வணக்கம்,
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்) இணைந்து
பன்னாட்டளவில் தமிழுக்காக மட்டும்
2021 மார்ச் 5,6,7 ஆகிய நாட்களில் இணையம் வழியாக நிரலாக்கப் போட்டியினை நடத்திவருகின்றனர்.
'நிரல்களம்21' என்ற பெயரில் நடைபெறும் இந்த நிரலாக்கப் போட்டியில் தமிழ்க் கலை, இலக்கியம், தமிழ் விக்கித்திட்டம் தொடர்பான தலைப்புகளில் மாணவர்கள் தீர்வுகளை முன்வைத்து வருகின்றனர்.
மெய்நிகர் உதவியாளர், மெய்நிகர் உண்மை, எந்திரவழிக் கற்றல் போன்ற தொழில்நுட்பம் முதல் தொல்லியல், இசைக்கலை சார்ந்த ஆவணமாக்கல் வரை அசத்தலான தீர்வுகளுடன் படைப்புகளைக் கொண்டுவந்துள்ளனர்.
சுமார் நூறு அணிகள் பதிவு செய்திருந்த நிலையில் முதல் மற்றும் இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் பதினைந்து அணிகளுடன் மார்ச்சு 7 ஆம் நாள் பிரம்மாண்ட இறுதிச் சுற்று நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் நேரலையில் கலந்து கொண்டு போட்டியினைக் காணலாம் மற்றும் கருத்துக்களிட்டு மாணவர்களையும் ஊக்கப்படுத்தலாம்.
இறுதிச் சுற்று
இரண்டாம் சுற்றின் ஒளிப்பதிவு: