அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாயிஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் சம்பவத்தில் விபச்சாரம் புரிந்த இருவரும் தண்டிக்கப்பட்டுள்ளனர்! பார்க்க:
இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நீலகண்டன் - http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_20.html - சொல்கிறார், ''ஹராம்'' என்றால் ''இழிவானது'' என்று.
கணவனுள்ள பெண்களும் - ''ஹுர்ரிமத் அலைக்கும்''... - (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளார்கள். 004:024)
எப்படியிருக்கிறதென்று பாருங்கள்? ஏற்கெனவே ஒருவனுக்கு மனைவியாக இருப்பவள் இன்னொருவனைத் திருமணம் செய்து அவனுக்குப் பிள்ளையும் பெற்றாளாம். (இன்னும் மூவரைக் கட்டிக் கொண்டால் சுத்தமாக இருக்கும்) ஒருவனுக்கு மனைவியாய் இருப்பவள் அவனிடமிருந்து விவாகரத்துப் பெறாமல் வேறொருவனை மணமுடிக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. இதில் பிற மதங்கள் என்ன சொல்கின்றன என்பது தெரியவில்லை. இந்திய சட்டமும் இதைத் தடை செய்கிறது என்றே கருதுகிறேன்.
''ஹராம்'' என்பதற்கு நீலகண்டன் அவர்களின் விளக்கவுரை...
//இப்போது இன்னொரு விசயத்தை பார்ப்போம். பெற்றவர் தவறு செய்ததாகவே வைத்துக்கொள்வோம். பிறந்த குழந்தை என்ன செய்யும்? இந்த நவீன உலகில் திருமண பந்தத்தில் பிறந்தாலும் மத நெறிக்கு வெளியே பிறந்ததால் பச்சிளம் குழந்தையை பாவ பிறவி எனக் கூறும் கொடுங்கோரர்களை என்ன என்று சொல்ல? இதுதான் பகுத்தறிவா?
இந்த பகுத்தறிவான பதில் வெளிவந்தது 'முஸ்லீம் முரசு' இதழில் (மார்ச் 1989) இந்த பகுத்தறிவு பெட்டகத்தின் அட்டையை அலங்கரித்த 'பகுத்தறிவு' யார் தெரியுமா?//
ஹராம் என்றால் பாவப் பிறவி, இழிபிறவி என்று தமக்குத் தோன்றியதை அடுக்கிக் கொண்டே போகிறார் நீலகண்டன். ஹராம் என்றால் விலக்கப்பட்டது, தடைசெய்யப்பட்டது, கூடாத உறவு, தகாத உறவு. என்றே பொருள். இஸ்லாமிய வழக்கில் இறைவன் அனுமதிக்காததை ''ஹராம்'' என்று சொல்லப்படும்.
''ஹுர்ரிம அலைக்கும்'' உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும். (003:050)
ஹராம் என்றால் இழிவானது எனப் பொருள் என்றால் ஹராமாக்கப்பட்ட ஒன்றை, இங்கு மீண்டும் இறைவன் அனுமதிக்க மாட்டான். ஹராம் என்பது தடை செய்யப்பட்டவை, இறைவனால் தடை செய்யப்பட்டவற்றிலிருந்து முஸ்லிம்கள் விலகிக்கொள்ள வேண்டும்.
''ஹுர்ரிமத் அலைக்கும்'' - தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை - உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. (005:003) இதே வசனத்தில், ஹராமாக்கப்பட்டவைகளை - நிர்ப்பந்த நிலையில் பாவம் செய்யும் எண்ணமில்லாமல் - புசித்தால் அவர் மீது குற்றமில்லை என்றும் இறைவன் கூறுகிறான்.
விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலைப்பாடு.
ஒரு பெண் 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக நான் (தகாத உறவினால்) கர்ப்பமுற்றுள்ளேன்' என்று கூறினார்.
''இல்லை நீ சென்று குழந்தை பெற்றெடு' (பிறகு திரும்பி வா) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தை எடுத்துக்கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'இது நான் பெற்றெடுத்த குழந்தை' என்று கூறினார்.
''நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்தபின் திரும்பி வா'' என்றார்கள்.
பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்' என்று கூறினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். (முஸ்லிம், நபிமொழியின் சுருக்கம்)
ஒன்றிரண்டு நபிமொழிகளை எடுத்துக்காட்டி, அதோடு //பாகிஸ்தானில் மத சட்டத்தின் படி 'தவறான' உறவில் பிறந்த குழந்தையும் கல்லால் அடித்து கொல்லப்பட்டது குறித்து படித்த ஞாபகம்.// என்று எழுதி விட்டால் ''இஸ்லாம் தவறான உறவில் பிறந்த குழந்தையைக்கூடவாக் கொல்லச் சொல்கிறது'' என்று படிப்பவர்கள் இமைகளை விரிக்கமாட்டார்களா? போகட்டும்.
விபச்சாரத்தின் மூலம் கர்ப்பமடைந்த பெண் - அவர் குழந்தை பெறும் காலம்வரை, குழந்தை பெற்று அந்தக் குழந்தைத் தாய் பால் குடிக்கும் காலம் வரை, பின் பால்குடி மறக்கடிக்கப்பட்டு ரொட்டியை உணவாக உண்ணும் வரை - அந்தப் பெண்ணுக்கு தண்டனை காலம் தள்ளி வைக்கப்படுகிறது. பின் அச்சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பு வேறொருவரிடம் ஒப்படைக்கப்பட்டு, விபச்சாரம் செய்த பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இவ்வளவும், இஸ்லாம் தடை செய்த விபச்சாரத்தைச் செய்தவர்கள் தகாத உறவு கொண்டவர்கள் என்றாலும், தகாத உறவில் - ஹராமான உறவில் பிறந்த குழந்தை எந்தப் பாவமும் செய்யவில்லை, தாகாத உறவால் விபச்சாரம் செய்தவர்களுக்காக அந்த உறவில் பிறந்த குழந்தை பொறுப்பாளியாகாது என்பதனால் இஸ்லாம் அந்தக் குழந்தையின் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என்பதை விளங்கலாம். ஆனாலும் நீலகண்டன் அவர்கள் இஸ்லாத்தின் மீது வலிய தமது இட்டுக் கட்டலைத் திணித்திருக்கிறார்.
//அவள் பெற்ற குழந்தையும் ஹராமான பிறப்பே.//
விபச்சாரத்தில் பிறந்த குழந்தை, இஸ்லாம் தடை செய்துள்ள தகாத உறவில் பிறந்த குழந்தை என்று முஸ்லிம் முரசு சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. தகாத உறவில் பிறந்த குழந்தையை இஸ்லாம் இழிபடுத்துவதாகத் தவறாக விளங்கிக் கொண்டு இஸ்லாத்தை விமர்சத்திருப்பதுதான் அபத்தம்.
அதே அபத்தத்தோடு பெரியாரையும் சாடியிருப்பது பேரபத்தம். மேல்ஜாதி, கீழ்ஜாதி, தீண்டத்தகாதவன் எனும் தீண்டாமையை ஒழித்த ஒரே மார்க்கம், இஸ்லாம் மார்க்கம் என்று பெரியார் மட்டுமல்ல, அன்றும் இன்றும் நாளையும் யார் சொல்லியிருந்தாலும், சொன்னாலும் அதற்குப் பொருத்தமான - தீண்டாமை இல்லாத மார்க்கம் இஸ்லாம் என்பதில் நேர்மையானவர்களிடையே மாற்றுக் கருத்து இருக்கவா முடியும்?
நீலகண்டன் அவர்கள் எதிலோ உள்ள ஆத்திரத்தை நிதானமிழந்து இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்...
//"தமிழ் மக்களுக்கு இஸ்லாமே பொருத்தமானது" கூறியவர் ஈவேரா (24-2-1935) 1980களிலும் 2000களிலுமே இப்படி என்றால் 1930களில் இந்த கும்பல் எப்படி இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் போய் இளித்தபடி ஈவேரா இப்படி அறிக்கை விட்டிருந்தால் அந்த ஆள் எப்படிப்பட்ட நயவஞ்சக பசப்பு வார்த்தை ஆசாமியாக இருந்திருக்க வேண்டும்! இப்படிப்பட்ட போலி பகுத்தறிவு ஆசாமி, சுயமரியாதை இல்லாத காட்டுமிராண்டி நயவஞ்சக முட்டாளை, 'பெண் விடுதலை போராளி' என்று சொன்னால், தெரியாமல்தான் கேட்கிறேன்...பெண் ஏன் அடிமையாக மாட்டாள்?//
பொருத்தமில்லாத வசவு மொழிகள்.
அன்புடன்,
அபூ முஹை
Posted by அபூ முஹை at 9:47 AM
tamilreber said...
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள்.
------------------------------
கல்லெறி என்றால் கல்லெறிந்து கொல்லுவதா?
இது போன்ற தண்டனைகள் இன்னும் சில நாடுகளில் இஸ்லாமிய சட்டத்தின் பெயரால்
நிறைவேற்றப்படுகின்றனவே. இது நியாயமா? இப்படித் தண்டிப்பது நாகரிகமானதா?
அந்தப் பெண்ணை மன்னித்து விட்டிருந்தால் ஒரு குழந்தை தாயின்றி தவித்திருக்காது.
பால்குடி மறந்த பின் தாய் தேவையில்லையா- என்ன குரூரமான நீதி இது
tamilreber said...
ஒருவனுக்கு மனைவியாய் இருப்பவள் அவனிடமிருந்து விவாகரத்துப் பெறாமல் வேறொருவனை மணமுடிக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது
*********************************
ஆனால் ஆண்கள் மட்டும் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.கணவன் மனைவியிடம் அனுமதி பெறாமலும் திருமணம் செய்து கொள்ளலாம். இதுதானே இஸ்லாத்தின் 'நீதி'.
சுல்தான் said...
(அபூமுஹை.பொருத்தமாயிருந்தமால் மட்டும் அனுமதிக்கவும்)
தமிழ்ரிபெர்,
இஸ்லாமியத் தண்டனைகள் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் அதில்தான் தவறிலிருந்து தப்பிக்க வழியிருக்கிறது. இது போன்ற தகாத உறவுக் குற்றங்கள் மலிந்து விட்டிருப்பதால் அது உங்களுக்கு கடினமான தண்டனையாகத் தோன்றுகிறது. இவை மலிந்ததற்கு காரணமே இது மாதிரிச் சட்டங்கள் அமுல் படுத்தப் படாததல்தான் என்பது என் கருத்து.
அந்த நிலைமைக்கு ஆக்கப்பட்டு வளர்நதுள்ள வாலிபனிடம் கேளுங்கள். உங்களுகக்கு இந்த நிலை வரக் காரணமாயிருந்த உங்களைப் பெற்றெடுத்த தந்தையை என்ன செய்வீர்கள் என்று. இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் திசையிலிருந்து பார்க்கச் செய்கிறது.
தகாத உறவுக்கான தண்டனையை உறுதி செய்ய கடினமான சட்ட திட்டங்கள் உண்டு. குறைந்த பட்சம் நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் அது உண்மையில் உடலுறவுதான் என்பதை பார்த்ததாக தெளிவான சாட்சியம் அளித்தல் அவசியம். சாட்சிகள் தவறென்று அறியப்பட்டால் அவர்களுக்கு கசையடி (சாட்டையடி) தண்டனை நிறைவேற்றப்படும். தகாத உறவுக்கு தெளிவான மூன்று சாட்சிகள் கிடைப்பதே மிகவும் அரிது. அவர்கள் தவறென்று நிரூபிக்கப்படும் வாய்ப்பை அறிந்து அவர்கள் சாட்சியம் அளிக்க முன் வர வேண்டும். ஆகையால் மிக மிக குறைந்த அளவே இத்தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பு உண்டு. இந்த மிக மிக குறைந்த அளவிலான தண்டணையே தவறு செய்ய நினைப்பவர்களை நேர்வழி செலுத்தப் போதுமானதாகும்.
குறிப்பாக இந்த இஸ்லாமியச் சட்டம் வந்ததும் அந்தப் பெண் மீது யாரும் குற்றம் சுமத்தவில்லை அவரே முன்வந்து அந்த தண்டணையை ஏற்றார். நபிகளார் 'உனக்கு பைத்தியமா திரும்பிச் செல்' என்கின்றனர். அந்தப் பெண் திரும்ப வலியுறுத்தவும், குழந்தை பெற்றதும் வரச் சொல்கின்றனர். அந்தப் பெண் குழந்தை பெற்ற பின் வந்து தண்டணையை நிறைவேற்ற வலியுறுத்தும் போது, குழந்தைக்கு பால்குடி மறந்ததும் வரச் சொல்கின்றனர். இது போல் தப்பிக்க எத்தனையோ வழியிருந்தும் தப்பிக்க நினைக்காமல், இறைவனை தூய்மையாக சந்திக்க என்ற நினைவில் அந்தப் பெண் வலியுறுத்தலுக்குப் பின் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அந்தப் பெண்ணிற்காக நபியவர்களே பாவ மன்னிப்புக் கேட்டதோடு அந்தப் பெண்ணிண் இறை நம்பிக்கையை மிகவும் புகழ்ந்தார்கள்.
தாம் செய்த தவற்றை எல்லோர் முன்னிலும் ஒப்புக் கொண்டு தண்டணை பெற வேண்டும் என்பது மட்டுமில்லாமல், தவறு செய்தவர்கள் மனம் வருந்தி அந்தத் தவறிலிருந்து மீண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி, அந்த தவறின் பக்கம் செல்லாமல் இருக்கவும் இஸ்லாத்தில் வழியுள்ளது.
இஸ்லாத்தில் நான்கு திருமணங்களுக்கான அனுமதி ஏன் என்பதை விளக்கி பலமுறை பதில் சொல்லியாகி விட்டது. ஏராளமான இணையத்தளங்களிலும் இதற்கு விளக்கங்கள் உள்ளன. திரும்பத் திரும்ப அதையே சொல்லும் மனம் பிறழ்ந்தவர்களின் இஸ்லாத்தைப் பார்க்காமல் தூய இஸலாத்தை அறிய முயற்சி செய்யுங்கள். இணைய முகவரி வேண்டுமானால் தரப்படும்.
Sirajudeen said...
கல்லெறிந்து கொல்லுதல் பற்றிய உங்களது சந்தேகத்திற்கு பதிலாக அபுமுஹை அவர்கள் தெளிவாக பதிவு இடுவார் என்று நம்புகிறேன்.
இருந்தாலும் எம்மால் முடிந்த வரை அதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தண்டனைகள் எதற்காக கொடுக்கப்படுகின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று அரசாங்கம் கொடுக்கும் தண்டனையின் மூலம் அந்த தவறை திரும்பவும் குற்றம் செய்தவன் செய்யக் கூடாது. இரண்டு இது மற்ற மனிதர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். குற்றத்திலும் வித்தியாசம் உள்ளது. ஒருவன் செய்யும் குற்றம் தனிமனிதனை, சமூகத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை பொறுத்தும் தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. சமூகத்தை பாதிக்கும் அளவைப்பொறுத்து தண்டனைகளின் விரியமும் அதிகரிக்கிறது. இப்போது இந்த விபச்சார விசயத்திற்கு வருவோம். ஒரு ஆண், பெண் சற்று அற்ப இன்பத்திற்காக கூடி விடுகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் சமூதாய பாதிப்பை கணக்கில் கொண்டால் இவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் தண்டனை சரிதான் என்று ஒத்துக கொள்வீர்கள். இதனால் தான் இஸ்லாத்திற்கு மாற்றமாக கருத்து கொண்ட அத்வானி கூட கற்பழிப்புக்கு அரபு நாட்டு தண்டனை (அதாவது மரண தண்டனை) கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார். கற்பழிப்புக்கும், விபச்சாரத்திற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. எல்லாமே சமுதாயம் அங்கரித்திருக்கும் திருமண்ம் என்ற கட்டுக்கோப்பை விட்டு வெளியே உள்ள சீhகேடுகள். சிர்கேடுகள் என்று தெரிந்தாலும் மனிதர்கள் தங்களின் மன இச்சையினால் இந்த தவறை சதாரணமாக செய்ய தயங்குவதில்லை. இதனால் சமூகத்தின் குடும்ப காட்டுக் கோப்பை இவர்கள் மதிக்க வில்லை என்பது மட்டுமல்ல. மற்றவர்களும் இது போன்ற தவறை செய்ய இவர்கள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இதுமட்டுமல்ல இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும். தவறே செய்யாத குழந்தை சமூகத்தில் மிகப் பெரிய அவமானத்தை சந்திக்கும். இவர்களை போன்றவர்களை சமூகத்தில் வளர விட்டால் நாளiடைவில் சமூகத்தின் ஒழுக்கம் இல்லாமல் போகும்.
