அறிவியல் ஆயிரம் தினமலர்

519 views
Skip to first unread message

mohan alagar

unread,
Sep 8, 2018, 9:47:09 PM9/8/18
to Valluvan Paarvai, inaiathendral
பெருங்காயத்தின் மறுபக்கம் உணவில் வாசனைக்காகவும், ஜீரணத்திற்காகவும்,
சேர்க்கப்படும் பெருங்காயம் ஆயுர்வேத மருத்துவத்தில் உணவியல் மண்டலம்
தொடர்பான மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது. விவசாயத்தில் பெருங்காயம்
பூச்சிகளை கட்டுப்படுத்தவும், காய்ப்புத் திறனை அதிகரிக்கவும்
பயன்படுகிறது. இதே அடிப்படையில் மனிதர்களுக்கு பாலியல் உணர்வை
துாண்டவும், மலட்டுத் தன்மையை நீக்கவும், நாட்டு மருத்துவத்தில்
பெருங்காயம் பரிந்துரை செய்யப்படுகிறது. அதனால் தான் அமாவாசை போன்ற விரத
நாட்களில் பெருங்காயம் சேர்ப்பதில்லை.தகவல் சுரங்கம்உத்தரகண்டில் ஒரு
'மானசரோவர்'கைலாய மலையில் மானசரோவர் ஏரி உள்ளது. உத்தரகண்டின் கோடை
வாசஸ்தலமான நைனிடாலில் உள்ள ஏரியை, வெறும் சுற்றுலா தல ஏரியாக
மட்டுமல்லாமல், மானசரோவர் ஏரிக்கு இணையாக புனித ஏரியாக கருதுகின்றனர்.
இந்த ஏரி, முத்து வடிவில் உள்ளது. இங்குள்ள தண்ணீர் மானசரோவரிலிருந்து
துளையிட்டு கொண்டு வந்ததாக நம்பப்படுகின்றது. ஹூமாயூன் மலைப்பகுதியில்
உள்ள நைனிடால் 64 சக்தி பீடங்களில் பார்வதியின் கண் விழுந்த இடமாக
கருதப்படுகிறது. நயன் என்றால் கண். தால் என்றால் ஏரி. கண் விழுந்த ஏரி.
எனவே நைனிடால் எனப்படுகிறது.

mohan alagar

unread,
Sep 9, 2018, 9:47:26 PM9/9/18
to Valluvan Paarvai, inaiathendral
நீண்ட ஆயுளின் ரகசியம்அமெரிக்காவில் செப்., மாதத்தை தேசிய தேன் மாதமாகக்
கொண்டாடுகின்றனர். தேனீ வளர்ப்பு பண்ணைகள், தேன் பயன்பாட்டை அதிகரிக்கும்
விதமாக கொண்டாடப்படுகிறது. உலகில் கொம்புத் தேன், மலைத்தேன்,
மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு
வகை உள்ளன. டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர்
வாழ்ந்த ரகசியத்தில் “தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை
முகர்ந்து வருகிறேன். இதனால் நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன்”
என கூறினார்.தகவல் சுரங்கம்பாசிசத்தின் தந்தைபாசிசம் என்பது அரசாட்சி
முறைகளில் ஒன்று. காலப்போக்கில் அது விமர்சிக்கப் பயன்படும்
சொல்லாகிவிட்டது. 1920களில் துவங்கி 1943 வரை இத்தாலி நாட்டில் ஆட்சிப்
பொறுப்பிலிருந்த முசோலினியின் கட்சியின் பெயரே பாசிசுட்டுக் கட்சி. இவர்
தான் பாசிச சிந்தனையின் தந்தை என அழைக்கப்படுகிறார். பாசிச கட்சியின்
பண்புகளைப் பெற்றிருந்த பிற ஆட்சிகளும் கட்சிகளும் பாசிஸ்டுகள் என்றே
வழங்கப்படுகின்றன. 1945ல் பாசிச அரசுகள் இரண்டாம் உலகப் போரில் தோற்ற
பின்னர் பாசிசமும் பாசிஸ்டுகளும் இழி சொற்களாகி விட்டன.

mohan alagar

unread,
Sep 10, 2018, 9:44:22 PM9/10/18
to Valluvan Paarvai, inaiathendral
விழிப்புணர்வு தலைநகர்
உலகின் 'ஆணுறைகளின் தலைநகர்' என தாய்லாந்தின் பாட்டயா நகரை கூறுவர்.
ஓரினச் சேர்க்கை மீதான தடையை நீக்க வழக்கு தொடுத்த நாஜ் அறக்கட்டளை,
ஆணுறை பயன்படுத்துவதால் எச்.ஐ.வி., / எயிட்ஸ் பாதிப்பை தடுக்கமுடியும்
என்ற விழிப்புணர்வை முதன்முதலில் ஏற்படுத்தியது. எச்.ஐ.வி
கண்டுபிடிப்பதற்கு முன்னர், 'குழந்தைப் பேற்றை தடுக்க' என்ற கருத்தில்
இந்தியாவில் ஆணுறை அறிமுகமானது. நிரோதனம் என்றால், சமஸ்கிருதத்தில் தடை
என அர்த்தம். எனவே முதன்முதலில் ஆண் உறையின் பிராண்ட் பெயர் 'நிரோத்' என
வைத்தனர்.

தகவல் சுரங்கம்

விரைவில் முடிந்த வழக்கு
இந்திய வரலாற்றிலேயே மகாத்மா காந்தி கொலை வழக்கு, விரைவில் முடிந்த கொலை
வழக்கு. 22 மாதங்களில் கோட்சே துாக்கிலிடப்பட்டார். 1948 மே இறுதியில்
தொடங்கி ஏழு மாதங்கள் மட்டுமே நடந்தது. நீதிபதி ஆத்ம சரண் விசாரித்தார்.
விசாரணை வெளிப்படையாக நடந்தது. உரிய அனுமதி பெற்று வழக்கு விசாரணையை
நேரில் பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேல் முறையீடு
வழக்கு விசாரணை பஞ்சாப் உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. ஒன்றரை மாத
விசாரணைக்குப் பின் உயர்நீதிமன்றம், கோட்சே, ஆப்தேக்கு துாக்குத்
தண்டனையை உறுதி செய்தது.

mohan alagar

unread,
Sep 11, 2018, 9:29:15 PM9/11/18
to Valluvan Paarvai, inaiathendral
கொழுக்கட்டை மந்தாரை
தாவர வகைகளில் 'கொழுக்கட்டை மந்தாரை' என்ற ஒரு மரம் உள்ளது. இது அந்தி
மந்தாரையிலிருந்து மாறுபட்டது. இதன் பூக்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை
நிறத்தில் இருக்கும். பூக்களின் நடுவில் காபிக்கொட்டை நிறத்தில் உள்ள
அமைப்பு கொழுக்கட்டையில் பூரணம் வைத்ததை போன்று இருப்பதால் 'கொழுக்கட்டை
மந்தாரை' என பெயர் பெற்றது. இந்த மரத்தில் ஆண் மரம், பெண் மரம் என இரு
வகைகள் உள்ளன. பெண் மரம் பூ பூக்கும். ஆண் மந்தாரையின் பெரிய இலைகள் உணவு
உண்ணும் இலைகள் தைக்க பயன்படும்.

தகவல் சுரங்கம்

திலகரின் விநாயகர் சதுர்த்தி
சமய விழாவான விநாயக சதுர்த்தியை 1893ம் ஆண்டிலிருந்து, சமூக விழாவாக
மாற்றியவர் பால கங்காதர திலகர். முதன் முதலில் புனேயில் கொண்டாடப்பட்ட
விநாயகர் சதுர்த்தி, பின்பு தான் மும்பைக்கு பரவியது. பேஷ்வாக்களின்
குலதெய்வமாக விநாயகர் இருந்தார். பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்கு பின்,
விநாயகர் சதுர்த்தி வீட்டுக்குள் கொண்டாடப்படும் விழாவானது. பிரிட்டிஷ்
ஆட்சியில் திலகர் இதனை மீண்டும் சமூக விழாவாக மாற்றினார். இது தேச உணர்வை
வளர்க்க உதவும் என நம்பினார்.

mohan alagar

unread,
Sep 12, 2018, 9:13:47 PM9/12/18
to Valluvan Paarvai, inaiathendral
மூஞ்சுறு காரணப்பெயர்
சுண்டெலி, வெள்ளெலி, கல்லெலி, சரவெலி, பெருச்சாளி, வயல் எலி, வீட்டெலி என
எலிகளில் உள்ள பல வகைகளில் விநாயகரின் வாகனமான மூஞ்சுறுவும் ஒன்று.
ஐரோப்பா மூஞ்சூறு, அந்தமான் மூஞ்சூறு, குள்ள மூஞ்சூறு, நாட்டு மூஞ்சூறு
என பல வகை உள்ளன. இவை மக்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை.
அதனால் யாரும் கொல்வது இல்லை. இதன் தலை, மற்ற எலிகளில் இருந்து வேறுபட்டு
இருக்கும். மூஞ்சி நீண்ட சிறு விலங்கு என்பதால் மூஞ்சுறு ஆனது.
வாய்ப்புறம் கூம்பு வடிவத்தில் இருக்கும். இடையூறு ஏற்படும்போது இவை
கீச், கீச் என ஒலி எழுப்பும்.

தகவல் சுரங்கம்

மோதகத்தால் 'மொழி அறிவு'
கொழுக்கட்டைக்கு சமஸ்கிருதத்தில் மோதகம் என பெயர். இது சாலி வாகன
ராஜாவுக்கு சமஸ்கிருதம் மீது பற்றை ஏற்படுத்தியது. மன்னன், மனைவியுடன்
குளத்தில் நீராடினார். அப்போது அன்பின் மிகுதியால் தண்ணீரை வாரி
இறைத்தார். அறிவாளியான மனைவி 'மோதகம்' என்றாள். மோதகம் என்றால் மாஉதகம்.
'மா' என்றால் 'கூடாது'. தண்ணீரை வாரி இறைக்க வேண்டாம் என கூறினாள்.
மன்னனோ, மனைவி மோதகம் கேட்கிறாள் என நினைத்து, மோதகம் (கொழுக்கட்டை)
கொண்டு வர ஆணையிட்டார். பின் அறியாமையை உணர்ந்து, சமஸ்கிருத மொழியை கற்று
பண்டிதரானார்.

mohan alagar

unread,
Sep 13, 2018, 9:15:21 PM9/13/18
to Valluvan Paarvai, inaiathendral
வேதிப்பொருளுக்கு மாற்று
சிலிகான் பாறைகள் வேதி மாற்றங்கள் அடைந்து களிமண் உருவாகிறது.
குஜராத்தில் அனைத்து வகை பொருட்களையும் களிமண்ணில் தயாரிக்கின்றனர்.
டெப்லான் வேதிப்பொருள் ஒட்டாத தன்மையை தரும் என்பதால், தோசைக்கற்களில்
கோட்டிங் பூசப்படுகிறது. ஆனால் இது உடல் நலனை பாதிக்கும். களிமண்
தோசைக்கல், டெப்லான் இல்லாமலே ஒட்டாத தன்மையை தருகிறது. களிமண்ணில்
இருந்து தயாரிக்கப்படும் குளிர்சாதன பெட்டி, மின்சாரம் எதுவும் இல்லாமல்
நீர் மற்றும் காற்று மூலமாக குளிர்ச்சியான சூழலை தருகிறது.

தகவல் சுரங்கம்

தேசிய மொழி இல்லாத தேசம்
இந்தி மொழி 1952 செப்.14ல் அறிவிக்கப்பட்டதால் செப்.14-28 வரை இருவார
விழாவாக இந்தி கொண்டாடப்படுகிறது. இதனை இந்தி மொழியில் 'இந்தி பக்வாடா'
என்கின்றனர். இந்தியை தேசிய மொழி என்கிறோம். ஆனால் தேசிய மொழி, இந்தி
என்பதற்கு எவ்விதமான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இந்தியும் ஆங்கிலமும்
மத்திய அரசின் அலுவல் மொழிகளாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டப்பிரிவு 343ஐ, மேற்கோள்காட்டி குஜராத் உயர்நீதிமன்றம், இந்தி தேசிய
மொழி அல்ல; மத்திய அரசின் அலுவல் மொழி என்பதை உறுதி செய்துள்ளது.

Palaniappan kandasamy

unread,
Sep 14, 2018, 8:58:37 AM9/14/18
to brail...@googlegroups.com
நீங்கள் 52 என்கிறீர்கள், ஆனால் வானொலி செய்தியில் 1949-ஆம் ஆண்டு செப்ட்டெம்பர் 14-ஆம் தேதி இந்தி நம்நாட்டின் தேசியமொழியாக அரிவிக்கப்பட்டதால் அந்நாளை தேசிய இந்தி நாளாக கொண்டாடுவது எனதீர்மானிக்கப்பட்டதாக கூறுகின்றனர் எது சரி? பல்வேரு மதம் மொழி பண்பாடுகளை கொண்டுள்ள ஒரு நாட்டில் எந்த குரிப்பிட்ட ஒரு சமையத்தையோ மொழியையோ தேசிய மதம் தேசியமொழி என அரிவிப்பது ஏர்ப்புடையதல்ல. வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் தொலை தொடர்பு துரை வாழ்வூதியர் கோவை 4.
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


---
This email has been checked for viruses by Avast antivirus software.
https://www.avast.com/antivirus

mohan alagar

unread,
Sep 16, 2018, 5:35:24 AM9/16/18
to Valluvan Paarvai, inaiathendral
முரண்பாடான மது பழக்கம் மது பழக்கம் ஆண்களுக்கு பாலியல் ஆர்வத்தை
துாண்டுகிறது. இதனால் ஆண்மை குறைவு உள்ளவர்கள் மது பழக்கத்திற்கு
ஆளாகின்றனர். ஆனால் இதற்கு முரண்பாடாக மது பழக்கம் திருப்திகரமாக உடல்
உறவு கொள்ள முடியாமல் செய்து விடுகிறது என சமீபத்திய ஆய்வுகள்
கூறுகின்றன. இத்தகைய கருத்தை ஷேக்ஸ்பியர் தனது நாடகமான மாக்பெத்தில்
குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது தான் இது மருத்துவ ரீதியாக
நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் விந்தணுவில் உயிரணுக்களின் எண்ணிக்கை
குறைவதற்கு, மது பழக்கமும் ஒரு காரணம் என்பது ஆராய்ச்சியின் முடிவு.தகவல்
சுரங்கம்லடாக் திருவிழாகாஷ்மீரில் லடாக் மாவட்டத்தில் உள்ள லே நகரில்,
ஆண்டுதோறும் செப்டம்பரில் லடாக் திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீநகரையும் தாண்டி தொலைவில் உள்ள லடாக் மாவட்டத்திற்கு பனிப்பொழிவு,
பாதுகாப்பு காரணங்களுக்காக யாரும் செல்வது கிடையாது. லடாக் சுற்றுலாவை
ஊக்குவிக்க இத்திருவிழா கொண்டாடப் படுகிறது. இந்த லடாக் மாவட்டம்,
நாட்டிலேயே 2வது பெரிய மாவட்டம். திருவிழாவில் கலந்து கொள்வோர் 'சிந்து
தர்ஷன்' எனும் நிகழ்ச்சியின் மூலமாக, சிந்து நதியின் அழகை அனுபவிக்க
முடியும். திபெத்தியர்கள் லடாக்கில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

mohan alagar

unread,
Sep 16, 2018, 9:57:02 PM9/16/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

புரட்டாசி பட்டம்
பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை. பட்டத்துக்கு ஏற்றவாறு
பயிர் செய்வது மிகவும் முக்கியம். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு
முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் தான் 'பட்டம் தவறினால் நட்டம்'
என்ற பழமொழி வந்தது. தமிழ் மாதங்களை கணக்கிட்டு அந்தந்த பட்டத்துக்கு
ஏற்ற பயிர்களை சாகுபடி செய்வார்கள். தென்மேற்கு பருவ மழை முடிந்து
வடகிழக்கு பருவ மழை தொடங்கும் காலம் என்பதால் புரட்டாசி பட்டம் சிறப்பு
பெறுகின்றது. புரட்டாசி பட்டத்தில் கத்தரி, கீரை, முள்ளங்கி , பூசணி,
முருங்கை, பீர்க்கன், சிறு தானியங்கள் பயிரிடுவர்.


தகவல் சுரங்கம்

புரட்டாசி மாத பழமொழிகள்

துாய தமிழில் புரட்டாசியை 'கன்னி' என குறிப்பிடுவர். புரட்டாசி பொன்
உருகக் காயும். மண் உருகப் பெய்யும் என்ற பழமொழி, புரட்டாசியில் வெயிலும்
கடுமையாக இருக்கும். மழையும் பெய்யும் என்பதை காட்டுகிறது. 'புரட்டாசி
காற்று புரட்டி அடிக்கும்' என்ற பழமொழி புரட்டாசியின் காலநிலையை
காட்டும். 'பின்னுக்கு இருக்கு புரட்டாசி' என்ற பழமொழி, ஒருவர் தம்
வாழ்க்கையில் உயர்வான நிலையில் இருக்கிறார் என்பதற்காக, மற்றவர்களை
நிந்திக்க கூடாது. ஏனெனில் இலையுதிர் காலத்தில், உதிராத இலைகள் கூட
புரட்டாசியில் உதிர்ந்து விடும் என்பதை காட்டுகிறது.

mohan alagar

unread,
Sep 17, 2018, 9:16:48 PM9/17/18
to Valluvan Paarvai, inaiathendral
குடும்பத்தில் குழப்பம்காவிரி நீர் விவகாரத்தில், அரசியல் கட்சிகள் மீது
நம்பிக்கை இழந்த தமிழக---கர்நாடக விவசாயிகள், 2003ல், பல்வேறு துறைகளில்
பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகளை,
இருமாநிலங்களிலும் இருந்து தேர்வு செய்து, 'காவிரி குடும்பம்' என்ற
அமைப்பை உருவாக்கினர். இவர்களே அணைகளுக்கு சென்று நீர் இருப்பை
பார்வையிடுவது, மழை காலத்துக்கேற்ப எந்தெந்த பயிர் வகைகளை பயிரிடுவது
ஆகியவற்றை தீர்மானித்தனர். காலப் போக்கில் மீண்டும் அரசியல்வாதிகள்
கைக்கே காவிரி குடும்பம் சென்று விட்டது.
தகவல் சுரங்கம்வீணாகாத மீன்கள் புரட்டாசி மாதம் தமிழகத்தில் மீன்
பயன்பாடு குறையும். விலையும் குறையும். மீன்களை வீணாக்காமல் பதப்படுத்த
சூரிய ஒளி உலர்த்தி எனப்படும் சோலார் டிரையர் பயன்படுகிறது. இதற்கு அரசு
மானியம் வழங்குகிறது. சோலார் பேனலில் விழும் சூரிய ஒளியின் ரேடியேஷன்,
வெப்பக் காற்றாக மாற்றப்படுகிறது. இது உலர்ப்பானுக்குள் செலுத்தி மீன்களை
உலர்த்துகிறது. மீன்களை பதப்படுத்த 55 டிகிரியில் வெப்பக் காற்று
செலுத்தப்படுகிறது. இதனால் கிருமிகள், பாக்டீரியாக்கள் முற்றிலும்
அழிக்கப்படுகின்றன. எவ்வகை மீனையும் வீணாகாமல் கருவாடாக மாற்றி
பயன்படுத்தலாம்.

mohan alagar

unread,
Sep 18, 2018, 9:19:38 PM9/18/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

மின்சார பிரச்னைக்கு தீர்வு

நிலக்கரி தவிர்த்து புதிய முறைகளில் மின்சாரம் தயாரிப்பதற்கான பல்வேறு
நுட்பங்கள் அவசியம். கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை
பரவலாக்க வேண்டும். இம்முறை நார்வே, ஜப்பான், இங்கிலாந்து போன்ற
நாடுகளில் நடைமுறையில் உள்ளன. கடல் அலைகளின் வேகமே, மின்சார தயாரிப்பில்
முக்கிய காரணியாக உள்ளது. கடல் அலைகளில் பல வகைகள் உள்ளன. புவிஈர்ப்பு
விசையால் தோன்றும் பூத அலைகளில் இருந்தே, அதிகளவில் மின்சாரம் தயாரிக்க
முடியும்.
தகவல் சுரங்கம்

நிலக்கரியை போற்றும் ரயில்
நிலக்கரிக்கு 'கருப்பு வைரம்' என சிறப்பு பெயர் உள்ளது. ஹவுராவில்
இருந்து தன்பாத் வரை 'பிளாக் டைமண்ட் எக்ஸ்பிரஸ்' ஓடுகிறது.
ஜார்க்கண்டில் உள்ள 'தன்பாத்' இந்தியாவின் நிலக்கரி தலைநகரம். இங்கு
இந்திய நிலக்கரி பள்ளி, நிலக்கரி பாதுகாப்பு இயக்குனரகம், மத்திய சுரங்க
ஆராய்ச்சி கழகம் உட்பட பல முக்கிய நிலக்கரி சார்ந்த நிறுவனங்கள் உள்ளன.
தன்பாத்தில் நிலக்கரி சுரங்கங்களை சார்ந்தே வாழ்க்கை முறையும்,
டவுன்ஷிப்பும் உள்ளன. ஹவுராவில் இருந்து ஏராளமான மக்கள் தன்பாத்திற்கு
வந்து பணி செய்கின்றனர். இந்த ரயில் ஸ்டீல் நகரமான துர்காபூர் வழியாக
செல்கிறது.

mohan alagar

unread,
Sep 20, 2018, 11:39:05 AM9/20/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

மின்சாரத்தை சேமிக்கும் நட்சத்திரம்
ஐந்து நட்சத்திர ஓட்டல், மூன்று நட்சத்திர ஓட்டல்களை போல்,
பொருட்களுக்கும் நட்சத்திர அந்தஸ்து தரப் படுகிறது. மத்திய அரசின் ஆற்றல்
சேமிப்பு வழிகாட்டி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற நட்சத்திர குறியீடுகள்
உள்ள பொருட்கள், மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்தி இயங்குபவை என
கூறுகிறது. இதுவரை பிரிட்ஜ், 'ஏசி' போன்றவற்றுக்கு மட்டுமே நட்சத்திர
குறியீடு வழங்கப்பட்டது. தற்போது மின் சேமிப்பு விழிப்புணர்வை பரவலாக்க
விவசாயிகள் பயன்படுத்தும் பம்புசெட், மின் மோட்டார், 'டிவி', எரிவாயு
அடுப்புக்கும் நட்சத்திர அந்தஸ்து குறியீடுகள் வழங்கப்படுகின்றன.


