ஈஸா (அலை) வானுலகம் உயர்தப்பட்டமை ஏன் கிறிஸ்தவர் கேட்கின்றார்

2,040 views
Skip to first unread message

Seyed

unread,
Mar 13, 2010, 12:44:57 PM3/13/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
என்னிடம் ஒரு தமிழ் கிறிஸ்தவர் கேட்கின்றார் எல்லா நபிமார்களும் தாய்,தந்தை மூலம் பிறந்தார்கள் ஆனால் நபி ஈஸா(அலை) மாத்திரம் அல்லாஹ்வின் அதிசயம் மூலம் பிறந்தார்கள் (தாய் மட்டும்) இது ஏன்? அத்துடன் 
ஈஸா (அலை)மட்டும் வானுலகம் உயர்தப்பட்டமை ஏன் ? 
ஏன் ஏனைய நபிமார்களை அல்லாஹ் உயர்த்தவில்லை ?
கரணம் என்ன ? என்பதே அவருடைய கேள்வி 
 முக்கியமாக குரான் ஹதீஸ் ஆதாரங்களை முன் வைத்து எழுதவும்
நலீப் 
நெதர்லாந்த்

கௌஸ் முஹ்யித்தீன் மன்பஈ

unread,
Mar 13, 2010, 3:39:34 PM3/13/10
to fro...@googlegroups.com
அருமையான கேள்வி கண்டிப்பாக இதுவிஷயத்தில் கு.நிஜாம் விளக்குவார்,ஏனெனில் பைபிளில் நல்ல ஞானம் அவருக்கு இருக்கிறது,

2010/3/13 Seyed <naa...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
கௌஸ் முஹ்யித்தீன் மன்பஈ
பரங்கிப்பேட்டை[துபை - அமீரகம்]
************************************************
படியுங்கள் வலைப்பூவை.
http://tamilhome.blogspot.com/

Abusumaiya

unread,
Mar 13, 2010, 3:44:06 PM3/13/10
to fro...@googlegroups.com
//எல்லா நபிமார்களும் தாய்,தந்தை மூலம் பிறந்தார்கள்//

இது தவறான செய்தி. 

//
நபி ஈஸா(அலை) மாத்திரம் அல்லாஹ்வின் அதிசயம் மூலம் பிறந்தார்கள் (தாய் மட்டும்) இது ஏன்? //

பாதி தவறான செய்தி. நபி ஈஸா(அலை) தந்தையின்றி பிறந்தது அதிசயம் என்றால், தாயும் தந்தையும் இல்லாமல் பிறந்த நபியைக் குறித்த நிலைபாடு என்ன?

//
ஈஸா (அலை)மட்டும் வானுலகம் உயர்தப்பட்டமை ஏன் ?//

ஒவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அதில் ஈஸா(அலை) அவர்களுக்கு என சில சிறப்புகள் உள்ளன. அத்துடன் சில தீர்மானங்கள் இறைவனின் நாட்டம். யுக இறுதி காலத்தில் ஈஸா(அலை) திரும்பவும் வந்து இவ்வுலகை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் ஆண்டு மரணிக்க வேண்டும் என்பது இறைவனின் நாட்டம். இறைவனின் அந்தத் தீர்மானத்திற்குக் காரணம் என்ன எனக் கேட்டால்....... அதே போன்று ஒவ்வொரு நபிமார்களுக்கும் நடந்த தனிப்பட்ட சிறப்பு விஷயங்களைக் குறித்தும் அதே போன்ற கேள்விகளை எழுப்ப இயலும்.


2010/3/13 கௌஸ் முஹ்யித்தீன் மன்பஈ <ghousem...@gmail.com>

Seyed

unread,
Mar 14, 2010, 12:36:42 AM3/14/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இக்கேள்வி ஒரு தமிழ் கிறிஸ்தவரால் முன்வைக்கப்பட்ட கேள்வி ஆகவே குரான் ஹதீஸ் இல் ஞானம் உள்ளவர்கள் தகுந்த பதிலை தருமாறு வேண்டுகிறேன்., அந்த நண்பர் ஈஸா (அலை) எல்லோரையும் விட உயர்ந்தவர் எனும் கருத்தை முன்வைபதக்காக கேட்கப்படும் கேள்வி என நான் கருதுகிறேன், ஆக அவருக்கு இஸ்லாத்தை தெளிவு படுத்தும் நோக்கிலும் கருத்து பதியவும் 

2010/3/13 Abusumaiya <abusu...@gmail.com>

கௌஸ் முஹ்யித்தீன் மன்பஈ

unread,
Mar 14, 2010, 12:45:36 AM3/14/10
to fro...@googlegroups.com

பொதுவாகவே அனைத்து கிருத்துவ சகோதார்களும் ஈசா அலை அவர்களை எல்லோரைவிடவும் குறிப்பாக நபிஸல் அவர்களை விடவும் உயர்ந்தவர் என்ற எண்ணம் இருக்கவேதான் செய்கிறது,ஈசா அலை வை நம்பாமல் ஒரு முஸ்லிம் இருக்கவே முடியாது,ஆனால் அவர்கள், முஹம்மத் ஸல் அவர்களை குறிப்பிடவே மாட்டார்கள், எனவே இது விஷயத்தில் குர்ஆன்-ஹதீஸ் ஞானத்துடன்,பைபிளின் விளக்கமும் பெற்றோர் எழுதினால்தான் சரியான விளக்கத்தை அந்த தமிழ் கிருத்துவ சகோ.க்கு கொடுக்க முடியும்
2010/3/14 Seyed <naa...@gmail.com>

Seyed

unread,
Mar 14, 2010, 12:54:14 AM3/14/10
to fro...@googlegroups.com
ஜசகல்லாஹ் கௌஸ் அவர்களே   

2010/3/14 கௌஸ் முஹ்யித்தீன் மன்பஈ <ghousem...@gmail.com>

muslim

unread,
Mar 15, 2010, 6:16:27 AM3/15/10
to fro...@googlegroups.com

அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது. ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 21:23)

நபி ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என பைபிள் கூறுகிறது. நபி ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்படவில்லை, சிலுவையில் அறையப்படவில்லை என அல்குர்ஆன் கூறுகிறது. இரண்டு செய்திகளின் நம்பகத்தன்மையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளன.

ஈஸா (அலை) அவர்களின் பிறப்பின் அற்புதம் குறித்தும் இரு வேதங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன. பாலின சேர்க்கையின்றி இறைவனின் அத்தாட்சியாக நபி ஈஸா பிறந்தார். தொட்டில் பருவத்தில் பேசினார். என்றெல்லாம் ஈஸா நபியின் பிறப்பின் அற்புதங்கள் பற்றி குர்ஆன் கூறுகிறது. முடிவில் - இறுதி நாளின் அத்தாட்சியாக ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் திரும்பப் பூமிக்கு வரவிருக்கிறார் என்பதையும் குர்ஆன், சுன்னா சுட்டிக் காட்டியுள்ளது.

ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு, யூதர்கள் அவரைக் கொலை செய்ய முயலும்போது இறைவன் அவரைக் கைப்பற்றித் தன்னளவில் உயர்த்திக்கொண்டது, இன்னும் அவர் உயிருடன் வாழ்வது, இறுதி நாளின் சமீபத்தில் மீண்டும் பூமிக்கு இறங்கி வந்து வாழ்ந்து மரணிப்பது. இவையெல்லாம் இறைத்தன்மைக்கு மட்டும் உரிய தனிச் செயலாகும். இதற்கான காரணங்கள் என்ன? என்று அவனை யாரும் கேள்வி கேட்க முடியாது!

ஈஸா நபி வானுலகுக்கு உயர்த்தப்பட்டது ஏன்? என்று கிறிஸ்தவர்கள் கேட்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். நபி ஈஸா இறைமகன் என்று அவர்களில் ஒருசாரார் நம்புவதால் மகனைக் காப்பாற்றி இறைவன் தன்னளவில் உயர்த்திக்கொண்டான் என்பதை நிறுவிட இது போன்ற சம்பங்களை சான்றாகக் காட்டுவர். குர்ஆன் மீது நம்பிக்கை கொள்ளாதவர் ஈஸா இறைமகன் என்பதற்கு குர்ஆனிலிருந்து சான்றுகள் தந்தால் அது எவ்வாறு இருக்கும் என்பதை படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.

மேலும், ஈஸா நபியின் பிறப்பு மற்றும் வரலாற்றின் காரணம் இன்னதென்றுக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றாலும், நபி ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் கொன்றுவிட்டனர் என்று சொல்லிவந்தது அப்பட்டமான பொய் என்று குர்ஆன் மறுக்கிறது. இது குறித்து வலைப்பதிவில் சகோதரர்கள் எழுதிய ஒரு பதிவு, அடுத்த அஞ்சலில்!

 
2010/3/13 Seyed <naa...@gmail.com>

muslim

unread,
Mar 15, 2010, 6:23:27 AM3/15/10
to fro...@googlegroups.com

நபி ஈஸா (அலை) அவர்களின் மரணம்.       

இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் மீது யூதர்களுக்கு கடுமையான - அளவு கடந்த வெறுப்பு இருந்தது. பழமையில் ஊறி, மக்கிப் போனவர்களுக்கு சத்தியத்தை எடுத்துக் கூறுபவர்கள் மீது ஏற்படும் ஆத்திரமும், வெறுப்பும் வழக்கமாக ஈஸா நபியின் மீது யூதர்களுக்கு ஏற்பட்டது. ஈஸாவின் அன்னை மரியமின் மீது அவதூறு சுமத்தி, நபி ஈஸா (அலை) அவர்களை வேசியின் மகன் என்று யூதர்கள் இழிவுபடுத்தினார்கள். ஈஸா இறைத்தூதர் அல்ல என்றும் நிராகரித்தனர்.

சத்தியத்தை ஓதும் ஈஸாவின் மீது ஆத்திரம் கொண்ட யூதர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈஸா நபியைக் கொன்றுவிட திட்டம் வகுத்தார்கள். அத்திட்டம் அவர்கள் அறியாமலேயே இறைவனால் முறியடிக்கப்பட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கதைப் பிரச்சாரம் செய்த காலத்தில் - திருக்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் - யூதர்கள் மர்யமின் மகன் ஈஸாவை நாங்கள் தான் கொன்றோம் என்று செல்லிக்கொண்டிருந்தார்கள். மர்யமின் மகன், இறைத்தூதர் ஈஸா கொல்லப்பட்டு விட்டார் என்றே யூதர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். இதை மறுத்து இறைவசனம் அருளப்பட்டது

அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஹீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவே இல்லை. (திருக்குர்ஆன், 004:156,157)

இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் கொன்றார்கள் என்ற சம்பவத்தை திட்டவட்டமாக திருக்குர்ஆன் மறுத்துப் பேசுகின்றது. நபி ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் உறுதியாகக் கொல்லவில்லை என்று மறுப்பதுடன் சிலுவையிலும் அவரை அறையவில்லை என்றும் உரைக்கின்றது. யூதர்கள் நபி ஈஸாவைக் கொன்றதாகச் சொல்வது வெறும் யூகத்தைத் தவிர அதில் உண்மை இல்லை எனவும் இறைவசனம் கூறுகின்றன.

ஏன் மறுக்கின்றது?

நபி ஈஸா (அலை) அவர்களின் மரணத்தை இஸ்லாம் ஏன் மறுக்க வேண்டும்? மறுப்பதால் இஸ்லாத்திற்கு என்ன? இந்தக் கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலாது!

''அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்தும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம்'' (திருக்குர்ஆன், 002:061,0091. இன்னும் பார்க்க:. 003:021,112,181. 004:155. 005:070)

நபி ஈஸாவைக் கொன்றதாகச் சொல்லும் யூதர்கள், ஈஸாவுக்கு முன்பும் நபிமார்களைக் கொன்றிருக்கிறார்கள் என இறைவசனம் கூறுகின்றது. எத்தனையோ நபிமார்களை நியாயமின்றி கொலை செய்த யூதர்கள், ஈஸாவையும் கொன்றார்கள் என்று எடுத்துக்கொள்ளாமல், யூதர்கள் ஈஸாவைக் கொன்றார்கள் என்பதை மட்டும் இறைமறை மறுக்கிறதென்றால் ஈஸா (அலை) கொல்லப்படாமல் இன்றும் உயிரோடு இருக்கிறார் என்று அடுத்த வசனம் விளக்குகின்றது.

''மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்'' (திருக்குர்ஆன், 004:158)

நபி ஈஸாவை உயிருடன், தூல உடலோடு இறைவன் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். இன்றளவும் அவர் உயிருடன் இருக்கிறார். அதாவது பூமியில் மனிதர்கள் உண்டு, உறங்கி மலஜலம் கழித்து, வாழ்க்கையை சுகித்து வாழ்வது போல் அல்லாமல் ஈஸாவுக்கென இறைவன் அமைத்த தனி உலகில் அவர் உயிருடனிருக்கிறார். அதை இறைவனைத் தவிர எவரும் அறிந்துகொள்ள இயலாது, இறைவன் அறிவித்ததைத் தவிர.

மீள் வருகை

''அவர் (ஈஸா) இறுதி நாளின் அடையாளமாவார்'' (திருக்குர்ஆன், 043:061)

''என் உயிர் எவன் கையில் உள்ளது அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈஸா-அலை) உங்களிடையே இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார், பன்றிகளைக் கொல்வார், ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார். அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள எவரும் இருக்கமாட்டார்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தமிழ் புகாரி, 2222, 2476, 3446. தமிழ் முஸ்லிம், 0242-0246. திர்மிதீ, இப்னுமாஜா)

இன்னும், தன்னை இறைவன் என்று வாதிட்டு, மக்களை வழிகெடுக்கும் மஸுஹு தஜ்ஜால் (Anti Christ) என்ற மகாப் பொய்யன். இவன் உலக அழிவு நாளின் நெருக்கத்திற்கு முன்னர் வெளிப்படுவான். இறுதி நாளின் அத்தாட்சியாக, விண்ணிலிருந்து இறங்கவிருக்கும் நபி ஈஸா (அலை) அவர்கள் இவனைக் கொல்வார்கள் என்றும் நபி முஹம்மது (ஸல்) அவர்களால் பல முன்னறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

மதீனாவில் இப்னு ஸய்யாத் என்றச் சிறுவனை தஜ்ஜால் என்று சந்தேகிக்கும் சூழ்நிலையில் நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! இவனைக்கொல்ல எனக்கு அனுமதி வழங்குங்கள்'' என்று கேட்கிறார். அதற்கு, இவன் அவனாக (தஜ்ஜலாக) இருந்தால் இவனைக் கொல்லும் அதிகாரம் உமக்கு வழங்கப்படவில்லை. இவ் அவனாக (தஜ்ஜலாக) இல்லையென்றால் இவனைக் கொல்வதில் உமக்கு எவ்விதப் பயனுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழியின் சுருக்கம். புகாரி, முஸ்லிம். தஜ்ஜாலைத் தீர்த்துக்கட்டும் பணியை ஈஸா நபியிடம் இறைவன் ஒப்படைத்திருக்கிறான் என்ற கருத்தில் அமைந்துள்ள நபிமொழி)

ஈஸா நபி மரணிக்கவில்லை!

ஈஸா நபியை இறைவன் தன்னளவில் உயர்த்திக்கொண்டான்!

ஈஸா நபி இன்றும் தமது இறைவனிடத்தில் உயிருடன் இருக்கிறார்!

எதிர்காலத்தில் மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள் விண்ணிலிருந்து இப்புவிக்கு இறங்கிவருவார்!

மக்களிடையே நேர்மையுடன் தீர்ப்பளிக்கும் நீதிபதியாகத் திகழ்வார்.

சிலுவையை உடைப்பார், பன்றிகளைக் கொல்வார், ஜிஸ்யா வரியை வாங்க மறுப்பார்.

இத்தருணத்தில் தஜ்ஜால் - (Anti Christ) - வெளிப்படுவான்.

இஸ்ரேலின் தலைநகருக்கு அருகேயுள்ள லுத்து எனும் இடத்தில் வைத்து மர்யமின் மகன் ஈஸா தஜ்ஜாலைக் கொல்வார்.

இவையெல்லாம் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்ளைக் குறித்து இஸ்லாத்தின் முன்னறிவிப்புகள். ஈஸா நபி மீண்டும் இப்புவிக்கு இறங்கி வரும்போது அவர் கொல்லப்பட்டார் என்ற யூதர்களின் கூற்று உண்மையல்ல என்றாகிவிடும். எனவே, ஈஸா நபியை யூதர்கள் கொல்லவில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை, இறைவன் அவரை தன்னளவில் உயர்ததிக்கொண்டான் என ஈஸாவின் மரணத்தை ஆணித்தரமாக இஸ்லாம் மறுக்கிறது.

மறுப்பதால் இஸ்லாத்திற்கு என்ன?

நபிமார்களிடையே வேற்றுமை இல்லை. அதே நேரத்தில் இறைவன் நபிமார்களில் சிலரைவிடச் சிலரை மேன்மையாக்கியிருக்கிறான். நபி ஈஸா (அலை) அவர்களின் சிறப்பு, ஆண் மகனின் மரபணு இன்றி இறைவனின் கட்டளைப்படி, கன்னி மர்யமின் மைந்தராகப் பிறந்தார். தொட்டில் குழந்தையாக இருக்கும்போது பேசினார். அவர் இறைத்தூதர் என்பதற்கான பல அற்புதங்களை இறைவனின் அனுமதியோடு நிகழ்த்திக்காட்டினார். இன்றுவரை மரணிக்காமல் உயிருடன் இருக்கிறார். இவையெல்லாம் ஈஸா நபியைக் குறித்து உயர்வாகச் சொல்லப்பட்டவை. மாறாக களங்கப்படுத்தும் நோக்கமல்ல!

இதுவரை மரணிக்காமல் இருக்கும் மனிதரைப் பற்றி அவர் மரணிக்கவில்லை என்று எவ்வாறு அறிந்துகொள்வது? என்ற சந்தேகம் நீங்க அவர் மறுபடியும் இவ்வுலகிற்கு வரவிருக்கும் சம்பவமே நிரூபணமாகும்! எதிர்காலத்தில் ஈஸா நபி இவ்வுலகிற்கு வரும்போது அவர் கொல்லப்படவில்லை என்ற இஸ்லாத்தின் மறுப்பு உண்மையாகும் - அதை உண்மைப்படுத்த எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பலச் செய்திகளை இஸ்லாம் முன்னறிவிப்புச் செய்துள்ளது.

ஆனால், ஈஸா நபி இவ்வுலகிற்கு மீண்டும் வரும்போது, ஈஸா நபி கொல்லப்பட்டார் - நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என்ற யூதர்களின் கூற்று உண்மையல்ல வெறும் யூகம்தான் என்றாகிவிடும்.

குறிப்பு: திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற கருத்துடையவர்கள், நபி ஈஸாவின் மரணம் குறித்து இரண்டும் எவ்வளவு எதிரும் புதிருமாகக் கூறுகின்றன என்பதைப் படித்தாவது உணர வேண்டும் எனக் கோருகிறேன் நன்றி!
 

2010/3/15 muslim <tomu...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Mar 15, 2010, 11:57:43 AM3/15/10
to fro...@googlegroups.com
salaam to you.......
bro, MUSLIM.......,
 ஆம்...... உண்மையான விளக்கம்.... முஸ்லிம்  அவர்கட்கு  நன்றிகள்........ ஆயினும் , இங்கு  நான் வைக்கும்  ஒரு கேள்விக்கும் . பதில் தந்துதவுங்கள்.......
.
அழளாஹ் , சூரா ..... மர்யம்  57  இல் கூறுகின்றான்.......
... " நாம்  அவரை ( இத்ரீஸை ) உயர்த்திகொண்டோம்"" وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا
இங்கு , ரபாஹ்னா , என்ற சொல்லால்  உயர்த்துவதை  கூறுகின்றான்.....

அதே நேரம் , நீங்கள்  எடுத்துக்காட்டிய வசனத்தில்.,  சூரா நிஷா , 158 இல்,
.".......بَل رَّفَعَهُ اللّهُ إِلَيْهِ وَكَانَاللّهُ عَزِيزًا حَكِيمًا  மாறாக அவரை ( மர்யம் மகன் ஈஸாவை ) அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக்கொண்டான்........."
என கூறுகின்றான்........
 
இங்கும் , நபி இத்ரீஸ் அவர்களை உயர்த்துவதற்கு பாவித்த அதே சொல்லே  இறைவன் பாவித்து கூறுகின்றான்........

அப்படி எனில்,,,,,,, இறைவன்  நபி இத்ரிஸ் அவர்களையும் , நபி ஈசா அவர்களை போன்று  உயர்த்தி வைத்துள்ளானா ??   இல்லை எனில் ,  இதன் கருத்து என்ன ??
தெளிவாக்குமாறு அன்புடன் கேட்கின்றேன்........


.... 





































bro,, muslim.>>>>> ''மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்'' <<<<<< (திருக்குர்ஆன், 004:158) ,>>>>நபி ஈஸாவை உயிருடன், தூல உடலோடு இறைவன் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். இன்றளவும் அவர் உயிருடன் இருக்கிறார்.,,,,,<<<
 



muslim

unread,
Mar 15, 2010, 5:11:35 PM3/15/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

அன்புச் சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு,

அல்குர்ஆன் 19:57வது வசனத்திற்கு நீங்கள் கொடுக்கும் பொருள் தவறானது. சரியான மொழிபெயர்ப்பு:

And we raised him to a high station. - இன்னும், உயர்ந்த அந்தஸ்துக்கு அவரை உயர்த்தினோம் (அல்குர்ஆன் 19:57)
 
''உயர்ந்த தகுதிக்கு அவரை உயர்த்தினோம்'' என்றும் சொல்லலாம்.

19:57வது வசனத்தில் ''மகானன்'' என்ற சொல் இடத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல பயன்படுவதுபோல் இலக்கியத்துடன் அந்தஸ்தின் படித் தரங்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ''அவருக்கென்ன உயர்ந்த இடத்தில் இருக்கிறார்'' என்று ஒருவரைப் பற்றிச் சொன்னால் உயரமான இடத்தில் இருக்கிறார் என்று பொருள் கொள்வதுபோல் அந்தஸ்து, செல்வாக்கு எனும் உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

4:158வது வசனத்தில் ''மகானன்'' என்ற சொல் இடம்பெறாமல், ''அல்லாஹு இலைஹி'' என்ற சொல்லாளப்பட்டிருப்பதால் ''அல்லாஹ் தன் வசம் அவரை உயர்த்திக்கொண்டான்'' - ''Allah raised him (jesus) up unto Himself''

வரும் ஹதீஸைப் பாருங்கள்:

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَا ‏ ‏حَذْوَ ‏ ‏مَنْكِبَيْهِ ثُمَّ كَبَّرَ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَإِذَا رَفَعَ مِنْ الرُّكُوعِ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَلَا يَفْعَلُهُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنْ السُّجُودِ  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவார்கள். ருகூவுச் செய்ய விரும்பும்போதும், ருகூவிலிருந்து நிமிரும்போதும் அவ்வாறு செய்வார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல் - முஸ்லிம் 639

''ரஃபஅ'' என்ற சொல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. தொழுகையில் கைகளை உயர்த்தவும், ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தவும் என ரஃபஅ என்ற சொல்லுடன் உருவகமாகச் சுட்டுப் பெயர் இணைந்தால் அது உயர்த்தப்பட்டது எனப் பொருள்படும்!


2010/3/15 <ibnuh...@mail.com>

நமக்குள் இஸ்லாம்

unread,
Mar 15, 2010, 11:03:09 PM3/15/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
சகோதரர் முஸ்லிம் அவர்களின் விளக்கம் சிறப்பாக உள்ளது ஜஸாக்கல்லாஹு கைரன்.  கூடுதலாக நமக்குத் தோன்றிய சிலவற்றை இங்கு மீள்பதிவு செய்கிறோம். (இது ஏற்கனவே இதுதான் இஸ்லாம்.காம் தளத்ததில் பதித்தக் கட்டுரையாகும்)
 
நபி ஈஸா (அலை) மாத்திரம் அல்லாஹ்வின் அதிசயம் மூலம் பிறந்தார்கள் (தாய் மட்டும்) இது ஏன்?
 
இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.

இதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

(முக்கிய குறிப்பு) கிறிஸ்துவ மத குருமார்கள்; இயேசுவிற்குபிறகு எந்த நபியும் இல்லை என வாதிக்கிறார்கள். இதற்கு காரணம் ஆப்ரஹாமின் முதல் மகன் இஸ்மவேலின் வரலாற்றை அவர்கள் கண்டுக் கொள்ளாததேயாகும். இரண்டாவது மகனான ஈசாக்குவின் பக்கமே அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் இஸ்மவேலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை உரிய இடத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)

ஆப்ரஹாம் (இப்ராஹீம்) அவர்களின் முதல் மனைவியான சாராள் என்ற சபுராவிற்கு ஈசாக்கு என்ற இஸ்ஹாக் அவர்கள் இரண்டாவது குழந்தையாக பிறக்கிறார்கள். இவர்களின் சந்ததி பல கிளைகளாக பிரிந்து பெருகி பல இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒவ்வொரு சந்ததியினருக்கும் நேர்வழிக் காட்ட இறைவன் புறத்திலிருந்து தீர்கதரிசிகள் - இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள்.

ஈசாக்(இஸ்ஹாக்)குடைய மகனாக யாகோப்(யஃகூப்) என்ற தீர்கதரிசி பிறக்கிறார்கள். இவர்களே 'இஸ்ராயீல்' என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள் தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள்.

அப்ரஹாம்(இப்ராஹீம்) அவர்கள் தம் மக்களுக்கு செய்த உபதேசத்தையே அவர்களின் மகன் ஈசாக்(இஸ்ஹாக்) அவர்களும், அவர்களுக்கு பின் மகன் வழி பேரன் யாகோப்(யஃகூப்) அவர்களும் செய்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் குர்ஆனில் வருகிறது.

'(ஆப்ரஹாம் ஆகிய) அவருக்கு அவருடைய இறைவன் ''எனக்கு நீர் கீழ்படியும்'' என்று கூறியதும் ''அகிலத்தாரின் இரச்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்'' என்று கூறினார் (அல் குர்ஆன் 2:131)

இதையே தம் மக்களுக்கு அவர்கள் நல்லுரையாகவும் கூறினார்கள்.

(இஸ்ரவேலாகிய) யஃகூபும் '' என் மக்களே! நிச்சயமாக இறைவன் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்கு தேர்ந்தெடுத்துள்ளான். எனவே நீங்கள் (அந்த ஏக இறைவனுக்கு) முற்றிலும் கீழ் படிந்தவர்களாக அன்றி மரணித்து விட வேண்டாம்'' என்கிறார்கள். (அல் குர்ஆன் 2:132)

யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ''எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?''

மக்கள் பதில் சொல்கிறார்கள் ''நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குறியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குறியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே அறைவனையே வணங்குவோம்'' (அல் குர்ஆன் 2:133)

இப்படி பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள். இத்தயை மக்களிடம் தான் இயேசு(ஈஸா) அவர்கள் பிரசாரம் செய்வதற்காக வருகிறார்கள் கடைசியாக.

இயேசுவிற்கு முன்னால் மோஸே (மூஸா) அவர்கள் அதே மக்களை வந்து சந்திக்கிறார்கள்.

''நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தை கொடுத்தோம். அவருக்கு பின்னால் தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். மரியாளின் (மர்யமின்) குமாரர் இயேசு(ஈஸா)விற்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கியும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவரை பலப்படுத்தியும் வைத்தோம். (யூதர்களே) உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும் நீங்கள் பெருமையடிக்கிறீர்கள். ஒரு சாராரை பொய்படுத்தினீர்கள் ஒரு சாராரை கொலையும் செய்தீர்கள்.'' (அல் குர்ஆன் 2:87)

மோஸே அவர்களுக்க பிறகு இறைவன் தொடர்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்கதரிசிகள் யூதர்களால் ''பொய்பிக்கப்பட்டார்கள்'' அல்லது ''கொலை செய்யப்பட்டார்கள்'' என்ற விபரம் மேற்கண்ட வசனத்தில் கிடைக்கின்றன. பொய்பிப்பதற்கும் கொலை செய்யப்பட்டதற்கும் என்ன காரணம்? அதே வசனத்தில் விடையும் கிடைத்து விடுகிறது. 'உங்கள் மனம் விரும்பாததை எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும்..' என்ற இறைவனின் வார்த்தைகள், யூதர்கள் அவர்களின் மன விருப்பத்திற்கு மாற்றமாக - அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய எந்த செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.

ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ஆனால் தாம் விரும்பாத ஒரு கொள்கையை - செய்தியை சொல்பவர்களை கொலை செய்யும் மனப்பக்குவம் பெற்றவர்களை கண்டிருக்கிறோமா... யூதர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டார்கள். இதையும் அந்த வசனத்திலிருந்தே அறியலாம்.

இந்த சூழலில் தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான். அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் - வரும் தலைமுறைக்கு - நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது இறைவன் தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான்.

இறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி - அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் - நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும்,

'இயல்பாக' சராசரியாக வந்த தூதர்கள் அனைவரும் பொய்பிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் 'பிறப்பிலேயே அற்புதம் மிக்க ஒரு இறைத்தூதரை யூதர்களுக்காக அனுப்புவோம்' என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது.
 
இயல்பாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு பலர் கொலையும் செய்யப்பட்டதால் கடின சித்தம் படைத்த யூதர்களை நல்வழி படுத்த இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற இறைவனின் ஏற்பாட்டாலும், தன் வயிற்றிலும் சந்ததியிலும் சிறந்த குழந்தை உருவாக வேண்டும் என்ற இயேசுவின் தாய் வழி பாட்டியார் செய்த பிரார்த்தனையாலும் இயேசுவை இறைவன் தேர்ந்தெடுக்கிறான்.

(இயேசுவாகிய) அவர் (நம்முடைய) அடியாரேயன்றி வேறில்லை. அவர்மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை ஓர் உதாரணமாக்கினோம் (அல் குர்ஆன் 43:59) என்ற வசனம் பிரத்யேகமாக யூதர்களுக்கு இறைவன் வழங்கிய அத்தாட்சியை - நமது இரண்டாவது கூற்றை - மெய்ப்பிக்கிறது.
நிச்சயமாக இறைவன் ஆதாமையும், நோவாவையும், ஆப்ரஹாமின் சந்ததியினரையும், இம்ரானுடைய குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்துள்ளான். (அல் குர்ஆன் 3:33)

அவர்களில் அனைவரும் முந்தியவர்களின் சந்ததியினர்தான். (அல் குர்ஆன் 3:34)

3:33 வது வசனத்தில் ஆதாம், நோவா, இப்ராஹிமுடைய சந்ததி என்றெல்லாம் இறைவன் குறிப்பிடுவதை நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாக 'இம்ரானின் குடும்பத்தினர்' என்று இறைவன் கூறுகிறான். இந்த இம்ரான் குடும்பத்தில் ஒருவராகத்தான் இயேசு அவர்கள் பிறக்கிறார்கள்.

இயேசுவின் தாய் வழி பாட்டி - மரியாளின் தாய் - செய்த பிரார்த்தனை இயேசுவின் வருகைக்கு ஒரு முன்னுரையாக அமைந்தது.

மரியாளின் தாயார் கர்ப்பம் தரித்திருந்த போது ''இறைவா என் வயிற்றில் உள்ள குழந்தையை உனக்காக நேர்ந்து விட்டேன். அது முழுமையாக உனக்காக அர்ப்பணிக்கப்படும். இதை என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக. நீயே செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறாய்'' என்று இம்ரானின் மனைவி பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 3:35)

அவர் குழந்தையை ஈன்றெடுத்த போது 'இறைவா.. நான் பெண்குழந்தையைப் பெற்று விட்டேனே..' என்றார். அவர் எத்தகையதை ஈன்றெடுத்தார் என்பதை இறைவன் நன்கறிவான். 'ஆண் பெண்ணைப் போன்றவனல்ல. நான் இவளுக்கு மரியம் (மரியாள்) என்று பெயரிட்டுள்ளேன். சபித்து துரத்தப்பட்ட (தீய சக்தியான) ஷைத்தானை விட்டு இவளுக்கும் இவளின் வழிதோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்' என்று அவர் (மரியாளின் தாயார்) கூறினார் (அல் குர்ஆன் 3:36)

இஸ்ரவேலர்களில் விதிவிலக்காக இறைவனை நம்பி - அவனுக்கு எதையும் இணையாக்காமல் கட்டுபட்டு நடக்கும் ஒரு நல்ல பெண்ணாக மரியாளின் தாயார் வாழ்ந்துள்ளார் என்பதை இந்த வசனங்களின் மூலம் விளங்கலாம். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் அந்த சமூகத்தின் மனப்பான்மை எப்படி இருந்ததது என்பதை 2:87 வசனத்தின் மூலம் முதல் தொடரில் அறிந்தோம்.

இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு சிலர் கொலை செய்யப்பட்ட மட்டமான - மோசமான சூழ்நிலை நிலவி வருவதை மரியாளின் தாயார் கண்டு அனுபவிக்கிறார்கள். இந்த கொடுமையை எதிர்க்க தன் புறத்திலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்கள் இப்படி ஒரு பிரார்த்தனையை செய்ய தூண்டி இருக்கலாம்.

இங்கு தொடரும் அவலங்கள் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வராது என்பதை உணர்ந்தும், தான் ஒரு பெண் என்பதால் தன்னால் களத்தில் நின்று இந்த கொடுமையாளர்களை எதிர்க்க முடியாது என்பதாலும் தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்து வளர்ந்து இறை வழியில் தன்னை அர்ப்பணித்து இவர்களுக்கு பாடம் புகட்டட்டும் என்ற சிந்தனையாளும் அவர்கள் இந்த பிரார்த்தனையை வைத்திருக்கலாம்.

'என் வயிற்றில் உள்ளதை உனக்காக அர்ப்பணிக்கிறேன்' என்ற கூற்றை சிந்திக்கும் போது நாம் எழுதியவாறு உள்ள எண்ண ஓட்டங்கள் அந்த தாயின் மனதில் எழுந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. அவர் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறார் அது பெண் குழந்தையாகி விடுகிறது. அவர் எதிர்பார்த்த ஆண் குழந்தை கிடைக்கவில்லை. தன் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலையில் தான் 'நான் ஒரு பெண் குழந்தையை பெற்று விட்டேனே..' என்கிறார். ஆண் பெண்ணைப் போன்றவனல்ல.. என்ற அந்த தாயின் கூற்றும் 'இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்து போராட்ட களம் காணும் தகுதி ஆணுக்கு தான் இருக்க முடியும் ஆனால் பிறந்தது பெண்ணாகி விட்டதே..' என்ற கவலையின் சாயலில் தான் வெளிப்படுகிறது.

இருந்தும் அவர் தன் நம்பிக்கையை தளர்த்திக் கொள்ளாமல் குழந்தைக்கு மரியம் (மரியாள்) என்று பெயரிட்டு அதை இறைவனின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறார்கள்.

அவரை (மரியாளை) இறைவன் அழகிய முறையில் எடுத்துக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஜகரிய்யாவை பொறுப்பாளியாக்கினான். (அல் குர்ஆன் 3:37)

(உள்ளத் தூய்மையோடும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் இறைவனிடம் செய்யும் முறையீடுகள் (பிரார்த்தனைகள்) எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முஸ்லிம்களுக்கு இதில் படிப்பனையுள்ளது.)

பைபிளின் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷ காரர்களான மாற்கு, மத்தேயு, லூக்கா, யோவான் இவர்களில் யாரும் குர்ஆனில் வரும் மரியாளின் தாயார் பற்றிய சம்பவங்களை குறிப்பிடவே இல்லை.

ஜகரிய்யா பொறுப்புதாரியாக்கப்பட்டார் என்பதிலிருந்து மரியாளின் தாயார் மரியாளை பெற்றவுடன் மரணித்து இருக்கக் கூடும் என்பதை யூகிக்கலாம்.

ஜகரிய்யா அவர்களிடம் வளரும் மரியாளுக்கு அவ்வப்போது சிற்சில அற்புதங்கள் நிகழ்கின்றன.

மரியாள் தங்கிக் கொள்ளும் அறைக்கு ஜகரிய்யா அவர்கள் செல்லும் போதெல்லாம் மரியாளிடம் இருக்கும் உணவு வகைகளை கண்டு 'மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்கிறார்கள். அதற்கு மரியாள் இது இறைவன் கொடுக்கிறான். அவன் தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான் என்கிறார்கள். (அல் குர்ஆன் 3:38)

இறைவனிடமிருந்து மரியாள் பெற்ற அறிவிப்பு.

மரியமே! இறைவன் உம்மை தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்தின் பெண்களை விட உன்னை சிறப்பித்துள்ளான் என்று வானவர்கள் நற்செய்திக் கூறுகிறார்கள். (அல் குர்ஆன் 3:42)

மரியமே! உனது இறைவனுக்கு பணிந்து நடப்பாயாக, அவனுக்காக தலை தாழ்த்தி வணங்குவாயாக. குனிந்து வணங்குவோருடன் குனிந்தும் வணங்குவாயாக என்றும் வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:43)

இவை மறைவனா செய்திகளாகும். (முஹம்மதே.. இறைவனாகிய) நாமே இதை உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று முடிவு செய்ய அவர்கள் எழுதுகோல்களைப் போட்ட போதும், இது குறித்து அவர்கள் சர்ச்சை செய்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல் குர்ஆன் 3:44)

மரியாளை இறைவன் அகிலத்தின் பெண்களை விட தூய்மைப்படுத்தியதாகவும், அவரை இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் இந்த வசனங்களில் கூறப்படுகின்றன. கிறிஸ்துவ பிரச்சாரர்களால் இந்த வசனங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். தேர்ந்தெடுத்து தூய்மைப்டுத்துதல் என்பதை 'தூய்மைப்படுத்தி மனைவியாக தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று வளித்து பொருள் கொண்டு - இறையச்சமின்றியும் பகுத்தறிவு சிந்தனையின்றியும் - விஷமத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் என்பவன் தனித்தவன், பெறப்படாதவன், யாரையும் பெற்று தாயாகவோ தந்தையாகவோ ஆகாதவன், எத்தகைய தேவையும் அற்றவன், அவனுக்கு நிகராக எதுவுமில்லாதவன் என்றெல்லாம் இஸ்லாம் இறைவனுக்கு இருக்க வேண்டிய தனித்தகுதிகளை - இறைவனைத் தவிர பிறருக்கு இருக்கவே முடியாத தகுதிகளை - உலகில் முழங்கி அந்த சத்தியத்தின் பக்கம் மக்களை ஈர்த்து வளர்ந்துக் கொண்டு வருவதை அறியாதவர்களல்ல இவர்கள். இருப்பினும் இவர்களின் 'திரித்துவ' கொள்கையை மக்களிடம் - குறிப்பாக முஸ்லிம்களிடம் - திணிக்க திரித்தல் கலையை கையாண்டு வருகிறார்கள்.

தூய்மைப்படுத்துதல் - தேர்ந்தெடுத்தல் என்பதன் பொருள் என்ன?

மனைவியாக வருபவளை மட்டும் தான் தூய்மைபடுத்த முடியும். தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான் கிறிஸ்துவ உலகின் அளவுகோலா...

கிறிஸ்துவத்தை பிரச்சாரம் செய்வதற்காகவே உருவாக்கப்படும் கன்னியாஸ்திரிகள் எப்படிப்பட்டவர்கள்? மத குருக்களால் தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்தப்படுபவர்களே கன்னியாஸ்திரிகள் என்ற தகுதியை அடைய முடியும். இப்படி தெர்ந்தெடுக்கப்பட்டவர்களெல்லாம் கர்த்தருக்கு மனைவியாகத்தான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்று கூறி கிறிஸ்துவ உலகம் கர்த்ததை காமம் நிறைந்தவராகவும் பெண் மோகம் உள்ளவராகவும் சித்தரிக்குமா... அப்படியெல்லாம் இல்லையென்றால், மரியாளுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா...