மேலும் நீங்கள் கண்கூடாக பார்க்கிறீர்கள். இந்தியாவில் உள்ள சட்டங்களால் இவை போன்ற தீமைகளை தடுக்கமுடியாத காரணத்தினால் தான் ஜவர்ஹர்லால் நேரு விபச்சாரத்திற்கு லைசென்ஸ் கொடுத்தார். இதற்கு அந்த காலத்தில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் மிகப்பெரிய எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் அவர்களுக்கு நேரு பதிலலிக்கையில் சட்டங்களை கொண்டு இந்த தீமையை தடுக்கமுடியாது என்பதால் தான் நான் விபச்சாரத்திற்கு லைசென்ஸ் கொடுத்தது என்று தெரிவித்ததுடன் குடும்ப பெண்களுக்கு இதனால் பாதுகாப்பு கிடைக்கும் என்றார். ஆக ஒரு நாட்டின் பிரதமர் தன்னுடைய நாட்டு சட்டத்தால் இந்த தீமையை தடுக்க முடியாமல் அந்த தீமையை வேறுமுறையில் ஆதரிக்கிறார் என்றால் காரணம் இந்த சட்டத்தினால் எல்லாம் இந்த தீமையை தடுக்க முடியாது. அதனால் இந்தியாவில் விபச்சாரம் செய்தால் என்ன தண்டனையோ அதற்கு பதிலாக இஸ்லாம் வழங்கும் தண்டனையை செயல்படுத்தி பாருங்கள். இந்த தவறு சமூகத்தில் குறைகிறதா? அல்லது கூடுகிறதா என்று பார்ப்போம். இன்னொரு விசயம் இப்படிப் பட்ட தவறை செய்யும் போது அதை மக்கள் பார்க்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது, இந்த தண்டனை படம் பிடித்து டிவி யில் ஒளிப் பரப்பி பாருங்கள். இதற்கு பிறகு இந்த தவறை மற்றவர்கள் செய்ய முன் வருவார்களா என்று பார்ப்போம். மேலும் இப்படி கல்லெறி தண்டனை விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டவுன் இஸ்லாம் வழங்கி விடாது. இதற்கு 4 சாட்சிகள் தேவை. இதற்கு பிறகுதான் தண்டனையே வழங்கபெறும்.
அமெரிக்காவில் கூட காதிரினா, ரீட்டா புயல்கள் தக்கிய போது பத்திரிக்கையில் வந்த செய்தி. அந்த சூழலில் டாய்லெட்டுக்கு சென்ற ஒரு பெண்ணை அங்கு வைத்து ஒருவன் கற்பழீக்க முயல்கிறான். சத்தம் கேட்டு பார்த்த மக்கள் அவனை அடித்து கொன்றார்கள் என்பதை படிக்க முடிந்தது. இன்னும் இது போன்று இத்தகைய கற்பழிப்புக்கும், விபச்சாரத்திற்கும் நமது வீட்டு பெண்ணை ஒருவன் பயன்படுத்தினால் நம்முடைய உணர்வு எப்படி இருக்கும். நம்முடைய வீட்டு பெண்ணை ஒருவன் பலாத்காரமாகவோ அல்லது மனஇச்சைக்கு உட்படுத்தியோ கெடுத்து விட்டால் நாம் அவனை சும்மா விடுவோமா? என்பதை சிந்திக்க வேண்டும். இஸ்லாம் இப்படி பாதிக்கப்பட்டவனுடைய உணர்வுக்கு மதிப்பளிக்கிறது.
இத்துடன் இன்னொன்றையும் சகோதரர் கேட்டிருக்கிறார். பால்குடி மறக்கடிக்கப்பட்ட குழந்தைக்கு தாய் தேவையில்லையா என்று. ஆம் தேவை தான். ஆனால் இது சட்டம். சட்டம் என்பது யாருக்கும் வளைந்து கொடுக்கக் கூடாது. அது நூல் போன்று இருக்க வேண்டியது அவசியமானது. இல்லையென்றால் 10 கொலைகள் செய்தவன் தூக்கு தண்டனை கொடுத்தபிறகு நீதபதியிடம் ஐயா நான் 5 குழந்தைக்கு தகப்பன் என்று கேட்பான் இதற்கும் சட்டம் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும். இதை யெல்லாம் மனதில் கொண்டு தான் நமது நாட்டின் நீதி தேவதைக்கும் கண்ணில் கருப்பு கயிறு கட்டி இருக்கிறார்கள். சட்டம் என்று வரும்போது அங்கு குற்றம் செய்தவனுக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டுமே தவிர அங்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன், இரக்கம், கோபம் என்று பார்த்து தண்டனை கொடுக்க கூடாது.
இந்த நபிமொழியில் கூட அந்த பெண்ணை இருமுறை இறை தூதர் (ஸல்) அவர்கள் தண்டனை கொடுக்காமல் அதற்கான காரணத்தை சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அந்த பெண்ணிடம் இருந்த இறையச்சத்தின் காரணமாக நாம் இதற்கான தண்டனையை இந்த உலகில் பெறவில்லையென்றால் மறுமை நாளிலே கொடுமையான வேதனை அனுப்பவிக்க வேண்டியதிருக்கும் என்ற அச்சத்தால் அவர்களாகவே யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் வருகிறார் என்பது கவனிக்கதக்கது.
அடுத்த கேள்விக்கும் இது போன்று விரிவாக பதில் அளிக்க வேண்டும். பல முஸ்லீம் அல்லாதவர்களாலும் இக்கேள்வி கேட்கப்பட்டதுதான்.
ஸயீத் said...
\\இது போல் தப்பிக்க எத்தனையோ வழியிருந்தும் தப்பிக்க நினைக்காமல், இறைவனை தூய்மையாக சந்திக்க என்ற நினைவில் அந்தப் பெண் வலியுறுத்தலுக்குப் பின் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.\\
இறையச்சம் எந்த அளவு இஸ்லாத்தினால் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது, இன்று நான் இந்த தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மனிதர்களும் விலங்குகளும் உயிரோடு எழுப்பப்படும் அந்த மறுமை நாளில் இறைவனின் சன்னிதானத்தில் என்னால் தப்பிக்க முடியாது என்ற எண்ணம்தான் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழிந்த பின்னும் அந்தப் பெண்ணை தேடி வந்து தண்டனையைப் பெறவைக்கிறது. அவருடன் நபியவர்கள் அவரைக்கண்காணிக்க காவலரையோ அல்லது வேறு எந்த எற்பாடுமோ செய்யவில்லை.
அந்தப் பெண்ணை கல்லால் அடிக்கும் பொழுது அவரின் இரத்தம் ஒருவரின் உடையின் மேல் பட்டு விடுகிறது அப்பொழுது அவர் "பாவம் செய்த இந்தப்பெண்ணின் இரத்தம் என்மீது படுவதா?" என்று கூறிய பொழுது நபியவர்கள் அவ்வாறு கூறியவரைக் கண்டித்து தோழரே இந்தப்பெண் இப்பொழுது சொர்க்கத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
ஒரு சிறிய பறவையை கூட தான் உண்ணும் உணவுக்காகவன்றி வேறுகாரணத்திற்க்காக கொல்லக்கூடாது என்று கூறியவர் குற்றத்திற்கு தண்டனை என்ற அளவில் மட்டுமே அந்தப்பெண்ணை கல்லெறிந்து கொல்ல அனுமதிக்கிறார்கள். இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்கிறது பாதிக்கப்பட்டவனுக்கே பாதிக்கப்பட்டதன் வலி தெரியும்.
குற்றம் செய்தவர் தேடிவந்து தண்டனை பெறும் சமுதாயத்தை உருவாக்கிய இறைவன் மிகப் பெரியவன்.
அபூ முஹை said...
tamilreber உங்கள் வருகைக்கு நன்றி!
ஒரு குற்றத்திற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று விதி வகுத்துக் கொண்டால், அதற்கு என்ன தண்டனை உறுதி செய்யப்படுகிறதோ அதுதான் அந்தக் குற்றத்திற்கான தண்டனை. அதில் வித்தியாசம் காட்டாமல், எல்லோரும் சமமாகக் கருதப்பட வேண்டும். ஒரே குற்றத்தை இருவர் செய்திருக்கும் போது ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இன்னொருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறது என்றால் அது போன்ற பாராபட்சமான ஓர வஞ்சனைத் தீர்ப்புக்கு இஸ்லாத்தில் இடமில்லை!
தாய் செண்டிமென்ட் மட்டுமல்ல, எந்த செண்டிமென்டை வைத்தும் குற்றவாளிக்கு தண்டனையிலிருந்து சலுகை என்பது இல்லை, இருக்கவும் கூடாது. ''அச்சச்சோ குழந்தை தாயில்லாமல் போய்விடுமே?'' என்று நீங்களும் நானும் அனுதாபப் படலாம். ஆனால் தீர்ப்பளிக்கும் நீதிபதி அனுதாபப்பட்டால் நீதி சிதைந்து, எவருக்கும் தண்டனை வழங்க முடியாமல் போய்விடும். எந்த மனிதனுக்கும் உறவு என்பது இல்லாமலில்லை - எந்தவொரு மனிதனை நம்பியும் எதாவது ஒரு உறவு இருக்கத்தான் செய்யும்.
//பால்குடி மறந்த பின் தாய் தேவையில்லையா- என்ன குரூரமான நீதி இது// இந்தக் கேள்வியில் எள்ளளவும் நியாயமிருப்பதாகத் தோன்றவில்லை. முதல் மாதக் கருவாக இருக்கும்போதே, தண்டனை குற்றம் செய்தவருக்குத்தான், வயிற்றிலிருக்கும் கருவுக்குத் தண்டனை வழங்கக்கூடாது அதாவது வயிற்றில் வளரும் உயிருக்கு மரண தண்டனை வழங்குவது நேர்மை இல்லை என்றே தண்டனை காலம் தள்ளி வைக்கப்படுகிறது இதைப் போய் நீங்கள் குரூரம் என்கிறீர்களே!
கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவது நாகரீகமான செயல் இல்லை என்பவர்கள், விபச்சாரத்தை நாகரீகமான செயலாகக் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. நாலு சுவற்றுக்குள் நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனையும் நாகரீகமில்லை, மிருகங்களைப் போல் குற்றவாளிகளை - மனிதர்களைக் கம்பி வைத்தக் கூண்டு அறைக்குள் அடைத்து வைப்பதும் நாகரீகமில்லையே, ஆனாலும் இதையெல்லாம் குற்றங்களுக்கான தண்டனையாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பகளென நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? கல்லெறி தண்டனை இஸ்லாம் வழங்கிய தீர்ப்பு அதைத்தான் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் நிறைவேற்றுகிறார்கள்.
இங்கே கல்லெறி தண்டனை வழங்குவது மட்டும்தான் அரசு நீதிபதியின் தீர்ப்பாக இருக்கிறது. தண்டனையை நிறைவேற்றுவது, பொது மக்கள் முன்னிலையில் பொது மக்களே தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இதில் நல்ல படிப்பினை இருக்கிறது என்பதையும் மறுமொழியில் கருத்து வைத்த சகோதரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
//ஆனால் ஆண்கள் மட்டும் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.கணவன் மனைவியிடம் அனுமதி பெறாமலும் திருமணம் செய்து கொள்ளலாம். இதுதானே இஸ்லாத்தின் 'நீதி'.//- tamilreber
ஆண்களுக்கு மட்டும் நான்கு பெண்களை மணமுடிக்க அனுமதி வழங்கிய இஸ்லாம், பெண்களுக்கு ஒரே நேரத்தில் இரு ஆண்களை கணவர்களாகப் பெற அனுமதிக்கவில்லையே ஏன்? இது இஸ்லாத்தில் அநீதியாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். இது பற்றி நேரம் கிடைக்கும் போது தனிப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்,
அபூ முஹை
அபூ முஹை said...
சுல்தான், சிராஜுதீன், ஸயீத் உங்கள் வருகைக்கு நன்றிகள்! நல்லக் கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள்.
குற்றவாளிகளை வலைவீசித் தேடி, விரட்டிப் பிடித்து, இரும்புக் கரம் கொண்டு அடக்கி, இரும்புக் கோட்டைக்குள் அடைத்து வைத்து தப்பிக்க வழியில்லாமல் பலத்தப் பாதுகாப்புப் போடுவது எங்கே?
தண்டனை பெறுவதற்காக வலிய வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு பின் குழந்தை பிறந்து பால்குடி மறக்கும் காலம்வரை சுதந்திரமாக நடமாடி, தனக்கு மரண தண்டனைதான் நிறைவேற்றப்படும் என்று உறுதியாகத் தெரிந்திருந்தும், தப்பிக்க எவ்வளவோ வழிகளும், அவகாசங்களும் இருந்தும் கொள்கைய விட உயிர் பெரிதல்ல என அந்த நபித் தோழியர் உறுதியாக இருந்து மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார் என்பது எங்கே?
இந்தக் கருத்தில் உங்கள் மூவரின் சிந்தனையும் ஒரே கோணத்தில் இருந்தது போல் என் சிந்தனையிலும் இதேக் கருத்து தோன்றியது. இந்தத் தியாகங்களின் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய மூன்று தலைமுறைகளில் முதல் தலைமுறையினராக இவர்கள் இருக்கிறார்கள் என்பது கவனித்தக்கது.
//குற்றம் செய்தவர் தேடிவந்து தண்டனை பெறும் சமுதாயத்தை உருவாக்கிய இறைவன் மிகப் பெரியவன்.//- ஸயீத்
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அன்புடன்,
அபூ முஹை
Sirajudeen said...
\\கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவது நாகரீகமான செயல் இல்லை என்பவர்கள், விபச்சாரத்தை நாகரீகமான செயலாகக் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. நாலு சுவற்றுக்குள் நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனையும் நாகரீகமில்லை, மிருகங்களைப் போல் குற்றவாளிகளை - மனிதர்களைக் கம்பி வைத்தக் கூண்டு அறைக்குள் அடைத்து வைப்பதும் நாகரீகமில்லையே, ஆனாலும் இதையெல்லாம் குற்றங்களுக்கான தண்டனையாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பகளென நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? கல்லெறி தண்டனை இஸ்லாம் வழங்கிய தீர்ப்பு அதைத்தான் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் நிறைவேற்றுகிறார்கள்.//
சுருக்கமான,அருமையான விளக்கம் சகோதரர் அபுமுஹை அவர்களே. உங்கள் பணிக்கு அல்லாஹ் மகத்தான கூலி வழங்குவானாக. இந்த சத்திய மார்க்கத்தில் பிறப்பிலே நம்மை எல்லாம் எவ்வித முயற்சியும் இன்றி இணைத்த உயர்ந்தோன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இதை சகோதரர் tamilreber விளங்கட்டும். அவருடைய நேர்வழிக்காக துஆ செய்வோம்.
அபூ முஹை said...
fztd; ,y;yhky; vthplNkh Foe;ijia ngw;w ngz;Zf;F Kfk;kJ mth;fs; mspj;j jz;lid rhpjhd;. Mdhy; me;j Foe;ijf;F fhuzkhf ,Ue;j MZf;F jz;lid ,y;iyah? ,jpy; vd;d rkePjp ,Uf;fpwJ. xUth; nra;j jtW fhuzkhfth Foe;ij gpwe;jJ? ,e;j Fw;wj;jpy; rk;ge;jg;gl;bUg;gJ ,Uth;. Mdhy; xUtUf;F kl;Lk; jz;lid. ,J ve;j tpjj;jpy; rhp vd;gij tpsf;f KbAkh? ,Jjhd; ePjpah?
கணவன் இல்லாமல் எவரிடமோ குழந்தையை பெற்ற பெண்ணுக்கு முகம்மது அவர்கள் அளித்த தண்டனை சரிதான். ஆனால் அந்த குழந்தைக்கு காரணமாக இருந்த ஆணுக்கு தண்டனை இல்லையா? இதில் என்ன சமநீதி இருக்கிறது. ஒருவர் செய்த தவறு காரணமாகவா குழந்தை பிறந்தது? இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பது இருவர். ஆனால் ஒருவருக்கு மட்டும் தண்டனை. இது எந்த விதத்தில் சரி என்பதை விளக்க முடியுமா? இதுதான் நீதியா?
Posted by suniloliver | Thu Jan 11, 07:55:57 AM
அபூ முஹை said...
suniloliver உங்கள் வருகைக்கு நன்றி!
இந்தப் பதிவில் வைக்க வேண்டிய மறுமொழியை, கருத்துக்கு சம்பந்தமில்லாத வேறு பதிவில் சொல்லியுள்ளீர்கள். உங்கள் கேள்வியும், அதற்கான விளக்கமும் இங்கே...
//கணவன் இல்லாமல் எவரிடமோ குழந்தையை பெற்ற பெண்ணுக்கு முகம்மது அவர்கள் அளித்த தண்டனை சரிதான். ஆனால் அந்த குழந்தைக்கு காரணமாக இருந்த ஆணுக்கு தண்டனை இல்லையா? இதில் என்ன சமநீதி இருக்கிறது. ஒருவர் செய்த தவறு காரணமாகவா குழந்தை பிறந்தது? இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பது இருவர். ஆனால் ஒருவருக்கு மட்டும் தண்டனை. இது எந்த விதத்தில் சரி என்பதை விளக்க முடியுமா? இதுதான் நீதியா?//
மாயிஸ் பின் மாலிக் (ரலி) என்பவர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் விபச்சாரம் செய்து விட்டதாக வாக்கு மூலம் தருகிறார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறார்கள் மீண்டும் வந்து முன்பு போலவே விபச்சாரம் செய்து விட்டதாக வாக்கு மூலம் தருகிறார். அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறுக் கட்டளையிடப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
இனி...
ஒரு பெண்மணி வந்து 'அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ''உனக்குக் கெடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவாயாக'' என்று கூறினார்கள்.
அதற்கு அப்பெண், 'மாயிஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்று கருதுகிறேன்' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள். ''என்ன அது?'' என்று கேட்டார்கள். அப்பெண், 'நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள் என்றார்.
நபி (ஸல்) அவர்கள் (அது) ''நீயா?'' என்று கேட்டார்கள். அப்பெண் 'ஆம்' என்றார். (நபிமொழியின் சுருக்கம், முஸ்லிம்)
விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவருமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஆண் தண்டனைப் பெற்ற பின்பே, மாயிஸ் பின் மாலிக் (ரலி) அவரிடம் தாகாத உறவு கொண்டு கர்ப்பமுற்ற பெண்மணி வந்து, நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள் என்று ஒப்புக் கொண்டு அவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இங்கே விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் சம நீதி. ஆனால் இதை இருவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது இருவரும் விபச்சாரம் செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இருவரையும் தண்டிக்க முடியும்.
இந்தச் சம்பவத்தில், மாயிஸ் பின் மாலிக் (ரலி) வந்து தாம் விபச்சாரம் செய்ததாக ஒப்புக் கொள்கிறார். அவர் மட்டுமே தண்டிக்கப்படுகிறார். விசாரணை என்ற பெயரில் அவர் விபச்சாரம் செய்த பெண் யார்? என்று அவரிடம் கேட்கப்படவுமில்லை, அப்படிக் கேட்டு அப்பெண் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அன்புடன்,
அபூ முஹை
நாடோடி said...
அபூ,
எந்த மதமானாலும் காலத்துக்கு ஏற்றபடி புரிந்து கொள்ளுதல் அவசியம். இஸ்லாமானலும் சரி, கிருத்துவமானலும் சரி இல்லை இந்துவானாலும் சரி ... ஆயிரக்கணக்கான் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டவை, இக்காலத்துக்கும் சரியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் தவறு.
நபிகளோ, கிறித்துவோ சொன்னதில் (முடிந்தவரை) ஏற்கக் கூடியதை மட்டும் ஏற்றுக் கொண்டு வாழ்வது நன்று.
மன்னிப்பது தெய்வம். தண்டிப்பது மிருகம். இடைப்பட்டவன்..மனிதன்
அபூ முஹை said...
நாடோடி, உங்கள் வருகைக்கு நன்றி!
//மன்னிப்பது தெய்வம். தண்டிப்பது மிருகம். இடைப்பட்டவன்..மனிதன்//
அப்படியானால், எந்தக் குற்றத்திற்காகவும் மனிதன் தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?
அன்புடன்,
அபூ முஹை
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
அன்புச் சகோதரர் razin rahman அவர்களுக்கு
http://www.islamkalvi.com/portal/?author=23&paged=6
விமர்சனம் - விளக்கம் வலைப்பதிவைப் பார்வையிட மேல்கண்ட சுட்டியிலும் அல்லது இஸ்லாம் கல்வி > மதங்கள் ஆய்வு வழியாகவும் முயன்று பாருங்கள்!
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
| asalamu alaikum hai brother ,i hav one doubt,thats.. how to send my question in to tamilmuslimgroup.blogspot.com,please sebd that email address. |
அன்புச் சகோதரர் cool boy அவர்களுக்கு, உங்கள் சந்தேகம் மற்றும் கேள்விகளை இந்தக் குழுமத்திலும் பதிவு செய்யலாம்!
asalamu alaikum hai brother ,i hav one doubt,thats.. how to send my question in to tamilmuslimgroup.blogspot.com,please sebd that email address.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்'' (அல்குர்ஆன் 5:44)
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்'' (அல்குர்ஆன் 5:45)
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள்'' (அல்குர்ஆன் 5:47)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆனமீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் இரு வகையானத் தலைமைத்துவத்திலும் ஒப்பற்றத் தலைவராகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் தோன்றிய முஸ்லிம் ஆட்சித் தலைவர்கள் தீர்ப்புகள் தொடர்பான விஷயத்தில் மார்க்க அறிஞர்களின் உதவியை நாடியுள்ளனர் என வரலாற்றில் வாசிக்க முடிகிறது.
ஆனால், நபி (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை ஆன்மீகம், ஆட்சி இரு தலைமைகளுக்கும் அவர்களே பொறுப்பேற்றிருந்ததால் இரு தலைமைகளுக்குமான வழிகாட்டல் மற்றும் தீர்ப்புகள் வழங்கும் உரிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பு தவறாகுமெனில் (நவூதுபில்லாஹ்)அவற்றைத் திருத்தும் வகையில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
52:48. எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர். மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக.
அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளராகிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ்வின் புனித சட்டங்கள் சீர்குலைக்கப்படும்போது, அல்லாஹ்வின் கட்டளையுடன் சீர்குலைப்பவர்களைத் தண்டித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் இருந்தது.
(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர், என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்! அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று) பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாக ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி, ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி கல்லெறி தண்டனை வழங்கப்படவேண்டும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3489, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ,)
நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களது முகம் (கருத்து) நிறம் மாறிவிடும். ஒரு நாள் அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பட அவர்கள் இந்நிலையை சந்தித்தார்கள்.
பின்னர் அவர்களை விட்டு அந்நிலை விலகியதும், (விபச்சாரத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். (விபச்சாரம் செய்த) பெண்கள் தொடர்பாக அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமான பெண் மணமான ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால். (அதற்குத் தனிச் சட்டமாகும்) மணமாகாத பெண் மணமாகாத ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச் சட்டமாகும்) மணமானவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் கல்லெறி தண்டனையும் வழங்கப்படவேண்டும். மணமாகாதவர்களுக்கு நூறு சாட்டையடிகள் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தண்டனையாக வழங்கப்படவேண்டும். என்று கூறினார்கள். அறிவிப்பவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) (நூல் - முஸ்லிம் 3490)
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை. அவை: 1. திருமணமானவன் விபச்சாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்ட (தேச துரோகமும் மார்க்க விரோதமும் செய்த)வன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல்கள் - புகாரி 6878, முஸ்லிம் 3463. 3464, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ)
2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்தபோது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் வேதம் என அல்லாஹ் திருக்குர்ஆனைக் குறிப்பிடுகிறான். இது குறித்து மேலும் சில வசனங்களை குர்ஆனில் காணலாம்.
''உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண்'' எனப் பழிவாங்கும் சட்டம் (5:45) முந்தைய தவ்ராத் வேதத்தில் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அவற்றையே இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குற்றவியல் தண்டனையின் தீர்ப்பாக வழங்கினார்கள். அதுபோல் விபச்சாரக் குற்றத்திற்கான கல்லெறி தண்டனையும் தவ்ராத்தில் இருந்தன. வேதக்காரர்களால் அவை மறைக்கப்பட்டிருந்தன:
(விபச்சாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து, ''விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் ''ஆம்'' என்று (பொய்) சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து ''மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். விபச்சாரம் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் ''இல்லை, நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால் நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கிறோம். எனினும் எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால் அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம். (அதேக் குற்றத்திற்காக) சாமானிய மக்களைப் பிடித்தால் அவர்கள் மீது தண்டனையை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றும் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்'' என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''இறைவா! இவர்கள் உனது சட்டமொன்றைச் சாகடித்து விட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்'' என்று கூறிவிட்டு சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ''தூதரே! (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்... என்று தொடங்கும் வசனத்தை ''அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். என்று கூறுகின்றனர். (5:41) என்பதுவரை அல்லாஹ் அருளினான். அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி, கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள். என்று யூதர்கள் கூறினர்.
மேலும், அல்குர்ஆன் 5:44, 45, 47 ஆகிய வசனங்களையும் அல்லாஹ் அருளினான்.
இந்த (5:47வது) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை)
அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3505, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்)
இதே அறிவிப்பு சற்று மாற்றங்களுடன் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாக புகாரி நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பார்க்க: புகாரி 3635, 4556, 6819, 6841, 7543, முஸ்லிம் 3503, 3504)
விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை குறித்து இஸ்லாம் மார்க்கத்தின் ஆரம்ப நிலைப்பாடு அல்குர்ஆன் 4:15 வது வசனமாக இருந்தது.
4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள். அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
பின்னர், 24:2வது வசனத்தை அல்லாஹ் அருளச் செய்து விபச்சாரம் செய்துவிட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் நூறு கசையடிகள் வழங்கும்படி வழிகாட்டினான்.
24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
விபச்சாரம் செய்துவிட்ட மணமாகாத ஆண், பெண் இருவருக்கும் நூறு கசையடி வழங்குதல் நீடித்து, விபச்சாரம் செய்துவிட்ட மணமான ஆண், பெண் இருவருக்கும் கல்லெறி தண்டனை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பாக நீடிக்கிறது!
''அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்'' என்ற திருக்குர்ஆன் வழிகாட்டலில். விபச்சாரம் செய்துவிட்ட மணமாகாத, மணமான ஆண், பெண் இருவருக்கும் வழங்கும் கசையடியும், கல்லெறியும் தண்டனைகளின் தீர்ப்புகளை நம்பிக்கை கொண்ட - முஸ்லிம் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நிறைவேற்றினர் - நிறைவேற்றுகின்றனர்.
இது குறித்து இங்கு பேசுவது பொருத்தமில்லை என்றாலும், மானக்கேடான செயல்களை அனுமதிப்பதால் அதுவே ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் என சமூகக் கட்டுகோப்பிற்கு உறுதுணையாக இருக்கும் மாண்புகளைத் தகர்த்து, சீரழிவிற்கு வித்திட்டு சமுதாயத்தைப் சின்ன பின்னமாக்கி விடுகிறது.
விபச்சாரத்தை மானக் கேடான செயலென இஸ்லாம் (4:15. 17:32.) அறிவிப்பதோடு, விபச்சாரக் குற்றத்திற்கானத் தகுந்த தண்டனையையும் வழங்கியுள்ளது.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
BROTHER........MUSLIM...and NIZARUDEEN..., assalaamu alaikkum warahmathullah..................,
இந்த ஹதீஸ் இல் ஒருவர் விபச்சாரம் செய்தால் கொலை செய்யப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது...... குற்றவியல் சட்டங்கள் இறைவனின் தனி பாட்ட அதிகாரங்களில் உடையது.... அது அவன் மட்டுமே சொல்ல வேண்டும்..........எனவே , நீங்கள் ,
விபச்சாரம் செய்பவரை , ஆணோ , பெண்ணோ , மரண தண்டனை கொடுத்து கொலை செய்ய வேண்டும் என்ற நேரடி கட்டளையை குர் ஆன் இலிருந்து தாருங்கள்........
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
திருக்குர்ஆனில் الرَّجْمُ - அர்ரஜ்ம்
11:91 قَالُوا يَا شُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَاكَ فِينَا ضَعِيفًا ۖ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَاكَ ۖ وَمَا أَنتَ عَلَيْنَا بِعَزِيزٍ
11:91. (அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.
18:20 إِنَّهُمْ إِن يَظْهَرُوا عَلَيْكُمْ يَرْجُمُوكُمْ أَوْ يُعِيدُوكُمْ فِي مِلَّتِهِمْ وَلَن تُفْلِحُوا إِذًا أَبَدًا
18:20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்)
19:46 قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنْ آلِهَتِي يَا إِبْرَاهِيمُ ۖ لَئِن لَّمْ تَنتَهِ لَأَرْجُمَنَّكَ ۖ وَاهْجُرْنِي مَلِيًّا
19:46. (அதற்கு அவர்) “இப்றாஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக்க கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.
26:116 قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ
26:116. அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
36:18 قَالُوا إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ ۖ لَئِن لَّمْ تَنتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ
36:18. (அதற்கு அம்மக்கள்:) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்.”
44:20 وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ
44:20. அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச் சகோதரர் ibnu hassan அவர்களே!
பின்னர், //''ரஜ்ம் எனும் வார்த்தை எந்த இடத்தில் இறைவன் பயன்படுத்தியுள்ளான்''// என்று நீங்கள் கேட்டதற்காக, குர்ஆனிலிருந்து அறிந்தவற்றை பார்வைக்கு வைத்தோம். நீங்கள் எழுதியதை மீண்டும் படித்துப் பாருங்கள்.
இப்போது அப்படியே மாற்றி,
//"ரஜம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி , இறைவன் விபச்சாரம் செய்தவர்களுக்கு கல்லெறிந்து கொலை செய்யும் தண்டனையை குறிக்கும் வசனத்தை தாருங்கள்....// - ibnu hassan. எனக் கேட்டுள்ளீர்கள்.
இது குறித்து எமக்குத் தெரியாது! குழும சகோதரர்கள் பதில் தரக்கூடும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு
அல்லாஹ் இறக்கியதைக் கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மணமாகாதவர் செய்துவிட்ட விபச்சாரக் குற்றத்திற்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தார்கள் என்பதே எமது ஆழமான நம்பிக்கை! அதற்கான சான்றுகளாக அல்குர்ஆன் 5:44, 45, 47 ஆகிய வசனங்களை முன்வைத்து ஆக்கத்தைத் துவக்கியுள்ளோம்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...............
அன்பான சகோதரர் Roshan Rosheen அவர்களுக்கு,
திருமணம் ஆகாத பெண் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மொழிபெயர்கின்றீர்கள் என்பதை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
وَمَنْ لَمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا أَنْ يَنْكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِنْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِنْ فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ وَاللَّهُ أَعْلَمُ بِإِيمَانِكُمْ بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصَنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ وَلَا مُتَّخِذَاتِ أَخْدَانٍ فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ ذَلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنْكُمْ وَأَنْ تَصْبِرُوا خَيْرٌ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
4:25. உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
மேல்கண்ட, திருக்குர்ஆன் நான்காவது அத்தியாயத்தின் 25வது வசனத் தொடரில் இரு இடங்களில் ''முஹ்சனாத்'' என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளன! அதுபோல் திருக்குர்ஆன் 24:23, 24 ஆகிய இரு வசனங்களிலும் முஹ்சனாத் என்கிற பதம் இடம்பெறுகின்றன.
