அறிவியல் ஆயிரம்: பூமி அழியுமா...
சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய ஒரே கோள் பூமி. பொதுவாக பூமியின் அழிவு என்பது விண்கல் மோதல், காலநிலை மாற்றம் உள்ளிட்டவையால் நிகழும் என கற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பூமியின் அழிவு மிக மெதுவாக, அமைதியாக நிகழக்கூடும். அப்போது பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், மரம், மலர், புல் கூட அழியும். ஆனால் இவை நிகழ இன்னும் 180 கோடி ஆண்டுகள் ஆகும் என அமெரிக்காவின் கொலரடே பவுல்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. சூரியன், மெதுவாக அதிகப் பிரகாசமாகிக் (வெப்பநிலை உயர்வு) கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம்.