நாம் என்ன செய்யலாம்.? - ( எழுச்சி வலைப்பூவுக்கான முதல் கட்டுரை..- சேர்க்கவேண்டியதை , நீக்கவேண்டியதை எடிட் செய்யலாம் )

92 views
Skip to first unread message

jmms

unread,
May 5, 2011, 11:17:39 PM5/5/11
to Ezhuchchi
 நாம் என்ன செய்யலாம்.?

இனிய இணைய நட்புகளுக்கு வணக்கம்..

மனிதனாக வாழ்பவர் அனைவருக்குமே தான் வாழ பிறரும் வாழணும் என்ற அடிப்படை எண்ணம் நிச்சயமாக இருக்கும்..

முதலில் தான் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை குறித்து பொருள் தேடுதலை ஆரம்பிக்கிறான்..

பொருள் தேடிவிட்டால் மட்டும் போதுமா?. நிம்மதி கிடைக்குமா?..இது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது..

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள், சூழல்கள் , அதற்கென தன்னை தயார்படுத்திக்கொள்கிறான்.

அதே போல் எந்த நாட்டுக்கு சென்றாலும் தன் வேறான தாய் நாட்டைபற்றி கவலை கொள்ளாமல் இல்லை..

தன்னை சுற்றியுள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக இருப்பதே நமக்கும் நல்லது என்ற ஒரு சுயநல எண்ணம் கூட இருக்கலாம்..

இருக்கட்டும்.. தவறில்லை.. அப்படியாவது என்னென்ன பிரச்னையில் தன் நாடு சிக்கித்தவிக்குது , எப்படியெல்லாம் சீர்படுத்தலாம் என எண்ண

ஆரம்பிக்கிறான்..தன்னால் முடிந்த பங்களிப்பை செய்ய துடிக்கிறான்..இத்தகைய எண்ணம் வராதவர்களை விரல் விட்டு எண்ணிடலாம்..

என்ன வித்யாசம் என்றால் ஒரு சிலருக்கு அவர்கள் வாழும் சூழலால் வெகு சீக்கிரம் சமூக ஆர்வம் வந்துவிடும். சிலருக்கு அனுபவத்தால் ..

பலருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்தி வந்ததும் நாமும் நம் சமூகத்துக்கு ஏதாகிலும் செய்யணும் , அதுவே நிறைவு என்ற போதில் வரலாம்..

ஆனால் வரும்..

எகிப்தில் மிகப்பெரிய புரட்சி சமீபத்தில் வந்தமைக்கு இணையம் ஒரு முக்கிய காரணி என்பது மகிழ்வான செய்தி..

ஆக நமக்கு கிடைத்துள்ள இந்த இணைய வசதி மூலம் நேர்மறையாக நாம் எப்படி நம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரலாம்.?..

ஏற்கனவே பல பதிவர்கள் சமூக பார்வையோடு மிக நல்ல பதிவுகளை , பல தகவல்கள் சேகரித்து நமக்கு தருகிறார்கள்தான்.

அவர்களுக்கு எம் பாராட்டுகள்..

இதே போல இன்னும் அதிகமான கட்டுரைகளௌம் கருத்துகள், விவாதங்கள் வருமானால் , அவை எல்லா மக்களையும் சென்றடையுமானால் நிச்சயம் நம்மால் , நாம் நினைக்கும் மாற்றம் கொண்டுவரமுடியும்..

சமூகத்தில் முக்கியமா பயமுறுத்தும் பிரச்னைகள் எவை எவை என பட்டியலிடுவோம்.. அவை தீர்ப்பதற்கான வழிமுறைகள் , வேர்களை களைவது எப்படி , என அலசுவோம்..

நன்றாக தெரியும் , அனைவருக்கும் இதில் செலவழிக்க நேரம் இருப்பதில்லை..

இணையத்துக்கு வருவதே மனம் லேசாக இருக்கத்தான்.. இதில் ஏன் இந்த வேலையெல்லாம் என நினைப்பவர்கள் உண்டு.. தவறேயில்லை.. அவசரமுமில்லை.. கட்டாயமுமில்லை.. நிதானமாக உங்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக இருந்துகொண்டு அலுத்து சலித்த பின் முடிந்தால் பங்கெடுத்தால் போதும்.. சமூக ஆரவ்ம் என்பது ஒருபோதும் கட்டாயப்படுத்தி வரவைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்..

சமூக பிரச்னைகளை குறித்து புரிதல் இருக்கணும்.. கோபம் இருக்கணும்.. அப்போதுமட்டுமே உறுதி வரும்.. ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை , பெண்ணடிமைத்தனம், குடி , ஊடகம் , அடிப்படை வசதி இல்லாமை , ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற  எதை குறித்தவது வருந்தியிருக்கணும்.., பாதிக்கப்பட்டிருக்கணும்..

அப்போது மட்டுமே எழுச்சியோடு மாற்றம் கொண்டு வர எண்ணவே முடியும்..

இங்கே இணைந்திருக்கும் நண்பர்கள் சிலர் , எல்லாவிதத்திலும் ஒத்த எண்ணமுடையவர்கள் அல்லர்.. பல்வேறு கருத்துகள் கொண்டவர்களே..

ஆனால் ஒரே ஒற்றுமை ஒரே கொள்கையாக சமூக மாற்றம் கொண்டு வர விரும்பும் எழுச்சியாளர்கள்..

நீங்களும் இதே எழுச்சியுடைவரென்றால் கை கொடுங்கள் இச்சமூக மாற்றத்துக்கு சிறு துளியாக..

எழுச்சியுடைவர் எவருக்கும் எவ்வித லாபமுமில்லை இங்கே.. சொல்லப்போனால் நஷ்டம் மட்டுமே.. ஆம். நேர விரயம், மன உளைச்சல் , தகவல் சேகரிக்கும் உழைப்பு , போன்றவை.. ஆனால் நிச்சயம் மன நிம்மதி இருக்கும்.. அது உறுதி..

இனி என்னென்ன செய்யலாம் என சக நட்புகளான உங்களிடம் எம் கோரிக்கையை வைக்கிறோம்..

கேட்க ஆவலுடன்..

Soundar

unread,
May 6, 2011, 3:14:31 AM5/6/11
to ezhu...@googlegroups.com
நட்புகளே ,

அருமையான கட்டுரை , அக்காவிற்கு பாராடுதல்கள் .

இதில் நீக்குவதர்ற்கு ஒன்றும் இல்லை ,
 இத்துடன் என் மனதில் தோன்றிய ஒரே ஒரு வரி சேர்த்துக்கொள்ளலாமா ?
 அது
" நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழும்போது நம்  வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும் "

தத்துவம் மாதிரி தான் இருக்கு , ஆனால் இதை படிக்கும் போது நாமும் எதாவது செய்ய வேண்டும் என்றம் தோன்றும் என்று நினைக்கிறன் ,


நன்றி
சௌந்தர்

2011/5/6 jmms <jmms...@gmail.com>



--
Thanks & Regards
Soundarraju R

jmms

unread,
May 6, 2011, 3:18:43 AM5/6/11
to ezhu...@googlegroups.com
 கண்டிப்பா சேர்க்கலாம்.. நல்லாருக்கு செளந்தர்..

இன்னும் நீங்க எல்லாருமே கண்டிப்பா சேர்த்து எழுதும்படி தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்..



2011/5/6 Soundar <sounda...@gmail.com>



--
சாந்தி



http://punnagaithesam.blogspot.com/ =============================

‎"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader." ~ John Quincy Adams


Snabak Vinod (SV)

unread,
May 6, 2011, 7:30:33 AM5/6/11
to ezhu...@googlegroups.com
நண்பர்களே... வணக்கம்.
 
வேலைப்பழு காரணமாக மறுமொழி அளிக்க முடியவில்லை. முழுதாக படித்து விட்டு என்னுடைய கருத்தை நாளை மறுமொழி கொடுக்கிறேன்...
 
மலர்பாலா, கோகுல், அருள் உங்கள் கருத்துக்களை நேரம் கிடைக்கும் போது பகிரவும்.
 
நன்றி.
எஸ்.வி.

2011/5/6 jmms <jmms...@gmail.com>

Malarbala

unread,
May 6, 2011, 10:55:50 PM5/6/11
to ezhu...@googlegroups.com
அருமையான கட்டுரை
 
சௌந்தர் அவர்கள் கூறியதுபோல நீக்குவதற்கு ஒன்றுமில்லை......
அனைத்து முக்கிய பிரச்சனைகளும் சேர்த்தாகிவிட்டது.....
 
மிக்க நன்றி....  

2011/5/6 jmms <jmms...@gmail.com>



--
 
எழுச்சியுடன்
மலர்பாலா
 

jmms

unread,
May 6, 2011, 11:00:17 PM5/6/11
to ezhu...@googlegroups.com
நன்றி மலர்பாலா..

இதையே இன்னும் கொஞ்சம் ஜாலியா ஒரு நட்புகிட்ட சொல்வது போல எழுதலாமா னு தோணியது.. ஏன்னா அட்வைஸ் மாதிரி இருக்கோன்னு ஒரு கவலை..

என்னடா அட்வைஸ் பண்ண கிளம்பிட்டாங்களே னு நினைப்பு வரக்கூடாதே.:)

நாம் யாரையும் திருத்த முடியாது.. உலகம் முடியும்வரை நல்லவைகளும் கெட்டவைகளும் சேர்ந்தே இருக்கும்..

இருப்பினும் நம்முடைய கடமையாக விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டே இருப்பது வேணுமானால் செய்யலாம்..