தகவல் சுரங்கம்
ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
புரட்டாசியில் ஸ்ரீரங்கம் களைகட்டுகிறது. ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் 'வெள்ளி
பூணார் வெண்கலம் ஆனார்' என்பது பழமொழி. தங்க நகைகளை தவிர, வெள்ளி நகைகளை
அணிய மாட்டார். பித்தளை வெண்கல பாத்திரங்களை சமையலுக்கு
பயன்படுத்தமாட்டார்கள். புது மண்பானைகளை தான் கோயிலில் சமையலுக்கு
பயன்படுத்துவர். இந்த மண்பாத்திரத்தை சுவர்ண பாத்திரம் என்று கூறுவர்.
உற்ஸவ காலத்தில் ஒவ்வொரு நேரத்துக்கும், இடத்துக்கும் உற்ஸவரின் நடை
மாறுபடும். இதனால் தான் காஞ்சி குடை, திருப்பதி வடை, அரங்கர் நடை என்ற

mohan alagar

unread,
Sep 21, 2018, 9:54:35 PM9/21/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

புரட்டாசி எள்

புரட்டாசி விரதத்தில் எள் சேர்ப்பது இந்து சமயத்தில் சில பிரிவினரின்
வழக்கம். வயல்களில் நெல் அறுவடை முடிந்து எள்ளைப் பயிரிடுவர். அதனால்
தான் நெல்லுக்குப் பின், எள் என்ற பழமொழி வந்தது. இந்தியா முழுவதும்
பயிரிடப்படும் எள், செடி வகையைச் சேர்ந்தது. எள்ளில் வெள்ளை, கருமை,
செம்மை என 3 பிரிவுகள் உள்ளன. எள்ளைப் பிழிந்து நெய் போன்ற திரவம்
எடுக்கப்பட்டதால்'எள் நெய்' என அழைக்கப்பட்டது. பின் அதுவே எண்ணெய் ஆனது
என்பர். கருப்பு எள்ளில் அதிகளவில் கால்சியம் உள்ளது. அதனால்
'இளைத்தவனுக்கு எள்ளு' பழமொழி வந்தது.
தகவல் சுரங்கம்
ஆடைப்புரட்சி

'புரட்சி' என்பது புரட்டுதல், அடியோடு மாற்றுதல் என்னும் வேர்ச்சொல்லில்
இருந்து வந்தது. தன் இரண்டாவது மதுரை வருகையான 1921ல் செப்.22ல்
காந்தியடிகள் முழங்காலளவு மட்டுமே ஆடை அணிவேன் என விரதம் மேற்கொண்டது
வரலாற்றில் 'ஆடைப் புரட்சி' என பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரா.அ.ராமசாமி
எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' புத்தகத்தில் 'ஆடையில் புரட்சி' என்ற
தலைப்பிலேயே ஒரு பெரிய அத்தியாயம் உள்ளது. முதன்முதலில் முழங்காலளவு
வேட்டியை கட்ட உதவியவர் விருதுநகர் பழனிக்குமாரு பிள்ளை என்ற தேசிய
தொண்டராவார்.

mohan alagar

unread,
Sep 22, 2018, 9:42:24 PM9/22/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

ஆன்மிகத்தில் அறிவியல்
புரட்டாசியில் துளசி சிறப்பிடம் பெறுகிறது. ஆண்கள் காதிற்கு பின்புறம்
துளசியை வைக்கும் வழக்கம் உள்ளது. மனித உடலில் மிகக் கூடுதல் உறிஞ்சும்
சக்தியுடைய பகுதி காதுக்குப் பின்புறம்தான். துளசியைக் காதுக்கு
பின்புறம் வைக்கும்பொழுது துளசி இலையில் உள்ள மருத்துவக் குணங்கள்
முழுமையாக உறிஞ்சப்பட்டு உள் செல்வதால், தலையில் நீர் கோர்க்காமல்
துளசியின் இதமான சூடு நம்மைக் காக்கிறது. இதனால் மூளை மண்டலமும் பலம்
பெறுகிறது. துளசிச்செடி, மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை
வெளியிடும் தன்மை கொண்டது.
தகவல் சுரங்கம்

ரகசிய மொழி
பரிபாஷை என்றால் ரகசிய மொழியில் பேசுவது. பாண்டவர்களில் குதிரைகளை
பராமரிப்பதில் வல்ல நகுலனால் ஏற்படுத்தப்பட்டது. நகுலன் குதிரைகளின் மொழி
அறிந்தவர். அதற்கு பரிபாஷை என்று பெயர். பின்னாளில் வழக்கத்தில் உள்ள
சொல்லையோ சொல் தொடரையோ உபயோகிக்காமல் வேறு சொல்லையோ, சொல் தொடரையோ
உபயோகித்து மறைமுகமாக குறிப்பிடுவது பரிபாஷை என ஆனது. பரிபாஷை மிகுந்தது
வைணவ ஆலயங்களே. சர்க்கரைப் பொங்கலை குடான்னம் என்பர். வாசலில் இடும்
கோலத்தினை 'திருப்பிண்டி', பாக்கினை 'அடைக்காய்' என்பர்.

Mr.Kabeer kpm

unread,
Sep 23, 2018, 8:21:49 AM9/23/18
to brail...@googlegroups.com
I read about Tulasi plant and its benefits.
Do you have any scientific evidence?
If so, which journal and its year of publication.
We can associate any thing with any religion/practice, as in the case
of Nilavembu with Dengue fever.
But scientific temper is significant.
> --
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "Brailleacl" group.
> To post to this group, send email to brail...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> brailleacl+...@googlegroups.com
>
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "Brailleacl" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to brailleacl+...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
SYED AHMED KABEER MBA., M.Phil., (Ph.D.)
Doctoral Research Scholar
Department Of Management Studies
Pondicherry University
Ph: 8122 399 441 / 978 978 4788

mohan alagar

unread,
Sep 24, 2018, 5:33:40 AM9/24/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

மரக்கன்றுகள் வளர்ப்பில் மாற்றங்கள்
தற்போதைய சூழலில் சுற்றுச்சூழலை மேம்படுத்த, பசுமையை அதிகரிக்க
வேண்டியுள்ளது. மரக்கன்றுகளை நட்டு, அவை வளர்வதற்கு சில ஆண்டுகள் ஆகும்.
அதுவரை கால்நடைகளின் பிடியில் இருந்து, அவற்றை காப்பாற்றுவது கடினம்.
இதற்கு தீர்வாக எட்டு அடி உயரம் கொண்ட கிளைகளை, மரங்களாக வளர்க்கும்
முயற்சி நல்ல பலன் தருகின்றது. இத்தனை உயரம் கொண்ட மரங்களை பொது
இடங்களில் நடும் போது, அவற்றை கால்நடை மேயாது. மூன்று மாதங்களில்
இதுபோன்ற கன்றுகள் வேகமாக வளரும். வளர்ந்த மரங்கள் தண்ணீரையும், அதிகமாக
உறிஞ்சாது.
தகவல் சுரங்கம்

உணவின் பெயர்க்காரணங்கள்

புரட்டாசியில் 'திருக்கண்ணமுதும் அக்கார அடிசிலும்' சிறப்பிடம்
பெறுகின்றன. 'கன்னல்'
என்றால் தமிழில் கரும்பு. கரும்பில் இருந்து பெறப்பட்ட இனிப்பில் இருந்து
செய்யப்பட்டதால் 'கன்னல் அமுது' எனப் பெயர் வந்தது. வைணவ மரபில் எதற்குமே
'திரு' சேர்ப்பது மரபு. 'திருக்கன்னல் அமுது' எனப் பெயர் பெற்று
காலப்போக்கில் 'திருக்கண் அமுது' என திரிந்தது என்பர். உற்ஸவத்தில்
இறைவன் எழுந்தருளும் மண்டபத்திற்கு 'திருக்கண்' என பெயர். அங்கு
படைக்கப்படும் உணவு என்பதால் 'திருக்கண்ணமுது' என பெயர் வந்தது.

mohan alagar

unread,
Sep 25, 2018, 7:58:05 AM9/25/18
to Valluvan Paarvai, inaiathendral
வண்ணங்கள் தரும் வளங்கள் எந்தப்பொருளிலுமே நிறமிகளிருந்தால் அவற்றில்
ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருக்கும். எனவே தான், பாலிஷ்
செய்யப்பட்ட வெள்ளை நிற அரிசி வகைகளை விட, வண்ண அரிசிகள் சிறந்தவை. ஒளிச்
சேர்க்கையின் போது தாவரங்கள் ஈர்த்து கொள்ளும் சூரியக்கதிர்களின்
அலைவேகத்தைபொறுத்தே பொருட்களுக்கு நிறம் வருகிறது. இந்தியாவில்
இளஞ்சிவப்பு, சிவப்பு, கருப்பு நிறத்தில் அரிசி வகைகள் உள்ளன. கவுனி
அரிசி, அடர் பிரவுன் நிறத்தில் உள்ளது. சீனாவில் பச்சை, கருநீலம் என 120
வண்ணங்களில் அரிசியை உருவாக்கியுள்ளனர்.

தகவல் சுரங்கம்
இந்தியாவின் முதல் விவாகரத்து
இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ருக்மாபாய் ராவத். 1885ல் விவாகரத்து
வேண்டி, நீதிமன்றம் சென்றார். இதுதான் நாட்டின் முதல் விவாகரத்து வழக்கு.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. 1887ல் அவருக்கு நீதிமன்றம் இரு
வாய்ப்புகள் கொடுத்தது. கணவருடன் வாழவேண்டும். இல்லையெனில் 6 மாத சிறை
தண்டனை அனுபவிக்க வேண்டும். ருக்மாபாய், கல்வி மீதான ஆர்வத்தால் சிறை
சென்றார். இங்கிலாந்து ராணி விக்டோரியாவுக்கு உதவி வேண்டி கடிதம்
எழுதினார். சிறை தண்டனையை ராணி ரத்து செய்தார். பின் ரூ.2000
அபராதத்துடன் விவாகரத்து வழங்கப்பட்டது.

Palaniappan kandasamy

unread,
Sep 25, 2018, 10:14:30 AM9/25/18
to brail...@googlegroups.com
ஜீவனாம்சம் கேட்கலையா? Husband தப்பிச்சான். வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் ப்ரெய்லானுஜன், தொலை தொடர்பு துரை வாழ்வூதியர், கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of mohan alagar
Sent: 25 செப்டம்பர் 2018 17:28
To: Valluvan Paarvai
Cc: inaiathendral
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


mohan alagar

unread,
Sep 26, 2018, 9:24:53 PM9/26/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

அறிவியல் சுற்றுலா
அறிவியல் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக பாரம்பரியமான ஜந்தர் மந்தர்
எனப்படும் வானியல் கோளரங்கங்கள் உள்ளன. இத்தகைய 'ஜந்தர்மந்தர்'கள்
டில்லி, ஜெய்ப்பூர், காசி, உஜ்ஜைனி மற்றும் மதுராவில் உள்ளன. 1727-க்கும்
1734க்கும் இடையில் ஜெய்ப்பூர் மகாராஜா இரண்டாம் ஜெயசிங் இவற்றை
கட்டினார். 'ஜந்தர்மந்தர்' என அழைக்கப்பட்டாலும் இவற்றின் உண்மையான பெயர்
'யந்த்ரா மந்த்ரா' என்பதாகும். 'யந்த்ரா' என்றால் கருவிகள், 'மந்த்ரா'
என்றால் சூத்திரம் என்பதாகும். கருவிகளின் துணையுடன் வானவியல்
கணக்கீடுகள் அறிவதால் இவற்றுக்கு இப்பெயர் வந்தது.
தகவல் சுரங்கம்

சுற்றுலாவை சிறப்பிக்கும் விருது
இந்தியாவில், இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என, ராகுல சாங்கிருத்தியன்
அழைக்கப்படுகிறார். வீட்டை விட்டு வெளியேறி 45 ஆண்டுகள் உலகம் முழுவதும்
சுற்றினார். இவரது பயண இலக்கியம் 'ஊர் சுற்றிப் புராணம்' என்ற பெயரில்
வெளி வந்தது. 'வால்கா முதல் கங்கை வரை' என்ற புத்தகத்தையும்
எழுதியுள்ளார். இந்தியாவில் பயண இலக்கியங்கள், சுற்றுலா தொடர்பான
புத்தகங்கள் எழுதுவோருக்கு சுற்றுலா துறை அமைச்சகம், மத்திய இந்தி
இயக்குனரகம் இணைந்து வழங்கப்படும் விருதுக்கு 'ராகுல சாங்கிருத்தியன்'
பெயர் சூட்டப்பட்டுள்ளது.

mohan alagar

unread,
Sep 27, 2018, 10:01:43 PM9/27/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

விலை உயர்வு விபரீதங்கள்
வட மாநிலங்களில் கலப்பட பெட்ரோல் அதிகமாகி விட்டது. பெட்ரோலுடன் கலப்பட
பொருளாக நாப்தா கலக்கப்படுகிறது. பெட்ரோலியம் சுத்திகரிப்பின் போது
கிடைக்கும் பொருட்களில் நாப்தாவும் ஒன்று. உரங்கள், பூச்சிக்கொல்லி
மருந்து நிறுவனங்களில் நாப்தா முக்கிய மூலப்பொருள். பெட்ரோலுடன்
ஒப்பிடுகையில், நாப்தாவின் விலை மிகவும் குறைவானது. இதன் அடர்த்தி
பெட்ரோலின் அடர்த்திக்குச் சமமாக இருப்பதால், கலப்படத்தைக் கண்டறிவது
கடினமாக உள்ளது. பெட்ரோலுடன் நாப்தா சேர்க்கப்படும் போது, இன்ஜின்களின்
ஆயுட்காலம் பாதிக்கப்படுகிறது.
தகவல் சுரங்கம்

கருத்துமோதல்களின் தாய்
அமெரிக்க வரலாற்று ஆசிரியர் காதரீன் மயோ, 'மதர் இந்தியா' புத்தகத்தை
1927ல் எழுதினார். இந்திய கலாசாரத்தை, சமய நம்பிக்கைகளை தகர்ப்பதாக 'மதர்
இந்தியா' இருந்தது. பிரிட்டிஷ் அரசு புத்தகத்தை உயர்த்திப்பிடித்தது.
காங்., தடை செய்ய வலியுறுத்தியது. புத்தகத்தை தடை செய்ய காந்தியடிகள்
விரும்பவில்லை. 'இந்தியாவில் சாக்கடைகளை மட்டுமே பார்த்து புத்தகம் எழுதி
உள்ளார்' என்று கூறி புத்தகத்திற்கு, 'சாக்கடை இன்ஸ்பெக்டரின் அறிக்கை'
என காந்தியடிகள் தலைப்பு வைத்தார். காங்., இதற்கு பதிலடியாக, 'மை மதர்
இந்தியா' என்ற புத்தகத்தை எழுதியது.

mohan alagar

unread,
Sep 29, 2018, 11:42:24 AM9/29/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

செயற்கை மழை
பருவ நிலை மாற்றத்தால், தற்போது மழை சரியான காலங்களில் பெய்வதில்லை.
இதனால் செயற்கையாக மழை குறித்த ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதன்படி
செயற்கையாக மேகத்தை உருவாக்குகின்றனர் என அர்த்தமில்லை. இயற்கையாக
உருவாகும் நீர் திவலைகள் கொண்ட மேகங்களை கண்டறிகின்றனர். ஹெலிகாப்டரில்
அங்கு சென்று, அதன்மீது சில்வர் அயோடைடு அல்லது சோடியம் குளோரைடு போன்ற
வேதிப்பொருட்களை துாவுகின்றனர். இப்பொருட்கள் மேகங்களுடன் வினைபுரிந்து
நீரை பூமியில் விழ வைக்கின்றன. இதை வரவழைக்க செலவு மிக அதிகம்.
தகவல் சுரங்கம்

உயரமான விமான நிலையம்
இந்தியாவில் சமீபத்தில் 100வது விமான நிலையம் சிக்கிமில் தொடங்கப்பட்டது.
நாட்டின் உயரமான விமான நிலையம் காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ளது.
இந்திய புள்ளியியல் அறிஞர் குசோக் பகூலா ரிம்போச்சே என்பவர் பெயர் இதற்கு
சூட்டப்பட்டு உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 10,682 அடி உயரத்தில்
உள்ளது. உலகளவில் 22வது உயரமான
விமான நிலையம் என்ற பெயரை பெற்றுள்ளது. விமான புறப்பாடு மற்றும்
தரையிறங்குதல் காலை நேரத்திலேயே நடைபெறும். மாலை நேரத்தில் வானிலை விமான
சேவைக்கு உகந்ததாக இருக்காது.

mohan alagar

unread,
Sep 30, 2018, 3:21:22 AM9/30/18
to Valluvan Paarvai, inaiathendral
பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் வாகன
இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டால் தான், பெட்ரோலிய விலை உயர்வுக்கு நிரந்தர
தீர்வு காண முடியும். ராக்கெட் இன்ஜின்களில் கிரையோஜெனிக் தொழில்நுட்பம்
பயன்படுத்தப்படுகிறது. இதில் ஹைட்ரஜன் வாயுவே எரிபொருளாகும். இதை 4 சக்கர
வாகனங்களின் தொழில் நுட்பத் திலும் பயன்படுத்தினால் ஹைட்ரஜன் எரிபொருளை
பயன்படுத்தலாம். எரிபொருள் டாங்க் பகுதியில் ஹைட்ரஜனை நிரப்பும் போது,
அதன் மூலம் 80 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம்
வாகனம் இயக்கப்படும்.

தகவல் சுரங்கம்
உலக மொழிபெயர்ப்பு தினம் இந்த ஆண்டு முதல் ஐ.நா., சபை செப்டம்பர்
முப்பதாம் தேதியை உலக மொழிபெயர்ப்பு தினமாக அறிவித்துள்ளது. தமிழ்
இலக்கியங்களை அயலக மொழிகளில் மொழிபெயர்ப்பவர்களுக்கென தமிழக அரசும்
ஜி.யு.போப் விருதினை ஆண்டுதோறும் வழங்குகிறது. ஜார்ஜ் யூக்ளோ போப் தான்
சுருக்கமாக ஜி.யு.போப் ஆனார். கனடாவைச் சேர்ந்த இவர், திருக்குறள்,
நாலடியார், திருவாசகம் நுால்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். தமது
கல்லறையில், தன் நுால்களை வைத்து புதைக்க வேண்டும் என தன் விருப்பத்தை
எழுதி வைத்திருந்தார்.

mohan alagar

unread,
Sep 30, 2018, 8:45:06 PM9/30/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

மீண்டும் சைக்கிள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மீண்டும் சைக்கிள் பரவலாகின்றது.
சிக்னலுக்காக வாகனங்கள் காத்திருக்கும் போது ஏற்படும் பெட்ரோல் செலவு,
டில்லியில் மட்டும் ஓர் ஆண்டில் பல லட்சம் லிட்டராகும். சீனா,
சிங்கப்பூர் போன்ற நாடுகளில், பெட்ரோல், டீசல் வாகன விற்பனையைக் குறைக்க
தனிநபர்களின் கார், பைக்குகளின் பதிவு எண்ணுக்கு மிக மிக அதிகமான கட்டணம்
வசூல் செய்யப்படுகிறது. சீனாவில் சைக்கிள் போக்குவரத்துக்கு முன்னுரிமை
தரும் வகையில், பூமிக்கு அடியில் பல இடங்களில், சைக்கிள் ஸ்டாண்டுகளை
ஏற்படுத்தியுள்ளனர்.
தகவல் சுரங்கம்

கலாசாரம் காட்டும் மொழி

சமஸ்கிருதம், இந்தியில் மனைவியை குறிக்க 'பத்னீ ' என்ற சொல் மட்டுமே
இருந்தது. காலப்போக்கில் இரண்டாவது திருமணம் என்ற கருத்துரு தோன்றிய
பின்னர் இரண்டாவது
மனைவியை குறிக்க 'உப பத்னீ ' என்ற சொல் தோன்றியது. கள்ள உறவுகள் வந்த
பிறகு 'ரகேலீ' என்ற சொல் தோன்றியது. கணவரை குறிக்கும் பதி என்ற
சொல்லுக்கு தலைவன் என்றும் அர்த்தம் உள்ளது. ஒழுக்கத்தினை வலியுறுத்தும்
வகையில் கணவரை குறிக்கும் 'பதி' என்ற சொல்லுக்கு இந்தியில் பன்மை
கிடையாது.

சமஸ்கிருதம், இந்தியில் மனைவியை குறிக்க
'பத்னீ ' என்ற சொல் மட்டுமே இருந்தது. காலப்போக்கில் இரண்டாவது திருமணம் என்ற
கருத்துரு தோன்றிய பின்னர் இரண்டாவது
மனைவியை குறிக்க 'உப பத்னீ ' என்ற சொல் தோன்றியது. கள்ள உறவுகள் வந்த
பிறகு 'ரகேலீ' என்ற சொல் தோன்றியது. கணவரை குறிக்கும்
பதி என்ற சொல்லுக்கு தலைவன் என்றும் அர்த்தம் உள்ளது. ஒழுக்கத்தினை
வலியுறுத்தும் வகையில் கணவரை குறிக்கும் 'பதி' என்ற சொல்லுக்கு
இந்தியில் பன்மை கிடையாது.

mohan alagar

unread,
Oct 1, 2018, 9:22:09 PM10/1/18
to Valluvan Paarvai, inaiathendral
மாசடையும் பம்பைசபரிமலை பக்தர்கள் குளிக்கும் முன்பே பம்பை நதி மாசடைந்து
தான் உள்ளது. அதிகளவில் மணல் முறைகேடாக எடுக்கப்படுவதால் இயற்கையான
சுத்திகரிப்பு பம்பை நதியில் இல்லை. பம்பையைச் சுற்றியுள்ள மலைச்சரிவுத்
தோட்டங்களில் பயன்படுத்தப் படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மழையினால்
பம்பை நதிக்கு வந்து சேர்கின்றன. இவற்றோடு சபரிமலைக்கு செல்லும்
லட்சக்கணக்கான பக்தர்களின் திடக்கழிவும் சேர்கிறது. பம்பை நதி, கேரளாவின்
மூன்றாவது நீளமான நதி. கேரளாவின் நெற்களஞ்சியம் எனப்படும் குட்டநாடு,
பம்பை நதியால் தான் வளம் பெறுகிறது.
தகவல் சுரங்கம்பெண்ணுக்கு பெருமைசபரிமலை என்ற பெயர் வரக் காரணம் பக்தை
சபரி வாழ்ந்த மலை. சபரி வாழ்ந்த இடம் என பம்பை நதிக்கரையை வால்மீகி
குறிப்பிடுகின்றார். 'சபரி' என்று வால்மீகி குறிப்பிடுவதை கம்பர், தமிழ்
ஒலிக் குறிப்பிற்கேற்ப 'சவரி' என்று காட்டினார். சபரியை 'அருந்தவத்து
அரசி' என கம்பர் சிறப்பிக்கின்றார் கம்ப ராமாயணத்தில் சபரியை பற்றி 9
பாடல்களை தனிப்படலமாக 'சவரி பிறப்பு நீங்கு படலம்' என கம்பர்
அமைத்துள்ளார். இந்த படலம் ஆரண்ய காண்டத்தில் வருகிறது. துளசிதாசர் 'ராம
சரித மானஸ் காவியத்தில் சபரி செய்ததாக ௯ வகையான பக்திகளை கூறுகிறார்.

mohan alagar

unread,
Oct 2, 2018, 9:05:39 PM10/2/18
to Valluvan Paarvai, inaiathendral
மகப்பேறு சிகிச்சை மாதம்
உலகின் மக்கள் தொகை அதிகரிக்கும் வேளையில், குழந்தைபேறுக்கு
காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மருத்துவ வளர்ச்சியால்
அனைவருக்கும் குழந்தைப் பேறு சாத்தியமே. இது குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்த அக்டோபர் மாதத்தை, தேசிய குழந்தைப் பேறு சிகிச்சை மாதமாகக்
கொண்டாடுகின்றனர். சாப்ட்வேர் போன்ற பணிகளுக்கு குழந்தைப் பேறை தள்ளிப்
போடுவதும், குழந்தை பெற வேண்டும் என நினைக்கின்ற சமயத்தில் அதுவே, சவாலாக
மாறி விடுகிறது.

தகவல் சுரங்கம்

போர்பந்தர் சிறப்புகள்
'பந்தர்' என்ற சொல்லுக்கு துறைமுகம் என பெயர். துறைமுக நகரான இது உள்ளூர்
காவல் தெய்வத்தின் பெயரோடு இணைந்து போர்பந்தர் எனப்பட்டது. இங்கு சமண
சமயத்தினரின் வெண்மை நிறக் கோயில்கள் அதிகம் இருப்பதால் 'வெள்ளை நகரம்'
என சிறப்பிக்கப்படுகிறது. காந்தியடிகள் பிறந்த வீடு 'கீர்த்தி மந்திர்'
என அழைக்கப்படுகிறது. கஸ்துாரிபா பிறந்த வீடும் போர்பந்தரில் உள்ளது.
கிருஷ்ணரின் நண்பர் சுதாமர் என்ற குசேலர் பிறந்த ஊர் என்பதால் சுதாமபுரி
என அழைக்கப்பட்டது. இவருக்கு ஒரு கோயில் போர்பந்தரில் உள்ளது.

mohan alagar

unread,
Oct 3, 2018, 9:15:05 PM10/3/18
to Valluvan Paarvai, inaiathendral
புரட்டாசி மாத சனிக்கிழமை விரத உணவில் அகத்திக்கீரை முக்கிய இடம்
பெறுகின்றது. மது அருந்தி விட்டு அகத்தி கீரையை சாப்பிட்டால், மாரடைப்பு
ஏற்படும். இதனால் மது அருந்தாத விரத நாட்களுக்கு ஏற்ற உணவாக அகத்தியை
வைத்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது .உடலில் உள்ள நச்சுப் பொருட்களை
நீக்கும் தன்மை அகத்தி கீரைக்கு உண்டு. வெற்றிலைக் கொடி படர அகத்தி
மரங்களை நடுவர். அரச மரத்தை போன்று அகத்தி மரங்களும் அதிகளவில்
கார்பன்-டை- ஆக்ஸைடை உட்கவர்ந்து ஆக்ஸிஜனை வெளியிடும் இயல்பை பெற்றுள்ளன.

