அரபு நாடுகளில் பெண்கள் தரைஐ கூட்டும் அளவிற்கு பர்தா அணிகிறார்கள்.
அவர்களிடம கேட்டால் நாம் கால்களை மறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
(நான் ஒரு ஹதீஸில் தரயில் இழுபடுமாறு உடை அணிவதை இறைவன் வெறுக்கிறான்
என்று படித்த ஞாபகம் தெளுவு படுத்தவும் ) தொழுகையிலும் கால்கள் மறைக்க
வேண்டுமா? socks போன்று நாம் ஏதாவது அணிந்து கொண்டு தான் தொழுக
வேண்டுமா? விளக்கம் தரவும்!
''ஆடையை (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 5783, 5791. முஸ்லிம் 4233. திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, முஅத்தா)
"தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி), 'நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகிறது" என்று கூறினார்கள். அதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே" என்று கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல் - புகாரி 3665)
பெருமைக்காக தரையில் இழுத்துச் செல்லும்படி ஆடை அணியக்கூடாது. என்றே நபி (ஸல்) அவர்கள் தடைசெய்கிறார்கள். தற்பெருமை எண்ணமின்றி தானாக ஆடை சரிந்து தரையில் இழுபடுமானால் அது குற்றமில்லை! இது குறித்து மேலதிகமாக ''முஸ்லிம் பெண் முகம் மறைத்தல்'' என்ற இழையில் ஆடை சம்பந்தமாக பதிவு செய்யவிருக்கும் விளக்கத்தைப் படியுங்கள்!
பெண்கள் பாதங்களை மறைத்திட வேண்டும்.
பெண்கள் பொது இடங்களுக்கு வரும் சந்தர்ப்பத்தில் பாதங்களை மறைத்திட வேண்டும். ஆடை தரையில் படும்படி அணிந்தால் தான் பாதங்கள் வெளிப்படாது என்பதால் பெண்கள் தரையில் படும்படி ஆடை அணியலாம். காலுறை அணிந்தும் பாதங்களை மறைத்துக் கொள்ளலாம்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
//கரண்டை காலில் இருந்து , ஒரு சான் இறக்கி உடுத்தாலே நடந்து போக முடியாது.... தடக்கி விழுந்து விடுவான் .ஒரு முழம் இறக்கினால் எப்படி நடக்க முடியும்.... ??//
கரண்டைக் காலிலிருந்து... என்ற விளக்கம் எதிலிருந்து பெற்றீர்கள்?
--
''நான் கீழாடையை நீளமாக அணிந்துள்ள பெண்ணாக இருக்கிறேன். அசுத்தமான இடங்களில் நான் நடந்து வருகிறேன்'' என்று உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ''அசுத்தமான இடங்களை அடுத்து வருகின்ற (சுத்தமான) இடம் அந்த அசுத்தத்தை தூய்மைப்படுத்திவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலாமா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் அடிமைப் பெண். (நூல்கள். அபூதாவுத் 326. திர்மிதீ 133. அஹ்மத். இப்னுமாஜா)
பள்ளிக்குச் செல்லும் நமது தெரு அசுத்தமாக உள்ளது, மழை பெய்து விட்டால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'தெருவின் அசுத்தமான பகுதியை அடுத்து சுத்தமான பகுதி இருக்கிறதா இல்லையா?' என்று கேட்டார்கள். 'ஏனில்லை' என்று அவர் பதில் சொன்னார். 'ஒன்று மற்றதை சரிசெய்து விடும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் பனி அப்து அஸ்ஹல் குலத்தைச் சேர்ந்த பெண்மணி. (நூல் - அபூதாவூத் 327)
செருப்பணிந்து கொண்டு ஒருவர் அசுத்தமான இடத்தை கடக்க நேர்ந்தால் மண் அதை சுத்தப்படுத்திவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - அபூதாவுத் 328)
இதேக் கருத்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழாடை அசுத்தமான இடங்களில் பட்டு, பின்னர் தூய்மையான இடங்களில் படும்போது ஆடை தூய்மையாகிவிடும். மண் தூய்மைப்படுத்தக்கூடியது என்று வேறு அறிவிப்புகள் உள்ளன.
கீழாடையை ஒரு ஜான், பின்னர் ஒரு முழம் இறக்கிக்கொள்ளலாம் என்பது கால்களுடன் பாதங்களும் மறைக்கப்பட வேண்டும் என்பதையே முக்கியத்துவப்படுத்துகிறது.
கேள்வியின் நோக்கம் பாதங்களும் மறைக்கப்பட வேண்டும் என்பதுதான்.
''அதைவிட அதிகமாகக் கூடாது'' என்பது மிகவும் நீளமாக தரையில் இழுத்துக்கொண்டு நடக்காமல் நடுநிலையாக இருக்கவேண்டும் எனபதையேக் குறிப்பிடுகின்றது என்பது எமது புரிதல்!
