|
---
விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.
கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்
"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"

விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
அவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்.... ---------------------------------------------------
.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்
நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.
-------------------------------------------------------------------
தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.
ரஜினி = சச்சின் (ரெண்டு பேரும் எப்பவும் டாப்தான்) கமல் = கங்குலி (திறமை இருக்கு ஆனா ஹிட் ஆக முடியல) சூர்யா = யுவராஜ் (லக் மட்டும் தான்) விக்ரம் = தோனி ( ஹிட் ஆனா பயங்கரம்தான் ஆனா ஹிட் மட்டும் தான்) மாதவன் = சிரீ சாந்த் ( மெகா பிளாப் ஆனாலும் இன்னும் கவர்ச்சி இருக்கு)
அஜித் = சேவாக் ( அடிச்சா சிக்ஸ் இல்லன்னா அவுட்) விஜய் =
அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........
|