அத்து மீறிய மைக்ரோசாப்ட் - அவதியை வெளிப்படுத்திய பேராசிரியர்

1 view
Skip to first unread message

Sri Ramadoss M

unread,
Jun 3, 2008, 2:58:30 PM6/3/08
to foss4...@googlegroups.com
ஆசிரியர்: தீபக் பாதக், பேராசிரியர், ஐஐடி, மும்பய்
.....
.....
.....

மைக்ரோசாப்டுக்கு எதிரான எமது எரிச்சலின் உச்சக்கட்டத்திற்கு காரணம் அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு, அதுவும் அதிகாரத்தின் உயர்மட்ட அளவில் இருப்போரிடம், இந்திய தேசிய நலனைப் பற்றி கூறியதே! இவர்களுக்கு தேசமென்றால் என்ன என்று தெரியுமா என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அரசாங்க விடயத்தில் தலையிடும் இவ்விடயத்தில் நான் ஏன் ஏன் இவ்வளவு கடுமையான நிலையை எடுக்கிறேன் என்பதை உணர்த்த எமது தேசத்து வரலாற்றின் சமீபத்திய (சற்றேறக்குறைய இருநூறு வருடங்களே) நிகழ்வுகளை தங்கள் முன் நிறுத்த விரும்புகிறேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி தமது விருப்பங்களை வலிந்து அமல் படுத்திடும் பொருட்டு தனிப் படையை வைத்திருந்தது. 1824 காலக் கட்டத்தில் கிட்டூர் சமஸ்தானத்தின் இறந்த மன்னரின் வாரிசால் அச்சமஸ்தானம் ஆளப்படுவது சரி வராது என அக்கம்பெனி தீர்மானித்தது. கம்பெனியின் அதற்குரிய பகுதியை லார்டு ஆம்ஹெர்ஸ்டு என்பவர் தலைமைத் தாங்கியதாக நினைவு.

அச் சமஸ்தானத்தின் இராணி அதனை மறுத்து கிளர்ந்தெழுந்தபொழுது போரிலே இவர்களால் கொல்லப்பட்டாள். இக்கம்பெனியின் சம்பளப் பணியாளர் ஒருவர் சிலப் பத்து ஆண்டுகள் கழித்து 1848 வாக்கில் இதையே பிற சமஸ்தானங்களுக்கும் செய்தான்.

லார்டு டல்ஹவுஸி எனும் இப்பிரபு இதனை டாக்டிரின் ஆப் லாப்ஸ் என்று கொள்கை வடிவம் கொடுக்கத் துணிந்து முறைப்படுத்தினான். டாக்டிரின் ஆப் லாப்ஸ் இத்தகைய சமஸ்தானங்கள் கம்பெனியுடன் சேர்க்கப்பட்டு கம்பெனியாலேயே ஆளப்படும் எனவும் அறிவித்தது.  இவ்வழியில் பல சமஸ்தானங்களை கம்பெனியானது கைப்பற்றியது. ஆயினும் 1856 வாக்கில் ஜான்ஸி எனும் சமஸ்தானம் பணிய மறுத்தது. அந்நாட்டு இராணியால் தலைமையேற்கப்பட்டு போரிட்ட படையை கம்பெனி வென்று இராணியையும் கொன்று போட்டது.

----
----
----

இருபத்தியோராம் நூற்றாண்டில் இயற்றப்படும் கடிதமொன்றிற்கு ஏனிந்த ஆசிரியர் பழைய வரலாற்றைப் புரட்டுகிறார் என ஒருவர் ஆச்சரியப்படவலாம். தங்களது விதியையும் தங்கள் தேசத்தின் விதியையும் தாங்களே தீர்மானிப்போம் என முழங்கத் துணிந்து தூக்கிலுடப்பட்டோரது சடலங்களின் கோரக் காட்சிகள் என் கண்முன்னே நிற்கின்றன. திப்பு சுல்தான், வீர பாண்டிய கட்ட பொம்மன், இராணி இலக்ஷ்மி பாய் போன்றோரை தண்டித்துக் கொல்லவும், தங்களை ஆதரித்திடும் பொருட்டு மீர் ஜாபர் போன்றோருக்கு அரசாங்கங்களை வழங்கிடும் பொருட்டும், கம்பெனியொன்றுக்கு இன்றைய தினம் இராணுவமொன்று இராது இருப்பது ஆறுதல் தருகிறது. தங்களை ஆதரிப்போருக்கு சன்மானம் அளிக்க உத்தரவாதம் தருவதும், தங்களை எதிர்ப்போரை அவர்களது நற்பெயருக்கு களங்கம் கற்பித்து தூற்றுவதும், முழுமையான அதிகாரம் படைத்த நாடொன்றின் மக்களையும் அதன் அமைப்புகளையும் அனைத்து மட்டங்களிலும் தமது அல்பத் தனமான நலன்களுக்காக பாரப்படுத்துவதும், முழு அதிகாரம் கொண்ட அரசுகளை அதன் சட்டரீதியான முறைகளையே புறந்தள்ளிவிட்டு தமது விருப்பங்களை ஏற்க வைக்க முயற்சி மேற்கொள்வதும், இருநூறாண்டுகளுக்கு முன்னர் நடந்தவைகளைப் போன்ற முயற்சிகளென்றே இத்தேசத்திலுள்ள பலராலும் கருதப்படும். எந்த ஒரு சமூகத்திலும் ஆசிரியர்களே இத்தகைய முயற்சிகளை இனங்கண்டு கொள்ளும் ஆன்டெனாக்களாக இருக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தங்கள் தேசத்தவர்களை எச்சரிக்கும் பொறுப்பு உள்ளது.

OOXML க்கு ISO வில் சாதகமான வாக்கு பெற வேண்டும் என்பதற்காக கமிட்டியின் பல அங்கத்தினர்களை அரசாங்கத்தின் கண்முன்னே களங்கப்படுத்தியதும்,  BIS ஆல் ஒரு முடிவு மேற்கொள்ளப்ட்ட பின்பும் அரசாங்கத்தை தொடர்ந்து பாரப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதும் தெளிவான அத்துமீறல்களாகும். முழுமையாக நான் விளங்கிக் கொள்கிற படி முழு அதிகாரம் படைத்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படும் அந்நிய அமைப்பொன்றின் அத்து மீறலாகும் இது. இத்தகைய முயற்சிகள் ஏனைய பிற நாடுகளில் எவ்வாறு அணுகப்பட்டு கையாளப்டுகின்றன என எமக்கு தெரியாது. ஆயினும் இந்தியா இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு சற்றே உணர்ச்சிப்பிழம்பாக வல்லது. அதிலும் குறிப்பாக நான் இன்னும் அதிகமாக உணர்ச்சி வசப்படக் கூடியவன்.

....
....
....

முழுவதும் ஆங்கிலத்தில்: http://deepakphatak.blogspot.com/2008/05/this-is.html

--
ஆமாச்சு


Reply all
Reply to author
Forward
0 new messages