அறிவியல் ஆயிரம்: பழமையான குகை ஓவியம்
தகவல் சுரங்கம் : பராக்கிரம தினம்
உலகின் பழமையான மலை குகை ஓவியம், இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஆஸ்திரேலியாவின் ஜிரிப்த் பல்கலை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அக்கால மனிதர்களின் படைப்பாற்றலை தெரிந்து கொள்ள உதவுகிறது. சிவப்பு நிறத்தில் 'கை' வடிவில் இந்த ஓவியம் வரையப்பட்டுஉள்ளது. இது 67,800 ஆண்டுகள் பழமையானது. இது இப்பகுதியில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஓவியத்தை விட 15 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த ஓவியம் எந்தக்காலத்தை சேர்ந்தது என கண்டறிய 'நவீன யுரேனியம் சீரிஸ் டேட் தொழில்நுட்பம்' பயன்படுத்தப்பட்டது.
தகவல் சுரங்கம் : பராக்கிரம தினம்
சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை திரட்டி இந்திய தேசிய ராணுவப் படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்து போராடினார். இவரது பிறந்த தினமான ஜன. 23, மத்திய அரசு சார்பில் 'பராக்கிரம தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. இவர் 1897ல் ஒடிசாவின் கட்டாக்கில் பிறந்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக, சிவில் சர்வீஸ் பணியை ஒரே ஆண்டில் ராஜினாமா செய்தார். நாட்டுக்காக தன் வாழ்வில் 20 ஆண்டுகளில் ௧௧ முறை சிறையில் இருந்தார். 'ஜெய்ஹிந்த்' முழக்கத்தை மக்களிடம் பதிய செய்தார்.