அறிவியல் ஆயிரம் : செயற்கை நுண்ணறிவும்... தண்ணீரும்
செயற்கை நுண்ணறிவும்... தண்ணீரும்
உலகில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) பயன்பாடு பரவலாகி வருகிறது. இந்தியாவில் ஏ.ஐ., துறையில், 2024 - 2025ல் 15 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2030ல் 36 ஆயிரம் கோடி லிட்டராக அதிகரிக்கும் என ஆய்வு தெரிவித்துள்ளது. ஏ.ஐ., தொழில் நுட்பத்துக்கான டேட்டா சென்டர்களில் பயன்படுத்தும் சர்வர்களை குளிர்விப்பதற்கு, ஏ.ஐ.,க்கு தேவையான செமிகண்டக்டர் சிப் உள்ளிட்ட வன்பொருள் (ஹார்டுவேர்) தயாரிப்பதற்கு, இதற்கு தேவையான மின்சார உற்பத்தி (அனல் மின் நிலையம்) போன்றவற்றுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
தகவல் சுரங்கம் : உலக காற்று, முதியோர் பாதுகாப்பு தினம்
* உயிரினங்கள் வாழ காற்று மிக அவசியம். காற்றுமாசு காரணமாக உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். காற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜூன் 15ல் உலக காற்று தினம் கடைபிடிக்கப் படுகிறது.
* ஐ.நா., சார்பில் ஜூன் 15ல் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப் படுகிறது. உலகில் 2030ல் 60 வயதுக்கு மேற்பட்டோர் 140 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 'விழிப்புணர்வுக்கு மறுபக்கம் : முதியோர் மீதான வன்முறை தடுப்பை செயல்படுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.