மெதுவா மாற்றம் வரும்..

அதான் கொஞ்சம் நகைச்சுவை இடை இடையே கலந்தால் வாசிப்பவருக்கு ரிலாக்ஸ்ட் ஃபீலிங் வருமோ னும்  தோணுது..

இல்லை இத்ன் சீரியஸ்நஸ் கெட்டுவிடுமா.?

உங்க கருத்துகளை பகிருங்க..



2011/5/7 Malarbala <bala.sil...@gmail.com>

Malarbala

unread,
May 6, 2011, 11:11:10 PM5/6/11
to ezhu...@googlegroups.com
நகைச்சுவை அவசியம்தான் ஆனால் எல்லாவற்றிலும் இல்லை...
சில விசயங்களை நகைச்சுவையாக சொல்ல கூடாது. மதிப்பற்று போகும்...
கட்டுரை இயல்பாய் இருக்கிறது...
அதனால் மாற்றம் தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து.....

2011/5/7 jmms <jmms...@gmail.com>

arul stephen

unread,
May 7, 2011, 1:05:09 AM5/7/11
to ezhu...@googlegroups.com
அதே போல் எந்த நாட்டுக்கு சென்றாலும் தன் வேறான தாய் நாட்டைபற்றி கவலை கொள்ளாமல் இல்லை..
 
இதே போல இன்னும் அதிகமான கட்டுரைகளௌம் கருத்துகள், விவாதங்கள் வருமானால் , அவை எல்லா மக்களையும் சென்றடையுமானால் நிச்சயம் நம்மால் , நாம் நினைக்கும் மாற்றம் கொண்டுவரமுடியும்..
 
பங்கெடுத்தால் போதும்.. சமூக ஆரவ்ம் என்பது ஒருபோதும் கட்டாயப்படுத்தி வரவைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்..
 
நீங்களும் இதே எழுச்சியுடைவரென்றால் கை கொடுங்கள் இச்சமூக மாற்றத்துக்கு சிறு துளியாக..
 
நான் வாசித்த‌ப்போது க‌ண்ட‌ சில‌ எழுத்துப்பிழைக‌ளை சுட்டியிருக்கிறேன்.. அதை கொஞ்ச‌ம் ச‌ரி செய்யுங்க‌ள்...
 
 
 
 
 
 
 


 
2011/5/7 Malarbala <bala.sil...@gmail.com>

arul stephen

unread,
May 7, 2011, 1:12:30 AM5/7/11
to ezhu...@googlegroups.com

//சமூக பிரச்னைகளை குறித்து புரிதல் இருக்கணும்.. கோபம் இருக்கணும்.. அப்போதுமட்டுமே உறுதி வரும்.. ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை , பெண்ணடிமைத்தனம், குடி , ஊடகம் , அடிப்படை வசதி இல்லாமை , ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற  எதை குறித்தவது வருந்தியிருக்கணும்.., பாதிக்கப்பட்டிருக்கணும்..

அப்போது மட்டுமே எழுச்சியோடு மாற்றம் கொண்டு வர எண்ணவே முடியும்..//
 
ந‌ட்புக‌ள் இந்த‌ ஒரு ப‌த்தியை திரும்ப‌வும் ஒருமுறை ப‌டிக்க‌வும்.. இதில் கோர்வையாக‌ சொல்ல‌ப்ப‌ட‌வில்லை என்று தோன்றுகிற‌து...

2011/5/7 arul stephen <amdba...@gmail.com>

jmms

unread,
May 7, 2011, 1:15:31 AM5/7/11
to ezhu...@googlegroups.com
 நன்றி அருள்..

பிழை மாற்றி அனுப்புகிறேன்..

ஆம் எனக்கும் அப்படித்தான் படுகிறது.. நேரம் இருக்கும்போது இன்னும் கொஞ்சம் யாராகிலும் மாற்றி அனுப்புங்கள்..


ஒரு வாரம் ஆனாலும் பரவாயில்லை.. முதல் கட்டுரை முத்திரை பதிப்பதாக இருக்கணும்.. இன்னும் நிறைய சேர்க்கலாம்.. மாற்றலாம்..



2011/5/7 arul stephen <amdba...@gmail.com>

arul stephen

unread,
May 7, 2011, 1:15:43 AM5/7/11
to ezhu...@googlegroups.com
மேலே சொன்ன‌ இர‌ண்டு விச‌ய‌ங்க‌ளை த‌விர‌ க‌ட்டுரை மிக‌ அருமையாக‌ உள்ள‌து... இதை உட‌ன‌டியாக‌ ப‌திய‌லாம்..


 
2011/5/7 arul stephen <amdba...@gmail.com>

//சமூக பிரச்னைகளை குறித்து புரிதல் இருக்கணும்.. கோபம் இருக்கணும்.. அப்போதுமட்டுமே உறுதி வரும்.. ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை , பெண்ணடிமைத்தனம், குடி , ஊடகம் , அடிப்படை வசதி இல்லாமை , ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற  எதை குறித்தவது வருந்தியிருக்கணும்.., பாதிக்கப்பட்டிருக்கணும்..

jmms

unread,
May 7, 2011, 1:23:56 AM5/7/11
to ezhu...@googlegroups.com


2011/5/7 arul stephen <amdba...@gmail.com>

மேலே சொன்ன‌ இர‌ண்டு விச‌ய‌ங்க‌ளை த‌விர‌ க‌ட்டுரை மிக‌ அருமையாக‌ உள்ள‌து... இதை உட‌ன‌டியாக‌ ப‌திய‌லாம்..


நன்றி அருள்.. இன்னும் நிதானமா எழுதியிருக்கலாம்தான்..

நீளமாவும் எழுதலாம்னு நினைத்தேன் . போரடிச்சுடக்கூடாதே என்ற கவலையும் .

( எனக்கே சில கட்டுரைகள் நீளமா இருந்தா வாசிக்க பொறுமை இருப்பதில்லை, மிக சுவாரஸ்யமாக இருந்தாலொழிய  )

அடுத்த வாரம் புதன்கிழமை போடலாம்..எல்லா திருத்தமும்  செய்து.

Malarbala

unread,
May 7, 2011, 1:27:15 AM5/7/11
to ezhu...@googlegroups.com
உண்மைதான் நீளமாக இருந்தால் சலிப்பு வரும்...
ரத்ன சுருக்கமாக இருந்தால் நல்லதுதான்.....

2011/5/7 jmms <jmms...@gmail.com>

jmms

unread,
May 7, 2011, 1:35:14 AM5/7/11
to ezhu...@googlegroups.com


2011/5/7 Malarbala <bala.sil...@gmail.com>

உண்மைதான் நீளமாக இருந்தால் சலிப்பு வரும்...
ரத்ன சுருக்கமாக இருந்தால் நல்லதுதான்.....



நன்றி மலர்பாலா..

மேலும் நம்மைப்போன்ற நோக்கமுடைய நட்புகள் இருந்தால் முதலில் குழுமத்தில் அவரைப்பற்றிய தகவல் பகிர்ந்துவிட்டு இணைக்கலாமா.?..


நிறைய நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இருப்பது ஒரு பலம்.. மற்றொன்று ஒரு சிலருக்கு அலுவல் வேலைப்பழு இருக்கும்போது மற்ற சிலர் பங்களிக்க இயலும்..

 ( இன்று சின்னவருக்கு பிறந்த நாள் தினம் வீட்டில் சிம்பிளா அவன் நட்புகளோடு கொண்டாடுவதால் கொஞ்சம் சமையல்  வேலை இருக்கு,... அப்புறம் வருகிறேன்.. அல்லது  நாளை. நன்றி  )

எழுச்சியுடன் .,

Malarbala

unread,
May 7, 2011, 1:39:51 AM5/7/11
to ezhu...@googlegroups.com

 
2011/5/7 jmms <jmms...@gmail.com>



2011/5/7 Malarbala <bala.sil...@gmail.com>
உண்மைதான் நீளமாக இருந்தால் சலிப்பு வரும்...
ரத்ன சுருக்கமாக இருந்தால் நல்லதுதான்.....




நன்றி மலர்பாலா..

மேலும் நம்மைப்போன்ற நோக்கமுடைய நட்புகள் இருந்தால் முதலில் குழுமத்தில் அவரைப்பற்றிய தகவல் பகிர்ந்துவிட்டு இணைக்கலாமா.?..
 
 
அறிமுகம் நிச்சயம் தேவை
உங்களைத்தவிற மற்ற நண்பர்கள்  பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது
நல்லது
சின்னவருக்கு வாழ்த்து சொல்லிடுங்க.....


நிறைய நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இருப்பது ஒரு பலம்.. மற்றொன்று ஒரு சிலருக்கு அலுவல் வேலைப்பழு இருக்கும்போது மற்ற சிலர் பங்களிக்க இயலும்..

 ( இன்று சின்னவருக்கு பிறந்த நாள் தினம் வீட்டில் சிம்பிளா அவன் நட்புகளோடு கொண்டாடுவதால் கொஞ்சம் சமையல்  வேலை இருக்கு,... அப்புறம் வருகிறேன்.. அல்லது  நாளை. நன்றி  )

எழுச்சியுடன் .,

--
சாந்தி



http://punnagaithesam.blogspot.com/ =============================

‎"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader." ~ John Quincy Adams





--
 
எழுச்சியுடன்
மலர்பாலா
 

jmms

unread,
May 7, 2011, 1:45:34 AM5/7/11
to ezhu...@googlegroups.com


2011/5/7 Malarbala <bala.sil...@gmail.com>


 
2011/5/7 jmms <jmms...@gmail.com>


2011/5/7 Malarbala <bala.sil...@gmail.com>
உண்மைதான் நீளமாக இருந்தால் சலிப்பு வரும்...
ரத்ன சுருக்கமாக இருந்தால் நல்லதுதான்.....




நன்றி மலர்பாலா..

மேலும் நம்மைப்போன்ற நோக்கமுடைய நட்புகள் இருந்தால் முதலில் குழுமத்தில் அவரைப்பற்றிய தகவல் பகிர்ந்துவிட்டு இணைக்கலாமா.?..
 
 
அறிமுகம் நிச்சயம் தேவை
உங்களைத்தவிற மற்ற நண்பர்கள்  பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது
நல்லது
சின்னவருக்கு வாழ்த்து சொல்லிடுங்க.....




நன்றி . சொல்கிறேன்..

அவ்வப்போது சமூக ஆர்வமுடைய பதிவர்களை படிக்க நேரும்போது குழுமத்தில் அப்பதிவுகளையும் பகிரலாம்.. நான் பஸ்களில் இப்ப பகிர்ந்து வருகிறேன்..



 

-- எழுச்சியுடன் .,

Soundar

unread,
May 7, 2011, 2:19:56 AM5/7/11
to ezhu...@googlegroups.com
நட்புகளே ,

மேலே கூறப்பட்டது அனைத்தும் நட்புகளின் ஆர்வத்தையும் முயற்சியையும் காட்டி மகிழ்ச்சியளிக்கிறது .

முதலில் சாந்தி அக்கா சொல்லும் , கொஞ்சம் நகசிவையாக இருக்கலாமா என்ற கருத்துக்கு வரு கின்றேன் ,

எனக்கு வழிகாட்டியாக நான் எடுத்துகொள்ளும் முதல் மனிதர் எனது இயற்பியல் ஆசிரியர் , காரணம் ஒன்று அவர் நகைச்சுவையாக பேசுவார் , மற்றொன்று நிறைய ஆச்சர்ய படவைக்கும் தகவல்கள் அவர் பேச்சில் இருக்கும் .
இதில் மற்ற நம்பர்கள் கூறுவது போல் நகைச்சுவையாய் சேர்ப்பது நாம் சொல்லவரும் விஷயத்தின் வலிமையை குறைக்கும் ஆனால் அதை சேர்க்காவிட்டாலும் ,  படிப்பவர் ஆச்சர்ய படவைக்கும் தகவல்களை  , அதுவும் தெரிந்த விஷயத்தை பற்றி தெரியாத தகவல்கள் ,இணைத்தால்  இன்னும் ஈர்ப்பை ஏற்படுத்தும் படிப்பதற்கு , அதை நாம் எடுதுக்கொல்லாமா  ? முடிந்தால் முதல் பதிவில் , அல்லது இனி வரும் பதிவுகளில் இணைக்கலாமா ? .

நட்புடன்
சௌந்தர்

Snabak Vinod (SV)

unread,
May 7, 2011, 2:45:36 AM5/7/11
to ezhu...@googlegroups.com
சாந்தி அக்கா அனுப்பிய முதல் பதிவுக் கட்டுரையின் டிராப்ட் வெர்சன் படித்தேன்... அருமையாக இருந்தது... நட்புகள் நினைத்ததுபோல் சிறிய மாற்றம் இன்னும் மெருகூட்டம் என எண்ணுகிறேன்...
 
முதலில் சிறிதாக ஆரம்பித்து இறுதியில் ஒரு எழுச்சியோடு, வாசிக்கும் நண்பர்கள் "நானும் இதே கருத்தில் தான் உள்ளேன்.. இதற்காகத்தான் காத்திருக்கிறேன்... உடனே சேருகிறேன்... கை கோர்ப்போம்... மாற்றம் காண்போம்" என என்று சொல்லும் அளவுக்கு முடிக்க வேண்டும் என நினைக்கிறேன்... அதற்கு, பிரச்சினைகளை இன்னும் அதிகமாக அல்லது விளக்கமாக போடலாம்... நட்புகள் என்ன கருதுகிறீர்கள்?
 
சாந்தி அக்கா குழந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிரவும்.
 
நானும் ஏற்கனவே எண்ணினேன், நம் நட்புகள் பற்றி அறிந்து கொள்வது சிறந்த தொடக்கமாக இருக்கும்.
 
என்னைப் பற்றி:
என் பிளாக் முகவரி: snabakvinod.blogspot.com.
 
நான் ஒரு கணிணி பொறியாளர், வேலை மதுரை ஹனிவெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஊர் நெல்லை மாவட்டம், பள்ளிப் படிப்பு சொந்த ஊரில், பொறியியல் படிப்பு சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரியில்...
 
சமுதாயப் பார்வை மற்றும் ஆன்மீக சிந்தனையுடையவன், இளைஞர்கள் அனைவரையும் இணைத்து சமுதாய சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும் என தொலைநோக்கு எண்ணத்தோடு இத்தளத்தில் எழுச்சியோடு ஈடுபட்டுள்ளேன்...
 
நன்றி,
எஸ்.வி.

2011/5/7 Soundar <sounda...@gmail.com>

Soundar

unread,
May 7, 2011, 3:48:51 AM5/7/11
to ezhu...@googlegroups.com
வினோத் சொல்வதுபோல் அந்த  கருத்துக்கள் இன்னும் வலிமை சேர்க்கும் ,போடலாம் .

"சாந்தி அக்கா குழந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ."

என்னைப் பற்றி:

நான் பிறந்து வளர்ந்தது கோவையில் . கோவையில் மும்பையை   தலைமையாக கொண்ட ஒரு தனியார் பங்கு வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றுகின்றேன் .

                                         நம்மை சுற்றி மட்டும் இன்றி உலகத்தில் நாம் கேள்வி படும் , பார்க்கும் அனைத்து பொது தவறுகள் , மற்றும் தனிமனித வாழ்கையில் நடக்கும் கசப்பான செயல்கள் , இப்படி அனைத்து தவறுகளுக்கும் , சுயஒழுக்கம் தவறுவதே கரணம் என் நினைக்கிறன் , இதை களைய ஒற்றுமையான விழிபுணர்வும் மக்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கும் ஒருவன் .நல்ல மகிழ்ச்சியான  மற்றும் அமைதியான உலகமும் , வாழ்கையும்  அனைவருக்கும் கிடைக்க  முயற்சிப்பவன் .

நட்புடன்
சௌந்தர் 


2011/5/7 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>

Malarbala

unread,
May 7, 2011, 4:26:33 AM5/7/11
to ezhu...@googlegroups.com
என்னைப் பற்றி:
நான் பிறந்து வளர்ந்தது நத்தம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில்..
கல்லூரி முடித்துவிட்டு சென்னையில் சிலகாலம் பின்பு ஆந்திராவின் விசாகபட்டினத்தில் மற்றும் குஜராத்தின் ஜாம்நகரில் சிலகாலம் பணியாற்றினேன்.
தற்போது ஒரு இத்தாலி நிறுவனத்தில் ஷார்ஜா கிளையில் பொறியாளராக பணியாற்றுகிறேன்... 
 
எங்கு அடக்குமுறை நடந்தாலும் எதிர்ப்பவன்...
இயற்கையை அதிகம் நேசிப்பவன்......
சாதி,  மதம், இனம்,  மொழி மற்றும் நாடு  கடந்து மனிதனை நேசிப்பவன்...

2011/5/7 Soundar <sounda...@gmail.com>
மலர்பாலா
 

jmms

unread,
May 7, 2011, 5:53:01 AM5/7/11
to ezhu...@googlegroups.com


2011/5/7 Soundar <sounda...@gmail.com>

நட்புகளே ,

மேலே கூறப்பட்டது அனைத்தும் நட்புகளின் ஆர்வத்தையும் முயற்சியையும் காட்டி மகிழ்ச்சியளிக்கிறது .

முதலில் சாந்தி அக்கா சொல்லும் , கொஞ்சம் நகசிவையாக இருக்கலாமா என்ற கருத்துக்கு வரு கின்றேன் ,

எனக்கு வழிகாட்டியாக நான் எடுத்துகொள்ளும் முதல் மனிதர் எனது இயற்பியல் ஆசிரியர் , காரணம் ஒன்று அவர் நகைச்சுவையாக பேசுவார் , மற்றொன்று நிறைய ஆச்சர்ய படவைக்கும் தகவல்கள் அவர் பேச்சில் இருக்கும் .
இதில் மற்ற நம்பர்கள் கூறுவது போல் நகைச்சுவையாய் சேர்ப்பது நாம் சொல்லவரும் விஷயத்தின் வலிமையை குறைக்கும் ஆனால் அதை சேர்க்காவிட்டாலும் ,  படிப்பவர் ஆச்சர்ய படவைக்கும் தகவல்களை  , அதுவும் தெரிந்த விஷயத்தை பற்றி தெரியாத தகவல்கள் ,இணைத்தால்  இன்னும் ஈர்ப்பை ஏற்படுத்தும் படிப்பதற்கு , அதை நாம் எடுதுக்கொல்லாமா  ? முடிந்தால் முதல் பதிவில் , அல்லது இனி வரும் பதிவுகளில் இணைக்கலாமா ? .

நட்புடன்
சௌந்தர்



 நிச்சயம் இணைக்கலாம்.. ஒரு நல்ல தகவல் தயார் செய்து முகவுரைக்கு அடுத்த பதிவாக இணைப்புகள் ஆரம்பிக்கலாம்..