النور 24 23 إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
24:23. எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
النور 24 4 وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا وَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
மணமுடித்து கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள், திருமணம் முடிந்து கணவனை இழந்த விதவைப் பெண்கள். அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், மணமுடிக்காத கன்னிப் பெண்கள். ஆகியோரையும் மொத்தமாக சுட்டும் வாசகமாக முஹ்சனாத் என்ற பதம் குர்ஆனில் பல அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளன.
நபிமொழி
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - புகாரி 2766, முஸ்லிம் 145, நஸயீ, அபூதாவூத்)
حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي الْغَيْثِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَأَكْلُ الرِّبَا وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصِنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ
திருக்குர்ஆன் 24:23, 24 ஆகிய வசனங்களிலிருந்தும், மேல்கண்ட நபிமொழியிலிருந்தும் மணமுடித்த, முணமுடிக்காத அனைத்து ஒழுக்கமுள்ள - கற்புள்ள பெண்களின் மீது அவதூறு சுமத்தக்கூடாது என்று பொதுவாக விளங்க வேண்டும்.
மணமுடித்து கணவனுடன் வாழும் ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்லக்கூடாது என்று பொருள் கொண்டால், மணமுடிக்காத அல்லது மணமுடித்து கணவனை இழந்த ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சுமத்தலாம் என்பதை ஒப்புக்கொண்டாகும். அதுபோல் மணமாகாத கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறக்கூடாது என்று பொருள் கொண்டால், மணமுடித்த பெண்கள் மீது அவதூறு சொல்லலாம் என்பதை ஏற்றுக்கொண்டதாகும். ஆகவே குர்ஆன், சுன்னா இரண்டிலும் முஹ்சனாத் என்ற பதம் கற்பொழுக்கமுள்ள எல்லாப் பெண்களுக்கும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது என்பதையும் விளங்கலாம்.
இப்போது 4:25வது வசனத் தொடரினைப் பார்ப்போம்: இந்த வசனத்தில் முதலில் இடம்பெறும் ''முஹ்சனாத்'' என்ற வாசகத்தை ''சுதந்திமான பெண்கள்'' என்று மொழியாக்கம் செய்து, அதே வசனத்தில் இடம்பெறும் மற்றொரு முஹ்சனாத் என்ற வாசகத்துக்கு விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் என்று மொழியாக்கம் செய்வது போல், மணமாகாத - கணவனில்லாத சுதந்திரமான பெண்கள் எனவும் மொழிபெயர்க்கலாம். முரண்பாட்டைத் தவிர்க்க இவ்வாறு அர்த்தப்படுத்துவதே சரியாகும். 4:25வது வசனத்தின் மொழிபெயர்ப்பில் தடுமாற்றமுள்ளதை விளங்குவதற்காக குர்ஆன் 4:24 மற்றும் 5:5 ஆகிய இரு வசனங்களையும் பார்வைக்கு எடுத்துக் கொள்வோம்:
وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
5:5. இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.
4:24வது வசனத்தில் இடம்பெறும் ''முஹ்சனாது'' என்ற வாசகம் மணமுடித்த ''கணவனுள்ள பெண்கள்'' என்பதைக் குறிப்பிடுகிறது. 5:5வது வசனத்தில் இடம்பெறும் முஹ்சனாது என்ற வாசகம் மணமுடிக்காத, அல்லது மணமுடித்து கணவனை இழந்த ''கற்புடைய பெண்களை'' குறிப்படுகின்றது! மணமுடித்து கணவனுள்ள பெண்களைக் குறிப்பிடவும், முஹ்சனாத் என்ற சொல்லாளப்பட்டுள்ளது போல், மணமாகாத, மணமுடிக்கத்தக்க கணவனில்லாத கற்புடைய பெண்களையும் குறிப்பிடுவதற்கு குர்ஆனில் முஹ்சனாது என்ற சொல்லாளப்பட்டுள்ளது என்பதை மேல்கண்ட 4:24 மற்றும் 5:5 வசனங்களிலிருந்து விளங்கலாம்.
முரண்பாடற்றது!
முஹ்சனாத் என்ற வாசகம்: 4:24 வசனத்தில் மணமுடித்த - கணவனுள்ள பெண்களைக் குறிப்பிடுகின்றது.
4:25 வசனத்தின் முதல் முஹ்சனாத், மணமுடிக்கதக்க (அடிமைகளல்லாத) கன்னிப் பெண்கள், விதவை, மற்றும் விவாகரத்துப் பெற்ற சுதந்திரமான பெண்களைக் குறிப்பிடுகின்றது.
5:5 வசனத்தில் கன்னிப் பெண்கள் உள்பட விதவை மற்றும் விவாக விலக்குப் பெற்ற கற்பொழுக்கமுள்ள பெண்களைக் குறிப்பிடுன்றது.
24:23, 24 ஆகிய இரு வசனங்களும் கன்னிப் பெண்கள், விதவை, விவாக விலக்குப் பெற்ற பெண்கள் மற்றும் கணவணுள்ள பெண்கள் என கற்பொழுக்கமுள்ள எல்லாப் பெண்களையும் குறிப்பிடுகின்றது.
குர்ஆனில் இடம்பெறும் முஹ்சனாத் என்ற வாசகத்திற்கு பல அர்த்தமுள்ளதால் ஒரு வசனத்திற்கு அர்த்தப்படுத்தியதை அடுத்த வசனத்தில் பொருள் கொள்ள முடியாது!
முரண்பாடுகிறது என்பது வேறு. முரண்படுத்துவது என்பது வேறு! மரண தண்டனையில் பாதி என முரண்பாடாக விளங்குவதைவிட நூறில் பாதி ஐம்பது. என பிரிப்பதில் எவ்வித சிரமும் இருக்காது. குர்ஆன் 4:25 வசனத்தில் இடம்பெறும் இரு முஹ்சனாத்தில் இரண்டாவது முஹ்சனாத்திற்கு சுதந்தரமான பெண்கள் என்று அர்த்தப்படுத்துவதோடல்லாமல், ''மணமாகாத - கணவனில்லாத சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே திருமணமான அடிமைப் பெண்களுக்கு விதிக்கப்பெறும்'' என்று விளங்குவதே பொருத்தமாகும்.
விபச்சாரம் செய்துவிட்ட அடிமைப் பெண்களுக்கான கசையடிகள்!
"ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் அவளுக்கு. எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளை தண்டித்துவிட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளுடைய எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவாது விற்று விடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 2152, 2234, 6839 முஸ்லிம், 3507, 3509 திர்மீதி, அபூதாவூத், இப்னுமாஜா)
(ஒரு நாள்) அலி (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது ''மக்களே! உங்கள் அடிமைகள் மீதும் குற்றவியல் தண்டனையை நிறைவேற்றுங்கள். அவர்கள் திருமணமானவர்களாக இருக்கட்டும், திருமணமாகாதவர்களாக இருக்கட்டும். ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண் ஒருவர் விபச்சாரம் செய்துவிட்டார். அவருக்குச் சாட்டையடிகள் வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
ஆனால், அவருக்கு அப்போதுதான் மகப்பேறு இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்கு சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினால் (எங்கே) அவரை நான் கொன்று விடுவேனோ என அஞ்சினேன். (எனவே, தண்டனையை தள்ளி வைத்தேன்) இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது ''நீங்கள் செய்தது சரிதான்'' என்று அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அலி (ரலி) அவர்கள் (நூல்கள் - முஸ்லிம் 3511, திர்மிதீ, அபூதாவூத்)
''அவள் பிரசவ உதிரப் போக்கிலிருந்து தூய்மையாகி விட்டால் அவளுக்கு ஐம்பது கசையடிகள் வழங்குங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அஹ்மத் 1146 நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
எழுதியவற்றில் மாற்றுக் கருத்துகள் இருப்பின் தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்துகொள்க!
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பான சகோதரர் முஸ்லீம் அவர்களுக்கு,
கீழ்கண்ட வசனத்திற்கு நீங்கள் சொல்லும் ஹதீஸ்கள் முரண்படுவது போல் தெரிகிறதே விளக்கவும்.
وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِن مَّا مَلَكَتْ أَيْمَانُكُم مِّن فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ ۚ وَاللَّـهُ أَعْلَمُ بِإِيمَانِكُم ۚ بَعْضُكُم مِّن بَعْضٍ ۚ فَانكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصَنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ وَلَا مُتَّخِذَاتِ أَخْدَانٍ ۚ فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنكُمْ ۚ وَأَن تَصْبِرُوا خَيْرٌ لَّكُمْ ۗ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ
உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;). அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;. ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;. அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;. தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4:25
கசையடியில் பாதி கொடுக்க முடியும். ஒரு வருடத்திற்கு பதிலாக ஆறு மாதம் ஊர் விலக்கம் செய்யமுடியும். கல்லெறிந்து கொல்வதில் பாதி தண்டணை எப்படி செயல்படுத்துவது விளக்கவும்?
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
2010/11/3 muslim <tomu...@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்'' (அல்குர்ஆன் 5:44)
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்'' (அல்குர்ஆன் 5:45)
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள்'' (அல்குர்ஆன் 5:47)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆனமீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் இரு வகையானத் தலைமைத்துவத்திலும் ஒப்பற்றத் தலைவராகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் தோன்றிய முஸ்லிம் ஆட்சித் தலைவர்கள் தீர்ப்புகள் தொடர்பான விஷயத்தில் மார்க்க அறிஞர்களின் உதவியை நாடியுள்ளனர் என வரலாற்றில் வாசிக்க முடிகிறது.
ஆனால், நபி (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை ஆன்மீகம், ஆட்சி இரு தலைமைகளுக்கும் அவர்களே பொறுப்பேற்றிருந்ததால் இரு தலைமைகளுக்குமான வழிகாட்டல் மற்றும் தீர்ப்புகள் வழங்கும் உரிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பு தவறாகுமெனில் (நவூதுபில்லாஹ்)அவற்றைத் திருத்தும் வகையில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
52:48. எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர். மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக.
அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளராகிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ்வின் புனித சட்டங்கள் சீர்குலைக்கப்படும்போது, அல்லாஹ்வின் கட்டளையுடன் சீர்குலைப்பவர்களைத் தண்டித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் இருந்தது.
(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர், என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்! அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று) பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாக ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி, ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி கல்லெறி தண்டனை வழங்கப்படவேண்டும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3489, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ,)
நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களது முகம் (கருத்து) நிறம் மாறிவிடும். ஒரு நாள் அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பட அவர்கள் இந்நிலையை சந்தித்தார்கள்.
பின்னர் அவர்களை விட்டு அந்நிலை விலகியதும், (விபச்சாரத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். (விபச்சாரம் செய்த) பெண்கள் தொடர்பாக அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமான பெண் மணமான ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால். (அதற்குத் தனிச் சட்டமாகும்) மணமாகாத பெண் மணமாகாத ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச் சட்டமாகும்) மணமானவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் கல்லெறி தண்டனையும் வழங்கப்படவேண்டும். மணமாகாதவர்களுக்கு நூறு சாட்டையடிகள் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தண்டனையாக வழங்கப்படவேண்டும். என்று கூறினார்கள். அறிவிப்பவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) (நூல் - முஸ்லிம் 3490)
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை. அவை: 1. திருமணமானவன் விபச்சாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்ட (தேச துரோகமும் மார்க்க விரோதமும் செய்த)வன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல்கள் - புகாரி 6878, முஸ்லிம் 3463. 3464, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ)
2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்தபோது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் வேதம் என அல்லாஹ் திருக்குர்ஆனைக் குறிப்பிடுகிறான். இது குறித்து மேலும் சில வசனங்களை குர்ஆனில் காணலாம்.
''உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண்'' எனப் பழிவாங்கும் சட்டம் (5:45) முந்தைய தவ்ராத் வேதத்தில் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அவற்றையே இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குற்றவியல் தண்டனையின் தீர்ப்பாக வழங்கினார்கள். அதுபோல் விபச்சாரக் குற்றத்திற்கான கல்லெறி தண்டனையும் தவ்ராத்தில் இருந்தன. வேதக்காரர்களால் அவை மறைக்கப்பட்டிருந்தன:
(விபச்சாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து, ''விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் ''ஆம்'' என்று (பொய்) சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து ''மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். விபச்சாரம் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் ''இல்லை, நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால் நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கிறோம். எனினும் எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால் அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம். (அதேக் குற்றத்திற்காக) சாமானிய மக்களைப் பிடித்தால் அவர்கள் மீது தண்டனையை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றும் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்'' என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''இறைவா! இவர்கள் உனது சட்டமொன்றைச் சாகடித்து விட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்'' என்று கூறிவிட்டு சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ''தூதரே! (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்... என்று தொடங்கும் வசனத்தை ''அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். என்று கூறுகின்றனர். (5:41) என்பதுவரை அல்லாஹ் அருளினான். அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி, கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள். என்று யூதர்கள் கூறினர்.
மேலும், அல்குர்ஆன் 5:44, 45, 47 ஆகிய வசனங்களையும் அல்லாஹ் அருளினான்.
இந்த (5:47வது) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை)
அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3505, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்)
இதே அறிவிப்பு சற்று மாற்றங்களுடன் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாக புகாரி நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பார்க்க: புகாரி 3635, 4556, 6819, 6841, 7543, முஸ்லிம் 3503, 3504)
விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை குறித்து இஸ்லாம் மார்க்கத்தின் ஆரம்ப நிலைப்பாடு அல்குர்ஆன் 4:15 வது வசனமாக இருந்தது.
4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள். அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
பின்னர், 24:2வது வசனத்தை அல்லாஹ் அருளச் செய்து விபச்சாரம் செய்துவிட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் நூறு கசையடிகள் வழங்கும்படி வழிகாட்டினான்.
24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
விபச்சாரம் செய்துவிட்ட மணமாகாத ஆண், பெண் இருவருக்கும் நூறு கசையடி வழங்குதல் நீடித்து, விபச்சாரம் செய்துவிட்ட மணமான ஆண், பெண் இருவருக்கும் கல்லெறி தண்டனை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பாக நீடிக்கிறது!
''அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்'' என்ற திருக்குர்ஆன் வழிகாட்டலில். விபச்சாரம் செய்துவிட்ட மணமாகாத, மணமான ஆண், பெண் இருவருக்கும் வழங்கும் கசையடியும், கல்லெறியும் தண்டனைகளின் தீர்ப்புகளை நம்பிக்கை கொண்ட - முஸ்லிம் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நிறைவேற்றினர் - நிறைவேற்றுகின்றனர்.
இது குறித்து இங்கு பேசுவது பொருத்தமில்லை என்றாலும், மானக்கேடான செயல்களை அனுமதிப்பதால் அதுவே ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் என சமூகக் கட்டுகோப்பிற்கு உறுதுணையாக இருக்கும் மாண்புகளைத் தகர்த்து, சீரழிவிற்கு வித்திட்டு சமுதாயத்தைப் சின்ன பின்னமாக்கி விடுகிறது.
விபச்சாரத்தை மானக் கேடான செயலென இஸ்லாம் (4:15. 17:32.) அறிவிப்பதோடு, விபச்சாரக் குற்றத்திற்கானத் தகுந்த தண்டனையையும் வழங்கியுள்ளது.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
2010/10/30 <ibnuh...@mail.com>
BROTHER........MUSLIM...and NIZARUDEEN..., assalaamu alaikkum warahmathullah..................,
இந்த ஹதீஸ் இல் ஒருவர் விபச்சாரம் செய்தால் கொலை செய்யப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது...... குற்றவியல் சட்டங்கள் இறைவனின் தனி பாட்ட அதிகாரங்களில் உடையது.... அது அவன் மட்டுமே சொல்ல வேண்டும்..........எனவே , நீங்கள் ,
விபச்சாரம் செய்பவரை , ஆணோ , பெண்ணோ , மரண தண்டனை கொடுத்து கொலை செய்ய வேண்டும் என்ற நேரடி கட்டளையை குர் ஆன் இலிருந்து தாருங்கள்........
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
Thanks & best regardsAeroTravels160/101, North Main Road ,Eruvadi - 627103Tel No.04637 241200 / 329777Fax No.04637 242222