இன்றைய கன்னியாஸ்திரிகள் கர்த்தர் வழியில் தன்னை அர்ப்பணித்து அவருக்கு ஊழியம் செய்யவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பணிக்கு உள்ளத்தூய்மையும் கட்டுப்பாடும் முக்கியம் என்பதால் அதற்கான பயிற்சியின் மூலம் அவர்கள் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள் என்று கிறிஸ்துவம் பதில் சொன்னால் இந்த வாதம் மரியாளின் விஷயத்தில் மட்டும் பொருந்தாமல் போய்விடுமா...

உலக அளவில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் கல்விக் கூடங்கள் இன்னபிற நிறுவனங்கள் இங்கெல்லாம் ஏனோ தானோவென்று ஆட்களை நியமிக்கிறார்களா...அல்லது தகுதிப்படைத்தவர்களை தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்களா...

இங்கெல்லாம் நல்ல ஆண்களை தெர்ந்தெடுக்கும் போது அது அங்குள்ள பெண்களுக்கு கணவர்கள் என்ற அடிப்படையில்தான் என்றும், சிறந்தப் பெண்களை தேர்ந்தெடுக்கும் போது இது அங்குள்ள ஆண்களுக்கான மனைவிகளின் தேர்வுதான் என்றும் பிறர் விளக்கம் சொன்னால் இவர்களால் பொருத்துக் கொள்ள முடியுமா...

தேர்ந்தெடுத்தலும் - தூய்மைப்படுத்துதலும் மனைவியாக்கத்தான் என்பது எவ்வளவு கீழ்தரமான வாதம் என்பதை கிறிஸ்துவ சகோதரர்கள் இப்போது உணர்வார்கள் என்று நம்புகிறோம்.

கர்த்தர் மரியாளை தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்துகிறார் என்பது உண்மைதான். இறைவனுக்கு மனைவி என்ற மட்டரகமான தகுதிக்காக இந்த தேர்வு நடக்கவில்லை. இந்த தேர்வு மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனைக்காக நடந்ததாகும்.

யூதர்களின் கொடுமையை கண்டு அதை எதிர்க்க தன் பங்களிப்பாக தன் வயிற்றில் வளர்வதை இறைவனுக்கு அர்ப்பணிக்க முடி செய்து அதை கர்த்தரிடம் அறிவிக்கவும் செய்கிறார். ஆனால் கர்த்தர் கொடுத்ததோ பெண் குழந்தை.

'நான் ஒரு பெண்ணை பெற்றுவிட்டேனே...' என்று அவர் மனம் நொந்துப்போனாலும் கர்த்தரின் திட்டம் வேறு விதமாக இருந்தது. ஆண் பெண்ணைப் போன்றவனல்ல என்று அந்த தாய் நினைத்தாலும் பெண்ணாலும் இறைவழியில் பெரும் தியாகம் செய்ய முடியும் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக மரியாளை தேர்ந்தெடுப்பது இறைவனின் திட்டமாக இருந்தது.

கர்த்தருக்கான அர்ப்பணத்திற்கு ஒரு முன்னுதாரனமாகத்தான் அந்த பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறாரே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனைக்கு களம் அமைக்கும் விதமாகவே அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தாயாரின் மறைவுக்கு பிறகு அவரை வளர்ப்பது யார் என்ற பிரச்சனையும் அவர் குறித்த சர்ச்சையும் கிளம்பியதாக இறைவன் 3:44 வசனத்தில் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர் தனித்துவம் வாய்ந்த பெண்ணாக வளர்ந்துள்ளார் என்பதை விளங்கலாம்.

பிற்காலத்தில் இறைவனால் ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்கு அவரை மனோவியல் ரீதியில் தயார் படுத்துவதற்காக அவரை வளர்க்கும் பொறுப்பை இறைவன் இறைத்தூதர் ஜகரிய்யா அவர்களிடம் ஒப்படைக்கிறான். மரியாளை பொறுப்பேற்று வளர்க்கும் போது ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தைக்காக ஏங்கும் இதயம் மட்டும் அவர்களுக்கு ஓயவில்லை. மரியளை குழந்தைக்கு குழந்தையாக வளர்த்து வணக்க வழிபாட்டின் மூலம் அவர்களை பக்குவப்படுத்திக் கொண்டிக்கும் வேளையில் தான் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் வழங்கப்படுவதை ஜகரிய்யா அவர்கள் பார்க்கிறார்கள்.

இது எப்படி உனக்கு கிடைத்தது? என்ற கேள்விக்கு கணக்கின்றி கொடுக்கும் ஆற்றல் உள்ள இறைவன் தான் இதை எனக்கு கொடுக்கிறான் என்று மரியாளிடமிருந்து பதில் வருகிறது.

எதற்கும் ஆற்றல் உள்ள இறைவன் தனக்கு ஏன் ஒரு வாரிசை - மகனை கொடுக்க மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், 'இறைவா உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையை கொடுத்தருள்' என்று பிரார்த்திக்கிறார்கள். இறைவன் அதை ஒப்புக் கொள்கிறான். இறைவன் ஒப்புக் கொண்டாலும் ஜகரிய்யா அவர்களால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில் அவர் தள்ளாத முதுமையை அடைந்து விட்டார்கள். அவர்களின் மனைவியும் குழந்தைப்பேறைப் பெரும் மாதவிடாய் தகுதிகளையெல்லாம் இழந்து மலடு தட்டி விடுகிறார்கள். குழந்தை உருவாவதற்கான இயற்கை விதிகள் கடந்து போயிருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கின்றது. யஹ்யா என்ற மகனை 'இறைத்தூதரை' ப் பெற்று எடுக்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் 3:38 - 39 - 40 வசனங்களிலும் மரியாள்(மரியம்) என்ற 19வது அத்தியாயத்தின் ஆரம்ப ஆறு வசனங்களிலும் கிடைக்கின்றன.

மரியாளை மனோரீதியாக உருவாக்க வேண்டிய நிலையில் ஜகரிய்யா அவர்களின் வழியாக இறைவன் அந்த பாடத்தை போதிக்கிறான்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   

Seyed

unread,
Mar 15, 2010, 11:09:17 PM3/15/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இங்கு சகோதரர்களின் விளக்கம் சிறப்பானதாக உள்ளது குறிப்பிட்ட நண்பருக்கு விளக்குவோம் அல்லாஹ் எங்களுக்கும் அந்த தமிழ் நண்பருக்கும் நல்வழி காட்டுவானாக 
Seyed N deen

2010/3/16 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>

--

ibnuh...@mail.com

unread,
Mar 16, 2010, 5:52:17 AM3/16/10
to fro...@googlegroups.com
  BRO, MUSLIM,
ஆம்....... சரியான விளக்கமே....
....ஆயினும் சில மொழிபெயர்ப்பாளர்கள்,  ..... உதரணம் ,,,,, M .H ஷாகிர் ,( CAIRO , AL AZAR )  இப்படி மொழியாக்கம் செய்துள்ளார்....
56 And mention Idris in the Book; surely he was a truthful man, a prophet,
57 And We raised him high in Heaven. ( ?? )
 
 ஆனால்,  MOHAMED  SARWAR என்பவர், ,  
...And We GRANTED  him  high  POSITION ...
என்றே மொழியாக்கம் செய்துள்ளார். .....
 
........இதுவே  மிக தெளிவான விளக்கம்..... 
 
மேலும்,  இறைவன ,(4:157).
  ALLAAH,  raised him up to Himself. .. .
என்று கூறி விட்டு , தொடர்ந்து...
,,,,ALLAAH, is Majestic and All-wise, 
என்று அவனின் வல்லமையை  கூறுவது நபி  ஈஷா  அவர்களை   அப்படியே உயர்த் தியதை  தெளிவாக  விளங்க வைக்கின் றது. ....... 
நன்றி........  
JASAKKALLAH........

Maraic

unread,
Mar 16, 2010, 11:14:36 AM3/16/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
எல்லா நபிமார்களும் தாய்,தந்தை மூலம் பிறந்தார்கள் ஆனால் நபி ஈஸா(அலை) மாத்திரம் அல்லாஹ்வின் அதிசயம் மூலம் பிறந்தார்கள் (தாய் மட்டும்) இது ஏன்? இந்த கேள்வியை பொறுத்தவரை ஈஸாஅலை) அவர்களின் பிறப்பு ஆதமின் பிறப்பு போன்றுதான் என்று மிக தெளிவாக அல்லாஹ் தன்னுடைய திருமறையில் குறிப்பிட்டுள்ளான்.

நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈசாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன், அவரை மண்ணால் மண்ணால் படைத்து பின் அதற்க்கு (மனிதனாக) "ஆகுக" என்று கூறினான், அவர் அவ்வாறு ஆகிவிட்டார்.( 3 : 59 )

மேலே குறிபிட்டுள்ள வசனத்தின் படி, தந்தையும் தாயும் இல்லாமல் ஆதமை படைக்க  அல்லாஹ்வினால் முடியும் என்பதை தெளிவாக அறியலாம். அதை போல ஹவ்வா வையும் எந்த ஒரு பெண்ணின் துணையின்றி ஒரு ஆணிலிருந்து அதாவது ஆதமிலிருந்து படைத்தான். நாம் ஒன்றை மட்டும் நம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு மட்டும் அதிசியம் அல்லே, இந்த உலகத்தில் படைக்க படுகின்ற ஒவ்வொரு உயிரினகளும் அதிசியம்தான்யாரை எப்படி படைக்க வேண்டும் என்று  அல்லாஹ் விரும்புகின்றானோ அவர்களை அப்படியே படைகின்றான்இது அல்லாஹ்வின் உரிமை இதில் நாம் தலைவிடுவதர்க்கு எந்தவிதத்திலும் உரிமைலில்லை.

(மேலும், மாறியமை நோக்கி) மலக்குகள் "மரியமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க ) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் அதன் பெயர் மஸிஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க சிறப்பிற்குரிய வராகவும் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்" என்றும் கூறினார்கள். அன்றி அவர் தொட்டிலில் (குலதையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப்பற்றியு)ம். (தன் நபித்துவத்தைப்பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லோளுக்கம்முடையோரில் உள்ளவராகவும் இருப்பார் (என்றும் கூறினார்கள்). (அதற்கு மரியம்) " என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னை தீண்டாதிர்க்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாகமுடியும்? என்று கூறினார். (அதற்கு)" இவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைகின்றான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதனை 'ஆகுக' என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்" என்று கூறினான். (3 : 45 - 49 )

மேலே உள்ள வசனத்திலிருந்து தெளிவாக ஒரு விசயத்தை புரிந்து கொள்ள முடியும் அதாவது அல்லாஹ் ஒரு காரியத்தை செய்ய நாடினால் "ஆகுக" என்ற ஒரு வார்த்தைதான் அது ஆகிவிடும். அதுமட்டும் அல்லாமல் அல்லாஹ் படைத்திருக்கும் முறையை சற்று சிந்தித்து பார்த்தல்  அல்லாஹ்வின் வல்லமை நமக்கு புரியும்அதாவது முதன் முதலில் அல்லாஹ் முதல் மனிதரான ஆதமை தாய் தந்தை துணையின்றி படைதான் அதாவது ஆண், பெண் துணையின்றி மண்ணிலிருந்து படைத்தான். அடுத்து ஒரு பெண்ணை,  பெண்ணின் துணையின்றி வெறும் ஆணிளிருந்து மட்டும் படைதான் அவர்தான் ஹவ்வா (அலை) . அடுத்ததாக ஏனைய மனிதர்களை ஒரு ஜோடி  ஆண் பெண்ணிலிருந்து படைதான். கடைசியாக ஈஸா(அலை) அவர்களை ஒரு ஆணின் துணையின்றி ஒரு பெண்ணிலிருந்து படைதான்

மண்ணிலிருந்து - > ஒரு ஆண் (ஆதம்)
ஆணிலிருந்து - > ஒரு பெண்ஹவ்வா)
ஆண் + பெண் -> ஏனைய மனிதர்கள்
கடைசியாக ஒரு பெண்ணிலிருந்து -> ஒரு ஆண், ஈஸா(அலை)

ஆகா அல்லாஹ் தன்னுடைய ஆற்றலை தனேகே உரிய பாணியில் இந்த மனித சமுதாயத்திற்கு வெளிப்படுத்தியுள்ளான்.  இவை அனைத்துமே அதிசியம்தான்.

அடுத்து,  ஈஸா (அலை)மட்டும் வானுலகம் உயர்தப்பட்டமை ஏன் ?  ஏன் ஏனைய நபிமார்களை அல்லாஹ் உயர்த்தவில்லை ? கரணம் என்ன ?

இதற்க்கு எனக்கு தெரிந்த விளக்கம்..

முஸ்லிம்களை பொறுத்தவரை ஈஸா(அலை) அவர்கள்  கொல்லப்படவில்லை.
ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் தன் அளவிலே  உயர்திகொண்டான் இன்ஷா அல்லாஹ் திரும்பவும் இந்த உலகத்திற்கு முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தாக வருவார்கள்  என்பதில் மிக தெளிவாக உள்ளோம். காரணம் 
அல்லாஹ் தனுடைய திரு மறையில்

இன்னும் அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ்யை, நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம் என்று அவர்கள் கூறியதின் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான் அவரை அவர்கள் கொல்லவும்மில்லை, அவரை சிலுவையில் அறையவும்மில்லை,  அனினும் அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தை பெற்ற)  ஒருவனை ஒப்பாக்(கிக் காண்பிக்)கப்பட்டது. நிச்சயமாக (வ்விஷயத்)தில், கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களே அத்தகையோர்,  அதுபற்றி  சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாதுமேலும் உறுதியாக அவர்கள் அவரை கொலைசெய்யவே இல்லைமாறாக, அல்லாஹ் அவரைத்தன் அளவில் உயர்த்திக்கொண்டான்இன்னும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகதீர்கமான அறிவுடையவனாக  இருகின்றான்.  வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக, திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை. இன்னும் மறுமை நாளில் அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளராக இருப்பார்.  (4 : 157 - 159 )

மேலும் (ஈஸாவை நிராகரித்த) அவர்கள், அவரைக் கொலை செய்யச்) சதிசெய்தார்கள். (அனினும் அல்லாஹ் அவரை இரட்சித்துகொண்டு, தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செதுவிடும்படி) அல்லாஹ்வும், (அவர்களுக்கு) சதி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களி(ன் சதியை முறியடித்துக் கூளிகொடுப்பவர்களி)ல் மிகச்சிறந்தவன்.(3 : 54 )

 (ஈசாவை நோக்கி) " ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மை கைப்பற்றிக் கொள்பவனாகவும், உம்மை என்னளவில் உயர்த்திகொள்பவனாகவும், நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மை பரிசுத்தமாகிவைபவனாகவும், உம்மை பின்பற்றுவோரை, நிராகரிப்போர்மீது மறுமை நாள் வரையில் மேலாக ஆக்குபவனாகவும் இருக்கின்றேன். அதன் பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. அப்போது அதில் நீங்கள் மாருப்பட்டவர்களாக இருந்திர்களோ அதில் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்' என்று அல்லாஹ் கூறியதை (நினைவு கூர்விராக!) (3 : 55 )

ஆக அல்லாஹ் ஈஸா(அலை) அவர்களை தன் அளவில் உயர்த்தியதற்கு காரணம் மேலே உள்ள வசனங்களிலிருந்து விளங்கி கொள்ளலாம்.

பெரும்பான்மையான கிறிஸ்துவர்கள் இறை வசனத்தை ஏற்றுகொள்ள மாட்டார்கள் காரணம் குர்ஆன்னை இறைவேதமாக நினைப்பதில்லை அவர்களுடைய வேத புத்தகமே போதும் என்றும் கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய வேத புத்தகத்திலிருந்தே ஈஸா (அலை) அவர்கள் மேலே உயர்த்தப்பட்டதற்கு ஒரு சில வசனங்களை நாம் காட்டலாம்.

லூக்கா 22 : 39 - பின்பு அவர் புறப்பட்டு  வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.

லூக்கா 22 : 40 - அவ்விடத்தில் சேர்ந்தபொழுது, அவர் அவர்களை நோக்கி நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுகள் என்று சொல்லி,

லூக்கா 22 : 41 அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு.

லூக்கா 22 : 42 - பிதாவே, உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னைவிட்டு  நீங்கும் படி செய்யும். ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜபம் பண்ணினார்

லூக்கா 22 : 43 - அபொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை பலப்டுதினான்

லூக்கா 22 : 44 - அவர் மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கதோடே ஜெபம்பண்ணினார்அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது

மேலே குறிபிட்டுள வேதகாமம் வசனத்தின் படி ஈஸா (அலை) அவர்கள் தனுடைய இறைவனிடத்திலே தன்னை காக்கும் படி அழுது அழுது மன்றாடியுளார்கள். எந்த அளவிற்கு என்றால் தன்னுடைய ஒவ்வொரு வேர்வை துளியும் இரத்த துளிகளாக தரையிலே விழும் அளவிற்கு வேண்டியிள்ளார். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் , தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் என்று மத்தேயுலே கூறியுள்ளபடி, இறைவன் அவருடைய பிராத்தனையை அங்கீகரித்துக்கொண்டு அவரை தனளவிலே உயர்திகொண்டான்.
 
பார்க்க..
மத்தேயு 7 : 7 - கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்.

மத்தேயு 7 : 8  - ஏனென்றால் ,கேட்கின்றவன் எவனும் பெற்றுக்கொல்லுகின்றான்,   தேடுகின்றவன்  கண்டடைகின்றான், தட்டுகின்றவனுக்கு திறக்கப்படும்

மத்தேயு 7 : 9  - உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தை கேட்கின்ற தன் மகனுக்கு கல்லை கொடுப்பானா?

மத்தேயு 7 : 10 - மீனை கேட்டால் அவனுக்கு பாம்பை கொடுப்பானா?

மத்தேயு 7 : 11  - ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகதிலிருகின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளிக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா

ஆக சாதாரன மனிதர்களுக்கே  கேட்பதை  கொடுக்கின்ற இறைவன் தன்னுடைய தூதர்களின் பிராத்தனையை  ஏற்றுகொள்ள போதுமானவன்.

யூதர்களை பொறுத்தவரை ஒரு மனிதனக்கு கேவலமாக,  கொடூரமாக தண்டனை கொடுக்கவேண்டும் என்றால் அவனை சிலுவையில் அறைந்து, அவர்களின் மறைவிடங்கள் தெரியும்படி ஒரு சிறு துண்டை ஆடையாக அணிவித்தோ அல்லது அதுகூட இல்லாமல் சிலுவையில் அறைந்து மெது மெதுவாக சாகும் படி செய்வார்கள்.  இதை யூதர்களின் வரலாற்று குறிப்பில் காணலாம்.

எந்த இறைவன் இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்பு குன்றதிளிருந்து பாதுகாதானோ, எந்த இறைவன் மூஸா(அலை) மற்றும் அவர்களின் சமூகத்தாரை கடலை பிளக்க செய்து பாதுகாதானோ, அதே இறைவன் தான் நபி ஈஸா(அலை) அவர்களை கேவலமான, கொடூரமான கொலையிளிருந்தும் காப்பாற்றினான்.
ஈஸா (அலை) அவர்களை மேலே உயர்திகொண்டதால் ஈஸா(அலை) அவர்கள் இறைவனும் அல்ல, ஏனைய  நபிமார்கள் உயிருடன்  உயர்திகொள்ளபடாததால் அவர்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் அல்ல என்பதும் கிடையாது.

இந்த விளக்கம் தங்களுடைய நண்பருக்கு அளிக்க போதுமானதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஏதும் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.  
 
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
 
-சலாம்- 
   ASIF

 

Maraic

unread,
Mar 16, 2010, 11:50:55 AM3/16/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் (வர்ஹ)

மன்னிக்கவும்.. எதோ காரணத்தால் முழு மெசேஜ் பதியவில்லை. விடு பட்டதை தொடர்ந்து இங்கே பதிகின்றேன்.

அடுத்து,  ஈஸா (அலை)மட்டும் வானுலகம் உயர்தப்பட்டமை ஏன் ?  ஏன் ஏனைய நபிமார்களை அல்லாஹ் உயர்த்தவில்லை ? கரணம் என்ன ?

இதற்க்கு எனக்கு தெரிந்த விளக்கம்..

முஸ்லிம்களை பொறுத்தவரை ஈஸா(அலை) அவர்கள்  கொல்லப்படவில்லை.
ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் தன் அளவிலே  உயர்திகொண்டான்  இன்ஷா அல்லாஹ் திரும்பவும் இந்த உலகத்திற்கு முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தாக வருவார்கள்  என்பதில் மிக தெளிவாக உள்ளோம். காரணம் அல்லாஹ் தனுடைய திரு மறையில்

இன்னும் அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ்யை, நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம் என்று அவர்கள் கூறியதின் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான் அவரை அவர்கள் கொல்லவும்மில்லை, அவரை சிலுவையில் அறையவும்மில்லை,  அனினும் அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தை பெற்ற)  ஒருவனை ஒப்பாக்(கிக் காண்பிக்)கப்பட்டது. நிச்சயமாக (வ்விஷயத்)தில், கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களே அத்தகையோர்,  அதுபற்றி  சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாதுமேலும் உறுதியாக அவர்கள் அவரை கொலைசெய்யவே இல்லைமாறாக, அல்லாஹ் அவரைத்தன் அளவில் உயர்த்திக்கொண்டான்இன்னும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகதீர்கமான அறிவுடையவனாக  இருகின்றான்.  வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக, திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை. இன்னும் மறுமை நாளில் அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளராக இருப்பார்.  (4 : 157 - 159 )

மேலும் (ஈஸாவை நிராகரித்த) அவர்கள், அவரைக் கொலை செய்யச்) சதிசெய்தார்கள். (அனினும் அல்லாஹ் அவரை இரட்சித்துகொண்டு, தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செதுவிடும்படி) அல்லாஹ்வும், (அவர்களுக்கு) சதி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களி(ன் சதியை முறியடித்துக் கூளிகொடுப்பவர்களி)ல் மிகச்சிறந்தவன்.(3 : 54 )

 (ஈசாவை நோக்கி) " ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மை கைப்பற்றிக் கொள்பவனாகவும், உம்மை என்னளவில் உயர்த்திகொள்பவனாகவும், நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மை பரிசுத்தமாகிவைபவனாகவும், உம்மை பின்பற்றுவோரை, நிராகரிப்போர்மீது மறுமை நாள் வரையில் மேலாக ஆக்குபவனாகவும் இருக்கின்றேன். அதன் பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. அப்போது அதில் நீங்கள் மாருப்பட்டவர்களாக இருந்திர்களோ அதில் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்' என்று அல்லாஹ் கூறியதை (நினைவு கூர்விராக!) (3 : 55 )

ஆக அல்லாஹ் ஈஸா(அலை) அவர்களை தன் அளவில் உயர்த்தியதற்கு காரணம் மேலே உள்ள வசனங்களிலிருந்து விளங்கிகொள்ளலாம்.

பெரும்பான்மையான கிறிஸ்துவர்கள் இறை வசனத்தை ஏற்றுகொள்ள மாட்டார்கள் காரணம் குர்ஆன்னை இறைவேதமாக நினைப்பதில்லை அவர்களுடைய வேத புத்தகமே போதும் என்றும் கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய வேத புத்தகத்திலிருந்தே ஈஸா (அலை) அவர்கள் மேலே உயர்த்தப்பட்டதற்கு ஒரு சில வசனங்களை நாம் காட்டலாம்.

லூக்கா 22 : 39 - பின்பு அவர் புறப்பட்டு  வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.

லூக்கா 22 : 40 - அவ்விடத்தில் சேர்ந்தபொழுது, அவர் அவர்களை நோக்கி நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜபம்பண்ணுகள் என்று சொல்லி,

லூக்கா 22 : 41 அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு.

லூக்கா 22 : 42 - பிதாவே, உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னைவிட்டு  நீங்கும் படி செய்யும். ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜபம் பண்ணினார்

லூக்கா 22 : 43 - அபொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை பலப்டுதினான்

லூக்கா 22 : 44 - அவர் மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கதோடே ஜெபம்பண்ணினார்அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. 

மேலே குறிபிட்டுள வேதகாமம் வசனத்தின் படி ஈஸா (அலை) அவர்கள் தனுடைய இறைவனிடத்திலே தன்னை காக்கும் படி அழுது அழுது மன்றாடியுளார்கள். எந்த அளவிற்கு என்றால் தன்னுடைய ஒவ்வொரு வேர்வை துளியும் இரத்த துளிகளாக தரையிலே விழும் அளவிற்கு வேண்டியிள்ளார். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் , தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் என்று மத்தேயுலே கூறியுள்ளபடி, அவருடைய பிராத்தனையை அங்கீகரித்துக்கொண்டு அவரை தனளவிலே உயர்திகொண்டான்.

பார்க்க.. மத்தேயு 7 : 7 - கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்.

மத்தேயு 7 : 8  - ஏனென்றால் ,கேட்கின்றவன் எவனும் பெற்றுக்கொல்லுகின்றான்  ,   தேடுகின்றவன்  கண்டடைகின்றான், தட்டுகின்றவனுக்கு திறக்கப்படும்

மத்தேயு 7 : 9  - உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தை கேட்கின்ற தன் மகனுக்கு கல்லை கொடுப்பானா?

மத்தேயு 7 : 10 - மீனை கேட்டால் அவனுக்கு பாம்பை கொடுப்பானா?

மத்தேயு 7 : 11  - ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகதிலிருகின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளிக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா

ஆக சாதாரன மனிதர்களுக்கே  கேட்பதை  கொடுக்கின்ற இறைவன் தன்னுடைய தூதர்களின் பிராத்தனையை  ஏற்றுகொள்ள போதுமானவன்.

யூதர்களை பொறுத்தவரை ஒரு மனிதனக்கு கேவலமாக கொடூரமாக தண்டனை கொடுக்கவேண்டும் என்றால் அவனை சிலுவையில் அறைந்து, அவர்களின் மறைவிடங்கள் தெரியும்படி ஒரு சிறு துண்டை ஆடையாக அணிவித்தோ அல்லது அதுகூட இல்லாமல் சிலுவையில் அறைந்து மெது மெதுவாக சாகும் படி செய்வார்கள்.  இதை யூதர்களின் வரலாற்று குறிப்பில் காணலாம்.

எந்த இறைவன் இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்பு குன்றதிளிருந்து பாதுகாதானோ, எந்த இறைவன் மூஸா(அலை) மற்றும் அவர்களின் சமூகத்தாரை கடலை பிளக்க செய்து பாதுக்காத்தானோ, அதே இறைவன் தான் நபி ஈஸா(அலை) அவர்களை கேவலமான, கொடூரமான கொலையிளிருந்தும் காப்பாற்றினான்.

