
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrat...@gmail.com
படைப்பாளி தான் காணவிரும்பும் சமுதாயத்தைத் தனது கற்பனைத்திறனைப் பயன்படுத்தி வடித்துக்காட்டுவதுதான் சிறுகதை. எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் சமூகச் சீர்கேடுகளை வெளிப்படையாக எதிர்க்க இயலாத காலக்கட்டத்தில் அவற்றைத் தனது எழுத்தில் வடித்துக்காட்டி சமூகத்தினரை விழிப்புணர்வு அடையச்செய்கிறான். இத்தகைய நோக்கில் பல சிறுகதைகள் எழுதப்படினும் அடிப்படையாகவே சிறுகதைகள் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற மக்களின் வாழ்க்கையினைப் பிரதிபலிப்பதாகக் கருதி கருத்துவேறுபாடு நிறைந்து வாழ்கின்றவர்களும் உண்டு. சிறுகதைகள் இயல்பாகவே ஒரு சிறுநிகழ்வின் தாக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படுபவை.
உலகைத் திருத்தவல்ல எழுத்துகள் இளைய சமுதாயத்தைச் சென்றடையவேண்டும் என்பதனைக் கருத்தில்கொண்டு இச்சிறுகதைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. இச்சிறுகதைத் தொகுப்பில் எழுதப்பட்ட சில சிறுகதைகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டவை.
இரா.பாரதி – rambhar...@gmail.com
பதிவிறக்க*
http://freetamilebooks.com/ebooks/thundugol-short-stories/