சுயதொழில் 2013
''வாய்ப்புகள் நிறையவே கொட்டிக் கிடக்கின்றன”. 'ஆனால் எப்படி ஆரம்பிப்பது, யாரை அணுகுவது,முக்கியமாக முதலீட்டுக்கு என்ன செய்வது?’ என்று ஒரு கூடை கேள்விகளை சுமந்து கொண்டிருக்கும்இன்றைய இளைஞர்களுக்கு சொந்தமாக சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வழி வகை செய்யும் நோக்கில் நமது அறக்கட்டளை, “எம் எஸ் எம் இ – டி ஐ'', குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வளர்ச்சி நிலையத்துடன் (MSME-DI - Micro, Small and Medium Enterprises - Development Institute) இணைந்து “சுயதொழில் 2013” (சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டி நிகழ்ச்சி) என்கிற கருத்தரங்கம் / கண்காட்சியை மார்ச் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில்சென்னை கிண்டியில் உள்ள MSME-DI நிலைய வளாகத்தில் நடத்த உள்ளது. இந்த கண்காட்சியினை மேதகு தழிழக ஆளுனர் அவர்கள் துவக்கி வைத்து கையேட்டினை (Directory) வெளியிட இருக்கிறார்கள்.
பட்டதாரிகள், தொழிற்கல்வி கற்போர், புதிதாக சுயதொழில் தொடங்குவோர், கிராமப்புற இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள், பகுதி நேர தொழில் செய்ய விரும்புவோர், ஆகியோர் இக்கண்காட்சியில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்!
சொந்தமாக தொழில் துவங்கி வெற்றி பெறவேண்டும் என்ற கனவை நனவாக்கும் முயற்சி தான் இந்த சுயதொழில்2013 என்ற நிகழ்ச்சியின் நோக்கம்.
இந்நிகழ்ச்சிக்கு கலந்துக் கொள்ள முன்பதிவு அவசியம், முன்பதிவு செய்ய இறுதி நாள் பிப்ரவரி 20 (புதன் கிழமை) ஆகும். தாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பலன் அடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து நுழைவுக்கட்டணம் ரூ.50–ஐ அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இது பற்றி தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.