நற்குணம்

2,033 views
Skip to first unread message

hakeem

unread,
Oct 20, 2010, 8:11:47 AM10/20/10
to நமக்குள் இஸ்லாம்

உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும்
இருப்பார். இது விஷயத்தில் நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு
உண்டு. நபி ஸல் அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல,
நபி ஸல் அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத்
திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி ஸல்
அவரகளின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத்
தூண்டவுமில்லை. நபி ஸல் அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை
கண்டார்கள். நபி ஸல் அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு
சுட்டிக்காட்டினார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி ஸல் அவர்களுக்கு பத்து
ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று
கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான்
செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ
கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி ஸல் அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில்
நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில்
உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால்
அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)

மேலும் கூறினார்கள்: "உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும்,
மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில்
குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர்,
மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப்
பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர்
ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி ஸல் அவர்களிடமிருந்து
நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது
கண்களால் நபி ஸல் அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக்
கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று
செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத
மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி ஸல் அவர்கள் கருணையாளராக
இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து
தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக
இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி ஸல் அவர்களிடம் வந்து
அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் "என் தேவைகளில் சில
நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ
என அஞ்சுகிறேன்'' என்றார். நபி ஸல் அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது
வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை
நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக்
கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு
ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை
சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக
இருந்தார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள
வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய
சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும்
உறுதிப்படுத்தினார்கள்.

முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு
முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம்
காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான்.
மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது.

முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின்
தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை
கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில்
நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை
உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத்
திர்மிதி)

நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி
ஸல் அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில்
குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர்
என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி)
அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும். நாங்கள் நபி ஸல் அவர்களின்
சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல்
அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி ஸல் அவர்களின் சபையில் எங்களில் எவரும்
பேசமாட்டார். அப்போது சிலர் வந்து நபி ஸல் அவர்களிடம் "அல்லாஹ்வின்
அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று
வினவினர். நபி ஸல் அவர்கள், "அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக்
கூறினார்கள்.

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம்
எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும். நாம் முன்பு
கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும்
மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை,
நோன்புக்கு இணையானதாகும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில்
நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது
நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு
உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

மற்றோர் அறிவிப்பில்: "ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம்
நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்''
என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தங்களது சொல், செயலால் நபி ஸல் அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை
தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள
தூண்டினார்கள்.

நபி ஸல் அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி
அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின்
தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள்.
அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி ஸல் அவர்கள்,
""நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப்
போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள்.
(முஸ்னத் அபூ யஃலா)

மேலும் கூறினார்கள்: "நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும்,
உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத்
தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நபி ஸல் அவர்கள்: "யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய்.
எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக'' என்ற துஆவை வழமையாகக் கூறி
வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)
....(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்.
(அல்குர்அன் 68:4)
அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி ஸல்
அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின்
முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள
வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம். நற்குணம் என்பது முழுமையானதொரு
வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம்,
விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது,
நன்மையில் உறுதி, உளத்தூய்மை, முகமலர்ச்சி போன்ற பல நற்பண்புகள்
உள்ளடங்கியுள்ளன.

இஸ்லாமின் சமூகக் கண்ணோட்டத்தைப் பற்றி ஆராய்பவர் அச்சமூகத்தை
மேன்மைப்படுத்தும்படியான நற்பண்புகளை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை
கண்டுகொள்வார். சமூகத்தில் முஸ்லிம் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு
இஸ்லாம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பொதுப்படையானதாக இல்லாமல்
சமுதாயத்தின் ஒவ்வொரு நபர்களின் ஒவ்வொரு செயலிலும் அப்பண்புகளை இஸ்லாம்
வளரச் செய்திருக்கிறது. சமூகம் அனைத்தையும் நற்பண்புகளால் அலங்கரித்த
சாதனையை இஸ்லாமை தவிர வேறெந்த கொள்கையாலும் சாதிக்கமுடியவில்லை.

இறையச்சமுள்ள முஸ்லிம் சமூகத்தில் தனித்தன்மை பெற்றுத் திகழ்வதற்காக,
இஸ்லாம் எற்படுத்தியுள்ள மார்க்க நெறிகளைப் பின்பற்றுவது சிரமமானதல்ல
என்பதை அதன் சான்றுகளை ஆராய்பவர்கள் அறிந்துகொள்வர்.

இறைவன் எற்படுத்திய வரம்புக்குள் நின்று, அவனது விலக்கலைத் தவிர்த்து,
மார்க்க நெறிகளை முழுமையாக ஏற்று, முஸ்லிமின் இலக்கணமாகத் திகழ்பவரின்
ஒவ்வொரு செயலிலும் நற்பண்புகள் பிரகாசிக்கின்றன. முஸ்லிம்
மோசடிக்காரராக, வஞ்சகராக, எமாற்றுபவராக, பொறாமைக்காரராக இல்லாமல்
அனைத்து மக்களிடமும் நற்குணத்துடன் நடந்துகொள்வார்.

Posted from
http://hakkem.blogspot.com/2010/10/blog-post_20.html

fathima yusra

unread,
Dec 1, 2010, 2:42:49 AM12/1/10
to fro...@googlegroups.com
nan SLil unani padithuk kondirukkum manavi aavean. ennudai kalluri
singala,tamil,muslim kal anaivarum kanappaduhintranar.inku
singalvarhal thaniyea ayurveda entrum muslim matrum tamil manavarhal
unani entrum vevvearu pirivuhalil padikkintrom.
ingu unani pirivin puththaha velieedu ontru nadaiferuvethatkkaha
UMSA(unani medical students assosiation) inal manavihalahiya
engalidamum nihalchihal korappattana.
mealum innhalchikkaha pirathama virunthinaraha DR.Shukri,DR.Mareena
thaha rifai aahiyor allaikkappattullanar.(kurippu inku unani il tamil
manavarhalum kanappaduhintranar.mealum DR.Shukri,DR.Mareena aahiyoor
markkap piracharaharhal aahum)
ingu enna pirachinai entral nihalchikkaha thayarikkappattirukkum
nihalchi niralil baratha naattiyamum ontrahum.ithanai enkal
manaviyarhalil silar verukkintranar.karanam ithu enkalathu
kalacharathai pathikkum enkintarnar.islam mulu ulaha samuthayathitkum
arullappatathu aahavea ithai nadathakudathu ,pavam nadappathai
thadukka veandum enkintranar.
innum silar ithu enkalathu thanippatta kalasalai alla muntru inamum
irukkintrathu,athoodu nihalappohum nihalchi aanathu unani puthaha
velieedu,kalai nihalchi il ontraha ithu nadaifareuvathil
thavarillai.unani muslimkalukku maththiram uriyathalla.thamilarhalum
urimai kollalam.nankal unani il athiham iruppathal avarhaludaiya
urimaiyai parikkamudiyathu.sirupanmaiyaraha nam SL il valum poothu
singalavarhalal engalathu kalacharathukku entha idaiuurum
illai.aahavea unani il tamilarhal sirupanmaiyaraha irukkum poothu
mattum ithu ean?
intha iru karuthu vearufaduhalil ethu sariyaha irukka mudium. ithattku
islamiya kannottathodu sariyana theervai ethirfarkirean.(aatharamana
hatheeshal iruppin varaveattkaththakkathu)

> --
> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
> To unsubscribe from this group, send email to
> fromgn+un...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

muslim

unread,
Dec 3, 2010, 10:23:23 AM12/3/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

அன்புச் சகோதரி fathima yusra அவர்களுக்கு,

எளிமையுடன் தமிழில் தட்டச்சுவதற்கு வசதியாக கணினித் துறையில் மென் பொருள்கள் பல வந்துவிட்டன. சற்று சிரமமாக இருந்தாலும் அவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி தமிழில் எழுத முயலுங்கள். எழுதப் பழகிக்கொண்டால் இலகுவாகிவிடும்.

ஆங்கிலத் தமிழில் எழுதும் ஓரிரு வார்த்தைகளை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த இழையில் பதிவுசெய்துள்ள நீண்ட கருத்துகளை எளிதில் படிக்க முடியாது. படித்தாலும் புரிதலில் சிரமம் ஏற்படும். தமிழில் கன்வெர்ட் செய்தாலும் பொருள் வேறுபடும். அதனால் குழும உறுப்பினர்கள் இவற்றைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில் படிப்பதில் அயர்ச்சி ஏற்படும்!

http://www.islamkalvi.com/web/converter.htm

மேல்கண்ட சுட்டியிலுள்ள கன்வெர்ட்டரைப் பயன்படுத்துங்கள். மேல் பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதினால் கீழ் பெட்டியில் எழுத்துரு தமிழுக்கு மாறிவிடும். அவற்றை copy எடுத்து குழுமத்தில் paste செய்துவிடலாம். எளிய முறையில் தமிழில் எழுதிப் பழக வசதியாக தமிழ் எழுத்திற்கான ஆங்கில எழுத்துகளின் அடையாளக் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

மேல் பெட்டியில் ammaa என்று ஆங்கிலத்தில் தட்டினால் கீழ் பெட்டியில் அம்மா என்று தமிழில் மாறிவிடும். பார்க்க: இணைப்பிலுள்ள படம். முயன்று பாருங்கள்.


 
 
2010/12/1 fathima yusra <mwfy...@gmail.com>
ammaa.jpg

Abbas

unread,
Dec 3, 2010, 11:16:09 AM12/3/10
to fro...@googlegroups.com

சகோதரி ஃபாத்திமா யுஸ்ரா அவர்களுக்காக........!

 

நான் ஸ்கூலில் யூனானி படித்துக் கொண்டிருக்கும் மாணவி ஆவேன். என்னுடை கல்லூரி சிங்கள,தமிழ்,முஸ்லிம்கள் அனைவரும் காணப்படுகின்றனர்.

இங்கு சிங்களவர்கள் தனியே ஆயுர்வேதம் என்றும் முஸ்லிம் மற்றும் தமிழ் மாணவர்கள் யூனானி என்றும் வெவ்வேறு பிரிவுகளில் படிக்கின்றோம்.

 

இங்கு யூனானி பிரிவின் புத்தக வெளியீடு ஒன்று நடைபெறுவதாக (யூனானி மெடிக்கல் ஸ்டூடண்ட் அசோசியேசன்) வினால் மாணவிகளாகிய

எங்களிடமும் நிகழ்சிகள் கோரப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக  பிரதம விருந்தினரக டாக்டர் ஷுக்ரி, டாக்டர் மரீனா தாஹா ரிஃபாயி ஆகியோர்

அழைக்கப்பட்டுள்ளனர். (குறிப்பு இங்கு யுனானியில் தமிழ் மாணவர்களும் காணப்படுகின்றனர். மேலும் டாக்டர் ஷுக்ரி, டாக்டர் மரீனா ஆகியோர் மார்க்கப் பிரசரகர்கள் ஆவர்)

 

இங்கு என்ன பிரச்சினை என்றால் நிகழ்சிக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் நிகழ்சி நிரலில் பரதநாட்டியமும் ஒன்றாகும். இதனை எங்கள் மாணவியர்களில் சிலர் வெறுக்கின்றனர். காரணம் இது எங்களது கலாச்சாரத்தை பாதிக்கும் என்கின்றனர். இஸ்லாம் முழு உலக சமுதாயத்திற்கும் அருளப்பட்டது ஆகவே இதை நடாத்தக்கூடாது அதை தடுக்க வேண்டும் என்கின்றனர்

 

இன்னும் சிலர் இது எங்களது தனிப்பட்ட கலாசாலை அல்ல இங்கு மூன்று இனமும் இருக்கின்றது, அதோடு நிகழப்போகும் நிகழ்சி ஆனது யுனானி புத்தக வெளீயீடு

கலை நிகழ்ச்சியில் ஒன்றாக இது நடைபெறுவதில்தவறில்லை. யுனானி முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரியதல்ல.தமிழர்களும் உரிமை கொள்ளலாம். நாங்கள் யுனானியில் அதிகம் இருப்பதால் அவர்களுடைய உரிமையை பறிக்கமுடியது. சிறுபான்மையராக நாம் இலங்கையில் வாழும்போது சிங்களவர்கள் எங்களது கலாச்சாரத்துக்கு எந்த இடையூரும் செய்வதில்லை ஆகவே யுனானியில் தமிழர்கள் சிறுபான்மையராக இருக்கும் போது மட்டும் இது ஏன்?

 

இந்த இரு கருத்து வேறுபாடுகளில் எது சரியாக இருக்க முடியும். இதற்கு இஸ்லாமிய கண்ணோட்ட்தோடு சரியன தேர்வை எதிர்பார்க்கிறேன்.(ஆதாரமான

ஹதீஸில் இருப்பின் வரவேற்கத்தக்கது)

fathima yusra

unread,
Jan 11, 2011, 2:35:53 AM1/11/11
to fro...@googlegroups.com
எனது கல்லூரி புத்தக வெளிஈடு சம்பந்தமக நான் கேட்ட கேள்விக்கு இன்னும்
பதில் கிடைக்கவில்லை.ஏன்?

>> <mailto:fromgn%2Bunsu...@googlegroups.com>


>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
>
> --
> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
> To unsubscribe from this group, send email to
> fromgn+un...@googlegroups.com

> <mailto:fromgn%2Bunsu...@googlegroups.com>

fathima yusra

unread,
Jan 11, 2011, 2:48:44 AM1/11/11
to fro...@googlegroups.com
நன்றி சகோதரர் முஸ்லிம் அவர்களே.ஜசாக்கல்லகுக்கைரன்.
Reply all
Reply to author
Forward
0 new messages