o தாழையார் கவிதைகள் வழி அறியலாகும் பண்டைத்தமிழரின் அறிவு சார் வெளிப்பாடு
o தாழையார் கவிதைகள் புலப்படுத்தும் அறம்
o தாழையார் கவிதைகள் உணர்த்தும் தமிழர் நெறி
o தாழையார் கவிதைகள் காட்டும் தலைமை மாண்புகள்
o தாழையார் கவிதைகள் பேசும் பெருவாழ்வு
o தாழையார் கவிதைகளில் செந்தமிழர் வாழ்வியல்
o தாழையார் கவிதைகள் காட்டும் தமிழரின் உளவியல் நோக்கு
o தாழையார் கவிதைகள் உணர்த்தும் தகைசால் வாழ்வு
o தாழையார் கவிதைகள் கட்டமைத்த மனிதவள மேம்பாடும் ஆளுமைத்திறன்களும்
o தாழையார் கவிதைகளில் கிராமப்புற நிகழ்கலைகளும் மாற்றங்களும்
o தாழையார் கவிதைகளில் கவிதையின் வளர்ச்சிப் போக்குகள்
o தாழையார் கவிதைகளில் சமூகவியல் அணுகுமுறை
இத்தலைப்புகள் மட்டுமின்றி மாநாட்டு மையப்பொருண்மையான “தாழையாரின் இரு கவிதை நூல்களின் இலக்கியத்திறன்” என்னும் தலைப்புடன் தொடர்புடைய பிற தலைப்புகளிலும் கட்டுரைகள் அமையலாம்.
v அனைத்துத்துறைகளைச் சார்ந்த பல்கலைக்கழகம்/கல்லூரி/பள்ளிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகிய அனைவரிடமிருந்தும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. v ஆய்வுக்கட்டுரைகளைச் சொற்கோப்பில் (word document) A4 தாளில் 1.15 இடைவெளியுடன் ஏரியல் யூனிகோட் (Arial Unicode) எழுத்துருவில் 6 பக்கங்களுக்கு மிகாமல் கணினிவழித் தட்டச்சு செய்து worldtamilco...@gmail.com என்ற மின்ன்ஞ்சல் முகவரிக்கு 20.06.2024 ஆம் தேதிக்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
v ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவர்களின் சொந்த முயற்சியில் உருவானதாகவும், புதிய மற்றும் அசல் கண்டெடுப்புகளாகவும் இருத்தல் வேண்டும். ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுமுறைப்படி அமைவதுடன், அடிக்குறிப்புகள் மற்றும் துணைநூற்பட்டியல் ஆகியவற்றுடன் இடம் பெறுதல் முக்கியமாகும். v ஆய்வு முறைமையுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் மட்டுமே நூலாக்கம் பெறும், தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் ஆய்வுக்கோவையில் இடம்பெறும். கருத்தரங்கக் கட்டணம் இல்லை.
v வெளிநாடு வாழ் ஆய்வாளர்கள் இணைய வாயிலாகவும் மாநாட்டில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வசதிகள் உருவாக்கித் தரப்படும்.
v தேர்வு செய்யப்பட்டும் கட்டுரைகள் ISBN எண்ணுடன் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு பதிப்பாக வெளியிடப்படும். v கட்டுரையாளர்களுக்கு மாநாட்டில் பங்கேற்றமைக்கான/ ஆய்வுத்தாள் சமர்ப்பித்தமைக்கான சான்றிதழ் மற்றும் சிறப்பு விருதுகள் அனைவருக்கும் வழங்கப்படும்.
மாநாட்டுப் புரவலர் தமிழ்மாமணி முனைவர் தாழை இரா. உதயநேசன் (நிறுவனர்/தலைவர் - அமெரிக்கா முத்தமிழ்க் கூட்டமைப்பு நிறுவனர் - அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள்) தொடர்புக்கு : முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் - 9283275782 முனைவர் ஜோ.சம்பத்குமார் - 9976025731 செல்வி எம்.மேரிமுத்து - 9159698466