31ஆம் வாரம் – திங்கள் 05 11 2018

2 views
Skip to first unread message

Amirtharaj Sundar

unread,
Nov 4, 2018, 1:17:11 AM11/4/18
to undisclosed-recipients
 
 

31ஆம் வாரம் – திங்கள் 05 11 2018

இரண்டாம் ஆண்டு

 முதல் வாசகம்

 ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-4

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம்.

மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 131: 1. 2. 3

 பல்லவி: என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ``நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

            என்னுடைய சகோதரி அயல் நாட்டிலே பணியாற்றி வருபவரை, அழைத்து கேட்டேன்,

என்ன பணி தரப்பட்டுள்ளது என்று. உடனே அற்புதமாக சொன்னார். கைம்மாறு செய்ய இயலாதவர்களுக்கு பணி செய்கின்றேன், இது எனக்கு மனநிறைவை தருகின்றது என்று.

கைம்மாறு செய்ய இயலாதவர்கள் யார் என்பதனை நாம் அறிந்திருக்கின்றோம்.

ஏழைகள், வறியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஊனமானவர்கள், பல நிலைகளில் வளர்ச்சியில்லாதவர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போய்க் கொண்டு இருக்கும்.

மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்லஇ பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்இ இது பவுல் அடிகளாரின் அழைப்பு.

நற்செய்தியும் கூறுகின்றது, நேர்மையாளர்கள் உயிர்த்தெழும் போது, கைம்மாறு கிடைக்கும் என்று.

உலக புகழை, பெருமையை தேடாமல், இறைவனின் கைம்மாறை நிலைவாழ்வாக பெற முன்னெடுப்போம்.

 

          "GOD IS LOVE"

Rev. Fr. Amirtha Raj Sundar J.,
+ 91 944 314 0660;
Parish Priest,
R C Church,
PAVOORCHATHIRAM - 627 808 
Tirunelveli Dist
Tamilnadu
South India
FREE Animations for Your Email - by IncrediMail! Click Here!
BANNER1.JPG
en2.gif
31st Ord Mon Fr. Maria.mp3
181105_31st Ord Mon Readings.MP3
Nov 05 Saint of the Day.mp3
31ஆம் வாரம் Monday.doc
31ஆம் வாரம் Monday.pdf
31ஆம் வாரம் – திங்கள்.docx
31st Ord Mon.docx
November 05. St. Bertilla. 1.docx
Reply all
Reply to author
Forward
0 new messages