அறிவியல் ஆயிரம்:தற்கொலையை அதிகரிக்கும் காற்றுமாசு
:
தற்கொலை என்பது ஒரு கோழைத்தனம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்நிலையில் அதிகரிக்கும் வெப்பநிலை, காற்றுமாசு ஆகியவையும் தற்கொலைக்கு காரணமாகிறது என அமெரிக்காவின் யுடாக் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 2000-2016ல் பதிவான 7500 தற்கொலை சம்பவங்களை ஆய்வு செய்தது. இதில் ஒவ்வொரு 9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உயர்வுக்கும், தற்கொலை எண்ணம் 5% அதிகரிக்கிறது. மேலும் நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் உள்ளிட்ட வாயுக்கள் அதிகரிக்கும் போது, தற்கொலை எண்ணம் உயர்கிறது என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்:தேசிய தடுப்பூசி தினம்
காசநோய், போலியோ, அம்மை, கொரோனா உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களை தடுப்பூசியால் வெல்ல முடிந்தது. இந்தியாவில் குழந்தைகள், கர்ப்பிணி
் 16ல் முதன்முறையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்துதல், தடுப்பூசியின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யும் சுகாதார ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் மார்ச் 16ல் தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது.