Responses from a person for the two videos:
Thol:
எல்லாம் இறைவன் செயல்! எல்லோருள்ளும் இருந்து இயக்குபவன் (ஆட்டி வைப்பன்) ஒரே இறைவனே!
பகவத் கீதையில் பல இடங்களில் கிருஷ்ணர் இதைத் தெளிவாக்கியுள்ளார்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
- திருவாசகம்:19 5.திருச்சதகம் 2.அறிவுறுத்தல்
நம் எல்லோரையும் எனது, என்னுடையது (மொழி, இனம், தேசம், தத்துவம், கொள்கை, மதம், பண்பாடு, கலை, குடும்பம், பிள்ளைகள், பட்டம், பதவி, பொருள்கள், புகழ்...) என்று கூத்தாட வைப்பவன் ஒருவனே, அவனே பரமாத்மா (பரம்பொருள்)!
சமயம் கோடிகள் எல்லாம்
தம் தெய்வம் தம் தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது?
- தாயுமானவர் - திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்
இதையே பகவத் கீதையில் கண்ணன், 'எல்லாம் குணங்களால் இயங்குகின்றன. ஆனால் மனிதர்கள் தாங்கள் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள் 3-27' என்று சொல்லியுள்ளார். 'எல்லாம் குணங்களால் இயங்குகின்றன' என்பது தெளிவானால் 'மனிதர்கள் தாங்கள் செய்வதாக நினைத்துக் கொளவதும்' அவ்வாறு என்பது புலப்படும்.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!
நம் வேறுபாடுகள் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இயங்கினாலும் அதுவும் அவன் செயலே!
நம் வேறுபாடுகள் விருப்பு வெறுப்பு இல்லாத (பற்றற்ற) அடிப்படையில் இயங்கினாலும் அதுவும் அவன் அருளே!
அத்தகைய விருப்பு வெறுப்பு அற்ற நிலையே விடுதலை, மோட்சம் (கடமையைச் செய், பலனில் பற்று வைக்காதே - பகவத் கீதை). அதற்காக இறைவனை வேண்டி இறைஞ்சும் பணிவும் சரணாகதியும் அவன் அருளாலேயே அமையும்!
பெரியார் என்ற 'சாத்தானை' உருவாக்கி ஆட வைத்ததும் அதைப் போற்றியும் தூற்றியும் நம்மை எல்லாம் ஆட வைப்பதும் ஒரே இறை அருளே!
"கண்ணில் காண்பதுன் காட்சி கையால் தொழில்
பண்ணல் பூசை வாய்ச் சொல் மந்திரம்
மண்ணொடு ஐந்தும் வழங்குயிர் யாவுமே
அண்ணலே நின் அருள் வடிவாகுமே"
- தாயுமானவர்
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா அந்த ஒருவன்
நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா? ('ஒன்னாயிருக்கக் கத்துக்கனும்' திரைப்படப் பாடல்)