இன்ஷாஅல்லாஹ் இந்த விளக்கம் தங்களுடைய நண்பருக்கு கொடுப்பதற்கு போதுமானதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்
மேலே உயர்த்தப்பட்டதால் நபி ஈஸா(அலை) அவர்கள் இறைவனும் அல்ல, ஏனைய நபிமார்கள் உயிருடன் உயர்த்தப் படாததால்  அல்லாஹ்விற்கு நெருக்கம்மற்றவர்கள் என்பதும் அல்ல என்பதையும் நயமாக கூறவும்.
 
 அல்லாஹ்வே மிக அறிந்தவன்
ஏதும் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

-சலாம்- 

ASIF

 

 

Maraic

unread,
Mar 16, 2010, 11:58:41 AM3/16/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் (வர்ஹ)

மன்னிக்கவும்..  விடு பட்டதை தொடர்ந்து இங்கே பதிகின்றேன்.

மத்தேயு 7 : 10 - மீனை கேட்டால் அவனுக்கு பாம்பை கொடுப்பானா?

ibnuh...@mail.com

unread,
Mar 16, 2010, 12:55:15 PM3/16/10
to fro...@googlegroups.com
 ASSALAAMU ALAIKKUM,
சகோ, முஸ்லிம் , அவர்களுக்கு,
சூரா , மர்யம்,  33  ஆவது  வசனத்தில் உள்ள;
 ""................................... வ  யவ்ம அமூத்து ( AMUUTU ).........................................""
என்ற சொல்லுக்கு,
    ....... இறக்கும் நாளில்  ( THE DAY I WILL DIE ) என்பது பொருளா  அல்லது
இறந்த நாளில்   (  THE DAY I DIED )  என்பது பொருளா ??.......

தயவு செய்து  தெளிவாக்குங்கள்..... இறைவன் உங்களுக்கு  இன்னும் சிறந்த அறிவை தருவானாக......

muslim

unread,
Mar 17, 2010, 6:23:41 AM3/17/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு,

''நான் பிறந்த தினத்திலும், மரணிக்கும் தினத்திலும், உயிருடன் எழுப்பப்படும் தினத்திலும் என் மீது சாந்தி உண்டாகட்டும்!'' (அல்குர்ஆன் 19:33)

وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا

ஈஸா (அலை) அவர்கள் தொட்டில் குழந்தைப் பருவத்தில் பேசிய மேல்கண்ட பிரார்த்தனைப் போன்று, யஹ்யா எனும் பெயர் கொண்ட புதல்வரைப் பற்றி நற்செய்தியை ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு அறிக்கும்போதும், யஹ்யா (அலை) அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் வசனங்களின் வரிசையில் (பார்க்க: 19:1-14வரை) அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

''அவர் பிறந்த தினத்திலும், மரணிக்கும் தினத்திலும், உயிருடன் எழுப்பப்படும் தினத்திலும் அவர் மீது சாந்தி இருக்கும்'' (அல்குர்ஆன் 19:15)

وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا

1, பிறந்த நாள். 2, இறக்கும் நாள். 3, மீண்டும், உயிர் பெற்று எழும் நாள்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவருக்கு, இம்மூன்று நாள்களும் வாழ்க்கையில் மிக முக்கியமானவை!

1) தாயின் கருவறையிலிருந்து புதிய உலகுக்கு முதல்முதலில் பிரவேசிக்கும் நாளில், ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பு வேண்டும். 2) பின்னர், இறக்கும் நாளில் கப்ர் எனும் புதிய உலகை முதல்முதலில் சந்திக்கும் நாளில், மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்பு வேண்டும். 3) மீண்டும் உயிர் பெற்று மறுமை எனும் புதிய உலகை முதல் முதலில் சந்திக்கும் நாளில், மறுமையின் வேதனையிலிருந்து பாதுகாப்பு வேண்டும். ஆக, இம்மூன்று முக்கிய நாள்களில் அனைவருக்கும் இறைவனின் சாந்தி வேண்டும்!

''So Peace on him the day he was born, the day that he dies, and the day that he will be raised up to life (again)!'' (19:15)

"So Peace is on me the day I was born, the day that I die, and the day that I shall be raised up to life (again)!" (19:33)

''இறந்த'' என்பது கடந்த காலத்தைக் குறிப்பிடும். உயிருடன் இருப்பவர் ''நான் இறக்கும் நாளில் என் மீது சாந்தியை ஏற்படுத்துவாயாக'' என்றால் இது நிகழ்கால வினையாகும்! நபி ஈஸா குழந்தையாக இருக்கும்போது அவர் வார்த்தை வழியாக -19:33வது- வசனத்தை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான். இனி எதிர்காலத்தில் அவர் மரணிக்க இருக்கிறார். அதனால், 'நான் ''இறக்கும்'' நாளில்' என எதிர்கால வினை கொள்வதே இங்குப் பொறுத்தமாகும்!

''இறைவா! நான் இறந்த நாளில் எனக்கு சாந்தியை ஏற்படுத்துவாயாக'' என்று கேட்பது, நான் இறந்த பின் கேட்பதுபோல் உள்ளது. இது சாத்தியமே இல்லை! ''இறைவா! நான் இறக்கும் நாளில் எனக்கு சாந்தியை அருள்வாயாக!'' என்று கேட்பது, இனிமேல் இறக்கவிருக்கிறேன் என்பதைச் சுட்டுகிறது. மரணித்திற்குப் பின் பார்க்க, கேட்க, பேச, செயல்பட முடியாது!  

(குழுமத்தில் தமிழ் ஆசான்கள் இருந்தால் உதவுங்கள்)

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

 
2010/3/16 <ibnuh...@mail.com>

--

ibnuh...@mail.com

unread,
Mar 17, 2010, 10:44:55 AM3/17/10
to fro...@googlegroups.com
bro, MUSLIM

........  MIKA SARIYAANA VILAKKAM...........
JASAKKALLAAH....

ibnuh...@mail.com

unread,
Mar 17, 2010, 11:55:20 AM3/17/10
to fro...@googlegroups.com
- ஸலாம்  
அன்புச் சகோதரர்  MUSLIM அவர்களுக்கு,.................

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَا ‏ ‏حَذْوَ ‏ ‏مَنْكِبَيْهِ ثُمَّ كَبَّرَ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَإِذَا رَفَعَ مِنْ الرُّكُوعِ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَلَا يَفْعَلُهُ حِينَ يَرْفَ رَأْسَهُ مِنْ السُّجُودِ  
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவார்கள். ருகூவுச் செய்ய விரும்பும் போதும், ருகூவிலிருந்து நிமிரும்போதும் அவ்வாறு செய்வார்கள். ஸஜ்தா விலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல் - முஸ்லிம் 639)
 
இந்த ஹதீதிலிருந்து  ..........
தொழுகையில்  எல்லா நேரமும் , முதல் ரகத்திலும்,  ருகூவுச் க்கு போகும்போதும்,     ருகுஹிவிளிருந்து எழும்போதும் ,கைகளை  உயர்த்த வேண்டும் என விளங்க வேண்டியுள்ளது  ??

ஆயினும்  சிலர் சொல்வது போல்,  ஆரம்ப ரகத்தின் ருக்ஹுவுக்கும்,  அத்தஹியாத் முடிந்து ( IN magrib, isha , luhar , asar) மூன்றாவது ராகத்தின்  ருகுஹுவுக்கும் ,  மட்டும் கைகளை உயர்த்தினால் போதுமா???

>>>ஸஜ்தா விலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள்.<<<
என்பது  ...
 சஜ்தவிளிருந்து நிலைக்கு வருவதை  சொல்கிறதா ? அப்படி எனில்  சஜ்தவிளிருந்து நிலைக்கு வரும்போது,  கைகளை உயர்த்த வேண்டியதில்லையா ??

ப்ளீஸ் , SAHEEH, ஆதரத்த்ட்டன் தெளிவாக்குங்கள்......






ibnuh...@mail.com

unread,
Mar 17, 2010, 11:23:54 PM3/17/10
to fro...@googlegroups.com
 
சகோ...முஸ்லிம் அவர்கட்க்கு,,,,,,, இந்த கேள்விக்கும் தெளிவை  எழுதுங்கள்........
சூரா ,நிசா, 157 இல் , ....
யூதர்களின்  பிரச்சாரத்தை முறியடித்து, இறைவன் , நபி ஈசாஹ்  அவர்கள் யாராலும் கொல்லப்படவோ , சிலுவையில் அறயப்படவோ இல்லை என  கூறுகின்றான்.......  இந்த வசனத்தில் வரும்......
"...............wa lakin shubbiha lahum ........"  என்பதற்கு,  சரியான கருத்து என்ன ??  சிலர் ,
it was made to be appear ..., ஈஷா அவர்கள் சிவில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக  தெரிய செய்யப்பட்டது....
என்று மொழியாக்கம்  கொடுத்துள்ளார்கள்......
 சிலர்,
 ""............. 
but the likeness of him was put on another man , சிலர் ,
...
only a likeness of that was shown to them.............."" ,
 நபி ஈசாஹ் அவர்கலின்   சாயல்  வேறொருவருக்கு  போடப்பட்டு அவர் கொல்லப்பட்டார் , என  மொழியாக்கம் செய்துள்ளனர்...... 

குரான் , இதில் தெளிவான ஒரு விளக்கத்தை தரவில்லை..... இதில் அவர்கள் ஒரு ஊகத்திலேயே உள்ளனர் என்று மட்டும் கூறுகின்றது........
. எனவே ,....subbiha லஹும்... ,  என்பதற்கு எந்த கருத்து சரியானது....??  தெளிவாக்குங்கள்........ 

muslim

unread,
Mar 19, 2010, 2:03:44 AM3/19/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்

நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும் போதும் ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும்போது 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள். அறிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் - புகாரி 735)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவார்கள். ருகூவுச் செய்ய விரும்பும்போதும், ருகூவிலிருந்து நிமிரும்போதும் அவ்வாறு செய்வார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல் - முஸ்லிம் 639)

தொழுகையில் கைகளை உயர்த்தும் கருத்தில், மேல்கண்ட நபிவழி அறிவிப்புகள் பல நபித்தோழர்கள் வழியாக அறிவித்து திர்மிதீ, நஸயீ, அபூதாவுத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தொழுகையில் எந்தெந்த நிலைகளில் கைகளை உயர்த்த வேண்டும் என்பதை விளக்கவதோடு, ஒவ்வொரு நிலைக்குச் செல்லும்போதும் ''அல்லாஹு அக்பர்'' என்று தக்பீர் கூறவேண்டும் என்கிற அம்சத்தையும் இணைத்து, தக்பீர் கூறும் எல்லா நிலைகளிலும் கைகளை உயர்த்தக்கூடாது என்பதற்கும் மேல்கண்ட அறிவிப்புகளிலிருந்து விளக்கம் கிடைக்கிறது.

தொழுகையின் துவக்கத்தில் கைகளை உயர்த்திய பின் ஆரம்ப தக்பீர் கூறவேண்டும். பின்னர், அடுத்த நிலை ருகூவுக்குச் செல்லும் முன், கைகளை உயர்த்தி தக்பீர் கூறி ருகூவுக்குச் செல்லவேண்டும். பிறகு ருகூவிலிருந்து நிமிர்ந்து, கைகளை உயர்த்தி 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறவேண்டும். ஆக தொழுகையில் இந்த மூன்று நிலைகளுக்குச் செல்லும்போது கைகளை உயர்த்தி, தக்பீரும் கூறவேண்டும்.

அதாவது, ஒவ்வொரு இரண்டு ரக்அத்களிலும், தொழுகையின் துவக்கத்திலும் மற்றும் இரண்டு ருகூவுகளை நிறைவேற்றச் செல்லும் முன்பும் தக்பீர் கூறவேண்டும். ருகூவை நிறைவேற்றி நிமிர்ந்து நிலைக்கு வந்த பின் கைகளை உயர்த்தி 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறவேண்டும்.
 
(அல்லாஹ் மிக அறிந்தவன்)


2010/3/17 <ibnuh...@mail.com>

Ali Abbas

unread,
Mar 19, 2010, 2:45:02 AM3/19/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,

ருக்கூவுக்கு செல்வதற்கு முன்னாலும், ருக்கூவிலிருந்து எழுந்த பின்னரும் கைகளை உயர்த்தாமல் இருப்பதற்கு அனுமதி உண்டா? அவ்வாறு ரசூல் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா என்பதை விளக்கவும்.

அலி அப்பாஸ்.


2010/3/19 muslim <tomu...@gmail.com>
To unsubscribe from this group, send email to fromgn+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

muslim

unread,
Mar 19, 2010, 4:56:32 AM3/19/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்

''நபி (ஸல்) அவர்கள் தொழுததுபோல் நான் உங்களுக்குத் தொழுது காட்டுகிறேன்'' என்று கூறி இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தொழுது காட்டினார். அத்தொழுகையில் முதல் தடவையில் தவிர தமது கைகளை உயர்த்தவில்லை! அறிவிப்பவர் அல்கமா (ரஹ்) (நூல் - திர்மிதீ 238)

மேல்கண்ட அறிவிப்பு ஹஸன் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று திர்மிதீ இமாம் குறிப்பிடுகிறார். மேலும் இந்த அறிவிப்பு குறித்து நீண்ட விமர்சனங்கள் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் துவக்கத்திலும், ருகூவுச் செய்யும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் தம் இரு தோள்களுக்கு நேராக வரும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள். இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் உயர்த்த மாட்டார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல் - திர்மிதீ 237)

''கைகளை உயர்த்துவது பற்றிய ஹதீஸ் நிரூபணமாகியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் முதல் தடவை தவிர கைகளை உயர்த்த மாட்டார்கள் என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் நிரூபணமாகவில்லை. என்று அப்துல்லாஹ் பின் அல் முபாரக் குறிப்பிட்டார்'' என்று மேல்கண்ட அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கும் கைகளை உயர்த்துவது சம்பந்தமான ஹதீஸின் குறிப்பில் திர்மிதீ இமாம் பதிவுசெய்துள்ளார்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் துவக்கத்தில் மட்டும் கைகளை உயர்த்தினார்கள் என்று வரும் அறிவிப்பு பலமானதாக இல்லை! 



