்திருந்தாலும் அவர்களோடு அழகான முறையில் என்னால் கருத்து பறிமுதல் செய்து கொள்ளமுடியும் அவர்களை பற்றி பிரிவு சம்பந்தமாகவே விமர்சனம் செய்துள்ளேன் மற்றபடி ஒன்றும் இல்லை.அவர்கள் மீது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு வெறும் காழ்புணர்வே பொறாமை விரோதம் கோபம் போன்றவை அவர்கள் மீது உங்களுக்கு ஏற்பட்டு விட்டது நீங்கள் ஒரு முஸ்லிமாக கூட அவர்களை பார்க்க மாடீர்கள் அவர்களை திட்டுவதும் ஏசுவதும் பள்ளிக்கு வந்தால் விரலை வெட்டுவதும் தொழுது கொண்டிருக்கும் போது பேனை ஆப் பண்ணுவது தொப்பி இல்லாமல் தொழுதால் தொப்பியை போட்டு முன்வரிசையில் நிற்கமுடியும் இல்லாவிட்டால் பின்னுக்குபோ என்று விரட்டுவதும் உங்களை போன்ற மத்ஹாப்  வெறியர்களின் சில எடுத்து காட்டு இவை.
நீங்கள் பின்பற்றும் மத்ஹபை தரீகாவை முன்வைத்து ஏன் நீங்க கருத்து பரிமாற்றம் செய்வதற்கு முன்வருவதில்லை தவ்ஹீது ஜமாஅத் காரர்களின் ஆய்வுகளை குறை காணும் நீங்கள் ஏன் உங்களுடைய மத்ஹபு தரீகா பற்றி பேச முன்வருவதில்லை என்னை பொறுத்த வரையில் தவ்ஹீத் இயக்கவாதிகளை விட நீங்கள் மிக மோசமானவர்களே ஏனென்றால் தவ்ஹித் ஜமாத்தார்கள்  அவர்கள் செய்யும் ஆய்வுகள் சரியோ பிழையோ குரான் ஹதீஸில் நின்றுதான் ஆய்வுகளை வெளியிடுகிறார்கள் ஆனால் உங்களை பொறுத்த வரை நீங்கள் முகல்லிதுகள் மதஹ்பு புஸ்தகத்தில் இருந்தே உங்களுடைய ஆய்வுகளை முன்வைகிறீர்கள் அதில் சரியானவைகளும் இருக்கின்றது பிளையானவைகளும் இருக்கின்றது இந்த இடத்தி உங்களுக்கும் தவ்ஹீத் ஜமாதார்களுக்கும் உள்ள வேறுபாடை விளங்கி கொள்ளமுடியும் அது என்னவென்றால் தவ்ஹீத் ஜமாத்தார்கள் முடியுமானவரை குரான் ஹதீஸில் இருந்து இஜ்திஹாத் செய்து தங்களுடைய ஆய்வுகளை முன்வைக்கிறார்கள் அதில் சரி பிழை வரும் பொழுது திருத்தி கொள்கிறார்கள்  ஆனால் உங்களளை போன்ற மத்ஹாப் வாதிகளுக்கு அவ்வாறு மத்ஹாப் ஆய்வுகளை திருத்த முடியாது ஏனென்றால் நீங்கள் முகல்லிதுகள் மத்ஹாப் உள்ளால் இருப்பவர்கள் அதற்கு வெளியே வந்து எப்பொழுது ஆய்வு செய்கிறார்களோ அப்பொழுது அவர்கள் நேர்வழியை கண்டுகொள் முடியும். இதை நான் கற்பனையாக சொல்லவில்லை உங்களுடைய மத்ஹபு தப்புகள் இங்கே எழுத படும் என்றால் உங்களுடைய உண்மை நிலவரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடும் .
சஹோதர செய்யத் இப்ராஹீம் அவர்களே உங்களை மறந்து விட்டு ஏன் மற்றவர்களின் குறையை தேடுகிறீர்கள் உங்கள் மத்ஹபுகளில் உள்ள கேடுகள் நாற்றம் எடுத்ததுபோல் இவர்களும் நாற்றம் எடுக்கவேண்டும் என்று எவ்வலு உங்களுக்கு ஆசை.
தூய்மையான உள்ளத்தோடு  சஹோதரத்துவத்தை ஒன்று படுத்துவோம் பிரிவினையை அடியோடு இல்லாதொழிப்போம்         


From: Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, June 29, 2010 9:31:48 PM

Riyaz

unread,
Jun 30, 2010, 1:53:51 AM6/30/10
to fro...@googlegroups.com
Stop this mail Please ! Please ! 


2010/6/30 muslim <tomu...@gmail.com>

Mohamed Rafik

unread,
Jun 30, 2010, 2:08:52 AM6/30/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் abdul salaam ஆதாரம் இல்லாமல் எல்லோரையும் திட்டுவது வழக்கமாக கொண்டுள்ளார் போலும் . இஸ்லாத்தை எப்படி சொன்னாலும் நாங்கள் அதை ஆதார மாக எடுதுக் கொள்வோம் ஒரு கூட்டத்தினர் உள்ளனர் . எங்களுக்கு பிரச்சனை வேண்டாம் என்று ஒரு கூட்டத்தினர் ஒதுங்கி கொள்கிறார்கள் .எல்லா ஊரிலும் குரான் ஹதீஸ் படி நடபவர்கள் கேள்வி கேட்டால் அந்த இடத்தில பிரச்னை தான் . இதில் எந்த ரகத்தை சார்ந்தவர் சகோதரர் abdul salaam அவர்கள் .

உலகத்தில் உள்ள அனைவரும் குரான் ஹதீஸில் இல்லாதது ஒன்று சொல்கிறார்கள் . ஒருவர் குரான் ஹதீஸில் உள்ளவற்றை சொல்கிறார் இதில் குரான் ஹதிஸை சொல்பவரின் கருத்தை தான் ஏற்றுக் கொள்ள முடியும். ஆணைவரும் சொல்வதால் அது சரி அஹாது. குரான் ஹதீஸ் படி நடந்தால் பிரச்னை வருமானால் அதை எதிர் கொள்ள நான் தயார் . சகோதரர் abdul salaam எந்த ரகத்தை சார்ந்தவர் என்று அனைவர்க்கும் சொல்ல வேண்டும் 

Khaja Fakrudeen

unread,
Jun 30, 2010, 2:49:34 AM6/30/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
 
      குழும நிர்வாகி அவர்களுக்கு ஒரே தலைப்பில் 6 பதிவுகள் வந்துள்ளது கவனிக்கவும்.

2010/6/30 muslim <tomu...@gmail.com>

Roshan Rosheen

unread,
Jun 30, 2010, 3:52:48 AM6/30/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
  தாங்கள் தற்பொழுது எந்த பிரிவை சேர்ந்தவர் ?
இஸ்லாத்தில் பிரிவினை கூடாது என்று சொல்கிறேன். இன்று இஸ்லாம் என்று சொல்லிக்கொண்டு எல்லோரும் பிரிந்து செயல்படுகிறார்கள் ஒரு ஜமாத்தாக செயல் படுவதை நான் காணவில்லை அதனால் எந்த பிரிவோடும் இல்லாமல் தனித்தே செயல் படுகிறேன்.

 நான் உங்களை போல் தனி தனி மனிதனை துக்கி பிடித்து பின்னால் சொல்லகூடியவான்   இல்லை  குர் ஆன் ஹதிஸை மட்டும் பின் பர்றகூடியவான்.

என்மீது தப்பாக விமர்சனம் செய்துள்ளீர்கள் நான் பின்பற்றுவது குரான் ஹதீஸையே தனி மனிதனை கிடையாது 

குரான் ஹதீஸ் ஒளியில் இந்த இயக்கங்களோடு சேர்ந்து மார்க்க  பிரசாரம் செய்யலாமா?     நீங்கள் குறிபிட்டது எந்த இயக்கம் என்று சொன்னால் தான் அடுத்து நானும் பின் பற்றுவ.

jaqh,tntj,tmmk,ahle hathees,jamaathul muslimeen,mujaahidheen  இன்னும் ஏராளமான தவ்ஹீத் பிரிவுகள் 



From: Abdullah Abdulsalam <abdulla...@yahoo.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, June 29, 2010 9:50:02 PM

Syed AbdusSalam Ibrahim

unread,
Jun 30, 2010, 6:34:48 AM6/30/10
to fro...@googlegroups.com
ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்) அவர்களுக்கு.

பலவீனமான ஹதீஸ்களை ஏற்று கொள்ள மாட்டோம் சொன்னால் கூட பரவா இல்லை. அறிவிப்பாளர் தொடர் பலமாக இருந்தும் நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதை ஏற்று கொள்ள மாட்டேன், என்பது தான் ஹதீஸை பின்பற்றும் லட்சணமா, சாலீம்  அவர்களுக்கு பால் கொடுத்த ஹதீஸ் ஐ ஏற்று கொள்ளுவதில்லை, உதாரணத்திற்கு இந்த 2 இன்னும் பல இருக்கின்றது, இப்படி பலமான ஹதீசையும் பின்பற்றுவதில் தெளிவு இல்லாமல் இருந்தால் எப்பிடி பட்ட ஹதீஸை பின் பற்றுவீர்கள்,

எவனெல்லாம் எதுவெல்லாம் சொல்கிறானோ, எவனுக்கு எதுவெல்லாம் தோன்றுகின்றதோ அதுவெல்லாம் மார்க்கமாக ஆக்கி இந்த ஆலிம்கள்

மேலும் இப்படி தான் மரியாதை இல்லாமல் அவன் இவன் என்று நபிகளார் பேசியதற்கு ஆதாரம் தர முடியுமா?

மேலும் ஹதீஸ் கலை வல்லுனர்களை பின்பற்றும் நீங்கள், ஏன் பிக்ஹ்  கலை இமாம்களை, அவன் என்றும் இவன் என்றும், எவனோ கூறிய மார்க்கம் என்று கூறுகின்றீர்கள், இல்லை என்றால் ஹதீஸ் கலை இமாம் சொல்வதும் ஏற்று கொள்ள முடியாது என்று சொல்ல முடியுமா உங்களால். பிக்ஹு சட்டத்தின் இமாம்களும் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் தான், இல்லை என்றால் உங்களால் நெஞ்சில் கை வைத்து தக்பீர் கட்டுகின்ற ஹதீஸை அஹ்மத் இல்லாமல் வேறு கிதாபில் இருந்து பின் பற்றி இருக்கலாமே, அதே போல நான் இரண்டை விட்டு செல்கிறேன் அதை பின் பற்றி நடக்கும் காலமெல்லாம் வழி தவற மாட்டீர்கள் என்று வரும் ஹதீஸ் முஅத்தா  மாலிக் இல் வருகிறது அதை விட்டு விடலாமா, நாவை அடக்கி வாசியுங்கள், ஆக நீங்களும் ஏதோ ஒரு நவீன இமாமை பிக்ஹு (ஆய்வு) விஷயத்தில் பின் பற்று கின்றீர்கள் என்பது தான் உண்மை.

உடல் சுத்தம் இல்லாவிட்டால் குர்ஆனை ஓதக் கூடாது என்பதற்கு ஆதாரம் இருந்தால் அனுப்பவும். அப்படி இல்லாமல் அவர்கள் கூறுவது தவறு, இவர்கள் கூறுவது தவறு என்று கூற வேண்டாம்.

உடல் சுத்தம் இல்லாவிட்டால் குரானை ஓதலாம் என்பதற்கு ஆதாரம் இருந்தால் அனுப்பவும் அப்படி இல்லாமல் அவர்கள் சொல்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக சுத்தம் இல்லாமல் குரானை தொட கூடாது, தாங்கள் ஆதாரம் அனுப்பாமல் இருந்தால் சுத்தத்தோடு தான் குரானை தொட வேண்டும்.  ஒன்றை மறுப்பதற்கு ஆதாரம் வேண்டும்,

ஆனால் ஊருக்கு ஒரு மார்க்கம் என்று நமது இந்தியாவில் (குறிப்பாக) பின்பற்றப்பட்டு வருகின்றது. சில சட்டங்கள் ஏறுக்கு மாறாக ஊருக்கு ஊர் வித்தியாசப் படும். இந்த வித்தியாசங்களை கொண்டு வந்தவர்கள் யார்? ஏன் இப்படி செய்தார்கள்.


சரி இந்த வித்தியாசம் தேவை இல்லை என்று வைத்து கொள்வோம், குரான் ஹதீஸை  நேரிடையாக  தான் பின்பற்ற வேண்டும் என்று வைத்து கொள்வோம் (உண்மையில் குரான் ஹதீஸை தான் நாம் பின் பற்றுகிறோம், இமாம்களின் விளக்கத்தில் அது வேறு விஷயம் இருக்கட்டும் ). இதாவது  ஊருக்கு ஒரு மார்க்கம் என்கிறார் சகோதரர், ஆனால் தவ்ஹீத் வாதிகள் என்று சொல்பவர்கள் ஏரியா வுக்கு ஒரு மார்க்கம் ஆக்கி உள்ளார்களே, இதற்கு நீங்கள் கேள்வி கேட்டீர்களா?

ஒரு பிரிவு பிறை பார்த்து நோன்பு நோற்க சொல்கிறது, மற்றொன்று சவுதியில் பார்த்தால் போதும் என்கிறது, ஒரு பிரிவு தற்கொலை செய்து கொண்டால் ஜனாசா தொழுகை உண்டு என்கிறது, மற்றொன்று தற்கொலை செய்து கொண்டால் ஜனாசா தொழுகை இல்லை என்று சொல்கிறது. கொடுத்த பொருளுக்கு ஜகாத் வாழ்நாளில் ஒரு முறை என்று ஒரு கூட்டம் கூறுகிறது, வருடம் தோறும் தரவேண்டும் என்று மற்றொன்று கூறுகிறது,
அல்லாஹ்வின்
(ஒரே )மார்க்கமான  இதில்  இதில் எப்பிடி இடை செறுகள் செய்தீர்கள். உங்களுக்கு அதிகாரம் தந்தது யார் . 

ஹதீஸை நேரிடையாக பின்பற்ற வேண்டும் என்றால் முழுமையாக பின்பற்ற வேண்டும்,   கேள்வி கேளுங்கள் என்று கூறுகிறார் சகோதரர், ஆனால் பரிதாபம்,  மார்கத்தில் கேள்விக்கு அளவுகோல்  இருகின்றது என்பது கூட தெரியவில்லை, காரணம் அடிப்படை அறிவு கூட இல்லை, காரணம் நபிகள் ஸல்... கூறினார்கள், நான் என்ன கூறுகின்றேனோ அதை அப்படியே பின்பற்றுங்கள், அதிகமாக கேள்வி கேட்டு பனி இஸ்ராயில் கூட்டம் வழி கெட்டதை போல ஆகி விடாதீர்கள் என்றார்கள், இது இப்போது பொருந்தாது என்று கூற கூடாது, பொருந்தாது என்றால் அதற்கு ஆதாரம் தர வேண்டும்,

எங்கள் மக்களும்  சந்தேகம் கேட்கின்றார்கள் ஆனால் அது முறையாக இருக்கும் . பெரியவர்களை அவன் இவன் என்று கூற மாட்டார்கள், ஏன் என்றால் அது தான் நபிகளார் காட்டிய வழி,   எங்களுக்கு மேடையில்லை, அதனால் உங்களுக்கு தெரியவில்லை.

வல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்டு நபிகளாரால் உருவாக்கப்பட்ட  மார்க்கம் ஒன்றே, ஆகவே இதில் இடைச் செருகல் செய்யாமலும், நீக்கம் செய்யாமலும் அல்லாஹ்வும் ரசூலும் தந்த உயர்ந்த தூய்மையான மார்க்கத்தை  இமாம்களின் வழிகாட்டுதலின் பேரில்  நாம் அனைவரும் பினபற்றுவோம்.

ஆமீன்,

2010/6/30  <hajam...@gmail.com>
சகோதரர் அப்துஸ் ஸலாம்
இது தான் மார்க்கமா, சஹாபாக்களை திட்டுவது, நபிகளார் கூறிய ஹதீஸை கூட பின் பற்ற மாட்டோம் என்ற நிலை தான் மார்க்கம் போதிக்கும் லட்சணமா, நிறுத்தி கொள்ளுங்கள்,

நபிகளார் கூறிய எந்த ஹதீஸை மறுத்தார்கள் என்று கூற முடியுமா? அதை மறுக்க இயலாது என்பதற்கு ஆதாரத்தையும் தரவும். 

உடல் சுத்தம் இல்லாவிட்டால் குரானை ஓதலாம் என்று கூறுவது தான் தூய வடிவில் இஸ்லாம் கூறும் லட்சணமா, 

உடல் சுத்தம் இல்லாவிட்டால் குர்ஆனை ஓதக் கூடாது என்பதற்கு ஆதாரம் இருந்தால் அனுப்பவும். அப்படி இல்லாமல் அவர்கள் கூறுவது தவறு, இவர்கள் கூறுவது தவறு என்று கூற வேண்டாம்.

மார்க்கத்தில் என்ன இருக்கிறதோ அதை பின்பற்றினாலே போதும், தேவையில்லாமல் நாமாக உருவாக்க இது நாம் படைத்த மார்க்கம் அல்ல. எவனெல்லாம் எதுவெல்லாம் சொல்கிறானோ, எவனுக்கு எதுவெல்லாம் தோன்றுகின்றதோ அதுவெல்லாம் மார்க்கமாக ஆக்கி இந்த ஆலிம்கள் அல்லாஹ்விடம் மோத தயாரகின்றார்கள். ஊருக்கு ஒரு முறை என்று இருக்கிறது. உணவு பழக்க வழக்கங்கள், உடை, பேச்சு மற்றும் அனைத்திலும். ஆனால் ஊருக்கு ஒரு மார்க்கம் என்று நமது இந்தியாவில் (குறிப்பாக) பின்பற்றப்பட்டு வருகின்றது. சில சட்டங்கள் ஏறுக்கு மாறாக ஊருக்கு ஊர் வித்தியாசப் படும். இந்த வித்தியாசங்களை கொண்டு வந்தவர்கள் யார்? ஏன் இப்படி செய்தார்கள். அப்படி செய்தால் ஏன் மக்கள் அவர்கள் (ஆலிம்கள்) சொல்லுவதையே வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். திரும்ப கேள்வி கேட்க வேண்டும். ஏன் இந்த சட்டத்தை சொல்கிறீர்கள், இது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருக்கின்றதே என்று கேட்க வேண்டும்.

ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)

unread,
Jun 30, 2010, 3:13:39 PM6/30/10
to fro...@googlegroups.com
//பலவீனமான ஹதீஸ்களை ஏற்று கொள்ள மாட்டோம் சொன்னால் கூட பரவா இல்லை. 

நீங்கள் என்ன பரவா இல்லை என்று கூறுகிறீர்கள். ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவரும் ஒரு ஹதீஸ் பலகீனமானது என்று கூறுகிறார். நீங்கள் "பலவீனமான ஹதீஸ்களை ஏற்று கொள்ள மாட்டோம் சொன்னால் கூட பரவா இல்லை" என்று கூறுகிறீர்கள். இது உங்கள் இஷ்டம் இல்லை. மார்க்கத்தில் உங்களின் சுய விருப்பு வெறுப்புகளை உள்ளே புகுத்தாதீர்கள். அப்போது பலகினமான ஹதீஸை பின்பற்றலாம் என்று கூறுகிறீர்களா? விளக்கம் தரவும்.

அறிவிப்பாளர் தொடர் பலமாக இருந்தும் நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதை ஏற்று கொள்ள மாட்டேன், என்பது தான் ஹதீஸை பின்பற்றும் லட்சணமா, சாலீம்  அவர்களுக்கு பால் கொடுத்த ஹதீஸ் ஐ ஏற்று கொள்ளுவதில்லை, உதாரணத்திற்கு இந்த 2 இன்னும் பல இருக்கின்றது, இப்படி பலமான ஹதீசையும் பின்பற்றுவதில் தெளிவு இல்லாமல் இருந்தால் எப்பிடி பட்ட ஹதீஸை பின் பற்றுவீர்கள், 

நான் அப்படி சொல்லவில்லை. எனக்கு நீங்கள் கேட்ட விஷயத்தில் ஞானம் இல்லை. ஞானம் இருப்பவர்கள் விளக்கவும். 

எவனெல்லாம் எதுவெல்லாம் சொல்கிறானோ, எவனுக்கு எதுவெல்லாம் தோன்றுகின்றதோ அதுவெல்லாம் மார்க்கமாக ஆக்கி இந்த ஆலிம்கள் 

விட்டால் நான் மின்னஞ்சலில் எழுதும் வார்த்தைகளுக்கெல்லாம் ஆதாரம் கேட்பீர்கள் போலிருக்கிறதே. ஒருவன் கோபப்பட்டால் அவனுடைய கோப வார்த்தைகள் வெளி வந்தால் அதற்கும் ஆதாரம் கேட்பீர்களா? தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நான் திட்டியது எல்லாம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லாததை மக்க்ளுக்கு எடுத்து சொல்லி புது இபாதத்களை உருவாக்கிய, சமுதாயத்தில் பிளவு வர காரணமாக இருந்த ஆலிம்களை பற்றி தான் நான்  எழுதினேன்.

நாம் பின்பற்ற வேண்டியது இரணடு விஷயங்கள். 
1. குர்ஆன்
2. ஹதீஸ்

இதில் மூன்றாவதாக பிக்ஹ் கலை எங்கு இருந்து வந்தது. நான் கேட்கிறேன், பிக்ஹ் கலை இல்லையென்றால் மார்க்கத்தை பின்பற்றலாகாதா?பிக்ஹ் கலையில் இமாம்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தால் அவர்களுடைய மார்க்க அறிவை வைத்துக் கொண்டு மார்க்கத்தில் புதிதாக (குர்ஆன், ஹதீஸ் ஒளியில்லாமல்) புது சட்டத்தை கொண்டு வர இயலுமா? தோன்றியவர்களெல்லாம் சட்டம் கொண்டு வருவதற்கு இது அவரவர்களுடைய சொந்த மார்க்கம் கிடையாது? அவர்களுக்கு அதற்கு உரிமையும் கிடையாது.

குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று நீங்களே கூறுகிறீர்கள். மீண்டும் உங்களுடைய கருத்துக்கு நீங்களே முரன்படுகிறீர்கள். குர்ஆன் ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பது உங்கள் கருத்தாக இருந்தால் இமாம்கள், பிக்ஹ் சட்டத்தை வகுத்தவர்கள் என்று மார்க்கத்தை உண்டாக்கியவர்களின் பின்னால் செல்லக்கூடாது. சில இடங்களில் அவர்கள் குர்ஆன், ஹதீஸின் படி தங்களுடைய சட்ட நுல்களில் சொல்லி இருக்கலாம். பல இடங்களில் குர்ஆனுக்கு மாற்றமாக, ஹதீஸுக்கு மாற்றமாக சொல்லியிருக்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள் பின்பற்றினால் உண்மையிலேயே குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றியவர்களாக மாட்டீர்கள். நான் எந்த நவீன இமாமையும் பின்பற்றவில்லை. நீங்கள் ஒரு விஷயத்தை என்னிடம் சொல்கிறிர்கள், அது குர்ஆன், ஹதீஸின் படி சரியாக இருக்கிறது என்றால் நான் அதை ஏற்றுக் கொள்வேன். அதை விட்டு விட்டு நீங்கள் சொல்வதை நான் கேட்டு நடப்பதனால் நான் உங்களை பின்பற்றியவனாக ஆக மாட்டேன். ஏன் என்றால் நீங்கள் என்னிடம் கூறியது அல்லாஹ்வுடைய மற்றும் ரசூலுடைய வார்த்தைகள். நான் யார் கூறுகிறார்கள் என்று பார்ப்பதில்லை. என்ன கூறுகிறார்கள் என்று தான் பார்ப்பேன். 

உடல் சுத்தம் இல்லாவிட்டால் குரானை ஓதலாம் என்பதற்கு ஆதாரம் இருந்தால் அனுப்பவும் அப்படி இல்லாமல் அவர்கள் சொல்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக சுத்தம் இல்லாமல் குரானை தொட கூடாது, தாங்கள் ஆதாரம் அனுப்பாமல் இருந்தால் சுத்தத்தோடு தான் குரானை தொட வேண்டும்.  ஒன்றை மறுப்பதற்கு ஆதாரம் வேண்டும், 

இதற்கு முந்தைய மின்னஞ்சலில் ஒரு விஷயத்தை தவறு என்று எடுத்து சொல்கிறீர்கள். 

முந்தைய மின்னஞ்சலில் : உடல் சுத்தம் இல்லாவிட்டால் குரானை ஓதலாம் என்று கூறுவது தான் தூய வடிவில் இஸ்லாம் கூறும் லட்சணமா, பேசுவது என்றால் எல்லோருக்கும் பேச தெரியும், 

அப்படியானால் உடல் சுத்தமில்லாமல் குர்ஆனை ஓதக்கூடாது என்பது உங்கள் கருத்தாக இருந்தால் ஏன் ஓதக்கூடாது என்பதற்கு ஆதாரம் காட்டவும். ஏனெனில் ஆரம்பித்தவர் நீங்களே. குர்ஆனை சுத்தமில்லாமல் ஓதுவது எப்படி தவறு என்று எனக்கு விளங்கவில்லை. அதற்காக நான் உங்களிடம் எதை வைத்து தவறு என்கிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் என்னிடமே மறு கேள்வி கேட்கிறீர்கள். 

சரி. விஷயத்திற்கு வருவோம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் புத்தக வடிவில் இல்லை. ஆதலால் நீங்கள் கூறியதற்கும், நான் கூறியதற்கும் ஆதாரம் நேரடியாக இல்லை. 

ஆனால் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை மாற்று மதத்தவர்களுக்கு எழுதி அனுப்பியுள்ளார்கள்.


வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் நாங்கள் முஸ் ம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!எனக் கூறி விடுங்கள்!

என்ற 3:64 வசனத்தை ரோமாபுரி மன்னர் ஹெர்குலிசுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதியுள்ளார்கள். (பார்க்க புகாரி எண் 7 மற்றும் 4553)
மாற்று மதத்தவர்களும் இவ்வசனங்களைப் படித்துத் திருந்த வேண்டும் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்பினார்கள்.  தூய்மையற்றவர்கள் குர்ஆனை தொடக் கூடாது, ஓதக் கூடாது என்றிருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு எழுதி அனுப்பியிருக்க மாட்டார்கள்.

சரி இந்த வித்தியாசம் தேவை இல்லை என்று வைத்து கொள்வோம்


இந்த வித்தியாசத்திற்கு என்ன வழி? இது எப்படி உருவானது என்று கேட்டால் நான் என்ன சொன்னேனோ அதியே நீங்களும் சொல்லுகிறீர்கள்.  நான் தான் இந்த வித்தியாசம் தேவையில்லை என்று சொன்னேன். அது எப்படி உருவானது என்று கேட்டேன்.. உங்களிடம் பல கேள்விகளுக்கு கேள்வியே விடையாக இருக்கிறது. 

ஒரு பிரிவு பிறை பார்த்து நோன்பு நோற்க சொல்கிறது, மற்றொன்று சவுதியில் பார்த்தால் போதும் என்கிறது, ஒரு பிரிவு தற்கொலை செய்து கொண்டால் ஜனாசா தொழுகை உண்டு என்கிறது, மற்றொன்று தற்கொலை செய்து கொண்டால் ஜனாசா தொழுகை இல்லை என்று சொல்கிறது. கொடுத்த பொருளுக்கு ஜகாத் வாழ்நாளில் ஒரு முறை என்று ஒரு கூட்டம் கூறுகிறது, வருடம் தோறும் தரவேண்டும் என்று மற்றொன்று கூறுகிறது, அல்லாஹ்வின் (ஒரே )மார்க்கமான  இதில்  இதில் எப்பிடி இடை செறுகள் செய்தீர்கள். உங்களுக்கு அதிகாரம் தந்தது யார் .  

இப்படி சொல்லுபவர்கள் எல்லாம் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் தந்து தான் தங்களுடைய வாதத்தை வைக்கிறார்ர்கள். உங்களுக்கு எது சரியென்று குர்ஆன் ஹதீஸின் வழி நின்று படுகின்றதோ அதையே பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வின் ஒரே மார்க்கத்தில் சில விஷயங்களுக்கு நேரடியாக பதில் இருக்கும். சில விஷயங்களுக்கு மறைமுகமாக பதில் இருக்கும். ஜகாத் கொடுங்கள், தொழுகையை நிறைவேற்றுங்கள் என்ற கருத்துப்பட குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். ஆனால் வருடம் ஒரு முறை ஒரு பொருளுக்கா? அல்லது வாழ்நாளில் ஒரு முறை ஒரு பொருளுக்கா? என்று கூறப்படவில்லை. இதை ஆய்வுக்கெடுத்தே முடிவுக்கு வர வேண்டும். இதை வைத்துக் கொண்டு எல்லா விஷயத்திற்கும் வேறுபடக் கூடாது. நேரடியாக குர்ஆன் / ஹதீஸ்களில் சொன்ன விஷயத்திற்கு நேரடியாக பதில் கிடைத்து விடும். அப்படி நேரடியாக பதில் இருந்தும் ஆலிம்களின் சொந்த கருத்த்க்காகவோ, இமாம்களின் பெயரில் வெளிவந்த புத்தகத்தின் கருத்துக்காகவோ ஒத்துப் போகக்கூடாது. 

நான் கூறும் ஊருக்கு ஊர் மார்க்க வித்தியாசம் குர்ஆன், ஹதீஸின் படி தான் வித்தியாசப்படுகின்றதா? சில ஊர்களில் இருக்கும் சம்பிரதாயங்கள் பல ஊர்களில் இல்லை. இந்த சம்பிரதாயங்கள் மார்க்கமாக இருப்பதால் ஊருக்கு ஊர் மாற்றம் ஏற்படுகின்றது. 

உதாரணத்திற்கு

1. நல்ல நேரம் பார்ப்பது
2. இறந்தவுடன் ஆரம்பித்த பாத்திஹா என்னும் இபாதத், காலம் காலமாக வருஷத்து பாத்திஹா என்று தொடர்வது
3. திருமணங்களின் போது பாத்திஹாக்கள்
  (1) பந்தல் கால் நடும்போது பாத்திஹா
  (2) பரிச வைபவ பாத்திஹா
  (3) மாப்பிள்ளை தலையில் தொப்பி வைக்கும் போது பாத்திஹா
  (4) மாலை போடும் போது பாத்திஹா 
  (5) நிக்காஹின் போது பாத்திஹா
  (6) நிக்காஹின் போது ஒதும் நபிமார்களை போல் வாழ்க என்னும் துஆ
4 பெயர் வைக்கும் போது பாத்திஹா
5 சுன்னத் மலர்மாலையின் போது பாத்திஹா
6 தர்காவிற்கு சென்றவுடன் பாத்திஹா
  
இன்னும் ஏராளம். இது உதாரணத்திற்கு மட்டும். மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தும் இபாதத் என்ற பெயரால் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். இபாதத் என்றால் எல்லா முஸ்லீம்களுக்கும் ஒன்று தானே. அதெப்படி ஊருக்கு ஊர் இபாதத் வேறுபடும். 

இபாதத் என்பது அல்லாஹ் விதித்தவைகளாகும். அல்லது அல்லாஹ் வஹி மூலம் சொல்லி நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டி தந்தவைகளாகும். மேலே சொன்ன அனைத்தும் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாதவை. ஏன் இதை ஊருக்கு ஊர் வித்தியாசப்படுத்திக் கொண்டு இபாதத்தென்ற போர்வையில் பித்அத்துகளை செய்கின்றனர். இதற்கும் குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் சம்பத்தமே இல்லையே. இதை கேட்டால் குர்ஆன், ஹதீஸை வைத்தே சட்ட்ங்களில் வேறுபடும் குழுக்கள் பற்றி என்னிடம் திரும்ப கேட்கிறீர்கள்.

காரணம் நபிகள் ஸல்... கூறினார்கள், நான் என்ன கூறுகின்றேனோ அதை அப்படியே பின்பற்றுங்கள், அதிகமாக கேள்வி கேட்டு பனி இஸ்ராயில் கூட்டம் வழி கெட்டதை போல ஆகி விடாதீர்கள் என்றார்கள், இது இப்போது பொருந்தாது என்று கூற கூடாது, பொருந்தாது என்றால் அதற்கு ஆதாரம் தர வேண்டும், 
 
நானும் அதைதான் கூறுகிறேன். நேரடியாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் உள்ள கருத்துக்கு ஏன் பிக்ஹ் சட்டத்தை / மத்ஹப் சட்டத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். உதாரணத்திற்கு உ.பி. மாநிலத்தில் (இம்ரானா) ஒரு மாமனார் மருமகளை கற்பழித்து விட்டார் என்று ஒரு சம்பவம் நடந்து அதற்கு தீர்வு காண உ.பி மாநிலத்தில் தேவ்பந்த் மதரஸாவை அனுகிய அந்த குடும்பம் இறுதியில் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்பட்ட தீர்வை சொல்ல ஒட்டு மொத்த இந்தியாவில் அனைவரும் நம் இஸ்லாமிய சட்டத்தை விமர்சனம் செய்தனர். 

தீர்வு: மாமனார் மருமகளை கற்பழித்ததால் அந்த கணவன் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது. ஏனெனில் அந்த மாமனார் மருமகளை கற்பழித்ததால் கனவனுக்கு மனைவி தாய் அந்தஸ்து பெற்று விட்டாள். ஆகையால் கனவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறினர். இதற்கு ஆதாரமாக கனபி நூல்களை எடுத்து காட்டியது அனைவருக்கும் தெரியும். இது நடந்தது 4 அல்லதது 5 ஆண்டுகளுக்கும் முன்னர் என்று நினைக்கிறேன். கற்பழிப்புக்கு குர்ஆன் ஹதீஸில் என்ன தீர்வு, என்ன தண்டனை என்று குர்ஆன், ஹதீஸில் இருக்கும் போது ஏன் ஹனபி நூல்களில் தேட வேண்டும். 

மார்க்கத்தின் தீர்வு: 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி தொழுவதற்காகப் புறப்பட்டார். அவரை ஒரு ஆண் கண்டு போர்வையால் போர்த்தி அவரைக் கற்பழித்து விட்டார். அவள் சப்தமிட்டதும் அவன் ஓடி விட்டான். வேறொரு ஆடவர் அவளருகே வந்தார் இந்த மனிதன் என்னைக் கெடுத்துவிட்டான் என்று அப்பெண் கூறினாள். முஹாஜிர்களில் ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்ற அப்பெண் ”இந்த மனிதன் என்னைக் கெடுத்து விட்டான்” என்ற கூறினார். யார் அவளைக் கெடுத்ததாக அப்பெண் அடையாளம் காட்டினாளோ அவரைப் பிடித்து வந்தனர். ”அவன்தான்” என்று அப்பெண் அடையாளம் காட்டினாள். நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வரப்பட்டு கல்லெறியுமாறு உத்தரவிடப்பட்டதும் அப்பெண்ணை உண்மையிலேயே கெடுத்தவர் எழுந்து ”அல்லாஹ்வின் தூதரே நான்தான் அவளைக் கெடுத்தவன்” என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்” என்று கூறினார்கள். (தவறாகப் பிடித்து வரப்பட்ட) மனிதரிடம் அழகிய வார்த்தைகளைக் கூறினார்கள். அப்பெண்ணைக் கெடுத்தவரைக் கல்லெறியுமாறு ஆணையிட்டார்கள். ”மதீனாவாசிகள் அனைவரும் எந்த அளவு தவ்பா – பாவமன்னிப்புக் கேட்டால் ஏற்கப்படுமோ அந்த அளவு இவர் தவ்பா – பாவமன்னிப்புக் கேட்டு விட்டார்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர், வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) திர்மிதீ, அபூ தாவூத் 

இது ஹதீஸ் படி மார்க்கம் நமக்கு தந்த தீர்வு. சரியான ஹதீஸ் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சரியான ஹதீஸ் பதியவும். 
  
ஏன் குர்ஆன் மற்றும் ஹதீஸை மட்டும் நேரடியாக பின்பற்றினால் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்ற முடியாதா? விளக்குங்கள். மார்க்க விஷயத்தில் குர்ஆன், ஹதீஸில் இல்லாததை யார் கூறினாலும் நாம் ஏற்கக்கூடாது. நபியுடைய வாக்கும் அது தான். 

வல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்டு நபிகளாரால் உருவாக்கப்பட்ட  மார்க்கம் ஒன்றே, ஆகவே இதில் இடைச் செருகல் செய்யாமலும், நீக்கம் செய்யாமலும் அல்லாஹ்வும் ரசூலும் தந்த உயர்ந்த தூய்மையான மார்க்கத்தை  இமாம்களின் வழிகாட்டுதலின் பேரில்  நாம் அனைவரும் பினபற்றுவோம்.

தூய்மையான மார்க்கமான இஸ்லாத்தை அதன் தூய வடிவிலே அறிய, பின்பற்ற எல்லா விஷயத்தையும் மார்க்கத்தில் முழுமையாக சொல்லப்ப்ட்டு விட்டது. அதில் நீங்கள் கூறும் பிக்ஹ் சட்டத்தால் தான் இடைச் செருகல் நிகழ்ந்துள்ளது. இமாம்களின் வழிகாட்டுதலின் பேரில் தான் நாம் மார்க்கத்தில் முழுமையாக கடைப்பிடிக்க முடியுமா? இதற்கு விளக்கம் தரவும், அல்லது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்.

தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்

தோழமையுடன்

அபு நிஹான் 

2010/6/30 Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com>

Syed AbdusSalam Ibrahim

unread,
Jul 1, 2010, 11:50:15 PM7/1/10
to fro...@googlegroups.com
I dont want to reply u, as ur heart was sealed,

2010/7/1 ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்) <hajam...@gmail.com>

Riyaz

unread,
Jul 2, 2010, 1:36:17 AM7/2/10
to fro...@googlegroups.com
Please stop this topic !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

2010/7/2 Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Jul 2, 2010, 12:33:36 PM7/2/10
to fro...@googlegroups.com
நிர்வாகிக்கு......

RAFIK  என்பவர் க்கு  , உடன் எனக்கு விளக்கம் அளிக்க  கூறவும்....... இது  வீண்  பழிகள், , வெறுப்பு க்களை தவிர்க்க உதவும்........

அத்துடன்இங்கு,   Syed AbdusSalam Ibrahimஎன்பவர்  எழுதுவது  ...


>>>>I dont want to reply u, as ur heart was sealed,<<<<<

 கண்ணியமாக இல்லை.........  பண்பாக இல்லை.......அறிவுறுத்தவும்..........

ibnuh...@mail.com

unread,
Jul 2, 2010, 12:40:37 PM7/2/10
to fro...@googlegroups.com
 சகோ,  IBRAHIM.,  salaam to you.............

உங்கள் பதிலுள்ளதுக்கு ஒரு கேள்வி...... நீங்கள்  எழுதியுள்ளீர்கள்......

>>>>>ஆசை கூடாது என்று கூறிய புத்தருக்கு ஆசை வெறுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சிலையை வணங்க கூடாது என்று கூறிய புத்தரையே கடவுள் ஆகிவிட்டார்கள்.>>>>>.

புத்தர் சிலையை வணங்க கூடாது என கூறிய  எதாவது ஒரு உண்மையான வரலாற்று ஆதாரம் தர வேண்டும்.....நீங்கள் எதையும்  ஆதாரமின்றி  இங்கு எழுத மாடீர்கள் என நம்புகின்றோம்... .இது எமது மேலதிக ஆய்வுக்கு உதவும்..

இங்கு , சீல் வைத்த .....அது இது என சபித்து எழுதாமல் , அழகாக , பொறுமையாக பதில் தரவும்....
.......

Roshan Rosheen

unread,
Jul 3, 2010, 3:06:45 AM7/3/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும், 
இந்த செய்யித் இப்ராஹி போன்றவர்கள் (முகல்லிதுகள்)பதில் சொல்ல திராணி இல்லாமல் இவ்வாறு பயம் காட்டுவது இவர்களுடைய வழமை.
 அவர் அழகான முறையில் தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள் என்று சொல்லியும் உள்ளார் உங்களுக்கு அழகான முறையில் பதில் சொல்ல தெரியவில்லை 
 இது பொது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கூட்டமைப்பு
இது நீங்கள் சொன்னது அதற்கு மாற்றமாக தவ்ஹீத் ஜமாத்தை மாத்திரம் தாக்குவது ஏதோ நீங்கள் எல்லாம் ரொம்ப சரி என்று நினைப்பு.  உங்களுடைய மத்ஹபு குப்பைகளை கொட்டுகிறேன் கேளுங்கள்.
முதலில்  ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் மத்ஹபு குப்பைகளை கொட்டும் போது நாங்கள் இமாம்களை திட்டுவதாக உங்கள் சஹோதரர்களிடம் பயான்களில் மூளை சலவை செய்கிறீர்கள் நாங்கள் சொல்லும் குப்பைகள் கண்ணியமிக்க அந்த நான்கு இமாம்களினால் எழுதப்பட்ட சட்டபுச்தகங்ககளில் இருந்து இல்லை.நீங்கள் கண்ணியம் கொடுத்து பாதுகாக்கும்  அந்த கண்ணியமிக்க எந்த இமாம்களுக்கும் சம்பந்தமில்லாத மத்ஹபு புஸ்தகங்கள் ஆகிய 

ஆழம் கிரி ஹிஜ்ரி:1118 
துர்ருல் முக்தார் ஹிஜ்ரி:1071 
ஷராஹ் விகாயா ஹிஜ்ரி:745 
கன்சுல் தகாயிக் ஹிஜ்ரி:701 
ஹிதாயா ஹிஜ்ரி:593 
குதூரி ஹிஜ்ரி:428 

இன்னும் ...............
இவைகள் எந்த வகையிலும் இமாம்களுக்கு  சம்பந்தம் இல்லாதவைகள். நான்கு மத்ஹபில் ஒன்றை தக்லீது செய்வது மத்ஹபு வாதிகளின் கடமை அப்படி என்றால் இந்த புஸ்தகங்கள் எந்த கண்ணியமிக்க இமாம்களால் எழுதப்பட்டது இமாம் அபூ ஹனீபா 1118 தான் வாழ்ந்தார்களா இமாம் ஷாபிஈ 428 தான் வாழ்ந்தார்களா ஏன் பொய் புளுகுமூடைகளாக உள்ளீர்கள் .சஹோதரர்  செய்யித் அப்துஸ்ஸலாம் அவர்களே உங்கள் மத்ஹப் பிடிவாதத்தை விட்டுட்டு குரான் ஹதீஸ் பக்கம்  உங்களை அழைக்கிறேன் நீங்கள் இந்த இயக்க வாதிகளையோ தரீகா வாதிகளையோ  பார்த்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் நீங்கள் குரான் ஹதீஸை மாத்திரம் பாருங்கள் இமாம்களை அப்படியே தூக்கி எறியுங்கள் என்று நான் சொல்லவில்லை நான்கு மத்ஹபுடைய இமாம்களை மாத்திரம் பார்க்காமல் பிக்ஹு கலையில் ஈடுபட்ட எல்லாம் இமாம்களையும் ஹதீஸ் கலையில் ஈடுபட்ட எல்லா இமாம்களையும் ஏற்று கொண்டு அவர்கள் செய்த ஆய்வுகளில் குரான் சுன்னாவுக்கு உட்பட்ட சட்டங்களை எடுத்து நடக்கும் படியே உங்களை அலைகிறேன் .

1 ."பார்சி மற்றும் ஏனைய மொழிகளில் பாங்கு சொல்வது கூடும்".
               துர்ரு -பாகம் 1 .பக்கம் 225 
2 ."எவருடைய மனைவி அழகாக இருக்குறாலோ அவரே இமாமத் செய்வதற்கு மிகவும் தகுதியானவர் "
               துர்ரு   முக்தார் -பாகம் 1 ,பக்கம் 259 
3 ."இமாமத் செய்பவரின் மண்டை பெரிசாக இருக்கவேண்டும் "
               துர்ருல்   முக்தார் பாகம் 1 ,பக்கம் 259 
4 ."இமாமுடைய உறுப்பு சின்னதாக இருக்கவேண்டும் "
               துர்ருல்   முக்தார்-பாகம் 1 ,பக்கம் 259 
5 ."தொளுபவரிடம் எத்தனை ரகாதுகள் தொளுகிறாய் என்று கேட்கபட்டால் இத்தனை ரகாதுகள்  என்று சுட்டிகாட்டுவது கூடும்"
               முன்யதுள் முசல்லி - பக்கம் 143 
6 "இஸ்லாமிய ஆட்ச்சி நடைபெறும் நாட்டில் தான் ஜும்ஆ  நடத்தப்படவேண்டும் என்பது ஜும்ஆ விதிகளில்  ஒன்றாகும் "
                துர்ருல்    முக்தார் -பாகம் 1 ,பக்கம் ,368 
                ஹிதாயா      பாகம் 1 ,பக்கம் ,641 
7 ."ஒரு ஹனபி மத்ஹபை சார்ந்தவன் ஷாபியாக மாறி விட்டால் அவன் தண்டிக்க பட வேண்டும் "
                துர்ருல்   முக்தார் -பாகம் 2 ,பக்கம் 443 
                ஆழம்   கிரி -பாகம் 2 ,பக்கம் 702 
8 ."ஹனபி மத்ஹபை சேர்ந்தவன் ஷாபி மத்ஹபிட்கு சேர்ந்து விட்டால் அவருடைய சாட்ச்சி ஏற்றுக் கொள்ளபடாது "
                துர்ருல்  முக்தார் -பாகம் 3 ,பக்கம்,297 
9 ."நமது மத்ஹபு தான் சரியானது மற்றவரின் மத்ஹபு தவறானது "
                துர்ருல்   முக்தார் பாகம் 1 ,பக்கம் 18 
10 ."கொஞ்சமாக கஞ்சா அபின் சாப்பிடலாம் ஆனால்.........பாமர மக்களுக்கு இதை சொல்லகூடாது "
                இஆனா (ஷாபி மத்ஹபு நூல்)-பாகம் 4 ,பக்கம் 157 
11 ."குரான் முழுவதையும் படிப்பதையும் விட பிக்ஹு நூலை படிப்பது மிக  சிறந்தது "
                ஆழம்கிரி -பாகம் 4 பக்கம் 359 
12 ."எவருடை பிராணியையும் அபகரித்து குர்பானி கொடுப்பது தவறில்லை"
                ஷரஹூல்விகாயா -பக்கம் 559 
13 ."இமாமோ கலீபாவோ அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு ஹத் தண்டனை கிடையாது"
                ஹிதாயா 2 :463 
                ஆலம்கிரி 2 :675  
                துர்ருல்  முக்தார் 2 :417 
                கன்சு   பக்கம் 192  
14 .அடுத்தவன் மனைவியை ஒருவன் திருமணம் செய்து அவளோடு வாழ்ந்தால் ஹத் தண்டனை இல்லை "
                 துர்ருல்  முக்தார் 2 :414 
15 ."இஸ்லாமிய ஆட்ச்சி இல்லாத நாடுகளில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுடன் வட்டி வாங்குவது கூடும் "
                 ஆலம்கிரி   3 : 190 
16 .இஸ்லாமிய ஆட்ச்சி இல்லாத நாடுகளில் ஒரு முஸ்லிம் பன்றி இறைச்சி ,மது போன்றவைகளை காபிர்களுக்கு விற்பது கூடும் "
                 ஆலம்கிரி 2 :394 
சஹோதரரே இன்னும்  ஏராளம் உண்டு உண்மையாக  நீங்கள் ஒரு முஸ்லிம் என்று சொன்னால் இதை பார்த்து மத்ஹபில் இருந்து வெளியேறுங்கள்.
இவ்வாளவு  குப்பைகளை வைத்து கொண்டு எப்படி சார் தவ்ஹீத் ஜமாதுடைய இஜ்திஹாதான முடிவுகளை பற்றி குறை சொல்வீர்கள் முதலில் உங்கள் குப்பைகள் பற்றி தெளிவடையிங்கள். 


From: Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Fri, July 2, 2010 9:20:15 AM

Syed AbdusSalam Ibrahim

unread,
Jul 3, 2010, 10:07:34 AM7/3/10
to fro...@googlegroups.com
இது பொது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கூட்டமைப்பு
இது நீங்கள் சொன்னது அதற்கு மாற்றமாக தவ்ஹீத் ஜமாத்தை மாத்திரம் தாக்குவது ஏதோ நீங்கள் எல்லாம் ரொம்ப சரி என்று நினைப்பு.  உங்களுடைய மத்ஹபு குப்பைகளை கொட்டுகிறேன் கேளுங்கள்.

இது பொது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கூட்டமைப்பு என்பது உண்மை தான். ஆனால்  பொதுவான தகவல் இல்லாமல் தவ்ஹீத் ஜாமத்தின் விளம்பரம் கொடுத்ததால் தான் பிரச்சனை,  தவ்ஹீத் ஜமாஅத்தை யோ வேறு அமைப்பையோ தாக்கவில்லை, எங்களை குறை கூறுவதால் உங்களில் சுட்டி காட்டுகின்றேன்,

முதலில்  ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் மத்ஹபு குப்பைகளை கொட்டும் போது நாங்கள் இமாம்களை திட்டுவதாக உங்கள் சஹோதரர்களிடம் பயான்களில் மூளை சலவை செய்கிறீர்கள்

பேசுவதில் மரியாதை இருக்க வேண்டும், மத்ஹப் குப்பை, அப்படின்னு நீங்கள் பேசுவீர்கள், அதற்கு மறுப்பு தெரிவித்தால் நாங்கள் திராணி இல்லாதவர்கள் என்று சொல்லுவீர்களா? மூளை சலவை செய்ய எங்களுக்கு தேவை இல்லை, புரிந்து தான் இஸ்லாமிய சட்ட திட்டத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் . ஆனால்  நீங்கள் தான் எங்கள் மக்களை மூளை சலவை செய்து உங்கள் இயக்கத்திற்கு கூட்டம் சேர்கின்றீர்கள், அது தானே உண்மை. ஆனால்  நீங்கள் மேடைகளில் எங்களை, எங்கள் உலமாக்களை, மரியாதை இல்லாமல் தான் பேசிக்கொண்டு இருகின்றீர்கள்,  ஆனாலும் நாங்கள் மரியாதையோடு தான் பேசிக்கொண்டு இருக்கின்றோம்,  அனைத்திலும் குரான் ஹதீஸை நேரிடையாக பின்பற்றுவோம் என்பவர்கள் இப்படி மட்டமாக, திராணி இல்லாதவர்கள், குப்பை என்று நபிகளார் ஏனையவர்களை தூக்கி எரிந்து பேசி உள்ளார்களா (அப்படி கேட்பதே தவறு, ஏன் என்றால் நபிகளார் அப்படி பேச மாட்டார்கள்) பின் எப்பிடி முன் உதாரணம் இல்லாமல் பேசுகின்றீர்கள்,

இப்படி எல்லாம் பேச ஆரம்பித்தல் உங்களின் பட்டியல் நீண்டது, சந்தி சிரிக்கும் அளவில் உள்ளது,

1. பன்றி மாமிசம் தவிர ஏனையது பொருத்தலாம் என்றது,
2. குரானில் மாற்றம் உள்ளது என்று தொண்டியில் நடந்த விவாதத்தில் சொன்னது, 
3. நபிகளாரே வஹி இல்லாமல் சொன்னதை ஏற்று கொள்ள முடியாது என்று சொன்னது,
4.பலமான ஹதீஸை கூட அறிவு ஏற்கவில்லை என்று தூக்கி எறிவது,
5.அன்சாரி சஹாபாக்களை நபிகளார் இருக்கும் வரை தொடராத நோய், இன உணர்வு இப்போது வந்தது, அண்ணன் (நபிகளார்) எப்போ காலிஆவான் திண்ணை எப்போ காலியாகும் என்று இருந்தாங்க  என்று சொன்னது
6. அபூபக்கர் ரழி... அவர்களின் மகனாரை ரவுடி என்று சொன்னது,
7. உமர் ரழி... அவர்களை குறைவு படுத்தி பேசுறது,  (முதல் கொள்கை குழப்பம் என்று சொன்னது)
8.அபூபக்கர் ரழி... காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று சொல்லியதை, காசு விஷயம் என்பதால் எப்பிடி மாறிட்டாங்க பார்த்தீங்களா, (ஆனால்,  இவர்களும் கொடுத்த பொருளின் ஜகாத்திற்கு, ஜகாத் தேவை இல்லை ஏன் என்றால் காசு விஷயம் என்பதாலா?)
என்று சொன்னது
9. ஜகாத்தை மறுப்பதற்கு அவர்கள் ஒரு முடிவை எடுத்து கொண்டு குறுக்கு வழியை தேடி பார்த்து தராமல் இருப்பது, (இப்போது அவர்களும் தர மறுப்பது)
10. அலி ரழி... அவர்களை எடுப்பார் கை பிள்ளை என்று சொல்வது,
11. இஸ்லாத்தின் பெயரால் ஆயுதம் தூக்கும் குழப்பம் என்று கூறி,  ஜிஹாதிற்கு, அழைத்தார், உசுப்பேத்தினார், என்று அலி ரழி... அவர்களை குறை பேசுவது
12. உஸ்மான் ரழி... அவர்களை கொன்றவர்களை அலி ரழி... அடைக்கலாம் கொடுத்தார் என்பது,
13. அம்ரு பின் ஆஸ் ரழி... அவர்களை கிரிமினல் (எல்லா விஷயத்திற்கும் கிரிமினல் வேலை பார்ப்பவர், ) என்று சொல்வது,
14. ஹுசைன் ரழி... அவர்களை கூறும் போது பதவி ஆசை வந்தது  பழைய பைத்தியம் பிடித்தது, பழைய கிறுக்கு பிடித்தது,

இதுவெல்லாம் அடிப்படை விஷயத்தில் சிலது, ஆனால் சட்ட விஷயத்தில் நிறைய உள்ளது,  உதாரணத்திற்கு

1. ஒரு ஆண், இரு சகோதரியை மணம் முடித்தது, அதற்கு தீர்வு கேக்கும் போது விரும்பியவளை தலாக் கூற சொல்லி (இரண்டாவது நிக்காஹ் செல்லும் என்று சொன்னது) கேட்டால்,  இஸ்லாத்திற்கு புதிதாக வந்த ஒருவருக்கு நபிகளார் ஸல்... சொன்ன தீர்வை ஆதாரமாக்குவது, ,

2. நபிகளார் ஜும்மாவிற்கு முந்திய சுன்னத் உண்டு என்று சொல்லி இருக்க, முந்திய சுன்னத் இல்லை என்று 1995 வரை இல்லை என்று கூறிவிட்டு பிறகு உண்டு என்று ஏன் தடுமாற்றம், ஆய்வில் பக்குவம் இல்லை என்பது தானே?

3. மேலும், வெகு காலம் வரை பெண்களுக்கு ஜியாரத் இல்லை என்று சொல்லிவிட்டு 2007 ல் மதுரை இல் நடந்த விவாதத்தில்  நாங்கள் ஹதீஸை தற்போது தான் பார்த்தோம் என்று சப்பை கட்டு காட்டுகின்றீர்களே, ஆய்வு திறன் இல்லை என்பது தான் உண்மையா?

மத்ஹபை யாரும் அவசியமாக பின்பற்ற வேண்டும் என்று சொல்ல வில்லை, (சுயமாக சொல்லி இருகின்றார்கள் என்று சொன்னால் அதை இஷ்டம் இருந்தால் பின்பற்றலாம் என்பது தான் உண்மை. ) இமாம்கள் சொல்லி தந்த விளக்கத்தின் அடிப்படையில் குரான் ஹதீஸை பின்பற்றுகிறோம், கீழே தாங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் நீங்கள் அரபியில் அர்த்தம் வைத்தீர்கள
, இல்லை அர்த்தம் வைக்க தெரியுமா? உங்கள் இயக்கத்தின் தலைவர்கள் சொல்வதை தானே கேட்கின்றீர்கள், 

எப்படி சார் தவ்ஹீத் ஜமாதுடைய இஜ்திஹாதான முடிவுகளை பற்றி குறை சொல்வீர்கள் முதலில் உங்கள் குப்பைகள் பற்றி தெளிவடையிங்கள்.

எங்களை மட்டும் முகல்லிதுகள் என்று வேறு படுத்தி காட்ட வேண்டாம், காரணம் தவ்ஹீத் ஜமாத்தின் இஜ்திஹாத் என்று நீங்கள் கூறி உள்ளது பார்த்தால் நீங்களும் முகல்லிதுகளாக தான் இருக்கின்றீர்கள்,

நாம் பின்பற்ற வேண்டியது இரணடு விஷயங்கள். 
1. குர்ஆன்
2. ஹதீஸ்

இதில் மூன்றாவதாக பிக்ஹ் கலை எங்கு இருந்து வந்தது. நான் கேட்கிறேன், பிக்ஹ் கலை இல்லையென்றால் மார்க்கத்தை பின்பற்றலாகாதா?

என்று மற்றொருவர் கூறி இருக்கின்றார், ஆனால்,  இரண்டாமவர், இஜ்திஹாதை அங்கீகரிக்கின்றார்,

தவ்ஹீத் ஜமாத்தை மாத்திரம் தாக்குவது ஏதோ நீங்கள் எல்லாம் ரொம்ப சரி என்று நினைப்பு.

நான் தவ்ஹீத் ஜமாத்தை தாக்கவில்லை, குரான் ஹதீஸை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் இப்படி பிரிந்து இருக்கின்றீர்கள் என்பது தான் கேள்வி,  1991 இல் ஜாக் சார்பாக காதியனிக்கு எதிராக வாதம் புரிந்தவர்கள், ஏன் அந்த அமைப்பை விட்டு வெளியானார்கள், குரான் ஹதீஸ் மட்டும் மார்க்கம் என்று இருக்க வேண்டியவர்கள், ஏன் ஆய்வு செய்து சட்டம் சொல்கின்றார்கள், நேரிடையாக வருவதை பின்பற்றுவதில்லையே ஏன்? மார்கத்தில் பிரிவினை இருக்க கூடாது என்று தானே இப்படி ஆரம்பித்தீர்கள், பின் ஏன் உங்களிலேயே பிளவு . யாராலும் நேரிடையாக மார்க்கத்தை பின் பற்ற முடியாது, என்பது தான் உண்மை,

நபிகள் நாயகம் ஸல்... சஹாபாக்களை பனு குறைழா நோக்கி அனுப்பினார்கள், அப்போது கூறினார்கள், நீங்கள் அசர் தொழுகை, பனு குறைழா வில் தான் தொழ வேண்டும் என்றார்கள், நேரம் வந்து விட்டதால் வழியில் தொழுதார்கள் சிலர், சிலரோ, அங்கு சென்று தான் தொழுதார்கள், இரண்டும் சரி என்றார்கள்
நபிகள் நாயகம் ஸல்... அவர்கள்.  இதில் யார் செய்தது சரி என்ற பார்க்க முடியும், 

மேலும் ஒரு முறை, இரண்டு சஹாபாக்கள் சென்றார்கள், தண்ணீர் இல்லை, தயம்மம் செய்து தொழுது கொண்டார்கள், பிறகு தண்ணீர் வரும் பொது ஒரு சஹாபி மீண்டும் தொழுக வேண்டும் என்று கூறி தொழுது கொண்டார், மற்றொரு சஹாபி தொழுக தேவை இல்லே, காரணம் நாம் தொழும் பொது  தண்ணீர் இல்லை, அதனால் தயம்மம் செய்தது சரி என்று இருந்து விட்டார்கள், இரண்டும் நபிகளாரிடம் எடுத்து சொல்லப்பட்டது, ஒரு முறை தொழுதவரை பார்த்து மார்க்கப் பிரகாரம், தாங்கள் செய்தது சரி என்றார்கள், இரு முறை தொழுதவரை பார்த்து, உங்களுக்கு இரண்டு கூலி உண்டு என்றார்கள்,

இதற்கு பெயர் தான் ஆய்வு, அதே போல் தான் உங்கள் பிரிவினர்கள், அனைவரும் ஏதோ ஒரு ஹதீஸ் கலை இமாம் சொன்னதை தான் ஏற்று நடந்து கொண்டு இருக்கின்றீர்கள்,


விட்டால் நான் மின்னஞ்சலில் எழுதும் வார்த்தைகளுக்கெல்லாம் ஆதாரம் கேட்பீர்கள் போலிருக்கிறதே.

மின் அஞ்சலில் சும்மா எழுதினால் பரவா இல்லை, மார்கத்தை பற்றி எழுதும் போது  அறிஞர் களை ஒருமையில்  எழுது கின்றீர்கள், நபிகளார் பேசியதற்கு வழி காட்ட வில்லையா? அல்லது உங்களுக்கு தெரியவில்லையா ? இல்லை நாங்கள் அப்படி பேசி இருக்கின்றோமா உங்களையோ, உங்கள் அறிஞர் கலையோ, எங்கு இருந்து எடுத்தீர்கள் இப்படி பட்ட முன் மாதிரிகளை, நபிகளார் காட்டினார்களா ?


ஆனால் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை மாற்று மதத்தவர்களுக்கு எழுதி அனுப்பியுள்ளார்கள்.


வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் நாங்கள் முஸ் ம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!எனக் கூறி விடுங்கள்!

என்ற 3:64 வசனத்தை ரோமாபுரி மன்னர் ஹெர்குலிசுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதியுள்ளார்கள். (பார்க்க புகாரி எண் 7 மற்றும் 4553)
மாற்று மதத்தவர்களும் இவ்வசனங்களைப் படித்துத் திருந்த வேண்டும் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்பினார்கள்.  தூய்மையற்றவர்கள் குர்ஆனை தொடக் கூடாது, ஓதக் கூடாது என்றிருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு எழுதி அனுப்பியிருக்க மாட்டார்கள்.


இதில் சுத்தம் இல்லாவிட்டால், குரானை தொடலாம், ஓதலாம் என்று எங்கு இருகின்றது, அது கடிதம் தான், கடிதத்திற்கு அந்த சட்டம் இல்லை,

عن حكيم بن حزام رضي الله عنه قال : لـما بعثني رسول الله صلى الله عليه وسلم الى اليمن قال : لاتمس القرآن الا وانت طاهر

رواه الحاكم فى المسدرك وقال : صحيح الاسناد ووافقه الذهبيز ورواه الدار قطني في سننه والطبراني فى الـمعجم الكبير

ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொடவேண்டும்.

நூற்கள்: ஹாகிம்- எண்: 6066, தாரகுத்னீ - எண்: 386,

தப்ரானி(கபீர்)- எண்:3067

இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசை நம்பகத்தன்மை வாய்ந்ததென்று இமாம் ஹாகிம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் தொடர் அழகியதென்று இமாம் ஹாஜிம் கூறுகின்ற கருத்தை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி தனது தல்கீஸ் ஹபீர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

தல்கீஸ் ஹபீர் 1-131

عن عبد الله بن عمر رضي الله عنه قال : قال النبي صلى الله عليه وسلم : لايمس القرآن الا طاهر

رواه الدارقطني في سننه والطبراني فى الكبير والصغير والبيهقي فى السنن الكبرى


இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள். பரிசுத்தமானவர் தான் குர்ஆனைத் தொட வேண்டும்.

அறிவிப்பாளர்- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

நூற்கள்: தாரகுத்னீ - எண்: 383, பைஹகீ/377 தப்ரானி

(கபீர்)- எண்:13049, தப்ரானி(ஸஙீர்)- எண்:1160

இந்த ஹதீதின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்.

நூல்; மஜ்மவு ஜவாயித் 1-276

عن عثمان بن ابى العاص قال : وفدنا على رسول الله صلى الله عليه وسلم فوجدوني افضلهم اخذا للقرآن وقد فضلتهم بسورة البقرة فقال النبي صلى الله عليه وسلم : قد امرتك على اصحابك وانت اصغرهم ولا تمس القرآن الا وانت طاهر (رواه الطبراني فى الكبير)

உத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்கூறுகிறார்கள்; நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்தோம்.எங்களில் குர்ஆனை நன்கு ஓதக்கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் சொன்னார்கள்; நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும் போது தான் குர்ஆனைத் தொடவேண்டும்.

நூல்: தப்ரானி (கபீர்)- எண்: 8255

இந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற இஸ்மாயில் இப்னு ராஃபிஃ என்பவர் பலவீனமானவர் என யஹ்யா இப்னு மயீன் தெரிவித்தாலும் இமாம்

புகாரி அவர்கள் அவரை நம்பகமானவர் என உரைக்கிறார்கள்.

நூல்: மஜ்மவு ஜவாயித் 1-277



மேலும்  குரானை தொட கூடாது என்று அம்ரு பின் ஹஸ்ம் ரழி... அவர்களுக்கு நபிகளார் கடிதம் எழுதி உள்ளார்களே,  அந்த விஷயத்தை என்ன செய்வது,

عن عبد الله بن ابي بكر بن محمد بن عمرو بن حزم عن ابيه عن جده قال: كان في كتاب النبي صلى الله عليه وسلم لعمرو بن حزم : لايمس القرآن الا على طهر. رواه مالك وابن  حبان والدارمي والبيهقي والدارقطني

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு இருந்தது: ‘தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

அறிவிப்பாளர்- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹுஅன்ஹு

நூற்கள்: முஅத்தா-எண்:466, தாரமீ- எண்:2195, பைஹகீ- எண்:376,


இமாம் தாரகுத்னீ அவர்களின் கூற்று:-

இதன் அறிவிப்பாளர்கள் நம்பகத்தன்மையுள்ளவர்கள்.

இமாம் பஙவீ அவர்களின் கூற்று:-

قال البغوي سمعت احمد بن حنبل وسئل عن هذا الحديث فقال : ارجو ان يكون صحيحا وقال ايضا : لا اشك ان رسول الله صلى الله عليه وسلم كتبه

இந்த ஹதீஃதின் நிலைபற்றி இமாம் அஹமத் இப்னுஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வினவப்பட்ட போது, இது ஆதாரபூர்வமானது என்றே கருதுகிறேன் என பதிலளித்த இமாம் அவர்கள் மேலும் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை எழுதினார்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

நூற்கள்-  திப்யான்1-409  , இர்வாவுல் ஙலீல்1-161

இமாம் யஃகூப் இப்னு சுப்யான் அவர்களின் கூற்று:-

قال يعقوب بن سفيان : لا اعلم كتابا اصح من هذا الكتاب فان اصحاب رسول الله صلى الله عليه وسلم والتابعين يرجعون اليه ويدعون رأيهم

எனக்கு தெரிந்த இதைவிட சிறந்த கடிதம் எதுவுமில்லை. ஏனென்றால், நபித்தோழர்களும் மற்றும் தாபியீன்களும் தங்களுது சொந்த யூகங்ளைப் புறந்தள்ளிவிட்டு குர்ஆனைத் தொடுவதற்கு சுத்தம் அவசியம் என்ற நிலைப் பாட்டிலேயே இருந்தனர்.

நூல்:    திப்யான் ஃபீ அக்ஸாமில்  குர்ஆன்- பக்கம்:144

இமாம் ஹாகிம் அவர்களின் கூற்று:-

قال الحاكم : قد شهد عمر بن عبد العزيز والزهري لهذا الكتاب بالصحة

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய இக்கடிதம் ஆதாரபூர்வமானது என்று உமர் இப்னு அப்தில் அஜிஸ் அவர்களும் ஜூஹ்ரீ

அவர்களும் சாட்சி பகர்ந்துள்ளனர்.

நூல்:  ஹாகிம்: 1-397

இமாம் இப்னு அப்திர் பர்ர் அவர்களின் கூற்று:-

قال الامام ابن عبد البر : وكتاب عمروبن حزم هذا تلقاه العلماء بالقبول والعمل وهم عندهم اشهر واظهر من الاسناد الواحد المتصل

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அம்ரு இப்னு ஹஜ்ம் அவர்களுக்கு இக்கடிதத்தை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஏற்று அமல்படுத்தியுள்ளார்கள்.மேலும்,தொடர் வரிசையுள்ள ஒரு வழித் தொடர் ஹதீஃத்தைவிட கடிதம் சம்பந்தப்பட்ட இந்த ஹதீஃத் பிரபல்யமடைந்ததாகவும் மிகவும் ஏற்கத்தக்கதாகவும் அவ்வ்றிஞர்களிடம் கருதப்பட்டது.

நூல்:  இஸ்திஃத்கார் 8-10

சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட இப்னு

தைமியாவின் கூற்று:-

قال ابن تيمية : وهم كتاب مشهور عند اهل العلم.

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய இக்கடிதம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் பிரபல்யமுள்ளதாகும்.

நூல்: ஷரஹுல் உம்தா 1-382



நீங்கள் என்ன பரவா இல்லை என்று கூறுகிறீர்கள். ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவரும் ஒரு ஹதீஸ் பலகீனமானது என்று கூறுகிறார். நீங்கள் "பலவீனமான ஹதீஸ்களை ஏற்று கொள்ள மாட்டோம் சொன்னால் கூட பரவா இல்லை" என்று கூறுகிறீர்கள். இது உங்கள் இஷ்டம் இல்லை. மார்க்கத்தில் உங்களின் சுய விருப்பு வெறுப்புகளை உள்ளே புகுத்தாதீர்கள். அப்போது பலகினமான ஹதீஸை பின்பற்றலாம் என்று கூறுகிறீர்களா? விளக்கம் தரவும்.

ஹதீஸ் கலை வல்லுனர்கள் பலவீனமான ஹதீஸிற்கு என்ன சட்டம் சொல்லி உள்ளார்கள், உங்களால் சொல்ல முடியுமா,  (பலவீனமான ஹதீஸை கொண்டு அமல் செய்யலாம் என்பது தான் அவர்கள் சொன்ன சட்டம் )

இருப்பினும் நீங்கள் நெஞ்சில் கை கட்டும் ஹதீசும் பலவீனமானதாக தன இருக்கிறது, காரணம் கபீசா என்பவரும், சிமாக் என்பவரும் இடம் பெறுகின்றார்கள், கபீசா யார் என்று அறியப்படாதவர், சிமாக் இட்டுக்கட்டக்கூடியவர், ஏன் இதை கொண்டு, நெஞ்சில் கை கட்டுகிறீர்கள்,

அறிவிப்பாளர் தொடர் பலமாக இருந்தும் நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதை ஏற்று கொள்ள மாட்டேன், என்பது தான் ஹதீஸை பின்பற்றும் லட்சணமா, சாலீம்  அவர்களுக்கு பால் கொடுத்த ஹதீஸ் ஐ ஏற்று கொள்ளுவதில்லை, உதாரணத்திற்கு இந்த 2 இன்னும் பல இருக்கின்றது, இப்படி பலமான ஹதீசையும் பின்பற்றுவதில் தெளிவு இல்லாமல் இருந்தால் எப்பிடி பட்ட ஹதீஸை பின் பற்றுவீர்கள், 

நான் அப்படி சொல்லவில்லை. எனக்கு நீங்கள் கேட்ட விஷயத்தில் ஞானம் இல்லை.

உங்களில் கொள்கைகளில் ஒன்றில் உங்களுக்கு ஞானம் இல்லை என்பது உண்மை.

இதில் மூன்றாவதாக பிக்ஹ் கலை எங்கு இருந்து வந்தது. நான் கேட்கிறேன், பிக்ஹ் கலை இல்லையென்றால் மார்க்கத்தை பின்பற்றலாகாதா?பிக்ஹ் கலையில் இமாம்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தால் அவர்களுடைய மார்க்க அறிவை வைத்துக் கொண்டு மார்க்கத்தில் புதிதாக (குர்ஆன், ஹதீஸ் ஒளியில்லாமல்) புது சட்டத்தை கொண்டு வர இயலுமா? தோன்றியவர்களெல்லாம் சட்டம் கொண்டு வருவதற்கு இது அவரவர்களுடைய சொந்த மார்க்கம் கிடையாது? அவர்களுக்கு அதற்கு உரிமையும் கிடையாது.


நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் முஆத் ரழி... அவர்களை எமன் தேசத்திற்கு அனுப்பினார்கள், அப்போது கேட்டார்கள், நீங்கள் எதை கொண்டு சட்டம் கூறுவீர்கள், அவர்கள் கூறினார்கள், குரானை கொண்டு என்றார்கள், குரானில் (இல்லை என்று சொல்லவில்லை) உங்களால் பார்க்க முடியாவிட்டால் என கேக்கும் போது, ஹதீஸ் என்றார்கள், அதிலும் (இல்லை என்று சொல்லவில்லை) உங்களால் பார்க்க முடியாவிட்டால் என கேக்கும் போது, நான் ஆய்வு செய்து சட்டம் சொல்லுவேன் என்றார்கள், நபிகளார் ஸல்... முஆத் ரழி... அவர்களின் நெஞ்சிலே தட்டி கொடுத்தார்கள், அல்லாஹ்வை புகழ்ந்தார்கள்,  இது தான் ஆய்வு, நபிகளாரும் வரவேற்றுள்ளர்கள், நீங்கள் இல்லை என்று சொல்வதற்கு உரிமை இல்லை, 

அதே போல உங்கள் கருத்தின் அடிப்படையில் தான் நாங்கள் சொல்லி கொண்டு இருக்கின்றோம், அதாவது சுயமாக ஆய்வு செய்து மார்கத்தை பின் பற்ற முடியாது, (புது சட்டத்தை வருவதற்கு! ஆளுக்கு ஆள்  தோன்றியவர்களெல்லாம் சட்டம் கொண்டு வருவதற்கு இது அவரவர்களுடைய சொந்த மார்க்கம் கிடையாது? அவர்களுக்கு அதற்கு உரிமையும் கிடையாது.) இதை வைத்து தான் நீங்கள் அனைவரும் சுயமாக மார்கத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்லும்  பொது ஆளுக்கு ஆள் ஒரு சட்டம் வந்து விடும் என்பதால்,  கூடாது என்று சொல்லுகிறோம், 

ஒரு பிரிவு பிறை பார்த்து நோன்பு நோற்க சொல்கிறது, மற்றொன்று சவுதியில் பார்த்தால் போதும் என்கிறது, ஒரு பிரிவு தற்கொலை செய்து கொண்டால் ஜனாசா தொழுகை உண்டு என்கிறது, மற்றொன்று தற்கொலை செய்து கொண்டால் ஜனாசா தொழுகை இல்லை என்று சொல்கிறது. கொடுத்த பொருளுக்கு ஜகாத் வாழ்நாளில் ஒரு முறை என்று ஒரு கூட்டம் கூறுகிறது, வருடம் தோறும் தரவேண்டும் என்று மற்றொன்று கூறுகிறது, அல்லாஹ்வின் (ஒரே )மார்க்கமான  இதில்  இதில் எப்பிடி இடை செறுகள் செய்தீர்கள். உங்களுக்கு அதிகாரம் தந்தது யார் .  

இப்படி சொல்லுபவர்கள் எல்லாம் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் தந்து தான் தங்களுடைய வாதத்தை வைக்கிறார்ர்கள். உங்களுக்கு எது சரியென்று குர்ஆன் ஹதீஸின் வழி நின்று படுகின்றதோ அதையே பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வின் ஒரே மார்க்கத்தில் சில விஷயங்களுக்கு நேரடியாக பதில் இருக்கும். சில விஷயங்களுக்கு மறைமுகமாக பதில் இருக்கும். ஜகாத் கொடுங்கள், தொழுகையை நிறைவேற்றுங்கள் என்ற கருத்துப்பட குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். இதை வைத்துக் கொண்டு எல்லா விஷயத்திற்கும் வேறுபடக் கூடாது. நேரடியாக குர்ஆன் / ஹதீஸ்களில் சொன்ன விஷயத்திற் ஆனால் வருடம் ஒரு முறை ஒரு பொருளுக்கா? அல்லது வாழ்நாளில் ஒரு முறை ஒரு பொருளுக்கா? என்று கூறப்படவில்லை. இதை ஆய்வுக்கெடுத்தே முடிவுக்கு வர வேண்டும். கு நேரடியாக பதில் கிடைத்து விடும். அப்படி நேரடியாக பதில் இருந்தும் ஆலிம்களின் சொந்த கருத்த்க்காகவோ, இமாம்களின் பெயரில் வெளிவந்த புத்தகத்தின் கருத்துக்காகவோ ஒத்துப் போகக்கூடாது.

மேலே பிக்ஹு (ஆய்வு) கூடாது என்றவர், பின்னால் ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் இருந்து முரண்பாட்டை காணலாம்,  குரான் ஹதீஸ் நேரிடையாக பின்பற்ற வேண்டும் என்றால் ஒரு தீர்ப்பு தானே இருக்க வேண்டும். இதில் எது சரி என்று படுகிறதோ அதை ஏற்று கொள்ளுங்கள் என்று சொல்வது முறை இல்லை.

மேலும் பாத்திஹா வை கிண்டல் செய்து எழுதிஉள்ளார், அவருக்கு வேண்டுமானால் கிண்டலாக தெரியலாம், ஆனால் பாத்திஹா என்பது குரானில் உள்ள முதல் சூரா வை ஓதுவது என்று பொருள் ஆகும், அதை ஓத கூடாது என்று கூறுகின்றரா? அப்படியானால், உங்களின் வீடியோக்களின்  ஆரம்பத்திலும் இந்த சூரா ஒதப்படுகிறதே அதற்கு ஆதாரம் என்ன?  மேலும் அது பித்அத் என்று வேறு கூறி உள்ளார், குரானின் அத்தியாயம் ஓதுவதற்கு இவர் பித்அத்து என்று கூறுவார் போலும் .

இதற்கும் குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் சம்பத்தமே இல்லையே. இதை கேட்டால் குர்ஆன், ஹதீஸை வைத்தே சட்ட்ங்களில் வேறுபடும் குழுக்கள் பற்றி என்னிடம் திரும்ப கேட்கிறீர்கள்.


குரானில் உள்ள ஒரு சூரா வை ஓதுவதற்கு குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் சம்பத்தமே இல்லையே என்று கூறுகின்றீர்களே, நியாயமா இது, 


இம்ரானா சட்டத்தில் யாரும் விமர்சனம் செய்யவில்லை, உங்களை போன்றவர்களை தவிர, இம்ரானா விஷயத்திற்கும் நீங்கள் காட்டிய ஹதீசிற்கும் சம்பந்தம் இல்லை, காரணம் அங்கு ஒருவரின்  மனைவியை வேறு ஒருவர் கற்பழித்தது தொடர்பானது,  இங்கோ, மகனின் மனைவியை, தந்தை கற்பழித்தது தொடர்பானது, நீங்கள் சொல்வது படி பார்த்தால் தந்தை வேறு ஒரு பெண்ணை மணம் முடித்து உறவு கொண்டு இருந்தாலும் பிறகு தலாக் சொல்லிவிட்டு மகன் அவளோடு திருமணம் செய்து உறவு கொள்ளலாம் என்று சொல்வதை போல் உள்ளது,


ஏன் குர்ஆன் மற்றும் ஹதீஸை மட்டும் நேரடியாக பின்பற்றினால் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்ற முடியாதா? விளக்குங்கள். மார்க்க விஷயத்தில் குர்ஆன், ஹதீஸில் இல்லாததை யார் கூறினாலும் நாம் ஏற்கக்கூடாது. நபியுடைய வாக்கும் அது தான்.


உண்மை தான், நீங்கள் பிறையை எப்பிடி பின்பற்றுவீர்கள், ஜகாத் எப்பிடி கொடுப்பீர்கள், தற்கொலை செய்து கொண்டால் அந்த ஜனாசா தொழுகை தொழுவீர்களா யாரை இதில் பின்பற்றுவீர்கள், இரண்டு விதமாக யோசிக்கின்றர்களே? நபிகளாரிடம் ஒரு முறை ஒரு பெண்மணி வந்து விளக்கம் கேட்டு சென்றார்கள், செல்லும் பொது அடுத்த முறை நான் வரும் போது நீங்கள் இல்லை என்றால் யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று கேட்டார்கள், அப்போது நபிகளார் சொன்னார்கள், நான் இல்லை என்றல் நீங்கள் அபூபக்கர்  ரழி...  .... அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்கள், குரான் ஹதீஸ் என்று  நபிகளார் சொல்ல வில்லை ,  மார்க்கம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது தான் இயல்பு,  இதற்கு மேலே கண்ட முஆத் ரழி... அவர்களின் சம்பவமே சாட்சி, நபியும் அதை பொருந்தி கொண்டார்கள் என்பது தான் உண்மை


தூய்மையான மார்க்கமான இஸ்லாத்தை அதன் தூய வடிவிலே அறிய, பின்பற்ற எல்லா விஷயத்தையும் மார்க்கத்தில் முழுமையாக சொல்லப்ப்ட்டு விட்டது. அதில் நீங்கள் கூறும் பிக்ஹ் சட்டத்தால் தான் இடைச் செருகல் நிகழ்ந்துள்ளது. இமாம்களின் வழிகாட்டுதலின் பேரில் தான் நாம் மார்க்கத்தில் முழுமையாக கடைப்பிடிக்க முடியுமா? இதற்கு விளக்கம் தரவும், அல்லது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்.

பிக்ஹு சட்டத்தால் தான் இடை செருகல் என்றால், உங்களில் ஏன் 10  பிரிவு, ஆய்வு செய்வதால் தானே?  இதற்கு இடை செருகல் பெயர் தர முடியாதா?

இமாம்களின் வழி காட்டுதலின் பேரில் தான் பின்பற்ற முடியும், காரணம் புகாரி யை படிப்பதும் பிக்ஹு வில் தான் கட்டு படுகிறது,

ருகூ விற்கு செல்வதற்கு முன், சஜ்தா விற்கு செல்வதற்கு கையை உயர்த்துவது பற்றிய சட்டம் மாற்றப்பட்டு விட்டது, ஆனாலும் சில இமாம்களின் விளக்கத்தில் தான் நடைமுறையில் உள்ளது, இல்லை மாற்றப்படவில்லை என்று கூறினால், இரண்டு சஜ்தாவிற்கு மத்தியிலும் கையை உயர்த்தும் பழக்கம் அன்றைய காலத்தில் இருந்தது, அதை பின் பற்ற முடியுமா, இமாம்களின் கருத்து இல்லாமல் நேரிடையாக பின் பற்றினால், ஹதீஸில் இருப்பது நீங்கள் தொழுகையில் குதிரை வால் ஆட்டுவதை போல ஆட்டாதீர்கள் என்று திர்மிதியில் வருகிறது, அப்படி தன பின் பற்ற முடியும், அதே போல சஜ்தா விற்கு செல்லும் பொது காலிற்கு முன் கை வயப்படும் நேர் ஹதீஸ் கருத்திற்கு மாற்றமாக இருக்கின்றது, அது நீங்கள் தொழுகையில் ஒட்டகம் உட்காருவதை போல உட்காராதீர்கள் என்று திர்மிதியில் வருகிறது,  அப்படியானால், முதலில் கை வைப்பதற்கு பதிலாக காலை வைக்க வேண்டும், ஆனால் சில இமாம்கள்  கொடுத்த விளக்கத்தில் தான் வண்டி ஓடுகிறது என்பது தான் உண்மை.

ibnuh...@mail.com

unread,
Jul 3, 2010, 10:53:03 AM7/3/10
to fro...@googlegroups.com
 Abdul Mohsin Bin Nasser Al Obaikan, member of Saudi Council of Senior Scholars and adviser to the king, ஒரு  தீர்ப்பு  வெளியிட்டுள்ளார்........... அதாவது.......

.........சவுதி பெண்கள் இனிமேல் தன வீட்டில் வேலை செய்யும்  டிரைவர்களுக்கு   பால் கொடுத்து அவர்களை தமது மகனகளாக , தன மகள்களுக்கு  சகோதரர்களாக  ஆக்கிக்கொள்ளலாம்............

இப்படி தான் வீட்டிலுள்ள வேலை செய்யும் எந்த ஒரு ஆண்ணுக்கும் பால் கொடுத்து    அவரை மகரமாக  ஆக்கிக்கொள்ள முடியும் என இந்த பாத்வா தெரிவிக்கின்றது.;;;;;;;;;; இவர்  முஸ்லிம் இலுள்ள , சாலிம் பால் குடித்த  ஹதீஸ் அடிப்படையில் தீர்ப்பு   என கூறியுள்ளார்......

என்ன சகோதரர்களே ..நாம் எப்படி செய்வது....... நமது வீட்டு வேலைக்காரர்களை ... ?????   எனக்கென்றால் எதுவும்  விளங்கவில்லை........ இது இஸ்லாம்தானா  அல்லது வேறு எதுவுமா ??????  தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்........

muslim

unread,
Jul 4, 2010, 7:14:25 AM7/4/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புச் சகோதரர் Syed AbdusSalam Ibrahim அவர்களுக்கு

குர்ஆன் ஒலியாகவே அருளப்பட்டது. எனவே குர்ஆனை ஓதுவதுதான் இபாதத் - வணக்கம். குர்ஆனைத் தொடுவது இபாதத் இல்லை!

குர்ஆனை எவ்வளவு அதிகமாக ஓதுகிறோமோ அதுவே நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்! குர்ஆனை எத்தனை முறைத் தொட்டாலும், தொடுவது நன்மை இல்லை!

ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும், இங்கு பதிவு செய்துள்ள ஹதீஸ்களில் தூய்மையின்றி குர்ஆனைத் தொடவேண்டாம் என்றே அறிவிப்புகள் உள்ளன. தூய்மையின்றி குர்ஆனை ஓதக் கூடாது என்பதை நிறுவிட எந்த ஆதாரமும் எழுதவில்லை. தூய்மையின்றி குர்ஆனை ஓதக் கூடாது என்பதற்கும் ஆதாரங்களை எழுதவும்!

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னரே குர்ஆன் வசனங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு முழுக் குர்ஆனாகத் தொகுக்கப்பட்டது. எனவே, ''தூய்மையாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொடவேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது குர்ஆனின் ஒரு வசனம் அல்லது சில வசனங்களுக்குப் பொருந்துமா? முழுக் குர்ஆனுக்கும் பொருந்துமா?

சகோதரர் விளக்கம் தரவும்!



2010/7/3 Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com>

Roshan Rosheen

unread,
Jul 4, 2010, 8:00:42 AM7/4/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் ,
 இவைகள் எந்த வகையிலும் இமாம்களுக்கு  சம்பந்தம் இல்லாதவைகள். நான்கு மத்ஹபில் ஒன்றை தக்லீது செய்வது மத்ஹபு வாதிகளின் கடமை அப்படி என்றால் இந்த புஸ்தகங்கள் எந்த கண்ணியமிக்க இமாம்களால் எழுதப்பட்டது இமாம் அபூ ஹனீபா 1118 தான் வாழ்ந்தார்களா இமாம் ஷாபிஈ 428 தான் வாழ்ந்தார்களா ஏன் பொய் புளுகுமூடைகளாக உள்ளீர்கள் .சஹோதரர்  செய்யித் அப்துஸ்ஸலாம் அவர்களே உங்கள் மத்ஹப் பிடிவாதத்தை விட்டுட்டு குரான் ஹதீஸ் பக்கம்  உங்களை அழைக்கிறேன் நீங்கள் இந்த இயக்க வாதிகளையோ தரீகா வாதிகளையோ  பார்த்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் நீங்கள் குரான் ஹதீஸை மாத்திரம் பாருங்கள் இமாம்களை அப்படியே தூக்கி எறியுங்கள் என்று நான் சொல்லவில்லை நான்கு மத்ஹபுடைய இமாம்களை மாத்திரம் பார்க்காமல் பிக்ஹு கலையில் ஈடுபட்ட எல்லாம் இமாம்களையும் ஹதீஸ் கலையில் ஈடுபட்ட எல்லா இமாம்களையும் ஏற்று கொண்டு அவர்கள் செய்த ஆய்வுகளில் குரான் சுன்னாவுக்கு உட்பட்ட சட்டங்களை எடுத்து நடக்கும் படியே உங்களை அலைகிறேன் .

சஹோதரர் செய்யித் இப்ராஹீம் அவர்களே இவை நான் உங்களுக்கு சொன்ன இன்று உங்களுக்கு தேவையான விடயங்கள் அதை கண்டுகொள்ளாமல் சென்றது மிகவும் வேதனையானதே.ஏதும் ஒன்றை பற்றி சொல்வதாக இருந்தால் அதைப்பற்றி நன்கு அறிந்தவராக அதில்  அனுபவம் வாய்ந்தவராக இருக்கவேண்டும் இந்த அடிப்படையிலே நான் இதை உங்களுக்கு சொன்னேன்.பிக்ஹ  இமாம்களுடைய ஆய்வுகளை எடுக்ககூடாது என்று எங்கேயாவது கூறியுள்ளேனா அந்த இமாம்கள் குரான் ஹதீஸ் பக்கமே அழைத்துள்ளார்கள்  அந்த அழைப்பையே உங்களுக்கு முன்வைத்தேன் அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஏதோ பட்டுகொட்டைக்கு வழிய கேட்டா கொட்டபாகுக்கு விளைய சொன்ன மாதிரி உங்களுடைய மத்ஹபுல இப்படி இருக்கு என்று கேட்டா அவங்க அப்படி சொல்லி இருக்காங்க இப்படி ஆய்வு செஞ்சிருக்காங்க  இப்படியா ஆய்வு செய்றது  என்று கேட்டுள்ளீர்கள்.இதையும் விட மோசமாக  உங்களிடத்தில் இருக்கிறதே அவர்களிடத்தில் 1000 சட்டங்களை காட்டுவீர்கள் என்றால் உங்களிடத்தில் 10 , 000 மஸ்அலாக்களை காட்டமுடியும் என்ன  வித்தியாசம்என்றால்  நீங்கள் மத்ஹபு என்பீர்கள் அவர்கள் குரான் ஹதீஸ் என்பார்கள்.உங்களுக்கும் அவர்களுக்கும் மிக முக்கிய வித்தியாசம் அவர்கள் செய்யும் இஜ்தியாதான ஆய்வுகளுக்கு எதிரா எங்களுக்கு அவர்களுடன் பேச முடியும் அறிவு பூர்வமாக அவர்களுடைய ஆய்வுகளை கலந்துரையாட முடியும் ஆனால் உங்கள் நிலவரம் கேட்டுள்ளீர்கள் அரபு தெரியுமா எனக்கு அரபு தெரியும் உங்களைவிட எனக்கு தெரியும்  என்று எனக்கு தெரியாது உங்கள் அரபு பாண்டியத்தை தமிழில் மொழியாக்கி  நான் முன்வைத்த மதஹபு விடயங்களுக்கு பதில்   தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.அதில் நான் பிழையாகவே எழுதி இருந்தால் அதை திருத்துவது உங்கள் கடமை இதையும் விட பணிவாக கேட்க எனக்கு தெரியாது மத்ஹபு குப்பை சட்டங்களை குப்பை என்று சொல்வதற்கு உங்களை போன்றவர்களே காரணம் ஹஸ்ரத் அவர்களே இப்படி எல்லாம் எழுதி வச்சிருக்காங்களே என்று போய் கேட்டா உனக்கு அரபு தெரியுமா நீ மவ்லவியா எந்த அரபு மதரசாவில படிச்சா இப்படி அடிக்கி கொண்டே போவாங்க கேட்டதற்கு பதில் சப்பகட்டுதான்.இந்த லேச்சனத்துல அவங்களோடு எப்படி சார் உங்கள் ஜோஇன்ட்  பண்றது குறைந்த பட்சம் நெஞ்சின் மீது தக்பீர் கெட்டுவது சம்பந்தமாக அவர்களுடன் ஒருமுறையாவது நீங்கள் பேசியுள்ளீர்களா சிமாக் பற்றியும் கபீசா பற்றியும் கூறியுள்ளீர்கள் அதற்கு அவர்கள் மறுப்பு வெளியிட்டு பல காலம் ஆகிவிட்டது அதை முதலில் பார்க்கவும் அதற்கு மறுப்பிருந்தால்  எழுதவும்.

இது பொது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கூட்டமைப்பு என்பது உண்மை தான். ஆனால்  பொதுவான தகவல் இல்லாமல் தவ்ஹீத் ஜாமத்தின் விளம்பரம் கொடுத்ததால் தான் பிரச்சனை,  தவ்ஹீத் ஜமாஅத்தை யோ வேறு அமைப்பையோ தாக்கவில்லை, எங்களை குறை கூறுவதால் உங்களில் சுட்டி காட்டுகின்றேன்,    

 குரான் ஹதீஸ் ஆய்வு செய்ய முடியுமா, தமிழ் தர்ஜுமாக்களை வைத்துக்கொண்டு ஏன் மார்க்கம் பேசுகின்றீர்கள், நிறுத்தி கொள்ளுங்கள், இயக்க வாதிகளை தங்கள் விளம்பரம் செய்ய அனுமதிக்க முடியாது
இந்த குழுமத்தில் இயக்க சார்பானது எதுவும் அனுமதி இல்லை என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும் அந்த அடிப்படையில் தவ்ஹீத் அமைப்பாளர்கள் விளம்பரம் போட்டது தவறே அதை சுட்டிகாட்டபட்டுவிட்டது.இங்கு மத்ஹபு வாதிகளுடைய குறைகள் பற்றியும் தவ்ஹீத் இயக்க வாதிகளின் குறைகள் பற்றியும் மிக தெளிவாகவே நான் ஆரம்பம் முதல் எழுதி வருகிறேன்.உங்கள் இருவர்கள் சம்பந்தமாக நான் எழுதின குறைகள் பிழை என்றால் அதற்கு மழுப்பாமல் பதில் எழுதுவதுதான் சிறந்த முஸ்லிம்களுக்கு அழகு 

 பேசுவதில் மரியாதை இருக்க வேண்டும், மத்ஹப் குப்பை, அப்படின்னு நீங்கள் பேசுவீர்கள், அதற்கு மறுப்பு தெரிவித்தால் நாங்கள் திராணி இல்லாதவர்கள் என்று சொல்லுவீர்களா
எங்கே நான் சொன்ன விடயங்களுக்கு மறுப்பு சொல்லியுள்ளீர்கள் நீங்கள் மறுப்பு தெரிவிக்காததே அவைகள் குப்பை என்பதற்கு ஆதாரம். நீங்கள் பதில் சொல்லாமல் அரபி தெரியுமா அதுதெரியுமா இது தெரியுமா என்று கேட்டால் இன்னும் குப்பைகள் தொடரும்.

1 ."பல்துலக்கும் குச்சியை பெரிதாக வைத்து கொண்டால் பைத்தியம் பிடிக்கும்"
                                துர்ருல்   முக்தார் 1 :53 
2 ."ஒரு பெண்ணின் கணவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாத நிலையில் 120 வருடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதாக முடிவு செய்து பின்னர் அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும்".
                                ஹிதாயா -2 :621 
3 ."விற்பனை பொருட்களில் குறை இருந்தால் அக்குறையை தனது கைகளால் மறைத்து கொண்டு ஏமாற்றி விற்பது கூடும்".
                                ஆலம்கிரி-4 :1061 
4 ."ஒளூ செய்த தண்ணீரோ கடமையான குளிப்புக்கோ பயன்படுத்தின தண்ணீர் சுத்தமானதா அசுத்தமானதா? 
அது சுத்தமான தண்ணீர்தான் அதை கொண்டு மீண்டும் சுத்தம் செய்ய முடியாது என்று இமாம் அபூ ஹனீபா (ரஹ்)கூறியதாக அவரின் மாணவர் முஹம்மத் தெரிவித்தார்.

அந்த  தண்ணீர் மிகவும் கடுமையான அசுத்தமானது என்று இமாம் அபூ ஹனீபா(ரஹ்)அவர்கள் கூறியதாக ஹசன் அறிவிக்கிறார்.

அந்த  தண்ணீர் அவ்வளவு கடுமையான அசுத்தம் அல்ல சாதாரண அசுத்தம் தான் என இமாம் அபூ ஹனீபா(ரஹ்)கூறியதாக அவர்களின் மாணவர் அபூ யூசுப்  கூறுகிறார்.
                                ஹிதாயா  பக்கம் 38 
5 ."குதிரை வாய் வைத்த தண்ணீரை பயன்படுத்துவது அசுத்தமானது".
      
     சந்தேகத்திற்குரியது 
 
     மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது)

     தூய்மையாநது
    
                                முன்யதுள்  முசல்லி 
6 .இமாம் அபூஹனீபா(ரஹ்)அவர்கள் அல்லாஹ்வை கனவில் நூறுமுறை கண்டார்கள் .
                                 துர்ருல்  முக்தார் 1 : 21 
    யார்   அல்லாஹ்வை கனவில் கண்டதாக சொல்கிறானோ அவனும் சிலையை வணங்குபவனும்  ஒன்றுதான் 
                                 பதாவா காளிகான் 4 
7 .சப்தமிட்டு ஆமீன் சொல்வது மக்ரூஹ் 
                                 முன்யதுள்  முசல்லி பக்கம் 80 
    சப்தமிட்டு  ஆமீன் சொல்வது ஒப்புக் கொல்லப்பட்டதுதான் 
                                  ஹிதாயா 1 :364 
7 .இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் தந்தை அபூ ஹனீபா அவர்களை அலி(ரலி)அவர்களிடம் அழைத்து வந்து துஆ செய்ய  சொல்வார்கள் 
                                 துர்ருல்   முக்தார் 1 :26 
    அலி   (ரலி)அவர்களின் மரணம் ஹிஜ்ரி 40 இமாம் அபூ ஹனீபா அவர்களின் பிறப்பு ஹிஜ்ரி 80 
8 ."அல்லாஹ்வின் பண்புகளை மறுப்பவன் காபிர் அல்ல".
                                 துர்ருல்    முக்தார் 1 :261 
9 ."தொழுகையில் பிந்திய இரண்டு ரகாத்களில் அல்ஹம்து,தஸ்பேஹ் போன்றவைகளை ஓதாமல் இருந்தால் தொழுகை கூடும் 
                                 ஆலம்கிரி 1 :102 
10 .ஒருவன் விந்து வரும் போது தனது குறியை அழுத்தமாக பிடித்துக் கொண்டு ஆசை அடங்கியதும் விந்தை வெளிப்படுத்தினால் அவன் மீது குளிப்பு கடமை இல்லை"
                                  துர்ருல்    முக்தார் 1 :79 
                                  ஆலம்கிரி 1 :18 
11 .முதசிலா பிரிவினருடன் திருமணம் செய்யலாகாது .ஏனெனில் அவர்கள் காபிர்கள் 
                                  துர்ருல்   முக்தார் 1 :18 
      மூதஸிலாகல் ஹனபிகளாக உள்ளனர் 
                                  துர்ருல்  முக்தார் 1 :95 

 மூளை சலவை செய்ய எங்களுக்கு தேவை இல்லை, புரிந்து தான் இஸ்லாமிய சட்ட திட்டத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்  
மேலே குறிப்பிட்ட  இதுதான் உங்களுடைய இஸ்லாமிய வாழ்வு திட்டமா?

  ஆனால்  நீங்கள் தான் எங்கள் மக்களை மூளை சலவை செய்து உங்கள் இயக்கத்திற்கு கூட்டம் சேர்கின்றீர்கள், அது தானே உண்மை. ஆனால்  நீங்கள் மேடைகளில் எங்களை, எங்கள் உலமாக்களை, மரியாதை இல்லாமல் தான் பேசிக்கொண்டு இருகின்றீர்கள்,  ஆனாலும் நாங்கள் மரியாதையோடு தான் பேசிக்கொண்டு இருக்கின்றோம்,  அனைத்திலும் குரான் ஹதீஸை நேரிடையாக பின்பற்றுவோம் என்பவர்கள் இப்படி மட்டமாக, திராணி இல்லாதவர்கள், குப்பை என்று நபிகளார் ஏனையவர்களை தூக்கி எரிந்து பேசி உள்ளார்களா (அப்படி கேட்பதே தவறு, ஏன் என்றால் நபிகளார் அப்படி பேச மாட்டார்கள்) பின் எப்பிடி முன் உதாரணம் இல்லாமல் பேசுகின்றீர்கள்
மூளைசலவை செய்பவர்கள் யார்? ஆதாரமே கேட்காதே சொல்வதை அப்படியே கேட்டுட்டுபோ என்று சொல்பவர்கள் யார் நீங்கள் தான். அதுதான் உண்மை உங்கள் மக்கள் குரான் ஹதீஸின் பால் வருவதற்கு காரணம் ஆதாரத்தோடு சொல்லபடுவது என்றபடியால்தான்.சஹோதரர் செய்யித் அவர்களே உங்களை நான் திட்டினேனா உங்கள் மத்ஹபு குறையே சொல்கிறேன் அவர்களும் அதையே செய்கிறார்கள் நீங்கள் அதை திட்டுவதாக நினைத்தால் நாங்கள் என்னசெய்வது.திராணி இல்லாதவரை திராணி இல்லாதவர் என்றும் குப்பையை குப்பை என்று சொல்வதும் என்ன தப்பு இருக்கின்றது.நீங்கள் கேட்டகேள்விக்கு பதில் சொல்லாமல் உள்ளம் சீல் பண்ண பட்டுள்ளது நான் உனக்கு பதில் சொல்ல மாட்டேன்  என்று சொன்னால் அவரின் உள்ளம் நோகுமா நோகாதா திராணி இல்லாதவர்,குப்பை என்று சொன்னதற்கே துள்ளி குதிக்கிறீர்கள்.

தவ்ஹீத் ஜமாதுடைய செல குறைபாடுகளை சுட்டி காடியுல்லீர்கள் இதற்கு அவர்களே பதில் தர கடமை பட்டுள்ளார்கள் ஆனாலும் அதில் எனக்கு சில கேள்விகள் உண்டு அதற்கு உங்கள் பதிலை எதிர்பார்கிறேன் 
1. பன்றி மாமிசம் தவிர ஏனையது பொருத்தலாம் என்றது, 
அந்த வசனத்தில் இரத்தமும் ஹராமக்கபட்டுள்ளது ஆனால் நாங்கள் மருத்துவ தேவைக்காக இரத்தம் கொடுக்கிறோம் இது கூடுமா?

 3. நபிகளாரே வஹி இல்லாமல் சொன்னதை ஏற்று கொள்ள முடியாது என்று சொன்னது,
வஹியை மாத்திரமே பின்பற்றவேண்டும் இதில் என்ன தப்பு உள்ளது பதில்   தரவும்?

 4.பலமான ஹதீஸை கூட அறிவு ஏற்கவில்லை என்று தூக்கி எறிவது,
பலமான ஹதீஸ் என்பதற்கு உங்களின் அளவுகோல் என்ன ஒரு  பெண் இளைஞ்சன் ஒருவனுக்கு
பால் கொடுத்தால் அவன் மஹ்ரம்  ஆகிவிடுவான் என்ற (கருத்து)ஹதீஸின் நிலை என்ன?
  Abdul Mohsin Bin Nasser Al Obaikan, member of Saudi Council of Senior Scholars and adviser to the king, ஒரு  தீர்ப்பு  வெளியிட்டுள்ளார்........... அதாவது.......

.........சவுதி பெண்கள் இனிமேல் தன வீட்டில் வேலை செய்யும்  டிரைவர்களுக்கு   பால் கொடுத்து அவர்களை தமது மகனகளாக , தன மகள்களுக்கு  சகோதரர்களாக  ஆக்கிக்கொள்ளலாம்............
இதை   இப்னு ஹசன் என்ற சஹோதரர் பதிஞ்சி உள்ளார்கள் இவ்வாறான செய்திகளிலிருந்து இப்படிதான் சட்டம் எடுக்கமுடியும் நீங்கள் இதை ஏற்று கொள்கிறீர்களா?

நபிகளார் ஜும்மாவிற்கு முந்திய சுன்னத் உண்டு என்று சொல்லி இருக்க
ஆதாரத்தை வெளியிடவும்? 

 மேலும், வெகு காலம் வரை பெண்களுக்கு ஜியாரத் இல்லை என்று சொல்லிவிட்டு 2007 ல் மதுரை இல் நடந்த விவாதத்தில்  நாங்கள் ஹதீஸை தற்போது தான் பார்த்தோம் என்று சப்பை கட்டு காட்டுகின்றீர்களே, ஆய்வு திறன் இல்லை என்பது தான் உண்மையா?
இது உங்கள் மத்ஹபு கிதாபிலும் உள்ள விடயம் தான் 


மத்ஹபை யாரும் அவசியமாக பின்பற்ற வேண்டும் என்று சொல்ல வில்லை, (சுயமாக சொல்லி இருகின்றார்கள் என்று சொன்னால் அதை இஷ்டம் இருந்தால் பின்பற்றலாம் என்பது தான் உண்மை. ) இமாம்கள் சொல்லி தந்த விளக்கத்தின் அடிப்படையில் குரான் ஹதீஸை பின்பற்றுகிறோம், கீழே தாங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் நீங்கள் அரபியில் அர்த்தம் வைத்தீர்கள
, இல்லை அர்த்தம் வைக்க தெரியுமா? உங்கள் இயக்கத்தின் தலைவர்கள் சொல்வதை தானே கேட்கின்றீர்கள்,  
அடிக்கிற அடியில் அம்மியும் நகரும் என்று சொல்வார்கள் இத்தனை நாள் குரான் ஹதீஸின் பிரச்சாரமே உங்களை இவ்வாறு சொள்ளவைதுள்ளது நீங்கள் ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும் சரியே எத்தனை உலமாக்களை சந்தித்திருப்போம் மத்ஹபை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று ஏராளமான உலமாக்கள் சொல்லியுல்ல்லார்கள். நீங்கள் மத்ஹபை பின்பற்றுவது அவசியம் இல்லை என்று சொல்லும் போது கேட்க சந்தோஷமாக இருக்கின்றது.
இமாம்கள்    சொன்னவிளக்கம் குரான் ஹதீஸுக்கு முரண் என்றால் என்னசெய்வீர்கள் குரான் ஹதீஸையே எடுப்பீர்கள் அதைதான் நாங்கள் சொல்கிறோம் இமாம்கள் சொன்ன சட்டங்களில் குரான் ஹதீஸுக்கு உடன்பட்டதை எடுங்கள் முரன்பட்டதை விடுங்கள்.இமாம்கள் அனைவரையும்தான் நீங்கள் எடுத்துள்ளீர்களா ஹனபி மத்ஹப் என்றால் ஹனபி மத்ஹபுடைய இமாம்களை மாத்திரமே எடுப்பீர்கள் மற்ற இமாம்கள் இமாம்கள் இல்லையா?இதே அளவுகோல்தான் மற்ற மத்ஹபு களிலும்.
இப்பசொல்லுங்கள்   இமாம்கள் அனைவரையும் எடுத்து அவர்கள் செய்துள்ள மார்க்க சட்டங்களில் குரான் ஹதீஸுக்கு உடன் பட்டதை எடுத்து நடக்கு நாங்கள் சிறந்தவர்களா,இமாம்களில் ஒரு மத்ஹபுடைய இமாம்களை எடுத்து மற்ற இமாம்களை தூக்கி எரியும் நீங்கள் சிறந்தவர்களா?
அரபியில்  அர்த்தம் வைத்தால்தான் நீங்கள் பதிலளிப்பீர்களோ அர்த்தம் வைக்க தெரியுமா? என்ற உங்களுடைய அரபி ஆணவம் தலையில் முத்தியுள்ள படியால் நான் வைத்த தமிழ் பிழை என்றால் உங்கள் அரபி புலமையை காட்டி தமிழில் வெளியிடவும்.எனக்கு தயவு செய்து சரியான மொழிபெயர்ப்பை வெளியிடவும்.
இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் பிழை என்றே  ஆக்கங்கள் வெளியிட்டு கொண்டு இருக்கிறேன் அப்படி இருக்க எவ்வாறு என்மீது அவதூறு கூறுவீர்கள்.

 எங்களை மட்டும் முகல்லிதுகள் என்று வேறு படுத்தி காட்ட வேண்டாம், காரணம் தவ்ஹீத் ஜமாத்தின் இஜ்திஹாத் என்று நீங்கள் கூறி உள்ளது பார்த்தால் நீங்களும் முகல்லிதுகளாக தான் இருக்கின்றீர்கள்

தவறு,இதன்நூடாக நீங்கள் முகல்லிதுகள் என்று உறுதி படுத்தயுல்லீர்கள்  .இமாம்கள் சம்பந்தமாக எந்த அடிப்படையை வைத்துள்ளோமோ அதே அடிப்படைதான் இவர்களுக்கும் வைத்துள்ளோம் யார்வந்து மார்க்க சட்டம் சொன்னாலும் இதுவே எங்கள் நிலைப்பாடு.சொல்லகூடிய செய்தியில் குரான் ஹதீஸுக்கு உடன்பட்டதை எடுத்துகொல்லுவோம் முரன்பட்டதை விட்டுவிடுவோம் இந்த நடுநிலை போக்குக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

   நான் தவ்ஹீத் ஜமாத்தை தாக்கவில்லை, குரான் ஹதீஸை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் இப்படி பிரிந்து இருக்கின்றீர்கள் என்பது தான் கேள்வி,  1991 இல் ஜாக் சார்பாக காதியனிக்கு எதிராக வாதம் புரிந்தவர்கள், ஏன் அந்த அமைப்பை விட்டு வெளியானார்கள், குரான் ஹதீஸ் மட்டும் மார்க்கம் என்று இருக்க வேண்டியவர்கள், ஏன் ஆய்வு செய்து சட்டம் சொல்கின்றார்கள், நேரிடையாக வருவதை பின்பற்றுவதில்லையே ஏன்? மார்கத்தில் பிரிவினை இருக்க கூடாது என்று தானே இப்படி ஆரம்பித்தீர்கள், பின் ஏன் உங்களிலேயே பிளவு . யாராலும் நேரிடையாக மார்க்கத்தை பின் பற்ற முடியாது, என்பது தான் உண்மை,
அவர்கள் ஒவ்வொரு ஜமாத்தாக பிரிந்துள்ளார்கள் நீங்களும் ஒவ்வொரு மத்ஹபாக பிரிந்துல்லீர்கள் இப்படி இருந்து கொண்டு எவ்வாறு அவர்களை கேட்கலாம்.குரான் ஹதீஸை ஆய்வின் நூடாகதான் சட்டம் எடுக்க வேண்டும் பிறகு எவ்வாறு இமாம்கள் சட்டம் எடுத்தார்கள் அவர்களுக்கு ஒரு சட்டம் இவர்களுக்கு ஒருசட்டமா?
நீங்களே  உங்கள் ஆய்வில் முஆத் (ரலி)அவர்களின் இஜ்திஹாதுக்குரிய ஹதீஸை போடுல்லீர்கள்.யாராலும் நேரிடையாக மார்கத்தை பின்பற்ற முடியாது என்று சொல்லியுள்ளீர்கள் இது மிகவும் விசனத்திற்குரியது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் இஸ்லாம் எளிமையானதே பின்பற்ற முடியும் என்பதே உண்மை.எல்லாவிடயங்களும் ஒருவருக்கு தெரியும் என்று சொல்லமுடியாது அவருக்கு தெருயாத பல விடயங்கள் இருக்கும் அதை தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் இதுவும் குரான் எங்களுக்கு சொல்லும் ஒரு அடிப்படை சட்டமே.ஒவ்வொருவருடைய அறிவுவிசாலத்தை வைத்து ஆய்ந்து செயல்படுவார்கள் யாரையும் யாரும் தக்லீது செய்து பின்பற்ற அவசியம் இல்லை.ஒரு முஸ்லிம் கட்டுபட்டவனாகதான்  இருக்கவேண்டும் மாற்று மதத்தவர்ர்கள்  போல் இருக்க கூடாது அவன் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுபட்டவன் என்று சொன்னால் குரான் ஹதீஸை படிப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாய கடமை இல்லாவிட்டால் அவன் ஒரு மாற்று மதத்தவன் போல் இஸ்லாத்தில் முஸ்லிம் என்ற லேபலில் இருப்பான் இவ்வாறே அதிகமான முஸ்லிம்கள் இன்று உங்களுடைய மத்ஹபுகளால் 
அறிவு சூநியங்களாக  இருக்கிறார்கள்.
  
 

நபிகள் நாயகம் ஸல்... சஹாபாக்களை பனு குறைழா நோக்கி அனுப்பினார்கள், அப்போது கூறினார்கள், நீங்கள் அசர் தொழுகை, பனு குறைழா வில் தான் தொழ வேண்டும் என்றார்கள், நேரம் வந்து விட்டதால் வழியில் தொழுதார்கள் சிலர், சிலரோ, அங்கு சென்று தான் தொழுதார்கள், இரண்டும் சரி என்றார்கள் 
நபிகள் நாயகம் ஸல்... அவர்கள்.  இதில் யார் செய்தது சரி என்ற பார்க்க முடியும்,  

மேலும் ஒரு முறை, இரண்டு சஹாபாக்கள் சென்றார்கள், தண்ணீர் இல்லை, தயம்மம் செய்து தொழுது கொண்டார்கள், பிறகு தண்ணீர் வரும் பொது ஒரு சஹாபி மீண்டும் தொழுக வேண்டும் என்று கூறி தொழுது கொண்டார், மற்றொரு சஹாபி தொழுக தேவை இல்லே, காரணம் நாம் தொழும் பொது  தண்ணீர் இல்லை, அதனால் தயம்மம் செய்தது சரி என்று இருந்து விட்டார்கள், இரண்டும் நபிகளாரிடம் எடுத்து சொல்லப்பட்டது, ஒரு முறை தொழுதவரை பார்த்து மார்க்கப் பிரகாரம், தாங்கள் செய்தது சரி என்றார்கள், இரு முறை தொழுதவரை பார்த்து, உங்களுக்கு இரண்டு கூலி உண்டு என்றார்கள், 

இதற்கு பெயர் தான் ஆய்வு, அதே போல் தான் உங்கள் பிரிவினர்கள், அனைவரும் ஏதோ ஒரு ஹதீஸ் கலை இமாம் சொன்னதை தான் ஏற்று நடந்து கொண்டு இருக்கின்றீர்கள், 

சரியாக சொன்னீர்கள் இதை உங்கள் மத்ஹபு விடயத்தில் செயல் படுத்தி காட்டுங்கள் இதன்  பக்கமே உங்களை நாங்கள் அழைக்கிறோம்.ஒரு ஹதீஸ் கலை இமாம் என்று சொல்வது உங்கள் மிகை படுத்தலே அனைத்து ஹதீஸ்களை இமாம்களையும் நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம் அவர்களின் சரியான முடிவுகளை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் அவர்கள் பிழை விட்டால் அதை எடுத்துகொள்ளமாட்டோம்.

  ஹதீஸ் கலை வல்லுனர்கள் பலவீனமான ஹதீஸிற்கு என்ன சட்டம் சொல்லி உள்ளார்கள், உங்களால் சொல்ல முடியுமா,  (பலவீனமான ஹதீஸை கொண்டு அமல் செய்யலாம் என்பது தான் அவர்கள் சொன்ன சட்டம் )
நீங்கள் இவ்வாறு பொத்தம் பொதுவாக பலஹீனமான ஹதீஸை கொண்டு அமல் படுத்தலாம் என்று சொல்வது ஹதீஸ் கலை இமாம்கள் சொன்ன பல நிபந்தனைகளை நீங்கள் மறைத்ததாக ஆகும்.பலஹீனமான ஹதீஸில் சட்டம் குரியதும் உள்ளது சிறப்பு குரியதும் உள்ளது சட்டம் தொடர்பான ஹதீதுகளில் ஆதாரபூர்வமான ஹதீசையே எடுப்பார்கள் சிறப்புகளுக்குதான் பலஹீனமான  ஹதீஸை எடுப்பார்கள் அதிலும் பல நிபந்தனைகள் உண்டு.

  இருப்பினும் நீங்கள் நெஞ்சில் கை கட்டும் ஹதீசும் பலவீனமானதாக தன இருக்கிறது, காரணம் கபீசா என்பவரும், சிமாக் என்பவரும் இடம் பெறுகின்றார்கள், கபீசா யார் என்று அறியப்படாதவர், சிமாக் இட்டுக்கட்டக்கூடியவர், ஏன் இதை கொண்டு, நெஞ்சில் கை கட்டுகிறீர்கள், 

கபீசா ,சிமாக் சம்பந்தமாக உங்கள் விமர்சனத்தை தமிழில்  ஆதாரத்தோடு வெளியிடவும்.

அதே போல உங்கள் கருத்தின் அடிப்படையில் தான் நாங்கள் சொல்லி கொண்டு இருக்கின்றோம், அதாவது சுயமாக ஆய்வு செய்து மார்கத்தை பின் பற்ற முடியாது, (புது சட்டத்தை வருவதற்கு! ஆளுக்கு ஆள் தோன்றியவர்களெல்லாம் சட்டம் கொண்டு வருவதற்கு இது அவரவர்களுடைய சொந்த மார்க்கம் கிடையாது? அவர்களுக்கு அதற்கு உரிமையும் கிடையாது.) இதை வைத்து தான் நீங்கள் அனைவரும் சுயமாக மார்கத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்லும்  பொது ஆளுக்கு ஆள் ஒரு சட்டம் வந்து விடும் என்பதால்,  கூடாது என்று சொல்லுகிறோம்,   

எல்லா இமாம்களும் குரான் ஹதீஸில் கிடைத்ததை வைத்து  சுயமாகேவே ஆய்வு செய்தார்கள் இவ்வாறு ஆய்வு செய்வது கூடாது என்று சொன்னால் அது இமாம்களுக்கும் பொருந்தும். சுயமாக ஆய்வு செய்வது கூடாது என்று சொல்வதற்கு  குரான் ஹதீஸ் ஆதாரம் தரவும்.சஹோதரரே புது சட்டம் என்று சொல்வது நபிகாலத்தில்செய்யபடாத  இன்று செய்யப்படுபவைகள்  உதாரணத்திற்கு தொழுகையில் உசல்லி பார்லு சொல்லுவது பாங்குக்கு முன்னாள் சலவாத்து சொல்வது .......இன்னும் இவைகள் தான் புது சட்டங்கள் இதை முன்னின்று வழிநடாதுபவர்கள் நீங்களும் உங்களை போன்ற முகல்லிதுகலுமே.ஒவ்வொரு முஸ்லிமும் மார்கத்தை விளங்கி படித்தால் நிச்சயமாக பல முரண்பாடுகளை காண்பார்கள் அந்த நேரத்தில் குரான் ஹதீஸ் என்ன சொல்லியுள்ளது என்பதையும் அவர்கள் விளங்கியே இருப்பார்கள் அந்த அடிப்படையில் அவர்கள் இருந்தால் அவர்கள் சிறந்த முஸ்லிம்களே அதில் அவர்கள் தப்பு செய்தால் அதற்கு பொறுப்பு அவர்களே பொறுமையாக இருக்கவேண்டும் நேரத்தில் சண்டை பிடித்தால் அதற்கு பொறுப்பு அவர்களே  அதனால் நீ செய்வது எல்லாமே பிழை திரும்பவும் பித் அத்துக்கு  வா மத்ஹுக்கு  வா என்று அழைப்பது முட்டாள் தனம்.

  மேலே பிக்ஹு (ஆய்வு) கூடாது என்றவர், பின்னால் ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் இருந்து முரண்பாட்டை காணலாம்,  குரான் ஹதீஸ் நேரிடையாக பின்பற்ற வேண்டும் என்றால் ஒரு தீர்ப்பு தானே இருக்க வேண்டும். இதில் எது சரி என்று படுகிறதோ அதை ஏற்று கொள்ளுங்கள் என்று சொல்வது முறை இல்லை.    
பிக்ஹு   என்று அவர் கூறியது உங்கள் மத்ஹபு சட்ட கிதாபுகளைதான்  குரான் ஹதீஸில் கூறப்பட்ட இஜ்திஹாதை அல்ல.குரான் ஹதீஸை நேரிடையாக பின்பற்றினால் ஒரு தீர்ப்பு தான் இருக்கவேண்டும் என்று சொல்வது ஏற்புடய்யதாக இல்லை ஏனென்று சொன்னால். நீங்கள் ஏற்றிருக்கும் இமாம்களிடத்திலும் ஏராளமான கருத்து முரண்பாடுகள் உள்ளது நீங்கள் குறிப்பிட்டுள்ள முஆத் (ரலி)அவர்களின் ஹதீஸில் குரான் ஹதீஸில் கிடைக்காவிட்டால் இஜ்திஹாதுசெய்வேன் என்று வந்துள்ளது.மற்றது நீங்கள் கூறிய தயம்மும் ஹதீஸ்,பனு குறைளா ஹதீஸ் இரண்டு சட்டங்கள் வரலாம் என்று காட்டுகிறது. நீங்கள் முரன்பட்டுல்லீர்கள்.

  உண்மை தான், நீங்கள் பிறையை எப்பிடி பின்பற்றுவீர்கள், ஜகாத் எப்பிடி கொடுப்பீர்கள், தற்கொலை செய்து கொண்டால் அந்த ஜனாசா தொழுகை தொழுவீர்களா யாரை இதில் பின்பற்றுவீர்கள், இரண்டு விதமாக யோசிக்கின்றர்களே?    
மத்ஹப்களிலும் இதே நிலவரம் தான்.இந்த இடத்தில் நீங்கள் சத்தியத்தை பின்பற்றிவீர்கள் என்றால் ஹதீதில் வந்துள்ளது ஒரு முஜ்தஹித் ஆய்வு செய்து பிழையாக இருந்தாலும் அவருக்கு ஒரு கூலி  உண்டு இந்த ஹதீஸை சிந்தித்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

  நபிகளாரிடம் ஒரு முறை ஒரு பெண்மணி வந்து விளக்கம் கேட்டு சென்றார்கள், செல்லும் பொது அடுத்த முறை நான் வரும் போது நீங்கள் இல்லை என்றால் யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று கேட்டார்கள், அப்போது நபிகளார் சொன்னார்கள், நான் இல்லை என்றல் நீங்கள் அபூபக்கர்  ரழி...  .... அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்கள், குரான் ஹதீஸ் என்று  நபிகளார் சொல்ல வில்லை ,
சுற்றி    வளைத்து எங்கே வருகிறீர்கள் குரான் ஹதீஸை படிக்ககூடாது அது விளங்காது என்றா.குரானில் இப்படி
வந்துள்ளது ஹதீஸில் இப்படி வந்துள்ளது என்று ஒரு முஸ்லிம் உலமாக்களிடம் கேற்பது என்ன அப்படி பயங்கரம் ஹராமா?குரான் ஹதீஸை படித்தால் தானே அதில் இன்ன இடத்தில் எனக்கு விளங்க வில்லை இதை விளக்குங்கள் என்று அதை தெரிந்தவர்களிடம் கேற்கலாம்  இதில் என்ன தப்பு உள்ளது சொல்லுங்கள்.

  இமாம்களின் வழி காட்டுதலின் பேரில் தான் பின்பற்ற முடியும், காரணம் புகாரி யை படிப்பதும் பிக்ஹு வில் தான் கட்டு படுகிறது,
இமாம்களின் வழிகாட்டுதலில் சரியும் உள்ளது பிழையும் உள்ளது இமாம்களின் வலி காட்டுதலின் பேரில் தான் பின்பற்றமுடியும் என்ற உங்கள் கூற்று அவர்கள் மீது கொண்ட குருட்டு பக்தியே அவர்கள் எல்லாம் பின்பற்றினது குரான் ஹதீசையே அதையே நாங்களும் பின்பற்றவேண்டும் அவர்களை தக்லீது செய்வது மார்கத்தில் ஹராம் .புஹாரி என்பது ஹதீஸ் தொகுப்பே ஒழிய பிக்ஹு   கிதாப் கிடையாது .அது என்னா புஹார்யை படிப்பது பிக்ஹுவை  கட்டுபடுத்தும் (உலறல்)புஹாரி போன்ற எல்லா ஹதீஸ் கிதாபையும் எடுத்து ஆய்வு செய்கையிலே சட்டம் எடுக்க முடியும் இந்த விடயம் இன்று இலகு படுத்தப்பட்டுள்ளது இமாம்கள் காலத்தில் சிரமத்திற்கு மேல் சிரமம் ஹதீஸுடைய தரத்தை விளங்குவதற்கு சிரமம் ஹதீஸ் ஒண்டு கிடைப்பதே சிரமம் இன்று இருந்தது போல் அல்ல.

 ருகூ விற்கு செல்வதற்கு முன், சஜ்தா விற்கு செல்வதற்கு கையை உயர்த்துவது பற்றிய சட்டம் மாற்றப்பட்டு விட்டது, ஆனாலும் சில இமாம்களின் விளக்கத்தில் தான் நடைமுறையில் உள்ளது, இல்லை மாற்றப்படவில்லை என்று கூறினால், இரண்டு சஜ்தாவிற்கு மத்தியிலும் கையை உயர்த்தும் பழக்கம் அன்றைய காலத்தில் இருந்தது, அதை பின் பற்ற முடியுமா
நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்  தெளிவில்லை சொல்லகூடிய செய்தியை தெளிவாக சொல்லுங்கள் குழப்புவதற்கு சொல்லாமல் .அன்றைய காலத்தில் இருந்ததை ஏன் சார் பின்பற்றுகிறீர்கள்.

 , இமாம்களின் கருத்து இல்லாமல் நேரிடையாக பின் பற்றினால், ஹதீஸில் இருப்பது நீங்கள் தொழுகையில் குதிரை வால் ஆட்டுவதை போல ஆட்டாதீர்கள் என்று திர்மிதியில் வருகிறது, அப்படி தன பின் பற்ற முடியும், அதே போல சஜ்தா விற்கு செல்லும் பொது காலிற்கு முன் கை வயப்படும் நேர் ஹதீஸ் கருத்திற்கு மாற்றமாக இருக்கின்றது, அது நீங்கள் தொழுகையில் ஒட்டகம் உட்காருவதை போல உட்காராதீர்கள் என்று திர்மிதியில் வருகிறது,  அப்படியானால், முதலில் கை வைப்பதற்கு பதிலாக காலை வைக்க வேண்டும், ஆனால் சில இமாம்கள்  கொடுத்த விளக்கத்தில் தான் வண்டி ஓடுகிறது என்பது தான் உண்மை. 
இதுதான் உங்களுடைய பிரச்சினையா ஹதீஸுடைய விளக்கம் இமாம்களுக்கு எவ்வாறு தெரிந்தது நபி கனவுல வந்து சொன்னார்களா ஹதீஸில் எவ்வாறு வந்துள்ளதோ தெளிவாக வந்தால் தெளிவாக சொல்வார்கள் தெளிவில்லாமல் வந்தால்அதை வைத்து சுய விளக்கம் சொல்லவில்லை அதே போன்றுதான் இப்பொழுதும்இருப்பதை வைத்துதான்  சட்டம்.இமாம்களுடைய விளக்கம் ஹதீதிற்கு சரியாக இருந்தால் எடுக்க எந்த தடையும் இல்லை.ஆனாலும் இந்த ஒட்டகம் அமர்வதுபோல் என்ற ஹதீஸிற்கு இப்னு கையும்(ரஹ்)அவர்களின் விளக்கத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    

வல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்டு நபிகளாரால் உருவாக்கப்பட்ட  மார்க்கம் ஒன்றே, ஆகவே இதில் இடைச் செருகல் செய்யாமலும், நீக்கம் செய்யாமலும் அல்லாஹ்வும் ரசூலும் தந்த உயர்ந்த தூய்மையான மார்க்கத்தை  இமாம்களின் வழிகாட்டுதலின்  பேரில்  நாம் அனைவரும் பினபற்றுவோம்
மார்க்கம் ஒன்றே அதில் நான்கு மத்ஹபுகளை உருவாகினவர்கள் நீங்களே இப்பொழுது அதை பின்பற்றுவது அவசியம் இல்லை என்று சொல்கிறீர்கள் மதஹ்பு நூடாக மார்கத்தில் இடை சருகல் செய்தவர்கள் நீங்களே மார்கத்தில் எல்லா பிதுஅத்துகளையும் உருவாக்கினவர்கள் அந்த எல்லாவளிகேடுகளையும் இமாம்களின் பெயரால் உருவாக்கிவிட்டு  இந்த இமாம்களின் பெர்யர்களை நாசம் பண்ணிவிட்டீர்கள் அவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை தூய்மையான முறையில் குரான் ஹதீஸை பின்பற்றி உயர்தரமான அந்த ஜேன்னது பிர்தவ்சை அடைந்து கொள்ள அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் உதவி செய்வானாக.
 


From: Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Sat, July 3, 2010 7:37:34 PM

Subject: Re: அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்( 22.78)

haja mohideen

unread,
Jul 5, 2010, 3:04:18 AM7/5/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,,,

 ஏகத்துவம்  ஜூலை2010  

தலையங்கம்

பரிகசிக்கப்படும் பால்குடிச் சட்டம்

சவூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று மறுத்து வருகின்றனர். அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

1. ஹிஜாபைக் களைந்து விடும். கார் ஓட்டும் போது முகத்தைக் காட்ட வேண்டும். இது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் பிறப்பிடம் ஆகும்.

2. பெண்களிடம் வெட்கம் எடுபட்டு விடும்.

3. அடிக்கடி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவர்.

4. பெண்களிடம் பிடிவாதம் தலைதூக்கும். வீட்டை விட்டு அற்பக் காரணங்களுக்காகக் கூட வெளியேறி விடுவார்கள்.

5. சிக்னல்பெட்ரோல் பங்க்சோதனைச் சாவடி போன்றவற்றில் நிற்பதுவிபத்துபோக்குவரத்து விதி மீறலுக்காக காவல்துறையினரிடம் மாட்டுதல் போன்ற நிலை ஏற்படும்.

6. சாலைகளில் நெருக்கடி மேலும் அதிகமாகும்.

7. விலைவாசி உயர்வுகடன் போன்ற சுமைகள் அதிகரிக்கும்.

8. ஆண்களிடம் உள்ள நிதானம்தூர நோக்கு பெண்களிடம் இருக்காது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும்.

9. பெண்களின் குற்றங்கள் அதிகரிப்பதால் அவர்களைக் கண்காணிக்க பெண் காவல் துறை உருவாக்க வேண்டும். பெண் காவலர்களும் முகத்தைக் காட்டியாக வேண்டும்.

10. பெண்களுக்கென்று கார் ஒர்க் ஷாப்வாடகைக் கார் மையம் போன்றவை அமைக்க வேண்டும். இதற்கென பணிப் பெண்களை நியமிக்க வேண்டும். பெண்கள் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தால் குழப்பங்கள் தோன்ற ஆரம்பித்து விடும். மேற்கத்திய நாடுகளைப் போன்று வீட்டு நலம்குழந்தைகள் நலம் அனைத்தும் பாழாகி விடும்.

11. கணவன் அல்லது பெற்றோர் இருக்கும் போதே தவறுகள் நடக்கின்றன. அதுவும் ஒழுக்கமிக்க பெண்களுக்கே இவ்வாறு நடக்கின்றது. ஒழுக்கக்கேடான பெண்ணாக இருந்து அவள் வெளியே புறப்பட்டால் அதைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

12. தூரமான இடங்களில் கார் பழுதாகி விட்டால் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

13. ஒரு பெண்திருமணம் முடிக்கத் தடையான ஆண் துணையின்றி பயணம் மேற்கொள்வது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு எதிரானது.

இவை அனைத்தும் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினால் ஏற்படும் குழப்பங்கள் என்று சவூதி மார்க்க அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துக்களாகும்.

இதற்கு இவர்கள் தரும் தீர்வுவெளிநாடுகளிலிருந்து ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.

அவ்வாறு அமர்த்துகின்ற போது இதை விட அதிகமான பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அந்த டிரைவர்கள்பெண்களைத் தனியாகவே அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. சதாவும் நெருங்கிப் பழக வேண்டியுள்ளது. குடும்பத்தினர் அனைவருடனும் டிரைவர் சர்வ சாதாரணமாகக் கலக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வு என்ன?

அந்த டிரைவர்களுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்து விட வேண்டும் என்று அண்மையில் ஒரு சவூதி மார்க்க அறிஞர் தீர்ப்பளித்திருக்கின்றார்.

சவூதியின் மூத்த அறிஞர்கள் குழு உறுப்பினரும் மன்னரின் ஆலோசகருமான ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் கான் என்பவர் தான் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

இதற்கு ஆதாரமாக முஸ்லிம் நூலில் இடம் பெறும் ஸாலிமுடைய ஹதீஸை உபைக் கான் கொண்டு வந்திருக்கிறார். (இந்த ஹதீஸ் குறித்த விளக்கத்தைத் தனிக் கட்டுரையில் காண்க!)

இப்படி ஒரு மார்க்கத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில்சவூதியிலும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் இதற்குப் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பி விட்டன.

இந்தப் பால்குடிச் சட்டம் பரிகாசத்திற்கும்பழிப்பிற்கும் உள்ளாகியிருக்கின்றது. இந்தச் சட்டம் கேள்விக்குரியதாகவும்,கேலிக்குரியதாகவும் மாறியிருக்கின்றது.

பச்சை மழலைகளின் பசி உணர்வைத் தீர்க்கின்ற பால்குடிச் சட்டம்பருவ வயதை அடைந்தவரின் பாலுணர்வுக்குப் பாதை மாற்றப்படுகின்றது என்ற அபாயத்தைப் பாமர மக்கள் இன்று புரியத் துவங்கியிருக்கிறார்கள்.

தாடி வைத்த டிரைவர்கள்தாய்மார்களிடம் பால் கொடுக்குமாறு கேட்கும் கேலிச் சித்திரங்கள் இணைய தளங்களில் வெளியாகின்றன.

சவூதி மற்றும் அரபகத்திலுள்ள பெண்கள் கொதித்துப் போயுள்ளனர். இது தொடர்பாக கல்ஃப் நியூஸ் மற்றும் சில அரபு மொழிப் பத்திரிகைகளில் அப்பெண்கள் அளித்துள்ள பேட்டிகள் இதோ:

"இந்த மார்க்கத் தீர்ப்பு கிண்டலும் கேலிக்கூத்துமாகும். எங்கள் மார்பகங்களை வெளிநாட்டு ஓட்டுனர்களுக்கு அளிக்க வேண்டுமாம்இது தான் எங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பா?'' என்று ஃபாத்திமா அஷ்ஷம்மாரி என்ற பெண் குமுறுகின்றார்.

தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு சவூதிப் பெண்மணி, "கார் ஓட்டுவதை இஸ்லாம் எனக்குத் தடை செய்து விட்டுஎனது மார்பகத்தை அந்நியரிடம் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கிறதோ?'' என்று கேள்வி எழுப்புகின்றார்.

"எனக்குப் பிறந்தவயதுக்கு வந்த என் சொந்தப் பிள்ளைகளுக்கு நான் பால் கொடுக்காத போது பிற நாட்டு ஆடவர்களுக்கு நான் பால் கொடுக்க வேண்டுமோஇது என்ன பைத்தியக்காரத்தனம்?'' என்று அவர் மேலும் கேட்கின்றார்.

"வீட்டில் பணி புரியும் பணிப் பெண்கள்எங்கள் கணவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு இந்த ஃபத்வா பொருந்துமா?இவ்வாறு பால் கொடுப்பதன் மூலம் அனைவருமே சகோதரசகோதரிகளாக ஆகிவிடலாம் அல்லவா?'' இது இன்னொரு பெண் எழுப்புகின்ற வித்தியாசமான கேள்வி!

ஒரு பெண் ஆசிரியையிடம் அவரது டிரைவர், "எனக்குப் பால் புகட்டுங்கள்என்று கேட்கின்றார். ஆசிரியை தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியதும், "நான் உங்கள் மகனாக விரும்புகிறேன்என்று அந்த ஓட்டுனர் பதிலளித்து சாமாளிக்கிறார்.

இவ்வாறு தன் மனைவி சந்தித்த ஒரு மோசமான அனுபவத்தை அவரது கணவர் ஹமீத் அலீ தெரிவிக்கின்றார்.

"தாய்மார்கள் ஓட்டுனர்களுக்குத் தங்கள் கணவன் முன்னிலையில் பாலூட்ட வேண்டுமாஅல்லது தனியாகப் பாலூட்ட வேண்டுமாஓட்டுனருக்குப் பாலூட்டும் போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் கணவன் நுழைந்து விட்டால் கணவனின் கோரத் தாக்குதலிலிருந்து மனைவியை யார் காப்பாற்றுவார்?'' என்று சவூதிப் பெண் எழுத்தாளர் ஒருவர் குத்தலாகக் கேள்விகளைத் தொடுக்கின்றார்.

06.06.2010 மற்றும் 20.06.2010 ஆகிய தேதிகளில் வெளியான அரபுப் பத்திரிகைகளில் மேற்கண்ட பேட்டிகள் வெளியாகியுள்ளன.

அந்த அளவுக்கு இந்த மார்க்கத் தீர்ப்பு படு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்தச் சமயத்தில் தான் ஸாலிமின் ஹதீஸ் பற்றிய பார்வைகள் கண்ணோட்டங்கள்கருத்தோட்டங்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. இந்தச் சட்டத்தை மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியாத சவூதி மார்க்க அறிஞர்கள்இந்த ஹதீஸ் அபூஹுதைபாவின் மனைவி ஸஹ்லாவுக்கு மட்டும் உரிய தனிச் சட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.

ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ்ஷைக் ஸாலிஹ் பின் பவ்ஸான் போன்ற அறிஞர்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இது தொடர்பாக மற்றொரு கருத்தும் வெளியாகியுள்ளது.

"ஸாலிமின் ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியிருக்கின்றது. எனினும்அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த ஒவ்வொரு ஹதீசும் அதன் கருத்து சரியாக அமைந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது''

இவ்வாறு சவூத் பின் அப்துல்லாஹ் அல் குனைஸான் என்ற அறிஞர் இந்த ஹதீஸ் பற்றித் தெரிவிக்கின்றார்.

இந்த நிலைப்பாட்டைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டிருக்கின்றது. பி.ஜே. என்ற ஒரு தனி மனிதரின் மீது கொண்ட வெறுப்பு காரணமாக நமது நிலைப்பாட்டைக் குறை கூறும் ஸலபிகள்உமரிகள்மதனிகள் போன்றோர் அரபு நாட்டு மார்க்க அறிஞர்களின் இந்த நிலைப்பாட்டில் குறை காண்பார்களாஇந்த மார்க்க அறிஞர்களுடன் விவாதம் செய்வார்களாஇவர்களுக்கு எதிராக இணைய தளத்திலும்பத்திரிகைகளிலும்பிரச்சாரங்களிலும் போர்க்கொடி தூக்குவார்களாஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரபு நாட்டு அறிஞர்கள்.

பி.ஜே. சொன்னால் தான் தப்பு. அரபு நாட்டுக்காரன் சொன்னால் தப்பில்லை என்பது தான் இவர்களது கொள்கை. இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஹதீஸின் கருத்து குர்ஆனுடன் மோதாமல் இருக்க வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டை அறிவித்ததால் தான் இந்த ஜமாஅத் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஹதீஸை மறுப்பவர்கள் என்ற முத்திரையும் இதன் மீது குத்தப்படுகின்றது. இதற்கெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.

அல்குர்ஆன் 35:28

அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சும் இந்த ஜமாஅத் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஒரு போதும் அஞ்சாது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

பால்குடிச் சட்டம் குறித்த ஸாலிம் ஹதீஸ் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே ஏகத்துவம் இதழில் வெளியான ஆய்வின் சுருக்கத்தை இந்தச் சமயத்தில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் தனித் தலைப்பில் வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

பருவ வயதினருக்குப் பால் புகட்டுதல்

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூ ஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன்''என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூ ஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நீ அவருக்குப் பால் கொடுத்து விடு'' என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் "அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே! அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்?'' என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு "அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: முஸ்லிம் 2878

சஹ்லா (ரலி)அவரது கணவர் அபூ ஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது.

"பால்குடி உறவு ஏற்படுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லைபருவ வயதை அடைந்த ஆணுக்கு ஒரு பெண் பால் புகட்டினாலும் அந்தப் பெண் அந்த ஆணுக்குத் தாயாக மாறி விடுவாள்என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது.

இந்த ஹதீஸ் குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

குர்ஆனுடன் முரண்படுகிறது

பால்குடிச் சட்டத்திற்குகுழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்தை எல்லையாக அல்லாஹ் நிர்ணயிக்கிறான். இந்த எல்லையைத் தாண்டிய ஒருவர் பால் குடிப்பதால் பால்குடி உறவு ஏற்படாது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

1. பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். (அல்குர்ஆன் 2:233)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும்உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் 31:14)

அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும்பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். (அல்குர்ஆன் 46:15)

மனிதனை மனித வடிவில் தாய் 6 மாதங்கள் சுமக்கிறாள். அவனுக்குப் பால் புகட்டியது 24 மாதங்கள். அதாவது இரு வருடம். இந்த 6 மாதத்தையும் 24 மாதத்தையும் சேர்த்து 30 மாதங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பால்குடியின் காலம் இரண்டு வருடங்கள் தான் என்று மேலுள்ள வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கும் போதுபருவ வயதை அடைந்த சாலிமிற்குப் பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் எப்படிச் சொல்லியிருப்பார்கள்?

2. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும்தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:30)

ஒரு ஆண் அன்னியப் பெண்ணைப் பார்ப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தில் சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் சாலிம் பால் குடித்ததாக வந்துள்ளது. பார்ப்பதைக் காட்டிலும் பெண்ணுடைய மறைவிடத்தில் ஆணுடைய வாய் உரசுவது என்பது பன்மடங்கு ஆபாசமானதுஅபத்தமானது.

மொத்தத்தில் இஸ்லாமிய ஒழுக்க விதிகளைத் தகர்த்தெறியும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதற்குப் பிறகும் சாலிமுடைய சம்பவத்தை உண்மை என்று நம்பினால் மேற்கண்ட வசனம் கூறும் ஒழுங்கு முறையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிவகை செய்தார்கள் என்று நம்ப வேண்டிய நிலை வரும்.

இன்று உலகத்தில் எந்த மதத்தினரும் கடைப் பிடிக்காத ஓர் அற்புதமான வழிமுறையான பர்தாவை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். பெண்கள் மார்பகத்தை மறைக்க வேண்டும் என்பது இறைக் கட்டளை.

வீட்டுக்கு அதிகமாக வருபவர்களுக்குப் பால் புகட்டி விட்டால் பர்தாவைப் பேண வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தச் சம்பவம் கூறுகிறது. பர்தா என்ற அழகிய நெறியை ஒழிப்பதற்கு இஸ்லாமிய எதிரிகளால் உருவாக்கப்பட்டதாகத் தான் இச்செய்தி இருக்க முடியும்.

தாயின் பிரிவைத் தாங்காமல் இருப்பதற்கு சாலிம் (ரலி) அவர்கள் ஒன்றும் பச்சிளங்குழந்தை இல்லை. ஆண்கள் விளங்கிக் கொள்ளும் விஷயங்களை விளங்கிபருவ வயதை அடைந்துதிருமணம் முடித்தவர். இவரால் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியாதா?

குர்ஆன் கூறும் அனைத்து விதிகளையும் தளர்த்துவதற்கு அப்படியென்ன நிர்ப்பந்தம் சாலிம் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டு விட்டதுசஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனி வீட்டை உருவாக்கி முறையான அடிப்படையிலே வாழ்ந்திருக்கலாம் அல்லவா?

ஒரு பெண் நம்மிடத்தில் இது போன்ற பிரச்சனையைக் கொண்டு வந்தால் அப்பெண்ணிற்குபார்தாவைக் கடைப்பிடிக்கும் படி கூறுவோமே தவிரஒரு போதும் அந்த ஆணுக்குப் பால் புகட்டும் படி கூற மாட்டோம். நாம் கூட செய்யாத ஒரு மோசச் செயலை நபியவர்கள் செய்தார்கள் என்று கூறுவது நபி (ஸல்) அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவதாக உள்ளது.

3. அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும்நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:5)

தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் சொந்தக் குழந்தையாக ஆக முடியாது. மாறாக அவர்களைக் கொள்கைச் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அந்நிய ஆணிடத்தில் பேண வேண்டிய வழிமுறைகளை வளர்ப்புப் பிள்ளைகளிடத்திலும் பேண வேண்டும். இக்கருத்தையே இந்த வசனம் கூறுகிறது.

ஆனால் சாலிமுடைய சம்பவம் குர்ஆனுடைய இந்த வசனத்திற்கு எதிராக வளர்ப்புப் பிள்ளையை சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கான தந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அல்லாஹ்வுடைய சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு மாற்று வழியைச் சொல்லித் தருகிறது. இதனால் தான் சாலிமுடைய சம்பவத்தைச் சிலர் சுட்டிக் காட்டி, "ஹராமான ஒன்றை ஹலால் ஆக்குவதற்கான தந்திரங்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான்என்று கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்ததே தவிர குர்ஆனில் உள்ள சட்டங்களைத் தளர்த்துவதற்காக அவர்கள் ஒரு போதும் முயற்சித்ததே இல்லை. மேலுள்ள வசனத்தில் இறைவன் கற்றுத் தருகின்ற ஒழுங்கு முறையைச் சீர்குலைத்து அதற்கு மாற்றமான வேறொரு வழியை இச்சம்பவம் கற்றுத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

மகன் தாயிடத்தில் சாதாரணமாக வந்து செல்வதைப் போல் ஒரு அன்னிய ஆண்அன்னியப் பெண்ணிடம் வந்து போவதற்கான வழியை இந்த ஹதீஸ் கற்றுத் தருகிறது. குர்ஆனுக்கு எதிரான இந்த வழியை நாம் திறந்து விட்டால் இதுவே விபச்சாரம் பெருகுவதற்குக் காரணமாக அமைந்து விடும்.

பருவ வயதை அடைந்த ஆண்பெண்ணிடத்தில் பால் குடித்து விடுவதால் அப்பெண் மீது அவனுக்கோஅல்லது அவன் மீது அப்பெண்ணுக்கோ ஆசை ஏற்படாது என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். இந்த வழி ஒழுக்கமுள்ள இளைஞர்களை விபச்சாரத்தின் பால் தள்ளுகின்ற மோசமான வழி.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் மோதுகிறது

மேலே நாம் எடுத்துக் காட்டிய பல்வேறு குர்ஆன் வசனங்களுடன் இந்த ஹதீஸ் மோதுவதுடன் மட்டுமல்ல! ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்துள்ளது.

பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் பால்குடி உறவு 2 வருடத்திற்குள் தான் ஏற்படும். அதற்குப் பிறகு குடித்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தைக் கூறுகின்றன.

1. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், "இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளை பால் அருந்தியிருந்தால்) தான்''என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 5102)

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பசியைப் போக்குவதற்குத் தாயின் பாலே உதவும். இவ்வயதைக் கடந்து விட்ட குழந்தைகள் பால் அல்லாத வேறு உணவுகளை உட்கொள்ளும் நிலையை அடைந்து விடுகின்றன. எனவே பசிக்காகப் பாலருந்தும் பருவம் இரண்டு வருடங்கள் தான்.

தன்னுடைய மனைவியின் அருகில் ஓர் ஆண் அமர்ந்திருப்பதைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் கோபமடைகிறார்கள். அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடிச் சகோதரர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன போதும், "உங்கள் பால்குடிச் சகோதரர் யார் என்பதை ஆராய்ந்து பாருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.

நாம் பால் குடித்த தாயிடம் ஒருவர் பால் குடித்து விடுவதால் அவர் நமது சகோதரனாக ஆகி விட முடியாது. அவர் எப்போது பால் குடித்தார்இரண்டு  வருடத்திற்குள் அவர் குடித்தாராஅல்லது அதற்குப் பிறகு குடித்தாராஎன்று உற்று நோக்க வேண்டும். இரண்டு வருடத்திற்குள் அவர் குடித்திருந்தால் அவர் நம் சகோதரர். இதற்குப் பிறகு அருந்தியிருந்தால்அல்லது ஒரு சில மிடறுகளைக் குடித்திருப்பதால் அவர் நமது பால்குடிச் சகோதரராக ஆக மாட்டார்.

இந்த வித்தியாசத்தைப் பார்க்காமல் பால் குடித்து விட்டார் என்பதற்காக அவரை நம் சகோதரர் என்று எண்ணி சகோதரனிடத்தில் நடந்து கொள்வதைப் போல் அவரிடத்தில் நடந்து கொள்ளக் கூடாது. இதையே நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குக் கூறி எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படி கூறுகிறார்கள்.

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பால் புகட்டுவது இரண்டு வருடத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),  நூல்: தாரகுத்னீபாகம்: 10பக்: 152

3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),  நூல்: திர்மிதி 1072

இரண்டு வருடத்திற்குள் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்பதை இந்த ஹதீஸ் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.

மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களுக்கும்ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் சாலிமுடைய சம்பவம் முரண்படுவதால் இந்தச் சம்பவம் உண்மையல்ல என்றே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.




Saudi women use fatwa in driving bid 
The women threatened to follow through the fatwa which allows them to breastfeed their drivers and turn them into their sons 
  • By Abdul Rahman Shaheen, Correspondent
  • Published: 00:01 June 20, 2010


Riyadh: Saudi women plan to turn a controversial fatwa (religious ruling) to their advantage and launch a campaign to achieve their long-standing demand to drive in this conservative kingdom. 
If the demand is not met, the women threatened to follow through the fatwa which allows them to breastfeed their drivers and turn them into their sons. 
The campaign will be launched under the slogan: "We either be allowed to drive or breastfeed foreigners," a journalist told Gulf News. 
Amal Zahid said that their decision follows a fatwa issued by a renowned scholar which said that Saudi women can breastfeed their foreign drivers for them to become their sons. 
"As every Saudi family needs a driver, our campaign will focus on women's right to drive," she said. 
The controversial fatwa, which was regarded as both funny and weird, issued recently by Shaikh Abdul Mohsin Bin Nasser Al Obaikan, member of Saudi Council of Senior Scholars and adviser to the king, has sparked a debate in society. 
The renowned scholar said Saudi women can breastfeed their foreign drivers for them to be become their sons and brothers to their daughters. 
Under this relationship, foreign drivers can mix freely with all members of the family without breaking the Islamic rule which does not allow mixing of genders. 
Breast milk kinship is considered to be as good as a blood relationship in Islam. 
"A woman can breastfeed a mature man so that he becomes her son. In this way, he can mix with her and her daughters without violating the teachings of Islam," the scholar said. 
‘Ridiculous and weird' 
Al Obaikan based his fatwa on a Hadith (saying) of the Prophet Mohammad (PBUH) which was narrated by Salim, the servant of Abu Huzaifa. 
Later, Al Obaikan clarified that his fatwa was being distorted by the local media which ignored the condition that the milk should be drawn out of the woman and given to the man in a cup to drink. 
Speaking to Gulf News, a number of Saudi women condemned the fatwa. Fatima Al Shammary was quoted by the local Arabic daily Al Watan as saying the fatwa was "ridiculous and weird". 
"This fatwa has become a hot topic of debate among women. Is this is all that is left to us to do: to give our breasts to the foreign drivers?" she said. 
Another Saudi woman, who spoke on condition of anonymity, questioned: "Does Islam allow me to breastfeed a foreign man and prevent me from driving my own car? 
"I have not breastfed my own children. How do you expect me to do this with a foreign man? What is this nonsense?" she said. 
Another woman said the fatwa should also apply to the husbands who should be breastfed by housemaids. By doing so, all will be brothers and sisters," she said. 
Hamid Al Ali, a journalist for an electronic newspaper, recalled that an Egyptian driver who had a crush on a female teacher he drives to school asked her to breastfeed him. When she retorted angrily, he said: "I want to be your son." 
Saudi writer Suzan Al Mashhadi sarcastically asked Al Obaikan: "Do the women have to breastfeed the driver in the presence of their husbands or can they do this alone?" 
"Who will protect the wife if the husband entered the house unexpectedly and found his wife breastfeeding the driver?" she asked. 
 
 
Thanks to Shaik Abdul Kader






--

Roshan Rosheen

unread,
Jul 5, 2010, 3:34:28 AM7/5/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்,
இவ்வாறான ஒரு பத்வாவை வெளியிட்டதற்கு முழு முஸ்லிம் சமுதாயத்துக்குமே ஒரு தலை குனிவு.இஸ்லாத்தை கேவலபடுத்தும் இவ்வாறான பத்வாவுக்கு முஸ்லிம்கள் கட்டாயம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.இந்த கேவலத்துக்கு ஹதீச்வேற  ஆதாரம் காட்டியுள்ளார்கள்  இப்பொழுதாவது விளங்குங்கள் ஆதாரபூர்வமான ஹதீஸ் என்றால் அதனுடைய அறிவிப்பாலர்கையும்(சனது) அதனுடைய செய்திகளையும்(மதன்)பார்க்கப் படவேண்டும் என்பதை     


From: haja mohideen <haja...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Mon, July 5, 2010 12:34:18 PM
Subject: Re: ஆண்களுக்கு பால் கொடுக்கலாம் .SAUDI தீர்ப்பு...

ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)

unread,
Jul 12, 2010, 2:51:18 AM7/12/10
to fro...@googlegroups.com

வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது;அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும்,உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்! என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் நாங்கள் முஸ் ம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!எனக் கூறி விடுங்கள்!

என்ற 3:64 வசனத்தை ரோமாபுரி மன்னர் ஹெர்குலிசுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதியுள்ளார்கள். (பார்க்க புகாரி எண் 7 மற்றும் 4553)
மாற்று மதத்தவர்களும் இவ்வசனங்களைப் படித்துத் திருந்த வேண்டும் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்பினார்கள்.  தூய்மையற்றவர்கள் குர்ஆனை தொடக் கூடாது, ஓதக் கூடாது என்றிருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு எழுதி அனுப்பியிருக்க மாட்டார்கள்.

 

இதில் சுத்தம் இல்லாவிட்டால்குரானை தொடலாம்ஓதலாம் என்று எங்கு இருகின்றதுஅது கடிதம் தான்கடிதத்திற்கு அந்த சட்டம் இல்லை, 

நபி (ஸல்) அவர்கள் ஒரு மாற்று மதத்தவருக்கு குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்புகிறார்கள். அதற்கு என்ன அர்த்தம்? அந்த நபர் அந்த வசனத்தை படித்து திருந்த வேண்டும் என்பதே. ஆனால் அந்த நபர் அந்த கடிதத்தை தொடும் முன், படிக்கும் முன் நம் மார்க்க முறைப்படி சுத்தமாக இருப்பாரா? என்று யாருக்கும் தெரியாது. ஆகவே இந்த ஒரு ஹதீஸே திருக்குரானை சுத்தமில்லாமல் தொடலாம் என்பதற்கும், சுத்தமில்லாமல் ஓதலாம் என்பதற்கும் ஆதாரமாக எடுக்கலாம்.

 

மேலதிக விபரங்களுக்கு சகோ முஸ்லீம் அனுப்பிய மின்னஞ்சலை படித்து பார்க்கவும். கடிதத்தில் வேறு விஷயம் எழுதி  இருந்தால் கடிதத்திற்கு வேறு சட்டம் என்று சொல்லலாம். ஆனால் கடிதத்தில் இருப்பது குர்ஆன் வசனம். ஆகவே நாம் இதை குர்ஆனை சுத்தமில்லாமல் ஓதலாம் என்பதற்கு ஆதாரமாக எடுக்கலாம்.

உங்களில் கொள்கைகளில் ஒன்றில் உங்களுக்கு ஞானம் இல்லை என்பது உண்மை. 

இஸ்லாம் என்னுடைய கொள்கை.  நான் அதில் என்றைக்குமே மாணவன். எனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்று கூறுவதை நான் ஒத்துக் கொள்வேன், கண்ணியக் குறைவாகவோ, கேவலமாகவோ எண்ண மாட்டேன். ஆனால் அதை பற்றி அறிந்திட முயற்சி செய்வேன். 

இந்த குழுமத்தில் நீங்கள் மேற்கூறிய ஹதீஸை விளக்கலாம். என்னை போன்ற நிறைய நபர்கள் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன். 

 இப்படி பலமான ஹதீசையும் பின்பற்றுவதில் தெளிவு இல்லாமல் இருந்தால் எப்பிடி பட்ட ஹதீஸை பின் பற்றுவீர்கள்

நான் நீங்கள் கூறிய ஹதீஸைத்தான் பின்பற்றுகிறேன் என்று எப்போது உங்களிடம் சொன்னேன். நான் யாரையும் எந்த இயக்கத்தையும், எந்த இமாமையும், எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை.  ஆகவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று யார் சொன்னார்களோ (தவ்ஹீத் ஜமாத்) அவர்களிடம் கேட்க வேண்டியதை என்னிடம் கேட்கிறீர்கள்.

 

மேலே பிக்ஹு (ஆய்வு) கூடாது என்றவர்பின்னால் ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் இருந்து முரண்பாட்டை காணலாம்,  குரான் ஹதீஸ் நேரிடையாக பின்பற்ற வேண்டும் என்றால் ஒரு தீர்ப்பு தானே இருக்க வேண்டும். இதில் எது சரி என்று படுகிறதோ அதை ஏற்று கொள்ளுங்கள் என்று சொல்வது முறை இல்லை. 


தவறுதலுக்கு மன்னிக்கவும்.  பிக்ஹு என்று சொன்னது நீங்கள் பின்பற்றும் மத்ஹப் கிதாபுகளையே. குர்ஆன் ஹதீஸை வைத்து செய்யப்படும் ஆய்வை அல்ல. விபரங்களுக்கு சகோ ரோஷன் அவர்களின் மின்னஞ்சலை இனைத்துள்ளேன்.

சகோ ரோஷன் சொன்னது: பிக்ஹு   என்று அவர் கூறியது உங்கள் மத்ஹபு சட்ட கிதாபுகளைதான்  குரான் ஹதீஸில் கூறப்பட்ட இஜ்திஹாதை அல்ல.குரான் ஹதீஸை நேரிடையாக பின்பற்றினால் ஒரு தீர்ப்பு தான் இருக்கவேண்டும் என்று சொல்வது ஏற்புடய்யதாக இல்லை ஏனென்று சொன்னால். நீங்கள் ஏற்றிருக்கும் இமாம்களிடத்திலும் ஏராளமான கருத்து முரண்பாடுகள் உள்ளது

 

மேலும் பாத்திஹா வை கிண்டல் செய்து எழுதிஉள்ளார்அவருக்கு வேண்டுமானால் கிண்டலாக தெரியலாம்ஆனால் பாத்திஹா என்பது குரானில் உள்ள முதல் சூரா வை ஓதுவது என்று பொருள் ஆகும்அதை ஓத கூடாது என்று கூறுகின்றராஅப்படியானால்உங்களின் வீடியோக்களின்  ஆரம்பத்திலும் இந்த சூரா ஒதப்படுகிறதே அதற்கு ஆதாரம் என்ன?  மேலும் அது பித்அத் என்று வேறு கூறி உள்ளார்குரானின் அத்தியாயம் ஓதுவதற்கு இவர் பித்அத்து என்று கூறுவார் போலும்  

 

 இறந்தவுடன் ஆரம்பித்த பாத்திஹா என்னும் இபாதத்

 

இது  நான் எழுதிய மின்னஞ்சலில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றாக கவனிக்க வேண்டும் பாத்திஹா என்னும் இபாதத் என்று எழுதி இருக்கிறேன். எப்படி அந்த இபாதத் உண்டானது. அது ஏன் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லை. பாத்திஹா சூரா ஓதினால் நன்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதை மறுப்பவன் முஸ்லீம் இல்லை. நான் அந்து சூராவை மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் பாத்திஹா என்னும் இபாதத்தை செய்து அதன் பிறகு வரும் கூட்டு துஆவையும் ஓதுகிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம். எங்கு இருந்து இந்த இபாதத்கள் முளைத்தன. இதற்கும் குர்ஆன், ஹதீஸிர்கும் என்ன சம்பந்தம். இமாம்கள் (நான்கு இமாம்கள் இல்லை) என்ன சொன்னாலும் அது மார்க்கம் ஆகிவிடுமா. ஒரு விருந்து நடக்கிறது. அதில் விருந்து முடிந்தவுடன் கூட்டு துஆ  இமாம் ஓதுகிறார். அதற்கு  ஆதாரம் என்ன என்று கேட்டால் சாப்பாடிற்கு பிறகு ஓதும் துஆவை உதாரணம் காட்டுவீர்களா? 7 வருடம் படித்து விட்டு வந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? யாரும் அதை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாதா? கேட்டால் தப்பா? குர்ஆன், ஹதீஸ் இல்லாமல் யார் எந்த சொந்த விஷயத்தை சொன்னாலும் ஏற்க மாட்டோம்.

 

ஏன் பாத்திஹா என்னும் இபாதத்தில்  ஊருக்கு ஊர் மாற்றம் இருக்கிறது என்று கேட்டேன். விளக்கம் தரவும். பாத்திஹா என்னும் இபாததிற்கு ஆதாரம் தரவும். பாத்திஹா சூராவிற்கு அல்ல.


மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயத்திற்கு பாத்திஹா என்னும் இபாதத் ஒதினால் கூட இபாதத் என்று இமாம்கள் (நான்கு இமாம்கள் அல்ல) விளக்கம் கூறுவார்கள். ஆனால் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத விஷயத்திற்கெல்லாம் பாத்திஹா என்னும் இபாதத்தை ஓதுகிறார்கள். அது தான் வேதனையாக இருக்கிறது. மாலைக்கும், திருமணத்திற்கும், இஸ்லாத்தில் சம்பந்தமே இல்லை. ஆனால் மாலை போடும் போது பாத்திஹா என்னும் கூட்டு துஆ ஓதுகிறார்கள். இது உதாரணமே. இன்னும் நிறைய இருக்கிறது. விளக்கம் தரவும். 

 

குரானில் உள்ள ஒரு சூரா வை ஓதுவதற்கு குர்ஆனுக்கும்ஹதீசுக்கும் சம்பத்தமே இல்லையே என்று கூறுகின்றீர்களேநியாயமா இது,

 

நான் சொல்லாததை நீங்கள் கூறுகிறீர்கள். பாத்திஹா சூராவை ஓதுவதை நான் தவறு என்று கூறவேயில்லை. பாத்திஹா மற்றும் அதை தொடர்ந்து வரும் கூட்டு துஆவைத்தான்  நான் கூறினேன். நான் கூறிய பாத்திஹா மற்றும் அதை தொடர்ந்து வரும் கூட்டு துஆவிற்கு இபாதத் என்று ஆதாரம் தரவும். இபாதத்தை முடிவு செய்யும் உரிமை யாருக்கு உள்ளது என்பது பற்றி விளக்கம் தரவும்.



இம்ரானா விஷயத்தில் தாருல் உலூம் தேவ்பந்த் எந்தவிதமான தீர்ப்பும் வழங்கவில்லை என்று மறுத்துள்ளது. ஆகவே இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். ஆனால் அப்படி அவர்கள் (தாருல் உலூம் உல்மாக்கள்) தீர்ப்பு வழங்கி இருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்த்க்காது என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன். உண்மை என்ன என்பதை 
அல்லாஹ்வே மிகவும் அறிவான். 

பார்க்க : http://www.islamkalvi.com/portal/?p=115


உண்மை தான்நீங்கள் பிறையை எப்பிடி பின்பற்றுவீர்கள்ஜகாத் எப்பிடி கொடுப்பீர்கள்தற்கொலை செய்து கொண்டால் அந்த ஜனாசா தொழுகை தொழுவீர்களா யாரை இதில் பின்பற்றுவீர்கள்இரண்டு விதமாக யோசிக்கின்றர்களேநபிகளாரிடம் ஒரு முறை ஒரு பெண்மணி வந்து விளக்கம் கேட்டு சென்றார்கள்செல்லும் பொது அடுத்த முறை நான் வரும் போது நீங்கள் இல்லை என்றால் யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று கேட்டார்கள்அப்போது நபிகளார் சொன்னார்கள்நான் இல்லை என்றல் நீங்கள் அபூபக்கர்  ரழி...  .... அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்கள்குரான் ஹதீஸ் என்று  நபிகளார் சொல்ல வில்லை ,  மார்க்கம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது தான் இயல்பு,  இதற்கு மேலே கண்ட முஆத் ரழி... அவர்களின் சம்பவமே சாட்சிநபியும் அதை பொருந்தி கொண்டார்கள் என்பது தான் உண்மை 

நீங்களே கேள்வியை கேட்டு பதிலையும் சொல்லி விட்டீர்கள். குர்ஆனிலும், ஹதீஸிலும் நேரடியாக ஒரு விஷயம் விளக்காமல் இருந்தால் குர்ஆன், ஹதீஸின் உதவி கொண்டு தான் நாம் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் கூறிய ஹதீஸில் அந்த பெண்மனி நபி(ஸல்) அவர்கள் இல்லாவிட்டால் தான் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்க சொல்லியிருக்கிறார்கள். அபுபக்கர் அவர்களும் அவருடைய சொந்த கருத்தை மார்க்கத்தில் புகுத்த மட்டார்கள், புகுத்தவும் முடியாது. ஜகாத் கொடுப்பதில் நேரடியாக விளக்கம் குர்ஆன், ஹதீஸில் இருந்தால் அதை நாம் நேரடியாக பின்பற்றலாம். நேரடியாக இல்லாத போது நாம் குர்ஆன், ஹதீஸின் உதவி கொண்டு ஆராய்ந்து முடிவு எடுக்கலாம்.  

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும். இதை நான் உங்கள் மேல் உள்ள காழ்ப்புனர்ச்சியின் பேரில் எழுதவில்லை. எனக்கும் உங்களுக்கும் தெளிவு கிடைக்கும் என்ற நோக்கே தவிர வேறில்லை. 

தோழமையுடன்


அபு நிஹான்


2010/7/3 Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com>
இது பொது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கூட்டமைப்பு

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

நமக்குள் இஸ்லாம்

unread,
Jul 15, 2010, 5:43:09 AM7/15/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
அன்புச் சகோதரர்களுக்கு,
 
பொருத்தமில்லாத தலைப்புகளில் தொடர் பதிவிடுவதை முதலில் அடியோடு தவிருங்கள்.  (முன்பும் இதை சுட்டி காட்டியுள்ளோம்.) 
 
ஆய்வுபதிவுகளுக்கு அதற்கு ஏற்ற தலைப்பிட்டு பதியுங்கள். அப்போதுதான் எதிர்காலத்தில் பதிவுகளை தேடி எடுக்க வசதியாகவும் - இலகுவாகவும் இருக்கும்.   புரிந்து பதிவிடுவீர்கள் என்று நம்புகிறோம்.


--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com 
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe 
Reply all
Reply to author
Forward
0 new messages