தகவல் சுரங்கம்: அனைவருக்குமான சபரிமலை
இந்துஸ்தானி இசையில் முக்கிய இசைக்கருவி சரோட். குவாலியரை சேர்ந்த
பாரம்பரிய சரோட் இசைக் கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலிகானின் முன்னோர்கள் தான்
சரோட் இசைக்கருவியை வடிவமைத்தவர்கள் என நம்பப்படுகின்றது. இந்து சமயத்தை
சேர்ந்த பரத நாட்டிய இசைக்கலைஞர் சுப்புலட்சுமி பருவாவை மணந்த இவர், தான்
உருவாக்கிய ராகத்துக்கு சபரிமலையை சிறப்பிக்கும் வகையில் 'ராக் சபரிமலா'
என பெயர் சூட்டி, பக்தியிசை சமய சார்பற்றது என நிரூபித்தார். தன்
மகனுக்கு அய்யன் என பெயரிட்டுள்ளார்.

mohan alagar

unread,
Oct 4, 2018, 9:23:00 PM10/4/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்: சுனாமி எப்படி ஏற்படுகிறது
பதிவு செய்த நாள் : அக் 05, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail



சுனாமி எப்படி ஏற்படுகிறது:
சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால், சுமார் 1400 பேர்
பலியாகினர். கடலுக்கு அடியில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட
நிலநடுக்கத்தால், கடல்நீர் மணிக்கு 800 கி.மீ., வேகத்தில் மேல்
எழுந்தவாறு, கடற்கரையையும் தாண்டி நிலப்பகுதிக்குள் நீர் புகுந்தது.
கடலுக்குள் நிலநடுக்கம், 3 விதங்களில் ஏற்படுகிறது. தரைப்பகுதியில்
ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்டமாகின்றன.
மலைப்பகுதியில் ஏற்படும்போது எரிமலை உருவாகிறது. கடலில் ஏற்படும் போது,
சுனாமி எனும் ஆழிப்பேரலை உருவாகின்றன.

தகவல் சுரங்கம்: மூன்றாவது பெண்மணி
இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு மூன்று விஞ்ஞானிகள் தேர்வு
செய்யப்பட்டனர். இதில் கனடாவின் டோனா ஸ்ட்ரிக்லாண்ட் என்ற பெண்மணியும்
ஒருவர். இவர் உருவாக்கிய லேசர் கதிர்கள், கண் குறைபாடுகளை சரி
செய்வதற்கான லேசர் சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது. இதுவரை மேரி கியூரி
(1903), மரியா ஜியோபெர்ட் (1963) ஆகிய இரு பெண்மணி மட்டுமே
இயற்பியலுக்கான நோபல் விருது பெற்றிருந்தனர். 55 ஆண்டுகளுக்குப்பின்
மூன்றாவது பெண்மணியாக டோனா தேர்வாகியுள்ளார்.

mohan alagar

unread,
Oct 5, 2018, 9:13:23 PM10/5/18
to Valluvan Paarvai, inaiathendral
விண்வெளி வாரம்:
செவ்வாயில் மனிதர்களை குடியமர்த்துவது பற்றி, ஆய்வு செய்யும் அளவுக்கு
விண்வெளி துறை வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் உலகில் முதன்முதலில்
செயற்கைக்கோளை விண் வெளிக்கு அனுப்பி, உலகின் கவனத்தை ஈர்த்த
பெருமைக்குரிய நாடு ரஷ்யா. 1957 அக். 4ல், 'ஸ்புட்னிக் 1' என்ற
செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. விண்வெளியை பயனுள்ள வகையில்
பயன்படுத்திக்கொள்ள உலக நாடுகளிடையே 1967 அக். 10ல் ஒப்பந்தம்
கையெழுத்தானது. இந்த இரண்டு சம்பவங்களை கொண்டாடும் வகையில் அக்., 4 - 10
வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது.

தகவல் சுரங்கம்: சுற்றுச்சூழல் விருது
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்' என்ற
சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டது. இவ்விருது ஐ.நா.,வின்
சுற்றுச்சூழல் துறையால் 2005ல் நிறுவப்பட்டது. உலகளவில் சுற்றுச்சூழலில்
சிறந்த பங்களிப்பை வழங்கும் தலைவர்கள், பொது, தனியார் நிறுவனம், தனி
நபர்கள், சமூக அமைப்பிற்கு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 5 முதல்
7பேருக்கு தரப்படுகிறது. 2018க்கான இவ்விருதில் தலைவர்கள் பிரிவில்
பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மக்ரோன் ஆகியோர் இவ்விருதுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருதுடன் நிதி எதுவும் வழங்கப்படாது.

mohan alagar

unread,
Oct 6, 2018, 9:57:12 PM10/6/18
to Valluvan Paarvai, inaiathendral
உலகின் பெரிய பறவைஉலகில் பல்வேறு வகையிலான பறவைகள் வாழ்கின்றன. இதில்
பெரிய பறவை எது என்பதில், சர்வதேச விஞ்ஞானிகளிடம் மாறுபட்ட கருத்துகள்
இருந்தன. இது குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடந்தது. இந்நிலையில்
லண்டனைச் சேர்ந்த விலங்குகள் அமைப்பு, இதற்கு ஒரு முடிவை கொண்டு
வந்துள்ளது. இதில் 'வோரோம்பி டைட்டன்' என்ற பறவை உலகில் பெரியது என
கண்டுபிடித்துள்ளனர். 'வோரோம்பி' என்றால் 'பெரிய பறவை' என அர்த்தம்.
பறவையின் உயரம் 9.84 அடி. எடை 800 கிலோ. இது இந்திய பெருங்கடலில்
மடகாஸ்கார் தீவில் உள்ளது.தகவல் சுரங்கம்கபீர் யாத்திரைஇந்தி கவிஞர்
கபீரை சிறப்பிக்கும் வகையில் ராஜஸ்தானில் அக்டோபரில் கபீர் யாத்திரை என்ற
பெயரில் நாட்டுப்புற கலைஞர்களின் இசையாத்திரை நடைபெறுகின்றது. இதில்
கபீரின் பக்தி இலக்கிய பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது.
திருக்குறளைப் போல, இந்தியில் இரு வரியிலான 'தோஹே'க்களை எழுதியவர் கபீர்.
இவர் காசியில் முஸ்லிம் நெசவாளர் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். இதனால்
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சிறந்த நெசவாளருக்கான 'சந்த் கபீர் விருது'
வழங்குகிறது. இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டவர்.
இது உங்கள் இடம்
Colors:




அ+
அ-
Print
e-mail


உயர் நீதிமன்றம் இன்னும் விழிக்க வேண்டும்!ஆர்.ஆத்மா, கூடுவாஞ்சேரி,
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:-
ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கூடாது; -ஆக்கிரமிப்
பாளர்களுக்கு கருணை காட்டக் கூடாது...-நீர் நிலைகளை கபளீகரம்
செய்தவர்கள், உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்; -லஞ்ச அதிகாரிகள்
சிறைக்குள் தள்ளப்பட வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது;
இது, வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது!தமிழகத்தை, 50
ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட திராவிட கட்சியினர், புறம்போக்கு, நீர்நிலைகள்
என, எதையும் விட்டு வைக்காமல், கபளீகரம் செய்து விட்டனர்.அதிகாரிகளின்
ஆதரவுடன், தங்களுக்கும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும்,
உறவினர்களுக்கும் பட்டா போட்டுக் கொண்டனர். புறம்போக்கு நிலங்களை,
'பிளாட்' போட்டு விற்று, பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்து
விட்டனர்!இதற்கெல்லாம் துணை போன அதிகாரிகள் தான், முதல் குற்றவாளிகள்.
மக்கள் வரி பணத்தில் சம்பளம் மற்றும் இதர வசதிகளையும் அனுபவித்து, மக்கள்
நலனுக்கு எதிராகச் செயல்பட்ட அவர்களை, மன்னிக்கவே முடியாது. 'குற்றம்
இழைத்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்' எனச் சொல்லி, நீதிபதி தன்
உத்தரவை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி, அவர்கள் சிறைக்குள்
தள்ளப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது; இதிலிருந்து, அதிகாரிகள் மீது,
நீதிமன்றம் கொண்டுள்ள கோபம் வெளிப்படையாக தெரிகிறது! மக்கள்
பிரதிநிதிகள், சட்டத்தை அறியாமல், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யும்
முன், சட்டப் பிரிவுகளை விளக்கி, சரியான நடவடிக்கை எடுக்கச் செய்வதே,
அதிகாரிகளின் பணி. ஆனால், தவறுகளுக்கு மூலகாரணமாக உள்ளோர், அதிகாரிகளே
என்பது, நீதிமன்றங்களுக்கும் தெரிந்து விட்டது.சென்னை உயர் நீதிமன்ற
ஆணைப்படி, தவறு செய்த அதிகாரிகள், முறையாக விசாரிக்கப்பட்டு, சிறைக்குள்
தள்ளப்பட வேண்டும். அப்போது தான் புறம்போக்கு நிலங்களும், நீர்
ஆதாரங்களும் பாதுகாக்கப்படும். 'எவ்வளவு அடித்தாலும் தாங்கறாண்டா...'
என்ற, 'காமெடி' நடிகர் வடிவேலு நடித்த காட்சி போல், உயர்நீதி மன்றம்
தினம் தினம், என்ன தான், அரசையும், அதிகாரிகளையும், எவ்வளவு
குட்டினாலும், அவர்கள் எதையும் கண்டுகொள்வதாக
தெரியவில்லை!தொகுப்பூதியஆசிரியர்கள் அய்யோ பாவம்!எஸ்.ஆதங்கன், செம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காலமுறை ஊதியம்
அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'முதுகலை பட்டதாரி ஆசிரியர்
நியமனம் நடைபெற்றால், அடிப்படை ஊதியமாக மாதம், 36 ஆயிரத்து, 900 வழங்க
வேண்டும்.இத்துடன், 9 சதவீதம் அகவிலைப்படி மற்றும் வீட்டு
வாடகைப்படியும், மருத்துவப்படியும் அடங்கும்.இடைநிலை ஆசிரியருக்கு
அடிப்படை ஊதியம், 20 ஆயிரத்து, 600 ரூபாய்; பட்டதாரி ஆசிரியருக்கு
அடிப்படை ஊதியம், 36 ஆயிரத்து, 400 ரூபாய். இத்துடன், வழக்கமான படிகள்
உண்டு.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 7,500 ரூபாய் தொகுப்பூதியம்
அடிப்படையில் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்ற,
1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு
வருகின்றனர்.இவர்கள், 2019 பிப்ரவரி வரை பணியில் இருப்பர். பிளஸ் 1,
பிளஸ் 2 வகுப்பிற்கு, இவர்கள் பாடம் நடத்த வேண்டும். நாகப்பட்டினம்,
திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலுார் ஆகிய மாவட்டங்களில், 100க்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்; 11 பாடங்களுக்கு இந்த
நியமனம் உண்டு. தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் பெறும் ஆசிரியர்கள்,
வாரம் குறைந்தது, ஐந்து நாட்கள் வகுப்பு எடுக்க வேண்டும். காலை, மாலை
மற்றும் விடுமுறை நாட்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2க்கு வகுப்புகள் எடுக்க
வேண்டும்; இவர்களுக்கு மாதம், 7,500 என்பது மிக மிக குறைந்த
ஊதியம்.காலமுறை ஊதியம் அடிப்படையில் வழங்கப்படும், முழு சம்பளத்தில்
மூன்றில் ஒரு பங்காவது, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வழங்க
வேண்டும்.கூடுதல் கல்வி தகுதியுடன் பணியாற்றும், உபரி இடைநிலை, பட்டதாரி
ஆசிரியர்களை நல்ல முறையில் பயன்படுத்த, கல்வித்துறை புது முறையை உருவாக்க
வேண்டும்.கூடுதல் கல்வி தகுதிக்கு, கூடுதல் ஊதியம் அரசு வழங்கி வருகிறது.
வாரம் ஒன்றரை நாள் மட்டுமே பணி செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள், மாதம்,
7,700 ரூபாய் பெறுகின்றனர்.இப்படி ஒரு சூழலில், தொகுப்பூதிய, முதுகலை
ஆசிரியர்களுக்கு, மாதம், 12 - 15 ஆயிரம் ரூபாய் வழங்க, கல்வித் துறை
அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!மத்திய அரசு காணாமல்
போகும்!ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து
எழுதுகிறார்: இந்திய எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்
உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் தான்; இவை, நஷ்டத்தில் இயங்கும்
நிறுவனங்கள் அல்ல. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான, இந்தியன்
ஆயில் கார்ப்பரேஷனில், 33 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். 2016 - 17ல், இந்த
நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும், 19 ஆயிரத்து, 106 கோடி ரூபாய்! பொதுத்
துறையின் குறிக்கோளாக, மக்கள் நலம் தானே ஒழிய, லாப நோக்கல் அல்ல என்று
தான், பொருளாதாரத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால், லாப நோக்கத்தில்
இயங்கும் தனியார் நிறுவனங்களை போல், இவை செயல்படுகின்றன. மத்திய - மாநில
அரசுகள், 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும், ஒரு பொருளுக்கு, 50
ரூபாய் வரி விதிப்பது, ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல!தமிழகத்தில்,
ஓட்டு வங்கியை குறி வைத்து வழங்கப்படும், இலவசங்களுக்காக மட்டும்,
ஆண்டுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறது. இதை நிறுத்தினால்,
மாநில அரசு விதிக்கும், 'வாட்' வரியை குறைக்க முடியும். விடாக்கண்டனும்,
கொடாக்கண்டனுமாக செயல்படும் மத்திய - மாநில அரசுகள், கச்சா எண்ணெய் விலை
உயர்வு, டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு என, காரணங்களை
கூறி, பாமர மக்களின் தலையில் நன்றாக மிளகாய் அரைக்கின்றன. பெட்ரோல்
விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து திரும்ப
பெற்று, உடனடியாக, ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்குள் கொண்டு வர, மத்திய
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த ஆண்டு நடைபெற
இருக்கும் பொதுத்தேர்தலில், ஆளும் கட்சிக்கு எதிர்மறையான விளைவை
ஏற்படுத்தும்!'வீரமணி... இனியும் ஈடுபடாதீர்!'ஆர்.நடராஜன், முதல்வர்,
தனியார் கலைக் கல்லுாரி (பணி நிறைவு), திண்டுக்கல்லிலிருந்து
எழுதுகிறார்: ஹிந்து கடவுள்களையும், பிராமணர்களையும் அவதுாறாக
எழுதுவதையே, தன் வாழ்க்கை லட்சியமாக கொண்டவர், தி.க.,வின் வீரமணி.
'ஹிந்துக் கடவுள்களால், என் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது;
பிராமணர்களால், எனக்கு எப்போதும் கவலை தான்' என, எப்போதாவது கூறி
இருப்பாரா? ஹிந்துக்களாலும், பிராமணர்களாலும் தொந்தரவு இல்லாத போது, ஏன்,
தேவையில்லாத கருத்துக்களை கூற வேண்டும்... 'பகுத்தறிவு பகலவன்;
ஹிந்துக்கள் அல்லாத மற்ற இனத்தவர், தாழ்த்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே நான் வாழ்கிறேன்' எனக் கூறும் வீரமணி,
இந்த சாதனைகளை நிகழ்த்தி விட்டு கூறினால், அனைவரும் அவரது செயல்பாட்டை
ஏற்றுக் கொள்வர். l தஞ்சாவூரில், அவருக்கு சொந்தமான பெரியார் - மணியம்மை
பல்கலையில், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியர்,
இவ்வளவு எண்ணிக்கையில் இலவச படிப்பு படித்துள்ளனர். விடுதிகளில் இவ்வளவு
பேர், இத்தனை ஆண்டுகளாக இலவசமாக தங்கி படிக்க அனுமதி அளித்துள்ளேன். இலவச
உணவை, இவ்வளவு மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர் என, பட்டியலிட்டு கூற
முடியுமா?l ஈ.வெ.ரா.,வின் ஒவ்வொரு பிறந்த நாள், நினைவு நாட்களில், இலவச
உடை, அன்னதானம் ஆகியவற்றால் பயனடைந்த தாழ்த்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் இவ்வளவு பேர் என, பட்டியலிட்டு கூற
முடியுமா?l தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இதுவரை,
இவ்வளவு வீடுகள், இலவசமாக கட்டி கொடுத்து உள்ளேன் என, பகிரங்கமாக
அறிவிக்க முடியுமா?l ஈ.வெ.ரா.,வின் அறக்கட்டளையை ஆண்டாண்டு காலமாக
அனுபவித்து வரும், வீரமணி, பிறருக்கு உதவாவிட்டாலும், சமுதாயத்தில்
அவரவர் விருப்பப்படி வணங்கும், ஹிந்து கடவுள்கள் மீதும், ஹிந்துக்கள்
மீதும் சேற்றை வாரி இறைக்கும் செயலில், இனியும் ஈடுபட வேண்டாம்.l எந்த
தமிழனும் உங்களை ஏற்றுக் கொள்ளாத போது, தனக்கு தானே, 'தமிழர்களின்
தலைவர்' என, சொல்வதையும் நிறுத்தி கொள்ள வேண்டும்!கருணாநிதி அயராத
உழைப்பால் தி.மு.க., கம்பீரம்! எஸ்.அர்த்தநாரி, இதய நோய் சிகிச்சை
நிபுணர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: மறைந்த முன்னாள், தி.மு.க.,
தலைவர், கருணாநிதியுடன், பல்வேறு சந்தர்ப்பங்களில் பழகியதை, வாசகர்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...நான், ராயப்பேட்டை அரசு
மருத்துவமனையில், தலைமை இதய நோய் நிபுணராக பணி புரிந்தேன். அப்போது,
கருணாநிதியின் சகோதரி மகன், அமிர்தம், மாரடைப்பால் அனுமதிக்கப்பட்டார்;
அவருக்கு சிகிச்சையில் ஈடுபட்டிருந்தேன்.கருணாநிதி, தன் கட்சி சகாக்கள்,
வீராசாமி, துரைமுருகன், மாறனுடன் வந்தார். என் அறையில் அமர்ந்து,
பேசினார். 'காலை, 4:00 மணிக்கு, எழுந்து, யோகா செய்து, அறிவாலயத்திற்கு
நடைபயிற்சிக்கு புறப்பட்டு விடுவேன். அப்போது, உடன் பிறப்புகள் சிலர்
வந்து சேர்ந்து விடுவர். கட்சி பிரதிநிதிகள், எம்.பி.,க்கள் கூட சில
நாட்களில் வந்து சேர்ந்து கொள்வர். 'ஆனால், என் மருமகன் மாறன் மட்டும்,
உதய சூரியன் உதித்த பின் எழுவார்' என்றார், கருணாநிதி. அவர் நகைச்சுவை
பேச்சை கேட்டு அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தோம்.என், 30 ஆண்டுகள்
மருத்துவ சேவையில், நான் கண்டறிந்த உண்மை என்னவென்றால், ஒவ்வொரு ஊரிலும்,
பல டாக்டர்கள், அவரது உதவியால் பணி புரிவது தான். கட்சியில் உள்ள
பலருக்கு, கருணாநிதி பல்வேறு உதவிகளை செய்து உள்ளார். அவரால், பலர்
டாக்டர்களாகி உள்ளனர்.சேலம் மாடர்ன் தியேட்டரில், சினிமா வசனகர்த்தா வாக
பணியாற்றிய கருணாநிதி, தயாரிப்பாளரும், இயக்குனரும், அதன் உரிமையாளருமான,
டி.ஆர்.சுந்தரத்துடன் இணக்கமாக இருந்தார். அப்போது, ஊழியர்கள் மத்தியில்,
'ஹிட்லர்' போல நடந்து கொண்ட, அவரிடம் கண்டிப்பை கற்றுக் கொண்டார்,
கருணாநிதி.பின்னாளில், தன் கட்சியினரிடம் கண்டிக்க வேண்டிய நேரத்தில்
கண்டிப்பும், பாசம் காட்ட வேண்டிய நேரத்தில் பாசத்தையும் காட்டினார்.
குடும்பத்தினர் மீதும், கட்சி உடன் பிறப்புகளிடமும், பாசமுள்ள தலைவராக
விளங்கினார், கருணாநிதி.இன்றும், தி.மு.க., நிலைத்து நிற்பதற்கு,
கருணாநிதியின் அயராது உழைப்பே காரணம்!பெட்ரோல் விலைசெஞ்சுரி அடிக்க
போகிறது!சொ.கவிச்செல்வம், சென் னையிலிருந்து எழுதுகிறார்: ஈரான் உடனான,
அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து, உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான,
அமெரிக்கா தன்னிச்சையாக விலகியது.ஈரான் மீது, பொருளா தார தடையை
விதித்தார், அமெரிக்க அதிபர், டிரம்ப். இதனால், பொருளாதார ஸ்திரத்தன்மையை
இழந்து வருகிறது, ஈரான்! அந்நாட்டின் மீது, பெட்ரோலிய ஏற்றுமதிக்கான தடை
விதித்து, நவம்பர் முதல் நடைமுறைப்படுத்த, அமெரிக்கா முடிவு
செய்துள்ளது.'ஈரான் நாட்டுடன், வர்த்தக உறவுகளை நிறுத்தாத நாடுகள்
மீதும், பொருளாதார தடை விதிக்கவும் தயங்க மாட்டோம்' என்றும், அமெரிக்க
அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவுக்கான, கச்சா எண்ணெய்
தேவையை பூர்த்தி செய்வதில், ஈரான், மூன்றாம் இடத்தில் உள்ளது.பிற
நாடுகளிலிருந்து, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை விட, மிக குறைந்த
விலையில், ஈரானில் இருந்து, கச்சா எண்ணெயை, இந்தியா இறக்குமதி செய்து
வந்தது.நவம்பருக்கு பின், ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி
செய்வதை நிறுத்த வேண்டும் என, சீனா, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு,
அமெரிக்கா கெடு விதித்துள்ளது.சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை
வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தை,
சீனா புறக்கணித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் நட்பை இழக்க, இந்தியா
விரும்பவில்லை.இதனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு, இந்தியா
செவிசாய்க்கும் நிலை உருவாகி உள்ளது. இனி, ஈரானிலிருந்து, கச்சா எண்ணெயை,
இந்தியா இறக்குமதி செய்யாது.கச்சா எண்ணெய் வழங்க, அமெரிக்கா முன் வரலாம்.
ஆனால், கச்சா எண்ணெய்க்கான சுத்திகரிப்பு செலவு பல மடங்கு
அதிகரிக்கும்.அமெரிக்க அதிபர், டிரம்பின் அதிரடி போக்கால், இந்தியா, சீனா
உள்ளிட்ட பல நாடுகள், கச்சா எண்ணெய் இறக்குமதியில், அதிக விலை கொடுக்கும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.தற்போது, இந்தியாவில், ௧ லிட்டர் பெட்ரோல், 86
ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்னும், ஓரிரு வாரங்களில், 100 ரூபாயை
தொட்டாலும் தொடும்!

mohan alagar

unread,
Oct 7, 2018, 9:18:40 PM10/7/18
to Valluvan Paarvai, inaiathendral
வருகிறது '5ஜி'
இந்திய தொலைத்தொடர்பு துறையில் தற்போது, '4ஜி' சேவை பயன்பாடு பரவலாக
தொடங்கியுள்ளது. ஆனால் மேலை நாடுகளில், '5ஜி' தொழில்நுட்பம் குறித்து
சோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லண்டனின் 'இ.இ.,' என்ற நிறுவனம்,
'5ஜி' தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறது. இந்த ஆய்வுக்கூடத்தை
நாள்தோறும் 1.50 லட்சம் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 2019ம் ஆண்டு
துவக்கத்தில் பயன்பாட்டில் கொண்டு வர உள்ளது. '5ஜி' தொழில்நுட்பம் மூலம்,
ஒரு 'எச்.டி.' திரைப்படத்தை 5 விநாடிக்குள் டவுண்லோடு செய்து விடலாம்.

தகவல் சுரங்கம்: பெயர் மாறிய நாடுகள்
ஐரோப்பா நாடுகளில் ஒன்றான 'மாசிடோனியா' தனது பெயரை 'வடக்கு மாசிடோனியா'
என மாற்றிக் கொள்வதாக, கிரீஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது. ஏனெனில்
கிரீஸில் மாசிடோனியா என்ற பகுதி உள்ளது. இதற்கு முன் உலகில் பல்வேறு
நாடுகள், பெயரை மாற்றியுள்ளன. பர்மா என்பது மியான்மர் எனவும், தென்
மேற்கு ஆப்ரிக்கா என்பது நமீபியா எனவும், ஸ்வாஜிலாந்து என்பது ஈஸ்வாடினி
எனவும், கம்பூசியா என்பது கம்போடியா எனவும், டோகோமேய் என்பது பெனின்
எனவும், செகியா என்பது செக் குடியரசு எனவும் பெயர் மாற்றம் செய்துள்ளன.

mohan alagar

unread,
Oct 8, 2018, 9:26:07 PM10/8/18
to Valluvan Paarvai, inaiathendral
'பாக்கெட்' வாஷிங்மெஷின்
துணி துவைக்க 'வாஷிங்மெஷின்' பயன்படுத்தப் படுகிறது. இந்நிலையில்
பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம், கையடக்க அளவிலான 'பாக்கெட்' வாஷிங்மெஷினை
உருவாக்கியுள்ளது. சோப்பு அளவிலான இந்த மெஷின் மின்சாரத்தில் இயங்க
கூடியது. வாஷ் பேஷன் போன்ற தொட்டியில், துவைக்க வேண்டிய ஆடையை வைக்க
வேண்டும். பின் ஆடை மீது, இந்த மெஷினை வைத்துவிட்டு, தண்ணீர் குழாயை
திறந்து விட வேண்டும். அப்போது மெஷினில் இருந்து உருவாகும் 'அல்ட்ரா
சவுண்ட் அலைகள்' மூலம் ஆடை சுத்தம் செய்யப்படுகிறது.

தகவல் சுரங்கம்: வயது நுாறு
தென் இந்தியாவில், இந்தி மொழி எழுத்தறிவை அதிகரிப்பதற்காக 'தக்சின பாரத்
இந்தி பிரச்சார் சபா' அமைக்கப்பட்டது. 1918ல், காந்தியடிகள் இதனை
தொடங்கினார். பிரிட்டனின் அன்னிபெசன்ட் அம்மையார், துவக்கி வைத்தார்.
தற்போது இந்த அமைப்பு நுாறு ஆண்டை பூர்த்தி செய்துள்ளது. இதன் நிறுவனர்
மற்றும் தலைவராக, காந்தியடிகள் மறையும் வரை இருந்தார். தலைமையகம் சென்னை
தி.நகரில் உள்ளது. தவிர கிளைகள் ஐதராபாத், தர்வார்டு, எர்ணாகுளம் மற்றும்
திருச்சியில் உள்ளது. இந்த அமைப்பு 1964ல் மத்திய அரசால்
அங்கீகரிக்கப்பட்டது.

mohan alagar

unread,
Oct 9, 2018, 9:04:51 PM10/9/18
to Valluvan Paarvai, inaiathendral

mohan alagar

unread,
Oct 10, 2018, 9:23:19 PM10/10/18
to Valluvan Paarvai, inaiathendral
விண்வெளிக்கு மனிதன்
இந்தியா சார்பில் 2022க்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம்
தொடர்பாக இஸ்ரோ - ரஷ்யாவின் ரோஸ்காஸ்மாஸ் இடையே ஒப்பந்தம்
செய்யப்பட்டுஉள்ளது. இதன்படி இந்திய விண்வெளி வீரருக்கு, ரஷ்யாவின்
சர்வதேச விண்வெளி மையத்தில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும்.
'ககன்யான்' என்ற இந்த விண்வெளி பயணத்துக்கு, மூன்று வீரர்கள் இஸ்ரோ
மற்றும் இந்திய விமானப்படையால் தேர்வு செய்யப்பட்டு 2-3 ஆண்டுகள் பயிற்சி
வழங்கப்படும். திட்டம் நிறைவேறினால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய 4வது
நாடு என்ற பெருமை பெறும்.

தகவல் சுரங்கம்: வெற்றிநடை தொடருமா
மிசோரம் சட்டசபைக்கு நவ.28ல் தேர்தல் நடக்கிறது. இங்கு காங்., சார்பில்
முதல்வராக இருப்பவர் லால் தன்ஹாவ்லா. 1942ல் பிறந்த இவர், அரசு கடைநிலை
ஊழியராக வாழ்க்கையை துவக்கினார். 1967ல் காங்., மூலம் அரசியலில்
களமிறங்கினார். படிப்படியாக முன்னேறினார். மாநில அரசியலில் மிக நீண்ட
அனுபவம் கொண்டவர். 1978 - 2013 வரை எட்டு முறை எம்.எல்.ஏ.,வாக
இருந்துள்ளார். 1984ல் முதன்முறை முதல்வரானார். பின், 1989, 1993, 2008,
2013 என ஐந்து முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இவரது சாதனை தொடருமா
என்பது டிச.11ல் தெரிந்து விடும்.

mohan alagar

unread,
Oct 11, 2018, 9:42:32 PM10/11/18
to Valluvan Paarvai, inaiathendral
மாற்று எரிபொருள்
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்துக் கொண்டே
செல்கிறது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில்
மெத்தனாலை அடிப்படையாகக் கொண்டு, புதுவிதமான சமையல் எரிபொருள் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. அசாமின் திப்ரூஹார்க்கில் உள்ள நம்ரூப் ஆலையில்
தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக அடுப்பு, சுவீடனில் இருந்து
பெறப்பட்டுள்ளது. தற்போது இங்கு, ஒரு நாளைக்கு 100 டன் மெத்தனால்
உற்பத்தி செய்யப்படுகிறது. இது 2019 செப்.,க்குள், 500 டன்னாக அதிகரிக்க
இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்: முன்னோடி திட்டம்
இந்தியாவில் முதன்முறையாக கோல்கட்டா மாநகராட்சி, 'வெள்ள முன்னறிவிப்பு
மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்பு' என்பதை தொடங்கி உள்ளது. இதன்மூலம்
மழைக்காலங்களில் வெள்ளம் தொடர்பான முன்னறிவிப்பு மற்றும் பாதுகாப்பு
நடவடிக்கை குறித்து மக்களுக்கு, அதிகாரிகள் மூலம் அறிவிக்கப்படும்.
இதன்காரணமாக வெள்ளத்தால் ஏற்படும் உயிர் மற்றும் பொருட்சேதத்தை வெகுவாக
குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப
உதவிக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி, 7.4 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது.

mohan alagar

unread,
Oct 14, 2018, 9:29:18 PM10/14/18
to Valluvan Paarvai, inaiathendral
ஞாபகம் இருக்கிறதா
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்,
நண்பர்கள், பகைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்ட மக்களை காண்கிறோம்.
தவிர அலைபேசி, 'டிவி', விளம்பர பதாகைகள் மூலமும் பல நபர்களை
பார்க்கிறோம். அவர்களின் முகங்களை ஞாபகப்படுத்தி அறிகிறோம். பாரிசில்
இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஒருவர் வாழ்க்கையில் சராசரியாக, 5
ஆயிரம் பேரின் முகங்களை ஞாபகம் வைக்கின்றனர் என கண்டறிந்து உள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்கள் 1000 முதல் 10,000 பேரின் முகங்களை ஞாபகம்
வைத்திருந்தனர்.
தகவல் சுரங்கம்: 'நாகலாந்து காந்தி'
வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் சமூக சேவையில் ஈடுபட்டு, அம்மாநில
மக்களால் 'நாகலாந்து காந்தி' என அழைக்கப்பட்டவர் நட்வர் தக்கார். இவர்
அக்,. 7ல் மறைந்தார். மகாராஷ்டிராவில் இருந்து 23 வயதில், சமூக பணிக்காக
நாகலாந்துக்கு குடிபெயர்ந்தார். 1955ல், 'நாகலாந்து காந்தி ஆசிரமம்'
என்பதை தொடங்கினார். அப்போது ராணுவத்துக்கும் - நாகா
புரட்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்தது. களத்தில் இறங்கிய இவர்,
காந்திய கொள்கைகளை பரப்பி, மக்களிடம் அமைதியை ஏற்படுத்தினார். பத்ம ஸ்ரீ
உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

mohan alagar

unread,
Oct 16, 2018, 11:39:01 AM10/16/18
to Valluvan Paarvai, inaiathendral
இளைஞரை மிஞ்சும் குழந்தை

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். வாழ்க்கையில் பல
சோதனைகளுக்கு புன்னகையே மருந்து. இது உடல்நலத்திலும் முக்கிய பங்கு
வகிக்கிறது. சிரித்த முகத்துடன் இருக்கும் மனிதர்களை பலர் எளிதாக அணுக
முடியும். சமூகத்திலும் இவர்களின் மதிப்பு கூடும். இந்நிலையில் இளைஞர்கள்
தினமும் சராசரியாக 20 முறை மட்டுமே சிரிக்கின்றனர். ஆனால் குழந்தைகள்
தினமும் சராசரியாக 400 முறை சிரிக்கின்றனர் என அயர்லாந்து மாணவர்கள்
நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. சிரிப்பதால் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம்
சீராக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்: ஐந்தாவது முறை
ஐ.நா., மனித உரிமை கவுன்சிலுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 18
உறுப்பினர்களில், இந்தியாவும் ஒன்று. இது இந்தியாவுக்கு 5வது முறை.
ஐ.நா., மனித உரிமை கவுன்சில் 2006ல் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம்
ஜெனீவா. உலகில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை
எடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர்கள், ரகசிய ஓட்டெடுப்பு
மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

mohan alagar

unread,
Oct 16, 2018, 9:47:08 PM10/16/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

அச்சுறுத்தும் உடல்பருமன்

உலகின் வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா ஆகியவை தங்களது ராணுவ பலத்தை
அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு வல்லரசு நாடான
அமெரிக்காவுக்கு, ராணுவத்தை பலப்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. இதற்கு
காரணம் உடல்பருமன். மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் உடல்பருமனால்
பாதிக்கப்பட்டுள்ளனர். 2018ல் 76 ஆயிரத்து 500 வீரர்களை, பெண்டகன்
பணிக்கு தேர்வு செய்ய இலக்கு நிர்ணயித்தது. ஆனால் 70 ஆயிரம் பேரை மட்டுமே
தேர்வு செய்ய முடிந்தது. இதற்கு இளைஞர்கள் பலர், உடல் பருமனால்
பாதிக்கப்பட்டுள்ளதே காரணம்.

தகவல் சுரங்கம்

வெள்ளிவிழா
இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அக்.12ல் வெள்ளிவிழா கொண்டாடியது.
இது 1993ல் அக்.12ல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் டில்லியில்
உள்ளது. மனித உரிமை என்பது மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் போன்றவற்றை
குறிக்கிறது. இது மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக துவங்கப்பட்டது.
இதற்கு ஒரு தலைவர், நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். பிரதமர் தலைைமயிலான
கமிட்டி தேர்வு செய்யும் உறுப்பினர்களை, ஜனாதிபதி நியமனம் செய்கிறார்.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் புகார் செய்யலாம்.

mohan alagar

unread,
Oct 17, 2018, 9:55:44 PM10/17/18
to Valluvan Paarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

உலகின் அதிவேக கேமரா
வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை, தேவைப்படும் போது மீண்டும் பார்ப்பதற்கு
கேமரா உதவுகிறது. கேமரா பல்வேறு பரிணாமங்களை கடந்து, தற்போது டிஜிட்டல்
கேமராவில் வந்து நிற்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னாலஜி மற்றும் கனடாவின் கியூபெக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
இணைந்து, உலகின் அதிவேகமான கேமராவை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா ஒரு
வினாடிக்கு ஒரு லட்சம் கோடி பிரேம்களை எடுக்கும் திறன் பெற்றது. இதுவே
தற்போதுள்ள 'ஸ்மார்ட்'போனில் வினாடிக்கு 30 தான் எடுக்க முடியும்.


தகவல் சுரங்கம்

'தித்லி' பெயர்
வங்கக்கடலில் உருவான 'தித்லி' புயல் அக்.10ம் தேதி இரவு, ஆந்திரா மற்றும்
ஒடிசா இடையே கரையை கடந்தது. இப்புயல் இரண்டு மாநிலங்களில் பல்வேறு
சேதத்தை ஏற்படுத்தியது. ஒடிசாவில் இந்த புயலால் 15 பேர் பலியாகினர்.
மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒடிசாவில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று
நடந்துள்ளது. அக்.10ம் தேதி இரவு - அக். 11 இரவு வரை பிறந்த குழந்தைகளில்
பத்து பேருக்கு 'தித்லி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'தித்லி' என்றால்
இந்தியாவில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம்.

mohan alagar

unread,
Oct 18, 2018, 10:20:15 PM10/18/18
to Valluvan Paarvai, inaiathendral
நள்ளிரவில் சூரியன்
சூரியனை, பூமி ஒருமுறை சுற்றி வருகையில், அதன் அச்சில் 23.5 டிகிரி
சாய்ந்திருப்பதின் அடிப்படையில் இந்த இயற்கைச் சம்பவம் நிகழ்கிறது. வட,
தென் துருவ பகுதிகளில் உள்ள சில நாடுகள் இது போன்ற நிகழ்வுகளை
சந்திக்கின்றன. பூமி சற்று சாய்வாக இருப்பதும் இந்த விந்தைக்கு காரணம்.
கனடாவின் சில பகுதிகள், அமெரிக்காவின் அலாஸ்கா மகாணம், கிரீன்லாந்து,
ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ரஷ்யா, சுவீடன் ஆகிய நாடுகளில் ஜூன்
முதல் ஆகஸ்ட் வரை (இடத்தை பொறுத்து) நள்ளிரவிலும் சூரியனை பார்க்க
முடியும்.
தகவல் சுரங்கம்

பெயர் மாறும் அலகாபாத்

உத்தரபிரதேசத்தின் நீதித்துறை தலைநகராக விளங்கும் அலகாபாத்தின் பெயரை,
பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்ய, உ.பி., அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியுள்ளது. உ.பி.,யின் பெரிய மாநகரமான இங்குதான் உயர்நீதிமன்றம்
உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் உ.பி.,யின் 7வது நகரம். கங்கை, யமுனை,
கண்ணுக்கு புலப்படாத சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடம் அலகாபாத்.
இந்துக்களின் கலாசார நகராக விளங்கும் இங்கு, கும்பமேளா நடைபெறுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா, வி.பி.சிங் ஆகியோர்
இங்கு பிறந்தவர்கள்.

mohan alagar

unread,
Oct 20, 2018, 9:31:08 PM10/20/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

மூன்று இந்தியர்
உலகளவில் மாணவர்களுக்கான 'அறிவியல் சவால்' போட்டியில், இறுதி போட்டிக்கு
தேர்வான 15 பேரில் மூன்று பேர் இந்தியர். இதில் இருவர் பெங்களூரு. ஒருவர்
டில்லியை சேர்ந்தவர். உலகளவில் 12 ஆயிரம் மாணவர்கள், புராஜக்ட்களை
சமர்ப்பித்திருந்தனர். இதிலிருந்து 15 பேர் இறுதி போட்டிக்கு தேர்வாகி
உள்ளனர். அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் நவ.4ம் தேதி
இறுதிப்போட்டி முடிவு வெளியிடப் படுகிறது. முதலிடத்தை பெறும் மாணவருக்கு
ரூ.1.83 கோடி, அம்மாணவரின் ஆசிரியருக்கு ரூ. 36 லட்சம், பள்ளிக்கு ரூ. 73
லட்சமும் வழங்கப்பட உள்ளது.
தகவல் சுரங்கம்
பம்பா நதி
மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப் பகுதியில் உற்பத்தியாகிறது
பம்பா நதி. இது கேரளாவின் மூன்றாவது நீளமான ஆறு. இதன் நீளம் 176 கி.மீ.
இது ஆலப்புழா, பந்தனம்திட்டா மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடி,
வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள், இந்த பம்பா
நதியில் நீராடிய பின், சபரிமலை ஏறுகின்றனர். இங்கிருந்து 7 கி.மீ.,
தொலைவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. கங்கையைப்போல புண்ணிய நதியாக
கருதப்படுகிறது. அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு இணையாக, பம்பா நதி
வணங்கப்படுகிறது.

mohan alagar

unread,
Oct 21, 2018, 9:20:01 PM10/21/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

சிறிய கோள்

சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி,
யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் உள்ளன. இதில் சூரியனுக்கு அருகில் உள்ள
கோள் புதன். சிறிய கோள் என அழைக்கப்படுகிறது. ஒருமுறை சூரியனை சுற்றி
வருவதற்கு 88 நாட்கள் ஆகிறது. சூரியனுக்கு அருகில் இருப்பதால் மிக
வெப்பமாக இருக்கிறது. இதன் வெப்ப அளவு 800 டிகிரி பாரன்ஹீட். சூரியனில்
இருந்து 5.7 கோடி கி.மீ. துாரத்தில் இருக்கிறது. இரவில் மைனஸ் 209 டிகிரி
பாரன்ஹீட் அளவிற்கு கடுமையாக குளிர்ந்திருக்கும். புதனை நெருங்கிய முதல்
விண்கலம் 'மரைனர்', 1973ல் நாசாவால் அனுப்பப்பட்டது.


தகவல் சுரங்கம்

முதல் பெண்மணி
சர்வதேச நாணய நிதியம் 1945 டிச.27ல் தொடங்கப் பட்டது. இதன் தலைமையகம்
வாஷிங்டன். இதன் முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணராக, இந்தியாவின் கீதா
கோபிநாத் சமீபத்தில் நியமிக்கப் பட்டார். இவர் 1971ல் கோல்கட்டாவில்
பிறந்தார். டில்லியில் எம்.ஏ., பொருளாதாரம் படித்து, அமெரிக்காவின்
பிரின்ஸ்டன் பல்கலையில் பொருளாதாரத்தில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்.
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆலோசகர், கேரள முதல்வருக்கான
பொருளாதார ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.

mohan alagar

unread,
Oct 22, 2018, 9:34:25 PM10/22/18
to valluvanpaarvai, inaiathendral
சிமென்ட்டுக்கு மாற்றுகட்டுமானத்தில் சிமென்ட் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகளவில் வெளியிடப்படும் கார்பன் அளவில், 7 சதவீதம் சிமென்ட்டால்
ஏற்படுகிறது. இந்நிலையில் 'மண்ணுக்குள் விளையும் கேரட்டில் இருந்து
தயாரிக்கப்படும் ஒருவித துகளை, சிமென்ட்டுடன் கலப்பதால் கார்பன் அளவை
வெகுவாக குறைக்க முடியும்' என பிரிட்டன் லான்காஸ்டர் பல்கலை
விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. சாதாரண சிமென்ட்டுக்கு
பதிலாக, இந்த சிறிய அளவிலான கேரட் துகள் சேர்க்கப்படும் சிமென்ட்
பயன்படுத்துவதால், கட்டடத்தின் பலம், 80 சதவீதம் அதிகரிக்கும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்
போட்டி விருது
தேர்வுக்குழுவினர் மீதான பாலியல் புகார் மற்றும் பண மோசடி காரணமாக,
இந்தாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இந்நிலையில்
இலக்கிய விருது தேர்வுக்குழுவுக்கு எதிராக போராடும் சுவீடன்
இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் இணைந்து நியூ அகாடமி
என்பதை உருவாக்கினர். இதன் சார்பில் 2018க்கான இலக்கிய விருதுக்கு,
பிரான்சின் மரைஸ் கொன்டே என்ற பெண் எழுத்தாளர் தேர்வானார். இவர் 20
நாவல்களை எழுதியுள்ளார். நியூ அகாடமி, 2018 டிசம்பரில் கலைக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

mohan alagar

unread,
Oct 23, 2018, 9:18:55 PM10/23/18
to valluvanpaarvai, inaiathendral
இரவில் சோலார் மின்சாரம்
அனல், நீர், காற்றாலை, அணு, சோலார் என பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது. இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி
மின்சாரம் தயாரிப்பதற்கு செலவு குறைவு. தற்போதுள்ள சோலார் பேனல்கள்
பகலில் மட்டுமே சூரிய கதிர்களை பெற்று அதனை மின்சாரமாக உற்பத்தி
செய்கிறது. இந்நிலையில் மேகமூட்டம் மற்றும் இரவு பொழுதிலும் மின்சாரத்தை
உற்பத்தி செய்யும் வகையிலான பேனல்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும்,
இதன்மூலம் உற்பத்தியின் அளவை அதிகரிக்கலாம் எனவும் அமெரிக்க பேராசிரியர்
கென்னெத் சந்தாஜி தெரிவித்துள்ளார்.

தகவல் சுரங்கம்
நீளமான பாலம்பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அசாமின் துப்ரி-மேகாலயாவின்
புல்பரனி பகுதிகளை இணைக்கும் பாலம் அமைக்க உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மொத்த நீளம் 19.3 கி.மீ., இதனால்
தற்போதுள்ள 203 கி.மீ., துாரம் சுற்ற தேவையில்லை. மேலும் பயண நேரம் 2:30
மணியிலிருந்து, 15 நிமிடமாக குறையும். இதன் கட்டுமானப்பணி 2026 - 27ல்
முடிக்கப்பட உள்ளது. இதுவே இந்தியாவின் நீளமான சாலை பாலமாக அமையும்.
பிரம்மபுத்ரா குறுக்கே அசாமில் தோலா - சாடியா இடையே உள்ள பாலம் தான்,
நாட்டின் நீளமான சாலை பாலமாக உள்ளது.

mohan alagar

unread,
Oct 24, 2018, 9:15:56 PM10/24/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : அக் 25, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail


அறிவியல் ஆயிரம்

யானைகளுக்கு கணித அறிவு
விலங்குகளில் பெரியது யானை. இது ஆசிய யானை, ஆப்ரிக்க யானை என சில வகைகள்
உள்ளன. இந்நிலையில் ஆசிய யானைகளுக்கு, மனிதர்களைப் போல கணித அறிவு
இருப்பதாக ஜப்பான் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. யானையை தவிர
எந்தவொரு விலங்குக்கும் இப்படிப்பட்ட கணித அறிவு இல்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜப்பானில் உள்ள யூனோ வனவிலங்குகள்
சரணாலயத்தில், ஏயுதை என்ற 14 வயது ஆசிய யானைக்கு பல்வேறு பயிற்சிகள்
வழங்கி ஆய்வு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் கணித அறிவு இருப்பதை
ஆய்வு செய்துள்ளனர்.
தகவல் சுரங்கம்

இந்தியாவுக்கு இடமில்லை
உலகளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பிரிட்டனின்
ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் வட அமெரிக்காவில் இருந்து
48, ஐரோப்பாவில் இருந்து 27, ஆசியாவில் இருந்து 23, மத்திய கிழக்கில்
இருந்து 2 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன. முதலிடத்தை அமெரிக்காவின்
ஸ்டான்போர்டு பல்கலை பெற்றது. 2 மற்றும் 3வது இடத்தை அமெரிக்காவின்
எம்.ஐ.டி., மற்றும் ஹார்வர்டு பல்கலை பெற்றன. முதல் பத்து இடங்களில்,
எட்டு இடங்களை அமெரிக்க பல்கலைக்கழகங்களே பிடித்தன. இந்த பட்டியலில்
இந்திய பல்கலை இடம்பெறவில்லை.

mohan alagar

unread,
Oct 25, 2018, 9:12:47 PM10/25/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : அக் 26, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail


அறிவியல் ஆயிரம்

விண்கல் ஏலம்
பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் சந்திரன். இதன் மேற்பரப்பில் இருந்து
வெடித்துச் சிதறிய விண்கல் ஒன்று, கடந்தாண்டு வடமேற்கு ஆப்ரிக்காவின்
பாலைவன பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. ஆறு துண்டுகளை உடைய, மிகவும்
அரிதான இந்த விண்கல்லின் எடை 5.5 கிலோ. இந்த விண்கல், அமெரிக்காவில் உள்ள
ஆர்.ஆர்., ஏலத்தில், ரூபாய் 4.5 கோடிக்கு ஏலம் ஆனது. இந்த விண்கல்
'என்.டபிள்யூ.ஏ., - 11789' என்று வகைப்படுத்தப்பட்டது. இதன் பெயர்
புவாக்பா அல்லது 'நிலவுப்புதிர்' என கூறப்படுகிறது. இந்த விண்கலம் 40
ஆயிரம் கி.மீ., துாரம் கடந்து பூமியில் விழுந்துள்ளது.
தகவல் சுரங்கம்

சுற்றுச்சூழல் ஆர்வலர்
உலகை சுத்தமாக வைத்திருப்பதற்கு பல்வேறு பணிகளை மேற்கொண்டவர்
ஆஸ்திரேலியாவின் இயான் கிர்னன். இவர் அக்.16ல் மறைந்து விட்டாலும், அவரது
பணியை நாம் தொடர்ந்தால், உலகை சுத்தமாக வைத்திருக்கலாம். ஆஸி.,யைச்
சேர்ந்த இவர், 1989ல் 'கிளீன் அப் ஆஸ்திரேலியா' என்ற இயக்கத்தை தொடங்கி
முதல் பணியாக சிட்னி துறைமுகத்தை, 40 ஆயிரம் தன்னார்வலர்கள் மூலம்
சுத்தப்படுத்தினார். 1993ல் 'கிளீன் அப் தி வேர்ல்டு' என்ற அமைப்பை
தொடங்கினார். இதன் மூலம் 130 நாடுகளில், 3.5 கோடி தன்னார்வலர்கள் துாய்மை
பணியில் ஈடுபட்டுள்ளனர்.

mohan alagar

unread,
Oct 26, 2018, 9:09:27 PM10/26/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : அக் 27, 2018 00:00
G+
Advertisementஅ+
அ-அறிவியல் ஆயிரம்
இருபது நிமிடம்
இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, உடல் முழுவதும் ரத்தத்தை பரவச் செய்யும்
பணியில் இருதயம் ஈடுபடுகிறது. நாம் உயிர்வாழ மிக அவசியமான இருதயத்தை
பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தற்போதைய காலமாற்றத்தில், மாரடைப்பு
என்பது வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது.
இந்நிலையில் இருதய பாதிப்புக்கு உள்ளானவர்கள், 20 நிமிடத்துக்கு ஒருமுறை,
7 நிமிட நேரம் இலகுவான உடல் அசைவு செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இது
இருதயத்தின் வாழ்நாளை அதிகரிக்கும் என கனடாவின் கார்டியாலஜி
கூட்டமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.
தகவல் சுரங்கம்

நீர் விமானம்
பொதுவாக விமானங்கள் தரையிறங்குவதற்கு மற்றும் பறப்பதற்கு, ஓடுதளங்கள்
அவசியம். இந்நிலையில் நீரில் தரையிறங்கும் மற்றும் நீரில் இருந்தே
பறக்கும் வகையிலான, முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட விமானத்தின்
முதல் சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதற்கு 'ஏஜி-600'
என பெயர். கடல் பாதுகாப்புக்காக இது வடிவமைக்கப் பட்டு உள்ளது. சீன
ராணுவத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் 50 பயணிகள் பயணிக்கலாம்.
விமானம் தொடர்ந்து 12 மணி நேரம் இயங்கும். 4,500 கி.மீ., துாரம்
தொடர்ந்து இயங்கும்.

mohan alagar

unread,
Oct 27, 2018, 9:12:18 PM10/27/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : அக் 28, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
அறிவியல் ஆயிசாக்லெட் வரலாறு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சாக்லெட் பிடிக்காதவர்களே இருக்க
முடியாது என கூறலாம். மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்திருந்தாலும்,
உலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்நிலையில், 'மத்திய அமெரிக்காவில் 3,600
ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் சாக்லெட் தயாரிப்பின் மூலப்பொருளான கோகோ
மரத்தை வளர்த்துள்ளனர்' என அமெரிக்க தாவரவியல் வல்லுநர்கள்
தெரிவித்துள்ளனர். மேலும் மரத்தின் பூர்விகம், கொலம்பியா - வடக்கு
ஈக்குவடார் எல்லை பகுதிதான். வணிகர்கள் மூலமாக மத்திய அமெரிக்காவுக்கு
வந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்

சியோல் அமைதி விருது
தென் கொரியாவில் 1960ல், 24வது ஒலிம்பிக் போட்டியின் போது, இவ்விருது உருவாக்கப்
பட்டது. கொரிய தீபகற்பம் மற்றும் உலகில் அமைதிக்கு பாடுபடுபவர்களுக்கு
விருது வழங்கப் படுகிறது. இதற்கான தேர்வு குழுவில் தென் கொரியாவில் 300
பேரும், உலக நாடுகளில் 800 பேரும் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை
வழங்கப்படுகிறது. 2018க்கான விருதுக்கு
பிரதமர் மோடி தேர்வாகியுள்ளார். இதற்கு முன் கோபி அனான், பான் கி மூன்,
ஏஞ்சலா மெர்கல் போன்றவர்கள் விருதை பெற்றுள்ளனர்.

mohan alagar

unread,
Oct 28, 2018, 9:01:43 PM10/28/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : அக் 29, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அஅறிவியல் ஆயிரம்

குளிர் தரும் ஆபத்து
குளிர், குளிரான காலநிலை, மாரடைப்பு வருவதற்கான பிரச்னைகளை அதிகரிக்கிறது
என ஆய்வு தெரிவிக்கிறது. சுவீடனில் 1998-2003 வரை, மாரடைப்பு ஏற்பட்ட
நோயாளிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 2.74 லட்சம் நோயாளிகளிடம்
நடத்தப்பட்ட ஆய்வில், காற்றின் அழுத்தம் குறைவு, குளிர்ந்த நிலை,
வெப்பநிலையின் அளவு குறைவு போன்ற சூழல்கள், இருதயத்துக்கு கூடுதல்
அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வெப்பநிலை 3 - 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு
குறையும்போது, நோயாளிகளுக்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு
என ஆய்வு தெரிவிக்கிறது.


தகவல் சுரங்கம்

உயரமான ரயில் பாதை

தலைநகர் டில்லியுடன், காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியை இணைக்கும்
வகையில், 'பிலாஸ்பூர் - மணாலி - லே' என்ற புதிய ரயில் பாதை அமைக்க இந்திய
ரயில்வே திட்டமிட்டுள்ளது. மொத்த துாரம் 465 கி.மீ. திட்டத்திற்கான செலவு
ரூ. 83,360 கோடி. இது கடல்மட்டத்திலிருந்து 5,360 அடி உயரத்தில்
அமைக்கப்படுகிறது. இப்பாதை திறக்கப்படும் போது, இதுவே உலகின் உயரமான
ரயில்பாதை என்ற பெருமை பெறும். இதில் 74 சுரங்க பாதைகள், 124 பெரிய
பாலங்கள், 396 சிறிய பாலங்கள், 30 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

mohan alagar

unread,
Oct 29, 2018, 9:00:50 PM10/29/18
to valluvanpaarvai, inaiathendral
உயரமானவர்களுக்கு பாதிப்புமனிதர்களின் உயரத்துக்கும் - கேன்சர்
பாதிப்புக்கும் தொடர்பு உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர். சராசரி
உயரத்தை விட உயரம் கூடுதலாக இருப்பவர்களுக்கு, உடலில் உள்ள செல்களின்
எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கும். இதனால் கேன்சர் ஏற்படுவதற்கான
சாத்தியக்கூறுகளும் உள்ளது. சராசரி உயரத்துக்குப்பின், ஒவ்வொரு 10
செ.மீ., உயரத்துக்கும், 10 சதவீத கேன்சர் வாய்ப்பு உள்ளது. சராசரியாக
ஒருவரது வளர்ச்சி என்பது பெண்களுக்கு 162 செ.மீ., உயரமும், ஆண்களுக்கு
175 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தகவல்
சுரங்கம்விவசாய விருது
உலகுக்கு உணவளிப்பது விவசாயி. நாட்டின் வளர்ச்சிக்கு விவசாய உற்பத்தி
அவசியம். உலகளவில் விவசாய துறையில் சாதனை படைத்தவர்களை அங்கீகரிக்கும்
விதமாக, 'உலக விவசாய விருதை', இந்திய உணவு மற்றும் விவசாய கழகம்
இந்தாண்டு தொடங்கியது. தனிநபர் அல்லது அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை
இவ்விருது வழங்கப்படுகிறது. முதல் விருதுக்கு, இந்திய பசுமை புரட்சியின்
தந்தை என அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விருதுடன், ரூபாய் 73 லட்சம் பரிசுத்தொகை
வழங்கப்படுகிறது.

mohan alagar

unread,
Oct 30, 2018, 9:13:46 PM10/30/18
to valluvanpaarvai, inaiathendral
செல்பி மரணத்தை தடுக்கும் 'ஆப்'இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்து
தரப்பினரிடமும், 'செல்பி' மோகம் அதிகரித்து விட்டது. ஆனால்
ஆர்வக்கோளாறால் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுக்கும் போது, உயிரிழக்க
நேரிடுகிறது. இதனை தடுக்கும் நோக்கில், அலைபேசி 'ஆப்' ஒன்றை, டில்லி -
ஐ.ஐ.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இது 'இணையதள' இல்லாத
நேரங்களிலும் செயல்படும். இந்த 'ஆப்', செல்பி எடுக்கும் போது, பின்புறம்
உள்ள சூழலை சென்சார் செய்கிறது. கடல், ஆறு, ரயில்பாதை, மிருகங்கள் என
ஆபத்தான சூழல் இருந்தால், எச்சரிக்கை செய்தியை அனுப்பி, ஆபத்தில் இருந்து
காப்பாற்றுகிறது.

தகவல் சுரங்கம்
அதிகரித்த நடுத்தரவர்க்கம்
உலகின் மக்கள் தொகையில், நடுத்தரவர்க்க குடும்பங்களின் எண்ணிக்கை பாதியாக
உயர்ந்துள்ளது என அமெரிக்காவின் 'புரூக்கிங் இன்ஸ்டிடியூட்'
தெரிவித்துள்ளது. உலகில் 380 கோடி பேர் நடுத்தரம் அல்லது உயர்வகுப்பினராக
உள்ளனர். ஒரு வினாடிக்கு 5 பேர் நடுத்தர பிரிவுக்கு உயர்ந்து
வருகின்றனர். இவர்கள் ஒரு நாளைக்கு, ஒரு நபருக்கு ரூ. 800ல் இருந்து
8,000 வரை செலவு செய்கின்றனர். இருப்பினும் உலகில் 63 கோடி பேர்,
வறுமையில் வாழ்கின்றனர். தினமும் 95 ஆயிரம் பேர் வறுமையில் இருந்து
உயருகின்றனர். தினமும் 10 ஆயிரம் பேர் வறுமையில் சிக்குகின்றனர்.

mohan alagar

unread,
Oct 31, 2018, 9:05:21 PM10/31/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்நாசா சாதனைசூரியனை ஆய்வு செய்வதற்காக 'பார்கர் சோலார்
புரோப்' என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஆக.12ம் தேதி
விண்ணில் ஏவியது. சூரியனின் 'கொரானா' பரப்புக்குள் சென்று ஆய்வு செய்வதே
இதன் நோக்கம். இந்நிலையில் இந்த விண்கலம் அக்.29ம் தேதி நிலவரப்படி,
சூரியனின் மேற்பரப்பில் இருந்து 4.2 கோடி கி.மீ., துாரத்தில் பயணித்து
கொண்டிருக்கிறது என நாசா அறிவித்துள்ளது. இதுவரை எந்தவொரு விண்கலமும்
இச்சாதனையை எட்டியதில்லை. இதற்கு முன் 1976ல் விண்ணில் ஏவப்பட்ட
'ஹெலியாஸ் - 2' விண்கலம் இந்த துாரம் வரை சென்றிருந்தது. தகவல்
சுரங்கம்ஆசியாவில் இந்தியாஆசிய நாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்கள்- 2019
என்ற பட்டியலை, பிரிட்டனை சேர்ந்த கியூ.எஸ்., நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் 500 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. முதலிடத்தை சிங்கப்பூர்
தேசிய பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக சீனாவில் இருந்து
112 பல்கலைகழகங்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவதாக ஜப்பானில் இருந்து 89
கல்லுாரிகளும், மூன்றாவதாக இந்தியாவில் இருந்து 75 கல்லுாரிகள் இடம்
பெற்றுஉள்ளன. பட்டியலில் 31வது இடத்தை பெற்ற மும்பை - ஐ.ஐ.டி., இந்தியா
சார்பில் முதலிடம் பெற்றது.

mohan alagar

unread,
Nov 3, 2018, 8:52:11 PM11/3/18
to valluvanpaarvai, inaiathendral
பசுமைக்குடிலின் நன்மைசில அரிய தாவரங்களை, பருவநிலை மாற்றங்களில் இருந்து
பாதுகாக்கவும், தனிப்பட்ட கவனம் செலுத்தி முறையாக வளர்த்துக்
காப்பாற்றவும், எல்லா பக்கங் களிலும் கண்ணாடி பொருத்தப்பட்டு அமைக்கும்
வீடு அல்லது கூடத்திற்கு கண்ணாடி வீடு அல்லது பசுமைக்குடில் என்று பெயர்.
பசுமைக் குடிலில் இந்த அரிய வகை தாவரங்களை பேணி வளர்ப்பதற்குதேவைப்படும்
தரமான உரங்களும், தங்கு தடையின்றி நீர் கிடைக்க வசதியும்
அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குளிர் மற்றும் வெயில் காலங்களில் கண்ணாடி
வீட்டுக்குள் உள்ள தாவரங்கள் பாதிக்கப்படுவதில்லை.தகவல் சுரங்கம்
நடைப்பயிற்சியின் பலன்
நடப்பது என்பது சாதாரணமானதுதானே, இதனால் என்ன பெரிய பயன் என பலரும்
எண்ணலாம். நாம் நடக்கும் போது உடல் தசைகள், தசை நாண்கள், மூட்டுக்கள்
அனைத்தும் இயங்குகின்றன. மெதுவாக நடந்தாலும் அந்த அளவுக்கு இவை
இயங்குகின்றன. இதனால் நம் இருதயம் துாண்டப்படுகிறது. வேகமாக துடிக்கிறது.
இருதயமும், ரத்த ஓட்டமும் சீர் படுத்தப்படுகின்றன. தவிர
நுரையீரல்களுக்கும் நன்மை கிடைக்கிறது. இயங்கும் தசைகளுக்கு அதிக
ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே தசைகள் இயங்கும் போது நமது சுவாசமும்
அதற்கேற்ப சீர்படுகிறது.

mohan alagar

unread,
Nov 7, 2018, 7:58:21 PM11/7/18
to valluvanpaarvai, inaiathendral
நீரிழிவு பின்னணிநமது உடலில் இலை வடிவில் உள்ள கணையம் சுரப்பியில் பீட்டா
செல்கள் உள்ளன. இவை, இன்சுலின் ஹார்மோனை சுரக்கின்றன. இன்சுலின் நமது
உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க
உதவுகிறது. பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்களின் உடலில் இன்சுலின் அளவு
குறைவாகவே இருக்கும். சிலருக்கு இன்சுலினே இருக்காது. இவர்கள் வாழ்நாள்
முழுவதும் இன்சுலின் ஊசி போட வேண்டியிருக்கும். ஓரளவு மட்டுமே இன்சுலின்
உள்ளவர்கள், உணவுக்கட்டுப்பாடு மற்றும் மாத்திரைகள் மூலமாக இந்நோயைக்
கட்டுப்படுத்தலாம்.தகவல் சுரங்கம்தலைமுடி நரைப்பது ஏன்பொதுவாக
ஊட்டச்சத்து குறைந்தால் உடலில் தோன்றும் பல நோய்களுடன் தலைமுடி
நரைக்கலாம். முடியை சரிவரப் பராமரிக்காவிட்டால் கூட சில சமயங்களில் நரை
தோன்றலாம். தீரா மனக்கவலையாலும் குடும்பத் தொல்லைகளாலும் நரை ஏற்படும்
என்கின்றனர். பரம்பரையாகவும் நரை தோன்றுவதுண்டு. சிலருக்கு இளநரை
இருப்பின், அவர்களது அடுத்த தலைமுறையினருக்கும் 20-25 வயதிலேயே நரை
தோன்றிவிடும் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் வயதான முதியவர்களுக்கு முடி
நரைத்துவிடுகிறது.

mohan alagar

unread,
Nov 10, 2018, 8:05:45 PM11/10/18
to valluvanpaarvai, inaiathendral
வலியின் வடிகால் உடல், மனம் என இரண்டிற்கும் தாங்க முடியாத வலியின்போது
கண்ணீர் வடிகாலாக அமைகிறது. எல்லையற்ற மகிழ்ச்சியிலும் கண்ணீர் வழியும்.
நமது புருவத்தின் இடது புறத்தில் தலா ஒன்று என கண்ணீர் சுரப்பிகள்
அமைந்துள்ளது. உணர்ச்சி பெருக்கின்போது, துாண்டுதல் காரணமாக கண்ணீர்
உருவாகிறது. வழக்கத்தை விட கூடுதலாக உணர்ச்சி ஏற்பட்டதால்,
கண்களிலிருந்தும் வழியத்துவங்குகிறது. கண்ணீர் சிந்துவதால், மனதில் உள்ள
வேதனையின் பாரம் குறையும் என்பதால் கண்ணீரும் நல்லதே. தகவல்
சுரங்கம்பெருமையின் சின்னம்ஒரு குறிப்பிட்ட புவி சார்ந்த இடத்தில்
தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுவதே புவிசார்
குறியீடு. இதன் மூலம், இப்பொருளின் தனித்துவம் தக்கவைக்கப்படுகிறது.
தவிர, தங்கள் பகுதியின் பெருமையின் சின்னமாக மக்கள் கருதுகின்றனர்.
இனிப்பு வகையான ரசகுல்லாவுக்கு மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்கள் புவிசார்
குறியீட்டிற்கு மோதின. முடிவில், மேற்குவங்கம் இந்த பெருமையை
தட்டிச்சென்றது. மதுரை மல்லிகைப்பூ, கோவில்பட்டி கடலைமிட்டாய் என
தமிழகத்தில் எண்ணற்ற பொருட்கள் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

mohan alagar

unread,
Nov 12, 2018, 8:54:48 PM11/12/18
to valluvanpaarvai, inaiathendral
துாக்கத்தின் எதிரி
பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் துாக்கம் பொதுவானது. உடல்,
மனதின் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை தருகிறது. பிறந்த குழந்தைகள் 15
மணி நேரத்திற்கு அதிகமாக துாங்கும். இதன்பின், 6-8 மணி நேரமாக குறைகிறது.
இது உடல் அமைப்பு, பணிபுரியும் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும். மூளையில்
துாண்டப்படும் மெலடோனின் ஹார்மோன் காரணமாக, உடல் துாக்கத்திற்கு
தயாராகிறது. இந்த நேரத்தில் அலைபேசியை பயன்படுத்துவதால் அதிலிருந்து
வெளிவரும் வெளிச்சம் துாக்கத்திற்கு தடையை உண்டாக்குகிறது. தகவல்
சுரங்கம்ரப்பர் ராஜ்யம்இரும்பு, நிலக்கரி வரிசையில் ரப்பரும் இயற்கையின்
வரப்பிரசாதம். ரப்பர் மரங்களிலிருந்து வடியும் பால் போன்ற திரவம்தான்
ரப்பர். பல நடைமுறைகளை தாண்டி உபயோகப்படுத்தும் அளவுக்கு உருவாகிறது.
தென் அமெரிக்காவில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது. உலக அளவில் ரப்பர்
உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இதில் கேரளா 92 சதவீத
ரப்பரை உற்பத்தி செய்கிறது. தொழிற்சாலை, வாகனம் என பல துறைகளில் ரப்பர்
பயன்படுத்தப்படுகிறது. இதன் பங்களிப்பு இருப்பதால் ரப்பர் இல்லாத நாட்களை
நினைத்துப் பார்ப்பதே கடினம்.

mohan alagar

unread,
Nov 16, 2018, 8:51:12 PM11/16/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

'ஹெல்மெட் பிளீஸ்'
சாதாரணமாக ஒரு ஆணின் சிறிய மூளையில் சராசரியாக 17,100 கோடி செல்கள் உள்ளதாம்.
இதில் 8,600 கோடி நரம்பு செல்கள் உள்ளன. இது தான் நாம் பார்க்கும்,
கேட்கும் தகவல்களை
மூளைக்கு கொண்டு சென்று பல்வேறு பகுதிகளுக்கும் கடத்துகின்றன. இது தவிர
8,500 கோடி மற்ற செல்களும் உள்ளன. இவற்றை 'கிளியல்'செல்கள் என்று
அழைப்பர். நரம்புகள் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறி கொள்ள இவை
உதவுகின்றன. மூளையை பாதுகாக்க 'ஹெல்மெட்' அணிவது அவசியம்.
தகவல் சுரங்கம்

7,500 வகை ஆப்பிள்
உலகில் 7,500 வகையான ஆப்பிள்கள் இருந்துள்ளன. இங்கிலாந்தில் மட்டும்
3,600க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாக இங்குள்ள தேசிய பழங்கள் மையத்தில்
பதிவு செய்துள்ளனர். இவற்றை கண்டறிந்து பாதுகாக்க, தொடர்ந்து பயிரிட
விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். தடய அறிவியலில் பயன்படும்
டி.என்.ஏ., சோதனைகளால் மரபணு வேறுபாடுகளை வைத்து பிரிக்கின்றனர். ஒவ்வொரு
நபருக்கும் விரல் ரேகைகள் மாறுபடுவது போல ஆப்பிள்களை சிறியளவில் பிரித்து
ஆராய்ச்சி செய்து, புதிய வகைகளை கண்டறிகின்றனர்.

mohan alagar

unread,
Nov 17, 2018, 8:39:18 PM11/17/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : நவ 18, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Pஅறிவியல் ஆயிரம்

குரைக்காத நாய்

நாய்கள் என்றவுடன் குரைக்கும் சப்தம் நினைவுக்கு வரும். குரைக்காத நாய்
ஒன்றும் உள்ளது. மத்திய ஆப்ரிக்க பகுதிகளில் காணப்படும் 'பசன்ஜி' என்ற
நாய் இனங்கள் குரைக்காது. காட்டுப்பகுதிகளில் செல்லும் போது நாய்
குரைத்தால் எதிரிகளுக்கு இருப்பிடத்தை காட்டிக் கொடுத்து விடும் என்பதால்
இவ்வகை நாய்களை வேண்டுமென்றே இப்படி இனப்பெருக்கம் செய்திருப்பதாக
கூறுகின்றனர். ஒரு சிலர் 'பசன்ஜி' வகை நாய்கள் தான் உலகில் மிகப்பழமையான
இனத்தை சேர்ந்தது என நம்புகின்றனர்.


தகவல் சுரங்கம்

பெண்களுக்கு அதிகம்
மாரடைப்பு பெரும்பாலும் நடுத்தர வயது அல்லது அதிக எடை கொண்ட ஆண்களுக்கு
மட்டும் வரும் என நம்புகிறோம். நவீன வாழ்க்கை முறையில் பெண்களுக்கும்
அதிக மாரடைப்பு ஏற்படுகிறது என ஆக்ஸ்போர்டு பல்கலை., கண்டறிந்தது.
4,70,000 பிரிட்டிஷ் மக்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. புகை
பிடித்தல், மது அருந்தும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு, ஆண்களை விட (143
சதவீதம்) சுமார் இரண்டு மடங்கு அதிகமாக (246 சதவீதம்) மாரடைப்பு வர
வாய்ப்புள்ளது.

mohan alagar

unread,
Nov 18, 2018, 8:23:39 PM11/18/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : நவ 19, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அஅறிவியல் ஆயிரம்

காலில் இருக்குது 'காது'
தென் அமெரிக்க மழைக் காடுகளில் காணப்படும் வெட்டுக்கிளி இன பூச்சிகளுக்கு காதுகள்
முழங்காலில் அமைந்துள்ளன. ஒரு மில்லி மீட்டரில் நான்கு பங்குக்கும்
குறைவான அளவில் இவை இருக்கும். விலங்குகளில் மிகச்சிறிய காது உடையது இது
தான். இந்த பூச்சிகளின் காது எப்படி வேலை செய்கிறது என 'ஸ்பெஷலாக'
வடிவமைக்கப்பட்ட 'சிடி' ஸ்கேன் கொண்டு ஆராய்ந்தனர். அப்போது இரு
முழங்காலிலும் 'இயர் டிரம்' ஜோடி இருப்பது தெரிய வந்தது.
தகவல் சுரங்கம்

ஆராய்ச்சியில் குரங்கு
அமெரிக்காவில் நடத்தப்படும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில்
பயன்படுத்தப்படும் குரங்குகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு
கடந்த ஆண்டு உயர்ந்துள்ளது. பல்வேறு புதிய நோய் தாக்குதலுக்கு மனிதர்கள்
ஆளாகும் நிலையில் புதிய மருந்து கண்டு பிடிப்புகளுக்கு தேவை
அதிகரித்துள்ளது. நாய், பூனை, முயல், எலிகளை விட குரங்குகளிடம்
நடத்தப்படும் சோதனை முடிவுகள் மனிதர்களுடன் எளிதாக ஒத்துப் போகிறதாம்.
இதனால் 2017ல் மட்டும் சுமார் 70,000 குரங்குகளிடம் சோதனை நடத்தியதாக
அமெரிக்க வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

mohan alagar

unread,
Nov 19, 2018, 8:11:35 PM11/19/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : நவ 20, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Posநகத்தில் 6,500 கோடிஅணுவின் அடிப்படை துகள்களில் ஒன்று நியூட்ரினோ.
அளவில் மிகச்சிறியது. நம் கண்ணுக்கு தெரியாமல் பல நுாறு லட்சம் கோடி
நியூட்ரினோக்கள் நம்மைச் சுற்றி பாய்ந்து கொண்டு உள்ளன. ஒளியை விட
வேகமாக, எதையும் ஊடுருவிச் செல்லும் திறன் படைத்தது.நம் விரல் நகத்தில்
மட்டும் வினாடிக்கு 6,500 கோடி நியூட்ரினோக்கள் கடந்துசெல்கின்றன. இதை
ஆராய்ச்சி செய்தால் பல அறிவியல் முடிச்சுகள் அவிழும் என நம்பப் படுகிறது.

தகவல் சுரங்கம்

பரம்பரை காரணம்
தலைமுடி ஏதாவது ஒரு காரணத்தால் உதிர்ந்து மீண்டும் முளைக்காமல்
போய்விடும் நிலைக்கு வழுக்கை என்று பெயர். இது நிலையான வழுக்கை, இடைக்கால
வழுக்கை என இரு வகைப்படும். பரம்பரை, முதுமை காரணமாக நிலையான வழுக்கை
ஏற்படும். ஒரு சிலருக்கு தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் 'இயக்கு
நீர்'குறைவாக சுரந்தால் வழுக்கை ஏற்படும். இது ஆண்களின் உடலில் மட்டும்
சுரப்பதால், பெண்களுக்கு வழுக்கை வாய்ப்பு இல்லை எனலாம்.

mohan alagar

unread,
Nov 20, 2018, 7:44:56 PM11/20/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

30 லட்சம் கோடி
மனித உடல் 'டிரில்லியன்' கணக்கான திசுக்கள் இணைந்த சிக்கலான அமைப்பு.
தோல், நரம்பு, கொழுப்பு உள்ளிட்ட 200 வகையான திசுக்கள் உள்ளன. இவற்றின்
எண்ணிக்கை குறித்து நீண்ட ஆண்டுகளாக ஆராய்ந்த விஞ்ஞானிகள் நமது உடலில் 30
'டிரில்லியன்' (30,000,000,000,000) திசுக்கள் உள்ளதாக முடிவுக்கு
வந்தனர். எவ்வித சிக்கலும் இல்லாமல் நமது உடல் இயங்க
இவை உதவுகின்றன. பாக்டீரியா செல்களும் உடலில் சேர்ந்துள்ளதே எண்ணிக்கை
உயர்வுக்கு காரணம்.
தகவல் சுரங்கம்
நீல நாக்கு நாய்

வடக்கு சீன பகுதிகளில் காணப்படும் நாய் 'சோவ் சோவ்'. 2000 ஆண்டுகள்
பழமையான இதன் நாக்கு நீலம் அல்லது கருப்பாக இருக்கும் என்பதற்காகவே
வீடுகளில் வளர்க்கின்றனர். வழக்கமான நாயை போல இல்லாமல் பல்லி இனங்களின்
குணங்களை ஒத்திருக்கும். மிக சுறுசுறுப்பான விசுவாசமிக்க இவற்றை போர்
நாய்கள் என்பர். தன்னை வளர்ப்பவருக்கு
ஏதாவது அச்சுறுத்தல் என்றால் துணிச்சலாக எதிர்த்து போராடும். சீனா,
திபெத் போன்ற ஆசிய நாடுகளில் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு பணியில்
நீல நாக்கு நாயை பயன்படுத்துகின்றனர்.

mohan alagar

unread,
Nov 21, 2018, 8:28:32 PM11/21/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

பறக்கும் 'ரோபோ'
பேரிடர் காலங்களில் மீட்பு பணி, பயிர் வளர்ச்சி, கேஸ் கசிவு போன்றவற்றை
கண்டறியும் வகையில் வயர்கள் இணைப்பு இல்லாமல் பறக்கும் 'ரோபோ பிளையை'
வாஷிங்டன் இன்ஜினியர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு முன் கண்டறிந்த 'ரோபோ'
மின்சார பொருட்கள், ஒயர்களை சுமந்து சென்றதால் காற்றில் செல்வது கடினமாக
இருந்தது. தற்போதுள்ள 'ரோபோ பிளையில்' உள்ள சர்கியூட், லேசர் ஆற்றலை மின்
ஆற்றலாக மாற்றிக் கொள்வதால் சிறகுகளை அசைத்து பறப்பதற்கு எளிதாக உள்ளது.
அளவில் சிறியதான இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்.


தகவல் சுரங்கம்

பூனை 'மம்மி'

எகிப்து பிரமிடு பகுதிக்கு அருகில் ஏழு கல்லறைகளை தொல்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மூன்றில் பதப்படுத்தப்பட்ட
பூனைகள்,வண்டுகள் இருந்தன. இறந்த மனிதர்களை பதப்படுத்தி, துணிகளால்
சுற்றி வைக்கப்பட்டு இருந்ததைப் போல இறந்த
பூனைகளை வைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லால் செய்யப்பட்ட
சதுர வடிவ தொட்டியில் வண்டுகளையும் பதப்படுத்தி வைத்துள்ளனர். இவைகள்
6,000 ஆண்டுகளுக்கு முந்தையது.

mohan alagar

unread,
Nov 22, 2018, 8:01:48 PM11/22/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

புதுமையான செங்கல்
தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் உள்ள பல்கலை.,யில் வீணாக செல்லும்
மனிதர்களின் சிறுநீரில் வீடுகள் கட்ட உதவும் செங்கலை முதன் முறையாக
தயாரித்துள்ளனர். வழக்கமாக சிறுநீரில் இருக்கும் தீங்கிழைக்கும்
பொருட்களை பிரித்துவிட்டு யூரியாவுடன் கால்சியம், மணல், பாக்டீரியாவை
சேர்த்து சிமென்ட் கலவை தயாரிக்கின்றனர். இந்த கலவையை தேவையான அச்சில்
வைத்து 2 முதல் 6 நாட்களுக்கு உலர விட ஸ்டிராங்கான 'பயோ செங்கல்'
தயாராகிறது. ஒரு செங்கலுக்கு 20 லிட்டர் சிறுநீர் தேவையாம்.
தகவல் சுரங்கம்

'செல்பி' ஆபத்து

அடிக்கடி 'செல்பி' எடுப்பது, சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்களுக்கு
மனதளவில் பாதிப்பு ஏற்படும் என கண்டறிந்துள்ளனர். பேஸ்புக்,
இன்ஸ்டாகிராம், டுவிட்டர்களை சராசரியாக நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம்
செலவிடும் 18 முதல் 34 வயது வரையிலான 74 பேரை தொடர்ந்து நான்கு மாதங்கள்
கண்காணித்தனர். முடிவில் இவர்களது நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதை
உறுதி செய்தனர். இணையதளம் அதிகம் பயன்படுத்தினால் நண்பர்களிடம் இருந்து
விலகியிருப்பது போன்ற எதிர்மறை தாக்கங்கள் ஏற்படுமாம்.

mohan alagar

unread,
Nov 23, 2018, 8:27:02 PM11/23/18
to valluvanpaarvai, inaiathendral
முப்பரிமாண 'ஸ்கேனர்'மருத்துவ ஆய்வுக்கான உலகின் முதல் '3டி ஸ்கேனர்'
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 'எக்ஸ்புளோரர்' என அழைக்கப்படுகிறது. இது
மனிதனின் முழு உடம்பையும், 20 - 30 வினாடிகளுக்குள், 3டி புகைப்படமாக
படம் பிடிக்கும் திறன் பெற்றது. இதனால் நோயாளிகளின் பிரச்னைகளை விரைவாக
கண்டறிந்து, சிகிச்சையளிக்க முடியும். தற்போது மருத்துவ உலகில்
பயன்பாட்டில் இருக்கும் 'சிடி ஸ்கேன்' முறையை விட, 40 மடங்கு வேகமானது.
மற்ற ஸ்கேனர்களை விட, துல்லியமாக படம் பிடிக்கும். இதனை கலிபோர்னியா
பல்கலையின் நியூக்ளியர் மருத்துவத்துறை குழு உருவாக்கியுள்ளது.

அறிவியல் ஆயிரம்
மாணவர்களின் கண்டுபிடிப்பு
தானியங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைப்பதற்கு குளிர்பதன கிடங்கு
பயன்படுத்தப் படுகிறது. சென்னை ஐ.ஐ.டி.,யை சேர்ந்த மாணவர்கள், சூரிய
ஒளியில் இயங்கும் குளிர்பதன சேமிப்பு பெட்டகத்தை உருவாக்கியுள்ளனர்.
இதில் 500 கிலோ எடையுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்கலாம்.
இது விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்படும். அவர்கள் தயாரித்த
விளைபொருட்கள் வீணாகாமல் சேமிக்கலாம். மாணவர்கள் உருவாக்கிய இதன் முதல்
சேமிப்பு கிடங்கு காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் பயன்பாட்டுக்கு
திறக்கப்பட்டுள்ளது.

mohan alagar

unread,
Nov 24, 2018, 8:01:41 PM11/24/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

எவை டெல்டா பகுதி
சமீபத்திய கஜா புயலால் காவிரி டெல்டா பகுதி கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா என்பது ஆற்று தண்ணீரால் அடித்து வரப்படும்
வண்டல் மண்ணை ஆறு, கடலோடு கலக்கும் இடத்தில் அதன் வேகம் குறைந்து
படிப்படியாக படிய வைப்பதால் உருவாகின்றது. அது கடலை அடையும்பொழுது, சம
வெளியில் மெதுவாகச் சென்று, தான் கொண்டு வந்த பொருள்களை வழியில்
விடுகிறது. இப்பகுதியே டெல்டா என அழைக்கப்படுகிறது. தஞ்சை, திருவாரூர்,
நாகை, திருச்சி, அரியலுார், கடலுார் மற்றும் புதுக்கோட்டை ஆகியவை காவிரி
டெல்டா மாவட்டங்கள்.
தகவல் சுரங்கம்

உலகின் பெரிய மருத்துவமனை
இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன.
பீஹாரில் உள்ள பாட்னா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை, உலகின் பெரிய
மருத்துவமனையாக மாற்ற அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ.
5,540 கோடி செலவில், 5,462 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக
மேம்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக
மருத்துவமனை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த
மருத்துவக்கல்லுாரியின் எம்.பி.பி.எஸ்., இடங்களும் 150ல் இருந்து 250 ஆக
அதிகரிக்கப்படும்.

mohan alagar

unread,
Nov 25, 2018, 7:25:35 PM11/25/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

குழந்தையின் பேச்சு ரகசியம்

சில குழந்தைகள் அதிகம் பேசுவார்கள். சிலர் அதிகளவில் பேசமாட்டார்கள்.
குழந்தைகள், மனதில் நினைப்பதை பேசவேண்டுமெனில், அவர்களை பூங்காவுக்கு
கூட்டிச்செல்லுங்கள். இயற்கையை பார்க்கும் குழந்தைகளின் பேச்சு இயல்பாக
வரும் என பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக மூன்று முதல்
நான்கு வயது குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோருடன், ஒரு அறைக்குள் நடந்த
உரையாடல் மற்றும் பூங்காவில் நடந்த உரையாடல் ஆய்வு செய்யப்பட்டது. இதில்
பூங்காவில் குழந்தைகளின் உரையாடல் சிறப்பாக இருந்தது கண்டறியப்பட்டது.

தகவல் சுரங்கம்

அமலாக்கத்துறை
இந்தியாவில் பொருளாதார குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்
வகையில் அமலாக்கத்துறை உருவாக்கப்பட்டது. நாட்டில், சட்ட விரோத
பணப்பரிமாற்றம், அன்னிய செலாவணி உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கிறது. இது
மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் செயல் படுகிறது.
ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கொண்டு
செயல்படுகிறது. இதன் தலைமையகம் டில்லி. இதன் தலைவராக இயக்குனர் உள்ளார்.
மும்பை, சென்னை, சண்டிகர், டில்லி மற்றும் கோல்கட்டா ஆகிய ஐந்து
மண்டலங்கள் உள்ளன.

mohan alagar

unread,
Nov 27, 2018, 8:13:43 PM11/27/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

துாரம்... குறைவு
சூரிய குடும்பத்தில் அனைத்து கோள்களும், சூரியனை நீள்வட்ட பாதையில்
சுற்றுகின்றன. இவ்வாறு சுற்றும் போது, சூரியனுக்கு அருகிலும், தொலைவிலும்
கடக்கும் நிகழ்வு நடக்கிறது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 365
நாட்கள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும்போது ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் பூமி,
சூரியனுக்கு அப்பாலும் (அப்ஹீலியன்), ஜனவரி மாதத்தில் சூரியனுக்கு
அருகிலும் (ப்ரீஹீலியன்) கடந்து செல்கிறது. தோராயமாக பூமி, சூரியனுக்கு
அருகில் (ஜன.,) 14.7 கோடி கி.மீ., துாரத்திலும், அப்பால் (ஜூலை) 15.2
கோடி கி.மீ., துாரத்திலும் இருக்கும்.

தகவல் சுரங்கம்

பெரிய துறைமுகம்
கப்பல் சரக்கு போக்குவரத்தை கையாளும் இடம் துறைமுகம். இந்தியாவில் 13
முக்கிய துறைமுகங்கள், 180 சிறிய துறைமுகங்கள் உள்ளன. இதில் சரக்குகளை
கையாளும் எண்ணிக்கை அடிப்படையில் பெரிய துறைமுகமாக மும்பை உள்ளது. இது
ஒரு இயற்கை துறைமுகம். 32 - 40 அடி ஆழம் உள்ளது. இந்தியாவுக்கு வரும்
வெளிநாட்டு சரக்குகளில் ஐந்தில் ஒரு பகுதியை இத்துறைமுகம் கையாள்கிறது.
இங்கு பெட்ரோலிய பொருட்கள், கெமிக்கல் திரவங்கள், கனிமங்கள், மாங்கனிசு,
பருத்தி துணிகள் மற்றும் இயந்திரங்கள் அதிகளவில் இறக்குமதி
செய்யப்படுகின்றன.

mohan alagar

unread,
Nov 28, 2018, 8:25:40 PM11/28/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

ஐஸ் கண்டம்
பூமியில் உள்ள ஏழு கண்டங்களில் அண்டார்டிகாவும் ஒன்று. இது தென்முனையில்
உள்ளது. இதன் பரப்பளவு 1.4 கோடி சதுர கி.மீ. ஐந்தாவது பெரிய கண்டம்.
ஆஸ்திரேலியாவை விட, இரண்டு மடங்கு பெரியது. இது 98 சதவீதம்
பனிப்படலங்களால் சூழப்பட்டது. பனியின் தடிமன் 1.9 கி.மீ., அளவு கொண்டது.
இதனால் இங்கு மனிதர்கள் வாழ முடியாது. சில நாடுகளின் ஆய்வு மையங்கள்
மட்டுமே உள்ளன. இங்கு 16 ஆயிரம் அடி ஆழ்துளையிட்டால் தான் மண்ணைப்
பார்க்க முடியும். இக்கண்டத்தில் பெங்குவின், நீலத்திமிங்கலம், சீல்
உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.

தகவல் சுரங்கம்

நீண்டகால தேர்தல் கமிஷனர்
இந்திய தேர்தல் ஆணையம் 1950ல் தொடங்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி பெற்ற
அமைப்பு. இதன் தலைவராக தலைமை தேர்தல் கமிஷனர் இருக்கிறார். தற்போது
இப்பதவியில் உள்ள ஓம் பிரகாஷ் ராவத், 21வது கமிஷனர். அதிக காலம் பதவி
வகித்த தேர்தல் கமிஷனர் என்ற பெருமைக்குரியவர் கல்யாண் சுந்தரம். இவர்
2வது ஆணையராக 1958 டிச., 20ல் பொறுப்பேற்று, 1967 செப்., 30 வரை (3,206
நாட்கள்) பதவியில் இருந்தார். இப்பட்டியலில் 2வது இடத்தில், சுகுமார்
சென் இருக்கிறார். 1950 மார்ச் 21 - 1958 டிச.,19 வரை (3,195 நாட்கள்)
பதவியில் இருந்தார்.

mohan alagar

unread,
Nov 29, 2018, 8:21:50 PM11/29/18
to valluvanpaarvai, inaiathendral
வேகமான பறவை
பூமியில் ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் வாழ்கின்றன. பறவைகளில் வேகமாக
பறப்பது 'பெரிகிரின் பல்கோன்' என்ற பறவை. இது இரையை தேடி கீழ்நோக்கி
செல்லும் போது அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் பறக்கும். வட
அமெரிக்காவில் அதிகளவில் காணப்படுகிறது. நீண்ட மூக்கை கொண்டது. காக்கை
போல இருக்கும். இது நீலம் -சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆண் பறவையை விட,
பெண் பறவை பெரியதாக இருக்கும்.
நேஷனல் ஜியோகிராபிக் 'டிவி', இதன் வேகம் மணிக்கு 389 கி.மீ., என அளவிட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
பூஜ்ய நேரம்

பார்லிமென்ட்டின் இரு சபைகளும் 11:௦௦ மணிக்கு துவங்கியதும் முதல் ஒருமணி
நேரம், கேள்விநேரம் நடக்கும். இதில் எம்.பி.,க்களின் கேள்விகளுக்கு,
தொடர்புடைய அமைச்சர்கள் பதிலளிப்பர். இதில் கேட்க விரும்பும்
கேள்விகளுக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்.
கேள்வி நேரம் முடிந்ததும் பகல் 12:00 மணிக்கு பூஜ்ய நேரம் துவங்குகிறது.
12:௦௦ மணி என்பதால் இது, பூஜ்ய நேரம் என அழைக்கப்படுகிறது. இதில் எவ்வித
முன் அனுமதி இன்றி, நாட்டில் நிலவும் மிக முக்கிய பிரச்னைகளை,
எம்.பி.,க்கள் எழுப்பலாம்.

mohan alagar

unread,
Nov 30, 2018, 8:54:21 PM11/30/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

அணு மின்சாரம்
அணு என்பது மிகச்சிறியது. கண்களால் பார்க்க முடியாது. அணுவில் இருக்கிற
அணுக்கரு அதைவிட மிகச்சிறியது. அணுக்கருவில் தான் புரோட்டான், நியூட்ரான்
துகள்கள் உள்ளன. அணுக்கருவில் இருந்து தொலைவில் எலக்ட்ரான் உள்ளது.
இந்தியாவின் மின்சார உற்பத்தியில் நிலக்கரி, வாயு, நீர்மின், காற்றாலை
மின்சார உற்பத்திக்கு அடுத்து, ஐந்தாவதாக அணு மின்சாரம் உள்ளது. 2018
மார்ச் கணக்கின்படி, ஏழு அணு மின்நிலையங்களில் உள்ள 22 அணு உலைகள் மூலம்
6,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ௬ உலைகள்
அமைக்கப்பட்டு வருகின்றன.

தகவல் சுரங்கம்

உருவாகிறது உயரமான கட்டடம்
உலகில் பல வகையான உயரமான கட்டடங்கள் உள்ளன. தற்போது உலகின் உயரமான
கட்டடம் என்ற பெருமையை துபாயின் 'புர்ஜ் கலிபா' பெற்றுள்ளது. இதன் உயரம்
2,722 அடி. இந்நிலையில் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில், 'கிங்டம்
ஜித்தா டவர்' என்ற உயரமான கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மொத்த
உயரம் ஒரு கி.மீ., (3,281 அடி). 2013ல் இதன் கட்டுமானப்பணி தொடங்கியது.
2020ல் நிறைவடையும். மொத்தம் 200 மாடிகள் அமைக்கப்பட உள்ளன. ஓட்டல்கள்,
அபார்ட்மென்ட், அலுவலகங்கள் இதில் இடம் பெறுகின்றன.

mohan alagar

unread,
Dec 1, 2018, 9:00:28 PM12/1/18
to valluvanpaarvai, inaiathendral
விடி வெள்ளிஅதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் கிழக்கு வானில்
பார்த்தால் அவ்வப்போது, பிரகாசமான வான்பொருள் தெரியும். மாலை நேரத்தில்
மேற்கு வானில் தெரியும். இது விடிவெள்ளி எனப்படுகிறது. இதனை நட்சத்திரம்
என கருதுவர். ஆனால் இது வெள்ளி கிரகம். இது சூரியனை ஒருமுறை சுற்றி வர
225 நாட்கள் ஆகிறது. சூரியன் - வெள்ளி இடையேயான துாரம் 10.8 கோடி கி.மீ.
சூரிய குடும்பத்தில் மிகவெப்பமான கோள். மற்ற கோள்கள், சூரியனை மேற்கில்
இருந்து கிழக்காக சுற்ற, வெள்ளி மட்டும் கிழக்கில் இருந்து மேற்கு
திசையில் சுற்றுகிறது. வெள்ளியில் சூரியன் மேற்கில் உதிக்கிறது. தகவல்
சுரங்கம்

விலங்குகள் நல வாரியம்
இந்திய விலங்குகள் நல வாரியம் 1962ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மத்திய
அரசுக்கு, விலங்குகள் நலச் சட்டங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க
சட்டப்படியாக அமைக்கப்பட்ட பரிந்துரை வாரியம். இது மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்
1960 - பிரிவு 4ன் கீழ் தொடங்கப்பட்டது. இதில் 28 உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களது பதவிகாலம் மூன்று ஆண்டுகள். இதன் தலைமையகம் சென்னையில்
இருந்தது. 2018 மார்ச்சில் ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்திற்கு
மாற்றப்பட்டது.

mohan alagar

unread,
Dec 2, 2018, 8:28:13 PM12/2/18
to valluvanpaarvai, inaiathendral
Post Comments
அமேசான் நதி, தென்அமெரிக்க நாடான பிரேசிலில் ஆன்டிஸ் மலைத் தொடரில்
உற்பத்தியாகி அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. உலகில் கடலில்
கலக்கும் மொத்த நீரின் அளவில் அமேசானின் பங்கு 20 சதவீதம். இதன் நீளம்
6,437 கி.மீ. மழை அதிகம் பெய்யும் காலங்களில் அமேசான் நதியில் விநாடிக்கு
80 லட்சம் கனஅடி நீர் பாய்கிறது. அப்போது ஆற்றின் சில இடங்களில் அகலம் 50
கி.மீ., வரை இருக்கும். நீரின் ஆழம் 300 அடி வரை இருக்கிறது. அமேசான்
கடலில் கலக்கும் இடத்தில் சுமார் 300 கி.மீ., சுற்றளவுக்கு கடல் நீரை
உள்தள்ளி நன்னீராக இருக்கிறது.

தகவல் சுரங்கம்: ஏன் துாக்கு தண்டனை
துாக்கு தண்டனை தேவை குறித்து உலகில் இருவித கருத்துக்கள் உள்ளன.
இந்தியாவில் அரிதினும் அரிதான குற்றங்களுக்கு துாக்கு தண்டனை
விதிக்கப்படுகிறது. இதுவும் உடனே நிறைவேற்றப்படுவதில்லை. கீழ்
நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், உயர் நீதிமன்றத்துக்கு
அப்பீல் செய்யலாம். அதிலும் உறுதி செய்யப்பட்டால், உச்சநீதிமன்றம்
செல்கின்றனர். அதிலும் உறுதியானால், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு
மனுவும், அது நிராகரிக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு கருணை மனுவும்
விண்ணப்பிக்கின்றனர். இது நிராகரிக்கப்பட்டால், இறுதியாக
துாக்கிலிடப்படுகிறார்.
இதையும் தவறாமல் படிங்க ...
T

mohan alagar

unread,
Dec 3, 2018, 8:16:44 PM12/3/18
to valluvanpaarvai, inaiathendral
'சூப்பர் மூன்'
பூமி-நிலவு இடையேயான சராசரி தொலைவை விட, குறைவாக இருக்கும் போது 'சூப்பர்
மூன்' தோன்றுகிறது. அப்போது 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம்
பிரகாசமாகவும் தெரியும். 'சூப்பர் மூன்' என்பது நிலாவின் ஒளிப்
பெருக்கத்தைக் குறிக்கும் சொல். இதை ரிச்சர்டு நோலே 1979ல்
உருவாக்கினார். பூமி -- நிலா இடையே சராசரி துாரம் 3,84,400 கி.மீ.
'சூப்பர் மூன்' அன்று, இதைவிட குறைவான துாரத்தில் நிலா இருக்கும்.
பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில்
வரும்போது 'சூப்பர்மூன்' நிகழ்வு ஏற்படுகிறது.

தகவல் சுரங்கம்: நீண்ட துார ரயில்
பல நாடுகளிலும் ரயில் சேவை இயங்குகிறது. இதில் நீண்ட துார பயணிகள் ரயில்,
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ-வடகொரிய தலைநகர் பியாங்யங் வரை செல்கிறது. 10,267
கி.மீ., துாரம் பயணிக்கிறது. இடையில் 157 ஸ்டேஷன்கள் உள்ளன. பயண நேரம்
260 மணி நேரம் (8.5 நாட்கள்). 15 நாட்களுக்கு ஒருமுறை இயக்கப்படுகிறது.
அடுத்த இடத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ - விலடிவோஸ்டாக் வரை இயங்கும் ரயில்
உள்ளது. துாரம் 9,289 கி.மீ., இந்தியாவின் நீண்டதுார ரயில் விவேக்
எக்ஸ்பிரஸ். இது திப்ரூஹார்க் - கன்னியாகுமரி வரை 4,262 கி.மீ.,

mohan alagar

unread,
Dec 4, 2018, 8:10:56 PM12/4/18
to valluvanpaarvai, inaiathendral
உலகில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவை ஏதாவது ஒரு நாட்டுக்கு சொந்தமானதாக
இருக்கும். ஆனால் உலகில் ஒரு தீவு, ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாடு
மாறுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ்--- ஸ்பெயின் இடையே இயற்கையான
எல்லையாக பீடாசோவ் ஆறு உள்ளது. இது ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய
நாடுகளை பிரித்து பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றின் நடுவில் பீசன்ட் தீவு
உள்ளது. இது பிப்.1 - ஜூலை 31 வரை ஆறு மாதம் பிரான்சிடமும், ஆக. 1 - ஜன.,
31 வரை ஆறு மாதம் ஸ்பெயினிடமும் மாற்றப்படுகிறது.இதன் அளவு 660 அடி
நீளம், 130 அடி அகலம் கொண்டது.

தகவல் சுரங்கம்: கோனார்க் சூரிய கோயில்
ஒடிசா தலைநகர் பூரியில் இருந்து 35 கி.மீ., வடகிழக்கில்
வங்கக்கடலோரத்தில் கோனார்க் என்ற பகுதியில் கோனார்க் சூரிய கோயில்
அமைந்துள்ளது. இது சூரிய பகவானுக்காக, 13ம் நுாற்றாண்டில் முதலாம்
நரசிங்க தேவா என்ற மன்னரால் கட்டப்பட்டது. 1,200 சிற்பிகளின், 16 ஆண்டு
கால உழைப்பில் கட்டப்பட்டது. இது சிவப்பு மண்பாறை, கறுப்பு கிரானைட்
கற்களால் வடிவமைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய
பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). இக்கோயில் யுனெஸ்கோவின் உலக
பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

mohan alagar

unread,
Dec 5, 2018, 8:00:09 PM12/5/18
to valluvanpaarvai, inaiathendral
வெப்பநிலை உயர்வு காரணமாக, மக்களுக்கு இருதயம், கிட்னி உள்ளிட்ட பல்வேறு
பிரச்னைகள் ஏற்படும் என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பா, ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு மத்திய தரைக்கடல்
நாடுகள் ஆகிவற்றில் நகர பகுதி மக்கள் பாதிப்பை சந்திப்பர். உலக சுகாதார
நிறுவன தகவலின்படி, உடல்நலம், சுத்தமான காற்று, குடிநீர், உணவு மற்றும்
தங்குமிடம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். அதிகரிக்கும் வெப்பநிலையால்
2030 - 2050ம் ஆண்டுகளுக்கு இடையே 2.50 லட்சம் பேர் உயிரிழக்கும்
வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறது.

தகவல் சுரங்கம்ஜனநாயகத்தின் பாதுகாவலர்
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்கள் ஓட்டளிப்பதன் மூலம் ஆட்சியாளர்கள்
தேர்வு செய்யப்படுகின்றனர். இப்பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபடுகிறது. இது
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 324ன் படி, 1950 ஜன., 25ல் தொடங்கப்பட்டது.
இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. தலைமையகம் டில்லி. இதன் நிர்வாக
அமைப்பில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள்
உள்ளனர். தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் என்பது ஆறு ஆண்டுகள் அல்லது
65 வயது. இதில் முதலில் எது வருகிறதோ அதை பொறுத்தது.

Palaniappan kandasamy

unread,
Dec 6, 2018, 9:04:29 AM12/6/18
to brail...@googlegroups.com
ஜனநாயகம் என்பது நம்நாட்டில் இருப்பதாக தோன்றவில்லை; மனசாட்ஷியையும் துணிவையும் ப்ரையோகிப்பவர்களுக்குமட்டுமே ஜனநாயகம் அர்த்தமும் பொருத்தமும் கொண்டதாக இருக்கும். இங்கு கட்சி கட்டுப்பாடு தலைமைக்குத்தாள்பணிதல் போன்றவற்றால் மக்களாட்சி கேலிக்கூத்தாக்கப்பட்டு கேவலபடுத்தப்படுகிறது. வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் ப்ரெய்லானுஜன், தொதொ து வாழ்வூதியர் கோவை 4.
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


---
This email has been checked for viruses by Avast antivirus software.
https://www.avast.com/antivirus

mohan alagar

unread,
Dec 6, 2018, 8:13:12 PM12/6/18
to valluvanpaarvai, inaiathendral
மேலே விமானம்... கீழே பஸ
வாரணாசியில் இருந்து 26 கி.மீ., துாரத்தில் பபாத்பூர் என்ற இடத்தில் லால்
பகதுார் சாஸ்திரி விமான நிலையம் உள்ளது. இது வாரணாசி விமான நிலையம் என
அழைக்கப்பட்டது. நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதுார் சாஸ்திரியை
கவுரவப்படுத்தும் விதமாக அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்த விமான
நிலையத்தில், விமான ஓடுபாதையின் கீழ், வாகனங்கள் செல்வதற்கான நான்குவழி
சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிவடையும் போது, ஓடுதளத்தின் கீழ்
சாலை இடம்பெற்றுள்ள ஒரே விமான நிலையம் என்ற சிறப்பை பெறும்.

தகவல் சுரங்கம்: குழந்தைகள் மீது அக்கறை
ஐ.நா.,வின் யுனிசெப் அமைப்பு குழந்தைகள் அவசர நிதி அமைப்பு. இது உலக
குழந்தைகளின் மேம்பாட்டிற்காக பணியாற்றி வருகிறது. இரண்டாம் உலகப்போரால்
பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆபத்தான நிலையில் இருந்த குழந்தைகளுக்கு உணவு
மற்றும் சுகாதார வசதி வழங்குவதற்காக 1946 டிச.,11ல் துவக்கப்பட்டது. இதன்
தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க். இதன் வருமானத்தில் 90 சதவீதம்
திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. யுனிசெப் பணியை பாராட்டி, 1965ல்
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 190 நாடுகளில் பணியாற்றுகிறது.

mohan alagar

unread,
Dec 7, 2018, 9:24:09 PM12/7/18
to valluvanpaarvai, inaiathendral
கண் இமைத்தல்
நாம் மூச்சு விடுவது போல, கண் இமைப்பதும் ஒரு அனிச்சை செயல் தான். கண்ணை
உலராமல் வைத்து கொள்ளவும், சுத்தம் செய்யவும் நடைபெறும் ஓர் உடலியல்
நிகழ்வுதான் கண் இமைப்பது. சராசரியாக நிமிடத்துக்கு 15-20 முறை நாம்
கண்ணை இமைக்கிறோம். காரின் முன்புறத்தில் இருக்கும் வைபர், கண்ணாடியைத்
தேய்த்து சுத்தம் செய்யும். அதுபோல, கண் இமைத்தல் என்பது, கண்ணின்
மேற்புறத்தை சிறிதளவு கண்ணீரால் தேய்த்து உலர்ந்துவிடாமல் ஈரப்பதத்துடன்
வைக்கிறது. கண்ணில் நீர் படுவது இல்லாத போது மூளை, கண்ணீர் சுரப்பிகளை,
துாண்டிவிட்டு கண்ணீரைச் சுரக்கும்.

தகவல் சுரங்கம்

தமிழ் இன்பம்
சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
தமிழ் உள்ளிட்ட 24 மொழிகளில் வழங்கப்படுகிறது. 1954ல் உருவாக்கப் பட்டது.
1955 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம்
வழங்கப்படுகிறது. தமிழ் மொழி பிரிவில் முதன்முதலாக 1955ல் 'தமிழ் இன்பம்'
என்ற நுாலுக்காக ரா.பி.சேதுப்பிள்ளை இவ்விருதை பெற்றார். இதுவரை தமிழ்
மொழியில் 59 பேர் விருது பெற்றுள்ளனர். 1957, 1959, 1960, 1964
மற்றும்1976ம் ஆண்டுகளில் தமிழ் மொழியில் யாருக்கும் சாகித்ய அகாடமி
விருது வழங்கப்பட வில்லை.

mohan alagar

unread,
Dec 8, 2018, 8:27:18 PM12/8/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

மழைப்பொழிவுக்கு காரணம்
மகாராஷ்டிரா, - குஜராத் மாநில எல்லையில், தபதி ஆற்றுக்கு தெற்கே தொடங்கி
மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவில் பரவி
கன்னியாகுமரியில் முடிகிறது. மொத்த பரப்பளவு 1,60,000 சதுர கி.மீ.,.
சராசரி உயரம் 3,900 அடி. நாட்டின் 40 சதவீத நீர் உற்பத்தி இதன் மூலமே
கிடைக்கிறது. இது அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்காற்றை மறைத்து, அதன்
மேற்கு பகுதியில் உள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு நல்ல
மழைப் பொழிவை தருகிறது. இதனால் கேரளா, கோவா ஆகியவை இயற்கை எழில் மிகுந்த
இடங்களாக காட்சியளிக்கின்றன.
தகவல் சுரங்கம்

குறுகிய கால போர்
உலகில் பல நாடுகளுக்கிடையே அல்லது பல நாடுகளின் அணிகளுக்கு இடையே போர்
நடந்துள்ளது. உலக வரலாற்றில் குறுகிய கால போர் என அழைக்கப்படுவது, 'ஏஞ்லோ
- ஜானிபார்' போர். இது 1896 ஆக.27ம் தேதி, பிரிட்டன் - ஜான்ஜிபர் இடையே
நடந்தது. ஜான்ஜிபர் என்பது தற்போதைய கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியா.
காலை 9:02 மணிக்கு தொடங்கிய போர், 9:40 மணிக்கு வெறும் 38 நிமிடங்களில்
முடிவடைந்தது. இதில் பிரிட்டன் படை வெற்றி பெற்றது. இந்த போரில்
ஜான்ஜிபர் படையை சேர்ந்த 500 பேர் பலியாகினர்.

mohan alagar

unread,
Dec 9, 2018, 8:12:22 PM12/9/18
to valluvanpaarvai, inaiathendral
குளிர்கால உணவுகள்
எள் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்து, வளர் சிதை மாற்றத்தை மேம்படுத்த
உதவும். குளிர்காலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவாக இருக்கும். அதனால்,
சரியான உணவு முறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும்,
வேர்க்கடலைகளை உணவில் சேர்க்க வேண்டும். குளிர் காலத்தில் வெப்பம் தரும்
உணவு இஞ்சி சாப்பிட வேண்டும். சுக்கு, பூண்டு போன்றவைகளின் அளவையும்
அதிகப்படுத்தலாம். குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது.
ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தகவல் சுரங்கம்: பெரிய 'டிராம்'
ரயில் போக்குவரத்துக்கு முன்பாக, 'டிராம்' வண்டிகளின் பயன்பாடு இருந்தது.
ரயில் தண்டவாளத்தை போன்ற இருப்பு பாதைகளின் மீது இந்த டிராம்
இயக்கப்பட்டது. இந்தியாவில் 19ம் நுாற்றாண்டில் பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில் டிராம் அறிமுகமானது. கோல்கட்டா, மும்பை, சென்னை, டில்லி
போன்ற நகரங்களில் இயக்கப்பட்டன. பின் படிப்படியாக நிறுத்தப்பட்டது. ஆனால்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் டிராம் இன்றும் செயல்படுகிறது.
இதுதான் உலகின் பெரிய டிராம் போக்குவரத்து. 250 கி.மீ., துாரத்தில்,
24 வழிகளில், 493 டிராம்கள் இயக்கப்படுகின்றன.

mohan alagar

unread,
Dec 10, 2018, 8:45:13 PM12/10/18
to valluvanpaarvai, inaiathendral
'ஜிசாட் - 11' என்ற இந்தியாவின் எடைமிகுந்த செயற்கைக்கோள், பிரஞ்சு கயானா
ஏவுதளத்தில் இருந்து சமீபத்தில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் எடை 5,854
கிலோ. பொதுவாக இஸ்ரோ செயற்கைக்கோள்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தான்
விண்ணில் செலுத்தப்படும். இஸ்ரோ அனுப்பும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும்
இங்கிருந்துதான் அனுப்பப்படுகிறது. ஆனால் இங்கு 4,000 கிலோ எடை வரையிலான
செயற்கைக்கோளை மட்டுமே அனுப்ப முடியும். இதனால் எடை மிகுந்தவை, பிரஞ்சு
கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

தகவல் சுரங்கம் : ஞானபீட விருது
இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது ஞானபீட விருது.
இது 1965 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி விருதைப்
போல அனைத்து மொழி எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படுவது இல்லை. ஏதேனும் ஒரு
சிறந்த எழுத்தாளருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முதன்முதலாக சங்கர
குரூப் என்ற மலையாள எழுத்தாளர் ஓடக்குழல் நாவலுக்காக இவ்விருதைப்
பெற்றார். தமிழ் மொழி சார்பில் முதன்முதலாக 1975ல் அகிலனின்
சித்திரப்பாவைக்கு விருது கிடைத்தது. பின் 2002ல் ஜெயக்காந்தன் இவ்விருதை

mohan alagar

unread,
Dec 11, 2018, 8:14:43 PM12/11/18
to valluvanpaarvai, inaiathendral
ஆபத்தான ஆந்த்ராக்ஸ்
ஆந்த்ராக்ஸ் என்பது 'பாசில்லஸ் ஆந்ராக்சிஸ்' என்ற பாக்டீரியா மூலம்
பரவுகிறது. இது பொதுவாக கால்நடைகளை அதிகம் தாக்குகிறது. இவை காற்றில்
படும்போது ஸ்போர்களாக மாறிவிடுகின்றன. ஸ்போர்கள் நீண்ட நாட்கள் மண்ணில்
உயிரோடிருக்கும். இதனால் இந்நோய் தாக்கிய கால்நடைகளுக்கு, ஸ்போர்கள்
இருக்கும் மண் மூலம் நோய்க்கிருமி தொடர்ந்து பரவுகிறது. மண்ணில்
கலந்திருக்கும் பாக்டீரியாக்கள், விலங்குகளின் உடலுக்குள் சென்று வேகமாக
பரவும். சில மணி நேரத்தில் உயிரை பறித்து விடும்.

தகவல் சுரங்கம்: காப்பீட்டு காவலன்
இந்தியாவில் காப்பீட்டு துறையை ஒழுங்கு படுத்துதல் மற்றும்
கட்டுப்படுத்தும் விதமாக, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனும் காப்பீட்டு ஒழுங்குமுறை
மற்றும் மேம்பாட்டு ஆணையம் செயல்படுகிறது. 1999ல் துவக்கப்பட்டது.
தலைமையகம் ஐதராபாத். இதில் தலைவர் உள்பட பத்து பேர் உறுப்பினர்களாக
உள்ளனர். இதில் ஐந்து பேர் முழு நேர உறுப்பினர்கள், நான்கு பேர் பகுதிநேர
உறுப்பினர்கள். இதன் தற்போதைய தலைவராக சுபாஷ் சந்திர குந்தியா
இருக்கிறார். காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல்,
பாலிசிதாரர்களின் உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல பணிகளில்

mohan alagar

unread,
Dec 12, 2018, 8:20:55 PM12/12/18
to valluvanpaarvai, inaiathendral
உலகளவில் பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்ற சுற்றுச்சூழல்
பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் பசுமை இல்ல வாயுக்கள். இதில் அதிகமாக
வெளியேற்றப்படுவது கார்பன்-டை-ஆக்சைடு. இதனை குறைக்கும் முயற்சியில்
ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகளவில் 2018ம் ஆண்டு 3,700 கோடி டன்
அளவிலான கார்பன் வாயு வெளியேற்றப்பட்டுள்ளது. கார்பன் வெளியேற்றத்தில்
சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது
இடத்தில் இந்தியாவும் உள்ளது. அடுத்த இடங்களில் ரஷ்யா, ஜப்பான் உள்ளன.

தகவல் சுரங்கம்: முதல் ஐ.ஐ.டி.,
இந்தியாவில் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில், மாணவர்களின்
விருப்பமாக திகழ்வது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,).
நாட்டில் முதன்முதலாக 1951ம் ஆண்டு காரக்பூரில் ஐ.ஐ.டி., தொடங்கப்பட்டது.
பின் 1958ல் மும்பை, 1959ல் சென்னை மற்றும் கான்பூர், 1963ல் டில்லி ஆகிய
இடங்களில் ஐ.ஐ.டி., தொடங்கப் பட்டன. தற்போது நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி.,
கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் சேர்வதற்கு ஜே.இ.இ.,
அட்வான்ஸ்டு மற்றும் ஜே.இ.இ., மெயின் என 2 கட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி
பெற வேண்டும்.

mohan alagar

unread,
Dec 13, 2018, 8:35:26 PM12/13/18
to valluvanpaarvai, inaiathendral
விமானங்கள் விபத்தில் சிக்கும் போது, அதற்குரிய காரணத்தை தெரிந்து கொள்ள
கருப்புப் பெட்டி உதவுகிறது. இந்த மின்னணு சாதனத்தை, 1963ல்
ஆஸ்திரேலியாவின் டேவிட் வாரன் உருவாக்கினார். இது ஆரஞ்சு நிறத்தில்
இருக்கும். இதில் 'யாரும் திறக்கக் கூடாது' என்ற எச்சரிக்கையும்
பதியப்பட்டிருக்கும். பறக்கும் விமானத்தின் நிகழ்வுகளை சில வினாடிக்கு
ஒருமுறை, பதிவு செய்யும். இறக்கை, வால்பகுதி, எரிபொருள் அளவு, பறக்கும்
உயரம் போன்ற பல தகவல்கள் பதிவாகும். இது 'பிளைட் டேட்டா ரெக்கார்டர்'
எனவும் அழைக்கப்படுகிறது.

தகவல் சுரங்கம்: சத்தீஸ்கர் வரலாறு
ம.பி.,யில் இருந்து பிரிந்து, 2000 நவ.1ல் சத்தீஸ்கர் புதிய மாநிலமாக
உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் ஆட்சியில்
இம்மாநிலம் உருவாக்கப்பட்டது. தலைநகரம் ராய்ப்பூர். இங்கு 27 மாவட்டங்கள்
உள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் 17வது இடத்தில் உள்ளது. மாநிலம்
பிரிக்கப்பட்டபோது, ம.பி.,யில் காங்., ஆட்சி நடந்தது. அதனால் இங்கும்
காங்., ஆட்சி தொடர்ந்து. பின் 2003ல் நடந்த சத்தீஸ்கரின் முதல் சட்டசபை
தேர்தலில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில்
இருந்த பா.ஜ., 2018 டிசம்பரில் ஆட்சியை இழந்துள்ளது.

mohan alagar

unread,
Dec 14, 2018, 8:32:45 PM12/14/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்: குளிர்ச்சியான கோள்
பதிவு செய்த நாள் : டிச 15, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
சூரிய குடும்பத்தில் உள்ள எட்டாவது மற்றும் துாரத்தில் உள்ள கோள்
நெப்டியூன். சுற்றளவு அடிப்படையில் நான்காவது பெரியகோள். சூரியன் -
நெப்டியூன் இடையேயான துாரம் 450 கோடி கி.மீ. இது நீல நிறக்கோள். இது 1846
செப்., 23ல் ஜோஹான் காலே மற்றும் யுர்பெய்ன் லீ வெர்ரீயர் இணைந்து
கண்டுபிடித்தனர். சூரியனை ஒரு முறை சுற்றி வர 164 வருடங்கள்
எடுத்துக்கொள்கிறது. இது எப்பொழுதும் -346 டிகிரி வெப்ப நிலையிலேயே
உறைந்து இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான கோள் எனவும் அழைக்கப்படுகிறது.

தகவல் சுரங்கம்: காஸ்பியன் கடல்
ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே 'காஸ்பியன்' என்ற மிகப்பெரிய
நீர்நிலை உள்ளது. இதன் வடகிழக்கில் கஜகஸ்தான், வடமேற்கில் ரஷ்யா,
மேற்கில் அஜர்பைஜான், தெற்கில் ஈரான், தென்கிழக்கில் துர்க்மேனிஸ்தான்
ஆகிய நாடுகள் உள்ளன. இதன் நீளம் 1,030 கி.மீ. அகலம் 435 கி.மீ., இதுன்
நீர்பிடிப்பு பரப்பளவு 3.71 லட்சம் சதுர கி.மீ. அதிகபட்ச ஆழம் 3,360 அடி.
சில விஞ்ஞானிகள், இதை கடல் என்கின்றனர். சிலர் ஏரி என்கின்றனர். கடலாக
இருந்தால் இதுதான், உலகின் மிகச்சிறிய கடல். ஏரி என்றால், உலகின்
மிகப்பெரிய ஏரி என்ற பெருமைக்குரியது.

mohan alagar

unread,
Dec 16, 2018, 8:37:55 PM12/16/18
to valluvanpaarvai, inaiathendral
சூரியக் குளியல்
சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களின் கதிர் வீச்சில் இருந்து
கால்சிபெரால் எனும்
வைட்டமின் 'டி' நமக்கு கிடைக்கிறது. நாள்தோறும் சில மணி நேரம் சூரிய ஒளி,
நமது உடலில் படுமாறு நிற்பது நல்லது. ஆனால் இதற்காக கடும் வெயிலில்
வியர்வை சிந்த நீண்ட நேரம் இருப்பது கெடுதல். நீண்ட நேரம் சூரியக்
குளியல் எடுப்பவர்களில் சிலருக்கு தோலில் வெப்பப் புண்கள்
உண்டாக்கக்கூடும். இவர்கள் அமினே பென்சாயிக் அமிலம் என்னும் வேதிப்பொருள்
சேர்ந்த களிம்பைத் தடவிக் கொண்டு வெளியில் நிற்கலாம்.
தகவல் சுரங்கம்

நீளமான மலைத்தொடர்
தென் அமெரிக்காவில் வடக்கு தெற்காக பரந்திருக்கும் ஆன்டிஸ் மலைத்தொடர்
தான், உலகின் மிக நீளமான மலைத்தொடர். நீளம் 7,000 கி.மீ. அகலம் என்பது
200 முதல் 700 கி.மீ., வரை உள்ளது. சராசரி உயரம் 13 ஆயிரம் அடி. இது
வெனிசுலா, கொலம்பியா, ஈக்குடார், பெரு, பொலிவியா, சிலி மற்றும்
அர்ஜென்டினா ஆகிய ஏழு தென் அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது. திபெத்திய
பீடபூமிக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பீடபூமியான ஆல்டில்லானோ
பீடபூமி இந்த மலைத்தொடரில் தான் உள்ளது. உலகின் உயரமான எரிமலையும் இங்கு
தான் உள்ளது.

mohan alagar

unread,
Dec 18, 2018, 8:11:12 PM12/18/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : டிச 19, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
யானைகளின் வருகைஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களில் யானைகள் காணப்படுகின்றன.
இந்தியாவில் யானைகள் பரவலாக இருக்கிறது. இவை பொதுவாக காட்டுப்பகுதியில்
வாழ்கின்றன. சில நேரங்களில் வயல்வெளிகள் மற்றும் குடியிருப்பு
பகுதிகளுக்குள் வரும் வாய்ப்புள்ளது. இதனால் மனிதர்கள்
பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் யானைகள் நடந்து வரும்போது, ஏற்படும்
அதிர்வுகளை வைத்து, யானை வரும் முன்னே கண்டறியும் தொழில்நுட்பத்தை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது நிலநடுக்கத்தை கண்டறியும்
தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது.

தகவல் சுரங்கம்
பெண்கள் படைஇந்தியாவில் நக்சல் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில்
சி.ஆர்.பி.எப்., படை ஈடுபடுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்
தடுப்பு நடவடிக்கையில் சி.ஆர்.பி.எப்., படையில் முதன்முதலாக பெண்
கமாண்டோக்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். சி.ஆர்.பி.எப்., 1939 ஜூலை
27ல் தொடங்கப்பட்டது. இப்படையில் 3.13 லட்சம் வீரர்கள்
பணியாற்றுகின்றனர். இது பாராமிலிட்ரி படைப்பிரிவுகளில் ஒன்று.சட்டம்
ஒழுங்கு பாதுகாப்பு தவிர நக்சல் ஒழிப்பு, தேர்தல் பாதுகாப்பு போன்ற
பணிகளிலும் சி.ஆர்.பி.எப்., படையினர் செயல்படுகின்றனர்.

mohan alagar

unread,
Dec 20, 2018, 8:04:45 PM12/20/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : டிச 21, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
அறிவியல் ஆயிரம்

தாழ்வான இடம்

ஆசிய கண்டத்துக்குத் தெற்கே, ஜோர்டான் நாட்டுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும்
இடையே உள்ளது சாக்கடல். இது கடல் அல்ல. உப்பு நீர் ஏரி. இங்கு மீன்,
நண்டு உள்ளிட்ட உயிரனங்கள் வாழ இயலாது. இதனால் இது 'சாக்கடல்' என
அழைக்கப்படுகிறது. இதன் உப்புத்தன்மை 34.2 சதவீதம். இது மற்ற கடல்களைவிட
10 மடங்கு அதிகம். கூடுதலான உப்புத் தன்மையால் இந்த நீரின் அடர்த்தி மனித
எடையை விட அதிகமாக இருப்பதால், மிதக்க முடிகிறது. இது கடல் மட்டத்தில்
இருந்து, 1,412 அடி தாழ்வாக அமைந்துள்ளது. பூமியில் கடல்மட்டத்துக்கு
கீழே தாழ்வான பகுதி இதுதான்.
தகவல் சுரங்கம்

குறைந்த மக்கள் அடர்த்தி
வட அமெரிக்காவில் உள்ள கிரீன்லாந்து, உலகின் பெரிய தீவு நாடு.
அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் கடல்களின் நடுவே உள்ளது. இது
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி நாடுகளில் ஒன்று. கிரீன்லாந்து
என்றால் உலகின் பசுமையான தேசம் என நினைக்க வேண்டாம். இதன் பரப்பளவில்
மூன்று பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. இது அண்டார்டிக்கா வுக்கு அடுத்து
பனிக்கட்டிகள் அதிகமுள்ள பகுதி. கிரீன்லாந்தின் வெப்பநிலை மைனசில் தான்
இருக்கும். மக்கள் தொகை 56,500. இதுதான் உலகில் மக்கள் தொகை அடர்த்தி
குறைந்த நாடு என அழைக்கப்படுகிறது.

mohan alagar

unread,
Dec 22, 2018, 9:19:57 PM12/22/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : டிச 23, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
அறிவியல் ஆயிரம்

வெப்பமான கோள்

சூரிய குடும்பத்தில் புதன், ெவள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி,
யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் உள்ளன. இதில் சூரியனுக்கு
அருகில் உள்ள கோள் மற்றும் சிறிய கோள் புதன். இது 87.97 நாட்களில்
சூரியனை ஒருமுறை சுற்றி விடுகிறது. சூரியனை வேகமாக சுற்றும் கோள் புதனில்
சூரிய வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள வளிமண்டலம் இல்லாததால் மற்ற கோள்களை
விட வெப்பமாக இருக்கிறது. இதனால் வெப்பமான கோள் எனவும் அழைக்கப்படுகிறது.
மெரினர் 10 மற்றும் மெசஞ்சர் ஆகிய விண்கலங்கள் புதனை ஆய்வு செய்ய
நெருங்கின.
தகவல் சுரங்கம்

பெரிய கப்பல்
உலகளவில் சரக்கு போக்குவரத்தில் கப்பல் முக்கிய பங்கு வகிக்கிறது.
செலவும் குறைவாக இருக்கிறது. இந்நிலையில் அதிகளவு சரக்குகளை ஏற்றும்
திறன் அடிப்படையில் உலகின் பெரிய கப்பல் ஜப்பானில் உள்ளது. இக்கப்பல்
'சீவைஸ் ஜியன்ட்', 'நாக் நெவிஸ்' என அழைக்கப்படுகிறது. இக்கப்பலில் 6.57
லட்சம் டன் எடைமிக்க சரக்குகளை ஏற்றிச் செல்லலாம். இங்கிலீஷ் கால்வாய்,
பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போன்றவற்றில் இக்கப்பலால் செல்ல இயலாது.
இதுவரை உலகில் கட்டப்பட்ட கப்பலில் இதுதான் பெரியது. 2009ல் ஓய்வு
பெற்றது.

mohan alagar

unread,
Dec 23, 2018, 8:33:15 PM12/23/18
to valluvanpaarvai, inaiathendral

mohan alagar

unread,
Dec 23, 2018, 8:34:08 PM12/23/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : டிச 24, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
அறிவியல் ஆயிரம்
சிறிய பறவை
உலகில் நுாற்றுக்கணக்கான பறவை இனங்கள் உள்ளன. இதில் 'ஹம்மிங் பேர்டு'
என்ற பறவை, மிகவும் சிறியது. இதன் நீளம் 5 செ.மீ. இதன் எடை 2 கிராமுக்கு
குறைவாகவே இருக்கும். இவை 'டிரொசிலிடே' என்ற குடும்பத்தைச் சார்ந்தவை.
இவை பின்புறமாக பறக்கக்கூடிய ஒரே பறவை இனம். இப்பறவையின்
இறக்கைகளிலிருந்து எழும் ஒலியை ஆங்கிலத்தில் 'ஹம்' என கூறுவார்கள்.
இதனால் இவை 'ஹம்மிங் பேர்டு' என அழைக்கப்படுகிறது. இவை அதிகமாக வட
மற்றும் தென்அமெரிக்க கண்டங்களில் காணப்படுகின்றன. இதன் பறக்கும் வேகம்
மணிக்கு 54 கி.மீ.

தகவல் சுரங்கம்

நீளமான தொங்கு பாலம்
உலகின் நீளமான தொங்கு பாலம் ஜப்பானில் உள்ளது. 'அகஷி கைகியோ' என அழைக்கப்
படுகிறது. இதன் நீளம் 12,831 அடி. உயரம் 928 அடி. இந்த பாலம் மூன்று
துாண்களால் அமைக்கப்பட்டுள்ளது. துாண்களுக்கு இடையிலான துாரம் 6,532 அடி.
இதன் கட்டுமானப் பணி 1988ல் தொடங்கி 1998ல் திறக்கப்பட்டது. இப்பாலம்
ஜப்பானின் ஹோன்சு நகரையும் அவாஜி தீவையும் இணைக்கிறது. இப்பாலத்தில் ஆறு
வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 286 கி.மீ. வேக காற்று மற்றும்
8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை தாங்கக்கூடியது.

mohan alagar

unread,
Dec 25, 2018, 8:12:58 PM12/25/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : டிச 26, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
பின் பருவ மழைக்காலம்வடகிழக்கு பருவமழைக்காலத்தை புவியியல் 'பின் பருவ
மழைக்காலம்' என்கிறது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக வட
இந்தியாவில் காற்று குளிர்ச்சியடைகிறது. இதனால் அடர்த்தி அதிகமாகிறது.
இந்தியப்பெருங்கடலில் காற்று சூடு அடைகிறது. இதனால் காற்றின் அடர்த்தி
குறைகிறது. இதனால் அடர்த்தி அதிகமான பகுதியில் இருந்து அடர்த்தி குறைவான
பகுதியை நோக்கி காற்று வீசுகிறது. வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி
வீசுவதால் இது வடகிழக்கு பருவக்காற்று எனப்படுகிறது. தென்மேற்கு
பருவமழைக்கு பின் வருவதால் பின் பருவ மழைக்காலம் என்கின்றனர்.தகவல்
சுரங்கம்மோசமான பாஸ்வேர்டுஇன்றைய நவீன உலகில் கம்ப்யூட்டர், அலைபேசி,
வங்கி, மின்னஞ்சல் என அனைத்திலும் 'பாஸ்வேர்டு' முக்கிய பங்கு
வகிக்கிறது. இந்நிலையில் 'ஸ்பிளாஷ் டேட்டா' அமைப்பு 2018ன் மோசமான
பாஸ்வேர்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஐந்தாவது ஆண்டாக '123456'
என்ற பாஸ்வேர்டு முதலிடத்தை பெற்றுள்ளது. அடுத்த இடங்களில் பாஸ்வேர்டு,
123456789, சூரியஉதயம், குவெர்ட்டி, ஐலவ்யூ, பிரின்செஸ், அட்மின்,
வெல்கம் போன்றவை உள்ளன. பொதுவாக பாஸ்வேர்டு என்பது எளிதில் யூகிக்கும்
வகையில் இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

mohan alagar

unread,
Dec 29, 2018, 5:17:31 AM12/29/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : டிச 29, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
அறிவியல் ஆயிரம்

எடை குறைக்க வழி
நவீன வாழ்க்கை முறையால், உலகில் 70 கோடி பேர் உடல் பருமனால்
அவதிப்படுகின்றனர். இதனால் நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல
பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். எடை குறைக்க உடற்பயிற்சி மற்றும்
உணவுக்கட்டுப்பாடு பரிந்துரைக்கப் படுகிறது. இந்நிலையில் அமெரிக்க பல்கலை
ஆராய்ச்சியாளர்கள் பேட்டரி இல்லாத, எளிதில் உடலில் பொருத்திக்கொள்ளும்
கருவியை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி, நாம் சிறிதளவு உணவு எடுத்ததும்
மூளையில் போதும் என்ற மனநிலையை உருவாக்குகிறது. குறைந்தளவு உணவு
எடுப்பதால், எடையும் குறைகிறது.


தகவல் சுரங்கம்

அகலமான அருவி
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா மற்றும் பிரேசில் எல்லையில் ஓடுகிறது
இகுயாசு ஆறு.
இதன் நீளம் 1,320 கி.மீ. இந்த ஆற்றில் இகுயாசு நீர்வீழ்ச்சி உள்ளது. இது
உலகின் அகலமான
நீர்வீழ்ச்சி என்ற பெருமைக்குரியது. இதன் அகலம் 2.7 கி.மீ. இந்த
அருவியில் 275 இடங்களில் நீர் கொட்டுகிறது. இதில் அதிகபட்ச உயரம் 269
அடி. இகுயாசு நீர்வீழ்ச்சி, இகுயாசு ஆற்றை மேல்,
கீழ் என இரு பகுதியாக பிரிக்கிறது. ஆற்றின் பெரும்பகுதி பிரேசில்
பகுதிகளை நோக்கி தான் பாய்கிறது.

mohan alagar

unread,
Dec 29, 2018, 8:35:07 PM12/29/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : டிச 30, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
அறிவியல் ஆயிரம்

எரிமலை உருவாகும் விதம்
பூமியின் உட்புறத்திலுள்ள வெப்பமான கற்குழம்பு வெடித்து வெளியேறும் பகுதி
எரிமலை. வெப்பமான பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலை உருவாகிறது.
உமிழப்படும் எரிமலைக் குழம்பு 'மாக்மா' எனப்படுகிறது. எரிமலையை
ஆங்கிலத்தில் 'வால்கனோ'என அழைப்பர். இது இத்தாலிய மொழி. ரோமானிய அக்னி
கடவுள் 'வால்கன்'. இதிலிருந்து இச்சொல் வந்தது. எரிமலை ஆய்வு படிப்புக்கு
'வால்கனாலஜி'என பெயர். பொதுவாக எரிமலை
கூம்பு வடிவம் கொண்டதாக இருக்கும். அதன் உச்சி, எரிமலைக் குழம்பை உமிழும்
தன்மை பெற்றிருக்கும்.

தகவல் சுரங்கம்

மாசு கட்டுப்பாடு
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1974ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நாட்டில் காற்று, நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஒலிமாசு ஆகியவற்றை
கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் இவற்றின் முக்கிய பணி. இது
மத்திய சுற்றுச்சூழல், மத்திய வனம் மற்றும் பருவநிலை மாற்றம்
அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதன் தலைமைகம் டில்லியில் உள்ளது.
பெங்களூரு, கோல் கட்டா, ஷில்லாங், போபால், லக்னோ, வதோதரா, ஆக்ரா ஆகிய 7
மண்டல அலுவலகங்கள், 5 ஆய்வகங்கள் உள்ளன. இதன் தலைவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
சிங் பரிஹார். இதில் 500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

mohan alagar

unread,
Dec 30, 2018, 8:31:10 PM12/30/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : டிச 31, 2018 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
அறிவியல் ஆயிரம்

ஐந்தில் இரண்டு

உலகளவில் அறிவியல் ஆர்வலர்களுக்கு வரும் 2019ல் ஐந்து கிரகணங்களை
பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதில் இரண்டு இந்தியாவில்
உள்ளவர்கள் பார்க்கலாம். முதலில் ஜன., 6ல் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இது இந்தியாவில் தெரியாது. ஜன., 21ல் முழு சந்திர கிரகணம் தோன்றும்.
இதுவும் இந்தியாவில் தெரியாது. ஜூலை 2 - 3ல் தோன்றும் முழு சூரிய கிரகணம்
இந்தியாவில் தெரியாது. பின் ஜூலை 16 - 17ல் தோன்றும் பாதி சந்திர
கிரகணமும், இதற்கு அடுத்ததாக டிச., 26ல் தோன்றும் சூரிய கிரகணமும்
இந்தியாவில் தெரியும்.

தகவல் சுரங்கம்

பட்டினி இல்லா உலகம்
உலகில் பட்டினியால் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதை குறிக்கோளாகக்
கொண்டு உணவு மற்றும் விவசாய அமைப்பை ஐ.நா., 1945 அக்., 16ல் தொடங்கியது.
இதன் தலைமையகம் இத்தாலியின் ரோம் நகரில் உள்ளது. வளர்ந்த மற்றும் வளரும்
நாடுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இது அனைத்து நாடுகளும் விவசாயம்,
வனம் மற்றும் மீன்வளம், நியூட்ரிஷன், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில்
முன்னேறுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது. இந்த அமைப்பில்
இந்தியா உள்பட 197 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

mohan alagar

unread,
Dec 31, 2018, 8:49:05 PM12/31/18
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
பதிவு செய்த நாள் : ஜன 01, 2019 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments

விரைவில் ஆறும் காயம்
பல சந்தர்ப்பங்களில் நமக்கு காயம் ஏற்படுகிறது. இதற்கு பல முறைகளில் நாம்
மருத்துவம் மேற்கொள்கிறோம். இந்நிலையில் காயத்தை விரைவில் குணப்படுத்தும்
வகையிலான 'ஸ்மார்ட் பேண்டேஜை' அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலை
ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது எலிகளிடம் சோதித்து
பார்க்கப்பட்டபோது, மூன்று நாட்களில் காயம் குணமானது. இதே மற்ற
'பேண்டேஜ்' எனில் 12 நாட்கள் ஆகும். மனிதர்களின் காயத்தை குணமாக்க மேலும்
தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தகவல் சுரங்கம்

தேயிலையின் பூர்வீகம்
எந்த நேரத்திலும் தேநீர் குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது.
தென்கிழக்கு ஆசியாதான் தேயிலை செடியின் பூர்வீகம். சீனாவில் துவங்கி மற்ற
நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில்
தேயிலை முதல்முறையாக பயிரிடப்பட்டது. உலகளவில் தேயிலை உற்பத்தியில் சீனா
முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில்
அசாம், மேற்குவங்கம் முதலிரண்டு இடத்தில் உள்ளன. 'கட்டஞ்சாயா' என்பது
கேரளாவில் பிரசித்த பெற்ற வார்த்தை. கொதிக்கின்ற நீரில், தேயிலை துாளை
கொட்டி அப்படியே தருவர்.

mohan alagar

unread,
Jan 2, 2019, 8:34:31 PM1/2/19
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்: ஏன் எலி
பதிவு செய்த நாள் : ஜன 03, 2019 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments

ஏன் எலி
உலகளவில் அறிவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும்
ஆராய்ச்சியாளர்கள், அதை நேரடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர
மாட்டார்கள். முதலில் எலிகளிடம் சோதனை செய்வர். ஏனெனில் எலிகளின் மரபணு
98 சதவீதம் மனித மரபணுவுடன் ஒத்திருக்கிறது. வேகமாக இனப்பெருக்கம்
செய்தல், அதன் சிறிய அமைப்பு கையாள எளிமையாக இருப்பது ஆகிய காரணங்களால்
ஆராய்ச்சிக்கு எலிகளை பயன்படுத்துகின்றனர். எதிர்மறை விளைவுகளை தவிர்க்க,
எலிகளிடம் சோதித்து, அவை வெற்றி பெற்றால் மட்டும் மனிதர்களுக்கு
பரிசீலிக்கப்படுகிறது.

தகவல் சுரங்கம்: இரட்டிப்பு நன்மை
புத்தாண்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சபதங்களை நிறைவேற்ற வேண்டுமென
திட்டமிட்டிருப்பார்கள். இதில் சிலர் புகைப்பிடிக்கும் பழகத்தை விட
வேண்டும் என இலக்கு வைத்திருப்பர். இவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
காத்திருக்கிறது. இது என்னவெனில் புகையிலை பழக்கத்தில் இருந்து
விடுபட்டால், அது மதுப்பழகத்தையும் கைவிட உதவுகிறது என பிரிட்டனின்
நிக்கோடின் மற்றும் புகையிலை ஆராய்ச்சி பத்திரிகை தெரிவித்துள்ளது.
புகையிலை கேன்சர், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு காரணியாக
உள்ளது.

mohan alagar

unread,
Jan 3, 2019, 8:21:17 PM1/3/19
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்: பறக்க முடியாத பறவை
பதிவு செய்த நாள் : ஜன 04, 2019 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments

பறக்க முடியாத பறவை
பறவை இனங்களில் பறக்க முடியாத இனத்தை சேர்ந்தது பென்குவின். இவை நான்கு
கோடி ஆண்டு களுக்கு முன் உருவானதாக கூறப்படுகிறது. குளிர் பிரதேசங்களில்
அதிகம் காணப்படுகிறது. மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை உண்டு
வாழ்கின்றன. ஒரு மணிநேரத்தில் 17 கடல் மைல் துாரம் நீந்தும். பென்குவின்
உப்புதன்மையுள்ள கடல்நீரையும் குடித்து வாழும். மிகச்சிறப்பான செவி
உணர்வை கொண்டவை. கடலின் மேற்புறத்தில் அதிக துாரம் பார்க்க முடியாது.
சிறியவகை பென்குவின்(40 செ.மீ) உயரமும், பெரிய வகை பென்குவின் (7 அடி, 3
இன்ச்) உயரம் வளரும்.

தகவல் சுரங்கம்: மழை... மழையாய்
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில்
'மாசின்ராம்' கிராமம் உள்ளது. இது தலைநகர் ஷில்லாங்கில் இருந்து 65
கி.மீ., தொலைவில் உள்ளது. இது இந்தியாவில் அதிக மழைப்பொழிவு பெய்யும்
இடம் என்ற பெருமை பெற்றது. இங்கு ஓராண்டில் சராசரியாக 11,872 மி.மீ., மழை
பெய்கிறது. இங்கு 1985ல் 25,000 மி.மீ., மழை பெய்து கின்னஸ் புத்தகத்தில்
இடம் பெற்றது. 'மாசின்ராம்' கிராமத்தில் இருந்து 15 கி.மீ., துாரத்தில்
சிரபுஞ்சி உள்ளது. இதற்கு முன் இந்தியாவில் ஆண்டு சராசரி மழை அதிகம்
பெய்யும் இடமாக சிரபுஞ்சி தான் இருந்தது.

mohan alagar

unread,
Jan 4, 2019, 8:38:45 PM1/4/19
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்: உருகினால் ஆபத்து
பதிவு செய்த நாள் : ஜன 05, 2019 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments

உருகினால் ஆபத்து
ஆர்க்டிக் என்பது புவியின் வட முனையில் அமைந்துள்ள பகுதி. இது தென்
முனையில் உள்ள அண்டார்ட்டிக்காவுக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. ஆர்க்டிக்
பகுதியானது ஆர்க்டிக் பெருங்கடல், கனடா, கிரீன்லாந்து, ரஷ்யா, அலாஸ் -
அமெரிக்கா, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகியவற்றின் சில
பகுதிகளை உள்ளடக்கியது. ஆர்க்டிக் கடல் பனிக்கட்டிகள் குளிர் காலத்தில்
உறைவதும், கோடை காலத்தில் உருகுவதும் வழக்கமான ஒன்று. உலகின் வெப்பநிலையை
தீர்மானிப்பதில் ஆர்க்டிக் பனிக்கட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை
உருகினால் கடல்நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளது.

தகவல் சுரங்கம்: சிந்து நதியின்...
ஆசியாவின் நீளமான நதிகளில் ஒன்று சிந்து நதி. இது திபெத்திய பீடபூமியில்
மேற்கு பகுதியில் மானசரோவர் அருகே உருவாகி, காஷ்மீரின் லடாக் வழியாக
பாகிஸ்தானுக்குள் பாய்ந்து கராச்சி அருகே அரபிக்கடலில் கலக்கிறது. இது
பாகிஸ்தானின் முக்கிய நதிகளில் ஒன்று. இதன் நீளம் 3,610 கி.மீ. இதற்கு
ஜீலம் ஆறு, செனாப் ஆறு, சட்லெஜ் ஆறு, ராவி ஆறு, பியாஸ் ஆறு உள்ளிட்ட பல
கிளை ஆறுகள் உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையே பாயும் சிந்து நதியில்,
இருநாடுகளும் நீரை பங்கிட்டு கொள்வது குறித்து ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளது.

mohan alagar

unread,
Jan 7, 2019, 8:11:49 PM1/7/19
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்: வலிக்காத ஊசி
பதிவு செய்த நாள் : ஜன 08, 2019 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments

வலிக்காத ஊசி
சாதாரண காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் பிரச்னைகளுக்காக டாக்டரிடம்
சென்றால் ஊசி அல்லது மாத்திரை வழங்குவர். ஆனால் 'ஊசி'யை கண்டால்
சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்கள் சிலருக்கும் பயம்
தொற்றிக்கொள்ளும். இந்நிலையில் வலி இல்லாத 'கார்பன் மைக்ரோ ஊசி'யை,
காரக்பூர் ஐ.ஐ.டி,. ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதன் நீளம் 400
மைக்ரோமீட்டர். இந்த ஊசியை செலுத்தும் போது, எளிதாக நுழையும். வலி ஏதும்
இருக்காது. இந்த ஊசி உடையவோ அல்லது வளையவோ செய்யாது என ஆராய்ச்சியாளர்
ரிச்சா மிஸ்ரா தெரிவித்தார்.

தகவல் சுரங்கம்: முதல் கடல் பாலம்
இந்தியாவில் முதல் கடல் பாலம் என்ற பெருமைக்குரியது 'பாம்பன்' ரயில்
பாலம். இது ராமேஸ்வரம் தீவை இந்திய நிலப்பகுதியுடன் இணைக்கிறது.
பாலத்தின் நடுவில் கப்பல்கள் செல்ல துாக்கு பாலம் உள்ளது. நுாற்றாண்டை
கடந்தும் செயல்படுகிறது. ஆங்கிலேயரால் கட்டப்பட்டு 1914ல்
திறக்கப்பட்டது. இதன் நீளம் 2.3 கி.மீ. இதன் அருகில் 1988ல் சாலை பாலம்
திறக்கப்பட்டது. மும்பையில் 2010ல் 'பந்த்ரா - ஒர்லி' கடல் சாலை பாலம்
(5.6 கி.மீ.) திறக்கப்படும் வரை, பாம்பன் ரயில் பாலம் நாட்டின் நீளமான
பாலமாக இருந்தது. தற்போது பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட
உள்ளது.

mohan alagar

unread,
Jan 9, 2019, 8:24:52 PM1/9/19
to valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்: கிழக்கு கடலோரத்தில்...
பதிவு செய்த நாள் : ஜன 10, 2019 00:00
G+
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments

கிழக்கு கடலோரத்தில்...
இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி தொடர்ச்சியாக இல்லாமல், பகுதி
பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலை. இதன் மேற்கு
பகுதியில் தக்காண பீடபூமி உள்ளது. ஒடிசாவில் தொடங்கி ஆந்திரா, தமிழகம்,
கர்நாடகத்தின் சில பகுதிகள், கேரளாவின் வயநாடு பகுதி வரை கிழக்கு
தொடர்ச்சி மலை பரவி உள்ளது. கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவிரி போன்ற
முக்கிய ஆறுகள் இம்மலைத்தொடரின் குறுக்கே பாய்கிறது. இதில் சிறுமலை,
சேர்வராயன், ஜவ்வாது, கல்வராயன், ஏற்காடு, கொல்லிமலை உள்ளிட்ட பல
மலைக்குன்றுகள் உள்ளன.


தகவல் சுரங்கம்: தேசத்தை பிரித்த சுவர்
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் ஜெர்மனி தோல்வியுற்றது. மேற்கு ஜெர்மனியை
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சும், கிழக்கு ஜெர்மனியை ரஷ்யாவும்
கைப்பற்றின. இரு எல்லைக்கும் நடுவே இருந்த பெர்லின் நகரமும் இரண்டானது.
பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த மேற்கு ஜெர்மனிக்கு, வேலைக்காக கிழக்கு
ஜெர்மனி மக்கள் குடியேற தொடங்கினர். இதை தடுக்க 1961ல் பெர்லின் நகரைச்
சுற்றி கிழக்கு ஜெர்மனி, சுவர் எழுப்பியது. இதுதான் பெர்லின் சுவர்.
நீளம் 155 கி.மீ., உயரம் 13 அடி. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். 1989ல்
சுவர் இடிக்கப்பட்டு, ஜெர்மனி ஒன்றானது.
It is loading more messages.
0 new messages