2010/3/19 Ali Abbas <b.ali...@gmail.com>

நமக்குள் இஸ்லாம்

unread,
Mar 20, 2010, 2:02:00 AM3/20/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
شُبِّهَ لَهُمْ  (ஷுப்பிஹ லஹும்) என்பதற்கு ஈஸாவைப் போன்று ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் என்று சிலர் பொருள் கொடுத்து ஈஸாவின் சாயல் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டு அவனே சிலுவையில் அறையப்பட்டான் என்று கூறுகிறார்கள்.  இது எந்த வகையிலும் பொருத்தமான வாதமாக தெரியவில்லை. 
 
இந்த வாதம், யூதர்களின் வெற்றியை நாம் கொண்டாடும் படி அமைந்து விடுகின்றது. எப்படி என்று பார்ப்போம்
 

وَمَكَرُواْ وَمَكَرَ اللّهُ وَاللّهُ خَيْرُ الْمَاكِرِينَ

(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். (3:54)

இந்த வசனத்தில் யூதர்கள் ஈஸாவைக் கொல்ல சதி செய்தார்கள் என்று இறைவன் கூறுகிறான்.   கொலை செய்வதற்காக ஈஸாவை பிடித்தும் விடுகிறார்கள்.  (யூதர்களின் வாதப்படி சிலுவையிலும் அறையப்படுகிறார்கள்.)

சிலுவையில் அறையப்பட்டது ஈஸாவின் சாயலுக்கு ஒப்பான ஒருவன் என்றால் நிச்சயம் யூதர்களின் சதி வெற்றியடைந்து விடுகின்றது.   ஏனெனில் அவர்கள் ஈஸா சாயலில் உள்ள (அவர்கள் பார்வையில் அவன்தான் ஈஸா)வையே சிலுவையில் அறைந்துக் கொள்கிறார்கள்.   ஈஸாவை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள் சிலுவையில் அறைந்துக் கொண்று விட்டார்கள்.  அதாவது அவர்கள் என்ன சதி செய்தார்களோ அந்த சதி நிறைவேறி விட்டது.   அல்லாஹ்வும் சதி செய்தான் என்பதற்கு எந்த வித வலுவும் இல்லாமல் போய் விடுகின்து.  (அதாவது ஈஸாவின் சாயலில் ஒருவன் ஒப்பாக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வி்ன் சதிக்கு எந்த வித அர்த்தமும் இல்லை.  உருவ அமைப்பில் ஈஸாவாக இருக்கும் ஒருவரை கொல்வதே யூதர்களின் திட்டம் அவர்களின் திட்டம் நிறைவேறி விட்டது.   பிறகு அல்லாஹ்வின் சதி என்பது இங்கு எவ்வாறு நடந்தது என்பதை புரிய முடியவில்லை.

ஈஸாவின் சாயலை ஒருவனுக்கு கொடுத்து விட்டு ஈஸாவை அல்லாஹ் உயர்த்தி இருந்தால் அதனால் யூதர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவர்களின் தேடி வந்த ஈஸா (அதாவது ஒப்பாக்கப்பட்டவர்) கிடைத்து விட்டார்.   இப்படி நடந்திருந்தால் அந்தக் காலத்திலிருந்த யூதர்களுக்கு அல்லாஹ்வின் சதி என்னவென்று விளங்காமலே போயிருக்கும்.

எனவே شُبِّهَ لَهُمْ  (ஷுப்பிஹ லஹும்)  என்பதற்கு ஈஸாவைப் போன்று ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் என்று பொருள் கொள்ளவே முடியாது.

மட்டுமின்றி அவ்வாறு பொருள் கொள்ளக் கூடாது என்பதை அந்த வசனத்தின் பிற்பகுதி நமக்கு உணர்த்துகின்றது.

وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُواْ فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ

இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது.

ஈஸாவின் தோற்றத்தில் உள்ள ஒருவரை அவர்கள் சிலுவையில் அறைந்திருந்தால் பிறகு அவர்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.  ஆனால் அல்லாஹ் இங்கு யூதர்கள் சந்தேகத்தில் இருந்ததாக சொல்கிறான்.  அவர்கள் சந்தேகப்படும் படியான ஒரு சம்பவம் தான் அன்றைக்கு நிகழ்ந்ததே தவிர ஈஸா உருவ அமைப்பு உள்ள யாரையும் அவர்கள் சிலுவையில் அறையவில்லை என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும்.

ibnuh...@mail.com

unread,
Mar 20, 2010, 2:33:54 AM3/20/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
شُبِّهَ لَهُمْ  (ஷுப்பிஹ லஹும்) என்பதற்கு ஈஸாவைப் போன்று ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் என்று சிலர் பொருள் கொடுத்து ஈஸாவின் சாயல் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டு அவனே சிலுவையில் அறையப்பட்டான் என்று கூறுகிறார்கள்.  இது எந்த வகையிலும் பொருத்தமான வாதமாக தெரியவில்லை. <<<<<< G.N.
அப்படி எனில்,
இந்த , வசனத்துக்கு சரியான மொழிபெயர்ப்பை  தாருங்கள்.
...
.....
...... IT WAS MADE TO BE APPEAR ............  என்பது சரியா ???????? இது சரி எனில், , தூதர்   ஈசாஹ்  அவர்கள் கொல்லப்பட்டது போல்  ஒரு நிகழ்ச்சி  தெரியச்செய்யப்பட்டுள்ளதே ??  அது எவ்வாறு ?
நபி ஈசாஹ் அவர்களை போல் ஒருவர் கொல்லப்பட்டு இருந்தால்தான் , இப்படி   அவர்கள் , நபி ஈசாஹ் கொல்லப்பட்டுவிட்டதாக மற்றவர்களுக்கு  தெரியப்படுத்த முடியும்.........
இது சம்பந்தமாக saheeh  ஹதீஸ்கள் கூறுவதையும் முடிந்தால் ஆய்வு செய்து எழுதுங்கள்./........
.






 

நமக்குள் இஸ்லாம்

unread,
Mar 20, 2010, 9:31:25 AM3/20/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
தொழுகையில் ஒரு சந்தர்பத்தில் கைகளை உயர்த்தி மற்ற சந்தர்பங்களில் நபி(ஸல்) கைகளை உயர்த்தமாட்டார்கள் என்ற இப்னு மஸ்வூத் அவர்களின் அறிவிப்பை பொருத்தவரை அது குறைப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஆதாரப்பூர்வமான செய்திதான்.   அறிவிப்பாளர்களை பொருத்தவரை எந்தக் குறைப்பாடும் இல்லை.
 
ஆனாலும்
 
பல சந்தர்பங்களில் கைகளை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு ஏறத்தாழ 50 நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கு மாற்றமாக இந்த அறிவிப்பு உள்ளதால் ஏதோ ஒரு சந்தர்பத்தில் இப்படி நபி(ஸல்) நடந்துள்ளார்கள் என்று எடுத்துக் கொள்வதே சரியாகப்படுகின்றது.
 
மூன்று சந்தர்பங்களில் கைகளை உயர்த்துவது மிக அதிகப்படியாக அறிவிக்கப்படுவதால் அதை கடைப்பிடிப்பதே சரியாகும்.   சில நேரம் இவ்வாறு நடந்தாலும் தவறில்லை.
 
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

muslim

unread,
Mar 21, 2010, 3:59:14 AM3/21/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
அல்குர்ஆன் 4:157வது வசனத்தில் இடம்பெறும் ''ஷுப்பஹு'' என்ற சொல் ''சாயல், உருவ ஒற்றுமை, தோற்றம் ஒத்திருத்தல், போலிருத்தல்'' என்பதன் நேரடிப் பொருளாகும். (ஆங்கிலத்தில் similar, like, resembling, appear.)

தாய் தந்தை மற்றும் தாய் வழிச் சகோதரர்கள், தந்தை வழிச் சகோதரர்களின் சாயலும், உருவ ஒற்றுமையும் பிள்ளைகளிடம் ஏற்படும்.

****************************

''இவ்வாறு (பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம்) ஏற்படுமா?'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''ஆம் பிறகு எப்படி (தாயின்) சாயல் ஏற்படுகிறது? ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும். பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விரு (வரின்) நீரில் எது மோலோங்கி விடுகிறதோ, அல்லது முந்திக்கொண்டு விடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 521)

أَنَّهَا سَأَلَتْ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْمَرْأَةِ ‏ ‏تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا رَأَتْ ذَلِكِ الْمَرْأَةُ فَلْتَغْتَسِلْ فَقَالَتْ ‏ ‏أُمُّ سُلَيْمٍ ‏ ‏وَاسْتَحْيَيْتُ مِنْ ذَلِكَ قَالَتْ وَهَلْ يَكُونُ هَذَا فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ فَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ إِنَّ مَاءَ الرَّجُلِ غَلِيظٌ أَبْيَضُ وَمَاءَ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ فَمِنْ أَيِّهِمَا عَلَا أَوْ سَبَقَ يَكُونُ مِنْهُ الشَّبَهُ

******************

''உனது கை மண்ணைக் கவ்வட்டும்! பிறகு எப்படி அவளது சாயலில் குழந்தை பிறக்கிறது?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 523)

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏قَالَتْ ‏
‏جَاءَتْ ‏ ‏أَمُّ سُلَيْمٍ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا ‏ ‏يَسْتَحْيِي مِنْ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ إِذَا رَأَتْ الْمَاءَ فَقَالَتْ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ فَقَالَ تَرِبَتْ يَدَاكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا

************************

...''அவரை விட்டுவிடு! (தாய்க்கும் சேய்க்குமிடையே) இதை முன்னிட்டு உருவ ஒற்றுமை ஏற்படுகிறது. பெண்ணுடைய நீர் (கருமுட்டை) ஆணுடைய நீரை (விந்தணுவை) விட மேலோங்கி விட்டால் குழந்தை தன் தாயின் சகோதரர்களது சாயலில் பிறக்கிறது. ஆணுடைய நீர் பெண்ணுடைய நீரைவிட மேலோங்கி விட்டால் அது தன் தந்தையின் சகோதரர்களது சாயலில் பிறக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 524)

َ‏أَنَّ امْرَأَةً قَالَتْ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ تَغْتَسِلُ الْمَرْأَةُ إِذَا احْتَلَمَتْ وَأَبْصَرَتْ الْمَاءَ فَقَالَ نَعَمْ فَقَالَتْ لَهَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏تَرِبَتْ يَدَاكِ ‏ ‏وَأُلَّتْ ‏ ‏قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعِيهَا وَهَلْ يَكُونُ الشَّبَهُ إِلَّا مِنْ قِبَلِ ذَلِكِ إِذَا عَلَا مَاؤُهَا مَاءَ الرَّجُلِ أَشْبَهَ الْوَلَدُ أَخْوَالَهُ وَإِذَا عَلَا مَاءُ الرَّجُلِ مَاءَهَا أَشْبَهَ أَعْمَامَه

********************

தாய் தந்தை வழி இரத்த உறவில்லாமலும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் போல் மிக நெருக்கமான சாயலில் - தோற்றத்தில் - இருப்பதும் இயல்பு:

.''அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களிலேயே உர்வா பின் மஸ்வூத் அஸ்ஸகஃபி அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள்.

அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவர் உங்கள் தோழர் (நான்) தான்! (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 278
 
 قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقَدْ رَأَيْتُنِي فِي ‏ ‏الْحِجْرِ ‏ ‏وَقُرَيْشٌ ‏ ‏تَسْأَلُنِي عَنْ ‏ ‏مَسْرَايَ ‏ ‏فَسَأَلَتْنِي عَنْ أَشْيَاءَ مِنْ ‏ ‏بَيْتِ الْمَقْدِسِ ‏ ‏لَمْ ‏ ‏أُثْبِتْهَا ‏ ‏فَكُرِبْتُ ‏ ‏كُرْبَةً ‏ ‏مَا كُرِبْتُ مِثْلَهُ قَطُّ قَالَ فَرَفَعَهُ اللَّهُ لِي أَنْظُرُ إِلَيْهِ مَا يَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلَّا أَنْبَأْتُهُمْ بِهِ وَقَدْ رَأَيْتُنِي فِي جَمَاعَةٍ مِنْ الْأَنْبِيَاءِ فَإِذَا ‏ ‏مُوسَى ‏ ‏قَائِمٌ ‏ ‏يُصَلِّي فَإِذَا رَجُلٌ ضَرْبٌ ‏ ‏جَعْدٌ ‏ ‏كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَإِذَا ‏ ‏عِيسَى ابْنُ مَرْيَمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏قَائِمٌ ‏ ‏يُصَلِّي أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ‏عُرْوَةُ بْنُ مَسْعُودٍ الثَّقَفِيُّ ‏وَإِذَا ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏قَائِمٌ ‏ ‏يُصَلِّي أَشْبَهُ النَّاسِ بِهِ صَاحِبُكُمْ ‏ ‏يَعْنِي نَفْسَهُ فَحَانَتْ الصَّلَاةُ فَأَمَمْتُهُمْ فَلَمَّا فَرَغْتُ مِنْ الصَّلَاةِ قَالَ قَائِلٌ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏هَذَا ‏ ‏مَالِكٌ ‏ ‏صَاحِبُ النَّارِ فَسَلِّمْ عَلَيْهِ فَالْتَفَتُّ إِلَيْهِ فَبَدَأَنِي بِالسَّلَام

**********************

நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே தஜ்ஜாலை நினைவுகூர்ந்தார்கள் ...

...''வலக் கண் குருடனான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்த மனிதர்களிலேயே இப்னு கத்தானுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவனாக இருந்தான்'' (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 274
 
 
 ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمًا بَيْنَ ظَهْرَانَيْ النَّاسِ ‏ ‏الْمَسِيحَ الدَّجَّالَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَيْسَ بِأَعْوَرَ أَلَا إِنَّ ‏ ‏الْمَسِيحَ الدَّجَّالَ ‏ ‏أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ ‏ ‏طَافِيَةٌ ‏ ‏قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَانِي اللَّيْلَةَ فِي الْمَنَامِ عِنْدَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَإِذَا رَجُلٌ آدَمُ كَأَحْسَنِ مَا ‏ ‏تَرَى مِنْ أُدْمِ الرِّجَالِ تَضْرِبُ لِمَّتُهُ بَيْنَ مَنْكِبَيْهِ رَجِلُ الشَّعْرِ يَقْطُرُ رَأْسُهُ مَاءً وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ وَهُوَ بَيْنَهُمَا يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا ‏ ‏الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ‏ ‏وَرَأَيْتُ وَرَاءَهُ رَجُلًا جَعْدًا قَطَطًا أَعْوَرَ عَيْنِ الْيُمْنَى كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ مِنْ النَّاسِ ‏ ‏بِابْنِ قَطَنٍ ‏ ‏وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا ‏ ‏الْمَسِيحُ الدَّجَّال
 

4:157வது வசனத்தில் இடம்பெற்றுள்ள ''ஷுப்பஹு'' என்பதற்கு ''சாயல் - உருவ ஒற்றுமை'' என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ளாமல், இந்த வசனத்தில் கூறப்படும் மற்ற விபரங்களையும் இதற்கு முரண்படாமலும் விளங்க வேண்டும்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)



2010/3/20 <ibnuh...@mail.com>

--

muslim

unread,
Mar 21, 2010, 4:08:46 AM3/21/10
to fro...@googlegroups.com
 நாம் எழுதியதில், ஷுப்பஹு என எழுத்துப் பிழையாகியுள்ளது ''ஷுப்பிஹ'' என்று திருத்தம் செய்துகொள்ளவும்.

2010/3/21 muslim <tomu...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Mar 22, 2010, 10:43:49 PM3/22/10
to fro...@googlegroups.com
 சலாம்
சகோ, ஜி.என். அவர்களுக்கு,

சகோ, முஸ்லிம் அவர்கள் கூறுகின்றார்கள்.....
 
>>>>>>அல்குர்ஆன் 4:157வது வசனத்தில் இடம்பெறும் ''SUBBIHA'' என்ற சொல் ''சாயல், உருவ ஒற்றுமை, தோற்றம் ஒத்திருத்தல், போலிருத்தல்'' என்பதன் நேரடிப் பொருளாகும். (ஆங்கிலத்தில் similar, like, resembling, appear.)தாய் தந்தை மற்றும் தாய் வழிச் சகோதரர்கள், தந்தை வழிச் சகோதரர்களின் சாயலும், உருவ ஒற்றுமையும் பிள்ளைகளிடம் ஏற்படும். ..,4:157வது வசனத்தில் இடம்பெற்றுள்ள ''subbiha '' என்பதற்கு ''சாயல் - உருவ ஒற்றுமை'' என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ளாமல், இந்த வசனத்தில் கூறப்படும் மற்ற விபரங்களையும் இதற்கு முரண்படாமலும் விளங்க வேண்டும்.<<<<<<<

சகோ. முஸ்லிம் அவர்களின் விளக்கமான , சுப்பிஹலஹும்......என்ற  சொல்லின் கருத்து   படி,  அந்த வசனத்தின் கருத்து,...........
."......  இன்னொருவரின்  தோற்ற சாயலுக்கு  ஒப்பாக்கபட்டு,  அல்லது  அவர்கள் போன்று ( இன்னொருவர் ) சாயலாக்கபட்டு ., நபி ஈஷா அவர்கள்  கொல்லப்பட்டதாக  ( மக்களுக்கு ) தெரியச்செய்யப்பட்டது" .................என்று தான் மொழிபெயர்க்க வேண்டும்..
ஆனால், சகோ.ஜி.என்.,நீங்கள்  வேறு ஒரு  விளக்கம் கூறுகின்றீர்கள்...... எனவே , சகோ..முஸ்லிம் அவர்களின் கருத்து தவறு எனில் தெளிவாக்கி, இந்த subbiha  என்ற சொல்லுக்கு சரியான கருத்தையும், அந்த வசனத்துக்கு சரியான மொழிபெயர்ப்பையும் தெளிவாக்குங்கள்.....இது சம்பந்தமான ஹதீஸ்களையும் , அவை என்ன சொல்கின்றன  என்பதையும் எழுதுங்கள்....
... நன்றி........

நமக்குள் இஸ்லாம்

unread,
Mar 25, 2010, 2:01:14 AM3/25/10
to fro...@googlegroups.com

ஸலாம்.
 
ஒருவரைப் போன்று இன்னொருவர் நெருக்கமான சாயலில் இருக்கலாம்.  தாய் தந்தை ஹார்மோன்ஸ் கலப்பில் உருவ ஒற்றுமை தோன்றலாம் இவற்றிலெல்லாம் நமக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.  சகோதரர் முஸ்லிம் எடுத்துக்காட்டியுள்ள ஆதாரங்கள் அனைத்தும் ஷுப்பிஹ என்பது அவர்களின் ஆரம்ப காலம் தொட்டு அந்த சாயலுடன் அவர்கள் இருந்ததைக் காட்டுகின்றது.  திடீரென்று ஒருவருக்கு சாயல் மாற்றப்படுவதற்கு இந்த ஆதாரங்களை பொருத்திக் காட்டா முடியாது.
 
அந்த சாயலுடன் இருப்பது என்பது வேறு, திடீரென்று சாயல் மாற்றப்படுவது என்பது வேறு.
 
ஈஸா அவர்களை ஒத்த சாயலுடன் ஒருவர் அந்த காலத்தில் இருந்திருக்கலாம் என்றும் கருத முடியாது.  அதற்கு அந்த வசனம் இடங்கொடுக்கவில்லை.  இரட்டைப் பிறவிகள் போன்று இருப்பவர்களால் குழப்பம் ஏற்படும் என்பதால் முதலில் உருவ ஒற்றுமையுள்ள அவரை யூத அதிகாரிகள் தனிமைப்படுத்தி இருப்பார்கள்.
 
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَـكِن شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُواْ فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلاَّ اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينً
 
இதில் ஷுப்பிஹ லஹும் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது.  ஷுப்பிஹ என்ற வார்த்தையுடன் லஹும் என்பதும் இடம் பெறுகின்றன்றது.  அதாவது அவர்களுக்காக ஷுப்பிஹ ஆக்கப்பட்டுள்ளது.   இங்கு ஷுப்பிஹ என்பதற்கு சாயல் என்று பொருள் கொண்டால் யூதர்கள் வெற்றிப்பெற்றதாகவே ஆகும். அது மட்டுமின்றி ஒரு நபியின் தோற்றத்தை இன்னொருவருக்கு - அவர் வாழும் காலத்திலேயே - அல்லாஹ் கொடுப்பானா என்பதும் அவ்வாறு கொடுத்திருந்தால் அது யூதர்களுக்கு சாதகமாகவே போயிருக்கும் என்பதும் சிந்தனைக்குரியதாகும்.
 
எனவே நேரடிப் பொருளில் இங்கு பார்க்காமல் அன்றைக்கு நடந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு பொருள் கொடுப்பதே சரியாக படுகின்றது.
 
யூதர்கள் ஈஸா(அலை) அவர்களை தேடி செல்கின்றார்கள்.  ஆனால் ஈஸா அவர்களை காணவில்லை. அல்லாஹ் அன்னாரை தன்னலவில் உயர்த்திக் கொண்டான்.  கொலை வெறி பிடித்த ஆட்சியாளருக்கு பதிலளிக்க வேண்டுமே என்று அச்சம் கொண்ட அதிகாரிகள் வேறொருவரை சிலுவையில் பலியாக்கி விட்டு இவர்தான் ஈஸா என்று அறிவித்து விடுகிறார்கள்.   எனவே ஷுப்பிஹ லஹும் என்பதற்கு "அவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது" என்று பொருள் கொண்டால் தெளிவு கிடைக்கின்றது.

ibnuh...@mail.com

unread,
Mar 25, 2010, 2:07:20 AM3/25/10
to fro...@googlegroups.com
 இது பற்றி  உள்ள SAHEEH  ஹதீஸ் களையும் ஆய்ந்து பதியுமாறு, அன்புடன் கேட்கின்றேன்.....

ibnuh...@mail.com

unread,
Mar 27, 2010, 2:37:50 AM3/27/10
to fro...@googlegroups.com
salaam,,,,,,,,,,
 .>>>>>>>>  சகோதரர் முஸ்லிம் எடுத்துக்காட்டியுள்ள ஆதாரங்கள் அனைத்தும் ஷுப்பிஹ என்பது அவர்களின் ஆரம்ப காலம் தொட்டு அந்த சாயலுடன் அவர்கள் இருந்ததைக் காட்டுகின்றது.   திடீரென்று ஒருவருக்கு சாயல் மாற்றப்படுவதற்கு இந்த ஆதாரங்களை பொருத்திக் காட்டா முடியாது. அந்த சாயலுடன் இருப்பது என்பது வேறு, திடீரென்று சாயல் மாற்றப்படுவது என்பது வேறு.<<<<<<<<<< G.N...

சகோ..ஜி.என்.,,,,,,, அவர்களுக்கு, இந்த கீழ்வரும்  ஹதீஸ் பற்றி , என்ன உங்கள் கருத்து  ???
( இதில் முக்கிய சம்பவத்தை மட்டும் ,  நான் குறிப்பிட்டுள்ளேன், தவறுகள் இருப்பின்  காட்டுங்கள்..)...,
இப்னு கதீர் அவர்களின் விளக்கம்,  இது  saheeh  என  குறிப்பிடப்பட்டது.....

இப்னு அப்பாஸ் ..... கூறினார்கள்..
......""""" நபி அவர்கள் , உயர்த்தப்பட முன்,  தன 12  தோழர்களிடமும்  சென்றார்கள்..  அவர்கள் வந்து சேரும்போது , தலையிலிருந்து நீர் கொட்டிகொண்டிருந்தத்து( அப்போதுதான் குளித்து முடித்தபடி ) , ........................................... ...................,,,, பின் அவர் , கேட்டார்,  யாருக்கு  தன்னுடைய  உருவ அமைப்பை என்னுடைய போன்று  மாற்றப்பட முழு மன விருப்பத்துடன் முன்வந்து, பின்னர்  எனக்கு பதிலாக கொலை செய்யப்பட விருப்பம் ?? " யார் முன்வருகின்றார்களோ அவர் என்னுடன் சுவர்க்கத்தில் இருப்பார் ... ,

அந்த 12  பேரில், ஒரு  இளைஞர்  எழும்பினார்.. அவரை , நபி ஈஷா அவர்கள் அமர செய்து விட்டு, மீண்டும் கேட்டார்... மீண்டும், அந்த இளைஞரே  எழும்பினார்...... அவரை , அமரச்செய்து, மீண்டும் கேட்டார்......மீண்டும்,  மூன்றாவது தரமும் அவரே எழும்பினார்..

நபி ஈஷா  அவர்கள் கூறினார்கள்.. நீங்களே...அவர்..!! .
. பின்னர், நபி ஈஷா அவர்கள் , வீட்டுக் கூரையிலிருந்த  ஒரு துவாரம் மூலம்,  வானத்துக்கு  உயர்த்தப்பட்டுகொண்டிருந்த்போது, அந்த இளைஞருக்கு, நபி ஈஷா அவர்களின் உருவ அமைப்பு  கொடுக்கப்பட்டது...
யூதர்கள் , தேடிக்கொண்டு வந்தபோது, இந்த இளைஞரைக்  கண்டு  , அவரை  பிடித்து சிலுவையில் அறைந்தார்கள்........................................................................... """  
 ( ஆதாரம்) ....., An-Nasai, Al-Kubra, 6:489

muslim

unread,
Mar 27, 2010, 3:02:00 AM3/27/10
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு

ஈஸா (அலை) அவர்கள் வானுலகுக்கு உயர்த்தப்பட்ட 4:157வது வசனம் தொடர்பாக இப்னு கஃதீர் விளக்கவுரையில் சொல்லப்பட்டு, நீங்கள் இங்கு எழுதியுள்ள ஆதாரங்கள் யாவும் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளில் பதிவு செய்யப்பட்டதல்ல! என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

மேலும், நபி ஈஸா (அலை) அவர்களின் சாயலை ஒரு நிரபராதிக்கு ஏற்படுத்தி அவரை ஆட்சியாளர்களின் பார்வையில் குற்றவாளியாக்கி தண்டனைக்குள்ளாக்குவது இறை நியதிக்கு எதிரானது. இறைத் தன்மைக்கும் மாற்றமானது! 



2010/3/27 <ibnuh...@mail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages