அறிவியல் ஆயிரம் : நிறமற்ற திரவம்
இந்திய எரிசக்தி துறையில் தற்போது 'எத்தனால்' பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எத்தனால் என்பது கரும்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் ஒருவகை எரியக்கூடிய, நிறமற்ற ஆல்கஹால். இது வாகன உயிரி எரிபொருளாகவும், மருந்து தயாரிப்புகள், கிருமிநாசினிகளில் கரைப்பானாகவும், மதுபானங்களில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப் படுகிறது. இது 'எத்தில் ஆல்கஹால்' எனவும் அழைக்கப் படுகிறது. உலகின் மொத்த எத்தனால் உற்பத்தியில் 80 சதவீதம் முதலிரண்டு இடத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளது. மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது.
தகவல் சுரங்கம் : ஒரே எரியும் எரிமலை
இந்தியாவில் உள்ள எட்டு யூனியன் பிரதேசத்தில் ஒன்று அந்தமான் நிகோபர் தீவுகள். இதன் தலைநகர் விஜயபுரம் (பழைய பெயர் போர்ட் பிளேர்). இங்குள்ள 836 தீவுகளில் ஒன்று பாரென் தீவு. இங்கு மக்கள் வாழ்வதில்லை. இதன் பரப்பளவு 8.34 சதுர கி.மீ., நீளம் 3.4 கி.மீ., அகலம் 3.1 கி.மீ., கடற்கரையின் நீளம் 12.38 கி.மீ., இத்தீவில் தான் இந்தியாவில் உள்ள ஒரே உறுதி செய்யப்பட்ட மற்றும் எரியும் எரிமலை இருக்கிறது. இது 1787ல் முதன்முறையாக வெடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 10 முறையும், கடைசியாக 2025ல் இந்த எரிமலை வெடித்து, சாம்பல் புகை 10 ஆயிரம் அடி உயரம் சென்றது.