தயை கூர்ந்து அது குறித்தும் தகவல் சேகரிக்க ஆரம்பிப்போம்..முடியும் நேரத்தில்..


--

jmms

unread,
May 7, 2011, 5:55:25 AM5/7/11
to ezhu...@googlegroups.com
2011/5/7 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>
சாந்தி அக்கா அனுப்பிய முதல் பதிவுக் கட்டுரையின் டிராப்ட் வெர்சன் படித்தேன்... அருமையாக இருந்தது... நட்புகள் நினைத்ததுபோல் சிறிய மாற்றம் இன்னும் மெருகூட்டம் என எண்ணுகிறேன்...
 
முதலில் சிறிதாக ஆரம்பித்து இறுதியில் ஒரு எழுச்சியோடு, வாசிக்கும் நண்பர்கள் "நானும் இதே கருத்தில் தான் உள்ளேன்.. இதற்காகத்தான் காத்திருக்கிறேன்... உடனே சேருகிறேன்... கை கோர்ப்போம்... மாற்றம் காண்போம்" என என்று சொல்லும் அளவுக்கு முடிக்க வேண்டும் என நினைக்கிறேன்... அதற்கு, பிரச்சினைகளை இன்னும் அதிகமாக அல்லது விளக்கமாக போடலாம்... நட்புகள் என்ன கருதுகிறீர்கள்?


செய்யலாம் வினோத்..  உங்க விருப்பப்படி மாற்றுங்களேன்..

 
 
சாந்தி அக்கா குழந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிரவும்.

நன்றி..( இதோ தயார் செய்துவிட்டேன் இன்னும் 1 மணி நேரத்தில் குழந்தைகள் வருவார்கள் )


 
நானும் ஏற்கனவே எண்ணினேன், நம் நட்புகள் பற்றி அறிந்து கொள்வது சிறந்த தொடக்கமாக இருக்கும்.
 
என்னைப் பற்றி:
என் பிளாக் முகவரி: snabakvinod.blogspot.com.
 
நான் ஒரு கணிணி பொறியாளர், வேலை மதுரை ஹனிவெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஊர் நெல்லை மாவட்டம், பள்ளிப் படிப்பு சொந்த ஊரில், பொறியியல் படிப்பு சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரியில்...
 
சமுதாயப் பார்வை மற்றும் ஆன்மீக சிந்தனையுடையவன், இளைஞர்கள் அனைவரையும் இணைத்து சமுதாய சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும் என தொலைநோக்கு எண்ணத்தோடு இத்தளத்தில் எழுச்சியோடு ஈடுபட்டுள்ளேன்...


நன்று. வாழ்த்துகள்.. துணை நிற்போம்.

 
 

jmms

unread,
May 7, 2011, 5:56:56 AM5/7/11
to ezhu...@googlegroups.com


2011/5/7 Soundar <sounda...@gmail.com>

வினோத் சொல்வதுபோல் அந்த  கருத்துக்கள் இன்னும் வலிமை சேர்க்கும் ,போடலாம் .

"சாந்தி அக்கா குழந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ."

நன்றி செளந்தர்.
 

என்னைப் பற்றி:

நான் பிறந்து வளர்ந்தது கோவையில் . கோவையில் மும்பையை   தலைமையாக கொண்ட ஒரு தனியார் பங்கு வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றுகின்றேன் .

                                         நம்மை சுற்றி மட்டும் இன்றி உலகத்தில் நாம் கேள்வி படும் , பார்க்கும் அனைத்து பொது தவறுகள் , மற்றும் தனிமனித வாழ்கையில் நடக்கும் கசப்பான செயல்கள் , இப்படி அனைத்து தவறுகளுக்கும் , சுயஒழுக்கம் தவறுவதே கரணம் என் நினைக்கிறன் , இதை களைய ஒற்றுமையான விழிபுணர்வும் மக்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கும் ஒருவன் .நல்ல மகிழ்ச்சியான  மற்றும் அமைதியான உலகமும் , வாழ்கையும்  அனைவருக்கும் கிடைக்க  முயற்சிப்பவன் .


நன்று . முயற்சி வெற்றியடையும்.வாழ்த்துகள்.. 

--

jmms

unread,
May 7, 2011, 5:58:28 AM5/7/11
to ezhu...@googlegroups.com


2011/5/7 Malarbala <bala.sil...@gmail.com>

என்னைப் பற்றி:
நான் பிறந்து வளர்ந்தது நத்தம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில்..
கல்லூரி முடித்துவிட்டு சென்னையில் சிலகாலம் பின்பு ஆந்திராவின் விசாகபட்டினத்தில் மற்றும் குஜராத்தின் ஜாம்நகரில் சிலகாலம் பணியாற்றினேன்.
தற்போது ஒரு இத்தாலி நிறுவனத்தில் ஷார்ஜா கிளையில் பொறியாளராக பணியாற்றுகிறேன்... 
 
எங்கு அடக்குமுறை நடந்தாலும் எதிர்ப்பவன்...
இயற்கையை அதிகம் நேசிப்பவன்......
சாதி,  மதம், இனம்,  மொழி மற்றும் நாடு  கடந்து மனிதனை நேசிப்பவன்...




வாழ்த்துகள் மலர்பாலா.. ( மலர் பெயர் காரணம் சொல்லவா?..அம்மா மேலுள்ள அதிக நேசம்/மரியாதை காரணமாக தன்னோடு இணைத்துக்கொண்ட பெயர்..மலர். அப்படித்தானே?. )

--

jmms

unread,
May 7, 2011, 6:11:42 AM5/7/11
to ezhu...@googlegroups.com

என்னைப் பற்றி:


6 பேரில் கடைசியாக பிறந்து  பாசம், நேசம், கஷ்ட நஷ்டம் , இன்ப துன்பம் எல்லாம் சந்தித்து வாழ்க்கையை வாழ்ந்து முடித்த ஒரு திருப்தி..

என்னை உலகில் மிக பாதிப்பது குழந்தைகள் கஷ்டப்படுவது..அடுத்து சாதி , மத வெறி, பெண்ணடிமை..

வாழ்க்கையில் எத்தனைக்கத்தனை இன்பம் அனுபவித்தேனோ அதே போல துன்பமும் அனுபவித்தமையால் இரண்டையும் ஒன்றாக பார்க்கும் பக்குவம் ஓரளவு வந்துள்ளது..

வயது 43

இரு குழந்தைகள் - 15, 6 வயதில் ( பசங்க )

கணவர் தனியார் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர் என்றாலும் பார்ப்பனர்க்கு மட்டுமே இங்கே சலுகை .( இதை சொல்லலாமா னு தெரியல )..

நான் பொறியியல் சிவில் படித்தேன்  நெல்லையில்.. 8 வருடம் வேலை.. பின் ஐடி (  MCSE, CCNP, JNCIA, ENA etc.,, ) க்கு தாவினேன்.. சீனியர் நெட்வொர்க் பொறியாளராய் இருந்து போன வருடத்திலிருந்து பசங்க படிப்புக்காக வீட்டில் இருக்கிறேன்..( வருங்காலத்தில் முடிந்தால் ஏதவது பிஸினஸ் செய்ய ஆர்வம் . தாய் உணவகம்  மாதிரி )



கிடைத்த இந்த ஒரு வாழ்க்கையில் நம்மால் முடிந்தளவு சாதிக்கணும்.. அந்த சாதனை துளியாவது உலக மாற்றத்துக்காக இருக்கணும் என பேராசை உண்டு..

கடவுள் மேல் அதீத பக்தி இருந்தது.. இப்ப கொஞ்சம் நாத்திகம் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளேன்.. (   Agnostic ). உலகில் நடப்பவை கண்டு..:(

இருப்பினும் சர்ச் செல்வதும் அவர்களோடு சேவை செய்வதும் பிடித்தமானவை..

அதிக கோபம் என் பலவீனம்.. :(.. மாற முயலுகிறேன்..

 I'm not perfect, but from now, will try to be perfect with all your help..

 என்னை உங்களில் ஒருத்தியாக நினைத்து நான் தவறும்போது எடுத்து சொல்லி திருத்திடுங்கள்..


அக்கா னு மரியாதை எல்லாம் வேணுமா.. சாந்தி என்றாலும் போதும்.. இங்கே நாம் அனைவரும் ராணுவ வீரர்கள் போல..

Gokulnath Murugesan

unread,
May 7, 2011, 1:52:39 PM5/7/11
to ezhu...@googlegroups.com
மக்களே: 
enakkum ungala maadhiri tamilla eludhanumnu thaan aaasai, but google transliteration koncham slowa irukku. moreover, naan paesara maadhiriyae type panradhukku enakku easy padudhu, ungalukku padikaradhukkum easya irukkumnu ninaikiraen :). 

என்னை  பற்றி:
naan porandhu valandhudhellaam chennai la thaan. naanum snabakum engineering onna pannom. engineering muducha udanae naan inga US vandhutaen. so 2004la irundhu inga US la irukaen. oru oru time India varumpodhu seekaram vandhu Indiala settle aaaganumnu thonum, adhu thaaan en aaasai en appa ammovoda periya aasai :). pona maasam thaan enakku kolandha porandhudhu, so koncham busya irukku lifeu. 

indha groups la naan saenthadhukku oru mukkiyamaana kaaranam, ennoda yaekkam. US la neraiya thappaana vishiyanga irundhaalum, enakku pudikaaadha vishiyanga irundhaalum.... sila vishiyakkangala paathu eppada namma oooru ippadi maarum, eppo idhu varum adhu maarum nu neraiya yaekkangal. yaen namma oooru ippadi irukku, apdinu sila time yoshu paaakum podhu, adhukku enakku therinjaa mukkiyamaana kaaranungal - Poverty, Educational System, Discipline, CORRUPTION etc. Democracy kku mukkiyathum kodukaradhu, yaaara irundhaalum edhuthu nirkaalaam minister or even the president thappu panna thani oru manushan urimaiyoda sollaalaam. President edirthu kodi pudikaruvangala white house munnaadiyum paathirukaen, US Capitol munnaidiyum paathrukaen, yoshu paarunga namba ooorla oru councillora koooda edirthu nirka mudiyadhu. Ennada ivan US pathi romba sollitu irukaaanu ninaikaaadheenga, nalla vishiyamnu thonradhu yaer pannalaam, adha follow panradhu thappa illanu yosikuravan naaan.

namma ooru ippadi thaaan, evlo varusham aaanalum ippadi thaan irukkumnu solradha ennalaa kandippa yaethukka mudiyadhu; ennala enna maaathikka mudiyum, enna saerdhavangala maatha mudiyum..... idha namba ellaaarum nambanum. enna saerdhavanga naalu paeru maathuvaanga, avanga innoru naala paeru maathuvaanga.....ippadi ponaaaalae nalla progressa paaapom. ooora olungu padutha vaenda, nambala saerdhavangala eppadi maathuvomru thoughts namma elllaarukkum irukanum. 

ippa irukka youngsters kku sila vishayatha avanga enjoy panra maadhiri eduthutu poi sollanum, adhukku avanga enjoy panra mediuma namba use pannanum. ennoda personal opinion idhu - namma kavidhai katturai eludharadhu endha alavukku makkala poi saerumnu therila. honestly speaking, first of all naan padikarudhae sandhegam thaan, oru alavukku samadhaya unarvu irukka naaanae apdi irukkum podhu, illaadhavangalukku eppadi poi saerum? Facebookla Orkutla eppaiyum time spend panraaanga, yaen apdi oru medium use panni oru network form panna kooodadhu? adha ellaarum enjoy pannuvaangalae?

Soundar anupcha mail naan munnadiyae paathirukaen, appaiyae yoshaen, ippo neenga enna ninaikireenganu sollunga:

11. Please CHECK WASTAGE OF food If you have a function/party at your home in India and food gets     wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke - Child helpline. They will come and collect the food .Please circulate this message which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN .

I'm pretty sure, there won't be many volunteers in this organization as this being a nation wide organization. Indha organizationa yaen namma promote panna kooodadhu? Or, idhu maadhiri oru organisation start panna koodadhu? nammalae idhukku oru site start pannalamae? Yaarukku saapada thaeva nu oru list, neraiya eduthula neraiya paeru saapadukku kashta paduraanga. Namma irukka locationkku namma volunteera irukalaaam, yaaravadhu namma locationla saapaadu waste aagara maadhiri irukkunu sonnaangana, andha locationla thaeva paduravangalukku poi saerkarudhu volunteer vaela. Idha pathi makkalukku theriya theriya kandippa neraiya volunteers  saeruvaanga, so that namma romba dhooorathukku poi kodukanumnu avasiyam irukaaadhu.

Ennoda periya belief:
Namba ellarum work panrom, kaasu varudhu... namba panra vaelaiya freeya samudhaayathukku pannuvom. Naan software developera work panraen, ennoda software development eppadi samaadhayukku edhuthutu poi saerkalaaam, ippadi ellarum avanga avanga panra vaelaiya samudhayuthukku eppadi ubayoma irukkumnu yosikanga, we can make wonders!!

நன்றி,
கோகுல் 



2011/5/7 jmms <jmms...@gmail.com>

jmms

unread,
May 7, 2011, 9:05:02 PM5/7/11
to ezhu...@googlegroups.com
 ரொம்ப தெளிவா சொன்னீங்க கோகுல்..

உங்க சூழல் புரியுது. இப்பதான் குழந்தை வேறு..வெளிநாடு வேறு.

நாம் ஏற்கனவே சொன்னது போல ,

1. முதலில் வேலை முக்கியம். அதில் எந்த பாதிப்பும் வரக்கூடாது.. முக்கியமான விஷயம் என்றாலும் , நட்புகளிடம் சொல்லிவிட்டு நீங்க அனைவருமே வேலையைத்தான் தொடரணும்..

2. நம் 6 பேரில் 4 பேர் வெளிநாட்டில். ஒருவர் மதுரை. மற்றொருவர் கோவை..ஆக களத்தில் இறங்கி வேலை என்பது இப்போதைக்கு சரி வராது.. நாளாகும்..

3. நீங்க சொன்னது போல் இணையம் மூலம் ஒரு டேட்டாபேஸ் உருவாக்கலாம்.. முதலில் தமிழ்நாட்டில் என்னென்ன உதவிகள் , தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் , தன்னார்வல சேவகர்கள் , அரசு அதிகாரிகள் , RTI ( right to information ) , ரத்த தானம், இலவச சிகிச்சைகள் , போன்றவை..( மே 13ம்ததிக்கு மேல் அர்சு யார் என தெரிந்த பின்

4.பலரும் இங்கே விரும்புவது போல் , நம்மில் முதல் மாற்றம் வரட்டும்.. நம்மை பார்த்து சுற்றி இருப்போர் மாறட்டும்..அதற்கான விழிப்புணர்ச்சி செய்ய நம் வலைப்பூவை பயன்படுத்துவோம் . கருத்தாளமிக்க , உள்வாங்கக்கூடிய ஆணித்தரமான கட்டுரைகள் எழுதுவோம்.. ஆரம்பத்தில் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்தான்.. ஆனால் சோர்வடையாமல் செய்துகொண்டே , கருத்துகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.. ( தட்டுங்கள் திறக்கப்படும் போலத்தான் )...எப்படியும் நம் வலைப்பூவை திரும்பி பார்க்க 1 வருடம் ஆகும் .. என வைத்துக்கொள்வோம்..அதன்பிறகும் ஈ, காக்கா கூட வரலைன்னா மாற்றம் செய்வோம்..:)

5. எனக்கு இப்போதைக்கு 2 குழந்தைகளின் கடமை இருக்கு.. கல்லூரி சேர்ந்த்துவிட்டால் நான் இந்தியா வந்து நேரடி  களப்பணி செய்யலாம் என எண்ணியுள்ளேன்.. அப்ப இன்னும் எனக்கு தெரிந்தவர்களை திரட்ட ஏதுவாயிருக்கும்..எழுச்சி இன்னும் அதிகமாகலாம்.. அதுவரை எழுத்தின் மூலமே ஆட்களை திரட்டுவதும், நல்ல பல திட்டங்களை வகுக்க கருத்துகள் படிப்பதுமாய் உபயோகிக்கலாம்.. 8 மணி நேரம் மரம் வெட்ட 6 மணி நேரம் அறுவாள் தீட்டுவதைப்போல் ( ஆபிரகாம் லிங்கன் ?. )... தகவல்கள் சேகரிப்பதை இந்த வருடங்களில் உபயோகப்படுத்தலாம்..வினோத், அருள் , நம்ம கிறுஸ்தவ சபையினரின் ஆதரவு இல்லங்கள் சேவை மன்றங்கள் பற்றியும் ஊருக்கு போகும்போது விசாரித்து பகிர்வோம்..இணையம் மூலம் அந்தந்த ஊர்க்கு ஒரு ரெப்ரசண்டேட்டிவ் கிடைத்தால் கூட நம் எழுச்சி விரிவடையும்..

6. நீங்க சொன்னதுபோல் , இப்போதைக்கு நமக்கான அந்த ஒரு குறிக்கோள் இன்னும் பிடிபடவில்லை , அல்லது முடிவெடுக்கலை.. என்ன செய்ய போகிறோம் என்பதை காலம் நமக்கு காட்டித்தரலாம்.. தம்பி அருளுக்கு ஒரு கனவு இருப்பதாக சொல்லியுள்ளார். அதாவது அவரது ஊரில் உள்ள பிள்ளைகளுக்கு வலைப்பூ அறிமுகப்படுத்துவது.. இதே போல அவரவர் ஊரிலுல்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தி எழுச்சியின் அவரவ்ர் ஊர் பற்றிய ( தேவையான உதவிகள் ) கட்டுரை எழுத சொல்லலாம்.. தீர்வுகள் வைக்கலாம்..



-----  இப்போதைக்கு இணையத்தின் மூலம் தகவல் சேகரிக்க்க ஆரம்பித்து நம் வலைப்பூவில் அக்கட்டுரை தலைப்பை போட்டு  லிங் கொடுத்துடலாம்..அதை நான் செய்யும் பொறுப்பெடுத்துக்கொள்கிறேன்..

வாரம் ஒருநாள் 3 மணி நேரம் செலவிட முடிந்தால் போதுமானது.. அல்லது 3 நாள் 1 மணி நேரம் வீதம் செலவழிக்க ஒதுக்க முடியுமான்னு பாருங்கள்.. அந்த நேரம் ஒன்றாய் கூடி விவாதிக்கலாம்.. நேரமில்லை என்பவர்கள் பரவாயில்லை..







2011/5/8 Gokulnath Murugesan <gokulnath...@gmail.com>

arul stephen

unread,
May 8, 2011, 1:18:32 AM5/8/11
to ezhu...@googlegroups.com

என்னைப் ப‌ற்றி,

என்னுடைய‌ முழுப்பெய‌ர்: பால் அருள் ஸ்டீப‌ன்.

செந்த‌ ஊர்: க‌ன்னியாக்கும‌ரி மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ வில்லுக்குறி.

