அன்பு மகனே !
தாங்களும் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
இந்த எளியவள் கடைசியாக அனுப்பிய கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று நாலைந்து நாட்களுக்கு முன் காலை 8.15 மணி அளவில் freetamilebook லிருந்து ஒரு email வந்தது.
அதற்கு அன்று மதியம் நன்றிகள் சொல்லி அவர்களுக்கும்.. என் அன்பு மகன் உங்களுக்கும் அனுப்பிய அந்த மின்னஞ்சல்கள் not delivered என்றே நேற்று வரை email வந்து கொண்டு இருக்கிறது.
இதுவும் ஏனென்று புரியவில்லை. தயவுசெய்து இதையும் follow up பண்ணவும்.
தொந்தரவு செய்வதற்குத் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா !
freetamilebook குழுவில் இருக்கும் அனைவருக்கும் இந்த 73 வயது அம்மாவின் நெஞ்சம் நிறைந்த பிரார்த்தனைகளுடன் நல்வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் அன்பு மகனே !
நலமே விழைவு : நலமே விளைவு !