ஏசு ஒரு வரலாற்று மனிதரா அல்லது புராண நாயகரா?
கீழுள்ள கட்டுரையில் ஏசு என்று ஒருவர் இருந்தார் வாழ்ந்தார் என்பதற்கு எந்த வரலாற்றுச் சான்றும் கிடைக்கவில்லை என்பது ஆராயப்பட்டுள்ளது.
ஓஷோ ரஜினிஷ் புத்தர் வாழ்வில் நடந்த கதை ஒன்று சொல்வார். அக்கதைக் கேட்டவர்கள் அவரிடம் இது போல் புத்தரைப் பற்றிய கதை வேறு எந்த புத்தர் பற்றிய நூலிலும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றார்கள். அதற்கு அவர் அந்நூல்களில் உள்ள கதைகள் புத்தர் மறைந்த பல நூறு ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டவை. அது போல் இப்போது நான் இந்தக் கதையைச் சொல்கிறேன் என்றார்.
இதுதான் எல்லா மதக் கதைகளின் வரலாறாக இருக்கும்.
அந்தந்த காலத்துத் தேவைகளுக்கேற்ப 'வரலாற்று' நாயகர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இங்கிலாந்தில் வழங்கி வரும் ராபின் ஹூட் (Robin Hood) என்ற 'பணக்காரர்களிடமிருந்து பறித்து ஏழைகளுக்கு வழங்கிய நல்ல வழிப்பறிக்காரன்' கதையும் இப்படித்தான்.
ராமர், கிருஷ்ணர், அனுமான்களும் இப்படித் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டவர்களே. அல்லது அப்பெயரிலோ அவர் போன்றோ வாழ்ந்த ஒருவர் மீது புனையப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கதைகளாக இருக்கலாம்.
| | Why the son of God story is built on mythology, not history | Aeon EssaysHow could a cult leader draw crowds, inspire devotion and die by crucifixion, yet leave no mark in contemporary ... |
|
|