ப‌டித்த‌து டிப்ள‌மோ மெக்கானிக்க‌ல், இப்போது பி.சி. ப‌டித்துக்கொண்டிருக்கிறேன்... (எப்ப‌ முடியுனு கேட்க‌ கூடாது.. :))))...)

சில‌ வ‌ருட‌ங்க‌ள் ஆட்டோமொபைல் உதிரிப்பாக‌ங்க‌ள் த‌யாரிக்கும் தொழிற்ச்சாலையில் வேலை(சுமார் நான்கு வ‌ருட‌ம்)

அடுத்த‌து SAP மெட்டிரிய‌ல் சைடு தாவினேன்.. இந்த‌ பீல்டில் ஒரு இட‌த்தில் நிலையாக‌ இருக்க‌ முடியாது, ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கு சுற்ற‌ வேண்டும்( நிறைய‌ இட‌ங்க‌ள் சுற்றியாச்சி... கோவா, ம‌த்திய‌ பிர‌தேஷ், குஜ‌ராத், ஹைதிராபாத், பெங்க‌ளூர், ச‌வுதி அரேபியா.... இப்போது ம‌ஸ்க‌ட்)

இவ்வாறு ஊர் ஊராக‌ சுற்றிக்கொண்டிருப்ப‌தால் தான் நாடோடி என்று பெய‌ர் வைத்து பிளாக்கில் எழுத‌ தொட‌ங்கினேன்..

சிறு வ‌ய‌திலேயே மேடைக‌ளில் பேசும் திற‌மை என‌க்கு உண்டு, ப‌ல‌ ப‌ரிசுக‌ள் வாங்கியிருக்கிறேன்.. ப‌ல‌ விவாத‌ங்க‌ளிலும் க‌ல‌ந்தகொண்ட‌ அனுப‌வ‌ம் உண்டு... வேலையில் சேர்ந்த‌ பின்பு இது முற்றிலும் த‌டைப்ப‌ட்ட‌து... :)

எந்த‌வொரு விச‌ய‌த்திலும் நேர்மையாக‌ இருக்க‌ வேண்டும் என‌ விரும்புப‌வ‌ன்.. (இத‌னால் ப‌ல‌ரின் வெறுப்புக்க‌ளை ச‌ம்பாதித்த‌வ‌ன்)..

உங்க‌ளுட‌ன் சேர்ந்து குர‌ல் கொடுப்ப‌தில் என‌க்கு ரெம்ப‌ ம‌கிழ்ச்சி...

என்னுடைய‌ வ‌லைத்த‌ள‌த்தின் முக‌வ‌ரி: http://nadodiyinparvaiyil.blogspot.com/

 
ந‌ட்புட‌ன்,
ஸ்டீப‌ன்

2011/5/8 jmms <jmms...@gmail.com>

Snabak Vinod (SV)

unread,
May 8, 2011, 3:02:46 AM5/8/11
to ezhu...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... அனைவரைப்பற்றியும் அறிவதில்...
 
நமக்கு கிடைத்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்தி நல்ல நிலைமையில் உள்ளோம்... நம்மால் இயன்ற சிறு உதவியாவது இந்த சமுதாயதற்கு செய்ய வேண்டும், ஒரு சிறு மாற்றமாவது நம் வாழ்நாளில் இந்த சமூகத்தில் காண வேண்டும் என்ற ஏக்கம் நம் நட்புகள் அனைவரிடமும் காண முடிகிறது... உண்மையிலேயே மிக முக மகிழ்ச்சி...
 
நம் அனைவரையும் உதவி செய்யும் மனம் மட்டுமல்லாது நம் தாய் மொழியாம் தமிழ் மொழியும் நம்மை ஒன்றிணைக்கிறது... சில கருத்துக்களில் நாம் வேறு பட்டாலும், நம் இணைப்பை உறுதிப் படுத்திக்கொள்வோம்... நம்முடைய இலக்கு சேவை, விழிப்புணர்வு போல முதலில் நாம் ஏற்படுத்தும் மாற்றம் தமிழ் சமூகத்திற்காக இருக்கட்டும் என்பது என் சிறிய ஆசை, பின்னாளில் இந்திய தேசம் என நம் எல்லையை விரிவு படுத்திக் கொள்ளலாம்...
அனைவருக்கும் வேலை, வாழ்க்கை முக்கியம். நம்மில் நான்கு பேர் வெளிநாட்டில், இரண்டு பேர் தமிழ் தேசத்தில்... இது நமக்கு தடை அல்ல... முதலில் நாம் நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டும்... அதை தெளிவாக எழுச்சியுடன் பதிவிட வேண்டும்... அதற்கு இணையம் வரப்பிரசாதம். பயன்படுத்திக்கொள்வோம்...
 
அடுத்ததாக ஒன்றாக பேசுவது, கான்பாரன்ஸ் கால் அல்லது சாட் செய்ய முயற்சி செய்வோம்... அனைவருக்கும் வசதியான நேரத்தில்...
 
நம் பணியையும் இலக்கையும் இன்னும் கூர்மையாக்கும் நேரம் இது... சாந்தி அவர்கள் சொன்னதுபோல இப்போது முதல் பதிவு, அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்வோம். கோகுல் சொன்னதுபோல சாப்பாடில்லதவர்களுக்கு சாப்பாடு கொண்ட சேர்க்க அடுத்து ஒன்றிணைவோம். அடுத்த படியாக குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வழி செய்வோம்... அதாவது வாழ்வாதாரம், வேலை, கல்வி, மேற்படிப்பு, வேலை, பின்னர் சேவை, விழிப்புணர்வு... என இளைஞர்களுக்கு ஒரு வழி ஏற்படுத்துவோம்.
 
முதல் பதிவில் (என்ன சேர்க்கலாம் மெருகேற்ற என்ற) என் கருத்துக்களை இன்றே மின்னஞ்சல் செய்கிறேன்... (கொஞ்சம் வேலைப்பழு... இப்பதான் சி.இ.ஒ. வந்தார், அடுத்து சி.றி.ஒ. செவ்வாய் கிழமை வருகிறார், அது போக என் பிராஜக்ட் வேலை, நட்புகள் பலர் வெளிநாட்டில் இருப்பதால் பல குடும்ப பணிகளை இடம் காரணமாக வரமால் சமாளித்துக் கொள்ளலாம்... நான் அருகில் இருப்பதால் அனைத்து வாரங்களும் ஊருக்கு செல்கிறேன்... பல பொறுப்புகள், எதிபார்ப்புகள்... மகிழ்ச்சிதான்... இப்படியாக தவிர்க்க முடியாத காரணத்தினால் நம் பணிக்கு நேரம் சிறிதாகவே கிடைக்கிறது... நான் நேரத்தை உருவாக்குகிறேன்... இப்பணியிலும் எனக்கு உளமார்ந்த மகிழ்ச்சியே)
 
எழுச்சியுடன்,
எஸ்.வி.
2011/5/8 arul stephen <amdba...@gmail.com>

jmms

unread,
May 8, 2011, 4:34:42 AM5/8/11
to ezhu...@googlegroups.com

 ஓரளவு நம் அனைவரையும் பற்றி அறிந்துகொண்டோம்.. நாம் எல்லாருமே கஷ்டப்பட்டே வாழ்க்கையில் முன்னேறியவர்கள்..

முதல் கட்டுரை போடுமுன் சில தகவல்களை லிங்கோடு பதியலாம் . ஆக நம் எழுச்சியை பார்க்க வருபவர்கள் கண்ணில் நல்ல பல விஷயங்கள் படணும்..

உதாரணமாக திரு.சகாயம் பற்றிய லிங். மதுரை கிருஷ்ணன் , திருச்சி செந்தில்குமார் , வெளிச்சம் ஷெரின் இவர்களை பற்றி

இது ஒரு ஊக்கி..

அடுத்ததாக நாம் 6 பேரும் எழுச்சியின் தூண்கள்.. வெளி உலகிற்கு ஒருபோதும் தெரியாது..

யார் கேட்டாலும் நாம் முதல் வெற்றி களப்பணியில் நடத்தும்வரை சொல்லக்கூடாது.. ஒரு வைராக்கியம் போல.. ( அடிச்சு கூட கேட்பாங்க .. அப்ப கூட சொல்லாதீங்க..:)   )

யார் இந்த எழுச்சி என்பது ரகசியமாகவே இருக்கணும்.. அதுவே மிகப்பெரிய பலம்..

அடுத்து எழுச்சிக்கான ஒரு லோகோ .. உழைப்பாளிகள் சிலை மாதிரி , உலகை மாற்றுவது போல .. ஏதாகிலும்.. ஆனால் ஊக்கம் தருவதாய்..அதுக்கு தனி இழை ஆரம்பித்து லோகோக்களை போட்டு தேர்ந்தெடுப்போம்..

எனக்கு தோணும் சிந்தனையெல்லாம் இங்கே சொல்லிக்கொண்டிருக்கேன்.. தேவையானதை மட்டும் எடுத்துக்கலாம்..

மேன்மேலும் சேர விரும்பும் நபர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் , நம்பிக்கையானவர்கள் என்றால் மட்டுமே எழுச்சி குழுமத்தில் இணைப்போம்.. இல்லை எழுச்சி வலைப்பூவில் தொடரட்டும்..

சில மாதத்துக்கப்புரம் , பிரிவுகள் வாரியாக கருத்தாடல் செய்யும்படி போரமில் ஏற்படுத்தலாம்.. அதாவது அரசியல் , சாதி, பெண், மதம் என..( உதாரணம் - http://www.thaivisa.com/forum/ .  ஆனால் இது வலைப்பூவில் செய்ய முடியாது டொமைன் வாங்கணும் னு நினைக்கிறேன்.. யோசிப்போம்.அவசரமில்லை..)

முக்கியமா , இது மதசார்பற்ற குழுமம்.. மதம் வந்தாலே பல பிரச்னை , பிரிவினை வந்துவிடும்..ஆக இதை கொஞ்சமாதம் ஒத்திப்போடலாம்..

இரண்டாவது கட்டுரை மலர்பாலா சொன்னதுபோல மது ஒழிப்பு பற்றி போடலாம்..( தகவல் சேகரிக்கிறேன்)

கோபி சொன்ன உணவு  உதவி பற்றியதுக்கும் தனி இழை ஆரம்பித்து கருத்துகள் பகிர்வோம்..





சாந்தி


Malarbala

unread,
May 8, 2011, 7:54:56 AM5/8/11
to ezhu...@googlegroups.com


2011/5/8 jmms <jmms...@gmail.com>


 ஓரளவு நம் அனைவரையும் பற்றி அறிந்துகொண்டோம்.. நாம் எல்லாருமே கஷ்டப்பட்டே வாழ்க்கையில் முன்னேறியவர்கள்..

முதல் கட்டுரை போடுமுன் சில தகவல்களை லிங்கோடு பதியலாம் . ஆக நம் எழுச்சியை பார்க்க வருபவர்கள் கண்ணில் நல்ல பல விஷயங்கள் படணும்..

உதாரணமாக திரு.சகாயம் பற்றிய லிங். மதுரை கிருஷ்ணன் , திருச்சி செந்தில்குமார் , வெளிச்சம் ஷெரின் இவர்களை பற்றி

இது ஒரு ஊக்கி..

அடுத்ததாக நாம் 6 பேரும் எழுச்சியின் தூண்கள்.. வெளி உலகிற்கு ஒருபோதும் தெரியாது..

யார் கேட்டாலும் நாம் முதல் வெற்றி களப்பணியில் நடத்தும்வரை சொல்லக்கூடாது.. ஒரு வைராக்கியம் போல.. ( அடிச்சு கூட கேட்பாங்க .. அப்ப கூட சொல்லாதீங்க..:)   )
 
 
சிரிப்பா அடக்க முடியல பக்கத்து அறையில்  இருந்த சக ஊழியர்கள் என் அறையை நோக்கி விரைந்தார்கள்...
 
பாஸ் இது உங்க மடலா? நான் விநோத்னு நெனச்சுட்டேன்.....
 

யார் இந்த எழுச்சி என்பது ரகசியமாகவே இருக்கணும்.. அதுவே மிகப்பெரிய பலம்..

அடுத்து எழுச்சிக்கான ஒரு லோகோ .. உழைப்பாளிகள் சிலை மாதிரி , உலகை மாற்றுவது போல .. ஏதாகிலும்.. ஆனால் ஊக்கம் தருவதாய்..அதுக்கு தனி இழை ஆரம்பித்து லோகோக்களை போட்டு தேர்ந்தெடுப்போம்..

எனக்கு தோணும் சிந்தனையெல்லாம் இங்கே சொல்லிக்கொண்டிருக்கேன்.. தேவையானதை மட்டும் எடுத்துக்கலாம்..

மேன்மேலும் சேர விரும்பும் நபர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் , நம்பிக்கையானவர்கள் என்றால் மட்டுமே எழுச்சி குழுமத்தில் இணைப்போம்.. இல்லை எழுச்சி வலைப்பூவில் தொடரட்டும்..
 
 
நிச்சயம் நானும் இதேதான் நினைத்தேன்...
 
ஆள் சேர்கிறோம் என்ற பெயரில் வேறமாதிரி  ஆகிவிட கூடாது  
 

சில மாதத்துக்கப்புரம் , பிரிவுகள் வாரியாக கருத்தாடல் செய்யும்படி போரமில் ஏற்படுத்தலாம்.. அதாவது அரசியல் , சாதி, பெண், மதம் என..( உதாரணம் - http://www.thaivisa.com/forum/ .  ஆனால் இது வலைப்பூவில் செய்ய முடியாது டொமைன் வாங்கணும் னு நினைக்கிறேன்.. யோசிப்போம்.அவசரமில்லை..)

முக்கியமா , இது மதசார்பற்ற குழுமம்.. மதம் வந்தாலே பல பிரச்னை , பிரிவினை வந்துவிடும்..ஆக இதை கொஞ்சமாதம் ஒத்திப்போடலாம்..

இரண்டாவது கட்டுரை மலர்பாலா சொன்னதுபோல மது ஒழிப்பு பற்றி போடலாம்..( தகவல் சேகரிக்கிறேன்)

கோபி சொன்ன உணவு  உதவி பற்றியதுக்கும் தனி இழை ஆரம்பித்து கருத்துகள் பகிர்வோம்..
 
 
மூன்றுமே நல்லது... நிச்சயம் பகிரலாம்  
 






சாந்தி



http://punnagaithesam.blogspot.com/ =============================

‎"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader." ~ John Quincy Adams





--
 
எழுச்சியுடன்
மலர்பாலா
 

jmms

unread,
May 8, 2011, 10:14:42 PM5/8/11
to ezhu...@googlegroups.com


2011/5/8 arul stephen <amdba...@gmail.com>

எந்த‌வொரு விச‌ய‌த்திலும் நேர்மையாக‌ இருக்க‌ வேண்டும் என‌ விரும்புப‌வ‌ன்.. (இத‌னால் ப‌ல‌ரின் வெறுப்புக்க‌ளை ச‌ம்பாதித்த‌வ‌ன்)..


 
ந‌ட்புட‌ன்,
ஸ்டீப‌ன்




அப்ப சரியான பாதையில்தான் பயணிக்கின்றீர்கள்..:)

jmms

unread,
May 8, 2011, 10:16:51 PM5/8/11
to ezhu...@googlegroups.com

சிரிப்பா அடக்க முடியல பக்கத்து அறையில்  இருந்த சக ஊழியர்கள் என் அறையை நோக்கி விரைந்தார்கள்...
 
பாஸ் இது உங்க மடலா? நான் விநோத்னு நெனச்சுட்டேன்.....


பாஸ் , காந்திஜி மிக சீரியஸான நேரத்தில் நகைச்சுவையுணர்வோடு இருப்பாராம்.. ஏன்னா எதுக்கும் பயமில்லாமல் நோக்கத்தில் தெளிவா இருப்பாராம்..


சிரிக்க தெரியாதவர் சிந்திக்கவும் தெரியாதவராம்..

அதனால மனம் விட்டு சிரிப்போம் சிரிக்க வேண்டிய நேரத்தில்..

சீரியஸாகவும் சிந்திப்போம் மற்ற நேரத்தில்..

--

jmms

unread,
May 8, 2011, 10:19:01 PM5/8/11
to ezhu...@googlegroups.com
முதலில் நாம் ஏற்படுத்தும் மாற்றம் தமிழ் சமூகத்திற்காக இருக்கட்டும் என்பது என் சிறிய ஆசை,

கண்டிப்பாக..

Soundar

unread,
May 9, 2011, 1:30:32 AM5/9/11
to ezhu...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம் ,

                             கோகுல் உங்கள் அறிமுகமும் ,கருத்துக்களும் அருமை , ஒரு நாள் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நம் நாட்டிலும் நிகழும் ,அதற்க்கு நாம் விதை தைப்போம் , நிச்சயம் விருட்சம் வளரும் . வாழ்த்துக்கள் .
 
                      சாந்தி அக்கா ஆறு points நல அழுத்தமாக சொல்லி இருக்கீறார்கள் , நன்றாக உள்ளது .

          அணைத்து கருத்துகளும் நன்று .

சௌந்தர்




2011/5/9 jmms <jmms...@gmail.com>

Snabak Vinod (SV)

unread,
May 13, 2011, 2:00:40 AM5/13/11
to ezhu...@googlegroups.com
நண்பர்களே...
 
முதல் பதிவோட டிராப்ட்... இணைத்துள்ளேன்... கருத்தை சொல்லுங்கள்.
 
எழுச்சியுடன்,
எஸ்.வி.

2011/5/6 Soundar <sounda...@gmail.com>
நட்புகளே ,

அருமையான கட்டுரை , அக்காவிற்கு பாராடுதல்கள் .

இதில் நீக்குவதர்ற்கு ஒன்றும் இல்லை ,
 இத்துடன் என் மனதில் தோன்றிய ஒரே ஒரு வரி சேர்த்துக்கொள்ளலாமா ?
 அது
" நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழும்போது நம்  வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும் "

தத்துவம் மாதிரி தான் இருக்கு , ஆனால் இதை படிக்கும் போது நாமும் எதாவது செய்ய வேண்டும் என்றம் தோன்றும் என்று நினைக்கிறன் ,


நன்றி
சௌந்தர்

2011/5/6 jmms <jmms...@gmail.com>
 நாம் என்ன செய்யலாம்.?

இனிய இணைய நட்புகளுக்கு வணக்கம்..

மனிதனாக வாழ்பவர் அனைவருக்குமே தான் வாழ பிறரும் வாழணும் என்ற அடிப்படை எண்ணம் நிச்சயமாக இருக்கும்..

முதலில் தான் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை குறித்து பொருள் தேடுதலை ஆரம்பிக்கிறான்..

பொருள் தேடிவிட்டால் மட்டும் போதுமா?. நிம்மதி கிடைக்குமா?..இது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது..

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள், சூழல்கள் , அதற்கென தன்னை தயார்படுத்திக்கொள்கிறான்.

அதே போல் எந்த நாட்டுக்கு சென்றாலும் தன் வேறான தாய் நாட்டைபற்றி கவலை கொள்ளாமல் இல்லை..

தன்னை சுற்றியுள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக இருப்பதே நமக்கும் நல்லது என்ற ஒரு சுயநல எண்ணம் கூட இருக்கலாம்..

இருக்கட்டும்.. தவறில்லை.. அப்படியாவது என்னென்ன பிரச்னையில் தன் நாடு சிக்கித்தவிக்குது , எப்படியெல்லாம் சீர்படுத்தலாம் என எண்ண

ஆரம்பிக்கிறான்..தன்னால் முடிந்த பங்களிப்பை செய்ய துடிக்கிறான்..இத்தகைய எண்ணம் வராதவர்களை விரல் விட்டு எண்ணிடலாம்..

என்ன வித்யாசம் என்றால் ஒரு சிலருக்கு அவர்கள் வாழும் சூழலால் வெகு சீக்கிரம் சமூக ஆர்வம் வந்துவிடும். சிலருக்கு அனுபவத்தால் ..

பலருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்தி வந்ததும் நாமும் நம் சமூகத்துக்கு ஏதாகிலும் செய்யணும் , அதுவே நிறைவு என்ற போதில் வரலாம்..

ஆனால் வரும்..

எகிப்தில் மிகப்பெரிய புரட்சி சமீபத்தில் வந்தமைக்கு இணையம் ஒரு முக்கிய காரணி என்பது மகிழ்வான செய்தி..

ஆக நமக்கு கிடைத்துள்ள இந்த இணைய வசதி மூலம் நேர்மறையாக நாம் எப்படி நம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரலாம்.?..

ஏற்கனவே பல பதிவர்கள் சமூக பார்வையோடு மிக நல்ல பதிவுகளை , பல தகவல்கள் சேகரித்து நமக்கு தருகிறார்கள்தான்.

அவர்களுக்கு எம் பாராட்டுகள்..

இதே போல இன்னும் அதிகமான கட்டுரைகளௌம் கருத்துகள், விவாதங்கள் வருமானால் , அவை எல்லா மக்களையும் சென்றடையுமானால் நிச்சயம் நம்மால் , நாம் நினைக்கும் மாற்றம் கொண்டுவரமுடியும்..

சமூகத்தில் முக்கியமா பயமுறுத்தும் பிரச்னைகள் எவை எவை என பட்டியலிடுவோம்.. அவை தீர்ப்பதற்கான வழிமுறைகள் , வேர்களை களைவது எப்படி , என அலசுவோம்..

நன்றாக தெரியும் , அனைவருக்கும் இதில் செலவழிக்க நேரம் இருப்பதில்லை..

இணையத்துக்கு வருவதே மனம் லேசாக இருக்கத்தான்.. இதில் ஏன் இந்த வேலையெல்லாம் என நினைப்பவர்கள் உண்டு.. தவறேயில்லை.. அவசரமுமில்லை.. கட்டாயமுமில்லை.. நிதானமாக உங்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக இருந்துகொண்டு அலுத்து சலித்த பின் முடிந்தால் பங்கெடுத்தால் போதும்.. சமூக ஆரவ்ம் என்பது ஒருபோதும் கட்டாயப்படுத்தி வரவைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்..

சமூக பிரச்னைகளை குறித்து புரிதல் இருக்கணும்.. கோபம் இருக்கணும்.. அப்போதுமட்டுமே உறுதி வரும்.. ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை , பெண்ணடிமைத்தனம், குடி , ஊடகம் , அடிப்படை வசதி இல்லாமை , ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற  எதை குறித்தவது வருந்தியிருக்கணும்.., பாதிக்கப்பட்டிருக்கணும்..

அப்போது மட்டுமே எழுச்சியோடு மாற்றம் கொண்டு வர எண்ணவே முடியும்..

இங்கே இணைந்திருக்கும் நண்பர்கள் சிலர் , எல்லாவிதத்திலும் ஒத்த எண்ணமுடையவர்கள் அல்லர்.. பல்வேறு கருத்துகள் கொண்டவர்களே..

ஆனால் ஒரே ஒற்றுமை ஒரே கொள்கையாக சமூக மாற்றம் கொண்டு வர விரும்பும் எழுச்சியாளர்கள்..

நீங்களும் இதே எழுச்சியுடைவரென்றால் கை கொடுங்கள் இச்சமூக மாற்றத்துக்கு சிறு துளியாக..

எழுச்சியுடைவர் எவருக்கும் எவ்வித லாபமுமில்லை இங்கே.. சொல்லப்போனால் நஷ்டம் மட்டுமே.. ஆம். நேர விரயம், மன உளைச்சல் , தகவல் சேகரிக்கும் உழைப்பு , போன்றவை.. ஆனால் நிச்சயம் மன நிம்மதி இருக்கும்.. அது உறுதி..

இனி என்னென்ன செய்யலாம் என சக நட்புகளான உங்களிடம் எம் கோரிக்கையை வைக்கிறோம்..

கேட்க ஆவலுடன்..

எழுச்சி_முதல்பதிவு.doc

Soundar

unread,
May 13, 2011, 2:30:00 AM5/13/11
to ezhu...@googlegroups.com
அருமையாக உள்ளது வினோத் ,
பாராடுதல்கள் ,

                    சில இடங்களில் வழக்கு தமிழ் உள்ளது , அதில் மாற்றம் தேவையா இல்லை அப்படியே போடலாமா ?

சௌந்தர் 

2011/5/13 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>

Snabak Vinod (SV)

unread,
May 13, 2011, 2:44:48 AM5/13/11
to ezhu...@googlegroups.com
மாற்றிக்கொள்ளலாம்... அர்த்தம் தெளிவாக நட்புகளுக்கு விளங்க வேண்டும்... அவ்வளவே...
--எஸ்.வி
2011/5/13 Soundar <sounda...@gmail.com>

Malarbala

unread,
May 14, 2011, 1:33:56 AM5/14/11
to ezhu...@googlegroups.com
அருமை!!!! முதல் பதிவை வெளியிடலாம்..
 
வாழ்துகளும் நன்றியும்  

2011/5/13 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>
நண்பர்களே...



--
 
எழுச்சியுடன்
மலர்பாலா
 

jmms

unread,
May 14, 2011, 2:15:50 AM5/14/11
to ezhu...@googlegroups.com


2011/5/14 Malarbala <bala.sil...@gmail.com>

அருமை!!!! முதல் பதிவை வெளியிடலாம்..
 



வழிமொழிகிறேன் .. முடிந்தால் இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பையும் குறித்து இரு வரி சேர்க்கலாம் , பொதுப்படையாக  கட்சி சார்பற்று..

arul stephen

unread,
May 14, 2011, 3:46:42 AM5/14/11
to ezhu...@googlegroups.com

//ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை, பெண்ணடிமைத்தனம், குடி, ஊடகம், அடிப்படை வசதி இல்லாமை, ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற  எதை குறித்தாவது வருந்தியிருக்கணும்... பாதிக்கப்பட்டிருக்கணும்...

 

அப்போது மட்டுமே எழுச்சியோடு மாற்றம் குறித்து எண்ணவே முடியும்...//
 
 
ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை, பெண்ணடிமைத்தனம், குடி, ஊடகம், அடிப்படை வசதி இல்லாமை, ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற‌ கார‌ணிக‌ள் த‌னிம‌னித‌ வாழ்க்கை ம‌ற்றும் ச‌மூக‌த்தின் மீது எத்தைகைய‌ தாக்க‌த்தை ஏற்ப‌டுத்துக்கின்ற‌ன‌ என்ப‌தை ப‌ற்றிய‌ தெளிவான‌ புரித‌ல் இருக்க‌ வேண்டும்
 
அப்போது மட்டுமே எழுச்சியோடு மாற்றம் குறித்து எண்ணவே முடியும்...
 
 
வ‌ருந்தியிருந்தால் ம‌ட்டுமே போராட‌ தூண்டும் என்பது ச‌ரியாக‌ இருக்குமா? என்ற‌ கேள்வி என்னிட‌ம் வ‌ந்த‌தால், மேலே சொன்ன‌ ப‌டி மாற்றியிருக்கிறேன்..
ந‌ட்புக‌ளுக்கு பிடித்திருந்தால் மாற்றிக்கொள்ள‌வும்..
சில‌ எழுத்துப்பிழைக‌ளை ஏற்க‌ன‌வே சுட்டியிருந்தேன்.. அவை ச‌ரி செய்ய‌ ப‌ட‌வில்லை என்று நினைக்கிறேன்.. அவைக‌ளையும் ச‌ரிசெய்ய‌வும்..
இதை உட‌ன‌டியாக‌ ப‌திய‌லாம்.. அருமையாக‌ வ‌ந்துள்ள‌து..
ந‌ட்புட‌ன்,
ஸ்டீப‌ன்.
 
 
 


2011/5/14 jmms <jmms...@gmail.com>

Snabak Vinod (SV)

unread,
May 15, 2011, 10:01:50 AM5/15/11
to ezhu...@googlegroups.com
கண்டிப்பாக மாற்றிக்கொள்ளலாம்... நீங்கள் கூறுவது சரியாக இருக்கும்...
 
எழுத்துப்பிழை மீண்டும் ஒருமுறை ஒருவர் சரிசெய்து அனுப்பினால் நன்றாக இருக்கும்...
 
நன்றி,
எஸ்.வி.

2011/5/14 arul stephen <amdba...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages